​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 August 2016

சித்தன் அருள் - 420 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"பாவம் என்பதை அந்த அந்த செயலை மட்டும் பார்க்காமல் அந்த மனிதனின் சூழ்நிலை, வாழும் நிலை, பக்குவம் இவற்றை வைத்து பார்க்க வேண்டும். அதாவது, சகல வேதங்களையும் முறையாக கற்று, சகல கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று, எல்லா வகையான ஞான கருத்தும் தெரிந்து, இது தக்கது, இது தகாதது, இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது, இதை செய்தால் பாவம், இதை செய்தால் புண்ணியம் என்றெல்லாம் அறிந்து, ஓரளவு பக்குவம் பெற்ற மனிதன், யாருக்கு தெரியப்போகிறது என்று எந்த ஒரு சிறிய தவறையும் செய்தாலும் அது மிகப் பெரிய பாவமாக மாறும். ஆனால் அறியாத மனிதன், கல்வி, கேள்வி கல்லாத மனிதன், எதுவும் தெரியாத மனிதன், உழைப்பதும், வாழ்வதுமாக இருக்கின்ற மனிதன் வேறு வழியில்லாமல், மிருக உணர்ச்சிக்கு அடிமையாகி, எதையாவது செய்து விட்டு பின்னர் தன் மனதால் வருந்தி வருந்தி அழுதால், அந்த பாவம் மன்னிக்கப்படும். எனவே, வயிற்றுக்கு வழியில்லாமல் ஒருவன் எல்லா வகையான, நேர்மையான வழிமுறைகளையும் தேடி, தேடி, தேடித் தோற்றுப்போய், களவு செய்தால் அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், இதை செய்வதற்குத்தான் உனக்கு ஊதியம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த பணிக்காக ஒருவனுக்கு அரசாங்கமோ, ஒரு நிறுவனமோ ஊதியம் வழங்குகிறது. ஆனாலும் அந்த பதவியை பயன்படுத்தி ஒருவன் ஒரு காரியம் சாதிப்பதற்கு, எனக்கு கையூட்டாக இந்த தனம் வேண்டும் என்று கேட்டால், கட்டாயம் அது பல கோடி ப்ரம்மஹத்திக்கு சமமப்பா!"

No comments:

Post a Comment