​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 13 September 2020

சித்தன் அருள் - 911 - ஆலயங்களும் விநோதமும் - ஆற்றுக்கால் பகவதி கோவில், திருவனந்தபுரம்!


ஆற்றுகால் பகவதி கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

இக்கோவிலில் தெய்வமாக இருப்பது கண்ணகி (பார்வதி) ஆகும். கண்ணகி கோவலனின் கொலைக்கு மதுரையில் நீதி கேட்டபின் இங்கே ஆற்றுக்காலில் சிறுமியாய் அவதரித்து ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் ஆற்றைக் கடக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறாள். பெரியவரோ, சிறுமி தனியாய் இருப்பதை அறிந்து அன்புடன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். வீட்டிற்குச் சென்றதும் மாயமாய் மறைந்த சிறுமி, பின்னர் பெரியவரின் கனவில் வந்து தனக்கு கோயில் கட்டுமாறு சொல்கிறாள். அதனால் கட்டப்பட்டதே இக்கோவில் என்பது தலவரலாறு ஆகும்.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலின் முக்கிய நிகழ்வும் இத்திருவிழாவே ஆகும். இப்பொங்கல் விழாவில் சுமார் 15 லட்சம் பெண்கள் ஒரே நாளில், பொங்கல் போடுவதற்காக கலந்து கொள்வர். முதல் நாளும் அன்றைய தினமும் மொத்த நகரமும் இவர்களுக்கே சொந்தம். இந்த பொங்கல் படையலை போடுபவர்களின் பிரார்த்தனையை, அன்னை உடனேயே நிறைவேற்றி வைக்கிறாள். அன்றைய தினம் பொங்கல் போடுபவர்களையும், பக்தர்களையும் சோதனைக்கு உட்படுத்த, அன்னை இறங்கி நடப்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இத்தனை பேர்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடி இருக்கும் நிலையினால், கின்னஸ் புத்தகத்தில் "ஆற்றுகால் கோவில் பொங்கல் திருவிழா" முதன்மை ஸ்தானத்தில் உள்ளது.

சரி! இங்கு நமக்கு என தெரிந்து கொள்ள என்ன உள்ளது?

மேற் சொன்ன பொங்கல் படையல் திருவிழாவின் போது, முதல் பொங்கல் போடுகிற அடுப்பு கோவில் சார்பாக, அம்பாள் சன்னதியில் இருக்கும் விளக்கிலிருந்து அக்னியை கொண்டு வந்து, பூஜாரி ஏற்றுவார். அந்த அக்னி பின்னர் பலருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். அன்னை சார்பாக இடப்படுகிற அந்த பொங்கல் நிவேதனத்துக்குப்பின் வெளியே வராது. அது கிடைப்பது மிக மிக புண்ணியம்.

அந்த திருவிழாவில், அன்னையின் அடுப்பிலிருந்து, அக்னி விலகியதும், படையலின் முடிவில், அடுப்பினுள் இருக்கும் "சாம்பலை" பிரசாதமாக கிடைக்கப்பெறுவது மிக உயர்ந்த பாக்கியம். கடந்த இரண்டு வருடங்களாக, ஒரு நண்பரின் வழி அது கிடைக்கப் பெற்றேன்.

இந்த கோவிலில் மண்டை புற்று என ஒரு நிவேதனம் உள்ளது. மூளையில் நோய், மனநிலை பாதிப்பு, மூளையில் கட்டி என உள்ளவர்களுக்கு வேண்டிக்கொண்டு, அன்னைக்கு படைத்திட, அதுவே பிரசாதமாக திருப்பி கொடுக்கப்படும். அதை, உண்பவர்களுக்கு நோய் விலகும்.

அன்னையின் பாதத்தில் அர்ச்சனை செய்த குங்குமம், அத்தனை மகத்துவமானது. திருஷ்டி தோஷங்களை விலக்கிவிடும். குழந்தைகளுக்கு நோய்நொடி வராமல் காப்பாற்றும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

8 comments:

  1. ஆட்டுக்கால் அம்மா சரணம் தேவி சரணம்

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

    ReplyDelete
  2. ஆற்றுகால் அம்மா சரணம் தேவி சரணம்

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om lobha mudra thayar samedha agasthia peruman thiruvadigale potri.

    ReplyDelete
  4. ஓம் ஸ்ரீ மாதா லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  6. அம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா பத்ரி நாராயணா ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete