​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 July 2011

சித்தன் அருள் - 49

"என் பக்கத்திலுள்ள நிலமெல்லாம் எல்லாமே வித்துப் போச்சு; ஆனா என் நிலம் மாத்திரம் விற்கவே முடியவில்லைங்க.  இதற்கு ஒரு பரிகாரத்தை அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்க" என்று என்னிடம் கேட்டாள் ஒரு கோடீஸ்வரப் பெண்மணி.

அந்த பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தேன்.

பணத்தின் செழுமை அப்படியே உடல் முழுக்க வியாபித்திருந்தது.  கஷ்டப்பட்டு எதையும் செய்ய வேண்டாம் என்ற நிலையில் அந்தப் பெண்மணியின் உடை, உடல் பாவனைகள் காணப்பட்டது.

அவளிடம் கேட்கின்ற பொழுது கூட பணத் தட்டுபாடிற்காக நிலம் விற்க வேண்டும் என்று சொல்லவில்லை.  உடனடியாக விற்றால் நல்லது.  சில கொடிகள் ஆதாயமாகக் கிடைக்கும் என்ற நிலையில் தான் பேசினார்.

நான் எதையும் மேற்கொண்டு கேட்டுக் கொள்ளாமல் அகத்தியரை வணங்கி நாடியைப் பிரித்தேன். பிரார்த்தனையை செய்து கொண்டேன்.

ஆனால், அகத்தியரிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.  இது மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  மீண்டும், மீண்டும் பிரார்த்தனை செய்து விட்டு ஓலைச்சுவடியைப் படித்தேன்.

சுத்தமாக ஒரு செய்தியைக் கூட அகத்தியர் சொல்லவே இல்லை.  இது எனக்கே மிகப் பெரிய கஷ்டமாக இருந்தது.  வந்த நபரைத் திருப்தி படுத்துவதற்க்காக பொய்யும் சொல்ல முடியாது.  அதே சமயம் அவர்கள் மனம் புண்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

"அம்மா இன்னிக்கு உங்களுக்கு உகந்த நாளாக இல்லை.  இன்னும் ஒருவாரம் கழித்து வர முடியுமா?" என்று கேட்டேன்.

இல்லை.  இன்னிக்கே எனக்கு நாடி படித்தாக வேண்டும்.  அடுத்த வாரம் நான் வெளிநாடு சொல்லப் போகிறேன்.  திரும்பி வர ஒரு மாத காலம் ஆகும் - என்றார் அந்தப் பெண்மணி.

மன்னிக்க வேண்டும்.  இன்றைக்கு தங்களுக்கு அகத்தியர் அருள்வாக்கு சொல்லுவதாக இல்லை. எப்பொழுது சவுகரியமோ அப்போது வாருங்கள் நிச்சயம் நான் சொல்கிறேன் - என்றேன்

வைத்தீஸ்வரன் கோவிலில் உடனே சொல்கிறார்கள்.  மற்ற இடங்களில் நான் போனால் உடனே சொல்கிறார்கள்.  நீங்கள் என்ன இப்படி இருக்கு மாறாகச் சொல்கிறீர்கள்.  அதிகப் பணம் வேண்டுமானால் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் - என்றார்.

இதுவரை பொறுமையாக இருந்த நான் இந்த வார்த்தையைக் கேட்டதும் கோபம் வந்தது.  ஆனால் அமைதி காத்தேன்.  என்னிடம் இருந்து பதில் எதுவும் வராததால் விருட்டென்று எழுந்து கிளம்பி விட்டார் அந்த கோடீஸ்வரப் பெண்மணி.

ஒரு மாதம் கழிந்தது.

ஒரு நாள் காலையில் என் அலுவகத்திற்கு கம்பீரமாக வந்து இறங்கிய அந்த கோடீஸ்வரப் பெண்மணி, நான் உங்களிடம் நாடி பார்ப்பதற்காக இப்போது வரவில்லை.  அன்றைக்கு ஒரு அவசியம் ஏற்ப்பட்டது.  அதற்காக வந்தேன்.  ஆனால் அகத்தியர் அருள்வாக்கு கிடைக்கவில்லை.  அவர் அருள்வாக்கு இல்லாமல் என்னுடைய நிலம், நினைத்ததை விட பத்து மடங்கு அதிக விலைக்கு விற்று விட்டது என்பதைச் சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன், என்று என்னையும் அகத்தியரையும் கேவலப்படுத்தும் அளவுக்குப் பேசிவிட்டுப் போனார்.

இன்னிக்கு எனக்கு சந்திராஷ்டமம்.  அதனால் தான் இப்படிப்பட்ட கேவலங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது, என சற்று வேதனைப்பட்டேன், அகத்தியர் நாடியைத் தொடவே எனக்குப் பிடிக்கவில்லை.

"சந்திராஷ்டமம் கழிந்த பிறகு விடியற்காலையில் அகத்தியரிடம், ஏன் இப்படிப்பட்ட அவமானம் அந்தப் பெண்மணியால் ஏற்பட்டது?" என்று கேட்டேன்.

அகத்தியர் பதில் சொன்னார்........

அந்தப் பெண்மணியைப் பற்றிச் சொல்கிறேன் கேள்.  அவள் புராணத்தில் சொல்லப்படும் கூனியை விட கேடு கெட்டவள்.  பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவள்.  அன்றைக்கு முதன் முறையாக அகத்தியனிடம் நாடி பார்க்க வருவதற்கு முன்பு தகாத உறவைச் செய்து விட்டு உடல் சுத்தமில்லாமல் வந்திருந்தாள்.

அதுமட்டுமல்ல.  அவள், நிலம் விற்க வந்தால் என்றாலும், அது அவளுடைய நிலம் அல்ல.  மாற்றாரை வஞ்சித்து ஏமாற்றி அடியாட்களை வைத்து பயமுறுத்தி எழுதி வாங்கப்பட்ட நிலம்.  இன்னொருவருக்குச் சொந்தமான அந்த நிலத்தை மோசடி செய்து தன் பெயருக்கு வாங்கினால்.  அது தன்னிடம் இருந்தால் பின்னர் வம்பு வருமே என்பதால் உடனடியாக விற்று பணத்தைப் பிடுங்க முயற்ச்சித்தால்.  இதற்கு அரசு அலுவலர்கள் சிலர் துணை போனதும் உண்மை.  இது அகத்தியனுகுப் பிடிக்கவில்லை.  ஏழைகளின் நிலத்தைக் கொள்ளையடித்த அந்தப் பெண்மணியை, கோடீஸ்வரி என்று எண்ணுகிறாய்.  இன்னும் ஒன்பது நாட்கள் பொறுத்திரு.  உன்னையும், என்னையும் அலட்சியம் செய்து பேசிய அந்தப் பெண்மணி என்ன நிலைக்கு ஆளாகப் போகிறாள் என்பதைப் பார்.  எனவே இதற்கு மனம் கலங்காதே.  இந்தப் பெண்மணி ஆவது நேரில் அவமானப் படுத்தினாள்.  இன்றும் உன்னைச் சுற்றி இருக்கின்றவர்கள் பலர், உன்னையும், என்னையும் எப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியமாட்டாய்.  அவர்களுக்கும் அந்தப் பெண்மணிக்கு ஏற்படும் நிலையைப் போல் ஏற்படும் என்று என்று அகத்தியர் என்னைத் தட்டிக் கொடுத்து உர்ச்சாகப்படுத்தினார்.

இது ஓரளவு மன ஆறுதலைத் தந்தாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை அரிய ஒன்பது நாட்கள் காத்திருந்தேன்.  ஆனால் எந்தச் செய்தியும் நான் காணவில்லை.

பத்தாவது நாள் காலை.....

எனக்கு வேண்டிய ஒரு நபர் வந்தார்.

இன்னிக்கு நாளிதழில் ஒரு செய்தியைப் பார்த்தீங்களா?" என்றார்.

"என்ன செய்தி நீங்களே சொல்லுங்களேன்" என்றேன்

ஒரு பொம்பிளை பதினஞ்சு வருஷமா போர்ஜரி செய்து, மத்தவங்க நிலத்தை தன் பெயர்லே மாற்றி, அப்படியே அதை மற்ற மாநிலத்திலுள்ள பெறும் பணக்காரங்களுக்கு கொடி, கொடியாக வித்து சாப்பிட்டிருக்காங்க.  நேத்திக்குத்தான் அவங்களை போலீஸ் அரஸ்ட் செய்திருக்காங்க! என்றார் என் நண்பர்.

எனக்கு இது சுரீர் என்று உரைத்தது.

அந்தப் பெண்ணின் பெயர் என்ன என்று கேட்டேன்.  அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை.  உடனே அவசர, வசரமாக கடைக்குப் போய் நாளிதழை வாகிப் பார்த்ததில் அவளது புகைப்படம் போட்டிருந்தது.  அந்த புகைப்படம் என்னிடம் நாடி பார்க்கா வந்த அதே பெண்ணின் புகைப்படம் தான் என்று தெரிந்தது.

இப்போது

அந்தப் பெண்மணி பதினான்கு ஆண்டு காலம் சிறைத்தண்டனை பெற்று அதை அனுபவித்து விட்டு இப்போது தான் செய்த தவறுக்குப் புண்ணியம் தேடிக் கொள்ள அடிக்கடி அகத்தியரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு முதியவர்களுக்காக, அநாதைகளுக்காக ஆஸ்ரமம் நடத்துகிறார்.

1 comment: