​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 21 March 2022

சித்தன் அருள்-1098-அன்புடன் அகத்தியர்- காகபுசுண்டர் வாக்கு!


18/3/2022 பங்குனி உத்திரம் / பௌர்ணமி அன்று பிரம்ம முகூர்த்தத்தில்  காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு 

ஆதி பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் மனதில் நிறுத்தி வாக்குகளாக உரைக்கின்றேன் புசுண்ட முனி. 

விதவிதமாக இன்னும் பொய்கள் கூறிசொல்லி திரிவார்கள்  எவர் என்று அறியாமலே நிலைமையிலே.

நிலைமையிலே இன்னும் பல கோடி திருடர்கள் வருவார்கள் அதனால் எவரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்.

எதை என்று கூற படைத்தவனை நம்பு!!! பின் மனிதர்களை நம்பிவிடாதீர்கள் எளிதில் கூட.

மனிதன் திறமையானவன் எதில் என்றால்?? ஏமாற்றுதலில். ஏமாற்றுவதில் என்றேன்.

ஆனாலும் அவன் தான்  ஏமாறுகின்றான். என்று கூட தெரியாமல் சுற்றிசுற்றி வருகின்றான்.

எதனையும் என்று நிலைநிறுத்தாத பொழுது பொய்கள் இதனையும் என்று கூற.

ஒருவன் எதனையும் என்று அறியாத அளவிற்கு கூட வந்துவிட்டால் அவந்தனக்கு ஒன்றுமில்லை.

இறைவன் தரிசனங்கள் எப்படி?? பார்ப்பது ??என்பது கூட !!இனி எவரும் உணர்ந்திருக்கவில்லை.

யான் யுக யுகங்களாக பிறந்து பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டு இவ்வுலகத்திற்கு பின் நல்செய்தியை பரப்பினேன் யுக யுகங்களாக.

ஆனால் மனிதன் பக்குவமாக ஏற்பதில்லை.

ஏனென்றால் மனிதனுக்கு இறைவனை எப்படி காண்பது என்பது தெரியாமல் போய்விட்டது.

இதை யுக யுகங்களாக யான் பார்த்துக் கொண்டேதான் வருகின்றேன்.

ஆனாலும் சித்தர்கள் வரும் காலங்களில் தன் தகுதிகளுக்கு ஏற்ப மனிதர்களை தேர்ந்தெடுத்து நிச்சயமாய் இறை தரிசனத்தை வாரி வழங்குவார்கள் என்பேன்.

என்பதைவிட சிறப்பு ஆனது உண்டு என்பதற்கிணங்க இவ்வுலகத்தை ஆட்டிப்படைக்கும் ஈசனும் சற்று கோபம் தான்.

ஏனென்றால் மனிதன் அப்படிப் பட்டவனாக இருக்கின்றான்.

எதனையும் நிரூபிக்கும் அளவிற்கு மனிதர்களிடத்தில் எதனையும் நிரூபிக்கும் அளவிற்கு உள்ளது என்றால்?? பொய்கள் பொய்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றான் மனிதன்.

ஆனால் அதன் விளைவு என்னவென்று கூட தெரியாமல் வாழ்கின்றான்.

இவ்வுலகத்தில் பின் பணங்கள் தேவையில்லை வாழ்வதற்கு. புண்ணியங்கள் தான் அவசியமாகின்றது.

புண்ணியத்தை ஒருவன் எப்பொழுது பெற்றுக் கொள்கின்றானோ?? அவந்தனைத்தேடி அனைத்தும் வரும்.

பின் பணங்கள் பணங்கள் என்று பின்னால் அலைந்தாலும் பின் புண்ணியங்கள் இல்லை என்றாலும் பணங்கள் அவை பின் அவந்தனை பாதுகாக்காது என்பேன்.

ஆனால் இன்றைய மனிதர்கள் சித்தர்களை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றார்கள் இவையன்றி கூற.

ஏனென்றால் அவர்களுக்கு ஏன் இதனை செய்கின்றார்கள் என்றால் ஏன் கண்ணுக்குப் புலப்படவா?? போகின்றார்கள் சித்தர்கள். கண்ணுக்கு புலப்படவா?? போகின்றார்கள் இறைவன்கள். என்றுகூடப் பின் பொய்.

ஆனாலும் நிச்சயமாய் வரும் காலங்களில் கலியுகத்தில் யாங்கள் காட்சியும் அளிப்போம் .நல் மனிதர்களை தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பு மிக்க இவ்வுலகமாக வரும் காலங்களில் மாற்றுவோம்.

பொய்யானவர்களை நிச்சயம் அழிப்போம் என்பதைக்கூட ஏன் இப்பொழுது தெரிவித்துக்கொள்கின்றேன்.

தெரிவித்துக்கொள்கின்றேன் என்பதைவிட பார்வதிதேவியும் வரங்கள் வரங்கள் தந்து கொண்டே இருக்க மீண்டும் மீண்டும்  சித்தர்கள் இவ்வுலகத்தை ஆட்சி செய்வார்கள் என்பது திண்ணம்!! திண்ணம்!! திண்ணம்.!!

அதனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பதைக்கூட யான் சொல்லி விடுகின்றேன்.

அப்பொழுது எதை என்று கூட இப்பொழுதே சொல்லி விடுகின்றேன் எச்சரிக்கின்றேன் அனைவரையும் கூட.
எச்சரிக்கின்றேன் மீண்டும் மீண்டும்.

பின் பொய்கள் சொல்லி இவை செய்தால் அவை அவை செய்தால் இவை என்றெல்லாம் பின் சொல்லிக்கொண்டே திரிந்தால்..... மனிதா!!! உன் நிலைமை அழிவிற்குரியது என்பேன்.

யோசித்துக் கொண்டு இரு !!உந்தனுக்கு எவை எதனை என்று இறைவன் கொடுப்பதில்லை ?? ஏன் பொய் சொல்லித்தான் நாடகம் நாடகம் இதையன்றி ஆனால் எல்லாம் ஒரு நாடகம் என்று கூட பின் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய் அதில் கூட மனிதா அதனால் பின் கவலைகள் கஷ்டங்கள் வரும் என்பேன்.

அதனால் இப்பொழுதே சொல்கின்றேன் சித்தர்களின் யான் வணங்கினேன் ,பின் அனைத்தும் செய்தேன் ,ஏன்?? கவலைகள் இவ்வாறு என்பதைக்கூட.

ஆனாலும் நீ ஒழுக்கமாக இல்லை பொய் சொல்லி திரிந்துகொண்டு பின் இதனையுமன்றி என்று கூட வாழ்க்கை நடமாடி அதனால் நேர்மையைப் பின்பற்றுங்கள் உண்மையைச் சொல்லுங்கள் பின் ஒழுக்கமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

பொறாமை குணம் ஆகாது ஒருவன் பொறாமையை பின்பற்றினால் அவ் பொறாமையே அவந்தனை அழித்துவிடும். என்பதை கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றான்.

இவ்வுலகில் நிச்சயம் மாறும் காலங்கள் எங்களுடைய காலங்கள்.

ஆனாலும் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.

சித்தர்கள் பின் நல்லோர்களை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள் ஆனாலும் பின் ஏமாற்றுபவர்கள் அதிகம் இவ்வுலகத்தில் நல்லோர்களை விட.

இதனை பல வாக்குகளிலும் பல சித்தர்கள் செப்பி...செப்பி... ஆனால் மனிதர்கள் திருந்திய பாடில்லை.

அதனால் நிச்சயம் யாங்கள் தண்டனைகள் தான் கொடுப்போம்.

கொடுப்போம் என்பதைவிட மீண்டும் மீண்டும் செப்புகின்றபடியால் ஆனாலும் சில காலங்கள் தான் இவையன்றி கூற ஏமாற்ற முடியும்.

இதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

யான் ஏமாற்றுகின்றேனே....யான் நலமாகத்தான் உள்ளேன் என்பது கூட மனிதனின் வாக்கு.

ஆனால் எப்படி?? இவந்தனை கவிழ்க்க வேண்டும்... என்பதை கூட சித்தர்கள் சரியாக அறிந்து வைத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை நிச்சயம் தெரிவிப்பேன்.

அதனால் பக்தி என்பதை உன் மனதில் செலுத்து.

அன்பை செலுத்து.

மற்றவை இயலாதவர்களுக்கு பின் போய் உணவிடு.(அன்னதானம்). போதுமானது.

இவையன்றி கூற சித்தன் ஞானி மகரிஷி இவையெல்லாம் பொய் என்று.. எவை என்று கூற மனிதன் ஏற்படுத்துவான் என்பேன்.

ஒருவன் ஞான நிலைக்கு வருவதென்றால் அவந்தன்  பரதேசி போல் இட்ட பிச்சையெல்லாம் அலைந்து திரிந்து பின் வருந்தி பின் எங்கெல்லாம் உறங்கி படுத்து பின் திரிகின்றானோ அவன்தான் உண்மையான ஞானி.

ஆனால் அவந்தனும் இவ்வுலகத்தில் பின் வருவார்கள் கோடி ஆனால் பின் அனைத்தையும்  ஓரிடத்தில் இருந்து பின் பெற்று பெற்று வாழ்பவன் ஓரிடத்தில் நிச்சயமாய் ஞானியாக முடியாது.

ஏனென்றால் இதனையும் நேற்றைய பொழுதில் அகத்தியன் எவ்வாறு என்பதையும் கூட உணர்த்தி உணர்த்திச் சொல்லிக்கொண்டே இருக்க கவலைகள் இல்லை.

இல்லை என்பதற்கிணங்க நாடகங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டே இருக்கின்றான் இறைவன்.

ஆனால் நாடகத்தில் பின் மனிதர்கள் பொய்யானவற்றையே நேசிக்கின்றார்கள் உண்மையான வாழ்க்கைக்கு வந்தாலே போதுமானது அழிவுகள் தடுக்கப்படலாம் என்பேன்.
என்பதைவிட இன்னும் இன்னும் அழிவுகள் கூடிக் கொண்டே தான் போகின்றது.

இதனால் எச்சரிக்கின்றேன் ஏனென்றால் இவ்வாறே செய்து கொண்டிருந்தால் நீங்கள் வரும் காலங்களில் இறைவன் என்ன செய்தான்?? இறைவன் இல்லை என்ற வாக்குகள் சில சில மனிதர்களால் உண்டாகும்.

அதனால் எச்சரிக்கின்றேன் இறைவனை பயன்படுத்த வேண்டாம் சித்தர்களை எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம் இதை என்று கூற பின் ஆனாலும் பொய்யான வாழ்க்கையை நின்று நின்று பார்த்தால் ஒன்றுமில்லை.

ஒன்றுமில்லை நிச்சயம் தண்டனைகள் கொடுத்துக் கொண்டே வருகின்றோம் ஒவ்வொருவருக்கும்.

இதனையுமென்று பலவழிகளிலும் பல ஞானத்தைப் பெற்று பின் பல மனிதர்களை உயர்த்தி வைத்தல் முதல் இதனையும் என்று பல மக்களுக்கு உயர் புண்ணியங்கள் செய்தல் இவையென்றும் கூட புண்ணியத்திற்கு வழிவகுக்கும் கூட இவ்வாறு வழிவகுப்பதை எப்படி என்பதைக் கூட வரும் வரும் காலங்களில் பல சித்தர்கள் உரைப்பார்கள்.

இதனையும் நன்கு பயன்படுத்தி எப்பொழுது மற்றவருக்காக எதை என்று கூற இப்படி செய்தால் நலம் ஆகும் ஒரு நல் வழி சென்றால் நலமாகும்.

பின் இறைவனை நாடு .!!!ஒழுக்கத்தை கடைபிடி.!!! நற்பண்புகளை மனதில் இட்டு நல் எண்ணங்களை வளர்த்து வளர்த்து வர இறையருள் குவியும்.

ஆனாலும் ஒன்றை கேட்கின்றேன் அனைத்து மனிதர்களையும். ஏன்?? இளமையில் பின் இறைவனிடம் நாட்டம் போகவில்லை?? எவன் ஒருவருக்கு இளமையிலேயே அதாவது 15 ,16, வயதுகளிலே பின் இறைவனை பிடித்துக் கொள்கின்றானோ அவந்தன் நிச்சயமாய் உயர் படுவான்.

ஆனால் 16, எவை என்று கூற 20, 25, வயதுகளில்  இவை தன்னில் மனிதனுக்கு பக்திகள் சிறப்பாக இல்லை.

இல்லை என்பதாலும் இதை என்று கூற ஒரு குறிப்பிட்ட கால அளவில் கூட அனைத்தையும் இழந்து விட்டு பின் எதிரே நிற்பான் எதிரே நிற்பான் இறைவனிடத்தில்.

இறைவனிடத்தில் எதற்காக வணங்குகின்றோம் என்பதை கூட தெரியாமல் வணங்குகின்றான்.

வணங்குகின்றான் மேன்மையாவதற்கு. ஆனால் இறைவன் செய்வானா?? என்ன??

ஓர் உபயத்திற்காகவே இறைவனை பயன்படுத்துகின்றான்.

ஆனால் இறைவன் நிச்சயமாய் உதவிட மாட்டான்.

நற்பண்புகள் நீண்ட ஒழுக்கங்கள் உயர்ந்த மேன்மைகள் மேன்மை எண்ணங்கள் இவையெல்லாம் பொய் சொல்லாமை.!!! பிறர் மனதை காயப்படுத்தாமை.!!! பிற உயிர்களைக் கொல்லாமை.!!!

சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலான்( வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்) இவைதான் பின்பற்றினால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்.

இனிமேலும் சொல்கின்றேன் மனிதன் மனிதனிடம் பொறாமை குணத்தால் அழிவான் என்பேன்.

என்பதைவிட என்பதற்கு மேலானது பல பிறவிகளில் மனிதனை பார்த்துவிட்டேன் இப்பிறவியிலும் வாழ்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றேன்.

ஆனாலும் மனிதனின் இயல்புகள் சரி இல்லை அதற்கு தகுந்தார்போல் மனமில்லை.

மனம் ஒன்றி மனசாட்சிக்கு எதிராகவே செயல்படுவான் கலியுகத்தில்.

கலியுகத்தில் பொய்மைக்கே அதிக திறன் என்பதை எதனையும் என்றும்.

மனதில் நிறுத்து இறைவன் நாமத்தை மனதில் நிறுத்து இறைவன் நாமத்தை என்று சொல்வேன்.

புண்ணியங்களை பெற்றுத்தர இறைவனே வழி வகுப்பான் என்பேன்.

என்பதை விட என்பதற்கும் மேலானது ஒன்று உண்டு அதை பிற்பகுதியில் ஒரு சித்தன் உரைப்பான்.

என்பதைவிட ஏன்?? மனிதா !!!எதை??? எதையோ ??பின்பற்றி எதையெதையோ??? அழிவுகளை தேடிக்கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டினால் ஒன்றுமில்லை உருவாவதற்கு வழி இல்லை.

அதனால் எதை என்றும் கூற அகத்தியன் என்று சொல்வதற்கு அருகதை வேண்டும் ஆனாலும் நீங்களும் கூட சொல்லி சொல்லி அவன் பெயரை ஏமாற்றி ஏமாற்றி வருகின்றீர்கள்.

என்பதற்கிணங்க பின் அகத்தியனே நேரடியாக அனைவருக்கும் சில சில வினைகளை ஏற்படுத்துவான் என்பது உறுதியாக சொல்லிவிட்டேன்.

இதனால் எப்பொழுதும் எதை என்று கூற கருணை மனம் கொண்டவன் அகத்தியன்.

ஆனால் அவந்தனுக்கும் கோபங்கள் வர செய்கின்றார்கள் மனிதர்கள்.

ஆனாலும் பொறுத்து கொண்டிருக்கின்றான் அகத்தியன்.

அகத்தியனுக்கு இவை என்று கூற பின் கோபம் வந்து விட்டால் அகத்தியனும் மாறிவிடுவான்.

எதற்காக என்பதையும் கூட என்பதையும் கூற அவந்தன்
அவந்தனுக்கும் இவ்வுலகத்தை ஆட்டி படைக்கும் சக்திகள் உள்ளது.

உள்ளது அதனால் மனிதனின் நிலைமைகள் எதை என்று கூற தன் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறான் என்பதை கூட ஒத்துக்கொண்டு ஆனாலும் அவந்னையும் திருத்த வழி பார்க்கவில்லை இல்லை என்பதற்கிணங்க ஆனாலும் இதனையும் நன்கு அறிந்துகொண்டு பறை சாற்றாமல் உண்டு என்றால் அது அகத்தியனே.

அதனால் அகத்தியன் தண்டனைக்கு நிச்சயம் பின் நீங்கள் உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

உட்படுத்தி  கொள்ளாவிட்டால் பிழைத்துக் கொள்வீர்கள் நீங்கள் நிச்சயம் பின் இதை என்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

அதனால் சரியான நேரத்தில் ஒழுங்காக வழிபட்டு வாருங்கள் இறைவனை மனதில் தொழுங்கள்.

மனதில் தொழுதிட்டு வந்தாலே இன்னும் இறை சக்திகள் பலமாக பலமாக வரும்.

ஒன்றைச் சொல்கின்றேன் பக்தியை நீ செலுத்தினால் உன்னிடத்திலே இறைவன் தங்கி அனைத்தையும் செய்து கொண்டே இருப்பான்.

இதனால் எவ்வித குறைகளும் வராது. வராது என்பேன் என்பதை நிச்சயம் சொல்வேன்.

இன்பம் துன்பம் நிச்சயமாய் எதிர்பாராமல் வரும் ஆனாலும் இதை தடுப்பதற்கு இறைவனிடத்திலே.

ஆனாலும் இன்பம் என்பது பின் துன்பம் என்பது பின் துன்பம் என்பது தான் செய்த புண்ணியம் புண்ணியம் என்பதற்காக புரிவதில்லை துன்பம் எதனால் வருகிறது என்பதால் சொல்கின்றேன் புண்ணியத்தால் தான் வருகின்றது துன்பம் ஆனால் மனிதன் புத்தி கெட்ட மனிதன் தெரியாமல் வாழ்ந்து விடுகின்றான் ஏனென்றால் அப்புண்ணியங்கள் இறைவன் பாதைக்கு அழைத்துச் செல்ல வரும். துன்பத்தைக் கொடுக்கும் ஆனால் அப்பொழுது தான் துன்ப நேரத்தில்தான் அவன் அனைத்து கெட்ட நடவடிக்கைகளையும் ஏற்படுத்திக் கொள்கிறான் இதனால் அவந்தனக்கு தெரியாமலே பாவங்கள் சம்பாதித்து கொள்கின்றான்.

ஆனால் இன்பம் எப்பொழுது வருகின்றது என்பதுகூட பாவங்களால் தான் இன்பம் வருகின்றது. இதையுமென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன் இப்பாவங்கள் மூலம் இன்பம் இன்பத்தையும் பின் இன்பம் அதிலும் பாவங்கள் சம்பாதித்து ஆனால் நிலை இல்லாததாக வாழ்கின்றான்.

இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள் மனித ஜென்மங்களே.. உங்களுக்கும் சொல்கின்றேன் புண்ணியங்கள் இருந்தால்தான் துன்பம் இன்பம் இவை எவை என்று பாவத்திற்கு தண்டனை இன்பம். துன்பம் புண்ணியத்திற்கு தண்டனை.

ஆனால் இதை மனிதன் இதுவரை உணர்ந்ததில்லை துன்பம் வந்தால் இறைவன் இல்லை இறைவன் இல்லை என்று சொல்கின்றான்.

ஆனால் துன்ப நேரத்தில் தான் இறைவன் பக்கத்திலே இருக்கின்றான் என்று பல நூல்களில் உரைத்து விட்டோம் இப்பொழுது புரிகின்றதா?? எதை என்று கூறும் அளவிற்கு கூட.

அதனால் துன்பம் வந்தால் மனம் பக்குவப்படும்.

பக்குவப்பட்டால் இறைவனை நேரடியாக காணலாம் .

அதனால் இதை என்று வரும் காலங்களில் மக்கள் பின் எவை பின்னால் ஓடுவார்கள் பின் இன்பம் என்று பின் பணத்தின் பின்னே ஓடி அனைத்தும் நம்தனக்கு கிடைக்க வேண்டும். ஆனாலும் எதிர்பாராத வித விதமாக இன்னும் பலப்பல உயரம் மனிதர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதை கூட நான் நிச்சயம் சொல்வேன்.

எவ்வகையாக வந்தால் பின் உயர்ந்த இடத்தை வகிக்கலாம் என்பதை கூட யான் அறிந்து விட்டேன்.

இதனால் பக்தர்களே எதை என்று கூற பக்தி பக்தி என்று இறைவனிடத்தில் மட்டும் செலுத்துங்கள் நிச்சயம் உண்மையான பக்தனை உயர்த்தி நிச்சயமாய் யாங்கள் உயர்த்தி வைப்போம்.

சில விஷயங்களை அதை வரும் காலங்களில் நிச்சயமாய் சித்தர்கள் பின் எடுத்துரைப்பார்கள் மனிதர்களுக்கு. தன்னிடம் அதை பின் நன்றாக பயன்படுத்தி வந்தாலே போதுமானது போதுமானது வெற்றி வாகை சூடலாம்.

மற்றவர்கள் போல் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து பல பேர்களுக்கும் பலவழிகளில் பின் நிச்சயம் உதவிடலாம். இதனையும் என்று பின் மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

இன்னும் பக்தர்கள் நிச்சயமாய் சிறந்து விளங்குவார்கள் ஆனால் நிச்சயம் ஒருவரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள்.
போதுமானது என்பேன்.

ஏமாற்ற நினைத்தால் இறைவன் இறைவனும் உன்னை ஏமாற்ற நினைப்பான் என்பது உண்மை.

எதனையுமென்று அறிவதற்கு இன்னும் பலப்பல பல பல வழிகளிலும் யான் சொல்கின்றேன் இன்னும் பல யுகங்களிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் ஏன் யுகம் யுகங்களாக  தவம் செய்தவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

ஆனால் அதனால் சித்த நிலையை அடையவில்லை மகரிஷி என்னும் நிலையை அடையவில்லை ஞான நிலையை அடையவில்லை அஷ்டமாசித்திகளை பெறவில்லை ஏனென்றால் ஏனென்றால் எதனை விரும்புவது என்று ஒரு சூட்சமம் இருக்கின்றது உடம்பிற்குள்ளே. அதை இயக்கி விட்டால் பின் அஷ்டமாசித்திகளை பெறலாம். 

ஆனால் இக்காலகட்டத்தில் கலியுகத்தில் நிச்சயமாய் மனிதன் பெறமுடியாது என்பேன் பின் அப்படிப்பட்டவனும் பொய் சொல்லி திரிவான் அஷ்டமா சித்திகளை பெற்றவன் என்றுகூட.

ஆனால் அட்டமா சித்துக்கள் ஒருவன் பெற்றுவிட்டால் இவ்வுலகத்தில் ஆழ்ந்து ஆடலாம் என்பேன். இவ்வுலகத்தில் அனைத்தும் செய்யலாம் என்பேன்.

ஆனாலும் இதை உணர சித்தர்களே அஷ்டமாசித்துக்கள் பெற்றவர்கள். மறைமுகமாக வந்து வந்து செல்கின்றார்கள்.

ஆனால் மனிதன் நிச்சயம் பெற முடியாது பெறமுடியாது பொய்யான மனிதர்கள்  என்பதை கூட எடுத்துரைக்கின்றேன். 

அதனால் மனிதனை நிச்சயம் நம்பி விடுதல் கூடாது என்பேன்.

அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்பதெல்லாம் சொல்லுபவன் முதலில் முதல் வகையான திருடனில் வருவான் அவந்தனக்கு எவ்வகையான துன்பங்கள் வருவதை அவந்தன் நினைக்க மாட்டான். யாங்கள்தான் நினைப்போம்.

அதனால் மனிதனே சிறிது காலம் உணர்ந்து திருந்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது.

அதனால்தான் கிரகங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு விஷயத்தை நீங்கள் செய்துவிட்டால் கிரகங்கள் உங்களை அண்டாது.

வருங்காலங்களில் அதைச் செப்புவேன்.

ஆனால் இவைதன் வாக்குகள் நல்லோர்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும்.

எங்களுடைய வாக்குகள் யார்? யாருக்கு? போய் சேர வேண்டுமோ அவை அதனை நிச்சயமாய் யாங்கள் சேர்ப்போம்.

புண்ணியம் இல்லாதவர்களிடம் யாங்கள் நிச்சயமாய் சேர்க்க மாட்டோம்.

ஏனென்றால் வரும் காலங்களில் சூட்சமத்தை எப்படி பெறுவது என்பதை கூட சொல்லிக் கொண்டே வருவோம் அதனை பின்பற்றினால் நிச்சயம் உயர்ந்து விடலாம்.

ஆனாலும் நிச்சயம் இதைத்தான் யாங்கள் தெரிவித்து விட்டோம்.

நல்லோர்களுக்கே சேரும் போய் சேரும். அவ்வாறு வகையில் யாங்களே பின் அவன் மனதை இதை ஏன்?? படிக்க வேண்டும்??? என்று கூட மனதை மாற்றி அமைத்து விடுவோம்.

நிச்சயம் வரும் காலங்களில் இது நடக்கத்தான் போகிறது கலியுகத்தில் மனிதர்கள் நிச்சயம் மனிதன் மனிதனை அழித்துக் கொள்வது என்பதை விட மனிதனை மனிதன் காப்பாற்றிக் கொள்வதே சிறந்தது.

இறை தரிசனங்கள் பெற்று பெற்று பெற்று வாழ வேண்டியது  தங்கள் கடமை கடமைகளாக செப்புகின்றேன்.

இன்னும் பல பரிசுத்தமான ஆன்மாக்கள் இவ்வுலகில் திரிந்து கொண்டிருக்கின்றது ஆன்மாக்களே நிச்சயமாய் உங்களுக்கு உதவிட முன் வரும்.

முன்வரும் என்பதைவிட சிறந்த வாக்குகள் இவை இல்லை. இவை இல்லை மென்மேலும் இவ்வுலகத்தில் நிச்சயமாய் சித்தர்கள் ஆட்சி படைத்து நல் விதமாகவே ஆக்குவார்கள். ஒழுங்காக இதை என்று கூற.

ஆனாலும் கலியுகம் முடிந்து கொண்டே வருகின்றது வருகின்றது அதனால் மனிதனின் செயல்கள் மாறுபட்டே செல்லும் இதனால் நன்மைகள் ஏற்பட ஒவ்வொரு வாக்கிலும் ஒவ்வொரு சித்தன் சூட்சுமமாக சொல்வதை நன்கு கேட்டறிந்தால் நன்று என்பேன்.

ஆனால் நிச்சயம் தீயவர்களுக்கு மட்டும் வாக்குகள் செல்லாது.

யாங்கள் பல நூல்களில் எழுதிவிட்டோம் இவ்வுலகத்தில்.

ஆனாலும் அது மறைந்து கிடக்கின்றது. அதையெல்லாம் வெளிக்காட்டிவந்தால் மனிதன் தவறான நடத்தையில் ஈடுபட்டு பணத்தை சேகரித்து மனிதனை அழித்து விடுவான்.

அதனால் எங்களுடைய நூல்கள் பல நூல்கள் மனிதர்களை சேரவில்லை.

யாங்கள் இனிமேலும் நல்லோர்களை நல்வழியாக்க சொல்வோம் பல சூட்சமங்களை.

 இவ்வாறு நடந்து கொண்டாலே போதுமானது.

இன்னும் நல் முறையாகவே நல் வாக்குகளும் சொல்வார்கள் சித்தர்கள் .அதை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் நிச்சயம் வெல்வார்கள்.

வெல்வார்கள் இவ்வுலகத்தில் பிறந்து விட்டாலே துன்பம், இன்பம் இதனை இன்னும் இதனையும் நேரிட்டு பார்த்தால் இதனைவிட வறுமை வறுமையில் எதில் அடங்கியுள்ளது எதனையும் என்று இதனையும் எடுத்துரைத்தால் நிலைமைக்கு காரணம் ஈசன்.

ஈசன் என்பதை விட இன்னும் பல வாக்குகள் உரைத்து வந்து இவ்வுலகத்தில் நிச்சயமாய் ஓர் எதை நிரூபிக்கும் அளவிற்கு நிச்சயம் தூதன் வருவான் பின் மக்களை அடிப்பான் என்பதற்கிணங்க நிச்சயம் வேண்டுதல் உண்டு.

(சிவராத்திரி அன்று காசியில் ஈசன் தன்னுடைய வாக்கில் தர்மம் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.

தர்மத்தை நிலைநாட்ட இன்னொருவன் நிச்சயமாக பிறப்பான் இவ்வுலகத்தில்.

அதனை வடிவமாகவே பிறப்பெடுத்தது உண்மை. 

பிறப்பெடுத்து வந்து கொண்டே இருக்கின்றான்.

நிச்சயம் அழிப்பேன் அழிப்பேன் என்று ஈசன் வாக்குகள் உரைத்திருந்தார்)

இதனையும் பின் பிறப்பதற்கு வழி விடு!! வழி விடு !!என்று கூட பின் இறைவனிடம் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றது அவ் ஆன்மா.

நிச்சயம் அவ் ஆன்மா வந்து விட்டாலும் அனைவருக்கும் கஷ்டங்கள். அதனால்தான் மனிதர்களே நீங்கள் திருந்தி கொள்ளுங்கள். உண்மையாக நடந்து கொள்ளுங்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள். 

தங்கள் வாழ்க்கையை தங்களே பார்த்துக்கொண்டு இறைவனை நேரடியாக தரிசித்து வாருங்கள் போதுமானது.

இப்பொழுது யான் சொல்கின்றேன் எப்பொழுதுமே சொல்வேன். மனிதன் திருடன் முதல் வகையான திருடன். பின் இதை என்று கூற.

இன்னும் பல வாக்குகள் உண்டு சூட்சமங்கள் ரகசியங்கள் பல சித்தர்களும் செப்புவார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி நடை போடுக.

மனிதன் மனிதனாக வாழ்ந்து பின் முற்றுப்பெற்று  இதுவே. கடைப் பிறப்பாக ஆகட்டும்.

உறுதியாக சொல்கின்றேன் மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன்.

இன்றளவும் முருகனின் ஆசிகள் உங்களுக்கும் உண்டு உண்டு.

மற்றொரு பதிவுகளிலும் சொல்கின்றேன் வாக்குகள் விரிவாக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

6 comments:

  1. Om Namashivaya
    Om Namashivaya
    Om Namashivaya

    ReplyDelete
  2. இது மாய உலகம்.கலியுகம், இந்த யுகத்தில் நல்லவர்கள் வாழ்வது கடினம்.சித்தர்கள் பொய் அகத்தியர் பொய் என்ற நிலமைக்கு போய்விடுவார்கள் பக்தர்கள். அதனால் என் பக்தர்களை பிரம்மாவிடம் சொல்லி விதியை மாற்றி எழுதி காப்பாற்றுவேன்.என்று எனக்கு ஜானகிராமன் அய்யா நாடி படிக்கும் போது பொதுவாக வாக்கு வந்தது..தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தால் அகத்தியர் நம்மை காப்பாற்றுவார். இது தான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. Well said... ஓம் அன்னை லோபமுத்திரை சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி ��

      Delete
  3. ‘தீதும் நன்றும் பிறர்தரா வாரா’.
    ஓம் காகபுஜண்டர் நமஹ.
    நற்பவி,நற்பவி,நற்பவி

    ReplyDelete
  4. Kaga bhujandar thiruvadigale potri

    ReplyDelete
  5. Translation:
    https://drive.google.com/file/d/1yAz0S8PXJ6xYTdJExUFzmGYfeqW3Qu7P/view?usp=sharing

    ReplyDelete