​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 18 January 2022

சித்தன் அருள் - 1073 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் தரும் "கடைசி வாய்ப்பு"!


""" கடைசி வாய்ப்பு """

17/01/2022 அன்று பௌர்ணமி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

ஆதி சிவனின் திருத்தாள் போற்றி!!!! போற்றியே!! உந்தனை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.

அப்பனே வரும் வரும் காலங்களில் சிறப்புக்கள் இல்லை அப்பனே.

மனிதர்களுக்கு ஒவ்வொரு விதமாக கஷ்டங்கள் வாட்டும் என்பேன் அப்பனே.

இவையன்றி கூற ஆனாலும் அப்பனே மனிதன் இனிமேலும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்பனே அழிவுகள் தான் பலம் என்போம். 

அப்பனே சித்தர்களும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் மனிதனை காக்க.

ஆனாலும் மனிதன் அப்பனே தன் சுயநலத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

இப்படி வாழ்ந்தால் அப்பனே எப்படி?? நன்மைகள் நடக்கும் என்பதைக்கூட அதனால்தான் அப்பனே யான் பல மனிதர்களுக்கும் வாக்குகள் உரைப்பதில்லை அப்பனே.

இவையன்றி கூற அப்பனே இனிமேலும் சுயநலத்திற்காக எதையும் கேட்காமல் அப்பனே இறைவனே நீ !!நீயே என்று பின் நல் விதமாக நல் மனசாட்சியோடு பின் வருபவர்களுக்கே எந்தனது வாக்கு சித்திக்கும் என்பேன். அப்பனே.

அப்பனே ஒழுக்கங்கள் இல்லை

அப்பனே வரும் காலங்களில்.

அப்பனே சித்தர்கள் யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே.

அப்பனே இதுபோலவே பின் போய்க்கொண்டு இருந்தால் அப்பனே அனைத்தும் அழிந்துவிடும் என்பேன்.

அப்பனே புதுப்புது வியாதிகள் அப்பனே நோய்கள் அப்பனே விதவிதமான கஷ்டங்கள் இவையெல்லாம் மனிதனுக்கு வரும் என்பேன்.

ஆனாலும் எதையும் எதிர்பார்க்காமல் அப்பனே நல் விதமாக எங்களையும் நல் விதமாகவே வணங்குபவர்களுக்கு அப்பனே யாங்களே வழி நடத்துவோம்.

ஆனாலும் புரியாமல் புரியாத மனிதர்கள் பொய்யான மனிதர்கள் 
தரித்திர மனிதர்கள் தரித்திர மனிதன் அப்பனே இவையன்றி கூற அப்பனே மனிதனை பார்த்தால் சித்தர்களுக்கெல்லாம் கோபம்தான் வருகின்றது என்பேன் அப்பனே.

அப்பனே மனிதர்களின் லீலைகள் அப்பனே சொல்லப்போனால் அப்பனே கருமமடா!!!! தரித்திரமடா!!!!

இவையெல்லாம் எவை என்று கூற அப்பனே ஒழுங்காக இறைவன் படைத்துவிட்டான் மனிதனை இவையன்றி கூற ஆனாலும் மனிதன் என்னவோ மாயைகளில் சிக்கி கொண்டிருக்கின்றான்.

அப்பனே பரிகாரங்களும் வரும் காலங்களில் பலிக்காது என்பேன்.

எதனால் என்பதைக்கூட அப்பனே நீ ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே அப்பனே முதலில் இவையன்றி கூற அதை தான் யாங்கள் முதலில் சொல்வோம்.

அப்பனே இவையெல்லாம் நிச்சயமாய் என் பக்தர்களுக்கு போய் சேர.

அப்பனே ஆனாலும் தேடிக்கொண்டுதான் தேடிக் கொண்டுதான் அப்பனே இருக்கின்றோம்.

ஆனாலும் மதிப்பதில்லை சித்தர்களின் வாக்குகளை அப்பனே.

இதை ஏன்?? சொல்லிக் கொண்டு இருக்கின்றேன்.

இவை செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் என்பதெல்லாம் பொய்யாட்டம்!! பித்தலாட்டம்!! அப்பனே.

அப்பனே வீணாக தண்டனைகள் பெற வேண்டாம் என்பேன் அப்பனே.

மனிதனுக்கு கடைசி ஒரு வாய்ப்பை யான் தருகின்றேன்.

திருந்துங்கள்!!! திருந்துங்கள்!!! திருந்துங்கள்!!!

அப்பனே திருந்தாவிடில் ஈசனே அடித்து விடுவான் என்பேன்.

அப்பனே வரும் காலங்களில் அப்பனே எவை என்று கூற அப்பனே நல்லவையே நடக்காது என்பேன்.

அப்பனே மனிதர்களுக்கு.

அப்பனே என் பேச்சைக் கேளுங்கள்.

அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே மனிதன் இப்படி வாழ்கிறானே!!!? என்றுகூட யாங்கள் பலமுறை வருத்தங்கள் வருத்தங்கள் வருந்திக் கொண்டே இருக்கின்றோம்.

அதனால்தான் அப்பனே இப்புவியில் இறங்கி வந்தோம்.

ஆனாலும் மனிதன் அப்பனே பொய்யான வார்த்தைகள் சொல்லி சோதனைகள் இறைவனே இல்லை என்ற நிலைமை சித்தர்களே பொய் என்ற நிலைமை அனைத்தும் பொய் என்ற நிலைமை.

அப்பனே உருவாக்குகின்றான். அப்பனே திருத்தலங்கள் பலப்பல !!!அப்பனே அதில்கூட அப்பனே வருமானங்கள் ஈட்டுகின்றான் அப்பனே.

எப்படி? நல்லது நடக்கும்???!!!

அப்பனே உண்மையானவர்களை யாரும் கண்டு கொள்ளுவதில்லை அப்பனே.

பொய்யானவர்களைத்தான் தேடி சென்று அப்பனே பணம் வரும் என்று கூட எவ்வாறு என்பதை அப்பனே என் பக்தர்கள் ஒன்றிணைய வேண்டும்.

அப்பனே இவ்வாறு இணைக்கா விடிலும் அப்பனே நிச்சயம் யானே கஷ்டங்கள் ஏற்படுத்துவேன் அப்பனே.

என் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் அப்பனே.

அன்பு கருணை மிகுந்தவன் அகத்தியன்.

ஆனாலும் அதை மீறி அப்பனே என்னையே வணங்கிக்கொண்டு அப்பனே தரித்தராட்டங்கள் பித்தலாட்டங்கள் இவையெல்லாம் செய்கின்றனர்.

நியாயமா???? அப்பனே!!!

சிறிது மனசாட்சிக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள்.

அப்பனே நீ ""மனிதன்"" இல்லை!!!

அப்பனே நீ மாயையில் அழியக் கூடியவன்.

அதை மட்டும் தெரிந்து கொள்.

உணர்ந்து கொள்.

அப்பனே இவையெல்லாம் அப்பனே எவை ??என்று கூற!!! கூற!! 

அப்பனே கலியுக கடவுள்கள் அப்பனே முருகனும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்.

பக்தர்கள் இருக்கட்டும் இருக்கட்டுமென்று.

ஆனாலும் இவையன்றி கூற "இன்னொருவன் வருவான் !!!எவ்வாறு என்பதைக்கூட ""மணிகண்டன்"" இவ்வாறு என்பதைக் கூட அவந்தனும்  அப்பனே நிச்சயமாய் அடித்து விடுவான். எவ்வாறு என்பதை கூட ஒழுக்கம் இல்லாமல் அப்பனே பெண்களும் சரி!!! ஆண்களும் சரி!!!.

அன்பு காட்டுங்கள் அப்பனே இவையன்றி கூற ஒழுக்கமற்று வாழ்கின்றான் அப்பனே .

 ஒழுங்காக பக்தியை கடை பிடிப்பதும் இல்லை

அப்பனே நீங்கள் ஒன்றை யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒழுங்காக பக்தியை கடைப்பிடித்தால் இவ்வுலகத்தில் அப்பனே உங்களால் அனைத்தும் மாற்ற இயலும் அப்பனே.

வரும் வரும் காலங்களில் அப்பனே இவையன்றி ன்று கூற நீங்கள் ஒழுங்காக வாழ்ந்துவிட்டால் யாங்களே  சித்தர்களே அப்பனே கையைப் பிடித்து இழுத்து செல்வோம்  அப்பனே. அதனை மேற்கொண்டால் .

நீங்கள் உங்கள் சுய நலத்திற்காக வேண்டினால் அப்பனே ஒன்றை உரைக்கின்றேன் அப்பனே நீ அப்பனே மாயை !!

திருமணம் செய்து கொண்டாய்  அது ஒரு மாயை.!!

அப்பனே பிள்ளையைப் பெற்றுக் கொண்டால் அது ஒரு மாயை அப்பனே அதனால் அப்பனே நீ கேட்கின்றாயா?? என்னை!! அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் மாயைதான்.

அற்ப சுக வாழ்க்கைக்காக மனிதன் அழிந்து கொண்டு இருக்கின்றான்.

ஆனாலும் இவை என்று கூற அப்பனே சொல்கின்றேன் அனைத்தும் செய்துவிட்டு இறைவா என்று இருந்தால்
 முட்டாள்  மனிதனே!! தரித்திர மனிதனே!! இறைவன் என்ன?? உன் கைக்கூலியா????

அப்பனே திருந்தி கொள்ளுங்கள்.

அப்பனே எதையும் எதிர்பாராமல் இறைவா என்று இருங்கள்.

அனைத்தும் உந்தனக்கு வழங்குவான் என்பேன் அப்பனே.

அப்பனே பொய்யான பக்திகள்.

அப்பனே இப்பூலகத்தில் யான் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன்.

நல்லவர்கள் இல்லையப்பா.

அப்பனே நல்லவர்களை  தேடிக்கொண்டே இருக்கின்றேன் யான்.

ஒருவன் கூட நல்லவன் இல்லையப்பா.

என் பெயரைச் சொல்லி ஏமாற்றி ஏமாற்றுகின்றான் அப்பனே.

இவையெல்லாம் யான் விட்டு விடப் போவதில்லை அப்பனே.

சித்தர்களே அப்பனே இவையன்றி   கூற அப்பனே சில மனிதர்கள் மருத்துவத்திற்காக போராடுகின்றனர் சித்த மருத்துவத்திற்காக.

போகனும்(போகர் சித்தர்) கோபத்தில் இருக்கின்றான்.

இதை வைத்துக் கொண்டு எதை எதையோ தேடிச் செல்கின்றானா என்பதற்கிணங்க
போகன் அருள் இல்லாமல் எவ் வகை மூலிகையும் பலிக்காது என்பேன்.

அப்பனே இவையன்றி  கூற அப்பனே இன்னொரு முறையும் சொல்கின்றேன் செல்லமாக!!!!

திருந்துங்கள் அப்பனே!!!!

எவை என்று கூற தரித்திர வாழ்க்கைக்கு மனிதன் என்னென்னவோ செய்து வருகின்றான்.

அப்பனே உண்மை இல்லையப்பா, மனிதர்களிடத்தில்.

அப்பனே தன் நிலைகள் உயரவேண்டும் தன் தன் இனத்திற்கு இனம் சேர வேண்டும் புகழ் சேர வேண்டும் ஆனாலும் அனைத்தும் அழியக் கூடியது தான் கேட்கின்றான் மனிதன்.

அப்பனே உண்மைப்பொருள் தான் உலகத்தில் நிரந்தரமானது இறை அருள் என்பேன்.

அவ் இறையின்  அருளைப் பெற மனிதனே நீ கடுமையாக உழைக்க வேண்டும்.

அப்பனே பணம் சம்பாதிப்பதற்கு நீ கடுமையாக உழைக்கின்றாய். 

ஏன்??  இறைவன் அருளைப் பெறுவதற்கு நீ கடினமாக உழைப்பது இல்லை????

அப்பனே இறைவனை வணங்கி வந்தால் இறைவனை வணங்கினால் நிச்சயம் கஷ்டம் இதுதான் அப்பனே இவ் கஷ்டத்திலும் இறைவா இறைவா என்று உணர்ந்து கொண்டே இருந்தால் நிச்சயம் இறைவன் இறை பலங்கள் அதிகரித்து இறைவன் மூலமாக அனைத்தும் செய்து வைப்பான் உந்தனுக்கு.

நல் விதமாகவே உந்தனுக்கு எது தேவை என்று அதை விட்டுவிட்டு பொருள்கள் தேடிச் சென்றால் பணத்தின் பின்னே சென்றால் பணம்தான் அழிவிற்கு காரணம் என்பது. அதுவே உன்னை அழித்துவிடும்.

சுகத்திற்காக சென்றால் அவ் சுகமே உன்னை அழித்துவிடும்.

அப்பனே சுகத்திற்காக வாழ்பவன் மனிதன். ஆதலால் சுகத்தின் மூலமே அழிவு ஏற்படுகின்றது என்பதை சிறிது சிந்தித்துப் பார் அப்பனே.

அப்பனே நிச்சயம் இக்கலியுகத்தில் நல்லவை நடக்காது நடக்காது என்பேன். 

ஏனென்றால் அப்பனே பொய்யான மனிதனப்பா மனிதனுக்கு புத்தியும் போய்விட்டது அப்பனே.

திருடனப்பா திருடனப்பா மனிதன்.

திருடன் திருடன் காரியும் துப்புவேன் மனிதனை.

அப்பனே இல்லை ஒழுங்கு இல்லை மனிதன்.

அப்பனே ஆனால் சித்தர்கள் மனிதர்களுக்கு நல்லது செய்விக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் நிச்சயம் நல்லது செய்வோம் செய்வோம்.

ஆனாலும் தரித்திர மனிதன் அப்பனே லீலைகளை பார்த்தால் அப்பனே!!!

மனதில் உள்ள குறைகள் அப்பனே அனைத்தும் நீங்கும் அப்பனே அப்படி பக்தியாக நடித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

திருந்திக்கொள் வேண்டாம் அப்பனே.

யாங்களே நோய்களை உருவாக்குவோம். இவை போன்று இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

அப்பனே என் பக்தர்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.

பொய்யான பக்தர்களப்பா.

அகத்தியா அகத்தியா என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றுவார்களப்பா.

ஏமாற்றி பணம் பறித்து அப்பனே தன் சுகத்திற்காக திரிகிறார்களப்பா தேவையா இது மானங்கெட்ட மனிதா பொய் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்துதல் வேண்டாம் வேண்டாம் என்பேன்.

சித்தர்களை சீண்டி பார்க்காதீர்கள்.

நிச்சயம் தரித்திர மனிதா வேண்டாம் என்பேன்.

மனிதனை இனிமேலும் எவை என்று கூற மனிதன் நலமாக பிறப்பதற்கு எவ்வாறு என்பதை கூட பல ஞானியர்கள் வந்து மனிதனை இப்படிச் செல்!! அப்படிச் செல்!! என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் மனிதனோ யாரோ!? சொல்லி விட்டு போனால் நம்தனக்கு என்ன?? என்று தான் இருக்கின்றார்கள்.

அதனால் இனிமேலும் யாங்களே வந்து நிச்சயமாய் மனிதனுக்கு கஷ்டம் தான் கொடுப்போம் கொடுப்போம் இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள் என்று கூட யாங்களே சொல்வோம் கடைசியில். நீ ஒழுக்கமாக இருந்தால்.

அப்பனே எவை என்று கூற உந்தனக்கு ஏனடா?? இவ்வேலை??

மனிதனாக பிறந்தாயா!! வாழ்ந்தாயா!! சென்று விடு.

அதை விட்டுவிட்டு எதை எதையோ தெரிந்துகொண்டு கடைப்பிடிக்கின்றியே கருமம் பிடித்த மனிதா!! தரித்திர மனிதா!!

வீண் என்பேன் அப்பனே.

எவை என்று கூற அப்பனே உண்மை இல்லாமல் சில பூஜைகள் அனைத்தும் வேண்டாம். வேண்டாம் என்பேன்.

அன்புடன் செய்து வாருங்கள்.

ஆனால் அன்புடன் செய்து வருவது எவரப்பா??

எவரப்பா?? என்பேன் தன் தன் சுயநலத்திற்காகவே செய்து வருகின்றார்கள்.

அப்பனே ஒன்றைச் சொல்கிறேன் அடுத்தவரிடத்தில் அப்பனே அதைக் கொடு இதைக் கொடு என்றெல்லாம் அப்பனே உன் புத்தி எங்கேயடா!!!

அப்பனே உனக்கும் அனைத்து அருள்கள் கொடுத்திருக்கின்றேன்.

அப்பனே நீயும் முயற்சி செய்து அப்பனே உன்முயற்சியால் செய்த தர்மங்கள் தான் கடைசி வரையில் வரும் தர்மம் தலை காக்கும்.

அப்படி இல்லாமல் அப்பனே அனைவரிடமும் இருந்து பெற்று அப்பனே செய்தால் கர்மம் தான் உன்னை பிடித்துக் கொள்ளும்.அப்பனே. 

தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே.

அதைச் செய்தால் இவை நடக்கும் இதைச் செய்தால் அது நடக்கும் அப்பனே பொறுத்து பொறுத்து பார்த்து கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே.

வேண்டாம் அப்பனே தரித்திரம்.

அப்பனே பார்த்துக்கொண்டே இருப்பது கலியுகத்தில் யாங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே.

அப்பனே இவையன்றி கூற இன்னும் பல பல வழிகளிலும் கிரகங்களும் அப்பனே மனிதர்களுக்கு தீங்கு தான் செய்யும் என்போம்.

அப்பனே  அதனால் குரு பலம் வந்து விட்டது இவ் ராசிக்கு நலம்.அவ் ராசிக்கு நலம் என்பதெல்லாம் பொய்த்துப் போகும் என்பேன்.

அப்பனே எதனை என்று கூற இறைவன் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா???

அப்பனே நிச்சயம் ஈசன் ஒரு பாடத்தை நடத்துவான் என்பேன்.

நடத்தி இவ்வுலகத்தை நிச்சயம் அழிப்பான் என்பேன் அப்பனே.

தெரிந்துகொள்ளுங்கள் ஈசன் அழிப்பான்!! அழிப்பான்!! அழிப்பான்!! என்பேன். 

அப்பொழுதுதான் சில விஷயங்கள் நல்லோருக்கு தெரியவரும் நல்லோர்கள் வாழ்வார்களப்பா.

நல்லோர்கள் அப்பனே உறங்கி கிடக்கின்றார்களப்பா.

அப்பனை இவையன்றி கூற நிச்சயமாய் தீயவர்களை ஈசனே தன் நடனத்தால் அழிப்பான் அழிப்பான். இவைதான் நடத்த போகின்றது. 

அப்பனே ஈசன் திருத்தலத்திலே யான் பல திருத்தலங்களும் இப்போதுகூட போய்க் கொண்டே இருக்கின்றேன்.

பொய்யான பக்தியப்பா.

மந்திரங்கள் கூட சொல்லிக்கொண்டே  கோபத்தை உருவாக்குகின்றான்.

இறைவனா இல்லை இறைவன் இறைவனுக்காவது பயப்பட வேண்டும்.

ஆனால் இறைவனுக்கே பயம் இல்லை எதை என்று கூற இவ்வாறு அங்கு சென்றால் அவ் அருள்கள்  ஏற்படும் என்பது கருத்து. மனிதனுடைய கருத்து.

அவையெல்லாம்  வீணப்பா.வீணப்பா முதலில் நீங்கள் திருந்துங்கள் சரியான வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டால்.

அப்பனே இனிமேலும் என்னை எவை என்று சுகம் வேண்டும் பணம் வேண்டும் இவ்வாறு அனைத்தும் நடக்க வேண்டும் என்றெல்லாம் என்னிடம் கேட்கக்கூடாது.

அப்பனே நீ ஒரு கனவு அப்பனே நீ அதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே எவை என்று கூற கனவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்.

அப்பனே அழிவு களிலே அழிந்துவிடும் மனிதன் கனவு இதுதானப்பா விதி.

இதை வைத்துக்கொண்டு சிறிது காலத்திற்கு வாழ்ந்து பணத்திற்காக சில காலம் சுகத்திற்காக சில காலம் சண்டை களுக்காக சில காலம் நோய்களுக்காக சிலகாலம் இவையெல்லாம் அப்பனே வீண்  என்பேன் அப்பனே. 

அப்பனே யானும் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றேன்.

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் நன்றாக அப்பனே. 

இன்னும் பல உரைகளில் யான் உரைக்கின்றேன் அப்பனே.

நீ ஒழுங்காக வாழ்ந்து வந்தால் அப்பனே நான் உன் கையைப் பிடித்து அழைத்து செல்வேன்.

உந்தனக்கு என்ன வேண்டும் என்று கூட யான் அழகாக செய்வேன்.

ஆனால் அப்பனே அவையெல்லாம் இல்லையப்பா.

யாங்கள் தேடிக் கொண்டே இருக்கின்றோம். நல் மனிதர்கள் இருக்கின்றார்களா என்று.

போட்டிகள் பொறாமைகள் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்.

என்னை வணங்குபவர்களில்  அப்பனே யான் பெரியவன் நீ சிறியவன் யான்தான் அகத்தியனுக்கு சிறந்தவன் என்றெல்லாம் அப்பனே வருங்காலமாக ஆகிவிட்டார்கள் என்பேன்.

அதனையும் வேரோடு அழிப்பேன்.

அப்பனே சித்தர்கள் யார் என்று வரும் காலங்களில் காண்பிப்போம்.

ஆனால் கஷ்டங்கள் வைத்துத்தான் காண்பிப்போம் என்பேன்.

அப்பனே கலியுகத்தில் அப்பனே யாங்களே வந்துவிட்டோம்.

அப்பனே இனிமேலும் அப்பனையே ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்பனே யாங்களே அழைத்துச் செல்வோம் என்பது மெய்.

அப்பனே இன்னும் பல வாக்குகள் வாக்குகளும் உண்டு என்பேன்.

ஆனால் மனிதன் திருந்துவதாக இருந்தால் அப்பனே நிச்சயம் யாங்களே வந்து அழைத்து செல்வோம் அழைத்துச் செல்வோம் என்போம்.

நல் விதமாகவே மற்றொரு வாக்கும் சொல்லுகின்றேன் அப்பனே இன்னும் சில சித்தர்கள் வந்து சொல்வார்கள் சொல்வார்களப்பா.

 சித்தர்கள் அப்பனே வாக்குகள் கேட்டு நல் முறையாக நடந்து விட்டால் அப்பனே பெருவாழ்வு வாழ்ந்திடலாம் அப்பனே.

முக்திக்காகவும் யாங்கள் அழைத்துச் செல்வோம்.

அப்பனே வேண்டாம் வேண்டாம் அப்பனே பொய்யானவை தேடிப்போக வேண்டாம் அப்பனே என்பேன்.

அப்பனே வரவர பலப்பல கெட்டவைகளும் இவ்வுலகத்தில் நடக்குமப்பா .

அப்பனே யான் முன்னே சொன்ன மூலிகைகளையும்  சரியான முறையில் எடுத்துக் கொள்ள ஒரு வியாதியும் வராது என்பேன்.

அதைக் கூட மனிதனுக்கு பயன்படுத்த தெரியவில்லை அப்பனே. 

இது என் பக்தர்களுக்கு நிச்சயமாய் சென்றிட வேண்டும் அப்பனே  அனைவரும் தெரிந்து கொண்டு நலமே பாரிக்க.

அப்பனே மீண்டும் வந்து உரைக்கின்றேன் அதற்குள்ளே ஒர் சித்தனும் வந்து உரைப்பான் என்பேன்.

ஓம்  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

12 comments:

  1. தத் புருஷாய வித்மஹே சிவபுத்ராய தீமஹீ தந்நோ அகஸ்திய சித்த ப்ரஜோதயாத்
    ஓம் அகத்தியர் திருவடிகளில் சரணம்
    ஓம் அகதீசாய நம

    ReplyDelete
  2. om sri Lobamudra samedha Agasthiyarae saranam
    Om sri Lobamudra samedha Agasthiyarae saranam
    Om sri Lobamudra Samedha Agasthiyarae Saranam
    Divine should save the Humanity
    Netru kooda Agathiyar nal vazhiyai kattinar in sithanarul
    inru ane intha thidir kobam theriyavillai
    May be the temples are closed on saturday, Sunday and festival days
    so much of hurdles in doing good things, manithan manithanai thandikirane
    Society containjs both good people and bad people, its hard to bring up the children in a good way as they attend internet classes and sparing the time in social media due to android phones, don't Know the importance of GOD and Worship. Its very difficult to bring the younger generation to make understand and make them to walk in the god path. God only should give them spiritual Knowledge. No education teaches them this things and only giving impoortance to the marks and the ways to attain wealth.
    Human should satisfy with what he gets and lead a contend life. But human is so greedy not satisfied with what he gets he needs needs is increasing may be to make a show off

    ReplyDelete
    Replies
    1. You are right. I FEEL THE CHANGE HAS TO START FROM WITHIN US.

      Delete
  3. 1.யார் திருந்துவார்கள்.உங்களால் யாரை திருத்த முடியும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு அகத்தியரே. பூமியில் உலா வரும் போது சென்னை பக்கம் தப்பிகூட வந்து விடாதீர்கள். அப்புறம் இவ்வளவு நல்லவர்கள் சென்னையில் உள்ளார்களா என்று உங்களுக்கு சந்தேகம் வரும்.எதற்காக மறுபடியும் திருந்து திருந்து என்று தொண்டையில் புண் வரும் அளவிற்கு கத்திக் கொண்டு இருக்கிறீர்கள். எங்களுக்கு தேவை நல்வாக்குகள்.ஜீவ சமாதி வாக்குகள். கோவில் பற்றிய வாக்குகள் மற்றும் எத்தனை கிருமி வந்தாலும் துரத்த மூலிகை மருத்துவம். இது போதும் சித்தன்அருள் வாசகர்களுக்கு... கெட்டவன் எதுக்கு சித்தன்அருள் படிக்க போகிறான்.கெட்டவனால் உங்கள் பெயரை உச்சரிக்க முடியாது. அதனால் நாங்கள் தங்களிடம் கேட்பது உங்க கருணை மட்டுமே... நல்லவர்களை வாழ விடுங்கள். வாழவையுங்கள்..உங்க கிட்ட பொன் பொருள் புதையல் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கு உங்க பக்தர்களுக்காக ஏன் மௌனகுரு சித்தர் ஜீவ சமாதி பற்றி சொல்லி அவர் 8 மணிக்கு கண்திறக்கும் தெய்வ ரகசியத்தை ஏன் சொன்னீர்கள் அகத்தியரே.? நாங்கள் அதைபடித்து அவரை தரிசனம் செய்ய தானே.இந்த மாதிரி நல்வாக்கு தான் எங்களுக்கு வேண்டும்..கெட்டவனை பற்றி விடுங்கள். திருந்தாத ஜென்மம் இருந்து என்ன லாபம்? நாங்கள் அகத்தியர் குழந்தைகள். எங்களை இந்த பூமியில் பெற்று போட்டு விட்டு அப்படியே போகலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.உங்க குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை நல்வாக்கு கள் கொடுங்கள் .அது போதும் எங்களுக்கு. அதற்காக நாங்கள் காத்துகொண்டு இருக்கின்றோம். தவறு எனில் மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. அப்பனே அகத்தியா நீ விரும்பிய படி என்னை மாற்றி ஆட்கொள்வாய் அருள்வாய் அரவணைப்பாயாக. நீயே துணை. உன் பாதம் சரணம். ஓம் அகத்திசாய நம!

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  6. "மணிகண்டன்" - தர்ம சாஸ்தா போற்றி போற்றி
    முருகனே அழகனே போற்றி போற்றி

    கலியுக தெய்வமே கலி அகற்றிடுவாய்
    எங்கள் நாயகனே நஞ்சு அகற்றிடுவாய்
    நிமலனே நிர்மலம் ஆக்கிடுவாய்

    ReplyDelete
  7. சித்த பெருமான் காரிதுப்பி அந்த எச்சில் பட்டாவது இந்த மனித சமூகம் புனித ம் அடையட்டும் இவ்வளவு கோபமாக சில மைந்தர் பேசியதே மில்லை ஐயனே பிழைபொருத்தருள வேண்டும்

    ReplyDelete
  8. ஐயா ஒரு மனிதன் கூட நல்லவர்கள் இல்லை என்றால் தங்களின் அருள் வாக்கை படித்து படித்து படித்து அசைவபிரியவர்களை சைவமாக மாற்றி மகா கெஞ்சனையும்தானதர்ம வழியில் சென்று கொண்டிருக்கிறோம் ஐயா இதையும் கொஞ்சம் கண்டெடுத்து பாரும் ஐயா

    ReplyDelete
  9. Translation:
    https://drive.google.com/file/d/1wQ8fouT6kI0HHHyT3_CQX2A1AsgcT4AH/view?usp=sharing

    ReplyDelete