​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 27 July 2011

சித்தன் அருள் - 46


எங்க வீட்டிலே தோஷம் இருக்க? என்று அகத்தியரால் சொல்ல முடியுமா? என்ற படி ஒருவர் வந்தார்.

கேட்டு பார்க்கிறேன்.  இதற்கு சிலசமயம் பதில் வரும்; சில சமயம் பதில் வராது, என்றேன்.

இது சரியான பதிலாகத் தெரியல்ல.  ஹ்ம்ம். எதற்கும் கேட்டுப் பாருங்கள், என்றார் முரட்டு சுபாவம் கொண்ட அந்த நபர்.

எதோ அகத்தியரும் நானும் இவருக்கு அடிமை போலவும், இவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அகத்தியரிடம் கேட்டு நான் உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என்பது போலவும் அந்த நபர் நடந்து கொண்டது எனக்கு துளியும் பிடிக்கவில்லை.

இருப்பினும் பொறுமை காத்தேன்.  பிரித்து படித்தேன்.

"இன்னவன் செல்லப் போகும் புது வீட்டின் ரேழியில் உத்திரதிருக்கு நேர் அடியில் சிறிது தோஷம் உண்டு.  அங்கு செல்வதற்கு முன்பு சுதர்சன யாகம் ஒன்றைச் செய்துவிட்டு தான் செல்ல வேண்டும்.  இல்லையேல், பின்னால் அகத்தியன் மீது பழி போடுவது நல்லதல்ல, என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

என்னங்க அந்த வீட்டில் தோஷம் இல்லைன்னு வாஸ்து நிபுணர் சொல்றாரு. நீங்க இப்படி சொல்றீங்க.  எது உண்மை, எது பொய்னு தெரியவில்லையே? என்று முணுமுணுத்தார் வந்தவர்.

நான் கொஞ்சம் நிதானமிழந்தேன்.  "சார்!........ இதில் ஏதாவது ஒன்றை நம்புங்க.  இல்லைனா நம்பாம போங்க.  எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.  நான் அகத்தியருக்கு ஏஜெண்டும் இல்லை" என்றேன்.

அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.  சட்டென்று கோபத்தோடு எழுந்தார்.  "வாஸ்து தோஷம் என்கிறது பொய் சார்.  இதெல்லாம் சும்மா பயமுறுத்தி பணம் பிடுங்கிற விஷயம் தான்.  இப்போ நீங்க வீட்டுல வஸ்து தோஷம் இருக்குன்னு சொல்றீங்க.  நான் நம்பவில்லை.  இருந்தாலும் மத்தவங்க சொல்றாங்கன்னுதான் உங்களைப் பார்க்க வந்தேன்" என்றார்.

நான் ஒன்றும் பேசவில்லை.  அமைதி காத்தேன்.

"சரிங்க....... இப்போ நான் உங்க வழிக்கே வரேன்.  எப்படி வாஸ்து தோஷம் வந்திருக்குன்னு சொல்ல முடியுங்களா?" என்றார் பின்பு.

"அந்த வீட்டுல துஷ்ட தேவதை இருக்கும்.  ஏதாவது அகால மரணம் நடந்து, அதுக்கு சாந்தி செய்திருக்க மாட்டாங்க.  இல்லைனா பூமி தோஷம் இருந்திருக்கும்.  அதனால் அந்த வீட்டுல வாஸ்து தோஷம் ஏற்பட்டிருக்கும்னு அகத்தியர் சொல்றாரு" என்றேன்.

"இதெல்லாம் நீங்களும் நம்பாதீங்க சார்.  இப்போ தினமும் ரோட்ல நிறைய பேர் விபத்துல சாகிறாங்க.  அதுக்காக அங்கே யாராவது சுதர்சன ஹோமம் பண்ண முடியுங்களா? என்னங்க நீங்க என்றவர்" தன மீசையை முறுக்கி விட்டு கொண்டார்.

இவரிடம் பேசிபயனில்லை என்று மேற்கொண்டு பேசாமல் இதில் நம்பிக்கை இருந்தால் நாடி பார்க்க வரட்டும்,  இல்லையேல் அப்படியே ஒதுங்கி விடவேண்டியது தானே.  இதை விட்டு விட்டு இப்படி இங்கே வந்து என்னை இழுத்தடிப்பனேன் என்று என் உள்மனம் அந்த நபரைத் திட்டியது.

இரண்டு மாதம் சென்று இருக்கும்.  ஒருநாள் மாலை மிகுந்த சோர்வோடு அந்த நபர் என்னை நோக்கி வந்தார்.  வந்தவர் ஒன்றும் பேசாமல் வருத்தப்பட்டு அழுதார்.  நான் என்னவென்று கேட்கவே இல்லை.  அமைதியாக அவரை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

"சார் என்னை மன்னிச்சுருங்க.  அகத்தியரை ரொம்பவும் சோதித்துப் பார்த்துட்டேன்.  அதன் பலன் நன்றாக இருந்த என் ஒரே ஒரு ஆண் குழந்தை சட்டென்று இறந்துவிட்டது.  அதுவும் அந்த புது வீட்டில் நீங்க சொன்ன அதே ரேழியில், உத்தரத்திற்கு அடியில்" என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தார்.

அவரை ஆச்வாசபடுத்தி "என்ன நடந்தது?" என்று கேட்டேன்.

உங்க கிட்டே சவால் விட்டுவிட்டு மூணு நாள்ல வீடிற்கு குடி போனேன்.  அன்னிக்கு ராத்திரி சரியாக பன்னிரண்டு மணிக்கு அந்த ரேழியில் படுத்திருந்த என்னுடைய குழந்தை சட்டென்று அலறியது.  அடுத்த நிமிடம் மூச்சு பேச்சு வராமல் இறந்து விட்டது" என்றார்.

அகத்தியர் சொற்படி சுதர்சன ஹோமம் செய்து விட்டு போனீர்களா?

இல்லை.

வேறு எந்த பரிகாரமும் செய்யவில்லையா?

இல்லை.  எனக்கு சாஸ்திரம், சம்ப்ரிதாயம் எதுவும் தெரியாது.  நம்பவும் மாட்டேன்.  அதன் விளைவுதான் இது என்பதை அறிந்துகொண்டேன்.

அப்படி நம்பிக்கை இல்லாதபோது எதற்காக அன்றைக்கு நாடி பார்க்க வந்தீர்கள்? என்று சூடாகவே கேட்டேன்.

எல்லோரும் சொல்றாங்களேனு நெனச்சுதான் வந்தேன்.  அதோடு விட்டுட்டுப் போயிருக்கலாம்.  உங்களையும் அகத்தியரைப் பற்றி ரொம்பவும் கேவலமாகப் பேசிவிட்டேன்.  என்னை மன்னிச்சுருங்க.  சரி அதனை விட்டு விடலாம்.  எதற்காக என் செல்லக் குழந்தை சட்டென்று இறக்கணும்?  அதை நினைச்சுத்தான் தாங்க முடியாமல் துடிக்கிறேன்.

காரணமில்லாம எதுவும் நடந்திருக்காது.  அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் என்று அவரைச் சமாதானப் படுத்தினேன்.

அகத்தியர் மீது பழி சுமத்தி கேவலப்படுத்துவதர்க்காகத்தான், நான் அப்படி நடந்து கொண்டேன்.  உண்மையில் வீட்டில் தோஷம் இருந்தது என்பது எனக்கு முன்னமே தெரியும்.  ஆனால் நம்பவில்லை.  என் குழந்தை இறந்து அதே இடத்தில் தான், இதற்கு முன்பு குடியிருந்த ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இதற்க்கு பின்னால் குடி வந்த மற்றொருவர் அதே உத்திரத்தில், கடன் தொல்லை தாங்காமல் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.  இதற்கு பிறகு அந்த இடத்தில் ஒரு தீ விபத்தில் ஏழு வயது குழந்தை கொல்லப்பட்டிருக்கிறது.  இதெல்லாம் தெரிந்தும் அதே இடத்தில் தான் என் குழந்தையை ஒரு வீம்புக்காக படுக்க வைத்தேன்.  நான் ஒரு பகுத்தறிவுவாதி.  ஆனால் என் பகுத்தறிவால் இளம் மகனை இழந்து விட்டேன்.  நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து எதற்காக இப்படி நடக்கிறது என்பதை அறிய ஆசைப்படுகிறேன்" என்றார் அந்த நபர்.

நான் ஒன்றும் சொல்லாமல் நாடியைப் புரட்டினேன்.

அந்த குறிப்பிட்ட இடத்தில் தேவையல்லாத ஒரு பொருள் இருந்தது.  அந்த வீட்டிற்கு குடியிருக்க வருபவர்கள் சந்தோஷமாக வாழக்கூடாது என்பதற்காக அதர்வண வேதத்தின் துணை கொண்டு பூமியில் ஒரு யந்திரத் தகடு வைக்கப்பட்டிருக்கிறது.  இது வெகு நாட்களாக அந்த வீட்டில் குடியிருந்த ஒருவரால் செய்யப்பட்டிருக்கிறது.

எதற்காக இப்படியொரு தவறான காரியத்தில் அந்த நபர் இறங்கினார் என்றால், அவர் வாடகை தராமல் இருந்தார்.  எனவே வீட்டுக்காரர் அவரைக் காலி செய்ய சொன்னார்.  ஆத்திரத்தோடு காலி செய்யும் பொழுது தனக்குப் பிறகு அந்த வீட்டுக்கு குடிவரப் போகிற குடித்தனக்காரர்கள்,  இருந்த வீட்டுக்காரர் துன்பப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட அந்த யந்திரத்தை, வீட்டு ரேழியில், உத்தரத்திற்கு கீழே பூமியில் புதைத்து வைத்து விட்டு அவர் வீட்டைக் காலி செய்திருக்கிறார்.

அந்த யந்திரம் முறைப்படி செய்யாமல் தவறான மந்திரத்தைப் பயன்படுத்தியதால் அங்கு குடிவந்த ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனை ஏற்பட்டது.  இந்த பகுத்தறிவுவாதியின் குழந்தையின் உயிரைப் பறித்த போது, கொஞ்ச நஞ்சமிருந்த அந்த யந்திரத்தின் தீய சக்தி அத்தனையும் விலகி விட்டது.  இந்த பகுத்தறிவுவாதி அகத்தியன் சொன்னபடி அன்றைக்கே அந்த இடத்தில் ஒரு சுதர்சன யாகம் செய்திருந்தால் இந்த தவறு ஏற்பட்டிருக்காது, என்று சொன்ன அகத்தியர், யார் எந்த வீடிற்கு குடி போனாலும் முதலில் யாகம் செய்து விட்டுப் போவது தான் நல்லது.  இது எல்லோருக்கும் உகந்தது.  அதோடு மற்ற மதத்தினர் அவரவர் நம்பிக்கைகேர்ப்ப பிரார்த்தனை செய்வது உத்தமம் என்றார்.

இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்.  இப்படியொரு துயரச் சம்பவம் உனக்கு நடந்ததற்கு காரணம், முன் ஜென்மத்தில் நீயும் இதே மாதிரி ஒரு குழந்தையைக் கொன்று இருக்கிறாய்.  அதுவும் இப்போது கூட சேர்ந்திருக்கிறது, என்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

இந்தச் செய்தி அந்த பகுத்தறிவு வாதியைப் புண்படுத்தி இருக்கலாம்.  அல்லது எதோ சமாதானம் ஒன்றை நானே சொன்னதாகக் கூட எண்ணியிருக்கலாம்.  கர்ம வினை என்பதை யாராலும் அழிக்க முடியாது.  அதிலிருந்து குறைந்த அளவு தண்டனையைப் பெற்று தப்பித்துக் கொள்ளத்தான் அகத்தியர் இப்படியொரு வழியைக் கட்டுகிறார், என்பது தான் உண்மை.  ஆனால் இதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் கேள்விக்குறி.  அதே சமயம் இந்த நாடி பார்க்கும் பாக்கியம் கூட எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

இப்படி பல அறிவுரைகளை வழங்கிய அகத்தியர், பொதுவாக அகத்தியன் யாம், இப்படி பட்ட அதர்வண விஷயங்களை சொல்வதில்லை.  எமக்கும் அதில் பூரண நம்பிக்கையும் இல்லை.  ஏனெனில் பிரார்த்தனையை விட சக்தி எதுவுமில்லை.  அதர்வண வேதம் தான் உலகளாவிய சக்தி என்றால் கோவில், மசூதி, தேவாலயம் எதற்கு?  தேவையே இல்லை.  பெரும்பாலோரே இந்த மாதிரியான செய்வினை செய்வதில்லை.  அப்படி மீறிச் செய்பவர்களது குடும்பத்தினர் உருப்படியாக வாழ்வதில்லை, என்று சொன்னார்.

மேலும் அதர்வண வேதத்தைப் பற்றியும் அந்த யந்திரத் தகடு பற்றியும் தகவல் சொன்னதால் நாற்ப்பத்தைந்து நாட்களுக்கு தீட்டு வந்து விட்டது.  எனவே, நாற்ப்பத்தைந்து நாட்கள் தீட்டு முடியும் வரை யாருக்கும் எந்த விதப் பலனும் சொல்லப் போவதில்லை என்றார்.

நாற்ப்பத்தைந்து நாட்கள் ஓலைச்சுவடியை சோட்டனிக்கரை பகவதி ஆலயத்தில் கொண்டு வைக்குமாறும் எனக்கு ஆணை இட்டார்.  இதனைக் கேட்ட பிறகு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

எப்பொழுதும் மங்களகரமான செய்திகளைச் சொல்லி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அகத்தியர் அருள் பாலிப்பது வழக்கம்.  இப்படிச் செய்வினைப் பற்றி பலர் கேட்ட பொழுது தனக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றும் சொல்லியும் இருக்கிறார்.

அப்படிப்பட்ட அகத்தியர் அந்த பகுத்தறிவுவாதிக்கு இவ்வளவு பெரிய விளக்கத்தை தருவார் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. 

நாற்ப்பது நாட்கள் கழிந்திருக்கும்.

பட்டை பட்டையை திரு நீறு பூசி நெற்றியின் நடுவில் காலணா அளவுக்கு குங்குமம் வைத்து பழுத்த சிவ பழமாக வந்த அந்த பகுத்தறிவுவாதி ஒரு ஆச்சரியாமான செய்தியை என்னிடம் சொன்னார்.

எவன் அந்த வீட்டிற்கு மந்திரித்து யந்திரத் தகட்டினை வைத்தானோ அவனது பேரக்குழந்தை நாடு ரோட்டில் விபத் ஆகி இப்பொழுது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது.  இந்த செய்தியை அந்த நபரே இந்த பகுத்தறிவுவாதியிடம் வந்து சொல்லி நான் அன்றைக்குச் செய்த பாவம் என்று கதறியிருக்கிறான்.

அந்தக் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற அகத்தியரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.  என் குழந்தை தான் இறந்து விட்டது.  ஆனால், அவரது குழந்தை இறந்து விடக்கூடாது.  அந்தக் குழந்தைக்காக பழனி முருகனுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்.  என் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றார் கண்ணீர் மல்க.  நான் நெகிழ்ந்து போனேன்.

சில நாட்கள் கழித்து அந்த பகுத்தறிவுவாதியான சிவனடியார் என் முன் வந்து நின்றார்.

மொட்டை அடித்து அதில் சந்தானம் பூசியிருந்த அவரது கையில் ஒரு குழந்தை இருந்தது.  கூடவே அந்தக் குழந்தையின் தாத்தாவும் இருந்தார்.  விபத்து ஆனா குழந்தை பிழைத்துக் கொண்டு விட்டதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?  அகத்தியரை மானசீகமாகப் ப்ர்ரர்த்திதுக் கொண்டேன்.

1 comment: