​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 25 March 2022

சித்தன் அருள் - 1101 - அன்புடன் அகத்தியர் - சிவவாக்கியர் வாக்கு!



20/3/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம். சிவன் மலை. காங்கேயம்.

ஆதிபகவானை மனதில் தொட்டு என் முழு முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானையும் தொட்டு என் உயிரினும் மேலான உயிரான என்றே நினைத்த முருகனையும் தொட்டு வாக்குகளாக விரவுகின்றேன் வாக்கியன்.

இவை என்று போதாது இன்னும் உலகத்தில் மனிதனுக்கு புத்திகள்.

புத்திகள் இல்லையே மனிதனுக்கு.

பிழைப்புக்கள் இல்லையே!!!

புத்திகள் உண்டு ஆனால் பிழைப்புகள் தவறான வழியில் செல்லுதல்.

இதனையும் முன்னோக்கி பார்க்கும் எனில் இவ்வுலகம் மிஞ்சியது ஏதுமில்லை.

ஏதுமில்லை வளரவளர உன் மனதினில் திருத்தலத்தை ஏற்படுத்தி ஏற்படுத்தி கற்பனைத் திறத்தாலே பின் இப்படித்தான் தெய்வங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் ஒரு நாள் தெய்வமே வழிவிட்டு வழிவிட்டு அதனையும் நிறைவேற்றி நிறைவேற்றி அதனையுமன்றி கூற அப்படித்தான் இவ் மலை(சிவன் மலை) வந்தது.

வந்தது இதற்கும் அழகாக சூட்டி விட்டனர் உயர் பெரியோர் சிவன்மலை என்று.

இவையற்று அற்று இதனடியில் இன்னும் புதைந்துள்ளது மர்மங்கள். இதனையுமறிந்து ஈசனும் இதற்கு தகுந்தாற்போல் அனைத்தும் செய்வான்.

இன்று ஒருநாள் இங்கு இதனையும் எதனையென்று உணராமல் உணர்ந்த பிறகு உணர்த்திக் கொண்டால் எதனை என்பதை கூட இங்கு ஆலயம் இன்னும் அடியில் தங்கி நிற்கின்றது.

சித்தர்கள் இங்கும் இதன் அடியிலும் உள்ளது ஓர் பாதை, பாதையை வகுத்து பார்த்தால் பின் பாதைகள் ஆகவே சென்று கொண்டு அதில் கூட சித்தர்கள் வலம் வந்து தான் கொண்டிருக்கின்றார்கள். இரவும் பகலும்.

பல முனியவர்கள் பல ரிஷிகள் அறிவதற்கு ஒன்றுமில்லையப்பா மனித ஜென்மங்களே.

மனிதனிடத்தில் உபயோகங்கள் உள்ளது. அதை பின்பற்றவும் தெரியவில்லை.

மந்திரங்களாவது ஏதடா!!??? இதனையுமன்றி தந்திரங்களாவது ஏதடா!!??

ஆனால் நிலைமையைச் சொன்னால் புரியாது மக்களுக்குடா!!!

மக்கள் இன்று வாழ தெரியாமல் வாழ்வாதாரத்தை எப்படி எல்லாம் உயர்த்திக் கொண்டானடா மனிதன்.

மனிதனே நிலைதடுமாறி நிற்கின்றான். நிற்கின்றான் என்பதற்கிணங்க மாயத்தை மாயையை பின்பற்றிக் கொண்டு பின்பு அழிந்தால். பின் நிற்கின்றான் கவலையோடு. ஆனால் முதலிலேயே தெரியுமடா.

தெரியுமடா இதிலிருந்து என்ன பரிசுத்தங்கள்???

ஆனாலும் இங்கே யான் பலமுறை பல முறையும் பல சித்தர்களும் தவம் இயற்றி உள்ளார்கள்.

இவ் மலையில் யானும் உணவருந்தி யானே. இவ் மலையையும் ஒர் முறை தங்கம் ஆக்கியும் கொடுத்தார் ஈசன் எந்தனுக்கு. எடுத்துச் செல் என்று.

ஆனாலும் யான் இவையெல்லாம் எந்தனுக்கு ஏது?  என்று ஈசனையே கேட்டவன்.

அறிவதற்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்பதற்கிணங்க ஒன்றும் இல்லை என்பதற்கு இணங்க சென்னிமலை இதற்கும் இவையன்றி கூற பின்பு இங்குதான் தங்கம் வேண்டாம் என்று சொன்னாய் பின் இதை எடுத்துக் கொள் என்று கூட பார்வதி தேவி.

ஆனாலும் நீ என் அம்மையாகவே இருக்க கூடாதா!?? அம்மையாகவே இருந்திட்டுச் செல்.

இவ் அன்பு போதும் எந்தனக்கு.

அது வேண்டாம் பின் அவ் மலையும் கல்லாகி விட்டது. இப்பொழுது தெரிகின்றதா?? தெரிகின்றதா?? உயர் பெரியது!! எது வென்று?!!!

குறிக்கின்றது அன்பு.

இவ் அன்பை இறைவன்பால் செலுத்தினாலே செலுத்தினாலே இறைவன் பன்மடங்கு செய்வான்.

யானும் பல பல பல தலத்தில் கூட முருகன் தலத்தில் கூட தர்மம் ஏந்தினேன்.

தர்மம் ஏந்திதான் யான் உண்டிட்டு வந்தேன்.

உண்டிட்டு வந்தேன் ஆனாலும் பழனி தன்னில். ஏறி பின் எந்தனுக்கு எதற்கு தெரியாமல் தகுதிகள் இல்லாமல் முருகனும் பின் வரவேண்டும் என்று எண்ணி ஒருநாள் யான் உண்ணவில்லை முருகன் வருவான் என்று நினைத்து.

ஆனாலும் வரவில்லை இதனையே பின்பற்றி கொண்டான் முருகன்.

யானும் உண்ணாமல் தவித்துக்கொண்டிருந்தேன் தவித்திருக்கின்றேன் என்பதற்கு அப்படியெனில் இங்கு முருகன் வரப்போவதில்லை.

வரப் போவதில்லை என்று என் மனதில் நினைத்து ஈசனிடம் முறையிட்டேன்.

முறையிட்டேன் இவ்முறையானது இப்பொழுதும் தெரிந்து கொண்டு இருக்கின்றது.

தெரிந்து கொண்டு இருக்கின்றது என்பதற்கிணங்க அண்ணாமலை சென்றுவிட்டேன்.

சென்றுவிட்டேன் ஈசனை யான்  எதனை ஈசா என்றுதான் அழைத்தேன்... உன் மகன் அங்கே எந்தனக்கு உத்தரவுகள் கொடுக்கவில்லை என்பதற்கிணங்க ஆனால் என்னையும் பட்டினி போட்டு விட்டான்.

ஆனாலும் யான் இங்கே தர்மத்தை ஏந்துகின்றேன். வரட்டும் அவன் இங்கு என்று.

ஆனாலும் தர்மம் வேண்டினேன் தர்மம் ஏந்திக் கொண்டேதான் இருக்கின்றேன். ஆனாலும் எந்தனுக்கு வந்தது சௌகரியமாகவே.

ஆனாலும் வேண்டாம் என்றாலும் பின் ஈசன் நகையாடுவதற்கே தர்மம் இட்டு இட்டுச்சென்றான்.

சென்றான் ஆனால்  யான்  ஒரு நாள் என்பதைக் கூட ஒர் வேளையே என்று சொல்வேன் உண்ணாமல் இருந்தேன்.

அப்பொழுது தாய் பார்வதி தேவி மகனே என்று கூட எந்தனக்கு உணவிட்டுவிட்டாள்.

ஏனப்பா! எதனால்? இப்படி? என்று கூட ஆனாலும் பின் வாக்கியன் யானும் தாயே!!!

உன் மகன் எந்தனுக்கு தர்மம் ஏந்திக் கொண்டிருக்கும் பொழுது யான் பட்டினி ஆக இருக்கும் பொழுது கூட எந்தனக்கு உணவு கொடுக்க வரவில்லையே என்று.

ஆனாலும் முருகனின் செய்கையை பார் . ஏன்? இங்கு அனுப்பினான் என்று

அப்பொழுது பின் பார்வதி தேவி நீ கூட எந்தன் குழந்தையாக குழந்தைதானப்பா. அதை உந்தனக்கு உணர்த்துவதற்காக தான் உன்னை இங்கு அனுப்பினான்.

எந்தனக்கு ஆனந்தக் கண்ணீர்.

இப்பொழுது இங்கு எதனை?? குறிக்கின்றது.? குறிக்கின்றது ஆனாலும் யான் எதை கேட்டேன்? ஈசா???.... என்று.

நதி போல் என் கண்களில் ஓடியது ஆனந்தக் கண்ணீர். புரிந்து கொள்ளவில்லையே யான் சித்தனாக இருந்தும் கூட....

ஆனாலும் இதற்கு தான் யாங்கள் சித்தர்கள் யான் பெருமையோடு சொல்வேன்.

யாங்களே இதனை உணரவில்லை மனிதர்கள் நீங்கள் எப்படித்தான் உணரப் போகிறீர்கள்???

ஆனால் எள்ளி நகையாடுவது நகையாடுவது ....

உள்ளத்தில் வை இறைவனை போதுமானது.

இதையன்றி கூற ஆனாலும் அங்கிருந்து(அண்ணாமலையிலிருந்து) புறப்பட்டேன். மீண்டும் பழனி தன்னில் செல்லலாமா என்று கூட.

ஆனாலும் ஒரு யோசனை யான் பசிக்காகவே கஷ்டப்பட்டவன். உணவுக்காக எதை என்று எதுவும் இல்லாமல் நீருக்காகவும் கஷ்டப்பட்டவன்.

ஆனால் அண்ணாமலையில் ஈசனிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வந்து விட்டேன். வந்துவிட்டேன் என்பதற்கிணங்க ..ஈசா!!!! தேவி!!!! இங்கு இம்மலைக்கு யார் வந்தாலும் தருமம் ஏந்தினாலும் அன்னம் மனிதர்களால் கொடுக்கப் படவில்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும் இங்கு வந்தவர்கள் நிச்சயமாய் மனப்பூர்வமாக அன்னத்தை போதுமடா என்று அளவாக அவ்வளவு அளவு மீறி செயல்களுக்கு உண்டிட்டு.... "" நமச்சிவாயா என்று அழைக்க வேண்டும் இவை தான் என்னுடைய கூற்று கருத்து என்று வினவினேன்.

"" ஈசன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிட்டான்.

யானும் தர்மம் ஏந்துவேன் வருடம் வருடத்தில் ஓர்முறை அதுவும் சொல்லுவார்கள் சித்தர்கள் நிச்சயம் மாதத்தில் ஓர் முறையாவது எந்தனக்கு அங்கே பிச்சை எடுத்தல் உண்ணுவது மிக்க சந்தோஷம்.

இதனையும் உணர்த்துவதற்கு ஆட்கள் இல்லையப்பா.

ஆட்கள் இல்லையப்பா தன் கர்மத்தை போக்குவதற்காகவே அண்ணாமலை வருகின்றனர்.

எப்படி இறைவன் போக்குவான்???

அன்னத்தை அளித்துவிட்டாலே போக்குவானா?? என்ன??

என்ன?? முதலில் எண்ணுவது மற்றவர்களை நீயும் சரி சமமாக எப்பொழுது பார்க்கின்றாயோ அப்பொழுதுதான் நீ செய்த தர்மங்கள் செல்லுபடியாகும்.

அப்படி செல்லுபடியாகும் பின் அப்படி ஆகவில்லை என்றாலும் உன்னிடத்திலே தவறுகள் உள்ளது

உள்ளது அப்பனே அதனையும் மீறி மீறி மக்கள் நிலையில்லாமல் செல்கின்றனர்.

மந்திரத்தால் ஆவது ஏதடா!!! தந்திரத்தால் ஆவது ஏதடா!!! இறைவனை வணங்கி ஆவது ஏதடா!!! மனதில் நிறுத்தடா இறைவனை"!! குடி கொள்வானடா இறைவன்.

அப்பொழுது நீ ஏற்காமல் ஏற்றுவிட்டு தீபம் உன் உள்ளத்தில் எரிய வை. இறைவன் வந்துவிடுவான் பின் பார்த்துக்கொள்ளலாம் சென்றுவிடலாம் சென்று விடுவதற்கு என்ன வழிகள் தகுதிகள் இல்லையே மனிதா.!!!

மனிதா!!!! பிறந்திட்டாய் பிறந்திட்டாய் என்பதற்கிணங்க அவ் பிறப்பே ஒரு மாயை என்பது நிரூபித்து விட்டாய். நிராகரித்து விட்டாய் எதனால் என்பது எதனால் என்பதை கூட.

சொல்லி இருக்கின்றேன் எதனையும் இப்பொழுது கூட என் இல்லம் இவை தான்(சிவன் மலை) என்பேன்.

இங்குதான் யான் தங்குவேன் என்பேன்.

இங்கிருந்து சென்னிமலை செல்வேன்.

செல்வேன் அங்கிருந்து அழகர் மலையும் செல்வேன் செல்வேன் பழனி தன்னில்.

மலைகள் இங்கு வலம்வந்து பின் இதற்கும் சமமானவர்கள் இங்கிருக்கும் மலைகள் எல்லாம் எதனை என்று கூற...

 முருகன் விளையாடிக் கொண்டே இருக்கின்றான்.

கணபதியும் விளையாடிக் கொண்டே இருக்கின்றான்.

இருக்கின்றான் சபரிநாதன் விளையாடி கொண்டே இருக்கின்றான்.

எதனால் என்பதை கூட விளையாட்டு புத்தி ஆகவே இறைவன்களுக்கு ஆகிவிட்டது.

மனிதன் நிலைமையை அப்பொழுது இறைவன் புரிந்து கொள்வதற்கு சமமானவை மனிதன் செய்தால்தான் நிச்சயம் ""இவனா!!!??? என்றுகூட தேடி வருவான் இறைவன்.

இறைவன் உண்மை உண்மை என்பதற்கிணங்க பொழுது போக்காகவே பார்க்குதல் .   பார்க்குதல் என்பதைக்கூட இனிமேலும் இறைவனிடத்தில் சென்றால் பின் ஏதாவது நடந்து விடுமா ??என்று கூட வருவான் பிச்சை உண்ண.

ஆனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.... மனிதா!!! உன்னிடத்திலே திறமைகள் சரியாக யூகித்துக்கொண்டு  யூகித்து கொண்டு இப்படிப் பின் மனதில் ஆசையின்றி அன்பு மூலமே இறைவனை பெறமுடியும்.

பெற முடியும் என்பதற்கு இணங்க என்னையும் சோதித்தான்!!!!

 சோதித்தான் என் தந்தை என்பதற்கிணங்க முருகன்.

முருகன் நினைத்துக்கொண்டான் பழனிமலை தன்னில்.

யான் இங்கே இருக்கின்றேன்.... முருகன் அங்கே இருக்கின்றான்.

ஆனாலும் வாக்கியனை சோதிக்க வேண்டும் என்று முருகன் எண்ணி விட்டான்.

ஆனாலும் அதை யான் அறிந்து விட்டேன்.

ஆனாலும் முருகன் அதற்கும் மேலாகச் சென்று அறிந்து விட்டான்.

வாக்கியன் அனைத்தும் உணர்ந்தவன்.

உணர்ந்தவன் இவந்தனை எப்படியோ பின் யான் முருகன் என்று தெரிய விடாமல் இவந்தனிடம் விளையாட்டை துவங்க வேண்டும் என்று எண்ணி.

ஆனாலும் முருகன் வந்து விட்டான். ஆனாலும் அப்பொழுது முருகன் என்று கூட எந்தனுக்கு தெரியாமல் செய்துவிட்டான் முருகனே.

ஆனாலும் ஒன்றைக் கேட்டான். எந்தனை. எவ்வாறு என்பதை கூட.

இறைவன் எங்கு இருக்கின்றான்???? என்று சொல் என்று கேட்டுவிட்டான்!!!முருகன்.!!

யானும் திகைத்தேன்.!!!

திகைத்தேன் எப்படி வாக்குகள் உரைப்பது?? உரைப்பது என்பதைக்கூட.

ஆனாலும் யான் சொல்லி இருக்கின்றேன் எதனை என்று கூட....

"""" என்னுள்ளே இருக்கின்றான்""" என்று கூட சொல்லிவிட்டேன்.

ஆனால் நகையாடினான் முருகன்...

உன்னுள்ளே இருக்கின்றானே!!!!! பின் வெளியே எடு என்று யான் பார்க்கவேண்டும் என்று கூட.......

ஆனாலும் யான் திகைத்து விட்டேன், யான் திகைத்து விட்டேன் எப்படி? வெளியே எடுப்பது?? என்பதைக்கூட...

ஆனாலும் முருகன் நகைத்தான் """எடு...!!! எடு..!!! என்று கூட.

ஆனாலும் என்னால் முடியவில்லை. முடியவில்லை ஆனாலும் முருகன் என் பக்கத்திலே அமர்ந்து இருக்கின்றான்.

"" யான் முருகா......!!!!!!!!! என்று கூப்பிட்டேன்.

ஆனாலும் அதற்கும் நகைத்தான்!! முருகன்.

என்னை மதி மயக்கி ஆக்கிவிட்டான் முருகன்.

ஆனாலும் இதனையுமின்றி இன்னும் பெரிய விஷயங்கள் என்னவென்றால்?? வருவது உண்மையே.!!

ஆனாலும் பின்பு முருகனும் திரும்பவும் கேட்டான்.

எங்கே இருக்கின்றான்??? இறைவன் எங்கிருக்கிறான்????

வரச்சொல் என்று கூட.....

ஆனாலும் மாயை கண்ணை மறைத்தது.!!!

கண்ணை மறைத்தது ஆனால் தெரிந்து கொண்டேன் என்னுடைய பலத்தால் !!சக்தியால்.!!!

முருகா...!!! நீ முருகன்..!! தான்.

ஏன்?? என்னிடம் இப்படி விளையாடுகின்றாய் !!!என்று கூட.

ஆனாலும் முருகன் சொன்னான்!!!! சொல்லியதை சொல்லியதாக வாக்குகளாக காப்பாற்ற வேண்டும் வாக்கியனே....

"" முதலில் வரச்சொல் இறைவனை..... உனது உள்ளத்தில் இருக்கின்றான் என்று சொன்னாயே!!!!

முதலில் வரச்சொல் ...என்று கூட.

ஆனால் ஒரு வார்த்தை யான் சொன்னேன்...

''''''''' முருகன் மயங்கிவிட்டான்......!!!!!

முருகா!!!! உன் பால் யான் அன்பு கொண்டேன் அதனால்தான் நீ இங்கு வந்து விட்டாய்!!!!

இப்பொழுது தெரிகின்றதா!!!!??

என் "" மனதில் வந்தவன் நீயே""" என்று!!!!!

இதனைத்தான் உணர்ந்து உணர்ந்து அன்பினால் மட்டுமே இறைவனை வெல்ல முடியும்.

மற்றவைகளால் வெல்ல முடியாது.... வெல்ல முடியாது என்று கூட.

ஆனாலும் பின் முருகனை யானும் கேட்டேன்.... முருகா!!! யான் எப்படி வலம் வந்து கொண்டே இருக்கின்றேன். எந்தனுக்கு சொந்தங்கள் எவை என்று கூற யாரும் இல்லை... என்று கூற.

அதனைக் கூட இவ்வுலகத்தில் மிக்க மிக்க உயர்ந்தவர்கள் பணமதிப்பு உடையவர்கள் என்று எதனையும் குறிப்பிடாமல் யான் சொன்னேன்..

ஆனால் முருகனோ...!!! உந்தனுக்கு என்ன வேண்டும்!???

சித்தனாக தகுதி அனைத்தும் உன்னிடத்திலே இருக்கின்றன.

இவ்வுலகத்தில் அழியும் என்றால் அழிந்துவிடும் பிறப்பு என்றால் இன்னொரு உலகம் பிறக்கும் அவ்வாறு இருக்கும்பொழுது... உந்தனக்கும் வேதனையா??

ஆம்!!! மனித வடிவில் வந்து விட்டாலே வேதனை தானே முருகா!!!! என்று யானும் கூறினேன்.

ஆனாலும் உந்தனுக்கு என்ன?? தேவை?? என்று வினவ..!!!

யானும் ஒருவிதத்தில் சொல்லிவிட்டேன் முருகா இவ்வுலகத்தில் வாழ வேண்டுமென்றால் பணம் முக்கியமாக செயல்படுகின்றது.

முக்கியமாக செயல்படுகின்றது என்பதற்கிணங்க யானும் ஒருவளை(ஒரு பெண்ணை) திருமணம் செய்ய எண்ணினேன்.

சென்றேன் அவள் இல்லத்திற்கு பெண் தேடினேன் பெண் கொடுப்பார்களா என்பதற்கிணங்க

ஆனாலும் என்னையும் நீ ஒரு பரதேசி!!! உந்தனுக்கு எப்படி பெண் தருவது என்றுகூட ....

பின்வந்து ஆனாலும் அறியாமலேயே எப்படி என்று கூட.

ஆனால் முருகனுக்கு கோபம் வந்து விட்டது...

யார்?? அவன்??? யாரென்று சொல்ல ஆனால் பின் மகாராஜா.... இவை அன்று இவ்வாலயத்தை கட்டிக்காக்கும் அவனே என்று.

யான் வருகின்றேன் செல் என்றுகூட. ஆனால் முருகனும் எந்தனுக்கே பெண் பார்த்தான் என்பேன்.

பார்த்திட்டு !!பார்த்திட்டு!! இவையன்றி கூற வந்திருப்பது என் பக்தன்!!!!

யார்?? இவந்தனக்கு பெண் இல்லை என்று சொன்னது?????

ஆனாலும் மகாராஜா சொல்லிவிட்டான்..... """""பெண்ணில்லை!!!! பொன்னில்லையென்றால்.....!!!இதனையும் என்றுகூட.

ஆனாலும் முருகன் இவை பின் எத்தனை பொற்காசுகள் வேண்டும்??? என்று கூற...

யான் இங்கு பின் இவ் வட்டத்திற்குள் யான் கட்டிக்காக்கும் அளவிற்கு வேண்டும் என்று கூற..

ஆனால் பொன் காசுகள் உடனடியாக எந்தனுக்காகவே பின் இங்கு உள்ள அனைத்து மலைகளையும் பொன்னாக்கினார் .முருகன்.

அயர்ந்து விட்டான்!!! அயர்ந்து விட்டான்!!! மகாராஜன்

ஆனாலும் வந்ததை எண்ணி பார்த்து என்னுடன் அனுப்பி விட்டான்.

ஆனாலும் அவ் மகராசி மகாராசி (மகாராஜாவின் பெண்) பின் ஒரு பிறப்பில் என்னுடைய தாயே ஆவாள்.

எப்படி ஆசைப்பட்டு இருக்கின்றேன்??? ஆனாலும் என் தாயவளை இப்பிறவியில் யான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று என்பது விதி.

இதுதான் இதுதான் விதி என்னவென்று முதலில் பிறக்கும்போதே எழுதி வைத்திருக்கும் இதுதான் நடக்கும் இதைத் தவிர இதை தவிர ஒன்றும் நடக்காது.

நடக்காது ஆனாலும் நடக்கும் நடக்கும் எப்படி என்றால் இறைவன் பின் இறைவன் மீது பக்தி அளவுகடந்த அன்பும் இருந்தால்தான் பின் விதியினை வெல்லலாம்.

மற்றபடி மந்திரங்கள் தந்திரங்கள்  எச்செபத்தையும் செய்தாலும்... மானிடா ஆகாது.


எதற்காக எதற்காக ஓடோடி உழைக்கின்றாய் ஒன்றுமில்லை... விதியில் எழுதப்பட்டிருப்பதை யாராலும்...

ஆனாலும்.  அன்பு அன்பால் மாற்றமுடியும் அன்புதான் இறைவன். இறைவன்பால் மனதில் வைத்துக்கொண்டு இரு.

இன்னும் இவ் மலையில் பல ரகசியங்கள் உள்ளது அகத்தியனும் இங்கு வந்திட்டுச் செல்வான்.

செல்வான் என்பதற்கிணங்க அகத்தியனும் எந்தனுக்கு பின் பல வழிகளிலும் பல வழிகளிலும் ஞானம் போதித்து போதித்து பின்...

சுந்தரானந்தன்  இவந்தனுக்கும் பலவழிகள் உண்டு உண்டு என்பதற்கு இணங்க இவ் மலைகளில் விதவிதமாக அதனால் மகாராஜன்.

இவ் மலைகளை பொன்னாக்கினான்  முருகனே ..அதனால் மலைகளுக்கெல்லாம் முருகனே.

ஆனாலும் மகாராஜா மனம் வருந்தி முருகா!!!!  உன்னை யான் தவறாக புரிந்து கொண்டேன். இவ் மலை எதை என்று கூற எந்தனுக்கு பொன்னாக தேவையில்லை . எதை என்று கூற ஆனால் ஒன்றை மட்டும் கேட்கின்றேன் யான் என்று கூட.

இவ் மலையெல்லாம் பின் பொற்காசுகளாக தேவையில்லை..... நீ அமைந்துவிடு போதுமானது...... மக்கள் வந்து தரிசிக்கட்டும் பாவங்கள்... நீங்கட்டும் என்று கூட....

அதனால் முருகன் இவ் மலையிலெல்லாம் நிற்கின்றான்.

இதற்கும் உணர்ந்து வேறில்லை இப்பொழுது மானிட ஜென்மங்களே பார்த்தீர்களா !!!அன்பு வைத்தால் இறைவன் உனக்காக எதையும் செய்ய காத்திருக்கின்றான்.

இன்மை இன்மையுள் மறுமை மறுமையில் உண்மை உண்மை ஏதடா மனிதனிடத்தில் பொய்யடா...

பொய்யடா !!!பொய்!! பொய் !!ஆனாலும் பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் மனிதன் பொய்யும் கூட அவனை தூக்கி விட்டுக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் ஒரு நாள் விழுந்து விடுவான் அப்பொழுதுதான் மெய் என்பதை உணர்வான் மனிதன்.

அப்போது வரை மெய் என்பதை உணர மாட்டான் மனிதன்.

பொய்!! மெய்!!! இதற்கும் ஒரே ஒரு வரிகளில் சொல்லிவிடலாம் மெய்யை பொய்யாகலாம் . பொய்யை மெய்யாக்கலாம்.

ஆனாலும் உண்டு உண்டு காசுகள் வேண்டுமானால் இறைவனே தருவான்.

தருவான் என்பதற்கிணங்க ஆனாலும் மனிதன் எதை வைத்து சம்பாதிக்கின்றானென்றால்?? இறைவனை வைத்து சம்பாதிக்கின்றான்.

இது நியாயமா மனிதனே!!!

மனிதனே நியாயங்கள் இல்லை...

ஏன் இறைவன் பார்க்கத்தான் போகின்றானா?? இதை.... பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள்.

ஆனால் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றான் இறைவன்.

இறைவன் மிகப்பெரியவன்!! கருணை உள்ளவன்!! ஆனாலும் பின் சிறிது காலம் தான் செல்லட்டும் செல்லட்டும் என்று விட்டுக்கொண்டு ....

ஆனால் அவந்தனக்கு கோபம் வந்துவிட்டாலும் நீ எதை வெறுக்கப் படவில்லையோ!!! அதனால் எதன் மூலம்?? எதனை வெற்றி கொண்டாயோ?? அதன் மூலமே உன் தோல்விகள் நிச்சயமாக்கப்படும்.

அதனால் உன்னை எப்பொழுதும் இறைவன் சீண்ட மாட்டான்.

தகுதிகள் தகுதிகள் மென்மேலும் பெருக்கிக்கொள்ள பெருக்கிக்கொள்ள அதிலும் தகுதிகள் இல்லை.

தகுதிகள் இல்லை மனிதா மனிதா நீ மாயை!!!! மாயையில் பிறந்திட்டு அவ் மாயையை நோக்கி கொண்டிருந்தால் பின் அவ் மாயை உன்னை என்ன!!! விட்டுவிடுமா?? என்ன????

விட்டுவிடாது.... அன்பிற்குதான் உண்டோ!!!,உண்டோ!!! எக்காலம் .

எக்காலம்... இறைவன்... அன்பு இறைவன், பாசம், கருணை, இவை எல்லாம் ஒரே வரிசையில் வரக்கூடியது. இவ் ஒரே வரிசையில் சென்று கொண்டிருந்தாலே இறைவன் ஒரே வரிசையில் நீண்டு உன்னிடத்திலே.. வருவான்.

தெய்வம் ,தெய்வத்தை நோக்கி எதற்காக திரிந்து கொண்டு இருக்கின்றாய் மனிதா?? சிறிது காலம் யோசிக்கிறாயா!!!  தெய்வத்தை எதற்கு வணங்குகின்றாய் என்று தெரிகின்றதா???

தெரிகின்றதா??? இல்லை!! புத்திகள்!! புத்திகள் அன்போடு வணங்கு மனிதா பின். மாயை மாயத்தில் சிக்கிக்கொண்டு அழிந்து கொண்டு பிறப்பெடுத்து பிறப்பெடுத்து.... தேவையா???

பிறப்பை யாராலும் பின் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது எதனால்?? பிறப்பை தடுத்துக் கொள்ளலாம் என்றால். """அன்பு"""...!!

ஆனால் மனிதர்கள் பின் தந்திரங்களாலும் மந்திரங்களாலும் இன்னும் என்னென்ன விஷயங்கள் ஆகவும் பிறவியை கடந்துவிடலாம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். முடியாது...... முடியாது முட்டாள் புத்தி இல்லாத மனிதனே.......

புத்தி இல்லாது..!! உந்தனக்கும் எங்கே?? போனது ??புத்தியடா...

புத்தியடா !!ஏன்?? பிறப்பறுக்க பிறப்பறுக்க முற்று பெறலாமென்பதற்கிணங்க மந்திரங்கள், தந்திரங்கள், ஏன்?? உந்தனக்கு எவை என்று கூட துன்பத்தைப் போக்குவதற்கு வழிகள் இல்லையே!!!

வழிகள் இல்லையே மனிதா!!!! இச்சைகள் உன்னை வாட்டுகின்றது இச்சைகள் உன்னை வாட்டுகின்றது எதனால்?? மந்திரங்கள் தந்திரங்கள் எதற்காவாவது பயன்படுத்த கூடுமா என்பது கூட தெரியாமல் போய் கொண்டிருக்கிறாய் மனிதா!!!

மனிதா சிறிது தூரம் நில். நின்றிட்டு இனிமேலும் மாய வலையில் சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு சென்று கொண்டு இருக்காதே!!!!

அப்படி சென்று கொண்டிருந்தாலே ஓர் பள்ளம் வரும்.

அவ் பள்ளத்தையும் உணர்ந்து விடாமல் சென்று கொண்டிருக்கின்றாயே மனிதா!!!

ஆனால் பின் யோசித்துக்கொள்ளு.....

பின் இப்படியே சென்று கொண்டிருந்தால் பள்ளம் வரும் அதில் விழுந்து விட்டால் யாரும் காப்பாற்றவும் வர மாட்டார்கள்.

இதற்கு மந்திரமும் தந்திரமும் உதவாது இறைவனும் உதவமாட்டான்.

ஏனென்றால் இறைவனுக்கு தேவை அன்பு அவ் அன்பு நீ செலுத்தப்படவில்லை..
செலுத்தப்படவில்லை மனிதன் என்ன?? அனைத்தும் செய்பவனா?? என்ன???

மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது.

இதை பல சித்தர்களும் பல ஞானியர்களும் ஏன் யானும் சொல்லிவிட்டேன் மனிதன் பொய் .

அவனால் ஏன் இந்த மந்திரங்களையும் தந்திரங்களையும் கொடுக்க கொடுக்க இதனையும் பின் முடிக்க என்று கூறினானே ஏன் இவந்தனக்கு, எந்தனக்கு, இவ்வாறு நிலைமைகள் பணங்கள் வேண்டும் என்று ஆனால்...

அவந்தன் பணங்கள் கொடுக்கலாமே??!!!!

ஆனால் கொடுக்க முடிவதில்லையே..... திருடன் மனிதன்.

புத்திகெட்ட ஒரு அழகான திருடன் என்பேன்.

தெளிவானது??? எது உணர்ந்து கொள்!! மனிதா

கலியுகத்தில் இன்னும் பொய்யான துறவிகள் போலி குருமார்கள் இவையெல்லாம் பின் உடை அணிந்திட்டு.... யான் இறைவன் என்னால் அனைத்தும் செய்ய முடியும் என்பதை பொய்யான வாக்குகளை நம்பி ஏமாறாதீர்கள்.

உன் வேலையை பார்த்தாலே சரியான முறையில் அன்பை செலுத்தினாலே இறைவன் ஓடோடி வருவான்.

மர்மம் இன்னும் ஒளிந்து கொண்டிருக்கின்றது இவ் மலையில்...காலடி வையுங்கள் யான் ஆசீர்வதித்து மெய்யானது என்றுகூட என்பதைக்கூட உணர்த்தி விடுகின்றேன்.

இவ் மலைக்கு வாருங்கள்... சென்னி மலையிலும் அற்புதமான காட்சிகள் உண்டு.

உண்டு. அவ் மலையிலும் சித்தர்கள் வந்தாலே மாற்றி விடுவார்கள் சித்தர்கள்.

இங்கு வந்தாலே மாற்றி விடுவார்கள் சித்தர் பல சித்தர்கள் உண்டு உண்டு.

நிச்சயம் இவ் மலைகளுக்கு சென்று வந்தாலே போதுமானது புத்தியை மாற்றி விடுவான்.

ஏன்??! பழனி மலைக்கு பின் பயணம் மேற்கொண்டால் பின் ஆனாலும் பயணம் கொண்டே இருந்தாலும் புத்திகள் மாறக்கூடும்... உண்மை நிலைகள் என்னவென்று பழனி ஆண்டவன் தெரிவித்து விடுவான்.

தெரிவித்து விடுவான் இன்னும் சூட்சுமங்களோடு இன்னும் ஏனைய சித்தர்களும் வருவார்களப்பா... இவ்வுலகத்தை திருத்த.

மேற் சொன்ன வார்த்தைகள் உண்மையானவை.

உண்மையானவையே என்று தெரிந்துகொள்!! மனிதா தெரிந்து கொள் !!மனிதன் மனிதனை நம்புவது எக்காலம்?? எதனை என்று கூற மனிதன்  மனிதனை பின் நம்பிக்கொண்டே இருந்தால் உலகம் தாழ்ந்து கொண்டே செல்லும்.

மனிதன் மனிதனை எப்போது? நம்பாமல் இறைவனை நம்புகின்றானோ!!! அப்பொழுதுதான் உலகம் செழிக்கும். சொல்லிவிட்டேன்.... மறு வாக்குகளில் பல சித்தர்களும் வந்து உரைப்பார்கள்.... முருகா!!!!! முருகா!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

 அருள்மிகு
 வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி
 திருக்கோவில்

பட்டாலியூர்,
சிவன்மலை,
காங்கேயம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.

8 comments:

  1. ஓம் அகத்தீசாய நமஹ... ஐயா இப்பதிவைப் படிக்கும் பொழுது கண் கலங்கியது...
    தற்செயலாக நாங்கள் (அகத்தியர் பக்தர்கள் )மூன்று பேர் 20/03/22 அன்று உச்சிகால பூஜை சென்னிமலையில் லும். சாயரட்சை பூஜை மற்றும் அர்த்தஜாம பூஜை சிவன் மலையிலும் தரிசித்தோம்.. நாங்கள் தரிசித்த அன்று அகத்தியர் ஐயா நாடியில் உரைத்தது கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறோம்... அருகில் இருந்தும் ஐயா அவர்கள் நாடி படித்ததை நேரில் பார்க்க முடியவில்லையே என்கின்ற வருத்தம்... விரைவில் நேரில் ஐயா படிப்பதை பார்க்க அகத்தியர் அய்யாவை வேண்டுகிறோம்..
    ஓம் அகத்தீசாய நமஹ... ஓம் சிவ வாக்கியர் சித்தரே போற்றி போற்றி.... பதிவை தொகுத்து வழங்கிய arunachalam ஐயாவுக்கும் நன்றி

    ReplyDelete
  2. அன்புடன் அகத்தியர்.... எவ்வளவு பொருத்தமான தலைப்பு.... என்று சிவவாக்கியர் உரைக்கும் போது தெளிவாக புரிகிறது.

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ.
    சிவன் மலை மிகவும் அழகான கோவில். அங்கு தியானம் செய்யும் போது மனம் மிகவும் அமைதியாக இருக்கும் .

    ReplyDelete
  4. வணக்கம்
    அகத்தியன் போற்றி
    மூலன் போற்றி
    போகன் போற்றி
    புஜண்டன் பற்றி.

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. Translation:
    https://drive.google.com/file/d/1uTHJS7wJS_drgKe3IuiMIU4WKg1eWPnO/view?usp=sharing

    ReplyDelete