​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 10 August 2016

சித்தன் அருள் - 403 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"கடமை ஆற்றுவது என்பது வேறு. கவலை கொள்ளுவது என்பது வேறு. இல்லிற்கும், ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டும். கடமைகளை தட்டிக் கழிக்க யாங்கள் சொல்லவில்லை. கடமைகளை, சுமைகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று தான் கூறுகிறோம். வாழ்வை, எளிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அண்ட லட்சியத்திற்காக ஏங்குவதைவிட, அகண்ட லட்சியத்திற்காக ஏங்கி உழைக்க வேண்டும். இன்பம், துன்பம்  நிலைத்தாண்டி வாழ முயல்வதே "மெய் ஞானமாகும்". -  அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

1 comment:

  1. vanakkam aiya.

    nan kamal. thangal pathivu arumai, sithar arul paguthiyil thangal pathivai ippothu than padithen arumai. thangallidam pesavendum, ungal cell no kodungal aiya . enn cell no 9786240731.
    Nandri.
    kamal

    ReplyDelete