அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் அன்புடன் இடைக்காடர் சித்தர் வாக்கு அருளிய பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.
நாள் 27-7 2025.
வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.
உலகாளும் ஈசனைப் பணிந்து செப்புகின்றேனே இடையன்.
அறிந்தும் பிறர் செய்யா வண்ணம் , எதனை என்று இங்கு குறிப்பிட?
இன்னும், மனிதனுக்கு மனக்குழப்பங்கள்தான். ஏன்? எதற்கு? வருகின்றது என்று தெரியாமல்.!!!
ஆனாலும் இவைதன் எப்படி அறிந்தும் இவ்வாறாக ஒரு கிரகத்தை நிச்சயம் சரியான விகிதத்திலே கடந்து சென்றால்தான் நிச்சயம் குழப்பங்களும் வராது!! வளராது.
ஆனாலும் அவைதன் சரியான வேகத்தில் இயங்காமல் பின் அதாவது ஒரு கிரகம் ஒரு வேகத்திலும், மற்றொரு கிரகம் இன்னொரு வேகத்திலும் , மற்றொரு கிரகம் இன்னொரு வேகத்திலும் செல்கின்ற பொழுது மனிதனுக்கு ஒரு சந்தேகம் வரும்.
ஏன் இப்பிறப்பு? எதற்கு இக்கஷ்டங்கள்? என்றெல்லாம்.
அவைமட்டும் இல்லாமல் தன்னைத் தானே நிச்சயம் கீழ்படுத்திக்கொள்வான்.
அவ்வாறு கீழ்ப்படுத்திக்கொண்டு நிச்சயம் நடந்தாலே இன்னும் அதன் கிரகங்களின் சில கதிர்கள் உடம்பில் ஏற்கனவே பிறக்கும் பொழுதே பதிவாகி இருக்கும்.
அதனால் கிரகத்தின் தன்மையானது இதை ஈர்த்து, நிச்சயம் அவ்வாறாகவே இன்னும் உங்களை கீழ் நோக்கி அழைத்துச் செல்லும் அவ்வாறாக.
இப்பொழுது அகத்தியனும் நிச்சயம் சொல்லி அறிந்து, அதைத்தன் எப்படி? நீக்குவதற்கும் இன்னும் ஞானங்கள்!!
அதைத்தன் உங்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றேன்.
ஏன் ?எதற்கு? இவ்வாறு என்பது நிச்சயம் தெளிவு பெற, ஆத்மார்த்தோடு, மனமுவந்து அன்போடு இறைவனை வணங்கினாலே யாங்களே வருவோம். அனைத்து கிரகங்களையும் எப்படிக் கட்டுப்படுத்துவது என்றெல்லாம் உங்களுக்கு சொல்லிக் கொடுப்போம். நீங்களே அதைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு சில வெற்றிகளையும் காணலாம்.
நீங்கள் விரும்பியதையும் எளிதில் அடைந்து விடலாம்.
இதைத்தான் நிச்சயம் பல நூல்களில் சொன்னேனே. ஆனாலும் அவ்நூல்களை எடுத்துச் சென்று அழகாக இன்னும் பல பல வழிகளில் கூட வெள்ளையோன் (வெளிநாட்டவர்) பின் வைத்துக்கொண்டு அதையும் கூட எப்படியோ? எதன் மூலம் பின் இவ்வாறெல்லாம் நடப்பது என்றெல்லாம் (யான் எழுதிய சுவடி நூல்கள்) இதன் மூலம்தான் தெளிவு படுத்துகின்றனர்.
ஆனாலும் அனைத்தும் நடந்த பிறகுதான் தெளிவு படுத்துகின்றனர்.
ஆனாலும் அறிந்தும் இவையெல்லாம் எதற்கு என்றெல்லாம் இச்சுவடிகள் எல்லாம் பணத்திற்காகவே விற்கப்பட்டது.
அதில் பல நன்மைகள் யாங்கள் எழுதி வைத்திருக்கின்றோம். ஆனால் அது மனிதனுக்கு இப்பொழுது கிட்டவில்லை.
அவைமட்டும் இல்லாமல் பின் அகத்தியனின் இடமான இவ் அதாவது பாப நாசங்கள் பாபநாசம் செய்யும் பின் பாபநாசனிடமே!!!!! நிச்சயம் எங்கிருந்து? வந்தான்??? அகத்தியன்!!! என்றெல்லாம் நீங்கள் அறியாத வண்ணம். அதனையும் கூட வரும் வரும் வாக்கியத்தில் சித்தர்கள் செப்புகின்ற பொழுது!!!!........,
ஏன் ? எதற்கு? ஆனாலும் இறைவனை அறிந்து கொள்ள எவர் இருக்கின்றார்?? என்பவையெல்லாம் இங்கு இல்லை. ஆட்கள் இல்லை.
இதனால் இறைவனின் பெயரைச் சொல்லியும், இறைவனை எப்படித் தொழலாம் என்பதெல்லாம் நிச்சயம் தெரிந்திருக்கவில்லை.
இவ்வாறு தெரிந்திருக்காவிடில் எப்படி? ஏது? அறியாமலும் கூட இதனால் இன்னும் இவ்கிரகங்களின் வீச்சுக்கள் சரியாகவே இயங்கவில்லை.
இதனால்தான் மனிதனின் எப்படி? ஏது? என்று அறிய!!!
ஒவ்வொரு கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் ஆனது மூளையில் பதிந்திருக்கும்.
எவ்வாறு ஒரு கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாகின்ற பொழுது நிச்சயம் பின் கோபங்கள் வரும். இன்னும் எதை என்று அறிய என்னென்ன??? எண்ணங்கள் வரும் என்பவையெல்லாம்.
அவை மட்டும் இல்லாமல் வெறுப்பு வரும் அதாவது இல்லத்திலே!! அமைதி காத்திட முடியாது. அவை செய்ய வேண்டும், இவை செய்ய வேண்டும் என்றெல்லாம்.
அவை மட்டும் இல்லாமல் ராகுவும் கேதுவும் இன்னும் சற்று வேகத்தில் அதாவது சரியான விகிதத்தில், நேர் கோட்டில் பின் இல்லாமல் சிறிது தொலைவில் நிற்கும். அதாவது சனி கிரகத்திற்கு பின் அவ்வாறு சனி கிரகத்தை நெருங்குகின்ற பொழுது நிச்சயம் அவைதன் வேகமாக வந்து இப்படியும் அதாவது பூமியானது பின் இடித்திருந்தால்??? ஆனாலும் யான் சொன்னேனே நிச்சயம் சித்திரக் குள்ளர்கள் அதாவது அகத்தியன் சொன்னானே அறிந்தும் புரிந்தும்.
யான் சொல்லியதை அழகாகவே இன்னும் சித்தர்கள் எடுத்துரைக்கும் பொழுது தெரியும். அறிந்தும் அவ்சித்தர்கள் அதாவது சித்த குள்ளர்கள் ( சித்திரக்குள்ளர்கள் ) இதைத்தன் நிச்சயம் சனி கிரகத்திற்கு எதிராக இயக்கினால் அச் சனி கிரகமானது புரிந்தும் அளவின் சக்தியானது நிச்சயம் அவ்வாறாகவே நிச்சயம் அதிவேகத்தோடு வருகின்றபொழுது தள்ளிவிட்டால் சரியான நேர்க்கோட்டில் அதாவது சனி கிரகத்திற்கும் , நிச்சயம்
ராகு கிரகத்திற்கும் அவ்வாறாகவே சனி கிரகம் நடுவில் நின்றுவிடும். ராகுவும், பின் கேதுவும் நிச்சயம் அவை பின் நேர் கோட்டில் அப்படியே நின்றுவிட்டு, மறுமுனையில் சுழற்சியாகும்.
இவ்வாறு சுழற்சிகள் ஆகின்றபொழுது நிச்சயம் என்னென்ன? நடக்கும்? என்பதையெல்லாம் யாங்கள் அறிவோம். அதை உங்களுக்குத் தெரிவித்தாலும் எதை என்று புரியாமலும், நீங்கள் அமைதிதான் காத்திருக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியாது.
தெரியாதடா!!! முட்டாள்களையும் கூட அறிந்தும் ஏன்? எதற்கு? எவ்வாறு கிரகங்களை கட்டுப்படுத்துவது என்றெல்லாம் மனிதனுக்குத் தெரியாமல் இருக்கின்றான்.
நீங்கள் அனைவருமே கிரகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றீர்கள். அவ்கிரகத்தின் பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றபொழுது இறைவனையும் காணமுடியாது. சித்தர்களையும் காணமுடியாது. சித்தர்களை நிச்சயம் ஒவ்வொன்றாகவே. நிச்சயம் இவ்வாறு அறிகின்ற பொழுது நிச்சயம் உண்மைதனை அவ் கிரகங்களை நீக்க வேண்டும். எப்படி நீக்க வேண்டும்?
அவ்வாறு நீக்கினால் மட்டுமே உண்டு.
சில மனிதர்களுக்கு சரியாகவே பின் ராகுவும் கேதுவும் அறிந்தும் இவைதன் பிறப்பு தன் அதாவது ஜாதகத்திலே இருக்கும். இவைதன் அவ்வாறாகவே. அவை எவ்வாறு செயல் படுகின்றது? குறியீடுகளாக செயல்படுகின்றது. அவ்குறியீடுகளை உடைக்க வேண்டும். உடைத்து வெளியே எறிய வேண்டும். அதாவது நாகதோஷங்கள், சர்ப்ப தோஷங்கள் இன்னும் ஏனைய தோஷங்கள் ஏன்? எதற்கு? என்றெல்லாம்.
இவ்கதிர்வீச்சானது நிச்சயம் உடம்பில் அவ்வாறாகவே தெரியும். அதாவது பாம்பின் வடிவமாகவே கதிர் வீச்சுக்கள் வருகின்ற பொழுது எவராலும் வெற்றி கொள்ள முடியாது.
அனைத்தும் தோல்விகளாக முடியும்.
இவ்வாறு ராகுவும், கேதுவும், குருவும் இவ்வாறாக இருக்கின்ற பொழுது ஒரு மூலையில், அதாவது இருதயத்தின் மூலையில் , அதாவது சிறு வடிவமாகவே பாம்பு , அதாவது நல்ல பாம்பு (நாகம்) எவ்வாறு? படம் எடுக்கின்றதோ? அவ்வாறு ஒரு உருவம் இருக்கும். அதை தன் நீக்க வேண்டும்.
அவை நீக்காவிடில் நிச்சயம் பின் எப்பொழுதுமே கஷ்டங்கள்தான்.
இதை நீக்குவதற்கும் யான் வழிகள் குறிப்பிடுகின்றேன்.
ஏன்??? எதற்கு??? இவையெல்லாம் நிச்சயம் பிரம்மாவிடத்தில் பின் கூறி கூறித்தான் யாங்களும் எடுத்துரைக்க வேண்டும்!!
ஏன் ? எதற்கு? நீங்களும் எங்களை நம்பி ஓடோடி வந்து விட்டீர்கள். அண்ணாமலையிலும் உங்களை யான் பார்த்துள்ளேன். இதனால் யாங்கள் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படக்கூடியவர்கள். மீதியெல்லாம் இல்லை. தூரே எறிந்துவிடுவோம்.
எதை இவையும் கூட அகத்தியனுக்காகவே யான் சொல்ல வந்தேன்.!!!
பின் அதாவது மக்கள் இவ்வாறு பாடாய் படுத்திப் படுத்தி கிரகங்கள் எவ்வாறு என்பதையெல்லாம் யானே அறிந்திருக்கின்றேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
“””அகத்தியன் மேலானவன். அகத்தியனை விட இங்கு எவ்சக்தியும் செயல்படாது.””””
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆனாலும் அகத்தியனே எவரெவர் எவ்வழியைச் செப்ப வேண்டும்? என்றெல்லாம் பின் கையெடுத்து அறிந்தும் புரிந்தும் வந்து ““இடைக்காடனே வா!!!”” என்று பின் நிலைமைக்கு நிச்சயம் அழைத்து இவ்வாறாக உங்களுக்குச் சொல்கின்றேன்.
இதைத்தன் நீங்கள் செய்தால் நலமாகும்.
( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் , இங்கு அன்புடன் இடைக்காடர் சித்தர் இதுவரை உலகம் அறியாத மாபெரும் சித்த ரகசியங்களை எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள்.)
சரியாகவே நிச்சயம் தன்னில்கூட அறுபடை இல்லங்களுக்குச் சென்று , அங்கு இருக்கும் பிரசாதங்களை அதாவது விபூதிகளையும் கூட எடுத்திட்டு வந்து,
சரியாகவே நட்சத்திரங்கள் கோணமிட்டு அதில்கூட!!!
""" சரவணபவ !!!!! என்று சரியாக எழுதிட்டு.
அவைமட்டும் இல்லாமல் அதைத்தன் மேலும் கீழுமாக - பக்கம் - வலது இடது புறமுமாகவும் இவ்வாறாகவே ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எழுத்துக்களாகவே, அவ் எழுத்துக்கள் எழுதி அதனருகே சூரியனில் என்றெல்லாம் பின் சூரியனில் தொடங்கி பின் செவ்வாயில் முடிக்க நன்று. இவ்வாறாகவே நிச்சயம் பின் அதிலே வரையப்பட வேண்டும்.
அதாவது தாளினை பட்டு ( பட்டுத்தாள் = பட்டுத்துணி) தாளினை சரியாக எடுத்துக்கொண்டு அதில் தன் கூட. அதிலும் பின் எதை பலமாக எவ்கிரகமானது ஒவ்வொருவருக்கும் நீண்டு பின் பரந்து சக்திகளாக கொண்டது. இவையெல்லாம் அடக்கும்!!! அதாவது தாழ்வு படுத்தும் ஒரே நிறம் மஞ்சளே!!!!
இவ் மஞ்சளை ஆனாலும் சரியாகவே வெள்ளை (பட்டு) துணியை எடுத்துக்கொண்டு , சரியான மஞ்சளை , சரியாகவே , சரியான நீரிலே அதாவது கங்கா இன்னும் காவிரி இன்றும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனை புண்ணிய நதிகள்… (நர்மதா தபதி தாமிரபரணி என புண்ணிய நதிகள்) அவ் நீரினை எடுத்து வந்து அதிலே சரியாக மஞ்சளிட்டு (குழைத்து) அதைக்கூட பத்திரமாக எடுத்து , பின் முருகனிடத்தில் அதாவது இல்லத்தில் அனைவரிடத்திலும் முருகன் அழகாகவே நிற்பான் அல்லவா!!
( நம் அனைவர் இல்லங்களில் பூசை அறையில் அழகாக அருளும் அழகன் முருகப்பெருமான் படம் அல்லது சிலை முன்பாக )
அதில் தன் முன்னே இட்டு, அதனையும் கூட அங்கேயே இதை வரைய வேண்டும். (நட்சத்திர வடிவில்) அதாவது நீங்கள் சென்றீர்களே அறுபடை வீடுகளுக்கும் கூட!!!
(அவ் அறுபடை விபூதியை கொண்டு)
ஆனாலும் இவைதன் கூட கிரகங்கள் வழிவிட்டால்தான் உண்டு. முயன்றுதான் செல்ல வேண்டும்.
அதாவது ஒருவன் சொல்வான்!!!....... என்னிடத்தில் போதுமான வருவாய் இல்லை என்று. அதுவும் பொய். என்னிடத்தில் நோய்கள் இருக்கின்றது. அதுவும் பொய்.
ஏனென்றால் இவையெல்லாம் கிரகங்களே போகாமல் செய்யும்.
(கிரகங்கள் இதை செய்ய அறுபடை வீடுகளுக்கு செல்ல விடாமல் தடுக்கும்).
கிரகங்களை வென்றுவிட்டால் நீங்கள் உங்களை வெல்லலாம்.
இதனால் ஒவ்வொரு நோயையும் கூட மனிதனுக்கு வருகின்ற பொழுது, அதை எப்படி நிச்சயம் அழித்து எறியலாம் என்பதையெல்லாம் நிச்சயம் யாங்கள் முன்பே கண்டறிந்தோம். இவையெல்லாம் உலகிற்காக இனி வரும் காலங்களில் யாங்கள் நிச்சயமாக எடுத்துரைக்கப் போகின்றோம்.
இவை யார்? தடுத்தாலும் சித்தர்களே அதாவது பின் சித்தர்களை வணங்குபவர்களே!!
(சித்தர்களின் “அன்புடன் அகத்தியர்” என்ற தலைப்பில் வரும் இவ்வாக்குகளை தவறாக)
அங்கு போய், இங்கு போய் சொன்னாலும் , அவர்களை அடித்து நொறுக்கி, நல் மனிதர்களை ஏற்படுத்தி இவற்றின் மூலம் பலமக்களை நோய்கள் வராமல் யாங்களே தடுப்போம்.
ஏனென்றால் நிச்சயம் வரும் வரும் காலத்தில் எங்கள் ( சித்தர்கள் ஆட்சி ) ராஜ்ஜியமாகவே மாறப்போகின்றது இதனை எப்படி என்று எதிரொலித்து.
இதனால் அவ் சொன்னேனே பின் மஞ்சள் அழகாகவே இட்டு புண்ணிய நதிகளில் (புண்ணிய நதி நீரில் குழைத்த மஞ்சளை முருகனுக்கு முன்பாக மெழுகி நனைத்து வைத்த வெண்பட்டு துணியை அதன் மேல் )
பின் அழகாக விரித்து, அழகாகவே நவ தீபங்களை ஏற்றி , நவதீபங்களை ஏற்றிய உடன் அதில் சரியாகவே பின் அரைத்து அதாவது பின் தூளாக்கி கற்பூரமும் கூட, இன்னும் பின் ஏலக்காயும் கூட,
(ஏற்கனவே நவகிரக தீபங்களுக்கும் சரி அதற்கு முன்பாக பொதிகை மலை வாக்கில் அன்புடன் அகத்தியர் பொதிகை நாடி வாக்கு சித்தன் அருள் 997 ல்.. விளக்குகளில் மூலிகை பொருள்களை அதாவது ஏலக்காய் லவங்கம் பச்சை கற்பூரம் பொடித்து சேர்த்து விளக்கு ஏற்றுவதை கூறியிருந்தார்)
இவைதன் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே நசுக்கி, ஒவ்வொரு தீபத்திலும் நிச்சயம் இடவேண்டும்.
இவ்வாறாக இட்டு யான் சொன்னேனே அழகாக இப்படத்தைக் கூட , நிச்சயம் எடுத்து வந்தீர்களே!!! திருநீற்றை (நவ தீபம்) அதில்தன் இட வேண்டும்.
இவ்வாறாக நடுவினில்
“””ஓம் ஐம் க்லீம் மம வசி மம”””
(சக்திகளை) ஈர்க்கும் பல வழிகளில் கூட !!!
“””மம வசி, மம வசி”””
கிரகங்களைப் பற்றி சூரியனில் இருந்து செவ்வாய் முடியும் வரை அனைத்தும்.
“””சூரியன் மம வசி !!
“””சந்திரன் மம வசி !!
"""குரு அதாவது வியாழன் மம வசி!!
"""ராகு மம வசி !!
""""புதன் மம வசி!!
""""சுக்கிரன் மம வசி!!
""""கேது மம வசி!!
"""" சனி மம வசி !!!
"""" செவ்வாய் மம வசி!!!
என்றே சொல்லியே , சொல்லியே ( இவ்வாறு சொல்லியே சொல்லியே,
(மந்திர ஜெபம்)
ஒவ்வொரு முறையும் கூட பல நூறு தடவை பல பல முறையும் செப்பிட வேண்டும்.
இவ்வாறு செப்பிட அதாவது நீங்கள் பின் எடுத்து வந்தீர்களே!!! அவ்விபூதியை அழகாகவே உள்ளங்கையில் எடுத்து,
அவை மட்டும் இல்லாமல் இவைதன் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் புண்ணிய நதிகளில் அதாவது எடுத்து வந்தீர்களே , அதில்தன் பின் மஞ்சள் அதாவது துணியை நனைத்தீர்களே நிச்சயம் அதை அப்படியே வைத்துவிட்டு பின் எப்படி நிச்சயம் அத்துணியை அழகாக பின் நனைத்து அதிலிருந்து மீதி இருக்கும் சரியான பின் மஞ்சள் நீரை பின் அதாவது சரியாகவே நிச்சயம் அதில் சிறிது வேப்பிலையும் இட்டு.
சில சில வழிகளிலும் கூட இன்னும் 108 மூலிகைகள் இருக்கும் அல்லவா?
(108 மூலிகை ஹோம திரவியங்கள்)
அவைதனை நன்கு பஸ்பம் ஆக்கி!!!
( சாம்பல் ஆக்கி)
(அனைவரின் இல்லத்திலும், ஆலயங்களிலும் 108 மூலிகைகள் / ஹோம திரவியங்கள் இட்டு ஹோமம் வளர்த்து இருப்பார்கள். அங்கிருந்து சேகரித்துக் கொள்ளலாம். அல்லது திரு. தனக்குமார் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு இவற்றை பெற்றுக்கொள்ளவும்)
அவைதன் இதிலும் இட்டு நீங்கள் நிச்சயம் பின் நீராட வேண்டும். நீராடிவிட்டுத்தான் பின் (இவ்பூசையில்) அமரவேண்டும்.
(ஏற்கனவே கங்கா காவேரி போன்ற புண்ணிய நதிகளின் நீரில் மஞ்சள் சேர்த்து குழைத்து வைத்த நீர் பட்டு துணியை நனைத்த பிறகு மீதி இருக்கும்.. அதில் இந்த ஹோம சாம்பலையும் வேப்பிலையையும் சேர்த்து நாம் குளிக்கும் நீரில் கலந்து கொண்டு இந்த பூஜைக்கும் முன்பாக இப்படி குளித்துவிட்டு தான் துவங்க வேண்டும்)
அமர்ந்து இத்தியானத்தை இயக்க வேண்டும்.
ஏனென்றால் பாவங்களே!!!
(இவ் பூசையை செய்வதற்கும் பாவ சுத்தி)
மானிடர்களே!!! அறிந்தும்.
இதனால் அகத்தியன் இணங்கவே இடைக்காடனே ஏதாவது மனிதனுக்குச் சொல்லும்!! என்றெல்லாம் அகத்தியனே என்னை அழைத்து வந்து !!!!
யாருக்கும் , உலகத்திற்குத் தெரியாத இவ்ரகசியத்தை உங்களிடத்தில் எடுத்துரைக்கின்றேன்.
நீங்கள் உங்களை வெல்வீர்களாக. நீங்கள் (உங்களை) வென்றுவிட்டால் நிச்சயம் அகத்தியன் அனைவருக்கும் நல்லோருக்கும் , தீயோருக்கும் அனைத்தும் செய்க!!! என்றெல்லாம்.
ஆனால் யாங்கள் அப்படியில்லை. அகத்தியனே!!!!
இக்கலியுகத்தில் மனிதனை மாற்றுவது கடினம். அதனால் நிச்சயம் விட்டுவிடுங்கள்.
மனிதன் போன போக்கில், (போவார்கள்)
மீண்டும் ஒன்றும் நடக்கவில்லையென்றால்... அவர்கள்
அகத்தியனா?!?!!
அகத்தியன் ஒன்றே இல்லை என்று நிச்சயம் என்றெல்லாம்!!!
அனைத்து சித்தர்களிடமும் அகத்தியன் ஓடோடி வந்து
ஆனால் நிச்சயம் நம்மால் முடியும் முடியும் என்றெல்லாம் எங்களையெல்லாம் அழைத்து வந்துதான் இவையெல்லாம் உங்களுக்கு செப்பி !!! அறிந்தும் கூட.
இதனால்தான் உங்களுக்கும் செப்பிக்கொண்டிருக்கின்றோம்.
ஏனென்றால் நீங்கள் தட்டுத் தடுமாறி பின் உலகத்திற்கு வந்துவிட்டீர்கள். ஆனால் காலத்தை வென்றாக வேண்டும். காலத்தை எப்படி வெல்வது???கிரகங்களை வென்றால்தான் காலத்தை வென்றாகக்கூடும்.
அப்படி கிரகத்தை நீங்கள் வெல்லாவிடில் நிச்சயம் நோய்களும் இன்னும் பல பல வழிகளிலும் கூட!!!
எங்கெங்கு இன்னும் கண் பார்வை குறைபாடுகளும் பின் அதிகளவு நிச்சயம் கண் பார்வை குறைபாடுகள் வரும்.
ஏன்? எதற்கு? சொல்லுகின்றேன் என்றால் பின் அதாவது சரியாகவே நேர்க்கோட்டில் சனி இருக்கின்ற பொழுது , இரண்டும் அதாவது அதிகளவு அதாவது ராகுவும், கேதுவும் வருகின்ற பொழுது நிற்கும் அல்லவா?
(சனி கிரகம் , ராகு கிரகம், கேது கிரகம் ஒரே நேர்கோட்டில் நிற்கும் பொழுது)
அப்பொழுது அங்கு நிற்கும் இடத்திலிருந்து சில கதிர்வீச்சுகள் பின் மனிதனை அடையும். அப்பொழுது கண் பார்வை மங்கும். அதாவது தலை சுற்றல் ஏற்படும். நிச்சயம் பைத்தியம் போல் ஆகும்.
ஏன்? எதற்கு? இறைவனை வழிபடுகின்றோம் என்ற எண்ணமெல்லாம் வரும். நல்லதைச் செய்யவே மறந்துவிடுவார்கள். ஆனால் அரக்கர்கள் என்ன எதை புரிய இப்படி நிச்சயம் அவ்வாறாக இருந்தால் நிச்சயம் மாமிசத்தைத் தேடி அலைவான் மனிதன்.
இதனால் இன்னும் நோய்கள் வரும். ஏன் எதற்கு இதுவும் , இது சரியாகவே பல கோடிக்கணக்கான ஆண்டுகளில் மட்டுமே இவ்வாறு நடக்கும்.
இதை மனிதன் உணர்வதே இல்லை.
இதை அறியாமல் மனிதன் எங்கெங்கோ பிரார்த்தனைகள் , இன்னும் மந்திரங்கள், இதைச் செய்தால் அவை நடக்கும்!!
(மனிதர்கள்) எங்களை வணங்குங்கள் , யாங்கள் அனைத்தும் தருகின்றோம் என்றெல்லாம். நிச்சயம் முடியாது.
ஏனென்றால் அவனே, அவனைப் பாதுகாக்க முடியாது. ஏனென்றால் மனிதனாகப் பிறப்பெடுத்தால் ஒரு நாள் இறக்கக்கூடும்.
ஆனாலும் அவ்இறப்பதற்குள் நீங்கள் நலமாக வாழவேண்டும் அல்லவா?
எப்படி வாழ்வீர்களாக?
ஆனாலும் இப்படித்தான் மனிதன் சென்றாடிக் கொண்டே இருக்கின்றான். நலமாக வாழவேண்டும், நலமாக வாழவேண்டும் என்றெல்லாம்.
ஆனால் முடியாதப்பா !!!. முடியவில்லையே !!! ஏன் எதற்கு? தெரியவில்லையே !!!
அறிந்தும் தெரிந்திருக்கவில்லையே!!!
இவையெல்லாம் சொல்ல வந்தேன்.
அப்படியே இவ்மந்திரத்தையும் செப்பி, சரியாகவே அறிந்தும் அதாவது உள்ளங்கையிலே மீண்டும் அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம் அவை மட்டும் இல்லாமல் வெற்றிலை பாக்கும் அங்கு வைத்து , சரியாகவே இன்னும் அரச இலைகளையும் கூட வைத்து
(இரண்டு உள்ளங்கையிலும் வெற்றிலை, பாக்கு, அரச இலை, விபூதியை கைநிறைய மூடி வைத்துக் கொள்ளவும்) ,
இங்கே வைத்து யான் சொன்னேனே இவ்மந்திரத்தை சரியாகவே நிச்சயம் சூரியன் வருவதற்கு முன்பே தொடங்க வேண்டும். சூரியன் வருவதற்கு முன்பே தொடங்க, நிச்சயம் அவைதன் நிச்சயம் சூரியன் பின் வர வர வெளிச்சமாகும். அதுபோல் யான் சொல்லிய மந்திரத்தையும் இன்னும் உருவேற்ற!! உருவேற்ற!!! இன்னும் பலங்கள் ஏற்படும்.
பின்பு இதையறிந்து இதை அப்படியே வைத்திட்டு,!!!
ஆனாலும் தகுதியானவை நிச்சயம் இவைதன் மாறாமல் இருக்க , இவைதன் அப்படியே வைத்திட வேண்டும். பின் அதாவது உள்ளங்கையில் இருக்கின்றதே நிச்சயம் அவையும் கூட சரியாகவே பின் அதே போல் பின் மஞ்சள் துணியில் அதாவது இதற்கும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
( அதாவது முடிச்சு என்பது இங்கு கிழி அதாவது சனீஸ்வரனுக்கு விளக்கு ஏற்றும் பொழுது எள் முடிச்சு எள் கிழி இட்டு ஏற்றுவர்களே அதேபோல, விபூதியை , வெற்றிலை பாக்கு அரசு இலையை சிறிது சிறிதாக கிழி போல முடிச்சு இட்டு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மந்திர ஜபம் செய்ய வேண்டும்)
(மறுநாள் செய்ய வேண்டியது அதாவது முதல் நாள் மந்திர ஜெபம் செய்து அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விட்டு மறுநாள்)
யான் சொன்னேனே அதேபோலத்தான் அதில் இடவேண்டும். இட்டு முடிச்சு அறிந்தும் இதைத்தன் போட்டு இட்டு , அறிந்தும் சரியாகவே அதிகாலையிலே சூரியன் வருவதற்கு முன்பே பின் ஆற்றங்கரைக்குச் செல்லவேண்டும். ஏதோ ஒரு ஆற்றங்கரைக்கு. நிச்சயம் அங்கு பின் பச்சரிசி சாதத்தையும் எள்ளையும் எடுத்து நன்றாக பிசசைத்து (பிசைந்து) , அறிந்தும் இவைதன் அதாவது ஒவ்வொன்றாக இதே போல் நூற்றி எட்டு உருண்டைகளை இடவேண்டும். நூற்றி எட்டு
(108 எள் கலந்த சோற்று பிண்டம்)
அதாவது அறிந்தும் இவைதன் பிடித்து, நிச்சயம் உங்களுக்குத் தேவையானதை எல்லாம்,வேண்டி ஒவ்வொருவராக இவ்ஆன்மா பந்தம் சொந்தம் இருக்குமல்லவா? (முன்னோர்கள்) . அவையெல்லாம் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.
(ஆத்மாக்கள் அணு துகள்களாக)
இவையெல்லாம் நிச்சயம் (தெரிந்தவரை முன்னோர்கள் பெயர்களை) பெயரைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி, பின் கரைத்துக் கரைத்து (பிண்டத்தை) ஆற்றில் விடவேண்டும். மீண்டும் சரியாகவே !!!
அனைத்தும் பின்
“இறைவா !!!! நிச்சயம் இதில் தவறு இருந்தாலும் எமக்குத் தெரியாது. நீதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனிதனாக நீங்கள் அனுப்பிவிட்டீர்கள் அல்லவா!! இவ்வுலகத்தில் வாழ முடியாது”
என்று இறைவனிடம் ஒரு கோரிக்கை வைத்திட்டு. ஆனாலும் இவை புண்ணிய நதியில்தான் செய்ய வேண்டும். சாதாரண நதியில் செய்தாலும் பலனில்லை.
ஆனாலும் இதற்கும் வழிவிடுவது பிரம்மன்தான். கடின முயற்சி எடுத்துச் செய்ய வேண்டும்.
அறிந்தும் இதனால் அங்கும் இதனால் மீண்டும் அவ்வாறாகவே செய்திட்டு !!!
( அதற்கடுத்த நாள் -
அதாவது முதல் நாள் மந்திரஜெபம் பூஜை
அடுத்த நாள் ஆற்றங்கரையில் பிண்டம் கரைப்பு
மூன்றாவது நாள் முதல் செய்ய வேண்டியது)
பின் அனுதினமும் ஒரு மூன்று நாட்கள் அரச மரத்தையும் , ஆல மரத்தையும் பின் நன்கு 108 முறை நன்கு சுற்றவேண்டும்.
சுற்றி அதே போல் வேப்பிலை (வேப்பமரம்) மரத்தையும் சுற்ற வேண்டும். இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட !!
நீங்கள் முடிச்சு இறுக்கி
( விபூதி கிழியை தயார் செய்து வைத்துக்கொள்க )
அதாவது சொன்னேனே அதில்தன் விபூதியைக் கூட சரியாகவே நிச்சயம் அங்கு அமர்ந்து , நிச்சயம் ஓர் மணி நேரம் அமர்ந்து , நீரை முன்னே வைத்திட வேண்டும். அதாவது அரச மரமோ, ஆல மரமோ. நீரை முன் நிறுத்தி
( பாத்திரத்தில் மரத்தடியில் புண்ணிய நதி நீரை வைத்து, அதில் ருத்திராடரசம், வில்வம், அருகம் புல் , துளசி , வேப்பிலை, அறுபடை வீடு விபூதி திறுநீறு, இடவும்)
அதில் கூட சரியான ருத்திராட்சையும் நிச்சயம் தன்னில் கூட அதாவது ஈசனுக்குப் பிடித்தவை அதாவது வில்வத்தையும் இன்னும் பல வழிகளில் கூட , இன்னும் பல பல மூலிகைகளையும் கூட இட்டு நிச்சயம் தன்னில் கூட பின் விபூதியும் அதில் இட வேண்டும். நிச்சயம்
(முதல் நாள் ஜெபம் செய்த) மந்திரத்தை 108 முறை போற்றிட வேண்டும். நிச்சயம் அவ்வாறாகவே சரியான நேரத்தில், உச்சிவேளையில் நிச்சயம் அவ் நீரைப் பருக , பின் நிச்சயம் சில சக்திகள்!!!
அதாவது அறிந்தும் யான் சொன்னேனே அறிந்து அவ்பாம்பைப் போல் இதயத்தின் அருகே இருக்கும் அல்லவா!!! அவைதன் சிதைந்து ஓடும். கலைத்து விடும்.
இதனால் ராகு கேது தோஷங்கள் அதாவது பாவ தோஷங்கள் சிலவற்றை அதாவது பாம்பின் வடிவம் அதாவது இதயத்தின் அருகே இருந்தால் வெற்றி கொள்ள முடியாது. பைத்தியனாகத் திரிவான். புத்திகள் மாறுபடும். என்ன செய்வதென்றே தெரியாது தெரியாது. வீட்டில் சண்டை, சச்சரவுகள். தாய் தந்தையருக்கு நிச்சயம் பின் எமனாகவே மாறிவிடுவான். இதை அறிந்து இவைதன் நிச்சயம் மாதத்திற்கு ஓர் முறையாவது செய்ய வேண்டும். இவ்வாறு பின் செய்து கொண்டே வந்தாலே நீங்கள் மாற்றத்தை உணரலாம். சில கிரகங்களின் தன்மைகளும் உணரலாம். இன்னும் என்னென்ன நோய்கள் இன்னும் வருங்காலத்தில் குழந்தை பிரச்சினை, இன்னும் வயிற்றில் வலி இன்னும் என்னென்னவோ தோன்றப் போகின்றது.
இதனை சரியாகவே இவைதன் நிச்சயம் அருந்திவர அருந்திவர சிறப்பு.
இவைதன் சொன்னேனே அதை நீரை அப்படியே ஒரு ஐந்து நாட்கள் அல்லது ஒன்பது நாட்கள்
நீங்கள் சிறிது சிறிதாகவே ஆனாலும் அதில் கூட பின் அருந்துகின்றீர்கள் அல்லவா!! (அதில் கூட சேர்த்து) மிளகு, சீரகம்
(அந்த நீரில் மிளகு சீரகம் பொடியாகவோ அல்லது அப்படியே ஆகவும் போட்டு குடிக்கலாம்)
இவை கூட எடுத்து எடுத்து அவை மட்டுமில்லாமல் சிறிது அளவு கடை(சி) நாளில்..
(அதாவது ஐந்தாவது நாள் அல்லது ஒன்பதாவது நாள்)
நிச்சயம் தன்னில் அறிந்தும் இவைதன் சரியாகவே பின்பற்றி அறிந்தும் நிச்சயம் இவ்வாறாகவே உணர்ந்து பின்பு காலஹத்தி நாதனையும்,
(வாயு ஸ்தலம் காளகஸ்தி
ராகு ஸ்தலம் திருநாகேஸ்வரம்
கேது ஸ்தலம் கீழ்பெரும்பள்ளம்
சென்று)
திரு நாகேஸ்வரத்தையும் , கீழ்பெரும் பள்ளத்தையும் அடையச் செய்து . அடையச் செய்து….
ஶ்ரீவாஞ்சியம் என்ற தலத்தை அடைய வேண்டும். ஶ்ரீவாஞ்சியம் எனும் தலத்தில் அனைத்து கிரகங்களின் பின் கட்டுப்பாட்டில் இயங்கும் அங்கு ஒரு உபாயம் இருக்கின்றது. அவ் உபாயம் பற்றி அகத்தியன் சொல்லட்டும். சொல்லி நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
ஆனால் இதற்கு சரியான கட்டுப்பாடுகள் - பொறாமை (இன்மை) இன்னும் குணங்கள் சரியாகவே இருக்க வேண்டும்.
“”””அவ்வாறு சரியாக இருந்தவர்கள் செய்தால்தான் இதன் மாற்றம் சிறப்புத்தரும்.
அவ்வாறாகத் தவறானவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அதுவே திருப்பி இன்னும் சில கெடுதல்களைச் செய்துவிடும்.
இதனால் நல்லதையே பழகுங்கள். நல்லதையே செய்யப் பழகுங்கள். இன்னும் ஞானங்கள் உங்களுக்கு யாங்கள் கற்றுக்கொடுக்கத் தயார்.
ஆனால் நீங்கள் செய்வீர்களா??? என்றால் பிரம்மாவிடத்தில்தான். (இது உள்ளது...அவர் அனுமதிக்க வேண்டும்)
ஆனால் விதியை வெல்ல முடியாது. அதை மட்டும் நீங்கள் பின் உணரவேண்டும்.
ஆனாலும் அதை வெல்வதற்கு, விதியை வெல்வதற்கு நிச்சயம் யாங்கள் பிரம்மாவிடத்தில் முறையிடுகின்றோம்.
ஆனால் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் இவையென்று புரிய நீங்கள் ….
“” சாதுரியமாக செய்ய வேண்டும்.””
விதியானது வழியும் விடாது. ஆனால் சரியாகவே இதைச் செய்து முடிப்போம் என்ற எண்ணம் வந்தாலே யாங்கள் துணையிருப்போம்.
பிரம்மனும் வருவான்.
இவன் யார்??? இவனை யார் செய்யச்சொன்னது ????
என்று தடுப்பான்.
ஆனாலும் பின் பிழைக்கட்டும் என்று அருகிலேயே இருப்போம். மற்றொரு சித்தனும் வாக்கு உரைப்பான். உங்கள் (சிவபுராணம் ஓதும் கூட்டுப் பிரார்த்தனை) செயலைத் தொடங்குங்கள். ஆசிகள்.
====================================================================
வணக்கம் அடியவர்களே. இந்த பூசை முறை செய்வதற்க்கு முன்னர் பலமுறை இந்த வாக்குகளை நீங்கள் அவசியம் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும். அப்பொழுதான் நல்ல புரிதல்கள் உண்டாகும்.
இப்பொழுது இவ் பூசை செய்ய தேவையான பொருள்கள் மற்றும் செய்முறைகளை இங்கு காண்போம்.
பூசையின் நோக்கம் : உங்கள் இதயத்தில் ஒரு ஓரத்தில் உள்ளே இருக்கும் ராகு கேது குறியீடுகளை அழிக்கும் சித்த வழிபாடு.
====================================================================
இடைக்காடர் சித்தர் சித்தமுனிவர் அருளிய அறுபடை வீடு - நவ கிரக யந்திர வழிபாடு பூசை செய்ய தேவையான பொருட்கள்
1. நீங்கள் நேரடியாக தனியாக அல்லது குழுக்களாக அவசியம் முருகப் பெருமானின் அறுபடை இல்லங்களுக்கு நேரடியாக சென்று , அங்கு இருக்கும் பிரசாதங்களை அதாவது விபூதிகளை எடுத்துவரவேண்டும்.
2.வெள்ளை பட்டுத்துணி - .3 அடிக்கு 3 அடி அல்லது 4அடிக்கு நன்கு அடி. பூசை செய்யும் முன்னர் இவ் கோலமாவைவைத்து யந்திரம் வரைந்து தேவையான அளவை எடுத்துக்கொள்ளவும் , நன்கு தெரிந்து கொள்ளவும். ஏன் என்றால் யந்திரம் வரையும் போது இந்த அளவுகள் மாறுபட வாய்ப்பு உண்டு. கோலமாவைவைத்து ஒரு சோதனை இட்டு தேவையான துணி அளவுகளைத் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
3.தூய மஞ்சள் பொடி - 500 கிராம்
4.தண்ணீர்
5.பாத்திரம்
6.நம் அனைவர் இல்லங்களில் பூசை அறையில் அழகாக அருளும் அழகன் முருகப்பெருமான் படம் அல்லது சிலை
7. நவ தீபம் ஏற்ற 9 பெரிய அகல் விளக்குகள்.
8. 18 விளக்கு திரிகள் - ஒவ்வொரு விளக்கிற்கும் 2 திரிகள்
9. இலுப்பை எண்ணெய், அல்லது பசு நெய், அல்லது நல்லெண்ணெய் - இவற்றில் எதாவது ஒன்று வேண்டும்
10. வெற்றிலை - 18 + 4
11.பாக்கு - 18 + 4
12.அரச இலை - 18 + 4
13. எள், பச்சரிசி சாதம் - நூற்றி எட்டு உருண்டை பிண்டம் பிடிக்க தேவையான பச்சரிசி சாதம், எள்
14. புண்ணிய நதி நீர் - 5 லிட்டர் - (கங்கா , காவிரி , தாமிரபரணி , நர்மதை)
15. அரச மரம் , ஆல மரம் , வேப்பிலை மரம் - 108 முறை நன்கு சுற்ற
16. ருத்திராட்சம் - 3
17 - வில்வம் இலைகள்
18- 108 மூலிகைகள் ( பல பல மூலிகைகள் இவ்வுலகில் உள்ளன. அவற்றில் உங்களால் இயன்ற நூற்றி எட்டு மூலிகைகைள சேகரித்து பூசைக்கு பயன்படுத்தவும். உங்கள் விருப்பமே. உங்கள் புரிதலுக்காக சில தகவல்கள் இங்கு )
https://www.vallalar.org/Tamil/V000020910B
https://ta.wikipedia.org/wiki/மூலிகைகள்_பட்டியல்
https://gmkaarthi.blogspot.com/2018/02/108.html
19 - மிளகு, சீரகம் , கற்பூரமும், ஏலக்காயும் , கிராம்பு
20 - காலஹத்தி, திருநாகேஸ்வரம் , கீழ்பெரும் பள்ளம், ஶ்ரீவாஞ்சியம்
21. புண்ணிய நதி - கங்கா , காவிரி , தாமிரபரணி , நர்மதை.
22. மஞ்சள் துணி 6 - அதாவது முடிச்சு என்பது இங்கு கிழி செய்வதற்கு.
23. பின்வரும் தமிழ் எண்கள் எழுத்துக்களை, கோலமாவு மூலம் எழுதி பழகிக்கொள்ளவும்
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
====================================================================
இடைக்காடர் சித்தர் சித்தமுனிவர் அருளிய அறுபடை வீடு - நவ கிரக யந்திர வழிபாடு பூசை எப்படி செய்வது?
1) நீங்கள் முதலில் அறுபடை வீடுகளுக்கு செல்லவேண்டும்.
திருச்செந்தூர்
திருப்பரங்குன்றம்
பழமுதிர்ச்சோலை
பழனி
சுவாமிமலை
திருத்தணி
ஒவ்வொரு அறுபடை வீட்டிலும் 500 கிராம் விபூதியை முருகப்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்து எடுத்து வந்து இல்லத்தில் ஒன்றாக சேர்த்துவிடவேண்டும். இப்போது யந்திரம் வரைய உங்களிடம் போதுமான அளவு விபூதி சேர்ந்து இருக்கும் . நீங்கள் நேரடியாக தனியாக அல்லது குழுக்களாக அவசியம் அறுபடை இல்லங்களுக்கு நீங்கள் நேரடியாக செல்லவேண்டும். அறுபடை வீடுகளுக்கு நீங்கள் நேரடியாக செல்லாமல், வேறு யாரிடம் இருந்து விபூதியை வாங்கிவரக்கூடாது. நீங்கள் நேரடியாக சென்று விபூதியை எப்படி எடுத்துவரவேண்டும் என்றல், சித்தன் அருள் 1861 பதிவில் குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த ஒரு முறையை இங்கு பகிர்கின்றோம். அந்த பதிவுகளை படிக்க நன்று. , பக்தர்கள் திருச்செந்தூரில் இருந்து யாத்திரையை தொடங்கினால் அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு திருத்தணிகை மலைக்கு வந்து முடிக்கவேண்டும். கோயிலுக்கு செல்லும் வழியில் கிடைக்கும் அல்லது சுத்தமான பசும் சாண விபூதியை வாங்கி முருகனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு அல்லது சமர்ப்பணம் செய்துவிட்டு அதை கொண்டு ஒரு கலசத்தில் அல்லது ஒரு குடுவையில் பூஜை அறையில் வைத்து முருகனாக பாவித்து பூஜைகள் செய்து வர வேண்டும் என்று குருநாதர் உரைத்துள்ளார்கள். இந்த முறையை இங்கு பயன்படுத்த நன்று.
2) கங்கா , காவிரி , தாமிரபரணி , நர்மதை போன்ற பல புண்ணிய நதிகளில் இருந்து நீரை எடுத்துவந்து குறைந்தது 5 லிட்டர் அளவாவது சேகரிக்க வேண்டும். எந்தெந்த புண்ணியநதிகள் என்பது உங்கள் விருப்பமே. நீங்களே நேரடியாக செண்டு நீரை எடுத்துவந்து குறைந்தது 5 லிட்டர் அளவாவது சேகரிக்க வேண்டும். கடைகளில் அல்லது பிறரிடம் வாங்குவது கூடாது.
இவ் பூசையை சூரியன் வருவதற்கு முன்பே தொடங்க வேண்டும். அடியவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் 3:00 மணிக்கு தொடங்க நன்று. மிக மிக மிக அதி மிக சிறப்பு. சத்தியமாக வெற்றி உறுதி. இது தொடர்பான நம் குருநாதர் வாக்கு (சித்தன் அருள் - 1618) : யார் ஒருவன் அப்பனே அதாவது பின் மூன்று மணி அளவில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஓதுகின்றானோ அவன் வெற்றியாளாக சத்தியமாக வருவானப்பா!!! இதை அனைவருக்கும் தெரிவித்துவிடு அப்பனே!!!!!!
இவ் பூசையை தொடங்கும் முன்னர் , நீங்கள் புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வந்த நீருடன் மஞ்சள், விபூதியை கலந்து , அதில் சிறிது வேப்பிலையும் இட்டு கலந்து , இன்னும் 108 மூலிகைகள் அவை தனை நன்கு பசபமாக்கி, பொடியாக்கி , அரைத்து அவைதன் நீருடன் இட்டு நீங்கள் நிச்சயம் நீராட வேண்டும். நீராடிவிட்டுத்தான் இவ்பூசையில் அமரவேண்டும். அமர்ந்து இத்தியானத்தை இயக்க வேண்டும் என்று இடைக்காடர் சித்தர் உரைத்துள்ளார்கள். ஏனென்றால் பாவங்கள் மனிதர்களிடத்தில் அதிகம் உள்ளது என்று இடைக்காடர் உரைத்துள்ளார்கள்.
3) பூசை செய்யும் இடத்தில் புண்ணிய நதிகளில் குழைத்த மஞ்சளை நன்கு மெழுகி தரையினில் முதலில் பரப்பவேண்டும். அதன் மேல், வெள்ளை பட்டுத்துணியை எடுத்துக்கொண்டு, பல புண்ணிய நதிகளிலிருந்து எடுத்துவந்த நீரில் அதிக அளவு (500 கிராம்) தூய மஞ்சள் பொடியை நன்கு கரைக்கவேண்டும். வெள்ளை பட்டுத்துணியை நனைக்கவேண்டும் . எப்படி என்றால் வெள்ளை துணி முழுவதும் அடர்த்தியான மஞ்சள் நிறம் படரவேண்டும். ஏன் என்றால் இடைக்காடர் சித்தமுனிவர் வாக்கின் படி , கிரகங்கள் இவையெல்லாம் அடைக்கும் அதாவது தாழ்வு படுத்தும் ஒரே நிறம் மஞ்சள் நிறம் மட்டும். எனவே வெள்ளை துணியில் மஞ்சள் மிக அதிகமாக இருப்பது நன்று.
4) இப்போது மஞ்சளாக மாறியிருக்கும் வெள்ளை துணியை, முருகப்பெருமான் படத்திற்கு அல்லது சிலை முன்பு நன்றாக விரித்திடல் வேண்டும்.
5) ஒவ்வொரு அறுபடை வீட்டிலும் இருந்து எடுத்து வந்து கலந்து வாய்த்த விபூதியை கோலமாக , சரியாகவே நட்சத்திரங்கள் கோணமிட்டு அதில்கூட சரவணபவ என்று எழுதவேண்டும். எப்படி நட்சத்திரங்கள் கோணமிட்டு என்று எழுதவேண்டும் இங்கு வரைபடத்தில் இட்டுள்ளோம். அதைப்போல வரைய நன்று.
6) இந்த நட்சத்திர கோணத்தின் நடுவில் ஓம் ஐம் க்லீம் மம வசி மம என்ற மந்திரத்தை எழுதவும். இங்கு வரைபடத்தில் இட்டுள்ளோம். அதைப்போல எழுதவும்.
7) இந்த நட்சத்திர கோணத்தின் மேலும் கீழுமாக, வலது இடது புறமுமாகவும் ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எண்களுக்கு உங்களுக்குரிய எழுத்துக்கள் அதனை தமிழில் எழுத்துக்களாகவே இவ்வாறாகவே நிச்சயம் பின் அதிலே வரையப்படவேண்டும். இங்கு வரைபடத்தில் இட்டுள்ளோம். அதைப்போல எழுதவும். இங்கு ஒரு அட்டவணையும் அளித்துள்ளோம். அதில் நவ கிரகங்கள், எண்கள், எண்களுக்கான தமிழ் எழுத்துகள், நவ கிரக மந்திரம் என்று வரிசைப்படுத்தியுள்ளோம். அதனை நன்கு புரிந்துகொள்ளவும்.
8) இப்பொழுது அந்த தமிழ் எழுத்துக்களில் அருகில் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அதாவது ஒவ்வொரு தமிழ் எங்களுக்கும் ஒரு தீபம் என்று நவ தீபங்களை ஏற்றவேண்டும். இங்கு வரைபடத்தில் இட்டுள்ளோம். அதைப்போல ஏற்றவேண்டும்.
9) நவ தீபங்களை ஏற்றிய உடன், அதில் கிராம்பு, கற்பூரமும், ஏலக்காயும் கூட சரியாகவே அரைத்து தூளாக்கி , நிச்சயம் சரியாகவே நசுக்கி, ஒவ்வொரு தீபத்திலும் நிச்சயம் இடவேண்டும். (நவ தீபங்களை எங்கு ஏற்றவேண்டும் ) நிச்சயம் எடுத்து வந்தீர்களே அறுபடை வீடு விபூதியை/திருநீற்றை, அதனை நவ தீபம் அதில் இட வேண்டும்.
10) இப்போது மகத்தான உலகம் இதுவரை அறியாத , யாரும் இதுவரை செய்யாத பூசையை ஆரம்பிக்க உள்ளீர்கள். முதலில் இறைவனை நன்கு வேண்டுங்கள். இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும் என்று. அதன் பின்னர் சிவபுராணம் படிக்க வேண்டும். நன்கு நினைவில் கொள்க. எந்த ஒரு புண்னனிய செயல்கள் செய்தலும் முதலில் சிவபுராணம் படிக்கவேண்டியது மிக அவசியம். நம் அன்பு , கருணைக்கடல் குருநாதரை சிரம் தாழ்த்தி நன்கு வணங்குங்கள். விபூதி உங்களுக்கு அருளிய முருகப்பெருமானை மனதார வணங்குங்கள். இந்த பூசை முறையை அருளிய அன்பு இடைக்காடர் சித்த முனிவரை வணங்குங்கள்.
( விபூதி கிழியை தயார் செய்து வைத்துக்கொள்க ) மந்திரம் உச்சரிக்கும் முன்னர் , மந்திரம் முடிக்கும் வரையில் - அதாவது சனீஸ்வரனுக்கு விளக்கு ஏற்றும் பொழுது எள் முடிச்சு எள் கிழி இட்டு ஏற்றுவார்களே அதேபோல, மஞ்சள் துணியில் அறுபடை வீடு விபூதி , வெற்றிலை, பாக்கு, அரசு இலையை சிறிது சிறிதாக கிழி போல முடிச்சு இட்டு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மந்திர ஜபம் செய்ய வேண்டும். எவ்வளவு அளவு என்பது உங்கள் விருப்பமே. முடிந்த வரை நிறைய வைத்துக்கொள்ளுங்கள். இடைக்காடர் சித்தர் பெருமான் உரைத்தபடி ஒவ்வொரு முறையும் கூட பல நூறு தடவை , பல பல முறையும் பின்வரும் ஒவ்வொரு மந்திரத்தையும் செப்பிட வேண்டும். 1008 முறை பின்வரும் ஒவ்வொரு மந்திரத்தையும் செப்பிட வேண்டும்.
சூரியன் மம வசி ( 1008 முறை )
சந்திரன் மம வசி ( 1008 முறை )
குரு மம வசி ( 1008 முறை )
ராகு மம வசி ( 1008 முறை )
புதன் மம வசி ( 1008 முறை )
சுக்கிரன் மம வசி ( 1008 முறை )
கேது மம வசி ( 1008 முறை )
சனி மம வசி ( 1008 முறை )
செவ்வாய் மம வசி ( 1008 முறை )
11 ) சூரிய வெளிச்சம் வரும் வரை மந்திரங்கள் செப்பிக்கொண்டே இருங்கள். அதாவது அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பே மந்திர ஜெபம் தொடங்க வேண்டும் , நிச்சயம் அவைதன் சூரியன் பின் வர வர வெளிச்சமாகும். அதுபோல் இடைக்காடர் சித்த முனிவர் சொல்லிய மந்திரத்தையும் இன்னும் உருவேற்ற!! உருவேற்ற!!! இன்னும் பலங்கள் உங்களுக்கு ஏற்படும் என்று இடைக்காடர் சித்த முனிவர் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் படி செய்யவும்.
12) இப்போது உங்கள் பூசையின் முதல் நிலை நிறைவு.
13) மறுநாள் செய்ய வேண்டியது:- அதாவது முதல் நாள் மந்திர ஜெபம் செய்து அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விட்டு, மறுநாள் புண்ணிய நதியில்தான் செய்ய வேண்டியவை - அதிகாலையிலே சூரியன் வருவதற்கு முன்பே புண்ணிய நதி ஆற்றங்கரைக்குச் செல்லவேண்டும். ஏதோ ஒரு புண்ணிய நதி ஆற்றங்கரைக்கு. நிச்சயம் அங்கு பச்சரிசி சாதத்தையும், எள்ளையும் எடுத்து நன்றாக பிசைத்து (பிசைந்து) நூற்றி எட்டு உருண்டைகளை அதாவது 108 எள் கலந்த சோற்று பிண்டம் செய்ய வேண்டும். கட்டாயமாக இவை புண்ணிய நதியில்தான் செய்ய வேண்டும். சாதாரண நதியில் செய்தாலும் பலனில்லை.
14) அதாவது பிண்டங்கள் பிடித்து, நிச்சயம் வாழ்வில் உங்களுக்குத் தேவையானதை எல்லாம் வேண்டி, ஒவ்வொருவராக முன்னோர்கள் இவ்ஆன்மா பந்தம் சொந்தம் இருக்குமல்லவா , அவையெல்லாம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் (முன்னோர்கள் ஆத்மாக்கள் அணு துகள்களாக அலைபாய்ந்து கொண்டிருக்கும்). எனவே நிச்சயம் (தெரிந்தவரை உங்கள் முன்னோர்கள்) பெயரைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி, 108 பிண்டத்தையும் ஆற்றில் கரைத்துக் கரைத்து ஆற்றில் விடவேண்டும் சரியாகவே.
15) 108 பிண்டங்களை புண்ணிய நதி ஆற்றில் கரைத்த பின்னர் “இறைவா !!!! நிச்சயம் இதில் தவறு இருந்தாலும் எமக்குத் தெரியாது. நீதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனிதனாக நீங்கள் அனுப்பிவிட்டீர்கள் அல்லவா!! இவ்வுலகத்தில் வாழ முடியாது” என்று இறைவனிடம் ஒரு கோரிக்கை வைத்து முடிக்கவேண்டும்.
.
16) முதல் நாள் மந்திர ஜெபம் பூஜை அடுத்த நாள் ஆற்றங்கரையில் 108 பிண்டம் கரைப்பு. மூன்றாவது நாள் முதல் செய்ய வேண்டியது: அனுதினமும் ஒரு மூன்று நாட்கள் அரச மரத்தையும், ஆல மரத்தையும் பின் வேப்பிலை (வேப்பமரம்) மரத்தையும் நன்கு 108 முறை நன்கு சுற்றவேண்டும்.
17) மரத்தடியில் , ஒரு பாத்திரத்தில் புண்ணிய நதி நீரை வைத்து, அதில் ருத்திராடரசம், வில்வம், அருகம் புல் , துளசி , வேப்பிலை, அறுபடை வீடு விபூதி திறுநீறு இடவும். நிச்சயம் ஓர் மணி நேரம் அமர்ந்து , நீரை முன்னே வைத்திட வேண்டும். ( விபூதி கிழியை தயார் செய்து வைத்துக்கொள்க ) மந்திரம் உச்சரிக்கும் முன்னர் , மந்திரம் முடிக்கும் வரையில் - அதாவது சனீஸ்வரனுக்கு விளக்கு ஏற்றும் பொழுது எள் முடிச்சு எள் கிழி இட்டு ஏற்றுவார்களே அதேபோல, மஞ்சள் துணியில் அறுபடை வீடு விபூதி , வெற்றிலை, பாக்கு, அரசு இலையை சிறிது சிறிதாக கிழி போல முடிச்சு இட்டு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மந்திர ஜபம் செய்ய வேண்டும்.
(முதல் நாள் ஜெபம் செய்த) மந்திரத்தை 108 முறை போற்றிட வேண்டும்.
சூரியன் மம வசி ( 108 முறை )
சந்திரன் மம வசி ( 108 முறை )
குரு மம வசி ( 108 முறை )
ராகு மம வசி ( 108 முறை )
புதன் மம வசி ( 108 முறை )
சுக்கிரன் மம வசி ( 108 முறை )
கேது மம வசி ( 108 முறை )
சனி மம வசி ( 108 முறை )
செவ்வாய் மம வசி ( 108 முறை )
நிச்சயம் அவ்வாறாகவே சரியான நேரத்தில், உச்சிவேளையில் நிச்சயம் அவ் நீரைப் பருக , நிச்சயம் சில சக்திகள்!!! அதாவது அவ்பாம்பைப் போல் இதயத்தின் அருகே இருக்கும் அல்லவா!!! அவை சிதைந்து ஓடும். கலைத்து விடும். இதனால் ராகு கேது தோஷங்கள் அதாவது பாவ தோஷங்கள் சிலவற்றை அதாவது பாம்பின் வடிவம் அதாவது இதயத்தின் அருகே இருந்தால் வெற்றி கொள்ள முடியாது. பைத்தியனாகத் திரிவான். புத்திகள் மாறுபடும். என்ன செய்வதென்றே தெரியாது தெரியாது. வீட்டில் சண்டை, சச்சரவுகள். தாய் தந்தையருக்கு நிச்சயம் பின் எமனாகவே மாறிவிடுவான்.
18) இதை அறிந்து இவைதன் நிச்சயம் மாதத்திற்கு ஓர் முறையாவது செய்ய வேண்டும். இவ்வாறு பின் செய்து கொண்டே வந்தாலே நீங்கள் மாற்றத்தை உணரலாம். சில கிரகங்களின் தன்மைகளும் உணரலாம்.
19) மரத்தடியில் பூசை செய்த நீரை இதனை சரியாகவே நிச்சயம் அருந்திவர அருந்திவர சிறப்பு. அதை நீரை அப்படியே ஒரு ஐந்து நாட்கள் அல்லது ஒன்பது நாட்கள் நீங்கள் சிறிது சிறிதாகவே அருந்துகின்றீர்கள் அல்லவா!! அதில் நீரில் மிளகு சீரகம் பொடியாகவோ அல்லது அப்படியே ஆகவும் போட்டு குடிக்கலாம்.
20) அதாவது ஐந்தாவது நாள் அல்லது ஒன்பதாவது நாள்: பின் வரும் நன்கு ஆலயங்களுக்கும் செல்லவேண்டும்
வாயு ஸ்தலம் காளகஸ்தி
ராகு ஸ்தலம் திருநாகேஸ்வரம்
கேது ஸ்தலம் கீழ்பெரும்பள்ளம்
ஶ்ரீவாஞ்சியம்
பொறாமை (இன்மை) இன்னும் குணங்கள் சரியாகவே இருக்க வேண்டும். அவ்வாறு சரியாக இருந்தவர்கள் செய்தால்தான் இதன் மாற்றம் சிறப்புத்தரும். அவ்வாறாகத் தவறானவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அதுவே திருப்பி இன்னும் சில கெடுதல்களைச் செய்துவிடும்.
அன்புடன் இடைக்காடர் சித்தர் அருளிய பூசை முறை முற்றே !!!!
=============================================================
அறுபடைவீடுகள் தொடர்புடைய வாக்குகள் - அடியவர்கள் புரிதலுக்காக
=============================================================
சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்!
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்பே அறுபடைவீடுகள் உண்டு என்பேன் அறுபடைவீடுகள் எதற்காக வணங்குகின்றான் என்பதை கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
எதனையும் என்று கூற பின் அறுபடை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ் அறுபடை வீடுகளும் தரிசித்து, இரு மண்டலம் பின் அவந்தனக்கும்(முருகன்) அங்கே கந்த சஷ்டிக் கவசத்தையும் இன்னும் பல அருணகிரிநாதர் எழுதிய பல புத்தகங்களையும் பின் எவ்வாறு திருவாசகத்தையும் பின் ஒவ்வொரு தலத்திலும் நல முறையாக இரு மண்டலம் ஜெபித்து பின் இதனையுமன்றி கூறி பின் ஒவ்வொரு தலமாக அறுபடை வீடுகளை தரிசித்து பின் வந்தால் அவந்தனக்கு ஏழாவது என்னும் அறிவு பிறந்து விடும்.ஏழாவது அறிவு தான் அதைத்தான் சூட்சுமமாக வைத்துக் கொண்டுள்ளேன் .
அதனையும் பிற்பகுதிகளில் பிற் ஆசிகளில் உரைத்து விடுகின்றேன்.
எதனை என்றும் அதனை கூட உணராத மனிதன் அங்கு சென்றால் அவை நடக்கும் இவைதன் நடக்கும் .
இங்கு சென்றால் அவைதன் நடக்கும் இவ்வாறு கிரகங்களால் ஏற்படும் .இதனையும் என்று கூற பொய் கூறி புறம் கூறி கொண்டிருக்கிறார்கள் அறியாத முட்டாள் மனிதர்கள்.
எதனையும் என்றும் வீணே!! என்பதைக்கூட இதனையும் கூட இவ் ஆறுபடை வீடுகளையும் கடந்துவிட்டால் ஏழாவது படை வீடு ஒன்று உண்டு அதனையும் சிந்தியுங்கள்.
அதனையும் யானே சொல்லிவிட்டால் எவை எவை என்று கூட நீங்களும் அலைவீர்கள் என்பேன்.
எதனையும் என்று கூற அவ் ஏழாவது தலம் தான் அறிவு பின் அனைத்தும் முருகன் உங்களிடத்திலே கொடுத்துவிடுவான் வாழ்வதற்குத் தகுதியானவைகள்.
ஆனாலும் இதனையும் ஏராளமான அரசர்களும் பல புலவர்களும் இதனை நன்கு உணர்ந்திருந்து பல வெற்றிகளைக் கண்டார்கள் என்பேன்.
சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு!
ஆறுபடை வீடுகளுக்கும் நிச்சயம் !!! ஏன்? அறிந்தும்!! அறிந்தும்!! எங்கள் அருள்கள் பலம் ஆக செய்திட்டோம்!!!! அதனால் நிச்சயம் வலம் வந்து வலம் வந்து அதாவது ஆறு படை வீடுகளையும் கூட வலம் வந்தாலே!!!!!!! நிச்சயம் ஆறு அறிவுகள் செயல்பட ஆரம்பிக்குமே!!!! இக்கலியுகத்தில்!!!! படை வீடுகள் நிச்சயம் சுற்றி சுற்றி வந்தாலே நிச்சயம் பின் அனைத்தும் தெரியவரும்!!!! அப்படி இல்லையென்றால் நிச்சயம் தெரியவராது!!!! நிச்சயம் இன்னும் இன்னும் அவ் ஆறு ஆறிவுகள் செயலிழந்து போகுமப்பா!!! போகுமப்பா! நிச்சயம்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteஅய்யா பூசைக்குப் பிறகு அந்த விபூதி கிழியை என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அய்யா. நன்றி
ReplyDeleteகுருநாதரின் அருளால் ஒரு பதிவு. மருத்துவம் சார்ந்தது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்டது.
ReplyDeletehttp://fireprem.blogspot.com/2025/07/debug-disease.html?m=1