​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 5 January 2022

சித்தன் அருள் - 1066 - அன்புடன் அகத்தியர் - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு!


சமீபத்தில் குருநாதர் அகத்தியர் மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவ சமாதியில் உரைத்த பொது வாக்கு

பாகம் 1

வாக்குரைத்த ஸ்தலம்: மௌன குரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி கட்டங்குடி அருப்புக்கோட்டை

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்

அப்பனே நலன்கள் அப்பனே மனிதன் பக்குவங்கள் பட வேண்டும் என்பேன் பக்குவங்கள் படபட மேன்மை நிலை பெருகும் என்பேன் .

அப்பனே எவ்வாறு என்பதைக்கூட யான் வாக்குகளாக செப்புகிறேன்

அப்பனே கலியுகத்தில் பல பல போராட்டங்கள் வாழ்வில் வரும் என்பேன் வந்துகொண்டே இருக்கும் என்பேன் யான்  சொன்னாலும் ஏற்க்கும் நிலையில் மனிதன் இல்லை என்பேன். ஏனோதானோ என்று இருந்து விடுகின்றான் மனிதன்.

அப்பனே வரும் காலங்களில் எவனோ ஒருவன் கந்தபுராணம் அதிகம் ஓதுகின்றானோ அவனை யானே தேர்ந்தெடுத்து நிச்சயமாய் உதவுவேன் என்பேன் ஆனால் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதுதான் சந்தேகத்திற்குரியது.

அப்பனே பக்தி என்பது ஏதடா பக்தி என்பது எவ்வாறு என்பதைக்கூட அனைவரும் வந்து(சித்தர் ஜீவசமாதி க்கு) கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனாலும் இவனுக்கும் (மௌனகுருரெட்டி சித்தர்) கோபம் தான் என்பேன்.

எவனொருவன் நீயே ஒரு நல்வழி விடு என்று கேட்பானா? என்று தவித்துக்கொண்டு இருக்கின்றான் இவ்வாலயத்தில் இருப்பவன். ஆனாலும் ஒருவன் கூட அதை கேட்கவில்லை.

என் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் எனக்கு பணம் வர வேண்டும் சொத்துக்கள் வரவேண்டும் மேற்படிப்புகள் படிக்க வேண்டும் பெரிய இல்லத்தை அமைக்க வேண்டும் என இப்படி கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்கின்றான் மனிதன்.

இவந்தன் என்ன உங்களுக்கு வேலையாளா?? 

அப்பனே இவன்  இடத்திலும் நல் முறையாக சக்திகள் உள்ளது என்பேன் அமைதியாக இவனிடத்தில் தியானம் மட்டும் செய்தால் போதுமானது அனைத்தும் கொடுப்பான் அதைவிட்டுவிட்டு அப்பனே எதை எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் இவந்தனுக்கு மனக்குழப்பம்  பின் எதுவும் நடக்காது என்பேன்.

வில் அம்பின் (தனுசு ராசி) நேர் கதியாக  இருப்பவன் அப்பனே இங்கு வர என்பதைக்கூட இங்கு வருவான் என்பேன் இவ்விடத்திலும் நன் முறையாக சூட்சுமமாக சொன்னால் நிச்சயம் வருவான் பின் அனைத்து நலன்களும் இவ்வாலயத்திற்கு செய்வான் என்பேன். இத்தலத்திற்கு தேவையானவற்றை நல் முறையாக உதவுவான் என்பேன்.

இன்னும் அவனுக்கு நல்ல முறையாக பக்குவம் எவ்வாறு என்பதும் கூட இவந்தனே (மௌனகுரு சித்தர்) கொடுத்து அழைத்துக் கொள்வான் என்பேன் நிச்சயம்.

ஆனாலும் மக்களே நீங்கள் எதையெடுத்தாலும் முயற்சிகள். ஆனாலும் இவந்தன் விட்டு விடுவதில்லை இவந்தனே தேர்ந்தெடுத்துக் கொள்வான் நீங்கள் சற்று அமைதியாக இருங்கள் என்பேன்.

அப்பனே இவ்வாறு நிலைமைகள் மாற வேண்டும் இன்னும் கலியுகத்தில் போராட்டங்கள் தான் அதிகம் அதிகமாக நடக்கும் என்பேன் அப்பனே அதனால் நீங்களும் பக்குவப்பட்டு கொள்ளுங்கள் அப்படியே வாழ்க்கையை வாழ்ந்து விட்டீர்கள் ஆனாலும் ஒரு பிரயோஜனம் இல்லாமல் வாழ்ந்து விட்டீர்கள்.

ஒவ்வொருவரும் அப்பனே எண்ணிப்பாருங்கள் புண்ணியம் எவ்வளவு செய்தோம் என்று அப்பனே.

அப்பனே ஆனாலும் புண்ணியவான்கள் நல் புண்ணியம் செய்து கொண்டு  வருபவரும் இங்கே இருக்கின்றார்கள்.

எந்தனக்கும் தெரியும் அவந்தன் மனதிற்கும் தெரியும் என்பேன்.

அப்பனே இதனால் தான் சொல்லுகின்றேன்

வாழ்க்கையில் ஆடிவிட்டு பாடிவிட்டு இப்போது அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றீர்கள் அது நடக்குமா? இது நடக்குமா?என்று எண்ணிக்கொண்டு இப்பொழுது கூட.

அப்பனே பக்குவங்கள் பெறவேண்டும். பக்குவங்கள் பெற்றால்தான் இறையருள் பலமாக இருக்கும் என்பேன் அதை விட்டு விட்டு இறைவன் ஸ்தலத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தால் என்ன லாபம்?

சென்று கொண்டிருந்தால் அங்கு பல உபயங்களையும் நீங்கள் செய்ய வேண்டும் என்பேன் நல் முறைகளாக சில சேவைகள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அதை செய்யாமல் நேரடியாக இறைவனிடம் வந்து இது தா அது தா என்று கேட்டாள் இறைவன் கொடுப்பானா என்ன நிச்சயமாய் கொடுக்கமாட்டான் என்பேன் ஆனால் புண்ணியத்தை நீங்கள் செய்தால் இறைவன் எவ்வாறு என்பதும்கூட உன்னையே தேடி வந்துவிடுவான் என்பேன்.

அதனால் அனைவரும் நல் முறைகளாக ஜீவராசிகளுக்கு உணவு நிச்சயமாய் அனுதினமும் கொடுக்க வேண்டும் என்பேன் இதையாவது நீங்கள் செய்கிறீர்களா என்று பார்ப்போம்.

அப்பனே இவையன்றி கூற முன்னே கோரியபடி இவந்தனக்கும்(மௌனகுரு சித்தர்) நல்லாசிகள் உண்டு நல் முறைகள் ஆகவே பின்பற்றும் பொழுது அப்பனே நன்மையாக முடியும் என்பேன். நன்மையாகவே முடியும் என்பேன்.

அப்பனே போராட்டத்திற்கு பிறகே வாழ்க்கையடா! அப்பனே 
ஆனாலும் போராட்டம் போராட்டம் என்று தள்ளிக் கொண்டே இருந்தால் அதில் கூட வாழ்க்கை முடிந்து விட்டதா என்று நீயும் நினைப்பதுண்டு.

அப்பனே புண்ணியம் செய்திடு ! அப்பனே புண்ணியம் தான் வாழ்க்கையை பாதுகாக்கும் என்பேன்.

அதை விட்டு விட்டு எதை எதையோ நினைத்துக் கொண்டால் அப்பனே பரிதாபத்திற்குரியது தான் நிலைமை என்பேன்.

வரும்  கலியின் காலம் கலியவன் (கலிபுருஷன்) பல மக்களின் மனதை மாற்றி தீய வழிகளில் அழைத்துச் செல்வான் என்பேன்.

அப்பொழுது கூட மனம் அமைதியாக இருந்தால் பின் மேல்நோக்கி எழலாம் என்பேன்.

அப்பனே ஒன்றை சொல்லுகின்றேன்.

ஒரு யானை சென்று கொண்டு இருந்ததாம் ! அதன் பின்னால் என்ன வரும்?  நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்?

அப்பனே சொல்கின்றேன் பின்னால் நிழல்தான் செல்லும் என்பேன்.

அப்பனே இது போலத்தான் வாழ்க்கை அப்பனே உங்கள் பாவ புண்ணியங்களே உங்களை பின் தொடர்ந்து வரும் என்பேன். கடை நாள் வரையிலும் பாவம் செய்திருந்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் புண்ணியம் செய்திருந்தால் அப்பனே அதற்குரிய பலன் புண்ணியங்கள் பெற்றிருக்க நல் முறையாகவே மேல்நோக்கி அழைத்துச் செல்லும் என்பேன் இதனால்தான் அப்பனே பாவ புண்ணியங்கள் நிழல்போல் தொடர்ந்துவரும் என்பேன்.

அப்பனே இவைதனை உணர நல்லவையே என்று நினைத்திருக.

நினைத்திருக இன்னும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை தான் கலியவன் ஏற்படுத்துவான் இன்னும்.

ஆனாலும் இதன் உள்ளே இறை பலங்கள் அதிகரிக்க அதிகரிக்க தொந்தரவுகள் நீங்கும். நீங்கும் என்பேன். அனைவரும் யான் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையை எடுத்து கொள்வார்கள் இது உண்மை.

அப்பனே ஆனாலும் பிரச்சினை எதிலிருந்து வருகின்றது என்பதை சிறிது யோசித்துக் கொள்ளுங்கள்.

பிரச்சனைகள் உங்களிடமிருந்து தான் வருவதே.

அப்பனே சிறிது யோசித்துக் கொள்ளுங்கள்

அப்பனே விதியைக் கூட மதியால் வென்று விடலாம் அவ் மதி என்னவென்றால் இறைவனின் அருள் என்பேன். இறைவனருள் இருந்தால் அப்பனே  நல் முறைகள் ஆகவே விதி என்ன ?

மதி என்ன?

கதி என்னடா??? 

அப்பனே ஆனாலும் வயதாகி விட்டதே தவிர என்னவென்று எதுவும் உங்களுக்கு தெரியவில்லை நீங்கள் என்ன கேள்விகள் கேட்கப் போகிறீர்கள் என்பதும் எந்தனக்குத் தெரியும்.

ஒவ்வொருவரும் எதை எதையோ நினைத்துக் கொண்டு 

அவை பிரச்சனை !

இவை பிரச்சனை ! 

இது வருமா ?

அது வருமா? பிள்ளைகள் படிப்பா? என்பதுதான் நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பீர்கள் . இதனை யான் பல முறை பார்த்துவிட்டேன் அப்பனே.

எதையும் கேட்காமல் இருப்பது நல்லதே என்பேன்.

தூய மனதோடு இறைவன் சிந்தனையிலேயே இருங்கள் அப்பனே நல் படியாகும் மோட்சங்கள் பெறுவதற்கு வழிகளும் யான் கூறுவேன் என்பேன்.

அப்பனே இது பொய்யான உலகமடா இந்த பொய்யான உலகத்தில் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் சில மெய்யானவர்கள். அவ் மெய்யான மனிதர்களை கூட பொய்யான மனிதர்கள் கெடுத்து விடுகின்றார்கள்.

இதனையும் கூட நாங்கள் சித்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றோம் இனிமேலும் நிச்சயமாய் இவ்வுலகத்தில் எவ்வாறு தவறு செய்கிறீர்களோ அப்பொழுது கூட அடுத்த பிறப்பிற்கு என்று செல்லாது இப்பிறப்பில் செய்ததை பிறப்பிலேயே அனுபவிக்க வேண்டுமென்பது இறைவன் ஈசனே கட்டளை விட்டுவிட்டான் கிரகங்களுக்கு கூட.

அதனால் அப்பனே இப்பிறப்பில்  செய்வதை இப் பிறப்பிலேயே அப்பனே தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

அப்பனே!

அன்னதானங்கள் தொடர்ந்து செய்ய செய்ய கர்மங்கள் ஒழியும். பரிகாரம் என்று ஒன்று கூட தேவையில்லை.

நிலையில்லாதது! நிலையற்றது !
நிலையுள்ளது !
மாறிவருவது! இயல்பானது !
இயல்பற்றது!
இயல்புள்ளவை!
இயல்பில்லாதது
மனம் திறப்பது  !
மனம் திறக்காதது !
பின் வருந்துவது! வருந்தாதது!

இவையெல்லாம் மனிதனுக்கு தெரிந்துவிட்டால் இவன் தான் ஞானி என்பேன். 

ஆனாலும் புத்திகள், மதிகெட்ட புத்திகள் மதி அழிந்து பின்னாளில் நிலையற்றதை தேடிச்சென்று மனிதன் அழிவைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது பின் இதிலிருந்தும் இரண்டு விதிகள் உண்டு .

இன்பம் துன்பம் துன்பத்திலே மனிதன் செல்கின்றான் எதற்காக ?மாயையா? அல்லது இறை அருளா?  துன்பம் எதிலிருந்து வருகிறது ?

என்பதால் பின் துன்பத்தில் இன்பம் எதை என்றும் இவை இரண்டும் கலந்து பார்த்தால் இன்பம் துன்பம் இருவழிகள் ஆனாலும் இவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு மனிதன் துன்பப் பாதையில் செல்கின்றான் இன்பப் பாதையில் பின் பின் நிறைவாகவே இருக்கின்றது.
 
ஒருவன் கூட இன்ப பாதையில் செல்வது இல்லை ஏனென்றால் துன்பப் பாதையிலேயே செல்கின்றான்.

 எதற்கு?

துன்பங்கள் பாதையில் செல்கின்ற பொழுது அவனே அவன் தன் துன்பத்தை அவனே தேடிக் கொள்கிறான். ஆனால் இன்பமான பாதை யாரும் அதில் இல்லையப்பா.

துன்பப் பாதை என்றால் சொல்கின்றேன் கேள் அவை வேண்டும்! இவை வேண்டும் !
அது வேண்டும் !
இது வேண்டும் !
பின் பொருள்கள் வேண்டும்! 
பின் பின் பல சொத்துக்கள் சேர்க்க வேண்டும்! பின் இல்லங்கள் அமைய வேண்டும்! என்பதையெல்லாம் எதிர்நோக்கும் பொழுது துன்ப வழியில் செல்லும் பொழுது துன்பத்திற்கு காரணம் யாரென்று கூட பின் தெரிகின்றதா? மக்களே!

ஆனாலும் 

இன்பப் பாதை யில் ஒருவன் கூட இனியும் எவ்வாறு என்பது கூட வந்துவிட்டால் நல்லது என்பேன் இன்பத்தின் மீது நல் முறைகளாக இந்தப் பாதையில் செல்லும்போது 
கூட 
இறைவா! 
இறைவா! 
இறைவா !
என்று சொல்லிக் கொண்டே செல்லுங்கள் பின் இது கடைசி வரை இன்பமாகவே மாறும் ஆனால் அவ்வழியில் யாரும் இல்லை என்பேன்

பாகம் 2

இவந்தன் (மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) அருமை பெருமைகள் நன்றாகவே தெரியும். என்பதற்கிணங்க இவந்தனும் நல் முறைகளாக தவத்திலேயே இருக்கின்றான் என்பேன்.

அதனால் நீங்களும் எதையும் கேட்க தேவை இல்லை என்பேன் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்யுங்கள்.
 பின் நலமாகும். 
நலமாகும் என்பேன்.

இவந்தனும் உற்று பின் மறுமுனையில் இவந்தனும்  ஓர் தவத்தில் இருக்கின்ற பொழுது  மீண்டும் கண்ணை திறப்பான் என்பேன். அவ் நேரம் இரவு எட்டு மணியே என்பேன்.

அதன் முன்னே ஒரு அரைமணிநேரம் வந்து பின் தியானங்கள் செய்தால் இவந்தன் விழிப்பான்.

யான் சொல்லிய நேரத்தில் அனைவருக்கும் ஆசிகள் கொடுப்பான் என்பேன் இதனை அனைவரும் தவறாமல் செய்தல் வேண்டும் என்பேன்.

அப்பனே இவை தான் சொல்வேன் அப்பனே.

 சித்தர்கள் அப்பனே எவை என்று கூற பின் பணம் வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் எவ்வாறு என்பதை கூட கொடுத்து வைத்தவர்கள் போலவே கேட்கின்றார்கள் அப்பனே..

அப்பனே ஆனாலும் யாங்கள் நல்வழிப்படுத்துவோம். அவ் நல்வழியை பயன்படுத்தி கொண்டால் அப்பனே நீங்களே பிழைத்துக்கொள்ளலாம் என்பேன்.

அப்பனே !

ஐந்தறிவு உள்ள ஜீவன்களுக்கும் ஆறறிவுள்ள ஜீவன்களுக்கும் என்ன? வித்தியாசம் என்றால் ஒன்றும் இல்லை என்பேன்.

ஆனாலும் அப்பனே ஆறறிவு நல் முறையாக மனிதன் பயன்படுத்தினால் அவனுக்கு என்றுமே இறப்பு இல்லை என்பேன்.

அப்பனே அப்படி பயன்படுத்தித்தான் பல ஞானியர்களும் பல மனிதர்களும் ஜீவ சமாதி அடைந்துள்ளார்கள் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக இவ் ஆறாவது அறிவை நல் முறையாக பயன்படுத்தினால் ஏழாவது அறிவு தானாகவே திறந்து விடும் என்பேன்.

ஆறாவது அறிவிற்கு தேவையானது பின் முழுமையாக இறையருளே என்பேன்.

அவ் இறையருளை எப்படி பெறுவது என்பது கூட யான்  பின்வாக்கிலும் சொல்கின்றேன்.

இதை தெரிந்து கொண்டே வந்தால் அப்பனே பின் வாழ்க்கையில் ஏழாவது அறிவு என்று இருக்கின்றதே அது இவ்வுலகத்தில் நின்று பேசும் என்பேன்.

அப்பனே கூறுங்கள் அப்பனே இவையன்றி கூற இவ் ஆறாவது அறிவைப் பயன்படுத்த தகுதியானவை அப்பனே வள்ளலான் (வள்ளலார் பெருமான்) சொன்ன வார்த்தையை கடைபிடிக்க அப்பனே ஆறு அறிவை முடித்துவிடலாம் என்பேன்.

அப்பனே ஏழாவது அறிவுக்கும் எட்டி விடலாம் என்பேன்.

அப்பனே மனிதனிடத்திலே அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றான் மனிதன் ஆனால் மனிதனுக்கு வாழ தெரியாமல் அவன் கெடுத்துக் கொண்டு திரும்பவும் இறைவனிடத்தில் வந்து வருந்துகின்றான் இது நியாயமா??

அப்பனே அதனால்தான் இறைவன் அறிவு களோடு பிறக்க வைக்கின்றான்.

ஆனாலும் நிலையில்லாத உலகத்தில் மனிதன் நிலை உள்ளதை தேடி செல்கின்றான் என்பேன்.

ஆனாலும் அப்பனே நிச்சயம் ஆன்மிக பூமியாக அப்பனே யாங்களே மாற்றுவோம்.

ஆனால் அப்பனே மனிதர்களை நம்பி நம்பி யாங்களும் பட்ட பாடுகள் .

அப்பனே இவனிடத்தில் கொடுத்தால் நன்றாக செய்வானா? ஆனாலும் இவ்வாறு வரங்களும் கொடுத்துவிட்டு கொடுத்துவிட்டு பின் அவனவனே பிழைத்துக் கொண்டிருக்கிறான்.

அதனால் இனிமேலும் மனிதர்களை யாங்கள் நம்பப் போவதில்லை.

யாங்களே அனைத்தும் செய்வோம் என்பேன்.

சித்தர் ராஜ்யம் அமைத்து ஆன்மிக பூமியாகவே மாற்றி விடுவோம்.

அப்பனே அனைவரும் அதிகாலையிலே சூரியனை வணங்க வேண்டும்.

பின் சூரியன் வரும் முன்பே எழுதல் வேண்டும் என்பேன் ஆனாலும் சோம்பேறிகள்  எழுவதில்லை என்பேன்.

அப்பனே இப்படி எழுந்துவிட்டால் அனைத்தும் வெற்றிகள் வாழ்க்கையில் கிடைக்கும் என்று அர்த்தம் என்பேன்.

யாராவது அப்பனே அப்பனே இவ்வாறு நிலைநிறுத்தி பார்க்கும்பொழுது அப்பனே இவர்களுக்கு இறையருள்கள் எவ்வாறு என்பது கூட உண்மை நிலை தெரியும் என்பேன்.

அப்பனே ஆனாலும் இவைதனை உணர சூரியன் ஒளிக்கற்றைகள் நல் முறைகள் ஆகவே

 யான் அறிவியல் ரீதியாகவே சொல்கின்றேன்

அதிகாலையிலே சூரியன் வரும்பொழுது பின் அத்தனையும் மிஞ்சிய அளவு ஒரு சக்திகள் பிறக்கும் என்பேன் .

அது முதல் ஒளியாக நம் மீது படும் பொழுது அனைத்தும் நல் முறை களாகவே மாறும் என்பேன்.

அதனால் மூளை திறன் அதிகமாக செயல்படுவது உறுதி என்பேன். இதனால் அறிவுகள் பெருகும் என்பேன்.

அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் எளிதில் என்பேன்.

ஆனாலும் இதன் அர்த்தம் இன்னொரு முறையும் சொல்கின்றேன்.

ஆனாலும் அப்பனே ஏன் அப்பனே சொல்கின்றார்கள் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட சூரியன் நல் முறைகளாக வரும் முன்னே திருத்தலங்களை ஏன்? திறக்க வைக்கிறார்கள். என்பதைச் சொல்லுங்கள்.

அப்பனே அவை மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு தெரியாமலேயே மூடன் ஆகவே வாழ்கின்றான் இதனால் தான் முட்டாள்கள் என்போம் யாங்கள் சித்தர்கள் மனிதனை.

அப்பனே இவ்வாறு என்று கூற சித்தர்கள் பல திருத்தலங்களை அப்பனே எவ்வாறு அமைக்கிறார்கள் என்பதை கூட பின் நல் முறைகள் ஆகவே பின் எவை என்பதை கூட  பின் ஒவ்வொரு உயிருக்கும் கொடுத்துதான் நல் முறைகளாக பின் திருத்தலங்களை உருவாக்குகிறார்கள். 

அதனால் அப்பனே அதிகாலையிலே சூரியன் வெளிச்சம் நன்றாக திருத்தலங்களில் படும்பொழுது அனைத்து ஜீவராசிகளும் ஈரேழு உலகமும் பின் நல் முறைகளாக பின் அடியில் இருக்கும் சித்தர்களும் திடீரென்று எழுவார்கள்.

அப்பொழுது கூட இத் திருத்தலங்களுக்கு சக்திகள் அதிகமாகின்றது என்பேன். 

அதனால் திருத்தலங்களுக்குச் சென்றால்  நம்தனக்கும் நல்லதே நடக்கும் என்பது விதியப்பா.

அப்பனே நல்லமுறையில் ஆகவே இன்னொரு விஷயத்தையும் சொல்லுகின்றேன் அப்பனே நோய் உள்ளவன் பின் மாலை வேளையில் அப்பனே!! சூரிய வெளிச்சத்தில் உறங்க வேண்டும் என்பேன்.

இவ்வாறு உறங்கிக் கொண்டே வந்தால் அனைத்து நோய்களும் விலகும் என்பேன் .

அப்பனே அவைதான் கூட அருகம்புல் என்று சொல்வார்களே அதன்மீது உறங்க வேண்டும் என்பேன்.

அப்பனே இவையன்றி கூட அப் புல்லுக்கு நல் முறைகளாக நோய்களை எதிர்க்கும் சக்தி உள்ளது என்பேன் அதனால் பின் இதனையே பின் பின் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால் பின் உடம்பில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கி விடும் என்பேன்.

அதனால் அப்பனே முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கும் அதை ஏன்? படைக்கிறார்கள் என்பதே மனிதர்களுக்கு தெரியவில்லை அருகம்புல்லை.

அப்பனே இவைதனை உணர இவந்தனும் (விநாயக பெருமான்)  எவ்வாறு என்று தன் தந்தையிடம் கேட்டான் நான் இளமையாக இருக்க வேண்டும் என்று.

அதற்கு ஈசன் சொன்னான் விநாயகப்பெருமானிடம் போ!!! போய்!! அருகம்புல்லை உண்டு கொண்டே வா என்று.

அதனால் இப்போது கூட இளமையாகவே இருக்கின்றான் விநாயகப் பெருமான் இதனால்தான் நோய்நொடிகள் இல்லாமல்.

அப்பனே ஒவ்வொரு ரூபத்தில் இருக்கும் சமமானதே சமமானவையே  உண்டு என்பேன்.

அடுத்து தேங்காய் என்று சொல்கின்றார்களே அதற்கு வருகின்றேன்.

அப்பனே இதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன் ஆனாலும் புத்தி கெட்ட மனிதர்கள் இதை உடைத்து மட்டும் செல்வார்கள் இதன் பயன் யாருக்கும் தெரிவதில்லை என்பேன்.

பின் நல் முறைகளாக ஈசனிடம் விநாயகப்பெருமான் உடலில் அனைத்து செல்களும் நன்றாக இருக்க நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

ஈசனும் பின் தேங்காயை உண்டால் அனைத்து நோய்களும் போய்விடும் இதில் பல அதிசயங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டான்.

அதை உண்ணுக என்று சொன்னால் அதை வெளியில் எறிந்து விட்டு போய் விடுகின்றான் மனிதன். இதனால் என்ன லாபம்??

அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே எவ்வாறு என்பதைக்கூட பழம் என்றால் என்ன என்பது கூட அனைவருக்கும் தெரிந்திருக்கும் பழம் என்றாலே!

வாழைப்பழம் அப்பனே இதில் எவ்வாறு என்பது கூட சூட்சுமங்கள் அடங்கியுள்ளது என்பேன் இதையும் தின்றுவிட்டு நல் முறையாக உறங்கினால் அப்பனே ஜீரண உறுப்புக்கள் சரியாக செயலிழக்காமல்  இருந்துவிடும். அதனால்தான் அப்பனே ஆனாலும் அதை யாருமே அறிவதில்லை என்பேன்.

இப்பொழுது தெரிகின்றதா?? படைப்புகளைப் பற்றி.

அப்பனே ஆனாலும் சில திருத்தலங்களில் நல் முறைகளாக துளசியை விதைக்கின்றனர் கொடுக்கின்றனர் ஆனாலும் இதனை பற்றி தெரிந்து கொள்க.

அப்பனே இவையும் உண்ண நோய்கள் இல்லை.

அப்பனே மற்றொன்றை எடுத்துக்கொள்ளுங்கள் அப்பனே வில்வம் என்கின்றார்களே அப்பனே இதிலும் சூட்சுமம் உள்ளது என்பேன்.

ஏன்?  எதற்காக? ஈசனுக்கு வில்வத்தை படைக்கிறார்கள் என்பதைக் கூட யாருக்கும் தெரிவதில்லை என்பேன்.

அப்பனே அதைத் தின்று பாருங்கள் தெரியும் ஈசனே பேசுவான் உங்களிடம்.

அப்பனே இவைதன் உணர்ந்து நன்கு தெளிவு பெற்றால் இவைதனை நன்கு சாப்பிட்டால் நல் முறைகளாக உடம்பில் ஒரு குறைகளும் வராது என்பேன்.

வராது என்பேன் அப்பொழுது தான் இறைவன் நிச்சயமாய் கண்களுக்குத் தெரிவான்  என்பேன்.

அப்பனே ஆனாலும் இவையன்றி கூற இதனையும் நின்று பார்த்தால் அப்பனே ஒன்றும் இல்லை.

சில திருத்தலங்களில் அப்பனே இனிப்பை கொடுப்பார்கள் என்பேன்.

இனிப்பு என்றால் அப்பனே நல் முறைகளாக தயாரிக்கப்பட்ட சர்க்கரையே என்பேன்.

ஆனாலும் இதற்கு சான்றாக மனிதன் எதை எதையோ நினைத்து கொண்டு இனிப்பை வழங்கி கொண்டு தான் இருக்கின்றான்.

ஆனால் சரியான முறையில் சரியான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அப்பனே நோயும் விலகிப்போகும் அதிவிரைவில்.

அப்பனே இதை விட்டுவிட்டு மனிதன் முட்டாள் மனிதன் என்ன செய்கிறான் என்றால் இவையெல்லாம் இறைவனுக்கு படைத்தால் பின் நமக்கு ஆசீர்வாதங்கள் கொடுப்பான் என்று நினைக்கின்றான்.

ஆனாலும் அப்பனே இவை என்று கூற இறைவன் நீ நினைத்ததற்கு மனிதனை பாவம் என்று நினைக்கின்றான் இறைவன்.

அப்பனே இவை என்றும் கற்பூரத்தை ஏற்றுகிறார்களே இதனைப் பற்றியும் ஒரு உரிமை சொல்கின்றேன்.

அப்பனே பச்சை கற்பூரத்தை மாதம் ஒருமுறை எவன் உண்ணுகிறானா அவனிடம் இறைவன் நின்று பேசுவான்.

அப்பனே முற்காலத்தில் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட சில சில மூலிகைகளால் ஆன இப்பொழுது கூட வத்தி (அகர்பத்தி) என்கிறார்களே அதையும் முன் ஜென்மத்தில் பல மூலிகைகள் கலந்து பின் உருவேற்றி அதை தீயிட்டு பற்ற வைக்கும் பொழுது நல் முறைகளாக புகை வரும் அப்பொழுது அவ் நோய்கள் பல நோய்கள் நீங்கும்.

ஆனால் இன்றோ முட்டாள் மனிதன் அதையும் கெடுத்து விட்டான்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அனைவரும் உலகம் மாறிவிட்டது மாறிவிட்டது என்கிறார்கள் ஆனால் இதற்கும் காரணம் மனிதனே மனிதன் மாறிவிட்டான் என்பதுதான் யான் சொல்வேன்.

அப்பனே இனிமேலும் அப்பன் ஈசன் நிச்சயமாய் நாடகத்தை நடத்துவான் என்பேன்.

மனிதன் மீறினால் எல்லை மீறினால் இறைவனும் எல்லை மீறுவான் என்பேன்.

ஆனாலும் மனிதன் எல்லை மீறும் பொழுது ஆனாலும் அமைதியாக தான் இருப்பான் இறைவன்.

ஆனால்?

இறைவன் எல்லை மீறினால்?? முடியாது !!!என்பேன்.

இறைவனை தடுக்க யாராலும்.!!!!!

அப்பனே தெளிந்து புக்திகளை நல் முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்றுகூட நன் முறைகளாக இறைவனை சேவித்து நல் முறைகளாக வாழ்ந்து வந்தால் அப்பனே ஒரு குறையும் வராது என்பேன்.

வராது என்பேன்.

அப்பனே இப்பொழுதும் கூட சொல்லி வைக்கின்றேன் சுத்த சன்மார்க்கத்தை சரி முறையாக கையாள்வது எவன் என்றால் அப்பனே அவனிடத்தில் இறைவனே தேடி வந்துவிடுவான் என்பேன்.

அதைச் செய்யுங்கள் முதலில்.

பின் வாக்குகளாக அனைத்தும் கேளுங்கள் யான் சொல்கின்றேன்.

அப்பனே வள்ளலார் முறைப்படி பின்பற்றினால் ஒரு கடுகளவும் குறை வராது என்பேன். இது நிச்சயம்.

அப்பனே மாய மயக்கத்தில் அப்பனே மனிதன் விழுந்து விடுவதற்காகத்தான் அப்பனே துன்பம் என்ற நிலை ஆனாலும் கர்மாக்கள் இறைவனால் நீக்கமுடியும் என்பேன்.

புண்ணியத்தை நீக்கமுடியாது என்பேன்.

அதனால் புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால்
இறைவனாலயே ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

அப்பனே அறிவுகள் பலம் பலம் என்றுதான் சொல்லிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது.

ஆனால் மனிதனோ இங்கு இறைவனை வணங்குகின்றான் இல்லத்தில் சென்று பின் நல் முறைகள் ஆகவே இவை தான் உண்மை என்று பின் பின் அநியாய காரியங்களை செய்கின்றான்.

இது நியாயமா???

அப்பனே நல் முறைகளாக இங்கு உள்ள வரை அப்பனே
இவ் சுற்றியுள்ள ஊர்களிலும் இவன்(மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) திருத்தத் தான் பார்க்கின்றான்.

ஆனாலும் திருத்த முடியவில்லை இவனால்.

அதனால்தான் யான் யானே(அகத்தியர்) பொதுவாக வாக்குகளை செப்பி வருகின்றேன் இப்பொழுது.

அப்பனே இவந்தனும்(மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) நல் முறைகளாக யாராவது பின் நல் முறைகளாக மனது தூய்மையாக இருந்து எதையும் வேண்டாம் என்று எண்ணி நல் முறைகள் ஆகவே வேண்டினால் அனைத்தும் கொடுக்கலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

ஆனாலும் யாரும்? எவ்வாறு? என்பதையும் கூட அவன் விருப்பம் போல் நடந்து கொள்ளவில்லையே???!!!! அப்பன்களே!!!

அப்பனே உயிர் வாழக்கூடியதற்கு அப்பனே எவை என்று கூற இவ்வுலகத்தில் இலவசமாகவே தருகின்றான்.

காற்றை பின் எவை? என்று கூற பின் அனைத்தும் தர மாட்டானா? என்ன??

அப்பனே ஆதங்கமாக இருந்தான் (மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) இவன்.

அதனால் தான் அப்பனே என்னையும் அழைத்தான் என்பேன் இவனே.

அப்பனே திருந்தப் பாருங்கள் அப்பனே நல் முறைகளாகவே நல் முறைகள் ஆகவே இது ஆன்மீகம் பூமியாக மாறும் என்பேன் இன்னும் பலகோடி சித்தர் ஜீவ சமாதிகள் இருக்கின்றன.

அதனையும் மனிதர்கள் அழித்துவிட்டனர். அங்கே அழித்து அழித்து இல்லத்தையும் கட்டிக் கொண்டிருக்கின்றனர் பல மனிதர்கள்.

ஆனாலும் வரும் காலங்களில் நிச்சயமாய் ஈசனே எழுவான் என்பேன் அங்கங்கே ஆசிர்வாதங்கள் கொடுத்து புண்ணிய பூமியாக இனிமேலும் மாற்றுவான் என்பேன்.

அப்பனே அநியாயம் எப்போதும் ஓங்கி நிற்காது என்பேன்.

தர்மமும் வரும் என்பேன்.

அப்பனே இதனால்தான் அப்பனே மனிதன் போக்கை பார்த்தால் அப்பனே சரியில்லை தான் என்பேன் யான்.

இதைக்கூட நினைக்கின்றான் இங்கு அமர்ந்து இருக்கக்கூடியவன்(மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்).

பாகம் 3

அப்பனே நல் முறையாக மனிதர்கள் இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பேன்.

அப்பனே நோயைத் தீர்க்கும் மருந்து பூமியில் இருக்கும் அடியில் இருந்து(கிழங்கு வகைகள்) உடனே எடுக்க நோய் தெரிந்துவிடும் என்பேன் அதனால் அதையும் "உண்ணுக! என்பேன்.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூற மனிதன்தான் மறுபிறப்பும் எடுக்கின்றான் என்பது உறுதியாக யான் சொல்வேன்.

அப்பனே எவை என்று கூற யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய் என்று.

ஆனால் மனிதனோ யாங்கள் கர்மங்கள் செய்வோம் கர்மங்கள் செய்வோம் என்று தான் போய்க் கொண்டு இருக்கின்றான்.

அக் கர்மா பாதையில் சென்றால் பின் பிறவிகள் பிறவிகள் என்று எடுத்துக்கொண்டாகவேண்டும் என்பது நிலைமை. இப்பொழுது பாருங்கள் நீங்களே!!! யாரிடமிருந்து பிறவி ஏற்படுகிறது?? என்று.

அப்பனே அலைந்து திரிந்து அப்பனே இதனால்தான் அப்பனே வாக்கியன் (சிவவாக்கியர் சித்தர்) சொல்கின்றான்.

வாக்கியன்! எவ்வாறு என்பதைக்கூட நிலைநிறுத்தி பார்க்கும் பொழுது

பாவம்! மனிதன்! எங்கெங்கோ? தேடி தேடி அலைந்து திரிந்து உண்மைப் பொருளை பின் கண்டுகொள்ளாமல் இறந்து விடுகின்றான். திரும்பவும் வருகிறான். அப்பொழுது கூட உண்மை நிலை புரியாமல் வாழ்கின்றானே!!என்று மனிதனை பின் வாக்கியனே பின் திட்டுகின்றான் . என்பேன்.

அப்பனே இதற்கும் காரணம் அப்பனே கஷ்டங்களுக்கும் காரணம் எவ்வாறு என்பதை கூர்ந்து பார்த்தால்  மனிதனே என்பேன்.

மனிதன் மூலமாகத்தான் கஷ்டங்கள் வருகின்றது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

தாங்கள் தங்கள் எவ்வாறு? இப்பொழுது நிலைமையில் இருக்கின்றீர்களோ? இவ் நிலைமைக்கும் நீங்கள் தான் காரணம் என்பேன்.

இறைவனை குறை கூறாதீர்கள் எப்பொழுதும் கூட.

அப்பனே நிலைமையும் மாறும் இவ் நிலைமை மாறுவதற்கு புண்ணியங்கள் தான் அவசியம்.

அவை எவ்வாறு என்று கூட மனிதனுக்கு தெரியும் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்பேன் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே அப்பொழுது கூட இறைவன் உங்கள் வாழ்க்கையையே மாற்றி விடுவான் இதுதானப்பா உண்மை.

அப்பனே கர்மாக்கள் செய்துகொண்டே இருந்தால் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட தெரியும் அளவிற்கு சொல்கின்றேன் ஒன்றை.

இவ்வாறு செய்து கொண்டிருந்தால் அவன் நன்றாகத்தான் இருப்பான் ஆனால் அப்பனே அவன் குலமே அழிந்துவிடும் என்பேன் கடைசியில்.

ஆனாலும் புண்ணியங்கள் தேடிச் சென்றால் அப்பனே புண்ணியங்களை தேட தேட இறைவனே உந்தனக்கும் நல்லருள்கள் கொடுத்து மீண்டும் ஒர் முறை இறைவனே பிறப்பிப்பான் இதுதான் உண்மை.

அப்பனே இவ்வாறு புண்ணியத்திற்கேற்ப பலனுக்கு ஏற்ப இறைவனே தரிசனம் கொடுத்து அல்லது மாறுபாடாக மாறுவேடம் ஆக வந்து உந்தனக்கு என்ன தேவை? என்று கேட்பான். அப்பொழுது கூட நல் முறைகளாக இறைவனே போதுமென்று புண்ணிய ஆத்மாக்கள் சொல்லும்.
 
சொல்லும்பொழுது ஆனாலும் இவனை வைத்து நல் முறையாக இவ்வுலகத்தை மாற்றலாம் என்று எண்ணி இறைவன் சந்தோசபட்டு அடுத்த பிறவி கொடுப்பான் என்பேன்.

அப்பனே ஒன்றை மட்டும் சொல்கிறேன் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் உந்தனுக்கு அப்பனை நீங்கள் ஒவ்வொரு ஒவ்வொருவரும் அப்பனே எவ்வாறு என்பதைக் கூட யான் தவறு செய்யவில்லை நிச்சயமாகயென்றால் இவனை(மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) திட்டித் தீர்த்துக் கொள்ளலாம் என்பேன் எந்தனக்கு ஏன்? இதைச் செய்யவில்லை? என்று.

நிச்சயமாய் இவனே பதிலளிப்பான் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக இன்னும் இன்னொரு முறையும் சொல்கின்றேன் அப்பனே ஓர் தாயவளுக்கு தன் குழந்தையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது உறுதியாக தெரியும் என்பேன் அதனால் எவ்வாறு என்பதையும் கூட குழந்தையும் மௌனமாக தான் இருக்கும் என்பேன் அது போல மௌனமாக நீங்கள் இருங்கள் இறைவன் என்ன செய்வான் என்பது இறைவனுக்குத் தெரியும்.

அப்பனே ஆனாலும் கலியுகத்தில் அப்பனே இறைவனை அன்போடு நினைத்தாலே நிச்சயம் ஏற்படுத்துவான் உதவிடுவான் அப்பனே ஏனென்றால் கலியுகத்தில் அனைவரும் திருடர்களே என்பேன்.

குருநாதர் அகத்தியர் மௌன குரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதியில் சில அகத்தியர் அடியவர்கள் கேள்விகளுக்கு பதில் வாக்கு. 

குருவே  குலதெய்வ வழிபாடு குறித்து கூறுங்கள்

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது அப்பனே நீங்கள் ஒழுங்காக இருந்தால் தான் உங்கள் குல தெய்வமும் உங்களைப் பாதுகாக்கும் என்பேன். பின் நீங்கள் ஒழுங்காக இல்லையென்றால் பின் குலதெய்வத்தை வழிபட்டு என்ன பிரயோஜனம்?? மகனே!

குருநாதரே முன்னோர்கள் வழிபாடு குறித்து கூறுங்கள்

அப்பனே முன்னோர்களின் நல் முறைகளாகவே எவ்வாறு என்பதையும் கூட முன்னோர்களின் ஆசி பெறுவது பற்றி கூறுகின்றேன். அப்பனே

அப்பனே பௌர்ணமி அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கு நல் முறைகளாக வணங்கி வணங்கி அப்பனே பல புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பேன்.

இயலாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் அவர்கள் பிழைப்பதை நினைத்து நல் முறைகளாக.

நல் முறைகள் ஆகவே அவர்களை (முன்னோர்களை) நினைத்து நீங்களே வாங்கிக் கொள்ளவேண்டும் என்று மனதில் எண்ணி நினைத்து கொடுங்கள் நல் முறைகளாக பின் அமாவாசை திதிகளில் நல் முறைகளாக காவேரி நதியில் நீராடி அப்பனே செல்லுங்கள் அப்பனே நல் முறைகளாக புண்ணிய நதிகளில், கடலில் நீராடுங்கள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன்.

குருவே பிரம்ம முகூர்த்தத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வது அதன் பலன் குறித்து கூறுங்கள்

அப்பனே பலன்களா?? அப்பனே நீங்களே தீபம் இட்டுக் கொண்டே இருங்கள் என்ன பலன் என்பதை நீங்களே அறிவீர்கள் அப்பனே.

நல் முறைகளாக

எதற்காக அப்பனே எதற்காக தீபத்தை நல் முறைகளாக பின் பிரம்ம முகூர்த்ததிலே இட்டு அதன் ஒளியை நீங்கள் பார்க்க அப்பனே நல் முறைகளாக மனதில் ஏற்ற பின் உச்சத்திற்கு செல்ல அப்பனே அனைத்தும் ஒழிந்து விடும் தீய எண்ணங்கள் தோன்றாது என்பேன் அதனால்தான் அப்பனே பின் ஏற்ற சொல்லுகின்றார்கள் அப்பனே.

குருவே மோட்ச தீபம், அமாவாசை மோட்ச தீப வழிபாடு குறித்து கூறுங்கள்.

அப்பனே எதற்காக  மோட்ச தீபம் இடுக்கின்றீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?? இறந்தவனுக்கு தான் மோட்ச தீபம் அப்பனே அதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன்.

யாங்கள் (சித்தர்கள்) அனைவரும் உயிரோடு தான் இருக்கின்றோம்.

அப்பனே நல் முறைகளாக நல் முறைகளாக உயிரோடு இருப்பவர்களுக்கு எதற்காக?? மோட்சதீபம்?? மோட்ச தீபம் ஏற்றுவதால் கஷ்டங்கள் தான் ஏற்படும் இதனையுமன்றி கர்மாவின் பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். அப்பனே மனிதனுக்குத் தெரியும் மோட்சதீபம் வீட்டில் ஏற்றக்கூடாது என்று அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் மோட்ச தீபத்தை ஏற்றினால் கஷ்டங்கள் தான் நீங்கள் படவேண்டும் உறுதியாகச் சொல்கிறேன் உங்களுக்கும் தெரிந்திருக்கும் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் அப்பனே மோட்ச தீபம் ஏற்றினால் என்ன லாபம்? என்று.

அப்பனே நல் முறையாய் இதைப்பற்றி இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே தீபம் ஏற்றுங்கள்.

எத்தனை தீபம் ஏற்றுக்கின்றீர்களோ அதற்கு தகுந்தாற்போல் உணவை அளித்திட வேண்டும் மற்றவர்களுக்கு நல்முறையாக அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது ஒன்றை.

குருவே வீட்டில் அகல் விளக்கில் விளக்கு ஏற்றலாமா குத்துவிளக்கில் வீட்டு ஏற்றலாமா??

அப்பனே நான் ஒன்றை கூறுகின்றேன் நீ உணவை உண்ணும் பொழுது மண்ணில் இட்டு உண்பாயா? எவ்வாறு என்பதை கூட அல்லது தட்டில் இட்டு உண்பாயா?? என்று கேட்கும் கேள்விகளாகவே தெரிகின்றது அப்பனே எதையாவது செய்து கொள் மனம் அன்போடு இருந்து.

குருவே தொடர்ந்து அமாவாசை தோறும் ஏற்றிவந்த மோட்ச தீபத்தை மாற்றி இறைவனுக்கு தீபத்தை ஏற்றி சாதாரண தீபமாக ஏற்றி வழிபடலாமா??

அப்பனே ஏற்றி பாருங்கள் அப்பனே நல்லவை நடக்கும் என்பேன்.

குருவே இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து வணங்கலாமா??

அம்மையே இவை எவ்வாறு நீ கூறலாம் என்பேன் ??

அம்மையே இப்பொழுது இறந்திருப்பவன் அவந்தன் பிறவியை எவ்வாறு கர்மத்தை சேர்த்திருந்தால் மறு உடம்பில் நுழைவான் பின் மறு உடம்பில் நுழைந்தாலும் மீண்டும் பிறப்புகள் எடுத்து விடுவானே இது என்ன? கேள்வி.

குருவே குடும்பத்தில் முன்னோர்கள் அவர்கள் மறைந்த தினத்தில் வழிபாடு வருடத்திற்கு ஒரு முறை செய்து வருகிறோம் இது சரியானதா??

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட கூர்ந்து கவனித்துப் பார்த்தால் அப்பனே புண்ணிய ஆன்மா இறைவனே ஏற்படுத்துவான் என்பேன். அவ் ஆன்மா நல் முறைகளாக மற்றொரு இடத்தில் பிறக்கும் என்பேன் இவை போன்று செய்தால் அவ் நல் புண்ணியங்களும் உங்களைச் சேரும் என்பேன். இது சரியானதே என்பேன்.

குருவே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரிப்பாறை என்ற தலம் உள்ளது அங்கே 6 மணிக்கு மேல் அமானுஷ்யங்கள் தாக்குகின்றன என்று வதந்திகள் உள்ளது அங்கு சென்று தியானம் வழிபாடுகள் செய்யலாமா.? 

அப்பனே இவையெல்லாம் அப்பனே மனம் மனம் ஆனாலும் அப்பனே நிச்சயம் சென்று வழிபடலாம் என்பேன் இவையெல்லாம் சென்று பார்த்தால் அப்பனே மாயை என்பேன்.

குருவே (அகத்தியரை) உங்களை வழிபட்டால் குலதெய்வம் தானாக வந்துவிடுமா?

அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே சித்தர்களை வழிபட்டால் யாங்களே உங்களை நல் முறைகளாக சிறுபிள்ளைகள் ஆகவே நல் முறைகளாக கையை பிடித்து இழுத்து செல்வோம் அப்பனே கவலைகள் விடு.

குருவே செய்வினைகள் என்று சொல்கின்றார்களே அது என்ன??

அம்மையே எவ்வாறு என்பதையும் கூட இதையும் கேட்பது சரியானதா??? ஆனாலும் அம்மையே நீ செய்யும் வினைதான் செய்வினையாக வருகின்றது.

பழிப்பவர்கள் பழிக்கட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் இந்த வார்த்தையை ஞாபகம் வைத்துக் கொள் மகளே. இறைவன் இருக்கின்றான் என்று உன் பாதையில் நீ சரியாக சென்று கொண்டு இரு.

குருவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்தின் கீழே மகா முனீஸ்வரர் இருக்கின்றார் அந்த முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் தடைபட்டு நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது கடந்த ஆறு வருடங்களாக கும்பாபிஷேகம் தடைப்பட்டுள்ளது.

அப்பனே இவை என்று கூற இதனை என்று கூற மக்கள் சரியில்லை என்று கூட மீனாட்சி தேவியே நிறுத்திக் கொண்டிருக்கின்றாள் பொறுத்திரு வழியும் விட்டு விடுவாள் அவளே.

அப்பனே இதுவும் புரிந்து கொள்ளடா இறையருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் நடக்குமென்று.

அப்பனே இதைப்பற்றி கேள்வி கேட்பதற்கு நீங்கள் யார் ?எவ்வாறு என்பதை இவ்வாறு நீங்கள் கேட்கலாம்?

இறைவன் அனைத்தும் உருவாக்கினான் பின் அவைதன் எவ்வாறு என்பதையும் கூட தன் நிலைமையை இறைவன் பார்த்துக் கொள்வான் உங்கள் நிலைமையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

குருவே சிலசமயம் நாங்கள் பூஜை அல்லது வழிபாடு செய்ய முனையும் பொழுது மனதில் வீணான குழப்பங்கள் சஞ்சலங்கள் ஏற்படுகின்றது இதற்கு என்ன செய்வது??

அப்பனே இவையன்றி கூற இவையெல்லாம் அப்பனே ஏது? என்று கூற இதனால்தான் அப்பனே யான் சொல்கின்றேன் இதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் மனது ஒரு குரங்கு என்பேன் மனது அப்படித்தான் அதை நம்பி போனால் வீணாகிவிடும் வாழ்க்கை அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே அனுதினமும் ஒரு மணி நேரம் நல் முறைகளாக தியானங்கள் செய் போதுமானது உங்கள் மனது தானாகவே மாறிவிடும் அப்பனே.

குருவே வேலை இன்மை பிரச்சினை இருந்து கொண்டே இருக்கின்றது என்ன செய்வது?

அப்பனே வேலை என்கிறார்கள் ஆனால் அப்பனே வேலை உன்னை தேடி வராது அப்பனே நீதான் தேடி செல்ல வேண்டும் என்பேன். முயற்சிகளும் செய்து கொண்டே இருக்க வேண்டும் அப்பனே. அப்பனே எவ்வாறு என்பது கூட இறைவன் எவ்வாறு என்பதை கூட இறைவன் எதையும் தரமாட்டான் என்பேன் ஆனால் அதற்குரிய முயற்சிகள் நல் மனதோடு தூய எண்ணங்களோடு அன்போடு நல் முறைகளாக இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தால் அதற்கு உதவிகரம்  இறைவன் நீட்டுவான் என்பேன்.

குருவே மக்களுக்கு ஆசி கூறுங்கள் 

பெற்றால் தான் பிள்ளையா அப்பனே அம்மையே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல் மனதாக வேண்டிக்கொள்ளுங்கள் நீங்கள் அனைவரும் நன்றாகவே இருப்பீர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் ஆசீர்வாதங்கள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................. தொடரும்!

6 comments:

  1. கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்
    கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்

    Kattankudy Mouna Guru Swamigal


    அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமரவேல் என்ற வேல்சாமி ரெட்டியார், தமது 55 வயதில் இந்த உலகியல் வாழ்வைத் துறந்து ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார் . திருப்பரங்குன்றத்திற்கு அருகிலுள்ள திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலை அவரை ஈர்த்தது . அங்கே அவருக்காக ஒரு சித்தர்களின் கூட்டமே காத்திருந்தது. அவர்களின் குரு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வேல்சாமியை வரவேற்றுத் தமது சீடராக ஏற்றுக்கொண்டார்.



    சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் தீட்சை பெற்ற வேல்சாமி அந்த மலையின் மீதே கடுந்தவம் மேற்கொண்டார்.

    “பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
    சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது”.

    அவர் தேடிய ஞானம் கிடைத்தது . அட்டமா சித்திகளையும் பெற்றார்.

    அதன் பிறகு, மதுரையில் லாலாத்தோப்பு லெட்சுமிநாராயணன் கோயில் புட்டுத்தோப்பு சாமியார் மடம் ஆகிய இடங்களில் தங்கி யோகப் பயிற்சிகள் செய்துவந்தார். இரவினில் இரு மரங்களுக்கிடையே ஒற்றை விரல் அளவுள்ள கயிற்றைக் கட்டி அதன் மீது படுத்து உறங்குவார் . சில சமயங்களில் நள்ளிரவில் மதுரை தத்தனேரி மயானத்திற்கு அருகிலுள்ள தோப்பில் தரையில் ஆசனமிட்டு அமர்ந்து யோக சாதனை மூலம் ஒரு பனைமர உயரத்திற்குச் சென்று அங்கு தியானம் செய்துவிட்டுக் கீழே வருவாராம் .

    துண்டைக் கயிறாக்கியவர்:

    தினமும் பேச்சியம்மன் படித்துறை வழியாக வைகை ஆற்றுக்குச் சென்று, அங்குள்ள உறை கிணற்றில் குளித்துவிட்டு வருவார் . அந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காகக் கயிற்றுடன் கூடிய சிறு வாளி கிடைக்காததால் சுவாமிகள் தமது துண்டை எடுத்து வாளியில் கட்டிக் கிணற்றினுள் விட்டார். அந்தத் துண்டு கயிறு போல் நீண்டு கொண்டே சென்றது. சுவாமிகள் நீர் இரைத்துக் குளித்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல் சென்றதைக் கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் திகைத்துப் போய்விட்டனர்.

    அவர் செல்லும்போது அவரது தலையில் வெயில் படாமல் ஈரத்துண்டு அவரது தலையின் மீது பறந்தபடி கூடவே செல்லுமாம். இந்தக் காலகட்டத்தில் நெல்பேட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி அலாவுதீன் ராவுத்தருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுக் கை,கால்கள் செயலிழந்துவிட்டன . அவரது நண்பர் ஒருவர் அவரை ரெட்டி சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சுவாமிகள் அவருக்குத் திருநீறு மந்தரித்துக் கொடுத்து, மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று சைகையில் கூறினார் . ராவுத்தர் அந்தத் திருநீறை நீரில் கலக்கி மூன்று நாட்கள் குடித்ததும் நோய் குணமாகியது . அது முதல் ராவுத்தர் சுவாமிகளின் தீவிர பக்தராக மாறிவிட்டார்.



    தினமும் காலை, மாலையில் சுவாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுத் தமது நெற்றியில் இட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது . சுவாமிகள் பிறந்த ஊரான கற்றங்குடியிலிருந்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுவாமிகளுக்கு ஒரு மடாலயம் எழுப்பி அவரை அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்தனர். அப்போதும் ராவுத்தர் அவர்கள் மதுரையிலிருந்து தினமும் கற்றங்குடிக்கு வந்து சுவாமிகளைத் தரிசனம் செய்துவிட்டுச் செல்வார் .

    சொன்ன நாளில் சமாதி:

    ஒரு நாள் சுவாமிகள் ராவுத்தரிடம் மூன்று விரல்களைக் காட்டி மூன்று நாளில் தாம் சமாதியாகப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு ராவுத்தர் சிறு குழந்தையைப் போல் அழுதாராம் . சுவாமிகள் கூறியபடி, அட்சய வருடம், ஆனி மாதம், ஏழாம் நாள் 21.06.1926, திங்கட்கிழமை, பூர்வபட்சம், சுவாதி நட்சத்திரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து நிர்விகற்ப சமாதியானார் . அதனை அறிந்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஆற்றங்கரை சுவாமிகள், பாளையம்பட்டி ஜமீன்தார் போன்றவர்கள் வந்து சுவாமிகளுக்கு மரியாதை செய்தனர்.

    பின்னர் சுவாமிகளை சமாதிக் குழிக்குள் இறக்கி முறைப்படி அடக்கம் செய்தனர். அதன் பிறகு, ராவுத்தர், சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது ஆலயம் எழுப்ப விரும்பினார். அதற்காகக் கற்குவாரிக்குத் தாமே சென்று கற்கள் பெற்றுவந்தார் . கற்றங்குடி மடாலயத்திலேயே தங்கியிருந்து சுவாமிகளின் ஜீவசமாதியைக் கற்றளியாக்கினார் . அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாகப் பூசைகளும் ஆண்டுக்கு ஒரு முறை குரு பூசையைப் பெரும் விழாவாகவும் நடத்தினார். பின்னர் தமது அந்திமக் காலத்தில், தமது சொத்தில் ஒரு பகுதியைச் சுவாமிகளின் மடத்திற்கு எழுதிவைத்து, அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்தினார் .



    அவரது காலத்திற்குப் பின் அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பீவி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று அனைத்து பூசைகளையும் சிறப்பாக நடத்திவந்தார்.

    ReplyDelete
  2. ஐயா சென்னை பக்கம் உள்ள கோயில் களை பற்றி எப்போது இறைவா அருள் வாக்கை கொடுப்பீர்

    ReplyDelete
  3. சித்தர்கள் அறிவோம்: கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்- சீவனுக்குள்ளே சிவமனம்

    https://www.hindutamil.in/news/spirituals/39785-.html

    ReplyDelete
  4. குரு அகத்தியர்க்கு நன்றி. உண்மையில் எங்களை போன்ற மனிதர்களை மனதில் எண்ணி எங்களுக்காக உங்கள் பொன்னான நேரத்தினை செலவு செய்து type செய்து தருகின்றீர்களே உங்களுக்கு அகத்தியர் அருவி போல ஆசி புரிய வேண்டும் என்று மனமார வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  5. ஐயா சித்த முனிவரே வீடேயில்லாத ஏழை இறைவனிடம் வீடுவேண்டும்என்பது தவறா வாழ்க்கை யேவாழாத ஒரு அபலை வாழ்கையை கொடு என்று கேட்பது தவறாஒருகுழந்தை தாயிடம் தானே இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கும்

    ReplyDelete
  6. Translation:
    https://drive.google.com/file/d/1V1N1I9SwtamtG2N7cXeBN2z7O6Dx1GdF/view?usp=sharing

    ReplyDelete