​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 9 May 2016

சித்தன் அருள் - 321 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"இறைவன் அருளைக் கொண்டு கூறும்பொழுது, இஹுதொப்ப மனிதர்கள் செய்கின்ற செயல்கள் அனைத்திற்கும் எந்த உடல் எடுத்து எந்த காலகட்டத்தில்  மனிதன் அதனை செய்கிறானோ, அவன் தான் பொறுப்பு. இருந்தாலும், நற்செயலை செய்யும் பொழுது "இது சிவார்ப்பணம்" என்றும், "தேவார்ப்பணம்" என்றும், "அசுரார்ப்பணம்" என்றும், "சித்தார்ப்பணம்" என்றும் செய்வது ஒரு காலத்தில், வழக்கமாக இருந்தது." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!  

No comments:

Post a Comment