​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 January 2022

சித்தன் அருள் - 1074 - குருநாதர் அருளிய குழந்தைகளுக்கான மருத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

குருநாதர் அகத்தியர் தன்னுடைய ஒவ்வொரு பொது வாக்கிலும் எதிர்வரும் காலங்களில் புதுப்புது நோய்கள் வியாதிகள் வரும் அந்த நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள எவ்வித மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 30 விதமான மூலிகையை எடுத்துக்கொள்ள உரைத்து இருந்தார்.

அவைகளை முறையாக பயன்படுத்தி உண்டு வந்தாலே எவ்வித குறைகளும் இல்லை என்று உரைத்து இருந்தார்.

சிறு குழந்தைகளுக்கு சிறியோர்களுக்கு எவ்வித மருந்துகள் கொடுப்பது என்று குருநாதர் அகத்தியரிடம் கேள்வியாக கேட்ட பொழுது;

அப்பனே இவை என்று கூற சிறிதளவு மிளகு சிறிதளவு சீரகம் பின் நல் விதமாக பாலில் இட்டு காய்ச்சி அதனுடன் இவையன்றி கூற சிறிதளவு மஞ்சள் சேர்த்து அனுதினமும் கொடுத்து வந்தால் எவ்வித குறைகளும் வராது என்று உரைத்திருக்கிறார். 

அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குருவின் வாக்கை பின்பற்றி இதுபோன்று பின்பற்றி குழந்தைகள் அனைவருக்கும் கொடுத்து வரவும்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

3 comments:

  1. நன்றி அய்யா. சுத்தமான இயற்கையான உரலில் இடித்த மஞ்சள் தேவை என்றால் தொடர்பு கொள்ளவும். 9629496486

    ReplyDelete
  2. அய்யனே துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Annai Lobamuthirai sametha Aiyan Agathiyar Thiruvadikale Saranam..

    ReplyDelete