18/7/2025. ஆடி வெள்ளி கிழமை அன்று போகர் மகரிஷி அகத்தியர் பெருமான் இருவரும் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் திருக்கோயில் திருவையாறு . தஞ்சாவூர்.
எங்கும் நிறைந்திருக்கும் அன்னையே போற்றி!!
போற்றியே உன் தாள் பணிந்தேனே!!!
பணிந்தேனே!!
அனைத்து உலகமும் ஆக்குவாய் காப்பாய் அழகாகவே அருள் தருவாய்.
உனை நினைத்தே அன்னையே.. அனைத்தும் நீயே
உரைக்கின்றேனே போகனவனே!!!
உண்மைதனை உணர்ந்த பின் எக்காலம்? அறிந்தும் தாயே!!
தாயே அறிந்தும் உண்மைதனை இன்னும்.. மனிதனுக்கு புரியவில்லையே!!!
தாயே அனைத்தும் நீயே!
எண்ணிலடங்கா உயிரினங்களுக்கும் பின் ஜீவன் கொடுத்து அனைத்தும் தருபவள் நீயே!!
எண்ணற்ற கர்மாக்களை போக்குபவள் நீயே!!
எண்ணற்ற தீது பிறர் தரா தீது... அவற்றையெல்லாம் அகற்றுபவளே அகற்றுபவளே
செல்வியே!!
உன்னைத்தானே பணிந்து பணிந்து நிற்கின்றேனே!!!
அழியப் போகின்றது உலகமே
அதனை அழகாக காப்பாளே!!
காத்து அருளக்கூடியவளே!!
நின் தாளை பணிந்தேனே!!!
மனிதனின் எண்ணத்தை மாற்றுபவளே!!
அடங்காத பிடாரிகளை கூட... அடக்கி தன் கையில் அடக்கி பின் அனைத்து தீமைகளையும் நீக்குபவளே!!!
வரும் காலத்தில் அடங்காதவர்களை எல்லாம் அடக்கி ஆள்பவளே!!!
ஆள்பவளே!! அறிந்தும்
பிறர் செய்த தவறையும் பொறுத்து அருள் ஈந்து
பின் ஈசன் இடத்தில் முறையிட்டு அனைத்தும் கொடுப்பவளே!!
அனைத்தும் கொடுத்திட்டு பின் அவ்வாறு பின் நினைத்தபடி இல்லை என்றால்.. அனைத்தும் பிடுங்கிட்டு... நிச்சயம் தாராளமாக ஆற்றில் விடுபவளே!!
அவ் ஆற்றில் கூட நிச்சயம் ஐயோ.. குழந்தை!!! என்று மீண்டும் அழகாக கருணை படைத்து எடுத்து.. மீண்டும் அறிந்தும்.. இவ்வாறு எதனைச் செய்வது??
அனைத்தும் பொய் என்றெல்லாம் உணர்த்தி... தன் கையிலே இருந்திடு என்று கூறுபவளே!!
கூறுபவளே!!
உன்னை என்னவென்று? எப்படி கூறுவது?
விளக்கங்கள் தாயே!!
தாயே ! என்பதா? அறிந்தும்.. அதற்கு மேலே என்ன இருக்கின்றது??
தாய் சொல் நிச்சயம் இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை!!
தாயே!! என்று கூறிவிட்டால்
ஆனாலும் கலியுகத்திலே
எதை புரியா.. நிச்சயம் இவ்வாறாக பின் அலைந்து திரிந்து நிற்கும் பின் கருணை படைத்தவளே!!
புவனமதை ஆளுகின்ற புவனேஸ்வரியே!!!
அனைத்து அவதாரங்களையும் எடுத்தவளே நீயே!!
உனை போற்றி பணிந்து வாக்குகள்.. இன்னும் ஈகின்றேன் மனிதனுக்கு!!!
அறிந்தும் பின் அனாதையாக.. வந்த குழந்தை இங்கு!!
அவ்வாறாகவே எங்கும் நிறைந்து.. பரம்பொருளாகவே நிற்கும்... எங்கும் எங்கும் ஒரு சிறு பிள்ளையாக அவதரித்து நிச்சயம்.. எங்கெல்லாம் எங்கு செல்லக்கூடியது என்றெல்லாம் பின் ஈசனிடம் முறையிட்டு!!
தேவியே! அவதாரம்!!நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய!
நிச்சயம் இதனை தன் பின் அகத்தியனே உரைப்பான்.. மென்மேலும் ஆசிகள்.
குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு!
அப்பனே அறிந்தும் ஆசிகளப்பா!!!
உண்மைதனை கூட!!
அப்பனே இங்கிருந்தே அப்பனே பின் புறப்பட்டு எதை என்று அறிய.. இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அதாவது... எவை என்றும் உணர்ந்த பின் அப்பனே... நல்விதமாக. அனைத்திற்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருந்தான் ஈசன்.
அப்பனே கருணை படைத்தவனாக இருந்து அனைத்து ஜீவராசிகளையும் ஒரே போல்.. அதாவது ஒரே மனதாக எண்ணி எண்ணி அனைத்திற்கும் பின் அதாவது சாகா வரத்தை கொடுக்கலாமா? என்றெல்லாம்!!
அதாவது மனிதனுக்கு பல வகையிலும் கூட பின் வெற்றிகள்.. தரலாமா?? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!
தன்னில் கூட பின் இவ்வாறாகவே.. நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் அதாவது... பல உலகங்கள் அறிந்தும் புரிந்தும்.. இதை என்று அறிய.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அருள்கள் அதாவது நிச்சயம் நிறுத்தி விடலாமா?
என்று நிச்சயம் பின் கலியுகத்தில் தொடங்குவதற்கு நிச்சயம்.
நிச்சயம் அதாவது எண்ணினான் ஈசனே!!
இதை புரிந்து கொண்ட அதாவது பின்.. ஈசன் எதை எதை என்றெல்லாம் நினைக்கின்றானோ.. அவ்வாறாகவே புரிந்து கொள்ளும்.. சக்தி நிச்சயம்.. பின் தாயிற்கு பார்வதி தாயிக்கு!!
ஆனாலும் நிச்சயம் இப்படி தான் இருக்க வேண்டும் நிச்சயம்... அதாவது பின் மனிதன் அறிந்தும் கூட பின்.. எவ்வாறாக நினைக்கின்றான்
அதை நிச்சயம் தன்னில் கூட பின் மனைவி.. நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனைவி பின் எவ்வாறாக.. நினைக்கின்றாள் என்று பின் நிச்சயம் புருஷன் பின் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுதான் புருஷ லட்சணம்!!
ஆனாலும் கலியுகத்தில் அப்படி நிச்சயம் இருக்காது!!!
அதனால்தான் தோல்விகளாகவே தோல்விகளாகவே
நிச்சயம் தன்னில் கூட!!
இவ்வாறாகவே நிச்சயம் மனது ஆராய்ந்து பின் பார்வதி தேவியும் கூட ஈசனிடத்தில்...
ஏன்? இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... உன் எண்ணங்கள் பின் மக்களுக்கு.. அனைத்தும் கொடுத்த வண்ணம்.
ஆனாலும் இப்பொழுது தாழ்வான எண்ணங்கள்.. இதை யான் தாழ்வான எண்ணங்கள் என்று கருதவில்லை.
பின் அன்பானவனே!!
நிச்சயம் தன்னில் கூட ஏன்? இன்னும் மனிதனுக்கு கஷ்டங்கள் பின் கொடுக்க வேண்டும்?? என்று எண்ணினாய்!! என்றெல்லாம்!!
ஈசனார்.
நிச்சயம் இன்னும் அதாவது கலியுகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது... மனிதனின் உள்ளம் சரியில்லை.. பல கெடுதல்கள் மனிதனே செய்வான்... நிச்சயம் நல்லெண்ணங்கள் இருந்தும்... மனிதன் பயன்படுத்த மாட்டான்.
அறிந்தும்!!
இதனால் நிச்சயம் பிறர் எதை என்று புரியாமலும்.. அறியாமலும் இப்படியே சென்றாலும் சென்றடைய கூடிய நிச்சயம் எவ்வாறாக என்றெல்லாம் பின் விளக்கங்கள்.. என்றெல்லாம்!
நிச்சயம் அவ்வாறாகவே சரி!! நிச்சயம் பின் யான் அதாவது அழிவைத்தான் தரப் போகின்றேன் நிச்சயம்.. இவ்வாறாகவே அழிவை தந்தால் தான் நிச்சயம்.. மனதும் மாறுவார்கள் பின் மாற்றி.. யோசிப்பார்கள் என்பதையெல்லாம்.
நிச்சயம் தன்னில் கூட.
இதனால் நிச்சயம்.. அவ்வாறாகவே பின் நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட பின்...
பார்வதி தேவியும்
அன்பானவனே!!... எவ்வாறாக பின்.. உன் தாள் இவ்வாறாக பணிந்திட்டார்களே!!!
இன்னும் அழிவுகளா!!??
என்று!!!
ஈசனார்.
நிச்சயம் இது காலத்தின் கட்டாயம். இதனால் நிச்சயம் தன்னில் கூட
பார்வதி தேவியார்:
யானே சென்று காப்பாற்றுகின்றேன் என்று பார்வதி தேவியும் கூட!!!
ஈசனார்
இதனால் நிச்சயம் தேவியே!!! நிச்சயம் உன்னாலும் காப்பாற்ற.. எதை என்று புரிய மனிதனின்.. அழுக்குகள் அதாவது பின் மனிதனில் உள்ள அழுக்குகள் குணங்கள் எவை என்று கூற... பின் குணங்களும் அழுக்குகள் ஆகி.. தீய செயல்களை தான் செய்யப் போகின்றான்.
அதனால் நிச்சயம் பக்தி எங்கு காணப்படுகின்றது?? என்றெல்லாம்.. நிச்சயம் தன்னில் கூட!
பார்வதி தேவியார்.
ஆனாலும் நிச்சயம் பின் இவ்வாறாக பக்திகள் செலுத்தினார்களே... நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட.. என்றெல்லாம்.
நிச்சயம் பார்வதி தேவியும் யான் பூலோகத்திற்கு நிச்சயம் அதாவது பின் போக போகின்றேன்.
நிச்சயம் மனிதன் எவ்வாறெல்லாம் இருக்கின்றான் என்று நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட பின் எவ்வாறு.. என்றெல்லாம்!!
பின் நீங்கள் இங்கிருந்தே பார்த்து பின்... ரசித்தப்படியே இருங்கள் யான்.. பூலோகம் செல்கின்றேன்!! எவ்வளவு பக்தி என்று பார்க்க!
ஈசனார்.
நிச்சயம் தேவியே!!! பார்!!
அறிந்தும் கூட பின்.. மனிதனின் உண்மை நிலையை பார்.. உண்மை முகத்தை பார்.
அறிந்தும் பிறர் அறிய வண்ணம் கூட!!
இவ்வாறாகவே நிச்சயம் அறிந்தும் இதனால்.. அதாவது அழகாகவே நிச்சயம்.. இங்கு பின் அறிந்தும் முதலில் இங்கு தான்.. அறிந்தும் கூட குழந்தை ரூபம் எடுத்தாள். பார்வதி தேவியும்.
அறிந்தும் எதை என்று புரிய நேராகவே... அறிந்தும் இங்கு ஆனாலும்... அனைவரும் வந்து சென்று கொண்டிருக்க நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய!!
ஆனாலும்.. அழுதுகொண்டே அக்குழந்தை...
இக்குழந்தைதான் பின் நிச்சயம் பார்வதி தேவி.. அறிந்தும் இதனால்...அக் குழந்தை அழுது கொண்டே அழுது கொண்டே
ஆனாலும் பின் இறைவனை வணங்கி வணங்கி... நிச்சயம் அங்கும் இங்கும் அலைந்தனர்... எங்கும் இல்லை. எதை என்று புரிய.
ஆனாலும் மனிதன் அதாவது பார்வதி தேவியும்... அனைத்தும் உணர்ந்தவள் தான்
நிச்சயம் தன்னில் கூட... அப்பனே நன் முறைகளாக. அப்பனே.. எதை என்று கூற யாராவது வருகின்றார்களா என்று பார்ப்பதற்கு... நிச்சயம் அழுது கொண்டே அழுது கொண்டே... நிச்சயம் தன்னில் கூட பின் பசிக்கின்றது... பசிக்கின்றது என்று சொல்லி!!
ஆனாலும்.. யாரும் வரவில்லை நிச்சயம் தன்னில் கூட... பின் அறிந்தும் புரிந்தும் கூட
அதாவது கால்களை எதை என்று புரிய... அறிந்தும் கூட பின் அதாவது... வெயில் தன்னிலே நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய
மீண்டும் பின் நடந்து நடந்து அதாவது... பின் ஈசன் இடத்திற்கு (கோயிலுக்கு) சென்றாள் அறிந்தும் கூட பின்... அதாவது மூலஸ்தானத்திற்கு...
ஆனாலும் யார் இவள்?
எக்குழந்தை???..
அங்கு இருந்த அனைவருக்கும் இதை யார்?? பார்த்துக் கொள்வது என்றெல்லாம்.. வினாக்கள்!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் முடிவு செய்துவிட்டார்கள்.
யாரும் இக் குழந்தைகளுக்கு உதவ கூடாது என்று!!
இதையெல்லாம்
இக் குழந்தை... அதாவது அனைத்தும் எங்கும்... பரம்பொருளாக விளங்கும் இறைவனே.. பின் எதை என்று புரிய பின்... அதாவது மேல் நோக்கி பார்த்துக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம்...
பார்வதி தேவிக்கு கூட பட்டால்தான் நிச்சயம் தெரியும் என்பதையெல்லாம் ஈசனுக்கு தெரியும்.
இதனால் அழுது புலம்பினாள் நிச்சயம் பின்... உதவுகின்றீர்களா?? என்றெல்லாம்!!
நிச்சயம் யாரும் முன் வரவில்லை!!
அழுது கொண்டே! அழுது கொண்டே!... ஆனாலும் பின் உன் தாய் தந்தை எவர்?? என்று!! அக் குழந்தையிடம் கூட!!
நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் பின் அழுது கொண்டே.. எதற்கும் பதில் அளிக்கவில்லை!!
உண்டா? இல்லையா? எங்கு இல்லம் இருக்கின்றது? எதை என்று அறிய.. பின் பெரியோர்கள்.. கேட்டாலும் ஆனாலும் பதில்... அளிக்கவில்லை!!
ஆனாலும் அழுது கொண்டே! அழுது கொண்டே!
ஆனாலும் நிச்சயம் பின் அனைவரும்... திருத்தலத்தை சுற்றி பாருங்கள் நிச்சயம்.. திருத்தலத்தை சுற்றிலும் பின்.. இக்கு குழந்தையின் தந்தை தாய் பின் யாராவது.. இருக்கின்றார்களா என்று எண்ணி நிச்சயம்.. தன்னில் கூட அறிந்தும் கூட பின்... யாராவது இக்கு குழந்தையை எடுத்து.. நிச்சயம் பின் சுற்றி வாருங்கள்.. என்றெல்லாம்!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் நிச்சயம் ஒருவன் மட்டும்.. கையைப் பிடித்து நிச்சயம்.. உன் உன் தந்தை தாய் எங்கு இருக்கின்றார்கள்? என்று!!.. அறிந்தும் கூட இவ்வாறாக.. பல சுற்றுகளை கோயிலை சுற்றி சுற்றினான்!
நிச்சயம்... யாரும் இல்லை!
அறிந்தும் யார் ? யார் ? என்று!!... ஆனாலும் இவந்தனும் கூட பின் மீண்டும் மூலஸ்தானத்திற்கே சென்று... நிச்சயம் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்...
யாரும் இல்லை!!
ஏனென்றால் எதை என்று புரிய குழந்தைக்கு.. என்றெல்லாம்.
ஆனாலும் அனைவரும் முடிவு கட்டிவிட்டனர்.
இவள் தன்... பின் தவறான குழந்தையே...
அறிந்தும் இதனால்.. இக்குழந்தைக்கு அறிந்தும் தாய் தந்தையர் என்று எவரும் இல்லை.
இதனால் நிச்சயம் தன்னில் கூட.. அதாவது இத்திருத்தலத்தில் விட்டு விட்டாலும் சாபங்கள் ஏற்பட்டு... அதாவது தோஷங்களாக மாறி... இங்கு வருவோருக்கெல்லாம் பின் கஷ்டங்கள் தான் ஏற்படப் போகின்றது.
அதனால் இக்கு குழந்தையை வெளியே துரத்துங்கள் என்றெல்லாம்.
நிச்சயம் அப்பனே பின் பக்தியில்.. உள்ளவனே நிச்சயம் தன்னில் கூட... இக்கலி யுகத்தில் இப்படித்தான்... நடக்குமப்பா அப்பனே!!
உண்மை முகம் யார் என்று அப்பனே... அதாவது இறைவனே நேரில் வந்தாலும் அப்படி நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் இறைவனா?? நீ?? என்று சிரிப்பானப்பா மனிதன்!! அப்பனே
இதுதான் கலியுகம் என்பேன் அப்பனே.
எவை என்று கூற இவை எல்லாம்.. கலியுகம் ஆரம்ப கட்டத்திலே.. அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட
இதனால் அப்பனே அதனால்தான்... இறைவன் மறைமுக பொருளாக இருக்கின்றான் அப்பனே
ஆனாலும் உண்மை தூய்மையான மனதிற்கு அப்பனே இறைவன் எப்பொழுது வேண்டுமானாலும்.. இறங்குவான் அப்பா.
மீண்டும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பார்வதி தேவியும் கூட அறிந்தும்..
ஏன்? எதனால்? என்பவையெல்லாம் நிச்சயம் தன்னில் அழுது கொண்டே!!!
ஆனாலும் மீண்டும் பின் எங்கு போவது ?? என்று!!
நிச்சயம் தன்னில் கூட இங்கே அதாவது... ஈசனே எதை என்று புரிய.. அப்பனே அறிந்தும் கூட இங்கு நிச்சயம் தன்னில் கூட... அன்பானவனாகவே இருக்கின்றான்.. எதை நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் எதை கேட்டாலும்.. நிச்சயம் தன்னில் கூட கொடுத்து விடுவான் ஈசன்.
அவ்வளவுக்கு அவ்வளவு நிச்சயம் தன்னில் கூட இவ் இல்லம் (கோயில்) எதை என்று புரிய ஈசனுக்கு நிச்சயம் தன்னில் கூட பின் இவ் இல்லம் சாலச்சிறந்தது!
இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட.. எவ்வாறாக நினைத்தாலும் நிச்சயம் தன்னில் கூட இங்கேயே தங்கி விடுவோம்!!
தெரியாமல் பின் அதாவது.. அன்புடனே பின்.. அதாவது பின் அறிந்தும் இப்படித்தான் என்றெல்லாம் நிச்சயம்.. வரங்கள் அதாவது (ஈசனிடம்) பின் சொல்லிவிட்டு வந்து விட்டோமே... இதிலிருந்து பின் வாங்கக் கூடாது என்று பார்வதி தேவியும் கூட!!
மீண்டும் அறிந்தும் புரிந்தும் கூட மீண்டும் அழத் தொடங்கினாள்.
ஆனால் யாரும் முன் வரவில்லை.
நிச்சயம் வெளியே துரத்துங்கள் என்றெல்லாம். இங்கும் கூட அறிந்தும்.
இதனால் நிச்சயம் பின் வெளியே துரத்தி விட்டார்கள்.
ஆனாலும் பார்வதி தேவி புரிந்து கொண்டாள்....
கருணை படைத்தவரே!!! நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே.. பக்திகள் இருந்தும் இவ்வாறாக... பின் யார் என்று கூட தெரியவில்லையே??
நிச்சயம் பின் அவ்வாறாக தெரியவில்லை என்றாலும்.. பரவாயில்லை...
ஆனால் குழந்தை என்று கூட பார்க்கவில்லையே யாரும்.. மனிதன்... பின் கலியுகத்தில்...... இதைத்தான் நிச்சயம் தன்னில் கூட... போகப்போக இன்னும் என்னென்ன?? நடக்கப் போகின்றது என்பதை எல்லாம்!!!
மீண்டும் இங்கிருந்து பின் அரிதுவார்... அறிந்தும் எதை என்று புரிய.. பின் அதாவது அரியின் வழியில்.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... அறியும் வண்ணம் கூட பின் அப்பொழுது கூட இங்கு நிச்சயம் இன்னொரு திருத்தலம்... கூட அங்கு சென்று விட்டாள்.
(அரித்துவாரமங்கலம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இது தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இங்கு பாதாளேஸ்வரர் கோயில் உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும்.அரித்துவாரமங்கலம் (Haridwaramangalam) என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கே பாதாளேஸ்வரர் கோயில் உள்ளது, இது பாடல் பெற்ற தலம் ஆகும். சம்பந்தர் இக்கோயிலை பாடியுள்ளார்)
அறிந்தும் புரிந்தும் சரியாகவே... அங்கு அறிந்தும் புரிந்தும் கூட.. மீண்டும் எதை என்று சரியாக நிச்சயம் தன்னில் கூட அங்கு சென்று நிச்சயம் அங்கேயாவது.. நிச்சயம் பின் இருப்போமா என்றால்... நிச்சயம் இங்கிருந்து பின்..கூற... நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் அதாவது.. பின் எதை என்று அறிய அறிய.
இங்கிருந்து அதாவது எவ்விடத்திற்கும் நிச்சயம் தன்னில் கூட அக் குழந்தையை விடக்கூடாது என்பதையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. பின் (பறை) சாற்றிவிட்டார்கள்! நிச்சயம் அங்கங்கு திருத்தலங்களுக்கு!!
(அனுமதிக்கக் கூடாது என்று தகவல் அனுப்பி தந்து விட்டார்கள்)
ஓடோடி சென்று அங்கு சென்று.. நிச்சயம் யாரும் இல்லை
இங்கேயும் கூட நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறாகவே சுற்றி சுற்றி... ஒரு பஞ்ச தலங்களை சுற்றி சுற்றி.. வந்தாள்.
அறிந்தும் அப்பனே கூட நிச்சயம் தன்னில் கூட நீயே கூறலாம் ஸ்தலங்களைப் பற்றி
குருநாதர் இவ்விடத்தில் வாக்குகள் தரும் பொழுது ஆலயத்தில் தொண்டு செய்யும் பக்தர் ஒருவரிடம் குருநாதர் இட்ட கட்டளை
அவரும் ஒரு திருத்தலங்கள் பெயரை கூற!!!
குருநாதர்
அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரே நாளில் நிச்சயம்... ஐந்து அப்பனே எதை என்று கூற... திருத்தலங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சுற்றினால் அப்பனே... இரண்டை யான் சொல்லி விட்டேன்.. மீதி மூன்றை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
அடியவர்களும் அடுத்தடுத்து உள்ள கோயில்களை கூறினார்கள் குருநாதர் கூறிய பஞ்ச திருத்தலங்கள்
(ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்
சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து. 'ஆரண்யம்' என்றால் 'காடு' என்று பொருள். 'பஞ்சாரண்யம்' என்றால் ஐந்து வகை வனங்கள் என்று பொருள்படும்
. ஈசன் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திரு இரும்பூளை (ஆலங்குடி), வில்வவனத்தில் அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களே பஞ்சாரண்யத் தலங்களாகும்.
பஞ்ச ஆரண்ய தலங்கள்:
திருக்கருகாவூர்: முல்லைவனம், கர்ப்பரட்சாம்பிகை கோயில்.
திரு அவளிவநல்லூர்: பாதிரிவனம்.
அரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி): வன்னிவனம்.
ஆலங்குடி (திரு இரும்பூளை): பூளைவனம்.
திருக்கொள்ளம்புதூர் (களம்பூர்): வில்வவனம்.
இந்த ஐந்து தலங்களும் காவிரி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளவை
தொன்மையான இந்த தலங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் திருக்கயிலையை தரிசித்த பெரும்பேறு கிட்டும். அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த காலபூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
இதில் முதலாவதாகத் தரிசிக்க வேண்டிய ஆலயம் திருக்கருகாவூர். இங்கு உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும். இரண்டாவது அவளிவநல்லூர். இங்கு காலசந்தியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும். மூன்றாவது அரித்துவாரமங்கலம். இந்த தலத்தில் உச்சிகாலத்தில் பகல் 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் தரிசனம் செய்ய வேண்டும். நான்காவதாக ஆலங்குடி. இங்கு சாயரட்சையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபாடு முடிக்க வேண்டும். ஐந்தாவதாக திருக்களம்பூர். இங்கு அர்த்தஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் வழிபட வேண்டும்.
இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசித்து வாழ்வில் பெறுதற்கரிய பேறுகளையும், சகல வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது முன்னோர்களின் திருவாக்கு ஆகும்.)
அப்பப்பா அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட!!
அப்பனே இவ்வாறாகவே.. நிச்சயம் பார்வதி தேவி குழந்தை வடிவில் சுற்றி சுற்றி வந்தாளப்பா!!
அப்பனே... இவையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஆகின்றது என்பேன் அப்பனே..
அதனால் ஈ ரோடு (இரண்டோடு) நிறுத்தி விட்டேன்.
அப்பனே அதில் ஆலங்குடியும் ஒன்றப்பா!!
அப்பனே இரண்டாவது அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... தேடுங்கள் அப்பனே இவையாவது.. தேடிட்டு புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள்.
அப்பனே அனைத்தும் யானே சொல்லிக்கொண்டு இருந்தால் அப்பனே....
அகத்தியன் சொல்லி விடுவான்!!
அகத்தியன் சொல்லி விடுவான் என்றெல்லாம் அப்பனே
அதனால் அப்பனே நிச்சயம் மூளைக்கு வேலை தாருங்கள் நீங்களே!!!
அப்பனே அறிந்தும் புரிந்தும் இதனால் அப்பனே நன்மைகளாகவே... இவ்வாறாக அப்பனே.. வலம் வந்து வலம் வந்து அப்பனே...இவ் ஆடி தன்னிலே!!!
(பார்வதி தேவியார் இந்த பஞ்ச திருத்தலங்களையும் சுற்றி சுற்றி வந்தது ஆடி மாதத்தில்)
அப்பனே நல்விதமாகவே இவ் ஆடி மாதத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சுற்றி வந்தால் அப்பனே நிச்சயம் அருள்கள் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல்... இங்குதான் அவள் தனக்கு.. பிடித்தது!!!
மீண்டும்.. அமர்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இவ்வாறாக.
ஆனாலும் அப்பனே மேலிருந்து அப்பனே தேவர்களும் எதை என்று கூற இந்திரர்களும் பல ரிஷிகளும் கூட ஆனாலும்... இக் குழந்தையைக் காண!!
அதாவது பார்வதி தேவி தான் என்றெல்லாம்!!
நிச்சயம்.. பின் தேவிக்கு யாராவது உதவுவார்களா??.. என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அங்கே (தேவலோகத்தில்) பின் ஏக்கம்.. கொண்டிருந்தார்கள்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே யாரும் பின் உதவ முன் வரவில்லையப்பா!!
மீண்டும் அப்பனே எங்கெங்கு அப்பனே.. எதை என்று புரிய அப்பனே பின்.. இவ்வாறாகவே அங்கும் இங்கும்.. சென்று அப்பனே... நிச்சயம் ஒன்றும் ஆகவில்லையப்பா!!
இதனால் அப்பனே மீண்டும் இங்கு வந்து விட்டாள்!!!
அப்பனே இவ்வாறாகவே எவ்வாறாகவே.... அறிந்தும் புரிந்தும் கூட... மீண்டும் அப்பனே பின் ஒன்றும் தெரியாமல்... எதை என்று புரிய அப்பனே.. நல்விதமாகவே ஆசிகளோடு அப்பனே.. பல வகையிலும் கூட இந்திரனும் கூட.. பின் எதை என்று புரிய மறைமுகமாக.. வந்து மனித ரூபத்தில் வந்து...
பின் தாயே நீங்கள்.. குழந்தை ரூபத்தில் வந்தது.. யான் அறிந்தேன்
நிச்சயம் இப்படியா?? நீங்கள் சுற்றுவது!!
நிச்சயம் வந்து விடுங்கள்.. தேவையில்லை நிச்சயம் தன்னில் கூட.
பார்வதி தேவியும்
நிச்சயம் இந்திரனே!!!... இவ்வாறாக மனிதன் எவ்வாறாகவெல்லாம் பின் இருக்கின்றான்.. கலியுகத்தில் என்று.. இவைதன் நிச்சயம் தன்னில் கூட பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கிணங்கவே யான்..இவ் அவதாரம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட.. பின் குழந்தையாகவே.. அறிந்தும் கூட இதனால்.. நிச்சயம் இவ்வாறெல்லாம் அழகாகவே !! பின் இதை என்று கூற பின்... இத்திருத்தலத்திலே... பின் சுவடிகளாக எழுதி வைத்திருந்தனர்.
ஆனால் அதையும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... அருகில் இருக்கும் ஓடையில் பின் விட்டு விட்டார்கள் சுவடிகளை.. இங்கே தொலையட்டும் என்று அப்பனே.
இன்னும் பல உண்மைகள் இருக்கின்றதப்பா.. அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. தெரிந்து கொண்டால் கலியுகத்தில்.. அப்பனே மனிதன் நோயின்றி.. அப்பனே பின்.. ஒரு குறையும் இல்லாமல் வாழலாம் என்பேன் அப்பனே.. நல்விதமாக!!
ஆனாலும் அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. ஒளித்து வைத்துக்கொண்டு அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... காசுகளுக்காகவே அப்பனே... அதைச் செய்கின்றேன் இதை செய்கின்றேன். என்றெல்லாம்
. என்னிடத்தில் உன்னிடத்தில் (சுவடிகள்) என்றெல்லாம் அப்பனே... சண்டைகள் இட்டுக்கொண்டு அப்பனே... மனிதனை அப்பனே நிச்சயம் கர்மத்தில் அதாவது பாவத்தில் தள்ளிவிட்டார்கள் என்பேன் அப்பனே.
இவை யார் ?? எதை என்று செய்தார்கள் என்றால்???...........
பக்தர்கள் தான் என்பேன் அப்பனே!!
யான் பெரியவன்... நீ பெரியவனா? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
இதனால் மீண்டும் மீண்டும் அப்பனே.. பின் இவ்வாறாகவே அக்குழந்தை... மீண்டும்
""""" சிதம்பரத்திற்கு !!!!!
சென்றது!
சிதம்பரத்திற்கும் அப்பனே... அண்ணாமலைக்கும் அப்பனே... அறிந்தும் எவ்வாறாக அப்படியே எதை என்று புரிய அப்பனே பின்... மீண்டும் மீண்டும் அப்பனே பல திருத்தலங்கள்... அப்பனே எதை என்று புரிய... மீண்டும் அப்பனே இவ்வாறாகவே... எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட மீண்டும் இங்கு வந்து.
ஆனாலும் அழகாகவே இங்கு வந்து வந்து!!.. அப்பனே எதை என்று கூற... இவ்வாறாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் அறிந்தும் கூட பின்... எதை என்று கூற பின் அங்கும் இங்கும்... சுற்றி பல பல ஆலயங்களுக்கும் அனைத்தும் சுற்றி.. சுற்றி அப்பனே மீண்டும் இங்கு.. தங்கி பின் எதை என்று கூற பின்.. இதை எதை என்று அறிய அறிய
இதனால் மனது... நிச்சயம்... ஈசனாரே... மணாளனே நிச்சயம் தன்னில் கூட... போதும் பட்ட பாடுகள்... என்னை அழைத்துக் கொள் என்று நிச்சயம்.
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் சிறப்பாக எவை என்று கூற அப்பனே பின்
(ஆடி பூரம்) ஆடிப்பூரத்தன்று அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் கொடுத்து பின் உலகம் செழிப்படைக!!!
யான் குழந்தை நிச்சயம் தன்னில் கூட என்னை யாரும் கவனிக்கவில்லை... நிச்சயம் தன்னில் கூட
அப்படி கவனிக்கவில்லை என்றாலும் நிச்சயம்.. இங்கு வந்து பின் அருள்கள் புரிந்து எதை என்று.. அறிய நிச்சயம் தன்னில் கூட பின்...
அதாவது ஈசனார் நிச்சயம் புரியட்டும் என்று... அப்பனே மீண்டும்... அப்பனே ஈசனோடு போய் சேர்ந்தாளப்பா!! எதை என்று கூற!!
அதனால்தான் அப்பனே இங்கு சிறப்பு என்பேன் அப்பனே.
(திருவையாறு ஆலயத்தில் ஆடிப்பூரம் சிறப்பான விழாவாக நடைபெறும் இதனுடன் அப்பர் கயிலை காட்சியும் சிறப்பாக நடைபெறும் )
நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... ஆனாலும் பின் மீண்டும் அங்கு சென்று நிச்சயம் தன்னில் கூட பின்
ஈசனாரே!!!... நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக... எங்கெல்லாம் சுற்றினேன் நிச்சயம்... மனிதனுக்கு அறிவு இல்லையே!! நிச்சயம் தன்னில் கூட!!
இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இதனால் மீண்டும் அதாவது எங்கு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... இங்கிருந்தே நிச்சயம் தன்னில் கூட... மீண்டும் வா.
பின் வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் காட்சிகள் கொடு.. நிச்சயம் தன்னில் கூட உன்னுடைய காட்சிகளை (தரிசனம்)... அதாவது எங்கிருந்தாலும் நிச்சயம் பின் அதாவது.. மனிதனுக்கு புத்திகள் இல்லை... அப்பால் அதாவது புத்திகள் இல்லாவிடினும்.. நிச்சயம் தன்னில் கூட புத்திகள்... இருக்குமாறு நிச்சயம் பின் ஆசிகள் கொடு!! என்றெல்லாம் மீண்டும் நிச்சயம் தன்னில் கூட.. கைலாயத்தில் அறிந்தும் புரிந்தும் கூட!
அனைவரையும் அழைத்திட்டு வந்து நிச்சயம் தன்னில் கூட... காட்சிகள் இங்கே நிச்சயம் தரப்பட்டன.
இதே போலத்தான் பின் வருடம் வருடமாக... இங்கு ஈசன் எப்பொழுதும் பின்.. பார்வதி தேவியும் பின் கேட்டு.. எதை என்று புரிய பின் அதாவது.. கேட்டதற்கு இணங்க நிச்சயம்... வருடத்தில் ஆடிப்பூரம் பூரத்தன்று நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் அனைத்து தேவாதி தேவர்களும்.. நிச்சயம் தன்னில் கூட இந்திரனும் வந்து.. இங்கு காட்சி தருவார்கள்.. நிச்சயம் தன்னில் கூட.
அவ்வாறெல்லாம் காட்சிகள் தந்து மனிதனின் இடத்தில் பின் அழுக்குகளை நீக்கிட்டு... மீண்டும்!!
இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும்.. மறைமுகமான பொருள் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.
(இவ்விடத்தில் குருநாதர் ஆலயத்தில் வாக்குகள் உரைக்கும் பொழுது இந்த இடத்தில் மீதி ஆலயத்தையும் குருநாதரிடம் தெரிவிக்குமாறு கேட்க
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. நீங்களே பின் எவை என்று அறிய அறிய தெரிந்து விடும் என்பேன் அப்பனே அதிவிரைவிலே அப்பனே நிச்சயம் அப்பனே... இவை ஐந்தும் ஒரே முறையில் சுற்றினால் அப்பனே சில பாவங்கள் தொலைந்து ஓடும் என்பேன் அப்பனே.
புண்ணியங்கள் கிடைக்கும் என்பேன் அப்பனே.
பக்தர் ஒருவர் இடை மறித்து குருநாதா தாங்கள் குறிப்பிடும் ஆலயம் திருவாரூர் கோவிலா?? என்று கேட்க
அப்பனே நிச்சயம் இவ்வாறாக அவ்வாறாக என்றெல்லாம்... இதுதான் என்று ஆணித்தரமாக அப்பனே பின் யோசித்து வையுங்கள் அப்பனே !!
இத்துடன் வாக்குகள் யான் முடியப்போவதில்லை அப்பனே... இன்னும் வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே
இத்தலத்தின் சிறப்பு அதிகமாக உள்ளது என்பேன் அப்பனே நிச்சயம்.. குறிப்பிடுவேன் என்பேன் அப்பனே.
பின் நிச்சயம் தேர்ந்தெடுங்கள் நீங்களே என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தெரியவரும் என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே தெரிந்து விடும் என்பேன். அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறு என்பதையெல்லாம் பின் தொலைநோக்கு (இன்டர்நெட் கூகுள் லவ் பார்த்தால் தெரிந்து விடும் என்று குருநாதர் குறிப்பிடுகின்றார்)
பார்வையிலே அதை குறிப்பிடுகின்றார்கள் என்பேன் அப்பனே.
அப்பனே நலன்களாகவே ஆசிகளப்பா!! இதனால் அப்பனே.... நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாக... குழந்தை நிச்சயம் தன்னில் கூட அழுது கொண்டே அழுது கொண்டே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அனைத்து.. தேவாதி தேவர்களும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இந்திரனும் கூட எவ்வாறாக... ஆடிப்பூரத்தன்று நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே மேலே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய பின் குழந்தை!! ஈசனிடத்திற்கு சென்று இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்னென்ன? வேண்டுமா? அப்பனே அனைத்தும்..அக் குழந்தைக்கு செய்தனர் என்பேன் அப்பனே
அதனால்தான் அப்பனே இவ் ஆடி மாதம் அனைத்துமே... அதாவது அம்பாளுக்கு என்னென்ன? நினைத்து செய்கின்றீர்களோ... அது உடனடியாக.. அம்பாளை நோக்கி செல்லும் என்பேன் அப்பனே. குழந்தைக்குச் செல்லும் என்பேன் அப்பனே!!
இதனால் மனம் மகிழ்ந்து.. அனைத்தும் கொடுக்கும் என்பேன் அப்பனே.
கூழ் பிரசாதம்.
ஆடி மாதத்தில் கூழ் தானம்.
அக் குழந்தைக்கு பிடித்தமான ஒன்று...கூழ் என்பேன் அப்பனே.
நிச்சயம் எதை என்று புரிய...
இதனால்தான் அப்பனே ஆடி மாதத்தில் அனைவருமே பின் நிச்சயம் தன்னில் கூட தாராளமாக... அதாவது அம்பாள் இடத்திற்கு சென்று... அப்பனே எப்படி எதை என்று அறிய கொடுங்கள் என்பேன். அப்பனே
""" கூழ் தானம் !!!!!
(ஆடி மாதத்தில் அம்பாள் திருத்தலங்களில் அம்பாளுக்கு கூழை படைத்து பக்தர்களுக்கு மக்களுக்கு அருந்துவதற்கு தர வேண்டும். நீர் மோர் தானம் போல கூழ் தானம் செய்ய வேண்டும்.
அறிந்தும் புரிந்தும் நிச்சயம் தன்னில் கூட அக்குழந்தை.. எவ்வாறாக நிச்சயம் பார்வதி தேவியே!! எதை என்று புரிய நிச்சயம்.. அருள்கள் அனைத்தும்.. அருளிக் கொண்டே இருக்கின்றாள்.
இதனால் எத்திருத்தலத்தில் சென்றாலும் நிச்சயம் தன்னில்... கூட இதை நீங்கள் கொடுங்கள்!! அக் குழந்தை அழகாக.. உட்கொண்டு ஆசிகள் கொடுத்து... உங்கள் குறைகளை நீக்கிவிடுவாள்.
அறிந்தும் அப்பனே இன்னும் அப்பனே ரகசியங்கள் இன்னும் பல ரகசியங்கள் உள்ளதப்பா.
சாதாரணமில்லை என்பேன் அப்பனே.. இன்னும் அப்பனே எதை என்று புரிய.. இன்னும் இன்னும் விளக்கங்கள் கொடுக்கின்றேன்.
இப்போதைக்கு போதுமப்பா.
ஆடி மாதத்தின் சிறப்பு அப்பனே.. திருத்தலத்தில் இருந்து தான் வந்தது என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே!!
திருவை ஆறு..
திருவை ஆடி!!
அப்பனே இவையும் குறிப்பிடலாம் என்பேன் அப்பனே.
(திருவையாறு எனும் தளத்திற்கு மறு பெயர் திருவையாடி)
அப்பனே இதனால்தான் என் பக்தர்கள்.. அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே பின் தெரியாமல்... எதற்காக ஆசைப்பட்டாலும் ஒன்றும் கிடைக்காதப்பா!!
அப்பனே இதனால் அனைவரும் கூட ஒன்று சேர்ந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே
இவ் ஆடி மாதத்தில் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே எங்கு.. எதை என்று கூற அம்பாள்.. இருக்கின்றாளோ அங்கு நிச்சயம் தாருங்கள் (கூழ் தானம்) என்பேன் அப்பனே
அக்குழந்தை வந்து உட்கொள்வாள் என்பேன் அப்பனே.
அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என்பேன் அப்பனே.
அப்பனே அவை மட்டும் இல்லாமல் குழந்தைக்கு என்னென்ன தேவையோ.. எதையெல்லாம் நிச்சயம் தெரியும் அப்பா.. நிச்சயம் தன்னில் கூட
இவ்வாறாக அப்பனே போகப் போக எவை என்று அறிய அறிய அப்பனே.. அக்குழந்தை வளர வளர அப்பனே என்னென்ன செய்வீர்கள் என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாகவே இன்னும் சிறப்புக்கள் யான்.. நிச்சயம் சொல்வேன் அப்பா
இதனால் அப்பனே நல்விதமாகவே.. அறிந்தும் கூட இதனால் அப்பனே.. எதை என்று அறிய அறிய அப்பனே.. அவள்தன் நிச்சயம் தன்னில் கூட அக்குழந்தை.. கோபம் கொள்ளாமல் நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறு பின் இருந்ததற்கு.. நிச்சயம் தன்னில் கூட அக்குழந்தைக்கும் கொடுத்து.. அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்றெல்லாம்.. அப்பனே அக்குழந்தையும் கூட.. நிச்சயம் தன்னில் கூட அதே போல் அப்பனே
இவ் அம்பாளுக்கும் கொடுங்கள்.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பக்கத்தில் இருப்பவர்களுக்கும் நிச்சயம் தன்னில் கூட.. அனைவருக்கும் கொடுங்கள் என்பேன் அப்பனே..
திருப்தியாக அக்குழந்தை ஏற்றுக் கொள்வாளப்பா!!
நல்விதமாக ஆசிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இன்னும் அப்பனே.. ஆடி மாதத்தின் சிறப்பு இன்னும் அப்பனே விவரிக்கின்றேன்
ஒவ்வொரு தலத்திலும் கூட நிச்சயம் விவரிப்பேன் ஆசிகள் அப்பனே ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!