​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 July 2011

சித்தன் அருள் - 48


என்னை எப்படியாவது அகத்தியர் தான் காப்பாற்றவேண்டும்.  இல்லையென்றால் நான் மட்டுமல்ல என் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்று சொன்னபடி ஒரு நடுத்தர வயதுள்ள நபர் என் முன் வந்தார்.

அவர் இதை சொன்ன போது எனக்கு ஆச்சரியமானதாகத் தெரியவில்லை.

இப்படி பரபரப்பாக பேசிய நபர்கள் பலரைப் பார்த்து இருக்கிறேன்.  அவர்களில் இருவரும் ஒன்று என்று எண்ணிக் கொண்டேன்.

"எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகே பாபநாசம்.  படிப்பு இல்லை.  காட்டில் சுள்ளி பொருக்கி அதை விற்று எங்க அம்மா சோறாக்கி போடுவாங்க.  பதினெட்டு வருஷ காலம் புதுத் துணியை ஒரு நாலாவது கட்டியதில்லை.  அப்படிக் கஷ்டப்பட்ட குடும்பம்.  இப்போ நான் நல்லாயிருக்கேன்.  கஷ்டப்பட்ட என் குடும்பத்தையும் முன்னுக்கு கொண்டு வந்து விட்டேன்.  ஆனால் ---- என்று இழுத்தார் அவர்.

விஷயத்தை சொல்லுங்கள் - என்றேன்

பொதிகைமலைக்கு அடிக்கடி போவேன்.  அகத்தியரை தினமும் வணங்கி முடிஞ்சா போதெல்லாம் செண்பக மலரைப் பறிச்சு அகத்தியருக்கு மாலையாக சாற்றியிருக்கிறேன்.

இன்னும் விஷயத்தை சொல்லவே இல்லையே - என்று கொஞ்சம் விரட்டினேன்

குடும்பக் கஷ்டம் தீரனுங்கிரதுக்காக ஒரு பெரிய தப்பு செய்துட்டு வரேன்.  ஒரு தகாத கும்பலோடு எப்படியோ எனக்கு பழக்கம்.  நல்ல பணம் கொடுத்தாங்க.  அவங்க சொல்ற இடத்திற்குப் போகணும்.  யாராவது ஏதாவது பொருளைக் கொண்டுத்தா அதை அப்படியே இவங்க கிட்டே கொடுக்கணும்.  உள்ளே என்ன இருக்கு, எது இருக்குன்னு பார்க்கவே கூடாது.  பொருளை பத்திரமாக கொடுத்தா கை நிறைய பணம் தருவாங்க.

ஓஹோ1

அப்படித்தான் நான்கு நாட்களுக்கு போய் ஒருத்தர் கிட்டே பொருளை வாங்கிட்டு வரச் சொன்னங்க.  அதை வாங்கி விட்டு வரும் போது போலிசும், சுங்கத்துரைகாரங்களும் வழி மறிச்சு பிடிச்சுக்கிட்டாங்க.  பொருளை அப்படியே போட்டுவிட்டு தப்பிச்சேன், பிழைச்சென்ன்னு ஓடி வந்துட்டேங்க - என்றார் அவர்.

அப்போ போலீஸ் உங்களை தேடறாங்களா?

இருக்கும்.

அப்படின்னா நீங்க வந்த இடம் இதுக்கு சரியானதில்லை.  வக்கீல் கிட்டே போய்ச் சொல்லி, என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க.  அதான் ஞாயம் என்று அவரை விரட்டி விடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தேன்.

"இல்லைங்க. உங்களைப் பத்தியும் உங்ககிட்டே இருக்கும் அகத்தியர் ஜீவ நாடியைப் பற்றி பரவலாகக் கேள்விப்பட்டிருக்கேன்.  இந்த இக்கட்டான நிலையிலிருந்து அகத்தியர் ஒருத்தர் தான் என்னைக் காப்பாற்ற முடியும்னு நம்பிக்கையோடு ஊரை விட்டு ஊர் வந்திருக்கேன் என்று விடாப்பிடியாக சொன்னவர் சட்டென்று என் காலில் விழுந்து பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

அகத்தியர் இப்படிப்பட்ட நபர்கலஐக்கெல்லாம் அருள்வாக்கு தருவாரா?  என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.எதை எதையோ நினைத்துக் குழம்பினேன்.  முடிவில் அகத்தியர் என்ன தான் சொல்கிறார் என்பதையும் கேட்டு விடலாமே என்ற உந்துதலின் பேரின் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"இன்னவன் கெட்ட வழியில் பணம் ஈட்டினாலும் அவ்வப்போது நிறைய தானம், தருமம் செய்திருக்கிறான்.  கிராமத்தில் இருக்கும் சுடலைமுத்து கோவிலுக்கும், இசக்கி அம்மனுக்கும் கோவில் கட்டியவன்.  இருப்பினும் செய்த தவறுக்குத் தண்டனையும் உண்டு.  அதே சமயம், அவனது புண்ணியமும் இவனைக் காப்பாட்ட்ரும், என்று சொன்னவர் எனக்கொரு கட்டளையும் இட்டார்.

"நான் சொன்னது தெய்வ ரகசியம்.  இதை இவனிடம் இப்போதே சொன்னாள் பயம் விலகிவிடும்.  தண்டனையிலிருந்து தப்பி விடுவோம் என்ற நம்பிக்கையில் மீண்டும் இதே தொழிலைச் செய்ய ஆரம்பிப்பான்.  பின்னர் ஒவ்வொரு தடவையும் அகத்தியனான என்னை வந்து அடைக்கலம் கேட்ப்பான்.  இந்த தடவை மாத்திரம் இவனை அந்த இக்கட்டானச் சூழ்நிலையிலிருந்து காப்பாற்றுவோம்" என்றவர், இப்பொழுது அவன் காதில் கேட்கும்படி சற்று உரக்கவே படி என்று ஆணையிட்டார்.  அதன் படியே நானும் படித்தேன்.

அந்த பொல்லாத தவறிலிருந்து தப்பிக்க இப்போது முதல் குல தேவக் கோவிலுக்குப் பாடுபட்டு சம்பாதித்த பணத்திலிருந்து பால் அபிஷேகம் செய்து கொண்டு வருவதாக பிரார்த்தனை செய்க.  ப்ரத்யங்கிர தேவிக்கு அமாவாசையன்று ஒரு யாகம் செய்க.  அறுபடை வீட்டுக்குச் சென்று முருகப் பெருமானை அங்கமெல்லாம் குளிர சந்தக் காப்பு சாற்றுக.

கருட தண்டக யாகம் ஒன்றை கருடன் சன்னதியில் ஓர் சனிக்கிழமையன்று செய்யட்டும்.  இதைச் செய்தால் பழியிலிருந்து தப்பிப்பான்.  ஆனால் ஒன்று, இத்தகையப் பிரார்த்தனைகள் செய்யும் பொழுது தீட்டுப்படக் கூடாது.  மனம் அலைபாயக் கூடாது.  நாற்ப்பது நாட்கள் சுத்தமாக இருக்கட்டும்.  அப்படி மீறி ஏதேனும் நடந்தால் அதற்கு அகத்தியனைப் பொறுப்பாளியாக எண்ணக் கூடாது.  இன்னொன்று இதுதான் முதலும் கடைசியும்.  மறுபடியும் அகத்தியனை நோக்கி வந்தால் பதில் உரைக்க மாட்டேன்."

இவ்வாறு அகத்தியர் சொன்னதை அப்படியே அந்த நபரிடம் சொன்னேன்.

கையைக் கூப்பிக் கொண்டு, பயந்தபடியே கேட்டவர், இதிலிருந்து தப்பித்தால் போதும்.  இனிமேல் அந்த பொல்லாதக் கூட்டத்தில் ஒரு போதும் சேரமாட்டேன், என்றார்.  அவர் சொன்னாலும் எனக்கு அவ்வளவாக அவர் மீது நம்பிக்கையில்லை.

இரு மாதம் கழிந்தது.

என்னிடம் நாடி பார்த்துச் சென்ற அந்த நபரின் சொந்தக்காரர் ஒருவர் வெகு வேகமாக வந்தார்.  ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார்.

அகத்தியர் சொற்படி அத்தனைப் பிரார்த்தனைகளையும் நான் சுத்தமாக செய்து விட்டேன், அவர் அருளால் பொல்லாத செயலிலிருந்தும், வழக்கிலிருந்தும் தப்பி விட்டேன்.  ஒரு விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும்.  நான் மாட்டிக் கொண்டது ஒரு போதை மருந்து கடத்தும் கும்பலில் தான்.  ஆனால் அன்றைக்கு நான் பிடிபட்ட பொழுது என் கையில் இருந்தது என்று எண்ணினேன்.  ஆனால் அது போதை மருந்தல்ல.  வெறும் வேப்பிலை பொடி என்பது எனக்கே பின்னால் தான் தெரிந்தது.

என்னை ஏமாற்றவே, போதை மருந்துக்குப் ப்பதிலாக வேப்பிலைப் பொடியைக் கொடுத்திருக்கின்றனர்.  நல்லவேளை அகத்தியர் என்னைக் காப்பாற்றவே வேப்பிலைப் பொடியை மாற்றினாரோ? என்று தான் தோன்றுகிறது.  எனினும் இது போன்ற தொழிலைச் செய்யக்கூடாது என்று நான் முடிவெடுத்தேன்.  காவல் நிலையத்திர்க்குச் சென்று சரண் அடைந்தேன்.  என் மீது உள்ள பழைய வழக்குகள் ஒன்றிரண்டு இருக்கிறது.  அதனால் இப்போது விசாரணைக் கைதியாக இருக்கிறேன்.

செய்த தவறுக்குத் தண்டனை கிடைத்தால் அதையும் ஏற்ற்றுக் கொள்வேன்.  ஒருவேளை அகத்தியர் கருணையால் நான் விடுதலை ஆனால் எஞ்சி இருக்கும் நாட்களில் மூடத் தூக்கியாவது பிழைத்து என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்.  எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது.

சில வருஷத்திற்கு பிறகு.........

அகத்தியர் அருல்வக்குபடி அவன் தண்டனை பெறாமல் வழக்கிலிருந்து தப்பித்தான்.  ஏற்கனவே செய்த தவறுக்கு ஒன்னரை ஆண்டு காலம் தண்டனை மட்டும் அனுபவித்து விட்டு வெளியே வந்து விட்டான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு குறைந்த பட்சம் தண்டனையைக் கொடுத்து வெளியே கொண்டு வந்த வழக்கரிஞ்சரின் பெயர் "அகஸ்தீஸ்வரன்"

1 comment: