​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 20 September 2025

சித்தன் அருள் - 1939 - அன்புடன் அகத்தியர் - மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில் மதுரை மாநகரில் 05/10/2025, ஞாயிற்று கிழமை அன்று லோக ஷேமத்துக்காக சிவபுராண கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து இதை ஏற்பாடு செய்கிறார்கள். அனைத்து தகவலும் மேலே உள்ள படத்தில் உள்ளது.

அனைவரும் சென்று கலந்து கொண்டு அகத்தியப்பெருமானின் அருளை பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்!

முன் பதிவு செய்து கொள்ளுங்கள்! Register

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: