​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 21 July 2025

சித்தன் அருள் - 1908 - பாபநாச கூட்டு பிரார்த்தனை - சிறு விளக்கம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் திருவருளால், லோக ஷேமத்திற்காக 27/07/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி > அம்பாசமுத்திரம் அருகில் இருக்கும் பாபநாசத்தில், அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை நடத்துகிறார்கள். அதன் விவரம், கீழே தரப்பட்டுள்ளது.

நித்ய பூஜையில், தியானத்தில் அகத்தியப்பெருமானிடம், "என்ன! பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனையாமே?" என்று வினவிய பொழுது, அவர் காட்டிய காட்சி மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. விளக்கு ஏற்றி இருக்க, அதன் அருகில் பத்மாசனத்தில் அமர்ந்து, ஒரு குரு தன் மாணாக்கர்களை எப்படி கவனிப்பாரோ, அந்த நிலை காட்சி கிடைத்தது. அவர் ஏற்பாட்டில் நடப்பதால், அன்றைய தினம் யாம் அங்கிருப்போம் என்பதையும் உணர்த்தினார். அங்கு அன்று என்ன நடக்கும் என்று கேட்ட பொழுது, உடன் பதில் கூறாவிடினும், பலப்பல வருடங்களுக்கு முன் திரு ஹனுமந்ததாசன் அவர்கள் கஞ்ச மலையில் அகத்தியப்பெருமானின் ஜீவநாடி வாசித்து, இது வரை வெளி வராத வாக்கு ஒன்றிலிருந்து ஒரு சிறிய தகவல், தானாகவே அடியேனிடம் வந்து சேர்ந்தது. அந்த நாடி வாசிப்பை கீழே தருகிறேன்.

"அகத்தியன் பொய்ச் சொல்லமாட்டேன், நடந்ததை உண்மையாக சொல்லுகிறேன், அகத்தியனுக்கு ஞாபகமறதி மிக அதிகம்  என்று எல்லோரும் சொல்லுவார்கள், அதை நினைவுகொண்டு சொல்லுகிறேன், முன் இதுபோல் காலங்கிநாதன் ஒருபொழுதும் மனிதர்களை வரவழைத்து, தன் இருப்பிடத்திற்கு வரவைத்து, எதோ சொல்லப்போகிறாரே, அது என்னவென்று, எனக்கு இன்னும் தெரியவில்லை. அவர் வரவழைத்தது மிகப்பெரிய காரியமடா.  அவர் சொல்லி நீங்கள் எல்லோரும், எத்தனையோ இடையூறுகள் இருந்தபோதும், எத்தனையோ பிரச்சனைகள் இருந்தபோதும், எத்தனையோ போராட்டங்களை தினம்தினம் சந்தித்து கொண்டிருக்கிற வேளையிலும் கூட, அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காலாங்கிநாதன் சொன்னான், அகத்தியன் சொன்னான் என்று அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு ஓடி வந்திருக்கிறீர்களே, உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்? என்றுதான் கேட்பேன் . மனிதனல்ல நான் நன்றிக்கடன் செய்வதற்கு. சித்தனாகி இருந்தால் கூட, ஓ! எனக்கும் சில கடமைகள் உண்டு. அதை கடமைகள் எல்லாம் நினைத்து பார்க்கும்பொழுது எல்லாம், என் பேச்சுக்காகவும், காலாங்கிநாதன் சொல்லுக்காகவும் கேட்டு, நீங்கள் எல்லாருமே எல்லா வேலைகளையும் விட்டு, எல்லா பிரச்சனைகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, ஓடிஓடி இங்கு வந்திருக்கிறீர்களே ! உங்களை நான் எப்படி பாராட்டுவேன் !

எவ்வளவு பெரிய பாக்கியம் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று நான் சொல்லமாட்டேன் , நான் நிறைய பாக்கியம் செய்திருக்கிறேன் என்று சொன்னால் , அதை தற்புகழ்ச்சியாக எண்ணக்கூடாது. அகத்தியனுக்கு எதற்கு தற்புகழ்ச்சி என்று கேட்காதே? எல்லாவற்றையும் துறந்தவன் என்றாலும் கூட, அகத்தியன் சொன்னதற்கு ஒருகட்டளைக்கு தலைவணங்கி ஓடோடி வந்திருக்கின்ற நீங்கள் எல்லாம், மிகவும் புனிதமானவர்கள்! உங்களுக்கு ஏதேனும் கைமாறு செய்யவேண்டும்

காலாங்கிநாதரே வியக்கும் அளவுக்கு கோடி கோடியாய் இவர்களால் சம்பாதிக்க முடியும்! குபேரனே மலைத்துப்போய் நிற்கும் அளவுக்கு இவர்களால் பொருளை ஈட்டக்கூடிய வன்மை இந்த மாந்தர்களுக்கு உண்டு! ஆனால் அதைவிட மிகப்பெரியபுண்ணியம் இப்பணம் சம்பாதிப்பதல்ல, புண்ணியத்தை சம்பாதிப்பது! அந்த புண்ணியத்தை காலாங்கிநாதரும் தான்செய்த 3747 ஆண்டுகளாக தவம் செய்தேன் என்று சொன்னேனே, அந்த தவத்தின் புண்ணியத்தில் 1 / 8 இல் பகுதியை , இங்குள்ள அத்தனை பேருக்கும் பிரித்து கொடுக்கிறானாம்!  அதையும் நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்! அகத்தியன் கொடுத்த புண்ணியம் என்பது வேறு, நேபாள நாட்டிலே எனக்கு கிடைத்த புண்ணியம் அளிப்பது வேறு, சிலருக்கு ஏற்கவே புண்ணியத்தை வாரி வழங்கியிருக்கிறேன், அதை கணக்கு போட்டு கொடுத்திருக்கிறேன் .

இவனோ கணக்கில்லாமல் ஓர் ஆழாக்கு என்கிறான். ஆழாக்கு என்றால் எட்டில் ஒரு பங்கு , ஒரு படி . ஆழாக்கு புண்ணியம் என்று விளையாட்டாக சொல்லுவார்கள் அந்த காலத்திலே. ஆழாக்கு என்றால் ஆழமான நாக்கு உள்நாக்கில் இருந்து ஆத்மார்த்தமாக சொல்லக்கூடிய புண்ணியம். காலாங்கிநாதர் தான்பெற்ற 3747 ஆண்டுகளாக கடும் தவம் செய்து பெற்ற புண்ணியத்தை , இங்கு அமர்ந்து கேட்கின்ற அத்தனை பேர்களுக்கும் , தனமாக வழங்குகின்றான், தாரைவார்த்து கொடுக்கிறான்! சற்று நேரத்தில் கூட வானத்திலே மேகம்கூடியது. மேகம் கூடியது கூட அங்கங்கே ஒருதுளி விழுந்தது, அந்த துளியே தாரையாக எண்ணிக்கொண்டு நீங்கள் பெற்றிட வேண்டும். இன்னும் சில சமயத்தில் துளி விழலாம், அந்த துளியில் காலாங்கிநாதரின் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரலாம்! ஆகவே இதுவும் நல்ல நாள் !

அவன் அழைத்தும் கேட்டதில்லை, அவன் அழைத்தும் தன் புண்ணியத்தி உங்களுக்கு குடுக்கிறானென்றால், நீங்கள் மிகப்பெரிய புண்ணியசாலிகள்தான். ஏனென்றால் இது கிடைக்காததுதான். நாளைக்கே உங்கள பணம் சம்பாதிக்க முடியும் , புகழ் சம்பாதிக்க முடியும், ஆபரணங்கள் சம்பாதிக்க முடியும், வீடுகள்  சம்பாதிக்க முடியும் , மனிதர்களை சம்பாதிக்க முடியும், புதையல்களை சம்பாதிக்க முடியும், ஆனால் உங்களால் காலாங்கிநாதர் பெற்ற புண்ணியத்தை சம்பாதிக்க முடியாது. அந்த புண்ணியத்தை இன்றைக்கு அவர் தந்திருக்கிறார்! ஆகவே நீங்கள் அத்தனை பேருமே மிகச்சிறந்த பாக்கியசாலிகள் என்பதால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! ஏ மைந்தர்கள், என் குழந்தைகள், என் பேரப்பிள்ளைகள், எல்லாரும் நன்றாக இருக்கவேண்டுமென்று அகத்தியன் ஆசைப்படுவதுகூட, ஒரு சமயம் தன் நிலையை விட்டு, என் சித்த நிலையயை விட்டுக்கூட இறங்கி வந்திருக்கின்றேனோ என்று நான் நினைப்பது உண்டு. ஆனால் அது அல்ல, பக்திக்கு முன் எல்லாமே பித்து பித்தர்கள் தான், சித்தர்கள் தானடா. அந்த பக்தியின் அடிப்படையில் தான் அகத்தியன் நான் சொல்லுகிறேன், இங்கு உள்ள அனைவருக்கும் நல்லதொரு பொற்காலம்  ஆரம்பித்திருக்கிறது !

இவர்கள் 102 (அன்று) கோடி மக்கள் இல்லை, மிக மிக புண்ணியம் பெற்றவர்கள் இங்கு இருக்கிறார்கள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இருக்கிறது என்று அகத்தியன் சொல்லுவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அகத்தியன் சொல்லி வரவேண்டியது கட்டாயம் இல்லை, எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறது, எத்தனையோ பேர் இன்றைக்கு கூட தொடர்ந்து நிழலாக வந்து கொண்டிருக்கிறது. ஒரு சமயம் இங்கு வரும் பலருக்கு கூட, காலாங்கிநாதர் இங்கு வரச்சொன்னாய் போகிறோம் என்று சொன்னால் கூட, எண்ணமெல்லாம் வீட்டிலும், குழந்தைகள் மேலும், அவர்கள் மேல் பாசத்தோடு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் . பாசம் அவர்கள் கண்ணை மறைப்பதெல்லாம் எனக்கு தெரியும். ஆக எதோ வந்துவிட்டோம் எப்பொழுது திரும்ப போகிறோம் என்ற எண்ணம் கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் அவர்கள் தாண்டி அவர்கள் செய்த தவறுகளையும், இன்னும் ஆன்மீக நெறியில் இன்னும் ஈடுபடாமல் இன்னும் அலைபாய்கிறார்களே அவசியம் வருத்தப்பட்டாலும் கூட, என்னருமை நண்பன் காலாங்கிநாதனே வரச்சொல்லி, அதையும் மரியாதை கொடுத்து வந்தீர்கள் அல்லவா? சித்தனுக்கு மரியாதையை கொடுக்கின்ற காலம் எதுவோ? இனி சித்தர்களே இந்த காலத்தை உலகத்தை ஆட்சி செய்யப்போகிறார்கள்! காலாங்கிநாதர் தான் அதற்கு தலைமை ஏற்பார்! நான் பின்னிருந்து செயல்படுவேன்! இனி தெய்வத்தை நோக்கி கூட நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டாம், சித்தர்களை நெருங்கினால் தெய்வத்திடம் நேரடியாக போய் சேர்ந்துவிடும்! இனி எதிர்காலம் முழுவதும் சித்தர்களின் ஆட்சி என்பதற்கு இன்றைக்கு தான் முதல்முதலாக ஒப்பந்தம் கையெழுத்து ஆகின்றது ! [விரிவான கஞ்சமலை வாக்கு பின்னர் வரும் என நம்புகிறேன்!]

மேற்கூறிய அகத்திய பெருமானின் கருத்துக்களை வாசித்து அதன் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். பாபநாசம் சென்று அவரின் சத்சங்கத்தில் (கூட்டு பிரார்த்தனை) கலந்து கொண்டு, புண்ணியவான் ஆகிவிடுங்கள். காரணமின்றி, அகத்தியப்பெருமான் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்க மாட்டார் என்று நம்புங்கள். நம்பிக்கைதான் நல் வாழ்க்கை. இது ஒரு நல்ல வாய்ப்பு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 20 July 2025

சித்தன் அருள் - 1907 - அன்புடன் அகத்தியர் - தென்குடித்திட்டை வாக்கு!




18/7/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சுகுந்த குந்தளாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் ஆலயம். தென்குடித்திட்டை. திட்டை குரு பகவான் ஆலயம். 

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள். 
அப்பனே குறைகள் வேண்டாம். 
அப்பனே  நிச்சயம் தன்னில் கூட

அனைத்தும் யான் அறிவேன் அப்பனே யார் யாருக்கு என்னவென்று??

அப்பனே இப்படியே அனைத்தும் யான் மாற்றி தருவேன் அப்பனே குறைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட 

அப்பனே நீங்கள் கேட்டுத்தான் அப்பனே யாங்கள்.. கொடுக்க வேண்டும் என்றால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஏதப்பா? 

பின் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாகவே.. இதனால் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின் நம்பிக்கையோடு.. எங்களை சரணடைந்தாலே போதுமானதப்பா. 

உங்கள் குறைகள் எப்படி.. ஏது என்று யாங்களே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பக்குவம் ஏற்படுத்தி அப்பனே.. நிச்சயம் சில வெற்றிகளை.. இவ்வாறாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட... 

(குருநாதர் இவ்வாக்கில் முருகனுடைய ஆலயமான விராலிமலை குறித்து குருநாதர் ஒரு பக்தருக்கு தனிப்பட்ட முறையில் விராலி மலைக்கு காவடி எடுத்துச் செல்லும்படி கூறிய பொழுது விராலிமலை சிறப்பை பற்றி வாக்குரைத்தார்)

அப்பனே பின் அதாவது எதை என்று அறிய.. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எண்ணக்கூடாத அளவிற்கு அப்பனே பின் 

கந்தன் அப்பனே தன் நிச்சயம் விரலை... என்று அழைக்க.....அவ் மலை விராலி மலை. 

(முருகனின் விரல் ஆக இருக்கும் ஸ்தலம் விராலிமலை... இந்த ரகசியத்தை குருநாதர் கூறினார்) 

அப்பனே சொன்னேனே அப்பனே... முன் உரைத்த வாக்கில் கூட அப்பனே 

(திருவையாறு வாக்கு.. சித்தன் அருள் 1906.

இவ்வாறாகவே அங்கு சென்று அப்பனே...

(அதாவது திருவையாறு

மற்றும் பார்வதி தேவியார் குழந்தை ரூபத்தில் சுற்றித்திரிந்த பஞ்ச ஆரண்ய திருத்தலங்கள்...

பஞ்ச ஆரண்ய தலங்கள்: 
திருக்கருகாவூர்: முல்லைவனம், கர்ப்பரட்சாம்பிகை கோயில்.

திரு அவளிவநல்லூர்: பாதிரிவனம்.

அரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி): வன்னிவனம்.

ஆலங்குடி (திரு இரும்பூளை): பூளைவனம்.

திருக்கொள்ளம்புதூர் (களம்பூர்): வில்வவனம்)

இவ்வாறாகவே அப்பனே அங்கு சென்று.. அப்பனே பின் தியானங்கள்... அதாவது தீபங்கள் ஏற்றி அப்பனே...

(அந்த ஆலயங்களோடு தொடர்ச்சியாக)


அப்படியே இவ் திட்டை வந்து 

(தென்குடி திட்டை தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) 


நிச்சயம் தன்னில் கூட 

 திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்) 

கீழ்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்) 

அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இப்படியே பின்

உப்பிலியப்பன் 

(திருவிண்ணகர் உப்பிலியப்பன் திவ்ய தேச திருத்தலம் கும்பகோணம்) 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே

கடைசியில் அப்பனே 

திருவிடைமருதூர் சென்றடைய... அப்பனே நிச்சயம் சில பாவங்கள்.. போகுமப்பா!!

ஆனாலும்.. இவைதன் மனிதனுக்கு பின் தெரியாதப்பா. 


அப்பனே இவ்வாறாகத்தான் மனிதனுக்கு ஒன்றும் தெரியாமல்... அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான். 

அப்பனே இவ்வாறாக கலியுகத்தில்... நோய்களும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. கஷ்டங்களும் அப்பனே பின்.. வரும் என்பது இறைவன் தீர்ப்பப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் தான் அப்பனே... சித்தர்கள் யாங்கள் வந்து வந்து வந்து அப்பனே பின்... மக்களை பின் தெளிவுபடுத்தி... அப்படி தெளிவு பெறாவிடிலும் கூட அடித்து.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட திருத்தி... அப்பனே பின் வழிகள்.. செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 

அதனால் குறைகள் வேண்டாம் அப்பா நிச்சயம் தன்னில் கூட. 

ஏனென்றால் கலியுகத்தில் அப்பனே... தீயவை தான் பின் நடக்க வேண்டும்... என்றெல்லாம் காலத்தின் கட்டாயம் 
 என்பதை எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்

அதை தன் நல்வழிப்படுத்த அப்பனே பின் சில அப்பனே பின் மனிதர்கள் எங்களுக்கு தேவை என்பேன் அப்பனே.. யார் யார் என்பதை எல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. நல் எண்ணங்களாக இருங்கள் புண்ணியவானாக இருங்கள்.. என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம்.. உங்களுக்கு சொல்லித் தந்து விட்டால் அப்பனே... அதை ஏற்று அப்பனே.. அனைத்து சித்தர்களின் ஆசிகளும் கிடைத்து அப்பனே... பாவங்களும் பின் அப்பனே போக்கி.. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட எங்கள் அருகில்.. வந்தால் அப்பனே நீங்களும் கூட.. சேவைகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்பேன் அப்பனே. 

இவ்வாறாகத்தான் அப்பனே எவ்வாறாக.. மனிதனைத் தேர்ந்தெடுப்பது??
எவ்வாறாக பின் உணர்த்துவது??
பின் எவ்வாறாக.. உணராவிடிலும் கூட அப்பனே... எவ்வாறு எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்கள் அருகில் வந்து விட்டால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாங்களே... வழி விடுவோம் என்போம் அப்பனே.

கர்மத்தை அதாவது பாவத்தை முதலில் நீக்க வேண்டும் என்பேன் அப்பனே.

எவை என்று கூற.. இதனால் அப்பனே சில பாவங்கள்... அவரவர் இடத்தில் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

அதை நீக்குவேன் யான் என்பேன் அப்பனே. 

எங்களுக்கு தெரியுமப்பா எப்பொழுது எங்கு நீக்க வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

இதனால் அப்பனே பின் நன்மைகள் தான் ஏற்படும் என்பேன் அப்பனே 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 19 July 2025

சித்தன் அருள் - 1906 - அன்புடன் அகத்தியர் - ஆடி வெள்ளி வாக்கு!











18/7/2025. ஆடி வெள்ளி கிழமை அன்று போகர் மகரிஷி அகத்தியர் பெருமான் இருவரும் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் திருக்கோயில் திருவையாறு . தஞ்சாவூர்.

எங்கும் நிறைந்திருக்கும் அன்னையே போற்றி!!
போற்றியே உன் தாள் பணிந்தேனே!!!
பணிந்தேனே!!
அனைத்து உலகமும் ஆக்குவாய் காப்பாய் அழகாகவே அருள் தருவாய். 
உனை நினைத்தே அன்னையே.. அனைத்தும் நீயே 
உரைக்கின்றேனே போகனவனே!!!

உண்மைதனை உணர்ந்த பின் எக்காலம்? அறிந்தும் தாயே!!

தாயே அறிந்தும் உண்மைதனை இன்னும்.. மனிதனுக்கு புரியவில்லையே!!!

தாயே அனைத்தும் நீயே! 
எண்ணிலடங்கா உயிரினங்களுக்கும் பின் ஜீவன் கொடுத்து அனைத்தும் தருபவள் நீயே!!
எண்ணற்ற கர்மாக்களை போக்குபவள் நீயே!!

எண்ணற்ற தீது பிறர் தரா தீது... அவற்றையெல்லாம் அகற்றுபவளே அகற்றுபவளே 
செல்வியே!!
உன்னைத்தானே பணிந்து பணிந்து நிற்கின்றேனே!!!

அழியப் போகின்றது உலகமே 
அதனை அழகாக காப்பாளே!!
காத்து அருளக்கூடியவளே!!
நின் தாளை பணிந்தேனே!!!
மனிதனின் எண்ணத்தை மாற்றுபவளே!!
அடங்காத பிடாரிகளை கூட... அடக்கி தன் கையில் அடக்கி பின் அனைத்து தீமைகளையும் நீக்குபவளே!!!

வரும் காலத்தில் அடங்காதவர்களை எல்லாம் அடக்கி ஆள்பவளே!!!


ஆள்பவளே!! அறிந்தும் 
பிறர் செய்த தவறையும் பொறுத்து அருள் ஈந்து 
பின் ஈசன் இடத்தில் முறையிட்டு அனைத்தும் கொடுப்பவளே!!

அனைத்தும் கொடுத்திட்டு பின் அவ்வாறு பின் நினைத்தபடி இல்லை என்றால்.. அனைத்தும் பிடுங்கிட்டு... நிச்சயம் தாராளமாக ஆற்றில் விடுபவளே!!

அவ் ஆற்றில் கூட நிச்சயம் ஐயோ.. குழந்தை!!! என்று மீண்டும் அழகாக கருணை படைத்து எடுத்து.. மீண்டும் அறிந்தும்.. இவ்வாறு எதனைச் செய்வது??
அனைத்தும் பொய் என்றெல்லாம் உணர்த்தி... தன் கையிலே இருந்திடு என்று கூறுபவளே!!

கூறுபவளே!!
உன்னை என்னவென்று? எப்படி கூறுவது? 
விளக்கங்கள் தாயே!!

தாயே ! என்பதா? அறிந்தும்.. அதற்கு மேலே என்ன இருக்கின்றது??
தாய் சொல் நிச்சயம் இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை!!

தாயே!! என்று கூறிவிட்டால் 
ஆனாலும் கலியுகத்திலே
எதை புரியா.. நிச்சயம் இவ்வாறாக பின் அலைந்து திரிந்து நிற்கும் பின் கருணை படைத்தவளே!!

புவனமதை ஆளுகின்ற புவனேஸ்வரியே!!!
அனைத்து அவதாரங்களையும் எடுத்தவளே நீயே!!
உனை போற்றி பணிந்து வாக்குகள்.. இன்னும் ஈகின்றேன் மனிதனுக்கு!!!


அறிந்தும் பின் அனாதையாக.. வந்த குழந்தை இங்கு!!
அவ்வாறாகவே எங்கும் நிறைந்து.. பரம்பொருளாகவே நிற்கும்... எங்கும் எங்கும் ஒரு சிறு பிள்ளையாக அவதரித்து நிச்சயம்.. எங்கெல்லாம் எங்கு செல்லக்கூடியது என்றெல்லாம் பின் ஈசனிடம் முறையிட்டு!!

தேவியே! அவதாரம்!!நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய! 
நிச்சயம் இதனை தன் பின் அகத்தியனே உரைப்பான்.. மென்மேலும் ஆசிகள்.



குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு!

அப்பனே அறிந்தும் ஆசிகளப்பா!!!
உண்மைதனை கூட!!

அப்பனே இங்கிருந்தே அப்பனே பின் புறப்பட்டு எதை என்று அறிய.. இதனால் நிச்சயம் தன்னில்  கூட அறிந்தும் அதாவது... எவை என்றும் உணர்ந்த பின் அப்பனே... நல்விதமாக. அனைத்திற்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருந்தான் ஈசன். 

அப்பனே கருணை படைத்தவனாக இருந்து அனைத்து ஜீவராசிகளையும் ஒரே போல்.. அதாவது ஒரே மனதாக எண்ணி எண்ணி அனைத்திற்கும் பின் அதாவது சாகா வரத்தை கொடுக்கலாமா? என்றெல்லாம்!!

அதாவது மனிதனுக்கு பல வகையிலும் கூட பின் வெற்றிகள்.. தரலாமா?? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!

தன்னில் கூட பின் இவ்வாறாகவே.. நிச்சயம் தன்னில்  அறிந்தும் கூட பின் அதாவது... பல உலகங்கள் அறிந்தும் புரிந்தும்.. இதை என்று அறிய. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அருள்கள் அதாவது நிச்சயம் நிறுத்தி விடலாமா?
 என்று நிச்சயம் பின் கலியுகத்தில் தொடங்குவதற்கு நிச்சயம். 

நிச்சயம் அதாவது எண்ணினான் ஈசனே!!

இதை புரிந்து கொண்ட அதாவது பின்.. ஈசன் எதை எதை என்றெல்லாம் நினைக்கின்றானோ.. அவ்வாறாகவே புரிந்து கொள்ளும்.. சக்தி நிச்சயம்.. பின் தாயிற்கு பார்வதி தாயிக்கு!!

ஆனாலும் நிச்சயம் இப்படி தான் இருக்க வேண்டும் நிச்சயம்... அதாவது பின் மனிதன் அறிந்தும் கூட பின்.. எவ்வாறாக நினைக்கின்றான் 
அதை நிச்சயம் தன்னில் கூட பின் மனைவி.. நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். 
மனைவி பின் எவ்வாறாக.. நினைக்கின்றாள் என்று பின் நிச்சயம் புருஷன் பின் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். 
இதுதான் புருஷ லட்சணம்!!

ஆனாலும் கலியுகத்தில் அப்படி நிச்சயம் இருக்காது!!!

அதனால்தான் தோல்விகளாகவே தோல்விகளாகவே 
நிச்சயம் தன்னில் கூட!!
இவ்வாறாகவே நிச்சயம் மனது ஆராய்ந்து பின் பார்வதி தேவியும் கூட ஈசனிடத்தில்...

ஏன்? இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... உன் எண்ணங்கள் பின் மக்களுக்கு.. அனைத்தும் கொடுத்த வண்ணம்.

ஆனாலும் இப்பொழுது தாழ்வான எண்ணங்கள்.. இதை யான் தாழ்வான எண்ணங்கள் என்று கருதவில்லை. 
பின் அன்பானவனே!!
நிச்சயம் தன்னில் கூட ஏன்? இன்னும் மனிதனுக்கு கஷ்டங்கள் பின் கொடுக்க வேண்டும்?? என்று எண்ணினாய்!! என்றெல்லாம்!!


ஈசனார்.

நிச்சயம் இன்னும் அதாவது கலியுகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது... மனிதனின் உள்ளம் சரியில்லை.. பல கெடுதல்கள் மனிதனே செய்வான்... நிச்சயம் நல்லெண்ணங்கள் இருந்தும்... மனிதன் பயன்படுத்த மாட்டான். 
அறிந்தும்!!

இதனால் நிச்சயம் பிறர் எதை என்று புரியாமலும்.. அறியாமலும் இப்படியே சென்றாலும் சென்றடைய கூடிய நிச்சயம் எவ்வாறாக என்றெல்லாம் பின் விளக்கங்கள்.. என்றெல்லாம்!

 நிச்சயம் அவ்வாறாகவே சரி!! நிச்சயம் பின் யான் அதாவது அழிவைத்தான் தரப் போகின்றேன் நிச்சயம்.. இவ்வாறாகவே அழிவை தந்தால் தான் நிச்சயம்.. மனதும் மாறுவார்கள் பின் மாற்றி.. யோசிப்பார்கள் என்பதையெல்லாம். 
நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் நிச்சயம்.. அவ்வாறாகவே பின் நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட பின்...
பார்வதி தேவியும் 

அன்பானவனே!!... எவ்வாறாக பின்.. உன் தாள் இவ்வாறாக பணிந்திட்டார்களே!!!
இன்னும் அழிவுகளா!!??
என்று!!!


ஈசனார்.

நிச்சயம் இது காலத்தின் கட்டாயம். இதனால் நிச்சயம் தன்னில் கூட


பார்வதி தேவியார்:

 யானே சென்று காப்பாற்றுகின்றேன் என்று பார்வதி தேவியும் கூட!!!


ஈசனார் 

இதனால் நிச்சயம் தேவியே!!! நிச்சயம் உன்னாலும் காப்பாற்ற.. எதை என்று புரிய மனிதனின்.. அழுக்குகள் அதாவது பின் மனிதனில் உள்ள அழுக்குகள் குணங்கள் எவை என்று கூற... பின் குணங்களும் அழுக்குகள் ஆகி.. தீய செயல்களை தான் செய்யப் போகின்றான். 

அதனால் நிச்சயம் பக்தி எங்கு காணப்படுகின்றது?? என்றெல்லாம்.. நிச்சயம் தன்னில் கூட! 


பார்வதி தேவியார்.

ஆனாலும் நிச்சயம் பின் இவ்வாறாக பக்திகள் செலுத்தினார்களே... நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட.. என்றெல்லாம். 
நிச்சயம் பார்வதி தேவியும் யான் பூலோகத்திற்கு நிச்சயம் அதாவது பின் போக போகின்றேன். 
நிச்சயம் மனிதன் எவ்வாறெல்லாம் இருக்கின்றான் என்று நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட பின் எவ்வாறு.. என்றெல்லாம்!!

பின் நீங்கள் இங்கிருந்தே பார்த்து பின்... ரசித்தப்படியே இருங்கள் யான்.. பூலோகம் செல்கின்றேன்!! எவ்வளவு பக்தி என்று பார்க்க! 


ஈசனார்.

நிச்சயம் தேவியே!!! பார்!!

அறிந்தும் கூட பின்.. மனிதனின் உண்மை நிலையை பார்.. உண்மை முகத்தை பார். 
அறிந்தும் பிறர் அறிய வண்ணம் கூட!!

இவ்வாறாகவே நிச்சயம் அறிந்தும் இதனால்.. அதாவது அழகாகவே நிச்சயம்.. இங்கு பின் அறிந்தும் முதலில் இங்கு தான்.. அறிந்தும் கூட குழந்தை ரூபம் எடுத்தாள். பார்வதி தேவியும்.


அறிந்தும் எதை என்று புரிய நேராகவே... அறிந்தும் இங்கு ஆனாலும்... அனைவரும் வந்து சென்று கொண்டிருக்க நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய!!

ஆனாலும்.. அழுதுகொண்டே அக்குழந்தை...

இக்குழந்தைதான் பின் நிச்சயம் பார்வதி தேவி.. அறிந்தும் இதனால்...அக் குழந்தை அழுது கொண்டே அழுது கொண்டே 

ஆனாலும் பின் இறைவனை வணங்கி வணங்கி... நிச்சயம் அங்கும் இங்கும் அலைந்தனர்... எங்கும் இல்லை. எதை என்று புரிய. 

ஆனாலும் மனிதன் அதாவது பார்வதி தேவியும்... அனைத்தும் உணர்ந்தவள் தான் 
நிச்சயம் தன்னில் கூட... அப்பனே நன் முறைகளாக. அப்பனே.. எதை என்று கூற யாராவது  வருகின்றார்களா என்று பார்ப்பதற்கு... நிச்சயம் அழுது கொண்டே அழுது கொண்டே... நிச்சயம் தன்னில் கூட பின் பசிக்கின்றது... பசிக்கின்றது என்று சொல்லி!!

ஆனாலும்.. யாரும் வரவில்லை நிச்சயம் தன்னில் கூட... பின் அறிந்தும் புரிந்தும் கூட 

அதாவது கால்களை எதை என்று புரிய... அறிந்தும் கூட பின் அதாவது... வெயில் தன்னிலே நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய 

மீண்டும் பின் நடந்து நடந்து அதாவது... பின் ஈசன் இடத்திற்கு (கோயிலுக்கு) சென்றாள் அறிந்தும் கூட பின்... அதாவது மூலஸ்தானத்திற்கு...

ஆனாலும் யார் இவள்? 
எக்குழந்தை???..

அங்கு இருந்த அனைவருக்கும் இதை யார்?? பார்த்துக் கொள்வது என்றெல்லாம்.. வினாக்கள்!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் முடிவு செய்துவிட்டார்கள். 
யாரும் இக் குழந்தைகளுக்கு உதவ கூடாது என்று!!

இதையெல்லாம் 

இக் குழந்தை... அதாவது அனைத்தும் எங்கும்... பரம்பொருளாக விளங்கும் இறைவனே.. பின் எதை என்று புரிய பின்... அதாவது மேல் நோக்கி பார்த்துக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம்...
 பார்வதி தேவிக்கு கூட பட்டால்தான் நிச்சயம் தெரியும் என்பதையெல்லாம் ஈசனுக்கு தெரியும். 




இதனால் அழுது புலம்பினாள் நிச்சயம் பின்... உதவுகின்றீர்களா?? என்றெல்லாம்!!

 நிச்சயம் யாரும் முன் வரவில்லை!!

அழுது கொண்டே! அழுது கொண்டே!... ஆனாலும் பின் உன் தாய் தந்தை எவர்?? என்று!! அக் குழந்தையிடம் கூட!!
நிச்சயம் தன்னில் கூட.

ஆனாலும் பின் அழுது கொண்டே.. எதற்கும் பதில் அளிக்கவில்லை!!
உண்டா? இல்லையா? எங்கு இல்லம் இருக்கின்றது? எதை என்று அறிய.. பின் பெரியோர்கள்.. கேட்டாலும் ஆனாலும் பதில்... அளிக்கவில்லை!!

ஆனாலும் அழுது கொண்டே! அழுது கொண்டே!
ஆனாலும் நிச்சயம் பின் அனைவரும்... திருத்தலத்தை சுற்றி பாருங்கள் நிச்சயம்.. திருத்தலத்தை சுற்றிலும் பின்.. இக்கு குழந்தையின் தந்தை தாய் பின் யாராவது.. இருக்கின்றார்களா என்று எண்ணி நிச்சயம்.. தன்னில் கூட அறிந்தும் கூட பின்... யாராவது இக்கு குழந்தையை எடுத்து.. நிச்சயம் பின் சுற்றி வாருங்கள்.. என்றெல்லாம்!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் நிச்சயம் ஒருவன் மட்டும்.. கையைப் பிடித்து நிச்சயம்.. உன் உன் தந்தை தாய் எங்கு இருக்கின்றார்கள்? என்று!!.. அறிந்தும் கூட இவ்வாறாக.. பல சுற்றுகளை கோயிலை சுற்றி சுற்றினான்!

 நிச்சயம்... யாரும் இல்லை!

அறிந்தும் யார் ? யார் ? என்று!!... ஆனாலும் இவந்தனும் கூட பின் மீண்டும் மூலஸ்தானத்திற்கே சென்று... நிச்சயம் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்...

யாரும் இல்லை!!
ஏனென்றால் எதை என்று புரிய குழந்தைக்கு.. என்றெல்லாம். 

ஆனாலும் அனைவரும் முடிவு கட்டிவிட்டனர்.

 இவள் தன்... பின் தவறான குழந்தையே...

 அறிந்தும் இதனால்.. இக்குழந்தைக்கு அறிந்தும் தாய் தந்தையர் என்று எவரும் இல்லை.

இதனால் நிச்சயம் தன்னில் கூட.. அதாவது இத்திருத்தலத்தில் விட்டு விட்டாலும் சாபங்கள் ஏற்பட்டு... அதாவது தோஷங்களாக மாறி... இங்கு வருவோருக்கெல்லாம் பின் கஷ்டங்கள் தான் ஏற்படப் போகின்றது. 

அதனால் இக்கு குழந்தையை வெளியே துரத்துங்கள் என்றெல்லாம். 

நிச்சயம் அப்பனே பின் பக்தியில்.. உள்ளவனே நிச்சயம் தன்னில் கூட... இக்கலி யுகத்தில் இப்படித்தான்... நடக்குமப்பா அப்பனே!!

உண்மை முகம் யார் என்று அப்பனே... அதாவது இறைவனே நேரில் வந்தாலும் அப்படி நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் இறைவனா?? நீ?? என்று சிரிப்பானப்பா மனிதன்!! அப்பனே

இதுதான்  கலியுகம் என்பேன் அப்பனே. 
எவை என்று கூற இவை எல்லாம்.. கலியுகம் ஆரம்ப கட்டத்திலே.. அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட


இதனால் அப்பனே அதனால்தான்... இறைவன் மறைமுக பொருளாக இருக்கின்றான் அப்பனே 

ஆனாலும் உண்மை தூய்மையான மனதிற்கு அப்பனே இறைவன் எப்பொழுது வேண்டுமானாலும்.. இறங்குவான் அப்பா. 

மீண்டும் நிச்சயம் தன்னில்  கூட அப்பனே.. பார்வதி தேவியும் கூட அறிந்தும்..

ஏன்? எதனால்? என்பவையெல்லாம் நிச்சயம் தன்னில் அழுது கொண்டே!!!

ஆனாலும் மீண்டும் பின் எங்கு போவது ?? என்று!!

நிச்சயம் தன்னில் கூட இங்கே அதாவது... ஈசனே எதை என்று புரிய.. அப்பனே அறிந்தும் கூட இங்கு நிச்சயம் தன்னில் கூட... அன்பானவனாகவே இருக்கின்றான்.. எதை நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் எதை கேட்டாலும்.. நிச்சயம் தன்னில் கூட கொடுத்து விடுவான் ஈசன். 

அவ்வளவுக்கு அவ்வளவு நிச்சயம் தன்னில் கூட இவ் இல்லம் (கோயில்) எதை என்று புரிய ஈசனுக்கு நிச்சயம் தன்னில் கூட பின் இவ் இல்லம் சாலச்சிறந்தது!

இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட.. எவ்வாறாக நினைத்தாலும் நிச்சயம் தன்னில் கூட இங்கேயே தங்கி விடுவோம்!!

தெரியாமல் பின் அதாவது.. அன்புடனே பின்.. அதாவது பின் அறிந்தும் இப்படித்தான் என்றெல்லாம் நிச்சயம்.. வரங்கள் அதாவது (ஈசனிடம்) பின் சொல்லிவிட்டு வந்து விட்டோமே... இதிலிருந்து பின் வாங்கக் கூடாது என்று பார்வதி தேவியும் கூட!!

மீண்டும் அறிந்தும் புரிந்தும் கூட மீண்டும் அழத் தொடங்கினாள். 

ஆனால் யாரும் முன் வரவில்லை. 
நிச்சயம் வெளியே துரத்துங்கள் என்றெல்லாம். இங்கும் கூட அறிந்தும். 

இதனால் நிச்சயம் பின் வெளியே துரத்தி விட்டார்கள். 

ஆனாலும் பார்வதி தேவி புரிந்து கொண்டாள்....

கருணை படைத்தவரே!!! நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே.. பக்திகள் இருந்தும் இவ்வாறாக... பின் யார் என்று கூட தெரியவில்லையே??

நிச்சயம் பின் அவ்வாறாக தெரியவில்லை என்றாலும்.. பரவாயில்லை...

ஆனால் குழந்தை என்று கூட பார்க்கவில்லையே யாரும்.. மனிதன்... பின் கலியுகத்தில்...... இதைத்தான் நிச்சயம் தன்னில் கூட... போகப்போக இன்னும் என்னென்ன?? நடக்கப் போகின்றது என்பதை எல்லாம்!!!

மீண்டும் இங்கிருந்து பின் அரிதுவார்... அறிந்தும் எதை என்று புரிய.. பின் அதாவது அரியின் வழியில்.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... அறியும் வண்ணம் கூட பின் அப்பொழுது கூட இங்கு நிச்சயம் இன்னொரு திருத்தலம்... கூட அங்கு சென்று விட்டாள்.


(அரித்துவாரமங்கலம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இது தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இங்கு பாதாளேஸ்வரர் கோயில் உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும்.அரித்துவாரமங்கலம் (Haridwaramangalam) என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கே பாதாளேஸ்வரர் கோயில் உள்ளது, இது பாடல் பெற்ற தலம் ஆகும். சம்பந்தர் இக்கோயிலை பாடியுள்ளார்)

அறிந்தும் புரிந்தும் சரியாகவே... அங்கு அறிந்தும் புரிந்தும் கூட.. மீண்டும் எதை என்று சரியாக நிச்சயம் தன்னில் கூட அங்கு சென்று நிச்சயம் அங்கேயாவது.. நிச்சயம்  பின் இருப்போமா என்றால்... நிச்சயம் இங்கிருந்து பின்..கூற... நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் அதாவது.. பின் எதை என்று அறிய அறிய. 

இங்கிருந்து அதாவது எவ்விடத்திற்கும் நிச்சயம் தன்னில் கூட அக் குழந்தையை விடக்கூடாது என்பதையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. பின் (பறை) சாற்றிவிட்டார்கள்! நிச்சயம் அங்கங்கு திருத்தலங்களுக்கு!!


(அனுமதிக்கக் கூடாது என்று தகவல் அனுப்பி தந்து விட்டார்கள்)

ஓடோடி சென்று அங்கு சென்று.. நிச்சயம் யாரும் இல்லை
இங்கேயும் கூட நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறாகவே சுற்றி சுற்றி... ஒரு பஞ்ச தலங்களை சுற்றி சுற்றி.. வந்தாள். 

அறிந்தும் அப்பனே கூட நிச்சயம் தன்னில் கூட நீயே கூறலாம் ஸ்தலங்களைப் பற்றி
 குருநாதர் இவ்விடத்தில் வாக்குகள் தரும் பொழுது ஆலயத்தில் தொண்டு செய்யும் பக்தர் ஒருவரிடம் குருநாதர் இட்ட கட்டளை 

அவரும் ஒரு திருத்தலங்கள் பெயரை கூற!!!

குருநாதர் 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரே நாளில் நிச்சயம்... ஐந்து அப்பனே எதை என்று கூற... திருத்தலங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சுற்றினால் அப்பனே... இரண்டை யான் சொல்லி விட்டேன்.. மீதி மூன்றை நீங்கள் தேர்வு செய்யுங்கள். 

அடியவர்களும் அடுத்தடுத்து உள்ள கோயில்களை கூறினார்கள் குருநாதர் கூறிய பஞ்ச திருத்தலங்கள் 


(ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்





சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து. 'ஆரண்யம்' என்றால் 'காடு' என்று பொருள். 'பஞ்சாரண்யம்' என்றால் ஐந்து வகை வனங்கள் என்று பொருள்படும்

. ஈசன் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திரு இரும்பூளை (ஆலங்குடி), வில்வவனத்தில் அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களே பஞ்சாரண்யத் தலங்களாகும்.


பஞ்ச ஆரண்ய தலங்கள்: 
திருக்கருகாவூர்: முல்லைவனம், கர்ப்பரட்சாம்பிகை கோயில்.


திரு அவளிவநல்லூர்: பாதிரிவனம்.


அரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி): வன்னிவனம்.


ஆலங்குடி (திரு இரும்பூளை): பூளைவனம்.


திருக்கொள்ளம்புதூர் (களம்பூர்): வில்வவனம்.

 
இந்த ஐந்து தலங்களும் காவிரி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளவை 


தொன்மையான இந்த தலங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் திருக்கயிலையை தரிசித்த பெரும்பேறு கிட்டும். அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த காலபூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.

இதில் முதலாவதாகத் தரிசிக்க வேண்டிய ஆலயம் திருக்கருகாவூர். இங்கு உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும். இரண்டாவது அவளிவநல்லூர். இங்கு காலசந்தியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும். மூன்றாவது அரித்துவாரமங்கலம். இந்த தலத்தில் உச்சிகாலத்தில் பகல் 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் தரிசனம் செய்ய வேண்டும். நான்காவதாக ஆலங்குடி. இங்கு சாயரட்சையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபாடு முடிக்க வேண்டும். ஐந்தாவதாக திருக்களம்பூர். இங்கு அர்த்தஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் வழிபட வேண்டும்.

இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசித்து வாழ்வில் பெறுதற்கரிய பேறுகளையும், சகல வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது முன்னோர்களின் திருவாக்கு ஆகும்.)


அப்பப்பா அறிந்தும் நிச்சயம் தன்னில்  கூட!!
அப்பனே இவ்வாறாகவே.. நிச்சயம் பார்வதி தேவி குழந்தை வடிவில் சுற்றி சுற்றி வந்தாளப்பா!!

அப்பனே... இவையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஆகின்றது என்பேன் அப்பனே..

அதனால் ஈ ரோடு (இரண்டோடு) நிறுத்தி விட்டேன்.

அப்பனே அதில் ஆலங்குடியும் ஒன்றப்பா!!

அப்பனே இரண்டாவது அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... தேடுங்கள் அப்பனே இவையாவது.. தேடிட்டு புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். 

அப்பனே அனைத்தும் யானே சொல்லிக்கொண்டு இருந்தால் அப்பனே....

அகத்தியன் சொல்லி விடுவான்!!
அகத்தியன் சொல்லி விடுவான் என்றெல்லாம் அப்பனே 

அதனால் அப்பனே நிச்சயம் மூளைக்கு வேலை தாருங்கள் நீங்களே!!!

அப்பனே அறிந்தும் புரிந்தும் இதனால் அப்பனே நன்மைகளாகவே... இவ்வாறாக அப்பனே.. வலம் வந்து வலம் வந்து அப்பனே...இவ் ஆடி தன்னிலே!!!

(பார்வதி தேவியார் இந்த பஞ்ச திருத்தலங்களையும் சுற்றி சுற்றி வந்தது ஆடி மாதத்தில்) 

அப்பனே நல்விதமாகவே இவ் ஆடி மாதத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சுற்றி வந்தால் அப்பனே நிச்சயம் அருள்கள் அப்பனே.

அவை மட்டும் இல்லாமல்... இங்குதான் அவள் தனக்கு.. பிடித்தது!!!

மீண்டும்.. அமர்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இவ்வாறாக. 

ஆனாலும் அப்பனே மேலிருந்து அப்பனே தேவர்களும் எதை என்று கூற இந்திரர்களும் பல ரிஷிகளும் கூட ஆனாலும்... இக் குழந்தையைக் காண!!

அதாவது பார்வதி தேவி தான் என்றெல்லாம்!!

 நிச்சயம்.. பின் தேவிக்கு யாராவது உதவுவார்களா??.. என்றெல்லாம் நிச்சயம் தன்னில்  கூட அங்கே (தேவலோகத்தில்) பின் ஏக்கம்.. கொண்டிருந்தார்கள். 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே யாரும் பின் உதவ முன் வரவில்லையப்பா!!

மீண்டும் அப்பனே எங்கெங்கு அப்பனே.. எதை என்று புரிய அப்பனே பின்.. இவ்வாறாகவே அங்கும் இங்கும்.. சென்று அப்பனே... நிச்சயம் ஒன்றும் ஆகவில்லையப்பா!!

இதனால் அப்பனே மீண்டும் இங்கு வந்து விட்டாள்!!!


அப்பனே இவ்வாறாகவே எவ்வாறாகவே.... அறிந்தும் புரிந்தும் கூட... மீண்டும் அப்பனே பின் ஒன்றும் தெரியாமல்... எதை என்று புரிய அப்பனே.. நல்விதமாகவே ஆசிகளோடு அப்பனே.. பல வகையிலும் கூட இந்திரனும் கூட.. பின் எதை என்று புரிய மறைமுகமாக.. வந்து மனித ரூபத்தில் வந்து...

பின் தாயே நீங்கள்.. குழந்தை ரூபத்தில் வந்தது.. யான் அறிந்தேன் 

 நிச்சயம் இப்படியா?? நீங்கள் சுற்றுவது!!
நிச்சயம் வந்து விடுங்கள்.. தேவையில்லை நிச்சயம் தன்னில் கூட. 

பார்வதி தேவியும் 

நிச்சயம் இந்திரனே!!!... இவ்வாறாக மனிதன் எவ்வாறாகவெல்லாம் பின் இருக்கின்றான்.. கலியுகத்தில் என்று.. இவைதன் நிச்சயம் தன்னில் கூட பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கிணங்கவே யான்..இவ் அவதாரம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.


இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட.. பின் குழந்தையாகவே.. அறிந்தும் கூட இதனால்.. நிச்சயம் இவ்வாறெல்லாம் அழகாகவே  !! பின் இதை என்று கூற பின்... இத்திருத்தலத்திலே... பின் சுவடிகளாக எழுதி வைத்திருந்தனர். 

ஆனால் அதையும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... அருகில் இருக்கும் ஓடையில் பின் விட்டு விட்டார்கள் சுவடிகளை.. இங்கே தொலையட்டும் என்று அப்பனே. 

இன்னும் பல உண்மைகள் இருக்கின்றதப்பா.. அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. தெரிந்து கொண்டால் கலியுகத்தில்.. அப்பனே மனிதன் நோயின்றி.. அப்பனே பின்.. ஒரு குறையும் இல்லாமல் வாழலாம் என்பேன் அப்பனே.. நல்விதமாக!!

ஆனாலும் அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. ஒளித்து வைத்துக்கொண்டு அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... காசுகளுக்காகவே அப்பனே... அதைச் செய்கின்றேன் இதை செய்கின்றேன். என்றெல்லாம் 

. என்னிடத்தில் உன்னிடத்தில் (சுவடிகள்) என்றெல்லாம்  அப்பனே... சண்டைகள் இட்டுக்கொண்டு அப்பனே... மனிதனை அப்பனே நிச்சயம் கர்மத்தில் அதாவது பாவத்தில் தள்ளிவிட்டார்கள் என்பேன் அப்பனே. 

இவை யார் ?? எதை என்று செய்தார்கள் என்றால்???...........

பக்தர்கள் தான் என்பேன் அப்பனே!!

யான் பெரியவன்... நீ பெரியவனா? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.

இதனால் மீண்டும் மீண்டும் அப்பனே.. பின் இவ்வாறாகவே அக்குழந்தை... மீண்டும் 

""""" சிதம்பரத்திற்கு !!!!!
 சென்றது! 

சிதம்பரத்திற்கும் அப்பனே... அண்ணாமலைக்கும் அப்பனே... அறிந்தும் எவ்வாறாக அப்படியே எதை என்று புரிய அப்பனே பின்... மீண்டும் மீண்டும் அப்பனே பல திருத்தலங்கள்... அப்பனே எதை என்று புரிய... மீண்டும் அப்பனே இவ்வாறாகவே... எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட மீண்டும் இங்கு வந்து. 

ஆனாலும் அழகாகவே இங்கு வந்து வந்து!!.. அப்பனே எதை என்று கூற... இவ்வாறாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் அறிந்தும் கூட பின்... எதை என்று கூற பின் அங்கும் இங்கும்... சுற்றி பல பல ஆலயங்களுக்கும் அனைத்தும் சுற்றி.. சுற்றி அப்பனே மீண்டும் இங்கு.. தங்கி பின் எதை என்று கூற பின்.. இதை எதை என்று அறிய அறிய 

 இதனால் மனது... நிச்சயம்... ஈசனாரே... மணாளனே நிச்சயம் தன்னில் கூட... போதும் பட்ட பாடுகள்... என்னை அழைத்துக் கொள் என்று நிச்சயம். 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் சிறப்பாக எவை என்று கூற அப்பனே பின் 

(ஆடி பூரம்) ஆடிப்பூரத்தன்று அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் கொடுத்து பின் உலகம் செழிப்படைக!!!

யான் குழந்தை நிச்சயம் தன்னில் கூட என்னை யாரும் கவனிக்கவில்லை... நிச்சயம் தன்னில் கூட 

அப்படி கவனிக்கவில்லை என்றாலும் நிச்சயம்.. இங்கு வந்து பின் அருள்கள் புரிந்து எதை என்று.. அறிய நிச்சயம் தன்னில் கூட பின்...

அதாவது ஈசனார் நிச்சயம் புரியட்டும் என்று... அப்பனே மீண்டும்... அப்பனே ஈசனோடு போய் சேர்ந்தாளப்பா!! எதை என்று கூற!!

அதனால்தான் அப்பனே இங்கு சிறப்பு என்பேன் அப்பனே. 

(திருவையாறு ஆலயத்தில் ஆடிப்பூரம் சிறப்பான விழாவாக நடைபெறும் இதனுடன் அப்பர் கயிலை காட்சியும் சிறப்பாக நடைபெறும் )

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... ஆனாலும் பின் மீண்டும் அங்கு சென்று நிச்சயம் தன்னில் கூட பின் 

ஈசனாரே!!!... நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக... எங்கெல்லாம் சுற்றினேன் நிச்சயம்... மனிதனுக்கு அறிவு இல்லையே!! நிச்சயம் தன்னில் கூட!!

இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இதனால் மீண்டும் அதாவது எங்கு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... இங்கிருந்தே நிச்சயம் தன்னில் கூட... மீண்டும் வா. 

பின் வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் காட்சிகள் கொடு.. நிச்சயம் தன்னில் கூட உன்னுடைய காட்சிகளை (தரிசனம்)... அதாவது எங்கிருந்தாலும் நிச்சயம் பின் அதாவது.. மனிதனுக்கு புத்திகள் இல்லை... அப்பால் அதாவது புத்திகள் இல்லாவிடினும்.. நிச்சயம் தன்னில் கூட புத்திகள்... இருக்குமாறு நிச்சயம் பின் ஆசிகள் கொடு!! என்றெல்லாம் மீண்டும் நிச்சயம் தன்னில் கூட.. கைலாயத்தில் அறிந்தும் புரிந்தும் கூட! 

அனைவரையும் அழைத்திட்டு வந்து நிச்சயம் தன்னில் கூட... காட்சிகள் இங்கே நிச்சயம் தரப்பட்டன. 

இதே போலத்தான் பின் வருடம் வருடமாக... இங்கு ஈசன் எப்பொழுதும் பின்.. பார்வதி தேவியும் பின் கேட்டு.. எதை என்று புரிய பின் அதாவது.. கேட்டதற்கு இணங்க நிச்சயம்... வருடத்தில் ஆடிப்பூரம் பூரத்தன்று நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் அனைத்து தேவாதி தேவர்களும்.. நிச்சயம் தன்னில் கூட இந்திரனும் வந்து.. இங்கு காட்சி தருவார்கள்.. நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறெல்லாம் காட்சிகள் தந்து மனிதனின் இடத்தில் பின் அழுக்குகளை நீக்கிட்டு... மீண்டும்!!

இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும்.. மறைமுகமான பொருள் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.

(இவ்விடத்தில் குருநாதர் ஆலயத்தில் வாக்குகள் உரைக்கும் பொழுது இந்த இடத்தில் மீதி ஆலயத்தையும் குருநாதரிடம் தெரிவிக்குமாறு கேட்க 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. நீங்களே பின் எவை என்று அறிய அறிய தெரிந்து விடும் என்பேன் அப்பனே அதிவிரைவிலே அப்பனே நிச்சயம் அப்பனே... இவை ஐந்தும் ஒரே முறையில் சுற்றினால் அப்பனே சில பாவங்கள் தொலைந்து ஓடும் என்பேன் அப்பனே. 

புண்ணியங்கள் கிடைக்கும் என்பேன் அப்பனே.


பக்தர் ஒருவர் இடை மறித்து குருநாதா தாங்கள் குறிப்பிடும் ஆலயம் திருவாரூர் கோவிலா?? என்று கேட்க


அப்பனே நிச்சயம் இவ்வாறாக அவ்வாறாக என்றெல்லாம்... இதுதான் என்று ஆணித்தரமாக அப்பனே பின் யோசித்து வையுங்கள் அப்பனே !!

இத்துடன் வாக்குகள் யான் முடியப்போவதில்லை அப்பனே... இன்னும் வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே 

இத்தலத்தின் சிறப்பு அதிகமாக உள்ளது என்பேன் அப்பனே நிச்சயம்.. குறிப்பிடுவேன் என்பேன் அப்பனே. 

பின் நிச்சயம் தேர்ந்தெடுங்கள் நீங்களே என்பேன் அப்பனே.

அப்பனே நிச்சயம் தெரியவரும் என்பேன் அப்பனே.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே தெரிந்து விடும் என்பேன். அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறு என்பதையெல்லாம் பின் தொலைநோக்கு (இன்டர்நெட் கூகுள் லவ் பார்த்தால் தெரிந்து விடும் என்று குருநாதர் குறிப்பிடுகின்றார்) 
 பார்வையிலே அதை குறிப்பிடுகின்றார்கள் என்பேன் அப்பனே.

அப்பனே நலன்களாகவே ஆசிகளப்பா!! இதனால் அப்பனே.... நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாக... குழந்தை நிச்சயம் தன்னில் கூட அழுது கொண்டே அழுது கொண்டே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அனைத்து.. தேவாதி தேவர்களும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இந்திரனும் கூட எவ்வாறாக... ஆடிப்பூரத்தன்று நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே மேலே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய பின் குழந்தை!! ஈசனிடத்திற்கு சென்று இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்னென்ன? வேண்டுமா? அப்பனே அனைத்தும்..அக் குழந்தைக்கு செய்தனர் என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே இவ் ஆடி மாதம் அனைத்துமே... அதாவது அம்பாளுக்கு என்னென்ன? நினைத்து செய்கின்றீர்களோ... அது உடனடியாக.. அம்பாளை நோக்கி செல்லும் என்பேன் அப்பனே. குழந்தைக்குச் செல்லும் என்பேன் அப்பனே!!

இதனால் மனம் மகிழ்ந்து.. அனைத்தும் கொடுக்கும் என்பேன் அப்பனே. 


கூழ் பிரசாதம்.

ஆடி மாதத்தில் கூழ் தானம்.


அக் குழந்தைக்கு பிடித்தமான ஒன்று...கூழ் என்பேன் அப்பனே. 

நிச்சயம் எதை என்று புரிய...

இதனால்தான் அப்பனே ஆடி மாதத்தில் அனைவருமே பின் நிச்சயம் தன்னில் கூட தாராளமாக... அதாவது அம்பாள் இடத்திற்கு சென்று... அப்பனே எப்படி எதை என்று அறிய கொடுங்கள் என்பேன். அப்பனே 

""" கூழ் தானம் !!!!!

(ஆடி மாதத்தில் அம்பாள் திருத்தலங்களில் அம்பாளுக்கு கூழை படைத்து பக்தர்களுக்கு மக்களுக்கு அருந்துவதற்கு தர வேண்டும். நீர் மோர் தானம் போல கூழ் தானம் செய்ய வேண்டும்.

அறிந்தும் புரிந்தும் நிச்சயம் தன்னில் கூட அக்குழந்தை.. எவ்வாறாக நிச்சயம் பார்வதி தேவியே!! எதை என்று புரிய நிச்சயம்.. அருள்கள் அனைத்தும்.. அருளிக் கொண்டே இருக்கின்றாள்.

இதனால் எத்திருத்தலத்தில் சென்றாலும் நிச்சயம் தன்னில்... கூட இதை நீங்கள் கொடுங்கள்!! அக் குழந்தை அழகாக.. உட்கொண்டு ஆசிகள் கொடுத்து... உங்கள் குறைகளை நீக்கிவிடுவாள்.

அறிந்தும் அப்பனே இன்னும் அப்பனே ரகசியங்கள் இன்னும் பல ரகசியங்கள் உள்ளதப்பா. 

சாதாரணமில்லை என்பேன் அப்பனே.. இன்னும் அப்பனே எதை என்று புரிய.. இன்னும் இன்னும் விளக்கங்கள் கொடுக்கின்றேன். 
இப்போதைக்கு போதுமப்பா. 

ஆடி மாதத்தின் சிறப்பு அப்பனே.. திருத்தலத்தில் இருந்து தான் வந்தது என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே!!

 திருவை ஆறு.. 

திருவை ஆடி!!

 அப்பனே இவையும் குறிப்பிடலாம் என்பேன் அப்பனே. 

(திருவையாறு எனும் தளத்திற்கு மறு பெயர் திருவையாடி)

அப்பனே இதனால்தான் என் பக்தர்கள்.. அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே பின் தெரியாமல்... எதற்காக ஆசைப்பட்டாலும் ஒன்றும் கிடைக்காதப்பா!!

அப்பனே இதனால் அனைவரும் கூட ஒன்று சேர்ந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே 

இவ் ஆடி மாதத்தில் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே எங்கு.. எதை என்று கூற அம்பாள்.. இருக்கின்றாளோ அங்கு நிச்சயம் தாருங்கள் (கூழ் தானம்) என்பேன் அப்பனே 
அக்குழந்தை வந்து உட்கொள்வாள் என்பேன் அப்பனே. 
அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என்பேன் அப்பனே. 

அப்பனே அவை மட்டும் இல்லாமல் குழந்தைக்கு என்னென்ன தேவையோ.. எதையெல்லாம் நிச்சயம் தெரியும் அப்பா.. நிச்சயம் தன்னில் கூட 

இவ்வாறாக அப்பனே போகப் போக எவை என்று அறிய அறிய அப்பனே.. அக்குழந்தை வளர வளர அப்பனே என்னென்ன செய்வீர்கள் என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாகவே இன்னும் சிறப்புக்கள் யான்.. நிச்சயம் சொல்வேன் அப்பா 

இதனால் அப்பனே நல்விதமாகவே.. அறிந்தும் கூட இதனால் அப்பனே.. எதை என்று அறிய அறிய அப்பனே.. அவள்தன் நிச்சயம் தன்னில் கூட அக்குழந்தை.. கோபம் கொள்ளாமல் நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறு பின் இருந்ததற்கு.. நிச்சயம் தன்னில் கூட அக்குழந்தைக்கும் கொடுத்து.. அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்றெல்லாம்.. அப்பனே அக்குழந்தையும் கூட.. நிச்சயம் தன்னில் கூட அதே போல் அப்பனே
இவ் அம்பாளுக்கும் கொடுங்கள்.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பக்கத்தில் இருப்பவர்களுக்கும் நிச்சயம் தன்னில் கூட.. அனைவருக்கும் கொடுங்கள் என்பேன் அப்பனே..

திருப்தியாக அக்குழந்தை ஏற்றுக் கொள்வாளப்பா!!

நல்விதமாக ஆசிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இன்னும் அப்பனே.. ஆடி மாதத்தின் சிறப்பு இன்னும் அப்பனே விவரிக்கின்றேன் 
ஒவ்வொரு தலத்திலும் கூட நிச்சயம் விவரிப்பேன் ஆசிகள் அப்பனே ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1905 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 2



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 2 

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1  )

குருநாதர் :- அப்பனே நிச்சயம் உன் மூளையை நீ பயன்படுத்தவேண்டும். பின் உன் மூளையை,  அடுத்தவன் பயன் படுத்தினால் அனைத்து கர்மாக்களும் சேருமப்பா. அப்பனே புரியாத புதிர் வாழ்க்கை. அப்பனே அவ்வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்துவிட்டால் நீங்களே உங்களை வென்றுவிடுவீர்கள். 

இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பல வாக்குகளைச் செப்பிச் செப்பி,  இதன்படி நடந்தால், உங்கள் விதியைக் கூட யான் சொல்வேன். விதியைக் கூட யான் மாற்றுவேன். 

அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட என் பக்தர்களுக்காக யான் எது வேண்டுமானாலும் செய்வேன். ஆனால் பக்குவங்கள் இல்லையே. நிச்சயம் இவ்வாறு நடக்கும்,  சுகமாக நடக்கும் என்று தெரிவித்தால் ஓடோடி விடுவது. 

அப்பா! நிச்சயம் தன்னில் கூட சிந்திக்க வேண்டும். அப்பனே யார் ஒருவன் மூளைக்குப் பின் வேலை கொடுக்கின்றானோ அவன் உயர்ந்தவன் ஆகின்றானப்பா. நிச்சயம் எங்களுக்கும் சந்தோசம். 

நிச்சயம் மற்ற மூளையை நம்பினால்,  மூலையில்தான் அமர வேண்டும்.

அப்பனே இறைவனுக்கு வேலையே இல்லையப்பபா. 

நிச்சயம் அம்மையே , அப்பனே இறைவன் அனைத்தும் கொடுக்கத் தயார். வாங்கிக்கொள்ள உங்களிடம் கைகள் இல்லை. 

அறிந்தும் இரு கைகள் போதாது. அறிந்தும் ஆனாலும் பக்குவங்கள் படவேண்டும். தாயே, தந்தையே அறிந்தும் நிச்சயம் தான் தன் பிள்ளைகள் நிச்சயம் உயர்வான கல்வி நிச்சயம் பின் பெற்று,  உயர்ந்த இடத்தில் உயர்ந்த பதவிகள் பின் வகிக்க வேண்டும் என்று நிச்சயம் அடித்தாவது நிச்சயம் பின் படித்து  எதை என்று கூற  பின் கல் அதி என்று சொல்கின்றீர்கள் அல்லவா? அதேபோல்தான் இறைவனும் தன் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் அழகு பார்க்க வேண்டும் என்று எண்ணுகின்றான். அதற்காகத்தான் துன்பங்களை எல்லாம் வைத்து வைத்து பக்குவப்படுத்தி நிச்சயம் தன்னில் கூட. ஆனால் அதனுள்ளே இவ்துன்பங்கள் எல்லாம் வேண்டாம் என்று ஓட விடுகின்றீர்கள் அப்பனே. 

அறிந்தும் தாயே பின் நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு எவை என்றும் புரியாத நிலையிலும் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான். ஆனாலும் எப்படி பார்ப்பது?   

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா கேள்வி கேட்கின்றார். சொல்லுங்க ஐயா? அம்மா யோசித்துக் கேளுங்கள்? 

அடியவர்  1 :- கண்ணுள்ளே காணலாம்.  

குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட தன்னுள்ளே இறைவனைக் காண்பது எப்படி? 

அடியவர் 1 :- நீங்கதான் வழி சொல்லலாம். 

அடியவர் 2 :- அன்பின் வடிவாக…

குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய இவை இல்லை இப்பொழுது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அன்பு பற்றி இப்பொழுது அந்த topic எடுத்து வர வேண்டாம். 

அடியவர் :- பக்தி 

குருநாதர் :- அப்பப்பா. அனைத்தின் மீதும்தான் பக்தி இருக்கின்றதே. பணத்தின் மீதும் இருக்கின்றது. பின் பெண்ணின் மீதும் இருக்கின்றது. எப்படியப்பா? 

சுவடி ஓதும் மைந்தன் :- எந்த பக்தி என்று கேட்கின்றார் ஐயா. 

அடியவர் 3 :- குரு பக்தி மூலமாக

குருநாதர் :- அப்பப்பா அதற்கும் இப்பொழுது இல்லை. 

அடியவர் 1 :- கஷ்டத்தை எனக்கு மீண்டும் கொடு. நான் இன்னும் பக்குவப்படுகின்றேன். 

குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட இறைவன் உன் பக்கத்திலேயே வந்து விடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி சொன்னால் மட்டும்தான் இறைவன் என்ன செய்வார்? பக்கத்திலேயே வந்துவிடுவார். 

குருநாதர் :- தாயே நிச்சம் அப்பொழுது நீங்கள் சுற்றினாலும் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து, பின் உரையாடிவிட்டு செல்வான். நிச்சயம் இப்படிச் செய். அப்படிச் செய் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த அம்மா சொல்வது போல் செஞ்சா, இறைவன் உங்க பக்கத்திலேயே வந்துடுவாரு. வந்துட்டு நீங்க எங்காவது கோவிலுக்கு போறீங்கள்ல , அப்போ யாராவது சொல்லுவாங்க. பக்கத்திலேயே இருந்துகிட்டு,  மனிதனை இயக்கிடுவார். அம்மா இப்படிச் செய், அப்படிச் செய் என்று யாரோ உங்களுக்கு சொல்லுவாங்க. தெரியாத ஆளே உங்களுக்குச் சொல்லிடுவார். அப்போ இறைவன் எங்க வேண்டுமானாலும் இருக்கலாம். Okங்களா. அப்போ இது மாதிரி யார் ஒருத்தர் நினைக்கின்றார்களோ , அம்மா இதைல்லாம் தெரிஞ்சுக்னும். ( சுவடி ஓதும் மைந்தனுக்கும் , மற்றும் பல அடியவர்களுக்கும் இவ்இறை உரையாடல்கள், தரிசனங்கள் பலமுறை பல ஆலயங்களில் நடந்துள்ளது என்று அடியவர்கள் அறியவும்) 

இறைவன் அருகில் இருப்பார்.  அம்மா நீங்க சொல்லுங்கம்மா.  நானே கேட்கனும். இப்போ சொன்னீங்க அதை திருப்பி சொல்லுங்கம்மா. 

அடியவர் 1 :- வேண்டிக்கிட்டது அதான் வேண்டிக்கொள்வேன் ஐயா. எனக்கு இன்னும் கஷ்டத்தைக் கொடு. அதற்கான தீர்வைக் கொடு. தைரியத்தைக் கொடு. தன்நம்பிக்கையைக் கொடு. 

குருநாதர் :- அப்பனே இதுபோல் இறைவனிடத்தில் யாராவது வேண்டிக் கொண்டீர்களா? என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :- யாராவது இருக்கின்றீர்களா? யாரும் இல்லை. 

குருநாதர் :- எதை என்றும் புரிய அப்பனே அதைத் தருவான், இதைத் தருவான் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. நிச்சயம் மூளை இல்லாதவனுக்கு கொடுத்தாலும் ஒன்றும் புரயோஜனம் இல்லையப்பா. 

அம்மையே அனைவரிடத்திலும் சொல். நிச்சயம் எதைக் கொடுப்பான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா மைக் கொடுங்க இந்த அம்மாவிடம். 

(அடியவர்கள் மைக் கொடுத்தனர் அவ்அம்மையாரிடம் (அடியவர் 1)  ) 

சொல்லுங்கம்மா. உங்களை சொல்லச் சொல்லிட்டார். 

மற்றொரு அடியவர் :- நிறைய பாடத்தை கடந்து வந்திருக்கின்றீர்கள். அதனால தெளிவாகச் சொல்லுங்கள் அம்மா. 

அடியவர் 1 :- நான் பத்து வருசத்துக்கு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எங்க வீட்டை விட்டு ஒரு வருட வந்துள்ள குழந்தையுடன் வெளியே வந்தேன். அப்ப நான் நினைத்து வேண்டுனது , நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. இனிமேலும் செய்யப் போவதில்லை. ஆனால் (இறைவா) உன்னை நம்பி சரணாகதி அடைகின்றேன். நீ எனக்கு நல்லது செய். நான் உன்னோட வழியில் வந்துவிட்டேன் அப்படி நினைத்து வேண்டிக் கொள்வேன். எந்த கோவிலுக்குச் சென்றாலும் எனக்கு கஷ்டத்தைக் கொடு. கஷ்டத்திற்கான தைரியம், தன்நம்பிக்கை, விடா விடா முயற்சியைக் கொடு. உன்னை நான் எப்போதும் துதிக்கின்றதை நம்பிக்கை கொடு என்று எப்பவுமே, இப்ப வரைக்கும் வேண்டிக்குவேன். ஆனால் ஒவ்வொரு வருஷமும் நான் இதை வேண்ட வேண்ட , நான் படுப்பதற்கு பாய் கூட இல்லாமல் நான் அழுதிருக்கின்றேன். நான் என் குழந்தை, என் குடும்பம் படுப்பதற்கு பாய் இல்லாமல், தலையனை இல்லாமல், வெறும் தரையில கொட்டுர மழையில கூட இருந்திருக்கின்றோம். 

அவ்வளவு கஷ்டத்திலேயும்,ஆனால் ஒவ்வொரு வருசத்திலும் நாங்க வந்து, ஒருத்தர் வந்து எனக்கு சொன்னாங்க. அவங்க கோயில்ல ஓதுவாரா இருக்காங்க. அவங்க wife சொன்னாங்க என்கிட்ட, நீ வரலட்சுமி நோன்பு எடுத்துக் கும்பிடு. நீ நல்லா முன்னேறி வருவாய் அப்டீன்னு. ஆனால் அவங்க எனக்கு கொடுத்தது வந்து , அதை எனக்கு செய்வதற்கான பக்குவம் என்னிடம் கிடையாது. அப்போ அவங்க ஒரு செம்பு கலசம் எடுத்துக் கொடுத்து, இதை இப்படி வச்சு செய். நீ ஒன்றும் குடுக்க வேண்டாம். ஒரு வெற்றிலை , பாக்கு, பூ மட்டும் வைச்சு கொடு மத்தவங்களுக்கு. அதே போல யார் எப்போ வந்தாலும் சரி, எந்த கிழமையில வந்தாலும் சரி, சுமங்கலிகளுக்கு ஒரு குங்குமத்தையும், நிறைஞ்ச செம்புத் தண்ணீரும் கொடு அப்படின்னு  சொல்வாங்க. அதே போல அவங்க சொன்னதை நான் follow செஞ்சு வர்ரேன். வேண்டும் போதும் இதேதான் . இன்றைக்கு வரைக்கும் அதை நான் கைவிடவே இல்லை. இன்றைக்கு ஆண்டவன் முன்பு சொல்கின்றேன், நான் நன்றாக இருக்கின்றேன். என் friendக்கு தெரியும். நான் அவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாலும் இன்னைக்கு நானும் என் குடும்பமும். என் வீட்டுக்காரர் என்ன சொல்லுவார் (என்றால்) நம்ம பாப்பாவுக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டாம். அதாவது பாவத்தை  சேர்க்க வேண்டாம். புண்ணியம் சேர்த்தால் போதும் என் குழந்தைக்கு. அதுவே இறைவன் நல்ல வழி காட்டுவார் என்று சொல்லுவார். இன்னவரைக்கும் என் பாப்பாவும் நல்லா படிக்கின்றாங்க. 

குருநாதர் :- தாயே இது போலத்தான் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில்  
சென்று கொண்டிருந்தால் இறைவனே பேசுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பாக. ஏன் இதை அந்த அம்மாவை சொல்லச் சொன்னார்கள் என்றால், இப்ப சொன்னார் பார்த்தீர்களா? இறைவன் பக்கத்தில் வந்துவிடுவார். உங்களுக்கு சொல்லிவிடுவார் அம்மா. 

அடியவர் 2 :- ( இவ்அடியவர் சதுரகிரி மலை ஏறிய பொழுது பாதம் எல்லாம் புண் ஆகி கடுமையான வலி எடுத்துள்ளது. அப்பொழுது இவ்அடியவருக்கு பின்னால் ஓர் அம்மை மற்றொரு அம்மையிடம் பாதத்தில் வலியிருந்தால் தேங்க எண்ணெய் தடவிவிட்டு படுத்தால் சரியாகிவிடும் என்று சொல்ல, அதை கேட்டு இவ்அடியவர் அதுபோல் செய்து வலி நிவாரணம் உடன் கிட்டியது இல்லத்தில் என்று தனது இறை வழி அனுபவங்களை எடுத்துரைத்தார்கள்.) 

அடியவர் 1 :- ( மற்றொரு இறை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.) 

அடியவர் 3 :- ஐயா ஒரு கேள்வி. நமக்கு ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாராவது சொல்லனும் இல்லை புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இது சரி எப்படி உணர்ந்து கொள்வது? 

குருநாதர் :- அப்பனே, இப்பொழுதுதான் சொன்னேன். மகளே சொல். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் பக்கத்தில் வந்து எப்படி அருளுவார் என்று விளக்கம் ) 

அடியவர் 4 :- ( கஷ்டம் என்ற பாதையில் கூட இருந்து நம்மை இறைவன் வழிநடத்துவார் என்று அழகாக அங்குள்ளவர்களுக்கு விளக்கினார். இதற்கு… )

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரியும் அளவிற்கும் கூட இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே என் பக்தர்களுக்கு நன்மைகள்தான் யான் செய்வேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் அப்பனே அனைவருமே பக்குவங்கள் படவேண்டும் அப்பனே. 

அப்பனே இதனால் அப்பனே முதலில் யான் தருவது என்றாலும் அப்பனே அதைப் பயன்படுத்துவதற்கு நிச்சயம் துன்பம் வேண்டுமப்பா. அப்பனே அதைக் கொடுத்தால்தான் அப்பனே தாங்கிக் கொள்ள முடியும் அப்பா. 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர், மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 18 July 2025

சித்தன் அருள் - 1904 - அன்புடன் அகத்தியர் - மேல்மலையான்னுர் அங்காள பரமேஸ்வரி கோவில் வாக்கு!





17/7/2025 ஆடி முதல் தேதி அஷ்டமி திதியில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், செஞ்சி வட்டம். விழுப்புரம் மாவட்டம். 

எங்கும் நிறைந்திருக்கும் இறைவா!!!... இறைவி!! போற்றியே!!!.... பணிந்து.. வாக்குகளாக ஈகின்றேன் அகத்தியன். 

அன்பென்று அப்பப்பா!!!

அருள்தரும் என்றென்றும் கூட!!!

என்றென்றும் பின் தங்கினாலும்... எங்கெங்கும் சென்று இவ் அம்மை.. கடை அறிந்தும் புரிந்தும்... வருடத்தில் பல இடங்களுக்குச் சென்று அறிந்தும் இதைத்தன் தெரியாமல்... அலைந்தும் திரிந்தும் இவற்றை.. என்று உண்டு... அல்லது பின் அவ்வாறு இல்லை என்றாலும் அப்பனே பின்... நல்விதமாகவே அப்பனே பின்...

ஆடி முழுவதும் கூட அப்பனே... இங்கு தங்கி இருக்கும் அப்பனே பின்.. அனைவருக்கும் தரிசனங்கள் கொடுத்து.. அப்பனே அறிந்தும் புரிந்தும்.. அப்பனே எவ்வாறு அப்பனே... பல வழிகளிலும் கூட வருடத்திற்கு.. ஒருமுறை அறிந்தும்.. அப்பனே பின் பல வழிகளிலும் கூட செய்வினைகள் ஏவல் நிலைகள்... அப்பனே அறிந்தும் கூட பின் பல வினைகளைக் கூட அப்பனே பின் இவ் மாதத்தில் மட்டுமே அப்பனே... பரிசுத்தமாக இங்கே அமர்ந்து (அம்பாள்) அப்பனே  பின் அனைத்து வழிகளிலும்... (வினைகளை) நீக்கிக் கொண்டே இருக்கின்றாள் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் பௌர்ணமி.. திதிகளிலும் கூட அமாவாசை திதிகளிலும் கூட...

அப்பனே நிச்சயம் தன்னில் கூட வந்து சில சில அப்பனே மணித்துளிகளே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மக்களை பின் குறைதீர்க்க!!!

ஆனாலும் அப்பனே ஓடோடி அறிந்தும் புரிந்தும் கூட அமாவாசை தன்னில் கூட... அப்பனே பின் வந்தாலும்... நிச்சயம் 12 பின் மாதங்கள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட கழித்தால்
அப்பனே வெற்றிகள் உண்டு!!
 

(வருடத்திற்கு 12 அமாவாசை.  இவ் 12 அமாவாசைகளிலும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு வந்து தேவியை தரிசனம் செய்து இருந்து விட்டு சென்றால் வெற்றிகள்) 

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் ஆடி தன்னில் வருவோருக்கெல்லாம்.. அப்பனே பின் அழகாகவே இங்கே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அனைத்து.. சீடர்களும் இங்கு வந்து இவளுடைய... சீடர்களும் இங்கு வந்து அப்பனே தங்கி பின் பரிசுத்தமாக...அவள் தனக்கு என்ன தேவை என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... என்னென்ன அப்பனே பின்... உணர்ந்து உணர்ந்து அப்பனே... அனைத்து சீடர்களும் இவ் தேவிக்கு அப்பனே பின் அனைத்தும் செய்து அறிந்து அப்பனே... பரிசுத்தமான சந்தோஷம் அடைந்து....

அப்பனே கேட்டதையெல்லாம் அப்பனே வாரி வழங்குவாளப்பா!!!.. ஆடி தன்னில் கூட...

இவ்வாறாகவே பல பல வழிகளிலும் கூட.. அப்பனே பின் வெற்றிகள் அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே. 

குறைகள் வேண்டாம் அப்பனே... அறிந்தும் புரிந்தும் கூட எதனால்.. என்பதை எல்லாம் அப்பனே போக போக.. அப்பனே எடுத்துரைக்கின்றேன் அப்பனே...

இன்றைய தினத்தில் அப்பனே அழகாகவே அப்பனே பின் இவ் அம்மை.. ஆசிர்வதித்தாளப்பா!! அனைவருக்குமே!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட நாளைய பொழுதிலும் (ஆடி வெள்ளி) கூட என்னென்ன பின் வரங்கள் எதை என்று புரிய... அனைவரும் பின் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட...



(வணக்கம் அகத்தியர் அடியவர்களே ஆடி முதல் நாள் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி தரிசனம் செய்தார் அப்பொழுது தேவிக்கு முன்பாக மூலஸ்தானத்தில் இருந்து குருநாதர் வாக்குகள் உரைத்தார் அப்பொழுது தேவிக்கு சேவை செய்யும் ஒரு பெண் பத்திரிக்கை குருநாதர் உரைத்த வாக்கு 

 இருந்தாலும் தாயே!!! நிச்சயம் தன்னில் கூட பின் முதல்.. அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட 
தாயே நிச்சயம் தன்னில்  கூட ஆடி தன்னில் கூட... ஒரு நாள் நிச்சயம் தன்னில் கூட.. உன் இல்லத்திலே உறங்கி விட்டு செல்வாள் நிச்சயம் தன்னில் கூட... தாயே 

இதனால் முதல் நாளிலே உன் இல்லத்தில் பின் தங்கி பின் நிச்சயம் தன்னில் கூட... அனைவருக்கும் பின் ஆசிகள் தருவாள். 

ஆசிகள்!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1903 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 1


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 1

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே நிச்சயம் உங்கள் அனைவரையுமே நிச்சயம் தன்னில் கூட பின் பல திருத்தலங்களில் யான் கண்டிருக்கின்றேன் அப்பனே. அனைவருக்குமே எம்முடைய ஆசிகளும் தந்திருக்கின்றேன் அப்பனே. 

அப்பனே நலமாகவே இதனால் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்.  அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் புரியாமல் மனிதன் தவித்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே. இறை என்ன செய்யும்? எப்பொழுது செய்யும்? என்பதையெல்லாம் உணராமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சுற்றித் திரிகின்றானப்பா. ஒவ்வொருவருக்கும் அப்பனே ஒவ்வொரு வேலை (இறைவன் கொடுத்து அனுப்புகின்றானப்பா). அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவை பல வாக்குகளிலும் கூட யான் உரைத்திட்டேன் அப்பனே. 

அப்பனே நலன்களாகவே, ஒவ்வொரு வேலையையும் கூட அப்பனே அதை நிச்சயம் உணர்வதற்காகவே துன்பங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் அவை உணர்ந்திட்டால் அவ்வேலை சரியாகச் செய்து,  அப்பனே பின் வந்தது எதற்கு என்று அவ் ஆன்மா சரியாகவே அவ்ஆன்மா மீண்டும் சென்றுவிடும் அப்பா.

அப்பனே அவ்வேலையைச் சரியாகப் பயன்படுத்தாமல் எங்கெங்கு சென்றாலும் நிச்சயம் தன்னில் கூட விடிவெள்ளி இல்லையப்பா. எத்தனை தெய்வங்கள்? , எத்தனை  பக்தர்கள்? எதை எதையோ நம்பிச் சென்றாலும், அனைத்தும் வீணே!!! 

அப்பனே நிச்சயம் உன்னை நீ உணராமல் எங்கு சென்றாலும் ஒன்றும் லாபம் இல்லையப்பா. அப்பனே அனைவருக்குமே நிச்சயம் தன்னில் கூட தெய்வ அருள் மிஞ்சிக் காணப்படுகின்றது அப்பனே. ஆனால் அதைச் சரியாகவே பயன்படுத்தவில்லை. அப்பனே நிச்சயம் இதுதான் கலியுகமப்பா.

அப்பனே மனது தூய்மை அப்பனே நிச்சயம் நிரந்தரமாக பின் இறைவன் குடிகொள்வானப்பா. இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு நிச்சயம் பின் குடிகொண்டுவிட்டால் அப்பனே  நீங்கள் கேட்டதெல்லாம் தானாகவே நடக்கும் என்பேன் அப்பனே. அதனால் முதலில் நிச்சயம் பின் மனங்கள் வேண்டும் அப்பா. மனங்கள். 

அப்பனே மனதில் அழுக்குகளை வைத்துக்கொண்டு பல பல திருத்தலங்களை நாடுகின்றனர் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே நிச்சயம் இன்னும் பாவம் சேரும். 

அப்பனே நிச்சயம் இதனால் அப்பனே நிச்சயம் மனிதன் இறையருளைப் பெறுவதும் , எதை என்று பொருத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அப்பனே அனைவரையுமே குழந்தையாகத்தான் என்னுகின்றான் அப்பனே. அதை மட்டும் இல்லாமல் அனைத்து புத்திகளையும் கூட கொடுத்துத்தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே.  ஆனாலும் அதை சரியாகவே நிச்சயம் தன்னில் கூட மாயைகளில் காட்டி. ஆனாலும் அப்பனே நீங்களும் கேட்கலாம் 
, மாயையை உருவாக்கியது இறைவன்தான் என்று. கேளுங்கள் அப்பனே. 

அடியவர்கள் :- ( இறைவன்தான் ) 

குருநாதர் :- அப்பனே இதைச் சொல்லிச் சொல்லியே நம்பவைத்து விட்டார்கள். அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும், ஏன் எதற்கு எவை என்றும் புரியாமல் அப்பனே இவ்ஆன்மா பின் எதனை நோக்கி அப்பனே வந்த வேலை என்ன ? அவ்வேலையை நிச்சயம் முடித்துவிட்டால் அப்பனே அவ்வேலையை நீங்கள் தேடிச் செல்வதற்காகத்தான் துன்பங்கள் கொடுத்துக் கொண்டே, கொடுத்துக்கொண்டே. 

அப்பனே அதைத் தெரிந்து கொள்வதற்கும் சில புண்ணியங்கள் தேவையப்பா. அப்பனே நிச்சயம் எங்களால் ஏதும்  செய்ய முடியவில்லையே நிச்சயம் என்று சொல்பவனும் அப்பனே நிச்சயம் அமைதியாக நிச்சயம் தன்னில் கூட பின் காலத்தை எதை என்றும் புரிய அப்பனே. நிச்சயம் அப்பனே அனைவருமே காலத்தை வென்றுவிடலாம் சுலபமாக. 

சுவடி ஓதும் மைந்தன் :- காலத்தை வெல்லலாம் என்றால் , சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி , குரு பெயர்ச்சி இதல்லாம் ஒன்றும் பாதிப்பு இல்லை. அதுதான் காலத்தை வெல்லலாம் (என்ற அர்த்தம்). அதையும் கேட்கலாம் இப்போ.

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தாயே, தந்தையே நிச்சயம் இதனால் காலத்தை வென்றவர்கள் பலர் பலர். எப்படி வென்றார்கள் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பல பல சுவடிகளில் அழகாக எழுதி வைத்தோம். ஆனாலும் அதை நிச்சயம் தன்னில் கூட பின் காசுகளுக்காகவே பயன்படுத்திக் கொண்டு. நிச்சயம் (சுவடி) ஓதி ஓதி கெடுத்திட்டு. இதனால் நிச்சயம் நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதைத் தருவதற்காக்க் கிரகங்கள் தயாராக இருக்கின்றது. 

அப்பனே பின் கெடுவான் என்றால், அப்பனே கெடுத்து விடும்.

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க மற்றவர்களைக் கெட்டுப் போகட்டும் என்று நினைத்தால் , உங்களையே கெடுத்திடும் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே இதில் அப்பனே சனீஸ்வரன் நிச்சயம் முன்னுக்கு வருகின்றானப்பா. 
அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே. நிச்சயம் அதாவது அனைத்தும் ஈசனுடைய குழந்தைகளே என்பேன் அப்பனே. நிச்சயம் சிறு உயிராயினும் அப்பனே. ஆனாலும் அப்பனே அதை ஏற்பதே இல்லை என்பேன் அப்பனே. 

இதனால் நல் விதமாகவே அப்பனே பின் வேங்கடவனின் பின் அறிந்தும் கூட ராசிகள்.

சுவடி ஓதும் மைந்தன் :- மிதுனம் , கன்னி ராசி யாராவது இருக்கீங்களா இங்க? எழுங்கள் ஐயா. 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அலைந்தும் திரிந்தும் ஒன்றும் ஆகவில்லை. நிச்சயம் தன்னில் கூட  அவ்வாறாக எதை என்று அறியாமலும்,  எதை என்று புரியாமலும் எதை என்று அறியாமலும் தான் தான் தவறுகள் செய்து எதை என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட அழகாகவே நிச்சயம் சில பக்குவங்களைக்கூட ஏற்படுத்தி ஏற்படுத்தி.

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அழகாக சில கஷ்டங்களை கொடுத்து பக்குவங்களை ஏற்ப்படுத்திட்டார் முதல்ல. ஐயா பக்குவம்னா என்னன்னு தெரியுங்களா? 

அடியவர் :- கஷ்டம்

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கஷ்டத்தை கொடுத்திட்டு அதன் மூலமா நன்மை ஏற்படுத்திட்டாரு. 

குருநாதர் :- அப்பனே அழகாகவே நன்று. அப்பனே பின் புரிகின்றதா? நிச்சயம் அப்பனே அதாவது  அனுபவம்தான் பாடம் என்று நன்றாகக் கற்றுணர்ந்தீர்கள். கேளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க examல pass. அப்போ நீங்க கேள்வி கேட்கலாம்னு சொல்லிட்டார். கேளுங்க அய்யா. 

அடியவர் :- எதை நோக்கி நம்ம பயணத்தை கூட்டிக்கொண்டு போகின்றார்? 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதனை நோக்கி நீங்கள் செல்கின்றீர்கள் அனைவருமே?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா , அதை உங்களையே கேட்கின்றார். எதை நோக்கி நீங்கள் செல்கின்றீர்கள்? யாருக்காவது தெரியுமா? தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லுங்கள். அகத்தியப் பெருமானையே கேட்டுவிடலாம். 

அடியவர்கள் :- தெரியாது ஐயா. 

குருநாதர் :- அப்பனே தெரியாது என்று சொல்லக்கூடாது என்பேன் அப்பனே. நிச்சயம் மற்றவர்களிடம் அப்பனே கேட்டு அறிதல் வேண்டும். ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்கின்றேன் அப்பனே.  அனைவருமே சாவு நோக்கித்தான் செல்கின்றீர்கள் என்பேன் அப்பனே. 

அடியவர்கள் :- …………

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் மனித உடம்பு எதனால் ஆனவை? 

அடியவர்கள் :- பஞ்ச பூதங்கள். 

குருநாதர் :- அப்பனே அப்பஞ்ச பூதங்களால் என்னென்ன விளையும் என்பதையெல்லாம் அப்பனே தெரியுமா அப்பா? அப்பனே வருங்காலத்தில் அதுதான் நடக்கப் போகின்றது. அப்பனே, அம்மையே இதனால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதனால்தான் அன்பு மட்டும் எங்களுக்குப் போதும் என்று. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்அன்பை நிச்சயம் செலுத்திவிட்டால் அப்பனே அவ்அன்பிற்கு யாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்பேன் அப்பனே. அனைத்தும் செய்வோம். அப்பனே இங்கு அன்பு வந்துவிட்டால், அப்பனே குற்றம் செய்ய மனமில்லை. 

அப்பனே அவ்அன்பு வருவதற்கும் புண்ணியங்கள் தேவையப்பா. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்புண்ணியங்கள் எப்படிப் பெறுவது என்பது யாருக்காவது தெரியுமா அப்பா? 

அடியவர் :- பிறருக்கு உதவனும். தர்மம் செய்யனும். 

குருநாதர் :- தாயே இப்போது இதற்கு இப்போது இடமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் ஒரு விதத்தில் சரிதான். இந்த நேரத்தில்  அதுக்கு இடமில்லை. அடுத்து சொல்லுங்கள். 

அடியவர் :- துன்பம் வந்தாலும் துன்பத்தைக் கண்டு எப்போதும் நாம் துவண்டுவிடக்கூடாது. நம்முடைய குறிக்கோளை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கவேண்டும். 

குருநாதர் :- அறிந்தும் புரிந்தும் தாயே இதற்கும் இடமில்லை. 

அடியவர் :- ஜீவகாருண்யம்.

குருநாதர் :- தாயே இதற்கும் இடமில்லை. 

அடியவர் :- மற்றவர்கள் கஷ்டத்திலிருந்து மேலே வர உதவனும். 

குருநாதர் :- இதற்கும் இல்லை. அப்பனே இதுவும் இல்லை. 

அடியவர் :- எல்லாம் இறைவன்தான் என்று ..

குருநாதர் :- அப்பனே இவையெல்லாம் யான் சொல்லிவிட்டேன். 

அடியவர் :- சரணாகதி

குருநாதர் :- அப்பனே இறந்தும் , பிறந்தும். யான் என்ன கேட்டேன்? 

அடியவர்கள் :- புண்ணியம் எப்படி செய்வது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இறந்தும் பிறந்தும் இதற்கு என்ன இடையில் என்று கேட்கின்றார். 

அடியவர் :- வாழ்க்கை. 

குருநாதர் :- அப்பனே மீண்டும் கேட்கின்றேன் அப்பனே. எப்படி புண்ணியங்கள் செய்வீர்கள்? 

அடியவர் :- ஐயாதான் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

குருநாதர் :- அம்மையே அறிந்தும் நிச்சயம் நரகத்தில் அனைவருமே பாவம் செய்தவர்கள்தான். நிச்சயம் அவை தொலைக்க இறைவன் எப்படி வழி விடுவான்? 


அடியவர் :- அப்பா நீங்கதானே சொல்லிக் கொடுத்தீர்கள். இன்பம் எப்படி ஒரு மாயையோ அதுபோல் துன்பமும் ஒரு மாயைதான். அப்போ இன்பம் துன்பம் இரண்டையும் இறைவன்தானே கொடுக்கின்றார். 

குருநாதர் :- தாயே பின் இப்பொழுது யான் என்ன சொன்னேன்? 

அடியவர் :- புண்ணியம்

குருநாதர் :- தாயே மீண்டும் சொல்கின்றேன். அறிந்தும் இதைத் தன் புரிய அனைவருமே நரகத்தில் இருக்கின்றீர்கள். இங்கு புண்ணியம் எப்படி வேலை செய்யும் ? இன்பம் எப்படி வேலை செய்யும்? 

இவ்நரகத்தை விட்டு வெளியே வர ஆங்காங்கு திருத்தலங்கள் யாங்களே அமைத்தோம். 

நிச்சயம் தன்னில் கூட இதனால் அனைவராலும் பின் துன்பம் இல்லாமல்  பின் வாழ முடியுமென்றால் நரகத்தில் - நிச்சயம் இல்லை தாயே. அனைவராலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது புண்ணியங்கள் செய்து வாழ வேண்டுமென்றால் நிச்சயம் இல்லை. 

இதனால்தான் தாயே கலியுகத்தில் துன்பம் என்ற ஆயுதத்தை இறைவனே எடுத்து நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட கொடுத்து நிச்சயம் மற்றவர்களுக்காக உழைக்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால் நம்மள பக்குவப்படுத்த என்ன தேவை? துன்பம் தேவை. துன்பம் இருந்தால்தான் நம்மை பக்குவப்படுத்தி அந்த பாவத்தை நீக்க முடியும். 

குருநாதர் :- தாயே சொல்லிவிட்டேன். இறைவன் ஒன்றுமே கொடுப்பதில்லை. இதற்கு என்ன நீங்கள் கூறுகின்றீர்கள். 

அடியவர்கள் :- ( அமைதி ) 

குருநாதர் :- ஆனாலும் கொடுப்பான். நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு அனைத்தும் பின் அனைவரும் துன்பத்தில் ஒளிந்துள்ளீர்கள்? 

அடியவர் :- பக்குவங்கள் அதிகரிப்பதற்காக…

குருநாதர் :- தாயே இவையன்றி உணர நிச்சயம் இறைவன் எங்கு இருக்கின்றான். 


*******
“பக்தி என்ற கத்தி”
*******


அடியவர் :- இங்கதான் இருக்கின்றார். 

குருநாதர் :- அப்பா இது மட்டும் தெளிவாகச் சொல்கின்றாய் அப்பா. 

அடியவர்கள் :- ( சிரிப்புக்கள் ) 

குருநாதர் :- அப்பப்பா !! அப்பொழுது பின் இறைவன் இங்குதான் இருக்கின்றான். ஆனாலும் அப்பனே நீ செல்லும் வழியில் கூட இறைவன் இருக்கின்றான் அல்லவா? 

அடியவர் :- நிச்சயமாக

குருநாதர் :- அப்பொழுது இறைவனே வந்து உன் கையை உடைத்திருக்கலாம் அல்லவா?

அடியவர்கள் :- ( சிரிப்புக்கள் ) 

அடியவர் :- நிச்சயமாங்க ஐயா

குருநாதர் :- அப்பனே நிச்சயம் இறைவன்தானப்பா!!!

அப்பனே அடப்பாவி இறைவா!! நான் உனக்கு அனைத்தும் செய்தேனே என்ன புரயோஐனம் என்று. அப்பனே ஏன் கேட்கவில்லை? 

அடியவர் :- என்னுடைய நல்லதற்காகத்தான் செய்திருப்பார். 

குருநாதர் :- அப்பனே அந்தக் கை பின் நிச்சயம் இறைவனை எப்படி பின் தொழுதிற்று. அதனால் அப்பனே சில பல பூசைகள் இறைவனைத் தொட்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( தனி விளக்கங்கள் ) 

குருநாதர் :- அப்பனே இதன் ரகசியத்தை யான் செப்புவேன். இதனால் அப்பனே அவர் இவர் எதை என்று புரிய நல் சொப்பனத்திலேயே நல் முறையாகவே யான் உரைப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஆழ் ரகசிய விளக்கங்கள்)

*************
( காகபுஜண்டர் மகரிஷி வாக்கு :- “பக்தி என்பது கத்தி என்று தெரியாமல்  போனது!!!!” - சித்தன் அருள் 1362)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு : “அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே இன்னும் சித்தர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் பக்தி என்பது அப்பனே பின் கத்தி போன்று என்பேன் அப்பனே”. - சித்தன் அருள் 1724) 

*************

குருநாதர் :- அப்பனே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? நிச்சயம் தன்னில் கூட அதாவது இறைவனுக்குப் பூசைகள் செய்து கொண்டிருந்தான். இறைவன் இறைவன் என்று ஓடிக்கொண்டிருந்தான் என்று. ஆனாலும் அப்பனே நீ என்ன செய்தது என்று தெரியாமல் அப்பனே போகுமப்பா. இது போல் கலியுகத்தில் இறைவன் தண்டனைகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அப்போ உங்க கை உடைந்துவிட்டால் என்ன சொல்லுவாங்க? 

அடியவர் :- நான் ஏதோ தவறு செய்து விட்டேன் என்று. 

அடியவர்கள் , சுவடி ஓதும் மைந்தன் :- சாமி சாமி என்று கும்பிட்டுக் கொண்டிருந்தியே என்ன நடந்தது , ஏது என்று. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் இது போலத்தான் மனிதன் கலியுகத்தில் இறைவனுக்கே அவப்பெயரை ஏற்படுத்துவான் மனிதன். 

(அதாவது மனிதர்கள் தவறு செய்துவிட்டு,  இறைவனை குறை சொல்வது. இறைவனே இல்லை என்றும் சொல்வது) 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி ஏற்படுத்துவாங்க? எப்படி வணங்குவாங்க? இறைவனை நான் வணங்கினேனே, வணங்கினேனே.. ஒன்னுமே செய்யலையே என்று  சொல்லிவிட்டு…அப்போ இறைவன் எங்க இருக்கின்றார்? . அப்போ மத்தவங்க என்ன பன்னுவாங்க? 

குருநாதர் :- அறிந்தும் இதனால்தான் நிச்சயம் பக்குவங்கள் தேவையப்பா. 


###################
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி உங்கள் பார்வைக்கு :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில்.
மதுரை To திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு Thiagarajar Engineering Collegeக்கு முந்தின ஸ்டாப்.
###################

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 


(-------------------------------------------------

வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே!!!

உலகம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இதனைத் தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு.
 

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-

https://siththanarul.blogspot.com/2025/06/1884.html?m=0

ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள்.  வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

(1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியைத் தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

(2) அனுதினமும் உங்கள் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று  வழிபாடு செய்ய வேண்டும். 

(3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.

(4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடிச் சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

(5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இவ் வழிபாட்டினை அனைவரும் ஒன்று கூடி ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து,  மற்றும் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் அழிவிலிருந்து விடுபட  பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 17 July 2025

சித்தன் அருள் - 1902 - அன்புடன் அகத்தியர் - எகிப்து வாக்கு - 2!



குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 2

அப்பனே ஒரு சமுதாயம் தஞ்சையில் குடி கொண்டது எதை என்று அறிய அறிய 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. தஞ்சை தன்னில் கூட அப்பனே எதை என்று அறிய அறிய.. ஒரு குழு இருந்ததப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. ஆண்டுகள் ஆண்டுகளாக நிச்சயம் தன்னில் கூட.. எவை என்று புரிய அப்பனே.. சமயம் வளர்த்து!! அப்பனே இப்படி இருந்தால் அப்பனே எத்தனை ஆண்டுகள் ஆயினும்  பின் வாழலாம்... நிச்சயம் தன்னில்  கூட.

அப்பனே இதனால் அப்பனே தேசத்தில் தேசம் முழுவதும் பின் பரவியது என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட 
. அப்பனே இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பல அரசர்கள் படையெடுத்து படையெடுத்து அப்பனே இங்கு வந்திட்டு... மீண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய.. உடனடியாக அப்பனே பின் அதாவது.. நிச்சயம் தன்னில் கூட இறந்தாலும் கூட... அங்கு செலுத்திடுக!! என்றெல்லாம் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட.

(அரசர்கள் இறந்து விட்டால் தனது உடலை அங்கு பிரமிடில் சென்று வைக்க வேண்டும் என்று கட்டளை)

அப்பனே ஆனாலும் அப்பனே... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்.. மீண்டும் மீண்டும் அப்பனே உயிர் பிழைத்து.. உயிர் பிழைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அரசாண்டார்கள்.. நலமாகவே என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே ஒவ்வொரு அரசனும் கூட... சொன்னேனே அப்பனே பின் முன்பே அப்பனே பின் அதாவது 500 பின் 1000 பின் 2000 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தனர் நலமாகவே என்பேன் அப்பனே! 

(சூரியவர்மன் கம்போடியா அங்கோவாட் தேசத்தை 500 ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்தான் என்பதை கம்போடியா வாக்கில் குருநாதர் கூறியது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்)

அப்பனே புரிகின்றதா?? அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே... இயக்கும் சக்தி அப்பனே மனிதனிடத்தில்.. அப்பனே பின் அதாவது இறைவன் அழகாகவே அப்பனே நலமாகவே அப்பனே பின் ஒவ்வொரு சக்தியும் அப்பனே பின் கொடுத்துத்தான் அனுப்புகின்றான் அப்பனே. 

ஆனால் அப்பனே அதை சரியாகவே பின் பயன்படுத்துவதும் இல்லை உணர்வதும் இல்லை.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏதோ... வந்தோமா!? நிச்சயம் அப்பனே எதை என்று கூற சந்தோஷமாக.. இருந்தோமா !? படித்தோமா?? வேலைக்கு சென்றோமா!? திருமணம் செய்தோமா!? பிள்ளைகள் பெற்றோமா!?... என்றெல்லாம் தான் அப்பனே மனிதன் இருக்கின்றானே தவிர!!

உள் நுழைந்து 
 (ஆழ்ந்து உணர்வதே இல்லை) 
அப்பனே பார்ப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே கலியுகத்தில் அழிவுகள் பலமாக வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின்  என் பக்தர்கள் நன்றாக வாழ வேண்டும் அப்பனே எதை என்று புரிய.. அப்பனே பின் அனைத்தும் தெரிந்து கொண்டு பின் மோட்சத்திற்கான வழிகள்... அப்பனே 

ஆனாலும் அப்பனே அது மட்டுமில்லாமல் அப்பனே பின் உடம்பையும் அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில்  கூட


 இன்னும் அப்பனே பின் ஓர் ஓர் இடம் இருக்கின்றதப்பா... அங்கு சென்றால் அப்பனே வயது கூட ஆகாது என்பேன் அப்பனே...

அப்பனே சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்களே.. அனைவரும் கூட.. எனக்கு வயதாகிவிட்டது50 வயது 70  வயது ஆகிவிட்டது என்றெல்லாம் அப்பனே.. எவை என்று அறிய அப்பனே ... அங்கெல்லாம் சென்றால் அப்பனே வயதும் ஆகாதப்பா நிச்சயம்.

ஆனாலும் அப்பனே இதற்கும் புண்ணியங்கள் தேவைப்படுகின்றது அல்லவா.


 இதற்கும் அப்பனே பின்.. ஏன்? எதற்கு? என் பக்தர்களை அதை செய்!! இதை செய்!! புண்ணிய பாதையில் செல்!!.. என்றெல்லாம் அப்பனே.. கூறிக் கொண்டே இருக்கின்றேன் என்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே ஒரு குறையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் அப்பனே. 

அவை இவை எல்லாம் செப்பி நன்முறைகளாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் உங்களுக்கு செப்பிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.

இதனால் அப்பனே எதை என்று புரிய.. இதனால்தான் அப்பனே நிச்சயம் அங்கிருந்து அப்பனே பல அரசர்கள். அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எதை என்று புரிய வாழ்ந்தனர் என்பேன் அப்பனே. 

அவை மட்டுமில்லாமல் அப்பனே... பல அரசர்கள் இங்கு வந்து எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே... சொல்லிட்டு அப்பனே.. எதை என்று அறிய அறிய தன்னுடன் வீரர்களையும் அழைத்துச் செல்வார்கள்... நிச்சயம் அதாவது எவ் அரசனும் கூட... எதை என்று கூட என்னை.... யாராவது அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட... ஏதாவது எனக்கு செய்து விட்டால் அதாவது எனக்கு ஏதாவது நடந்து விட்டால் என்னை உடனடியாக இங்கு.. அழைத்து வந்துவிட்டு அதாவது கொண்டு வந்து விட்டு... உயிர் பிழைக்க என்றெல்லாம். 


(அரசர்கள் தன்னுடைய வீரர்களுக்கு எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் உடனடியாக என்னை பிரமிடு இங்கு கொண்டு சென்று அங்கு மீண்டும் உயிர் பிழைக்க செய்ய வேண்டும் என்று வீரர்களிடம் கட்டளை)

ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்போதெல்லாம்.. பல அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மைல் அதாவது மைல்கள் கூட நடக்க வேண்டும் கடக்க வேண்டும். 

இதனால் அப்பனே அங்கு அங்கு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... இறக்கும் நிலை வந்திற்று!!...

பின் அதாவது இங்கு வந்தாலும் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே முடியாமல் சென்றிற்று!!!


(பல தூர தேசத்து அரசர்கள் பிரமிடு அதிக தூரத்தில் இருப்பதால் சிலருக்கு செல்ல முடியாமலும் போய்விட்டது)

இதற்கு அப்பனே என்ன தேவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இறைவனிடம் பின் மீண்டும் முறையிட்டு... எதை என்று கூற பின் அதாவது... ஆனாலும் இதற்கும் காரணம் இறைவனே ஆகின்றான் என்பவையெல்லாம் நினைத்து இறைவனை அப்பனே துதிக்க ஆரம்பித்தனர் என்பேன் அப்பனே.

அங்கங்கு அப்பனே எதை என்று புரிய பின்
எப்படி எதையெல்லாம் என்றெல்லாம் அப்பனே 

இதனால் அப்பனே.. பல மன்னர்களும் அப்பனே இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட தியானங்கள் செய்து அப்பனே பலங்கள் பெற்று அப்பனே... மீண்டும் மீண்டும் அப்பனே பின் வெற்றி.. எதை என்று கூற மக்களை காப்பாற்ற காப்பாற்ற.. என்றெல்லாம் அப்பனே 

இதனால் அப்பனே... நன் முறைகளாகவே இங்கிருந்தே அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே சென்று அப்பனே.. ஆனாலும் இங்கிருந்து எதை என்று கடைசியாக அப்பனே என்று புரிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது... தஞ்சை அப்பனே பின் எவை என்று.. கூட அப்பொழுது எதை எவை என்று புரிய அப்பனே


ஆனாலும் அப்பனே பின் தஞ்சை அப்பனே கும்பகோணத்தில்.. பல ஒளிகளில் ஆன அப்பனே எதை என்று அறிய அறிய கிரகங்களின் சுழற்சி.. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பாதைகள் பின் நட்சத்திரங்களின் எவை என்று கூற கதிர்வீச்சுக்கள் அனைத்தும்... அங்கு தான் விழுகின்றது என்பதை அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட கண்டுபிடித்தார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

 இங்கு ஒருவன் இருந்தானே அப்பனே 
அவன் புகழ் பெற்றவன் என்பேன் அப்பனே...

அலா சாண்டா.... !!

எதை என்று கூற 

(குருநாதர் வாக்கில் குறிப்பிடும் அலா சாண்டா என்பவர் இந்த உலகத்தை முழுவதும் ஆட்சி செய்த மசிடோனியப் பேரரசன் அலெக்சாந்தர் (எ) அலெக்சாண்டர் )

(இவருடைய பெயரில் எகிப்தில் ஒரு மாநகரமே உள்ளது இப்பொழுதும்.

 அலெக்சாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும்)


மிகப்பெரியவன்!!

எதை என்று கூற இறைவனால் உருவாக்கப்பட்டவன் என்பேன் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட அவனுடைய பெயரையும் விட என்று புரிய அப்பனே பின் அவந்தனும் கூட பல பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய... எப்படி ஏது என்றெல்லாம் அப்பனே... இறைவனை இங்கு வந்து கண்டு உணர்ந்தான் என்பேன் அப்பனே. அறிந்தும் செல்கின்ற பொழுது!!!
(ஒவ்வொரு நாடாக படை எடுத்து செல்கின்ற பொழுது இங்கும் வந்து இறைவனின் ஆற்றலை உணர்ந்து கொண்டார்) 

ஆனாலும் அப்பனே அவை இவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் உலகத்தை வெல்லலாம்.. என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் செல்லலாம் என்றெல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே பின் இறைவனை உணர்ந்து கொண்டு அப்பனே நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட இவ்வாறாக இருந்தால் பின் சக்திகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அதாவது அப்பனே பின் நல் வழியாகவே அதாவது நிச்சயம் தன்னில் கூட...

இவ் நதியானது (நைல் நதி) அப்பனே எங்கும் வழிகின்றதோ (எங்கெல்லாம் ஓடுகின்றதோ) இதற்கு சக்திகள் வேறு!!!.. இவ் நதியில் கூட அப்பனே... எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இங்கு... சூரியனின் கதிர்வீச்சுகள் அதிக அளவில் இவ் நதியில் நிச்சயம் பின்.. விழுகின்றது என்று கண்டுணர்ந்தான் அவன் (அலெக்சாண்டர்) 

இதனால் அதாவது பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் எதை என்று தெரியாமல் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... ஒரு மந்திரத்தைக் கூட அவ் ஞானியவன் அவனுக்கு உபதேசித்தான். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் எதை என்று அறியாமலும் எவை என்று கூட நிச்சயம் தன்னில் கூட. 

அதனால் நிச்சயம் அவந்தனுக்கும் பின் பல வழிகளிலும் கூட ஞானங்கள் பெற்று இதனால் நிச்சயம் தன்னில் கூட சிறு வயதிலேயே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட 

எங்களுடைய ஆசிகளும் அருளும் அவந்தனக்கு இருந்ததப்பா!!

ஏன்? எதற்கு? எவை போன்று... எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாங்களும் எதை என்று புரிய அப்பனே இங்கு தவங்கள் செய்திட்டோம் பல பல வழிகளிலும் கூட.

ஏன்? எதற்கு???

மக்களை கண்டுணரலாம் இங்கு தவங்களை பல வழிகளிலும் செய்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே தன்னுள் நிச்சயம் சக்திகளை ஈர்த்து அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். என்பதை எல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே பல வகையிலும் கூட அப்பனே.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைவரும் இங்கு வந்து...

அதாவது அப்பனே சுக்கிரன் (கதிர்வீச்சு)... அழகாக விழும் எதை என்று புரிய அப்பனே..

சுக்ரன் இடமிருந்து அப்பனே பின்.. எதை என்று அறிய அறிய பின் யானும்.. எதை என்று புரிய... அதாவது சுக்கிரனிடமிருந்து அப்பனே பலமாக... இங்கு வந்து பல ஆசிகளையும் கொடுத்து அப்பனே பல வழிகளிலும் கூட பின் மக்களுக்கும் எவை என்று அறிய அறிய சேவையாற்றவே அப்பனே!!! நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் அப்பனே நன் முறைகளாகவே இதை தன்.. அப்பனே பின்..அலா சாண்டா...


அப்பனே எதை என்று புரிய அப்பனே எதை என்று அறியாமலும் கூட அதாவது சாணக்யா என்பது எவை என்று புரிய அப்பனே.. இப்பொழுது மாற்றி எவை என்று கூற.. எதை என்று அறிய!!!

(அலா சாண்டா.... சாண்டா என்பதன் பொருள் சாணக்யா என்பதாகும் அது தற்பொழுது பெயர் உச்சரித்து மாற்றி அலெக்சாண்டர் என உச்சரிப்பு மருவிவிட்டது.)

அறிந்தும் கூட உண்மையெல்லாம் அப்பனே பின் இவ்வாறாக..நாம் தானே... இவ்வுலகத்தை வெல்லலாம்.. இவ்வுலகத்தை வெல்லலாம் என்றெல்லாம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவந்தனும் கூட... அதாவது பின் இறைவன் அனைத்தும் நிச்சயம் பின் கற்பித்துத்தான் நம் தனக்கு சக்திகள்... சக்திகள் நிச்சயம் தன்னில் கூட புகுத்தி தான் அனுப்புகின்றான். 

இதனால் அவர் சக்திகளை சரியாகவே பயன்படுத்திக் கொண்டால் இவ்வுலகத்தையே வெல்லலாம் என்றெல்லாம் அப்பனே. 


(இறைவன் மனிதர்களுக்கு கொடுத்து அனுப்பும் சக்தியை அலெக்ஸாண்டர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்)



இப்படியே அப்பனே குதிரையின் மீதே வந்தானப்பா!!! நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட.

(அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் புசெபாலஸ்... மிகவும் வலிமையாக அலெக்சாண்டருக்கு உற்ற துணையாக இருந்த இந்த குதிரையும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது)

நிச்சயம் தன்னில்  கூட பல வழிகளிலும் கூட வெற்றி கொண்டான் .

அவந்தனை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லையப்பா !!


எதை என்று புரிய மீண்டும் இவ்வுலகத்தை நிச்சயம் தன்னில் கூட.. அதாவது பின் பிடிக்க வேண்டும் எதை என்று அறிய இவ்வுலகத்தை ஆள வேண்டும் நிச்சயம் தன்னில் கூட.. இவ்வுலகத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிச்சயம் மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டும்.. மக்கள் அனைவரும் நல்லோர்களாக வாழ வேண்டும்... இறைவன் ஒருவனே !!
என்பதை எல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்கிணங்க.. அப்பனே பின் அனைத்தும் அப்படி சாதித்துக் கொண்டு வந்தானப்பா!!

ஆனாலும் மீண்டும் எதை என்று புரிய அப்பனே ஆனாலும் எதை என்று அறியாமலும் கூட.. அப்பனே பின் இதனால் அதாவது அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய..

இறைவன் யான்!! இறைவன் யான்!!... என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைத்தும் செய்ய முடியும் என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

ஆனால் இறைவனோ!?!?... நிச்சயம் பின் இவனை..விட்டிட்டாலும் (இப்படியே விட்டுவிட்டாலும்) 
நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய எதை என்று அறிய நிச்சயம் பின் மீண்டும் இவந்தன்.. கர்வம் ஆகி எதை என்று புரியாமலே 
(தாம் தான்!! தான் மட்டும் தான் என்ற கர்வம்) எதை என்று அறியாமலும் மீண்டும் மக்களை எதை என்று அறிய அறிய. 

இதனால் மீண்டும் எதை என்று அறிய அறிய... அப்பனே பின் அதாவது வந்து கொண்டே இருக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே 

அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது பனி லிங்கம் என்று... சொல்வார்களே அங்கு அழகாகவே ஈசனும் பார்வதி தேவியும் காட்சி கொடுத்து நிச்சயம் தன்னில் கூட. 

(அலெக்ஸாண்டர் ஒவ்வொரு நாடுகளாக வென்று வரும்பொழுது இந்தியாவிற்கும் வந்தார் இந்திய அரசன் போரஸ் மன்னனுடன் போர் செய்து சென்ற வரலாறு இருக்கின்றது) 

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தபோது பனி லிங்கம் என அழைக்கப்படும் அமர்நாத்தில் ஈசன் பார்வதி தேவியார் தரிசனம் பெற்றார்)

ஈசனும் பார்வதி தேவியும் அவனைப் பார்த்து!!!

பின் மகனே!!!..
பின் நிச்சயம் வந்தது போதும்!! திரும்பி செல்!!

நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் வெல்லும்  சாதனைகளும் பின் அறிந்தும் கூட உந்தனக்கு திறமைகள் கொடுத்திட்டோம்.

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய.. என்னருகில் வந்துவிடு என்று!!!

(அதாவது செய்த சாதனைகள் எல்லாம் போதும் வென்றது எல்லாம் போதும் !இனி பிறவியை முடித்துக் கொண்டு எங்களிடம் வந்து விடு என்று)

ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அவந்தனும்!!!

நிச்சயம் இறைவா!!!

பின் அனைத்து சக்திகளும் கொடுத்துவிட்டு நிச்சயம்.. அனைத்தையும் வென்றேனே!!

நிச்சயம் ஆனாலும் அறிந்தும் கூட பின் இப்பொழுது.. பின் நிச்சயம் தன்னில் கூட.. இப்பொழுது யான் வர வேண்டுமா??? என்ன!!!


நிச்சயம் நீ வரத்தான் வேண்டும் என்று ஈசனும் கூட!!! மீண்டும்.


ஆனாலும் நிச்சயம் அவன் யான் வரப்போவதில்லை!!! மீண்டும் நிச்சயம் யான் இப்படியே செல்கின்றேன்.. பின் அறிந்தும் அறிந்தும் மீண்டும் ஓரிடத்தில்..(எகிப்து பிரமிடு) அதாவது ஓரிடம் இருக்கின்றதல்லவா அங்கு சென்று சக்திகளை ஏற்றிக்கொண்டு... அப்பனே மீண்டும் எதை என்று புரிய எவை என்று அறிய மீண்டும் வருகின்றேன் என்று ஈசனிடம் முறையிட்டான்.


ஈசனும் அப்படி இல்லை!!
நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் பின் நீ அனைத்தும் சாதித்தாய்.. எதை என்று கூற மக்களுக்கு பின் பல தெளிவுகளை பின் நிச்சயம் கட்டுப்படுத்தி பெறச் செய்தாய்.. மக்களை சிறப்படைய செய்தாய்.

இதனால் போதும் இனி போதும் !!!எதை என்று கூற இனி எங்களிடத்தில் நீ இருந்து விடு !! என்று நிச்சயம் தன்னில் கூட..

பின் அதாவது ஒவ்வொரு காலத்திலும் கூட இவ்வுலகத்தில் நிச்சயம் அழிவுகள் வரப்போகின்றது அல்லவா!!

 
அப்பொழுது நீ.. பிறப்பாய் !!அதாவது உன்னை பிறப்படுக்க அதாவது அவதரிக்க செய்து விடுகின்றோம்.

இதனால் இப்பொழுது எங்களுடன் இருந்து விடு என்று. 

நிச்சயம் பின் அறிந்தும் (அலெக்ஸாண்டர்) அப்படி இல்லை!!! நிச்சயம் அதாவது பின் இவ்வுலகத்திற்கு நிச்சயம் தன்னில் கூட.. யான் தான் அனைத்தும் என்று காட்ட வேண்டும்.. என்பதற்கிணங்க நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் எதை என்று புரிய!!

நிச்சயம் பின் ஈசனும்.. உன் சக்திகளும் கூட போய்விட்டதே!!!!!!

இனி இனி மேலும் இதைத் தாண்டி பின் நீ சென்றாலும்.. எதை என்று புரிய நிச்சயம் நீ வெல்ல முடியாது என்றெல்லாம்!!

நிச்சயம் எந்தனுக்கு.. எதை என்று அறிய அறிய ஓர் இடம் (பிரமிடு) இருக்கின்றது.. அங்கு யான் சென்றிட்டு நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் சக்திகள் ஏற்றிக்கொண்டு மீண்டும்.பின். அனைத்தும் சாதிக்கின்றேன் என்று.

பின் மீண்டும் வருகின்ற (அதாவது இந்தியாவிலிருந்து செல்கின்ற பொழுது) பொழுது சக்திகளை இழக்கின்றான்!!.. நிச்சயம் நோய்வாய் படுகின்றான்!!!.. எதை என்று புரிய புரிய ஆனாலும்... எதை என்று கூற அனைத்து போரும்......!?!?!?!?!

எதை என்று அறிய அறிய நிச்சயம் என்னை அங்கே எடுத்துச் செல்லுங்கள் என்றெல்லாம்!!!

(நோய்வாய் பட்டவுடன் சக்திகளை இழந்தவுடன் என்னை அங்கே எடுத்துச் செல்லுங்கள் அதாவது பிரமிட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று தனது வீரர்களுக்கு கட்டளை அலெக்ஸாண்டர் இடுகின்றார்)


நிச்சயம் ஆனாலும் முடியவில்லையே!!!

பின் எதை என்று அறிய அறிய அனைத்தும்.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரையும் அதாவது பெரிய பெரிய.. எதை என்று அறிய அறிய இறைவனின் அருள் பெற்ற ஞானிகள் இறைவனின் அருள் பெற்றவர்கள் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அனைவரும் கூட எதை என்று புரிய.. அனைத்து திறமைகளும் நிறைந்த திறமைசாலிகளையும் கூட... அதாவது மருத்துவர்களும் கூட.. எதை என்று கூற அறிஞர்களும் பாடல் புலவர்களும் கூட.. ஜோதிடர்களும் கூட அனைத்து மந்திரவாதிகளும் கூட... அவனுடன் இருந்தனர்.

ஆனாலும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ... பின் எவராலும்.. அவை தன் (நோய்)எவை என்று புரிய... அவனை காப்பாற்ற முடியவில்லையே!!!

இதனால் நிச்சயம் தன்னில்  கூட
அவ் அப்பனே எதை என்று அறிய அறிய

.அவ்.. சாணக்கியான்!! (அலெக்ஸாண்டர்) பின்...... அனைத்தும் வீண்!!! இவ்வுலகத்தில்..

 நிச்சயம் தன்னில் கூட பின் பக்தியும் வீண்!!
எதை என்று அறிய அறிய... எதை என்று அறிய அறிய பின் ஆனாலும்... எவ்வளவு திறமைகள் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட... எவை என்று புரியாமல் இருந்தாலும் கூட..

""""""இறைவனைத் தவிர.. இவ்வுலகத்தில் யாரும் சிறந்தவன் இல்லை!!!

நிச்சயம் தன்னில் கூட எவ் பின் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும்.. கடைசியில் நிச்சயம் சாகத்தான் போகின்றான் நிச்சயம் தன்னில் கூட. 

எதை என்று அறிய அறிய அதனால் இவ்வுலகத்தில்.. சிறந்தவன் என்று எவனும் இல்லை..

எவரும் இல்லை எதை என்று கூற... ஒரு பக்தனும் இல்லை.

நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. எதையும் வெல்பவனும் இல்லை. 

அனைத்தும் பொய்.. நிச்சயம் அனைவரும் பொய்யானவர்கள்..

இறைவனே மெய்!!!

இறைவன் ஒருவனே!!
இவ்வுலகத்தில் பின் அதாவது இவ்வுலகத்திற்கு சொந்தக்காரன் என்று நினைத்து!!!

(அலெக்ஸாண்டர் மரணிக்கும் தருவாயில்) 

இறைவா!!!..... நிச்சயம் எதை என்று புரிய உன்னை புரிந்து கொள்ளவில்லை யான்!!

என்னிடத்தில் எதுவுமே இல்லை!! நிச்சயம் தன்னில் கூட

நீ அனாதையாக எவை என்று கூற... பிறக்க வைத்தாய்!!

யான் அனாதையாகவே உன்னிடத்தில் வருகின்றேன் என்று..

என் கைகளை பார்!!! எதுவும் இல்லை என்று.

.(அதாவது வெறும் கைகள்) 

 நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்திற்கே சென்று விட்டானப்பா!!!


(உலகத்தையே வெற்றி கொண்ட மாவீரன் பேரரசன் த கிரேட் அலெக்சாண்டர் இறக்கும் பொழுது தன் கையில் எதுவுமே இல்லை எதையும் எடுத்துச் செல்லவில்லை எதுவும் இல்லாமல் தனியாக வந்தேன்!!!
 எதுவும் இல்லாமல் தனியாகவே செல்கின்றேன் தன்னுடைய சவப்பெட்டியில் கூட தன்னுடைய இரு கைகளை வெளியே வைத்து கைகளில் எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூட செய்திருந்தால் என்பது வரலாற்று குறிப்பேடுகளில் உள்ளது)


அதனால்தான் அப்பனே இங்கு அனைத்தும் பொய்யாகத்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட. 

உண்மையை உணருங்கள் அப்பனே.

அதனால் இறைவனை நோக்கி நோக்கி சென்றாலும்... அப்பனே 

இறைவன் என்ன கொடுப்பானோ!?!?!.. அதைத்தான் கொடுப்பான் அப்பனே!! விதியினை!!

அதனால்தான் அப்பனே உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?? ஏது செய்ய வேண்டும்?? என்பதையெல்லாம் அப்பனே உணர்ந்து உணர்ந்து.. அப்பனே யாங்கள் செய்ய தயாராகவே இருக்கின்றோம். 

ஆனால் அப்பனே நீங்கள் அப்பனே தயாராகவே இல்லை என்பேன் அப்பனே. 
எதை என்று புரியப் புரிய அப்பனே

இதனால் அப்பனே.. இறைவன் மிகப் பெரியவனப்பா!! எவை என்று புரிய..

. இதனால் அப்பனே இங்கு எவை என்று கூற.. எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கு.. இன்னும் கூட சக்திகள் அப்பனே.

ஆனாலும் எதை என்று புரிய... ஆனாலும் இன்னொரு துறவி வந்தானப்பா இங்கு. 
எதை என்று அறிய அறிய. 

இங்கு மீண்டும் மீண்டும் இவ்வாறாகவே பின் மனிதன்.. இறக்கின்றான் எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின்..(பிறந்து) வந்து விடுகின்றான்!

பின் இவ்வாறாகவே இருந்தால் பின் நிச்சயம் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே என்றெல்லாம்.. எவை என்று புரிய 

(அதாவது பிறக்கின்றவர்கள் எல்லாம் சாகாமல் இருந்து கொண்டே இருந்தால் மக்கள் தொகை கூட்டம் அதிகமாகிக் கொண்டே போய்க் கொண்டிருந்தது..... இறந்தவர்களை பிரமீடுக்குள் வைத்து மீண்டும் உயிர் பிழைக்க வைத்து மீண்டும் வந்து மீண்டும் குழந்தைகள் மனிதர்கள் பிறக்க பிறக்க மனிதர்கள் மக்கள் தொகை அதிகமாகியது. 

அதனால் தவம் செய்து சக்திகளை பெற்று இறந்தவர்கள் உடலை ஓரிடத்தில் வைத்து அவர்களுடைய ஆத்மாவை ஓரிடத்தில் வைத்து இறந்தவர்களின் உறவினர்கள் குடும்பத்தினர் அவர்களை கண்டு அதாவது இறந்தவர்களின் ஆத்மாவிடம் நேரடியாக பேச முடியும் அப்படி பேசும் சக்தியை ஏற்படுத்தி....

பிரமிடில் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பிழைக்கலாம் என்ற விதியை புதிதாக தவம் செய்து ஆன்மாக்களுடன் பேசும் சக்தியை ஏற்படுத்தி மாற்றியமைத்து விட்டார்)


 இதனால்.. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட.. இதனால் நிச்சயம் பின் மீண்டும் தவம் செய்தான்.. பின் மனிதர்களை நிச்சயம் தன்னில் கூட இப்படியே இருந்தால் எப்படி எதை என்று அறிய அறிய.. மீண்டும் எதை என்று அறிய அறிய 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்று புரிய பின் அதாவது இவ் உடம்பு பத்திரமாக இருக்கும்... அதாவது ஓரிடத்தில் உடம்பு பத்திரமாக இருக்கும். 

மறு இடத்தில் இவ் ஆன்மா நிச்சயம் தன்னில் கூட (பிறப்பெடுக்கும்) இதனால் நிச்சயம் தன்னில் கூட.. பேசலாம் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் அப்பனே உடம்பை எல்லாம் ஓரிடத்தில் வைக்கப்பட்டது.

அப்பனே ஆன்மா எல்லாம் அப்பனே ஓரிடத்தில் சேர்க்கப்பட்டது. 

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இவ் ஆன்மாவிடம் அப்பனே பேசி.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறு அப்பனே பின் எதை என்று அறிய அறிய மனம் திருப்தி கொண்டார்கள் என்பேன் அப்பனே. 

(அதாவது மக்கள் தன் குடும்பத்தில் இறந்தவர்களிடம் அவர்கள் உடம்பு ஓரிடத்தில் வைக்கப்பட்டு ஓரிடத்தில் அவர்கள் ஆத்மாக்கள் இருக்கும் இடத்தில் அதாவது அவர்கள் ஆன்மாக்களிடம் பேசி மனம் திருப்தி அடைந்தார்கள்)




அதாவது நிச்சயம் தன்னில் கூட மனிதன் பிறந்தால் நிச்சயம் இறப்பான்!!! அப்பனே அறிந்தும் கூட!

இதனால் அப்பனே உடம்பு வேறாக சென்று விடும் அப்பனே.. எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ் மூலஸ்தானமாக!!! (பிரமிட்) அதாவது எதை என்று புரிய... ஓரிடத்தில் நிச்சயம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட.. ஆன்மா சரியாகவே!!

இதனால் அப்பனே நிச்சயம் இவ் ஆன்மாக்கள் சேர சேர அப்பனே பலம் அதிகமாகவே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் ஆன்மாக்களை நிச்சயம் தன்னில் கூட பார்க்கலாம் என்றால் கூட பார்க்கலாம் இங்கு என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எவை என்று அறிய அறிய அப்பனே.. அதாவது எங்கு இறந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற ஒளி இருக்கின்றதல்லவா. 

அப்பனே இங்கிருந்து தான் அப்பனே.. எதை என்று கூற பின் அதாவது அப்பனே பின் (ஆன்மாவின்) அவ் துகளானது பின்.. எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மிகவும் வேகமாக வந்து... இங்கு இடித்து அப்பனே... அப்படியே நிச்சயம் தன்னில் கூட மேல் நோக்கிச் செல்லுமப்பா!!

அதுதான் காந்தகம் என்பேன் அப்பனே.. அதுதான் இறைவன் என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே இங்கு வந்து தான் செல்ல வேண்டும் என்பேன் அப்பனே!!

(இறந்த தகுதி பெற்ற ஆத்மாக்கள்.. இங்கு வந்து தான் மேல் நோக்கி செல்ல முடியும் ஏற்கனவே குருநாதர் இலங்கை நயினார் தீவு நாக பூசணி ஆலயத்தில் திரிகோணமலையில் நகுலேஸ்வரம் வாக்குகளில் நாகலோகம் பாதாள லோகம் குறித்து குருநாதர் கூறியிருக்கின்றார் இறந்த ஆன்மாக்கள் பயணம் செல்லும் வழிகளை குறித்தும் கூறியிருக்கின்றார் அதன்படி ஆத்மா இங்கும் வந்து மேல்நோக்கி செல்லும் என்று தெரிவித்திருக்கின்றார்)
அனைத்து துகள்களும் கூட அதாவது அனைத்து ஆன்மாக்களும் கூட அப்பனே. 

கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பனே யான் சொன்னேனே... அப்பனே உடம்பை விட்டு அப்பனே.. பின் நிச்சயம் தன்னில் கூட பல்லாயிரக்கணக்கான தொலைவில் அத்துகள் சென்று விடும் அப்பா. 

ஆனாலும் அப்பனே இங்கு தான் அதற்கு நிச்சயம் தன்னில் கூட... அதாவது அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது.. அப்பனே தடுக்கும் திறன் என்பேன் அப்பனே. 

இங்கு தடுத்து அப்பனே எவை என்று புரிய அப்பனே... அதாவது மேல் நோக்கி.....

நிச்சயம் தன்னில் கூட ஆன்மாக்களின் அதாவது.. முன்னோர்களின் ஆசிகளும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே குலதெய்வத்தின் அன்பும் கூட பெற வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே முதலில்...யான் ஏன் சொல்வது என்றால்கூட!!! (வாக்குகளில்)

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் ஆன்மாக்கள்! அப்பனே பின் சொந்த பந்தங்கள் எவை என்று புரிய அப்பனே பின் அதாவது பின் இருந்தால் மட்டுமே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைத்தும் வெல்ல முடியும் என்பேன் அப்பனே!!

வெல்லும் திறன் அப்பனே சக்திகள் இங்கு இருக்கின்றதப்பா பலவகையாகவே என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே இன்னும் அஷ்டமா சித்துக்கள் எப்படி பெற வேண்டும்?? என்பதையெல்லாம் அப்பனே என் மக்களுக்கு யான் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே.. நிச்சயம் வெல்லலாம் என்பேன் அப்பனே.. நீங்களே உங்களை வெல்லலாம் என்பேன் அப்பனே. 

உங்களுக்கே அனைத்தும் தெரியவரும் என்பேன். அப்பனே..

ஆனாலும் ஓரிடத்தில் இருந்து கொண்டு அப்பனே பின் மந்திரங்களையும்... அவை இவை!!!.. அவை தருகின்றேன் இவை தருகின்றேன்...இவ் மந்திரத்தை செப்ப!!.. அவை நடக்கும்!.. இவை நடக்கும் என்பதை எல்லாம்.. பொய்கள் அப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

சொல்லிக்கொண்டே தான் வருகின்றேன் அப்பனே..

இன்னும் அவை சாதிக்க வேண்டும் இவை சாதிக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே.. நிச்சயம் மனிதனால் முடியாதப்பா!!

அப்பனே யாங்கள்  அதாவது... இறைவன் எண்ண!! வேண்டும் என்பேன் அப்பனே!!


 அவ் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... நீங்கள் விரும்பியது அப்பனே என்ன வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே நல்விதமாக அப்பனே நல் பாதையில் சென்று அப்பனே இறைவனை பிராத்தித்து அப்பனே இறைவனே கதி என்று இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அனைத்தும் தருவான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே இன்னும் சிறப்புகள் உண்டப்பா!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவ் மூலாதாரத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. உரைப்பேன் அப்பனே. 

இப்பொழுது போதுமப்பா. 

ஆசிகள் ஆசிகள் அப்பனே இன்னும் வாக்குகள் செப்புகின்றேன் பொறுத்திருக!!

ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!