​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 23 August 2016

சித்தன் அருள் - 417 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

அகுதொப்ப சித்தர்கள் வழியில் வருகின்ற மாந்தர்களுக்கு, அல்லது யாங்கள் கூறுகின்ற நெறிமுறைகளை இந்த சுவடியை பார்க்காமலேயே பூர்வ புண்ணியத்தின் காரணமாக இயல்பாகவே செயல்பட்டு கொண்டு இருக்கின்ற மனிதன், அதாவது, மனித நேயம், அன்பு, கருணை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, பொறுமை, விடாமுயற்சி, நேர்மையான உழைப்பு, சுயநலமற்ற தன்மை, பரோபகார சிந்தனை, தளராத பக்தி, தடைப்படாத தர்மம் இவற்றையெல்லாம் எவனொருவன் தொடர்ந்து பின்பற்றுகிறானோ, அவனுக்கு இறைவன் அருள் என்பது தொடர்ந்து தடயற்று வந்து கொண்டே இருப்பதோடு, அவன் இறைவனை தேடி எங்கும் செல்ல வேண்டாம். அவன் எங்கிருந்தாலும் இறைவனின் அருள் ஆற்றல் அவனை வழி நடத்தும். இகுதொப்ப யாங்களும் அவனை வழி நடத்துவோம்.

2 comments: