​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 12 November 2016

சித்தன் அருள் - 501 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"சித்தன்" என்று பகர்ந்தால், நாடு, மொழி, இனம் என்பது கிடையாது. வேறு தேசத்தில் இருந்து இங்கும், இங்கிருந்து வேறு தேசங்களுக்கும் சென்று மனிதர்களோடு, மனிதர்களாய் பணியாற்றுவார்கள். இங்கு மனிதனாகப் பிறந்து தன்னுள் இருக்கும் தெய்வீக ஆற்றலை உணர்ந்து கொண்ட பிறகு, எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். இதுதான் சொந்த இடம் என்று சித்தர்களால் சொல்ல இயலாது. ஒரு சித்தர் என்பவரின் ஆத்மா, உயர் நிலையில் இருக்கக்கூடிய ஒரு புண்ணிய ஆத்மாதான். ஆக, எப்படிப்பார்த்தாலும், அந்த மேலுலகம், இறை உலகத்திலிருந்து வரக்கூடியவர்கள்தான் சித்தர்கள். "போகருக்கு" வேறு ஒரு சிறப்பு இருக்கிறது தெரியுமா? போகர்தான், "யேசுவாகப்" பிறந்தார். இப்பொழுது சொல், போகருக்கு சீன தேசமா? இந்திய தேசமா? அல்லது வெளிதேசத்தில் வாழ்ந்த சிலுவைக்காரனா? அல்லது கைலாயமா? பழனியில்தான் போகரைக் காணலாம் என்று சொன்னால், அது தவறு. பழனியிலும் காணலாம் என்றால், சரி!

2 comments:

  1. [ROUGH TRANSLATION] A “Siddha” does not belong to any one country, language or community. Siddhas from other places come to this country and this country’s Siddhas go to other places, and serve. They take birth as human in this country, realise the Divine strengths within themselves, thereafter go to all places. A Siddha does not have his “own” place. The atma of a Siddha is a punya atma in high stature. So, whichever way one looks at it, Siddhas come from higher worlds, Divine worlds. Do you know that Bhogar has another speciality? Bhogar was the one who was born as Jesus. Now tell, does Bhogar belong to China? to India? or to Overseas where he was the man of Cross? or to Kailash? To state that Bhogar is only at Palani is wrong. It is correct to say that Bhogar can be seen at Palani also.

    ReplyDelete