​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 29 August 2016

சித்தன் அருள் - 423 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

சித்தர்கள் இருக்கிறார்கள். இல்லை. இறை இருக்கிறது, அல்லது இறை இல்லாமல் போகிறது. சட்டம் இல்லாமல் போகிறது. இப்படி எது இருந்தாலும், இல்லாமல் போனாலும், ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக, மிக மிக நல்லவனாக மாற வேண்டியது கட்டாயம். அதனால் தான் சிந்திக்கும் ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இகுதொப்ப நிலையிலே தொடர்ந்து இறை வழியில் வருவதாகவும், சித்தர்கள் வழியில் வருவதாகவும் கூறிக்கொள்கின்ற மனிதன் இந்த வழிமுறையை அறியாத, தெரிந்து கொள்ளாத அல்லது அறிந்தும் பின்பற்ற முடியாத எத்தனையோ சராசரி மனிதர்கள் வாழ, அவர்கள் செய்ய அஞ்சுகின்ற செயலை, எம்மை அறிந்தும், எம் வாக்கை அறிந்தும், இன்னும் பாவம், புண்ணியம் என்பதையெல்லாம் ஓரளவு தெரிந்தும், தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால், விதியை நோவதா? அல்லது சரியாக வழிகாட்டாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஓலையிலே வந்து, கனக வண்ண அட்சரத்திலே காட்டி, காட்டி காலம் தோறும் ஓதி, ஓதி அவற்றை எல்லாம் செவியில் கேட்டு, கேட்டு மனதிலே பாதிக்காமல் விட்ட சேய்களைப் பற்றி விசனப்படுவதா?

No comments:

Post a Comment