​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 25 September 2020

சித்தன் அருள் - 923 - ஆலயங்களும் விநோதமும் - பெரும்திருக்கோவில், அலத்தியூர், திரூர், மலப்புரம் மாவட்டம், கேரளா!


அலத்தியூர் பெரும் திருக்கோயில், ராமர் மட்டும் தனியாக இருக்கிற கோவில் என்றாலும், அவருக்கு அருகில் தனி சன்னதியில் பவ்யமாக நின்று செவிமடுக்கும் தோரணையில் நிற்கும் அனுமன் பெயரில் தான் மிக பிரசித்தம்.

இந்தக்கோவில், ராமர் மூலஸ்தானத்தில் தனியாக அமர்ந்திருக்கிறார். அவர் முக பாவனை காணவேண்டிய ஒரு அதிசயம். ஆம்! சீதையை தேடிப் போகப்போகிற அனுமனிடம், ரகசியமாக சில விஷயங்களை, சங்கேத மொழியை, பிறர் யாரும் கேட்காத நிலையில், கூறுவது போலவும், பக்கத்து சன்னதியில், அனுமன் கைகட்டி, சற்றே தலை சாய்த்து நின்று கேட்டுக் கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.

வசிஷ்ட முனிவர் இந்த கோவிலை கட்டி ராமர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.

இங்கு இருக்கும் அனுமன் மிக வரப்பிரசாதி. குழந்தைகளின் காவலன்- துர்ஸ்வப்னம், மூளை சம்பந்தமான பிரச்சினைகள் விலக்கி, மனோபீஷ்டம் போன்றவைகளை நிறைவேற்றுபவர்.

சரி! நமக்கு இங்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது!

மூலஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராமபிரானின் ரகசியம் உரைக்கிற முகபாவம்.

பவ்யமாக கைகட்டி, தலை சாய்த்து ராமர் கூறுகிற ரகசிய மொழியை கேட்கிற அனுமனின் நின்ற கோலம்.

குழந்தைகளின் மனநிலை நன்றாக அமைய அனுமனிடம் வேண்டிக்கொள்ளலாம்.

அனுமன் கடலை தாண்டியதின் மூலம் பிரச்சினைகள் விலகியது போல், நம் வாழ்விலும் மனோபீஷ்டங்கள் நிறைவேற, இந்த கோவிலில் இருக்கும் ஒரு பாறாங்கல்லை தாண்டினால், அதை தாண்டுபவரின் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் விலகும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

5 comments:

  1. Ram Ram sri Ram
    Om lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தியர் திருவடிகள்
    சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

    ReplyDelete
  3. ஸ்ரீ ராம ஜெயம்

    ReplyDelete