​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 15 May 2016

சித்தன் அருள் - 325 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"நாங்கள் கூறுகின்ற சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை. ஒரு மனிதன் தன் தேவை மறந்துவிட்டு பிறருக்கு சேவையையும், பொது நலத் தொண்டையும் செய்யத் துவங்கும் பொழுதே, அவன் தேவையை இறைவன் கவனிக்கத் துவங்கிவிடுவார் என்பதே சூட்ச்சுமம்." - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு! 

[அகத்தியர் அடியவர்களே! மேற்கூறிய கருத்தையும், "வாருங்கள்! அகத்தியர் ப்ரஜெக்டில் பங்கு பெறுங்கள்" என அழைத்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த உண்மை உங்களுக்கு புரியும். அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவேண்டும் என அகத்தியப் பெருமானின் உத்தரவு. அதை நீங்கள் நிறைவேற்றினீர்கள்! வாழ்க! அவர் துணையுடன், அருளுடன்!]


No comments:

Post a Comment