​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 27 January 2022

சித்தன் அருள் - 1077 - அன்புடன் அகத்தியர் - அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாசநாதர் ஆலயம்!






24/1/2022 அன்று குருநாதர் அகத்தியர் அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாசநாதர் ஆலய திருப்பணி குறித்து திருப்பணி குழுவினருக்கு உரைத்த மறு வாக்கு./ மற்றும் உலகத்திற்கு உரைத்த பொது வாக்கு. 

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றி !!போற்றியே!! செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலன்கள் மிஞ்சும் என்பேன்.

மிஞ்சும் என்பேன்.அப்பனே கவலைகள் இல்லை.

அப்பனே இன்னும் பல பல பல நிலைகள் அங்கு ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பேன். அப்பனே. 

அவைதன் அப்பனே நல் விதமாக அப்பனே எவ்வாறு என்பதையும்  கூட உண்மை நிலைகள் போகப்போக உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே.

சக்திகள் அவ்விடத்தில் குடிகொண்டிருக்கின்றன.

ஆனால் அப்பனே தானாகவே நல் விதமாகவே எழுந்து நிற்கும் என்பேன் அப்பனே சில சக்திகள்.

அதனால் அப்பனே பலப்பல மனிதர்களும் அப்பனே அங்கு வந்து அப்பனே முன் ஜென்மமதிலே அப்பனே பாப விமோசனம் பெற்று சென்றுள்ளனர் அப்பனே.

அப்பனே அவை மட்டுமில்லாமல் இக்கலியுகத்திலும் அப்பனே பாவம் அப்பனே அகற்றப்படும் என்பேன் அவந்தனை(ஈசனை) நம்பு.

(இவ்வாக்கு உரைத்தபோது கௌளி உரக்க ஒலி எழுப்பி கட்டியம் கூறியது.) 

அப்பனே இவையன்றி கூற நாகங்களும் அப்பனே பல எவ்வாறு என்பதையும் சொல்ல அடியில் அப்பனே புதைந்து இருக்கின்றது என்பேன்.

அப்பனே இவ்வாறு நாக கன்னிகைகளும் இருக்க அப்பனே நல் விதமாக அப்பனே ராகு கேதுக்களுடைய தோஷங்கள் இங்கே வந்தால் கழிந்துவிடும் என்பேன் அப்பனே விரைவில்.

அப்பனே எவை வேண்டும் எதனையும் என்று கூற அப்பனே விரும்பியதை நிச்சயம் கிடைத்துவிடும் என்பேன்.

முதலில் ராகு கேதுக்களின் தோஷம் அங்கே குறைந்துவிடும் என்பேன் அங்கே தங்கி வந்தால் போதுமானது என்பேன்.

அப்பனே இவையன்றியும் கூற அப்பனே நலமாக அப்பனே இவையன்றி கூற அப்பனே எதனை.    எதனையுமென்றும் மாசி மாதத்தில் அங்கே அப்பனே ஒரு நிமிடம் ஈசனும் பின் அம்பிகையும் வருவார்கள் என்பேன்.

அப்பனே இவையன்றி கூற இத்தலத்தில் பல மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே.

இன்னும் கூட அப்பனே பின் ஐம்பொன் சிலைகள் அப்பனே அடியில் புதைந்து கிடக்கின்றது என்பேன்.

அப்பனே இவையன்றி கூற ஞான நிலைகள் உண்டு என்பேன் அப்பனே.

ஆனால் அதனையும் சிவனே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எப்பொழுது எழுப்ப வேண்டும்? என்பதையும் கூட எழுந்தருளும் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூறும் அளவிற்கு கூட அப்பனே சிலசில வினைகள் அப்பனை இவையன்றி கூற அப்பனே.

ஒரு ஜென்மத்தில் அப்பனேஎவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து அப்பனே இவையன்றி கூற அப்பனே அத்திருத்தலத்தை அமைக்கலாம் என்று நினைத்து நினைத்து அமைக்க முடியவில்லை என்பேன்.

அதனால் அப்பனே எதை என்று எதனையும் என்று அப்பனே நீங்கள் எவ்வாறு வந்து எதனையும் என்று கூற அப்பனே முன் ஜென்மத்தில் இருந்தே இவ்வாலயத்தை எழுப்ப எழுப்ப அப்பனே முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது.

ஆனாலும் ஈசனிடத்தில் அப்பனே பின் உன் ஆலயத்திற்கு சேவை செய்யாமல் அப்பனே எங்களுக்கு மறுபிறவி எவ்வாறு என்பதை கிடைக்க வேண்டும் என்றே நீங்களும் அப்பனே வந்துள்ளீர்கள் இதனை என்றும் அறிந்தே. அதனால்தான் அப்பனே இப்பொழுது அவ் ஆலயத்தை நீங்கள் தன் முறையாக எப்படி விரும்பினீர்களோ இவ்வாலயத்தை அப்படி அமைத்துத்தான். அப்பனே நிச்சயம் அமைத்து விடுவீர்கள் முக்தியும் கிடைத்துவிடும் என்பேன்.

ஈசனும் கண்காட்சியாக அப்பனே ஈசனே நேரில் வந்து கடைசியில் காட்சியுமளிப்பான் என்பேன்.

அப்பனே நலமாக நலம் ஆக. 

இவ்வுலகத்தில் அப்பனே வரும் காலங்களில் அப்பனே பொய்யான மனிதர்களப்பா.

அப்பனே இதனையும் என்று ஈசன் அப்பனை தன் தன் ஆலயங்களை தானே எழுப்பிக் கொள்வான் என்பேன் அப்பனே.

இன்னும் உங்களுக்கும் பல தரிசனங்கள் உண்டு என்பேன் அப்பனே.

ஒன்றைமட்டும் சொல்கின்றேன் அப்பனே நீங்கள் அலைய வேண்டிய தேவை இல்லை என்பேன்.

ஏனென்றால் முன் ஜென்மத்திலே அலைந்து அலைந்து அப்பனே அலுத்து விட்டீர்கள் என்பேன் .

அதனால் உங்களுக்கு ஈசன் அங்கேயே கைலாயத்தில் போல் காட்சியளிப்பான் என்பேன்.

அப்பனே நல்படியாக அப்பனே நல் விதமாக அப்பனே பின் அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே.

மாசி மாதத்தில்(மகா சிவராத்திரி அன்று) அப்பனே அன்னதானம் இடுவீர்கள் நீங்கள்.

அப்பனே அப்பொழுது ஈசனே அம்பிகையுடன் வந்து உணவருந்திச் செல்வான் என்பேன்.

அப்பனே நலமாக நலம் ஆக அப்பனே எவை என்று கூற அப்பனே நல் விதமாக அப்பனே ஈசனுக்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே விதமாக உங்கள் குடும்பத்தை ஈசனே பார்த்துக்கொள்வான் என்பேன்.

அப்பனே நலமாக நலம் ஆக இக்கலியுகத்தில் அப்பனே வரும் காலங்களில் அப்பனே மனிதர்களுக்கு மனங்கள் மாறும் என்பேன் பொதுவாகச் சொல்லி விடுகின்றேன் அப்பனே.

மாறும்பொழுது அப்பனே மாயையில் சிக்கிக் கொள்வான் என்பேன்.

மாயையில் சிக்கிக் க்கொண்டு அழிந்து விடுவான். இதுதானப்பா கலியுகத்தில் நடக்கப்போகின்றது என்பேன்.

ஆனாலும் அப்பனே இவற்றையெல்லாம் உணர்ந்து """" ஈசனே சரணாகதி""""" என்று வந்துவிட்டால் அப்பனே ஈசன் அவ் மாயைத்திரையை கிழித்து விடுவான் என்பேன்.அப்பனே.

ஆனாலும் மனிதன் மாயையை தான் நம்பி கொண்டிருக்கின்றான் அப்பனே.

அப்பனே நம்பிக்கொண்டு நம்பிக்கொண்டு மாயையில் விழுந்து அப்பனே தன்னைத் தானே மனிதன் அழித்துக்' கொண்டும்' !!மறு பிறவி!! மறுபிறவி!!! பிரயோஜனம் இல்லாமல் வந்து வந்து கஷ்டங்களைப் பட்டு பட்டு அப்பனே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.

இவையெல்லாம் யான் கண்கூடாக பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.

ஆனாலும் அப்பனே உண்மை பொருளை நம்பி விட்டீர்கள் நீங்கள். அப்பனே, இறையருள் பலமாக அப்பனே ஈசனே அனைத்தும் பார்த்துக்கொள்வான் என்பேன்.

""அவனுடைய சக்திகள்"" எவ்வாறு என்பதைக் கூட அப்பனே சொல்லமுடியாது என்பேன்.

அப்பனே அழிவுகள் வரும் என்பேன் அப்பனே அப்பொழுது கூட அவனின் சடைமுடியை ஈசன் அருளை பெற்றவர்கள் பிடித்துக்கொள்வார்கள் என்பேன் அப்பனே அதனால் துன்பம் இல்லை என்பேன் அப்பனே.

அப்பனே அழிவுகள் பலமாகவே வரும் என்பேன் அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே.

அதை மனிதன் மனிதனால் தீர்க்கமுடியாது என்பேன் அப்பனே.

""ஈசன் ஒருவனே "" என்பேன் அப்பனே.

அப்பனே அவையன்றியும் கூற மந்திரங்கள்!!! தந்திரங்கள்!!!
அப்பனே இவை சொன்னால் அப்பனே பின் நலமாக வாழ்ந்து விடலாம் என்றெல்லாம் மனிதன் கணக்கு தப்பாக போய்விடும் அப்பனே.

அப்பனே """ஈசன் ஒருவனே இவ்வுலகத்திற்கு""".

அதனால்தான் மூலனும் (திருமூலர் சித்தர்) அப்பனே அறிந்து அறிந்து அப்பனே ஒருவனே தெய்வம் என்றுகூட அப்பனே இதற்காகவே பல பிறவிகள் பின் மூலன் தெய்வத்தை உணர்ந்து உணர்ந்து தெய்வம் இருக்கிறானா?? இல்லையா?? என்றுகூட அப்பனே சில நேரங்களில் தவத்தின் வழியே அப்பனே ஆண்டாண்டுகளாக செய்து செய்து இறைவனை பார்த்தால் !!!யார் ? என்று கடைசியில் பார்த்தால்!!!

!!!! உண்மைப் பொருள் ஈசனே!!! என்று அவந்தனுக்கு(திருமூலருக்கு) விளங்கிவிட்டது.

அப்பனே இதுதான் அப்பொழுதுதான் அவன் மனம் அப்பனே """ஈசன் ஒருவனே""" அப்பனே ஆனாலும் எதனையும் என்று கூற அனைத்தும் கொடுக்கமுடியும் !!!அப்பனே இவ்வுலகத்திற்கு என்பதை கூட யாரால்?? கொடுக்க முடியும்!! என்பதைக்கூட உணர்ந்துவிட்டான் அப்பனே.மூலன்.

அதனால்தான் அப்பனே உணர்ந்து உணர்ந்து பல ஆண்டுகள் தவம் செய்து அப்பனே பல வரிகளில் சொல்லிட்டு போனான் ""ஒருவனே தெய்வன் அவன் தான் ஈசன்""!!!

அப்பனே ஆனாலும் அப்பனே மறைமுகமான அப்பனே பல அவதாரங்கள் அதற்குள்ளேயே எடுத்து விட்டான் ஈசன் என்பேன்.

ஒவ்வொரு யுகத்திலும் கூட இப்பொழுது கூட அவதாரங்கள் எடுத்துக்கொண்டே வந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.

அதனால் அப்பனே மனிதன் பிழைப்பதற்காகவே அவை செய்!! இவை செய்!!! இவ்வாறு தரித்திரம் நீங்கும் என்பதையெல்லாம் தப்பாக பொய் கணக்கை போட்டு கொண்டு இருப்பான் ஆனால் அப்பனே!!!

உண்மை பொருள் எதுவென்றால் ஈசனை நாடுவது!!!!

அவந்தனை நாடி விட்டால் அப்பனே சிறிது குழப்பங்கள் வரும் சில கஷ்டங்கள் வரும்.

ஆனாலும் அப்பனே கைவிடமாட்டான் அப்பனே.

இதை பல உரைகளில் யாங்கள் தெரிவித்து விட்டோம் அப்பனே.

ஆனாலும் அப்பனே எவை என்று கூற இனிமேலும் பல திருத்தலங்கள் அப்பனே உலகத்தில் அழிந்து கொண்டிருக்கின்றது அப்பனே.

இவையெல்லாம் கூட அப்பனே மனிதனால் காக்க முடியவில்லையே??? என்பது வருத்தப்படவேண்டிய விஷயம் என்பேன்.

ஆனாலும் நம்பினோம் யாங்கள், சித்தர்களே மனிதன் எப்படியாவது என்று கூட அருள்கள் கொடுக்கின்றோம் என்று ஆனாலும் மனிதனுக்கு அருள்கள் கொடுத்து கொடுத்து அப்பனே அவன் திருடனாக இருந்து பொருள் சம்பாதித்து கொண்டானே தவிர அப்பனே போலியான பக்தியை காட்டிவிட்டான் அப்பனே இது தான் மனிதனுடைய இயல்பு என்பேன்.

அப்பனே அதனால்தான் மனிதர்களில் வரும் வரும் காலங்களில் மனிதனிடத்தில் உண்மை இல்லை என்பேன் அப்பனே.

அப்பனே இவ் தேசத்திலே அப்பனே பல திருத்தலங்கள் எதற்காக?? வடிவமைத்தோம் அப்பனே

இவ் தேசத்திலே பிறந்து விட்டால் பெரும் புண்ணியமப்பா.

அப்பனே அவ் ஆலயங்கள் இருக்க அப்பனே ஆனாலும் மனிதனின் செய்கைகளைப் பார்த்தால் மனிதன் வேண்டுவது தன் சுயநலத்திற்காகவே அப்பனே.

இதை பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே.

இவ்வாறு உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் எதனை என்று கூறாத அளவிற்குக்கூட அப்பனே மனிதன் பொய்யைச் சொல்லி அப்பனே ஏமாற்றி விடுவான் அப்பனே.

ஆனாலும் அவந்தன் வந்தான் ஏமாறுகிறான் என்று கூட அவந்தனக்கு தெரியாமல் போய்விடும் என்பேன் அப்பனே.

அதனால் நல் விதமான ஆசிகள் உங்களுக்கும் அப்பனே உங்களை நல் விதமாக ஈசனை நல் முறையாக நெருங்கி விட்டீர்கள் அப்பனே சோதனைகள் கொடுத்தான் அப்பனே அதில் கூட நெருங்கி விட்டீர்கள் என்பேன் அதனால் தொந்தரவுகள் இல்லை அப்பனே கடைசியில் நிச்சயமாய் அப்பனே நீங்கள் எவ்வாறு என்பதைக் கூட பல திருத்தலங்களுக்கு செல்லலாம் என்றும் நீங்கள் நினைத்தாலும் உங்களால் செல்ல முடியாது என்பேன் அப்பனே.

எதனால் என்று கூட சொல்லிவிட்டேன் முன் வாக்கிலே யான்.

அப்பனே முற்பிறவியிலே பல ஆலயங்களுக்கு சென்று விட்டீர்கள் அனைத்து ஆலயங்களுக்கும் அதனால்தான் அப்பனே இப்பிறப்பில் அப்பனே எங்கும் செல்ல இயலாது என்பேன் அப்பனே.

அதனால்தான் முன்பே சொல்லிவிட்டேன் அப்பனே நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே ஈசனையும் அம்பிகையையும் தரிசிக்கலாம் என்பேன் அப்பனே.

அதுமட்டுமில்லாமல் முருகனையும் தரிசிக்கலாம் அவ் மலையில்(கோயிலுக்கு பின்புறம் இருக்கும் கைலாசகிரி யில்) மேலே நல் விதமாக அப்பனே.
(இவ் வாக்கு உரைத்த போதும் கௌளி சத்தம் ஒலித்து உத்தரவு இட்டது) 

அப்பனே இவையன்றி கூற நல் முறையாகவே அப்பனே அவ்மலை சாதாரண மலை இல்லையப்பா.(கைலாசகிரி) 

அப்பனே அங்கும் பல பல பல உண்மைகள் புதைந்து கிடக்கின்றது அப்பனே.

வரும் வரும் காலங்களில் அப்பனே அதுவும் அப்பனே நிரந்தரமாகும் என்பேன் அப்பனே.

அவற்றையெல்லாம் யான் சொல்லி விட்டால் அப்பனே மனிதன் அப்பனே அதையும்  பின் அழித்து விடுவான் என்பேன்.

அதனால்தான் யான்  இப்போது சொல்ல வில்லை அப்பனே வரும் வரும் காலங்களில் வாக்குகளாக சொல்கின்றேன் அப்பனே.

மனிதன் அப்பனே இக்கலியுகத்தில் பணத்தின் பின்னாலே ஓடுவான் என்பேன்.

பணம் தான் தெய்வம் என்று வணங்குவான் என்பேன்.

ஆனாலும் அவை தன் நிச்சயம் பின் காக்காது என்பேன்.

அப்பனே அவையன்றி கூற அப்பனே இறைவனே காப்பான் என்பது அப்பனே உண்மை.

ஆனாலும் அப்பனே மனிதனிடத்தில் பணங்கள் சேரும் ஆனாலும் பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே.

பணங்கள் சேரும்பொழுது அப்பனே பல வழிகளிலும் கர்மாக்களை சேர்த்து அப்பனே அவையன்றி கூற எதனையும் என்று கூற பணங்கள் எத்தனை எத்தனை விதமான பணங்கள் அப்பனே.

பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் வந்துவிட்டேன் புவியுலகில் அப்பனே.

தரித்திர மனிதர்கள் என்பேன் அப்பனே.

மனிதனுக்கு அப்பனே அறிவுகள் இல்லை என்பேன்.அப்பனே.

அப்பனே இவையன்றி கூற சிந்தனையில் அப்பனே இறைவனை வையுங்கள் அப்பனே நல் விதமாக மாற்றங்கள் ஏற்படும் என்பேன்.

ஆனாலும் கலியுகத்தில் மாயை அழித்துவிடும் என்பேன் அப்பனே.

மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் அன்பு மகன்களே அப்பனே.

இப்பொழுதும் இதை நன்றாக உணர்ந்து அனைவருக்கும் சொல்கின்றேன் அப்பனே.

மாயை என்பது அப்பனே சிறு வேடம் என்பது அப்பனே.

அப்பனே  அது நடிக்க காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அவ் மாயையில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரே காரணம் தான் உண்டு.

அதுதான் இறை பலம் என்பேன்.

அப்பனே இறை பலம் பெற்றுவிட்டால் அப்பனே நலன்களே மிஞ்சும் என்பேன் அப்பனே.

அப்பனே இன்னும் மனிதன் ஏமாற்று பேர்வழி என்பேன் அப்பனே.

அப்பனே மனிதனை யான் திருடன் என்பேன் அப்பனே.

ஏனென்றால் அப்பனே தன் வாழ்க்கைக்காகவே அப்பனே அனைத்தும் செய்து விடுகின்றான் அப்பனே.

அப்பனே அகத்தியன் சொல்கின்றான் அப்பனே பின் சித்தர்கள் சொல்கின்றார்கள் என்றெல்லாம் வரும் காலங்களில் அப்பனே பொய் பித்தலாட்டமிட்டு அப்பனே பணம் பறிப்பார்களப்பா.

அப்பனே சொல்கின்றேன் மக்களுக்கு.

யாரையும் நம்பி விடுதல் கூடாது என்பேன் அப்பனே.

அப்பனே இவையன்றி கூற அப்பனே நம்பி அப்பனே பிழைத்தது போதும் அவர்களும் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எங்களை தவறாக பயன்படுத்தி அப்பனே பொருளீட்டி அப்பனே வசதி படைத்து விட்டார்கள்.

ஆனாலும் அவர்களுக்கும் கர்மங்கள் என்று தெரியவில்லை அப்பனே.

நிச்சயம் யாங்கள் இக்கலியுகத்தில் அவர்களுக்கும் தண்டனை கொடுத்துக் கொண்டு வருகின்றோம். அவ் தண்டனைகள் பார்த்தால் அப்பனே பின் அதிர்ச்சிகள். 

அப்பனே இவையன்றி கூற பின் வரும் காலங்களில் யாங்கள் கூட சித்தர்களுக்கு தலம் அமைப்போம்!!! புசுண்ட (காகபுஜண்டர்) முனிக்கு தலம் அமைப்போம் !!!!
போகனுக்கு தலம் அமைப்போம் 
இவ்வாறு தலங்கள் அமைப்போம் பல சித்தர்களுக்கு தலம் அமைக்க போகின்றோம் அகத்தியனுக்கும் தலம் அமைக்க போகின்றோம்.

எதனால்?? எந்தனுக்கு தலம்????????? 

சொல்லுங்கள் அப்பனே.

யான் தலங்கள் எவ்வாறு என்பதை கூட அவை எல்லாம் கேட்கவில்லை என்பேன்.

அன்பு தான் அப்பனே மனிதர்கள் நேர்மையாக நேர்மையுடன் வாழ வேண்டும் அப்பனே.

அப்பனே பின் பொய் கூறாமை அப்பனே. 

தர்ம சிந்தனையுடன் வாழ வேண்டும்.  அதுதானப்பா அப்பனே திருத்தலம்.

அப்பனே திருத்தலம் எங்கே? உள்ளது அப்பனே உன் மனதிலே உள்ளது அப்பனே.

உன் மனம் நன்றாக இருந்தால் அங்கே யான் குடி கொள்வேன் அப்பனே.

மற்ற இடங்களில் எல்லாம் யான் குடிகொள்ள போக மாட்டேன் என்பேன்.

அப்படி அவ் தலங்களை அமைத்தாலும் அப்பனே அங்கெல்லாம் உண்மைப் பொருள் இல்லை என்பேன்.

அப்பனே எதற்காக திருத்தலம் அமைப்பீர்கள் என்பதை கூட

யான் எந்தனுக்கு ஏதடா ??அப்பனே யானே ஒரு பரதேசி. (சர்வ லோக சஞ்சாரி) என்பேன்.

எந்தனக்கு இவ்வாறு தலங்களை அமைப்பதா???????? 

அப்பனே சித்தர்கள் எவ்வாறு என்பதை கூட மனித இனத்தை காக்க வந்தவர்கள் அப்பனே. அதனால் அப்பனே அவை இவை என்றெல்லாம் சொல்லி பொய் கணக்கை கொண்டு சித்தனை தரிசிக்கலாம் முத்தியைப் பெறலாம் சித்தருக்கு இவ் மந்திரம் சொன்னால் சித்தன் வருவான் பித்தன் வருவான் என்பதை எல்லாம் மனிதனின் பின் பைத்தியக்கார குணம் என்பேன் அப்பனே.

அப்பனே எவ்வளவு சொன்னாலும் மனிதன் திருந்த போவதாக இல்லை என்பேன் அப்பனே.

தரித்திர மனிதன் அப்பனே மனிதனை இனிமேலும் அப்பனே இவையன்றி இப்படியே சென்று கொண்டிருந்தால் ஒவ்வொரு விதத்திலும் கஷ்டத்தை யாங்களே கொடுத்து விடுவோம்.

அப்பனே எவ்வாறு என்பதை கூட மக்களை அப்பனே யாங்களே பேணி காப்போம் என்பேன் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.

அப்பனே பின் எந்தனுக்கு தலம் அமைத்து விட்டு யான் அகத்தியனுக்கு பூஜைகள் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் அவை செய்ய வேண்டும் இவை செய்ய வேண்டும் என்றெல்லாம் அப்பனே காசுகள் பறித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அதை யான் கேட்டேனாடா?? முட்டாள் மனிதனே!!!

இல்லை என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலையை புரிந்து அப்பனே என்னுடைய அடியார்கள் இதைத்தான் சொல்லவேண்டும் இனிமேலும் அப்பனே அப்பொழுதுதான் ஆசிகள்.

நேர்மையாக நட.

நல் உணர்வை நல் உணர்வை மனதில் எண்ணி இப்படி இரு.

இப்படி நெறிமுறைகள் பயன்படுத்து.

இப்படி இருந்தால் சரியான பாதையை வகுத்து விடலாம்.

பின்  நல்லெண்ணங்கள் அப்பனே.

தர்மங்கள் அப்பனே காக்க செய்ய வேண்டும்.

அப்பொழுதுதான் என்னுடைய தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்பேன்.

அதை விட்டுவிட்டு யான் திருத்தலம் அமைக்கின்றேன். அங்கு பரிகாரங்கள் செய்கின்றேன் இவ்வாறு செய்கின்றேன் அவ்வாறு செய்கின்றேன் குறைகள் நீங்கும் என்றால் அப்பனே தரித்திரம் உந்தனக்குத்தான். அப்பனே அங்கு யான் இருக்க மாட்டேன் அப்பனே.

அப்பனே சித்தர்கள் எளியவர்கள் என்பேன். அப்பனே நீங்கள் எங்களை காக்க தேவையில்லை.

யாங்கள் தான் உங்களை காக்க வேண்டும் அப்பனே.

அதனால் கடைசி ஒரு வாய்ப்பையும் சொல்லி விடுகின்றேன்.அப்பனே.

அதனால் அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் மக்களை ஏமாற்றாதீர்கள் என்பேன்.

அப்படியிருந்தும் மனிதர்கள் அப்பனே பின் தவறான வழியில் பொருளீட்டி விட்டு பணம் சேர்ந்துவிட்டதென்பதற்கிணங்க அப்பனே இவ்வாறு என்று கூட அவந்தனுக்கு அப்பனே மனம் சந்தோஷம் இல்லை என்பேன் அப்பனே.

மனதில் குழப்பங்கள் அதனால் திருத்தலம் கூட பின் எவ்வாறு என்பதை கூட நினைத்து பார்க்கும் அளவிற்கு கூட 

அப்பனே திருத்தலம் என்பது அப்பனே "தானாகவே சுயம்பாகவே"" எழுந்தருள!!! வேண்டும் என்பேன் அதுதான் நன்மையப்பா.

அதனால் நீங்கள் அப்பனை எவ்வாறு என்பதையும் கூட அதுவும் அப்பனே அங்கும் சுயம்பு இருக்கின்றது அப்பனே.

ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன்.

 அப்பனே இதனால் அப்பனே நலன்களே பாரிக்கும் என்பேன் அப்பனே. 

அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே மனிதனின் செய்கைகள் அப்பனே ஒவ்வொன்றாகவே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.

அப்பனே அப்பனே எவ்வாறு என்பதை கூட நினைத்துப் பார்க்கும் பொழுது அப்பனே """என்னையே"" எவ்வாறு என்பதையும் கூட.............பின் பரவாயில்லை. 

அகத்தியன் பெயரைச்சொல்லி ஏமாற்றி கொண்டோம் அகத்தியன் என்ன பார்க்கத்தான் போகின்றானா?? என்ன?? பார்க்கவா போகின்றான்??? என்றெல்லாம் கூட என்னை வைத்து அப்பனே பொருளீட்டி விட்டார்கள்.

ஆனால் அது ""கர்மா ""என்று அவந்தனக்கு தெரியவில்லை அப்பனே.

அப்பனே சொல்லுகின்றேன் அப்பனே இன்னொரு விஷயத்தையும்!!!!

அப்பனே ஒரு குரு இருந்தான். அந்த குரு அமைதியாகவே இருந்து வந்தான் ஓர் இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தான்.

ஆனாலும் சீடர்களும் கூட அப்பனே அங்கே தங்கி இருந்தார்கள் அங்கேயே கூட பல சீடர்கள்.

ஆனாலும் சீடர்களுக்கு சந்தேகம் !!!குருவானவன் ஏன்?? இப்படி கூட எவ்வாறு என்பதையும் கூட இவன் தவம் செய்து கொண்டிருக்கின்றானே இவனுக்கு வேலை எதுவும் இல்லையா என்று கூட.

ஆனாலும் சீடர்களின் நினைப்பு குருவிற்கு புரிந்துவிட்டது.

ஆனாலும் சீடர்களோ பின் எவ்வாறு என்பதை கூட பின் குருவிற்கு அப்பனே பொய்யான பக்தியைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் இவையன்றி கூற இதனையும் என்று கூற குரு நன்றாக அறிந்து விட்டான்.

ஆனாலும் சீடன் மெது மெதுவாக பின் குருவைப் பார்த்து 

!!!நன்றி குருவே!!!

அப்பனே அனைத்தும் நீதான் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருந்தனர்.

ஆனாலும் குருவும் கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் அப்பனே  இவையன்றி  கூற குருவும் அப்பனே பின் சீடர்களுக்கு சொல்லிவிட்டு சென்றுவிட்டான். யான் எவை என்று கூற நீங்கள் இங்கேயே இருங்கள் நான் ஒரு மாதம் கழித்து விட்டு பின் இவை என்று கூற மனிதர்களை பார்த்து விட்டு வருகின்றேன் என்று.

ஆனாலும் அதற்குள்ளே சீடர்கள் எவ்வாறு என்று கூட நினைத்து பார்க்கும் அளவிற்கு குரு தான் போய் விட்டானே!!!! அவன் திரும்ப வர மாட்டான் என்று எண்ணி யான்தான் குரு எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்றெல்லாம் பல மனிதர்களை உருவாக்கி பின் எவ்வாறு என்பதையும் கூட பல மனிதர்களை சேர்த்துக்கொண்டு அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் ஏமாற்றி பிழைப்பு நடத்தி பின் இவர்களும் பின் பின் எவ்வாறு என்பது கூட பின் பணம் சேர்த்து வைத்து விட்டார்கள் .

ஆனாலும் பின் இவர்களுக்கு குரு திரும்பவும் வரக்கூடாது வரக்கூடாது என்று எண்ணங்கள்.

ஆனாலும் குரு இவர்களின் மனநிலையை அறிந்து விட்டான். 

சரி பிறகு பார்ப்போம் என்று குருவும் பல ஆண்டுகள் வரவில்லை.

ஆனாலும் பின் இவர்களும் எவ்வாறு என்பதையும் கூட சந்தோச பட்டு விட்டார்கள்.

குரு வரவில்லை!!! குரு வரவில்லை!!! வரவில்லையே!!!! யாம் தான் பின்  நம்தனக்கும் அனைத்தும் வந்துவிட்டதே என்று எண்ணி ஆனந்தப்பட்டார்கள். 

ஆனாலும் குருவும் அனைத்தும் உணர்ந்தவன் ஆனாலும் ஒரு நாள் திடீரென்று வந்து விட்டான்.

ஆனாலும் சீடர்கள் எவ்வாறு என்பதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பார்த்துக்கொண்டு எவ்வாறு என்பதையும் கூட அப்பொழுது கூட குருவிற்கு இவரை எவ்வாறு என்பதைக்கூட இங்கு என்று கூட குருவே இங்கு அமர்ந்து இரு யாங்கள் அனைவரும் உங்களுக்கு பாலபிஷேகம் கால்களுக்கு பாத அபிஷேகம் செய்து மரியாதை செய்கின்றோம் உள்ளே சென்று அனைத்தும் எடுத்து வருகின்றோம் என்று கூறிவிட்டு அனைவரும் உள்ளே சென்றார்கள்.

ஆனால் உள்ளே சென்ற சீடர்கள் பின் குருவை பழிவாங்க இவ்வாறு குருவே திரும்பவும் வந்து விட்டானே இவந்தனை இங்கேயே நசுக்கி சாகடிப்போம் இவந்தனை விட்டுவிட்டால் நம்தனக்கு ஏதும் வராது என்று கூட இவர்கள் யூகித்துக் கொண்டார்கள்.

ஆனாலும் குரு அனைத்தும் அறிந்து கொண்டுதான் இருக்கின்றான். 

ஆனாலும் இவ் சீடர்கள் பின் நல் முறையாக நீ அதைச் செய் இதைச் செய் என்றெல்லாம் பின் எதை என்று கூட யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது....

அப்பனே அங்கு காற்றோட்டம் வந்துவிட்டது வெள்ளங்கள் வந்துவிட்டது பின் அப்பனே அவர்கள் சேர்த்த பொருள்களெல்லாம் அடித்துச் சென்றுவிட்டது.

ஆனாலும் அப்பனே இவர்களும் அப்பனே அவ் வெள்ளத்தில் மிதந்து அப்பனே.... 

குருவே!!!  குருவே!!!! 

எங்களை காப்பாற்று!!! காப்பாற்று!!! என்றெல்லாம் குருவே!!! குருவே!!! உங்களுக்கு நாங்கள் உண்மையாக இருந்தோம் இப்படி எல்லாம் கை விட்டு விட்டாயே என்றெல்லாம் குரு !!வா!  வா.  வா! வந்து எங்களை காப்பாற்று கூக்குரலிட்டு பயந்து கத்தினார்கள்.

ஆனாலும் இவையன்றி கூற அனைத்தும் பின் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது பணங்கள் சம்பாதித்து வைத்த பொருள்கள் பல செல்வங்கள் பல தங்கங்கள் வைரங்கள். ஆனாலும் இவற்றின் மீது பின் இவையன்றி கூற பின் அறியாத ஆனாலும் குருவும் கூட அமைதியாக தியானித்துக் கொண்டு இருந்தான்.

ஆனாலும் இவர்கள் ஒரு விதத்தில் அப்பனே இவையன்றி கூற பின் குரு குரு என்று குருவானவன் வரவில்லையே என்று அதி விரைவிலே ஆனாலும் இவர்கள் ஐந்து பேரும் அப்பனே குருவே நீ குருவே இல்லை பொய்யான குரு நீ இல்லை நீ இல்லை என்றெல்லாம் திட்டித் தீர்த்துக் கொண்டே... அப்பனே அப்படியே வெள்ளத்தில் சென்றுவிட்டார்கள் அப்பனே.

இப்பொழுது புரிகின்றதா?? இதிலிருந்து அர்த்தம் என்ன சொல்கின்றது!!, என்ன செய்கின்றது!! என்று அப்பனே!!!

அவன் அவன் கர்மா அவந்தன்.. அவன்தான் அனுபவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அப்பனே போலியாக நடித்துக் கொண்டு இருந்தாலும் குருவிற்கு தெரிந்துவிடும் அப்பனே.

ஆபத்துக்காலத்தில் அப்பனே இவையெல்லாம் உதவாது என்பேன்.

அதனால் தான் உண்மையாக நேசியுங்கள் அப்பனே.

அனைத்தும் சேரும் அப்பனே இறைவனையே தரிசனம் செய்யலாம் தரிசிக்கலாம் என்பேன்.

உங்களுக்கு நிச்சயம் அப்பனே நீங்கள் செய்த புண்ணியம் அப்பனே பலம் மிகுந்தது என்பேன்.

அப்பனே அங்கேயே ஈசன் நிச்சயம் காட்சியளிப்பது மெய்யே.

அனைத்தும் கொடுப்பான் உங்களுக்கு அப்பனே.

நல் விதமாக அவந்தன்(ஈசன்) திருக்குடிலையும் அப்பனே அவந்தனே  அமைத்துக் கொள்வான் என்பது மெய்யே. அப்பனே

நல் விதமாக சித்தர்கள் யாங்களும் அங்கே வருவோம் அப்பனே.

நல் விதமாக எது தேவையோ!! அவை எல்லாம் மனிதர்களுக்குள்நுழைந்து அதையெல்லாம் செய்ய வைப்போம் .

நீங்கள் ஒன்றும் கவலை பட அவசியம் இல்லை என்பேன்.

அப்பனே நீங்களும் ஒவ்வொருவரும் அப்பனே எவ்வாறு என்பதை கூட இதனையே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே .

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நீங்கள் கருவியாக இருந்தால் மட்டுமே போதுமானது.

மற்றவை எல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அப்பனே .

இதனடியில் பல சக்திகள் மிதந்து கிடக்கின்றது.

அவையெல்லாம் மேலே எழும்பும் என்பேன்.

அப்பனே கவலைகள் இல்லை கவலைகள் இல்லை அப்பனே நல் முறையாக மீண்டும் அப்பனே அதி விரைவிலேயே அங்கே வந்து பல வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே.

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள். 


அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயம். 
பள்ளித்தெரு கிராமம். 
ஆம்பூர் வட்டம் திருப்பத்தூர் மாவட்டம். 

முருகன் கோயில் முகவரி 

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசகிரி. 
கெடம்பூர், ஊமராபாத் அஞ்சல்,
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 635808
தொலைபேசி
+91 9080776377.

இங்கு அருள் பாலித்து வரும் உமா மகேஸ்வரி உடனுறை ஸ்ரீ கயிலாயநாதர் கற்கோயில் கருவறை மகாமண்டபம் நடராஜர் விநாயகர் முருகர் வள்ளி தெய்வானை நந்திதேவர் நால்வர் நவகிரகம் பைரவர் சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரி உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் தனி சன்னதி மற்றும் ராஜகோபுரம் கருங்கல்லால் திருப்பணி செய்ய உள்ளது.

பக்தகோடிகள் தங்களால் இயன்ற பொருள் உதவி நிதி உதவி அளித்து இச் சிவாலய திருப்பணி புண்ணியத்தில் பங்கு பெறுமாறு பக்தியுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு சிவனடியார் திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள்.

கோயில் பூசாரி தொடர்பு எண் : பழனி சிவனடியார்.
7373422236

நிதி உதவி செய்ய வேண்டிய முகவரி.

SRI UMAMAHESHWARI KAILAYANATHAR TRUST. (REG NO :BT 796788.)
ACCOUNT NUMBER : 60342083334.
BANK: BANK OF MAHARASHTRA. 
AMBUR BRANCH. 
IFSC CODE NO: MAHB0001603.

CONTACT MOBILE NO. 9943301891. 9787140075.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் .............. தொடரும்!

3 comments:

  1. ஏர்வாடி அருள்மிகு திருவழுதீஸ்வரர் பெரிய நாயகி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் february 6ம் தேதி நடைபெற உள்ளது அகஸ்தியர் தாத்தாவே எங்களுக்காக நடத்தி தர வேண்டும் என்று மனமார வேண்டுகின்றேன். ஐயனே எம்முடைய பிரார்த்தனையை உங்களிடத்தில் சமர்ப்பிக்கிறேன் ஐயனே

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Translation:
    https://drive.google.com/file/d/1ijmh50Pfu2EuPFpV0rq7_N7pbfQ91fdx/view?usp=sharing

    ReplyDelete