​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 11 September 2020

சித்தன் அருள் - 909 - ஆலயங்களும் வினோதமும் - படிக்காசுநாதர், சொர்ணபுரீஸ்வரர் கோவில், அழகாபுத்தூர், தஞ்சாவூர்!

படிக்காசு நாதர் கோவில், அழகாபுத்தூர், தஞ்சாவூர். இது கும்பகோணம் சுவாமிமலையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனார் அவதரித்து, சிவபூஜை செய்து முக்தி அடைந்த திருத்தலம். அரசலாற்றில் நீர் எடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து, நித்ய பூஜையை அவர் நிறைவேற்றி வந்தார். நாடு வரட்சியில் உழன்றுகொண்டிருந்த நேரம். மக்களும் அன்னம் ஆகாரமின்றி தவித்தனர். இவரும், பசிப்பிணியால் மிகவும் மெலிந்து போனாலும், ஒரு குடத்தில் நீர் எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேக பூஜை செய்து வந்தார்.

ஒருநாள், மிகுந்த சோர்வினால், அபிஷேக தீர்த்த குடம் , கை நழுவி சிவலிங்கத்தின் மேல் விழ, அவரும் மயக்கமுற்று சிவலிங்கத்தின் மேல் விழுந்தார்.

மயக்கமுற்ற நிலையில், அவரது கனவில் தோன்றிய சிவபெருமான் "உனக்கு என்ன வேண்டும்? கேள்!" என்றார்.

இவரும் "மக்கள் பட்டினியால் வாடுகின்றனர், துயர் துடைக்க வரம் அருள வேண்டும். நித்திய பூசை நல்லபடியாக நடக்கவேண்டும்" என வேண்டினர்.

"தந்தோம் யாம்! இனிமேல் தினமும் ஒரு படிக்காசு என் சன்னிதானத்தில் அருளப்படும். அதை எடுத்து பூசையை நடத்தி, மக்களின் பசி துயரை தீர்ந்த்துக்கொள்ளும்!" என உத்தரவிட்டார்.

அன்று முதல், சிவபெருமான் லிங்கத்தின்மேல் தினமும் தங்க படிக்காசு தோன்றும். புகழ்துணை நாயனாரும் அதன் பயனால், பூசைகளை சிறப்பாக செய்து, மக்களின் பசித்துயரையும் நீக்கிவந்தார்.

பலகாலங்களுக்குப்பின் அந்த ஊர் செழிப்பாக மாறிட, புகழ்துணை நாயனார், இறைவனிடம் வேண்டி, முக்தியை அடைந்தார்.

தற்போது, அவரது சந்ததியினரே பூஜை செய்து வருகிறார்கள்.

சரி! இங்கு நமெக்கென என்ன உள்ளது!

இந்த கோவிலில் சூரிய சந்திரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி உள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒன்பது குழிகள் உள்ளது. அதில் நவகிரகங்கள் வாயு ரூபத்தில் இருப்பதாக ஐதீகம்.

திருமால்தான் சங்கு சக்கரம் போன்றவற்றைக் கையில் கொண்டிருப்பார். ஆனால் இக்கோயிலில் முருகர் சங்கு சக்கரத்துடன்  இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

இங்கு வரும் பக்தர்கள், நிறைய காசினை கொண்டுவந்து, பூஜாரியிடம் கொடுப்பர். அவரும் இரண்டு இரண்டு காசாக சிவ லிங்கத்தின் ஆவுடையின் மீது வைத்து பூசை செய்வார். பின்னர், ஒரு காசினை சிவனுக்கு அர்பித்துவிட்டு ஒரு காசை தந்தவரிடம் திருப்பி கொடுத்துவிடுவார். பூசை செய்த ஒரு காசை சிவன் சார்பாக, பூஜாரியிடமிருந்து பெற்று, வீட்டிற்கு கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து இருந்தால், குடும்பம் செல்வ செழிப்பாக மாறும். இது அனுபவ பூரணமாக அனைவரும் உணர்ந்த உண்மை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருகே........................தொடரும்!
  

5 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  3. ஆஹா அருமை ஐயா

    அகத்தீசாய நமக
    🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  5. Aum Shree lobhamudra Sametha Shree Agasthya Perumane Sharanam

    ReplyDelete