​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 8 September 2020

சித்தன் அருள் - 906 - ஆலயங்களும் விநோதமும் - கணபதி கோவில், மள்ளியூர், கோட்டயம், கேரள மாநிலம்!


இந்த கோவிலில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை, "வைஷ்ணவ கணபதி" என்றழைக்கின்றனர். சைவத்துக்கும், வைஷ்ணவத்துக்கும் ஒரு முடிச்சாக இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு வித்யாசமாக கணபதிப்பெருமான் அமர்ந்த நிலையில், அவரது இடது தொடைமேல் பகவான் கிருஷ்ணர் சிறு குழந்தையாக உட்கார்ந்து, அவர் விவரிப்பதை கூர்ந்து கவனிப்பது போலவும்,  அவரது நான்கு கரங்களில் ஒன்றில் இனிப்பு லட்டுவும், தும்பிக்கையில் நுனியில் "எலுமிச்சை பழமும்" சுமந்தபடி இருப்பார்.

300 ஆண்டுகளுக்கு முன், இந்த விக்கிரகம், வட இந்தியாவிலிருந்து, ஒரு சந்நியாசி இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்துவிட்டு போனதாக வரலாறு.

இங்கு வந்து தரிசனம் பெறுபவர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும், விலகுவதாகவும், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இங்கு நமெக்கென உள்ளது, இறைவன் தரிசனமும், அவர் அருளும்!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

5 comments:

  1. Om lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. லோபமுத்ர சமேத அக்த்தீசாய நமக

    ReplyDelete
  3. அகத்தீசாய நம

    ReplyDelete
  4. ஓம் கணேசாய நம🙏🙏🙏 ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete