​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 13 May 2016

சித்தன் அருள் - 323 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!

"விதியே ஒருவனை தவறு செய்யத் தூண்டினாலும், பிரார்த்தனையின் பலத்தால், ஸ்தலயாத்திரையின் பலத்தால், புண்ணிய நதியில் நீராடுகின்ற பலத்தால், தர்ம செயலை செய்கின்ற பலத்தால், ஒரு மனிதன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, சினமோ வேறு தகாத எண்ணங்களோ எழும் போதெல்லாம், இறை நாமத்தை ஜபித்து, ஜபித்துத்தான் அதிலிருந்து வெளியே வரவேண்டும். இல்லையில்லை, விதிதான் என்னை இவ்வாறு தூண்டுகிறது, என்று பலகீனமாக இருந்துவிட்டால், அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்!" - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

1 comment: