​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 22 June 2025

சித்தன் அருள் - 1882 - அன்புடன் அகத்தியர் - கருவூரார் சித்தர் உரைத்த வாக்கு !





8/5/2025 என்று கருவூரார் சித்தர் உரைத்த வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்:  சனி மகாராஜ் ஆலயம். பிம்பார்கெட் நஸ்தான்பூர் நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா.

அனைத்து வடிவங்களாகி நிற்கின்ற.. இறைவா போற்றியே!!!

பணிந்தே!!!
உன் தாள் பணிந்தே!!!

பின் அறிந்தும் அறியாமலும்... இருந்திருந்தாலும் மக்கள் அறிந்தும் உண்மைதனை புரியாமல் இருந்தாலும் 
அதை தன் நிச்சயம் ஏற்று... வழி நடத்திட!!!..
பின் செப்புகின்றேன் கருவூரான்!!!

அல்லல் அறிந்தும் அதன் தன்மையும் புரியாமல் இருந்தும் மனிதனுக்கு... எட்டவில்லையே!??

இவை தன் ஞானிகள் அறிந்தும் பிறர் அறியா வண்ணம் இதனையும் அறிந்தும்.. இதனையென்றும் இன்னும் சில விஷயங்கள் புரியவில்லை. 

இதனால் பின் மாற்றுக்கு எங்கே?? வழி? 

எங்கே வழி??... என்பதையெல்லாம்.. அறிவேனே!!

அறிவேனே!!! இதனால் பின் கல் !! பின் மண்!! அறிந்தும்... இதை புரியாமல் வலம் வருகின்றானே மனிதன்!! புத்திகெட்ட மனிதன்!!

பிறர் பாவம் ஏற்று நடத்தி... நடக்க வருகின்றானே மனிதன்!!!

பிறர் பாவத்தை சுமந்து சுமந்து...இப் பிறப்பு தன்னில் கூட.. வந்து வந்து திருத்தலத்தை அடைகின்றானே! 
அடைகின்றானே! 

பாவத்தினை போக்க எவ்வழி என்றெல்லாம் மனிதனுக்கு தெரியவில்லையே!!!

அறிவுக்கு எட்டாத நிலையில் பின் இறைவன் இருப்பதாலும் இறைவனை வைத்தே நிச்சயம்.. பல வழிகளிலும் கூட இன்னும் பின்.. சண்டைகள் சச்சரவுகள்.. இன்னும் பின் குழப்ப நிலைகள் என்பவை எல்லாம். 

ஏனைய சித்தர்களும் சொல்லிக் கொண்டிருக்க பின் அதில் உண்மையை பின் அறியவிலார். அறிவிலார்.. அறிந்தும்.. அறிவுள்ளவர்.. நிச்சயம் பின் கண்டு கொள்வதும் இல்லை. 

இதனால் யாங்களே... அறிவுள்ளோர் நிச்சயம் இதை தன் புரியவைத்து... அதனை பக்குவப்படுத்த... இத் தேசத்திற்கு எடுத்துச் சொல்வோம்... சில ரகசியங்களை!!

இவ் ரகசியங்களை தெரிந்து கொண்டாலே இவ் மாற்றம் நிகழும்!!!

அனைத்தும் இறைவன் அருளாலே... நடக்கின்ற பொழுது!!!
ஏன்? எதற்கு?? மனிதன் இங்கு சண்டைகள்!!...
அமைதியாக இருந்திட்டாலே போதுமானது!!!

ஆனால் மனிதனோ!?!?!
எண்ணங்கள் பொறாமை குணத்தோடு குற்றம்.. சுமத்தும் மனம் வைத்துக் கொண்டு... எப்பொழுது ? அக் குற்றம் சுமத்தும் மனதை.. தூரே வீசி விடுகின்றானோ!!!....

அப்பொழுது ஞானங்கள் தித்திக்கும்!!
இறைவனும் பின் கண்களுக்கு காட்சியும் அளிப்பான். 

ஆனால் பின் இல்லை... மனிதனோ!!.??... பின் ஆசைகள்!!. பின் மனதில் வைத்துக் கொண்டு... பின் பேய் போல் அலைகின்றான்!!

பேய்கள் வேறு யாரும் இல்லை... மனிதனையே இங்கு யான் பேய் என்று சொல்லுவேன். 

பின்ன அதாவது பேய்க்கு தான்.. பின் பொறாமை குணம் இன்னும்... அறிந்தும் மனிதனாக பின்... பிறப்பெடுத்தும் தரித்திரங்கள்.. 


பின் உடம்பை விட்டுவிட்டு திரிகின்ற பொழுது நிச்சயம்...இவ் ஆன்மாவை பற்றி ரகசியங்கள் எல்லாம் இன்னும் சித்தர்கள் பின் செப்புகின்ற பொழுது... இதனால் பின் மனிதன் அதாவது.. பேய்களாகவே தெரிகின்றான்!!

இப் பேய்களுக்கு நிச்சயம் புத்திகள்.. இல்லை!!.. நல் மனதும் இல்லை!!!
பின் அறிந்தும் இதனால்தான்... சித்தர்கள் மனிதனை அதாவது.. பேய்களை வெறுத்தார்கள்!!!

பின் அப் பேய்களிடமிருந்து??.. எப்படி மனிதனாக வாழ முடியும்!! என்பவை எல்லாம்!!!

அப்படி மனிதனாக வாழ்ந்திட்டாலே இறைவன்... தேடி அதாவது உன்னை தேடி வருவான்!!

இறைவனை தேடி தேடி செல்ல அவசியம் இல்லை!!!! எக் குளங்களிலும் நீராடவும் பின் இல்லை!!! எப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்றாக வேண்டியது இல்லை!!!

நிச்சயம் அருகிலே இருப்பான்... இறைவனே!!!!


ஆனாலும் இதை தன் புரிந்து கொள்வதற்கு...ஆள் உண்டா???
 இப் புவி தன்னில் உண்டா???? என்றால்!!!??.....
நிச்சயம் இல்லை!!!

இல்லையடி!!!
அறிந்தும்... போதாததற்கு நிச்சயம் இன்னும்... மாய வலைகளில் சிக்கி!!! சிக்கி!!

இதனால் தான் மனிதனை... மனிதனே பின் தாழ்த்தி பேசுகின்றான்..

பக்தனே!! பக்தனை.. தாழ்த்தி பேசுகின்றான்! 

மனிதனால் அதாவது பேய்கள்... பேய்களால் நிச்சயம்... இறைபலங்கள் பின் குன்றி நிச்சயம் திருத்தலங்கள் அழிக்கப்படுகின்றது!!

எப்பொழுது பேய்கள் நன்முறைகளாகவே பின் மனது வைத்து பின் ஆடுகின்றதோ.!!
அப்பொழுதே!! நிச்சயம் 
அறிந்தும் அனைத்தும் 
பரிசுத்தமானவைகளே
கிடைக்கும். 

சோம்பேறியாக திரிபவனுக்கு அதாவது பின் உண்மைதனை 
தெரியாதவனுக்கு அறியாதவனுக்கு 
பேய்களாகவே.. சுற்றித் திரிகின்றான். 

பேய்க்கு எங்கே உணவு?? அதாவது பின் எப்பொழுது?? பின் பேயானவன்!!! நிச்சயம் பின் இறைவனை நாடுகின்றானென்றால்
அனைத்திலும் தோல்வியுற்று தான் நாடுகின்றான் பேயானவன். 

அப்பொழுது அவ் பேயானவன்... மற்றொரு பேயை திருத்த முடியுமா?????

நிச்சயம் முடியாது!!!

மனமே ஒரு பேய்!!!

இவ் மனதை அதாவது நிச்சயம் தன்னில் கூட அவ் பேயை கட்டுப்படுத்தினால் மட்டுமே!!!... உண்டு ரகசியங்கள்!!!

அப் பேயை அதாவது இப் பேய்களுக்கு பல சித்தர்கள் வந்து வாக்குகள் செப்புகின்ற பொழுது அதை... ஏற்பதும் இல்லை!!

நிச்சயம் உலகம் இப்படி அழிகின்றதே!!!.....இதற்காக நீங்கள் செய்யுங்கள் என்று... சொன்னால் பின் யாராவது??? ஒருவன் செய்தானா? என்றால்!! நிச்சயம் இல்லை!!

அதாவது யாராவது ஒரு பேய் செய்ததா??? என்றால் நிச்சயம் இல்லை!!!

இதனால் அழிவுகள் மீண்டும் பின் அதாவது பின் அறிந்தும் உண்மைதனை தெரியாமல் மீண்டும்.. வருவான் பின் மனிதன். 

அதாவது நிச்சயம் இதற்கு... விடிவெள்ளி இல்லையா??!

இவ்வளவு பின் தரித்திரங்கள் நடக்கின்றதே!!!.....

இதற்கு நிச்சயம் பின் இறைவனா??? இறைவனே இல்லையா!!!
இறைவனுக்கு கண்ணில்லையா???

என்றெல்லாம் பின்... அதாவது பின் மானிட பேய்கள் இறைவனை.. பின் கூக்குரலிட்டு நிச்சயம்.. தன்னில் கூட கூவிக் கொண்டு இருப்பார்கள்!!! ஐயையோ ஐயையோ... என்று நாய் போல் கத்திக் கொண்டிருப்பான்.. மனிதன்!!!

ஆனால் உண்மையிலே நிச்சயம் அகத்தியன் பன்மடங்கு கருணையோடு.. சொன்னான்!!!

மக்களை காப்பாற்றுங்கள்!! இதனால் பின் புண்ணியங்கள் என்று!!

அதைக் கூடச் செய்யவில்லையே???

அப்பொழுது எங்களிடத்தில் எப்படி.???????. நீங்கள் கேள்விகளும் கேட்கலாம்????

அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட!!!

இத் தகுதி அதாவது... தகுதி உள்ளவனுக்கே யாங்களும் வந்து... மொழி கற்பித்து நிச்சயம் தன்னில் கூட மாற்றி... அனைத்தும் கொடுப்போம்... தகுதி இல்லாதவனுக்கு பின்... கஷ்டத்திலே இரு!! என்று.. சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்போம்!!

பின் உன் கஷ்டத்தை போக்கினாலும் நீ... அதாவது நாய் கூட நன்றி!!!.....

ஆனால் மனிதனோ!!?!?!?!
நன்றி இல்லாதவன்!!

நிச்சயம் பின் அனைத்தும் இறைவன் கொடுத்திருக்கின்றான்!

ஆனாலும் பின் மனிதனை மனிதனே பின் அவன் பெரிய பக்தனா????... பின் அவனிடம் பொய் அறிந்தும்... இதை புரிய நிச்சயம்... என்னிடம் இறைவன் இருக்கின்றான்!!
அவனிடம் இல்லை அவன் பொய் பேசுகின்றான்... என்னிடம் இறைவன் இருக்கின்றான்..
யான் காட்டுகின்றேன்!!
அதை காட்டுகின்றேன்.. இதைக் காட்டுகின்றேன்!!! சிவலிங்கத்தை காட்டுகின்றேன்!!!
இன்னும் பின் அறிந்தும் கூட.... அவனால் முடியுமா????
என்றெல்லாம் பின் பேயை போல்!!!.......


அதனால் பக்தன் என்பவன்... இவ்வுலகத்தில் இல்லை!!.. நிச்சயமாக!!

அவ் பக்தன்... அப்படி இருந்தால் அதாவது அறிந்தும்... மறைமுகமாக காணப்படுவான். 
அமைதியாக இருப்பான்!!!

வருபவர்களை எல்லாம் பைத்தியக்காரன் என்று சொல்லிக் கொண்டே இருப்பான்!!!

நிச்சயம் பின் பேச மாட்டான்!!

ஆனால் நிச்சயம் பேய்களோ!!!..... உளறிக் கொண்டே இருக்கும்!!!
வார்த்தைகளை!!!!
அவை!! இவை!! என்றெல்லாம்!!

நிச்சயம் பின் அதாவது பின் அறிந்தும் இதை தன்....

நாளைப் பொழுதில் நிச்சயம் பின்... அறிந்தும்

என்னுடைய தலத்திற்கு... அனைவரும் வருவார்கள் சித்தர்கள்... தேவாதி தேவர்களும் கூட வருவார்கள்... நிச்சயம் இந்திரனும் வருவான்.... ஆசிர்வாதங்கள் அனைவருக்கும்... ஆசிர்வாதங்கள் பின் கொடுப்பார்கள். 

நிச்சயம் அறிந்தும் அதாவது பின் கருவூரிலே தங்கி இருக்கின்றேன்.. அழகாகவே... பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... அநியாயம் அக்கிரமங்களை எல்லாம். 

நிச்சயம் வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன். 

நிச்சயம் அவ்வாறு ஆசிகள் கொடுத்தால்... நிச்சயம் அறிந்தும் மனிதன் திருந்துவான் என்று பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். 

நிச்சயம் அதாவது பின் நாளைய  பொழுதிலும்... அங்கு வந்து நிச்சயம் அனைவரும் பின் அதாவது பின் ஒரு ஒளி வட்டமாக... நிச்சயம் தன்னில் பின் அனைவருக்குமே ஆசிகளாகவே நிச்சயம் சித்தர்கள் கொடுப்பார்கள்....

(சித்திரை மாதம் அஷ்ட அதாவது அஸ்தம் நட்சத்திரம் 9/5/2025. வெள்ளிக்கிழமை கரூர் சித்தரின் அவதார திருநாள் அன்று கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில்)

இந்த கரூர் சித்தரின் அவதாரத் திருநாள் ஆசிவாக்கு ஒரு நாள் முன்பாக அதாவது
Thursday, 8 May 2025
சித்தன் அருள் - 1859 - அன்புடன் அகத்தியர் - கருவூரார் சித்தர்!...  வலைதளத்தில் வெளியிடப்பட்டு அடியவர்கள் பக்தர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் சென்று தரிசனம் செய்து வந்தனர்.

கரூவூர் சித்தர் சன்னதி, அருள்மிகு கல்யாண பசுபதேஸ்வரர் திருக்கோயில், கரூர், தமிழ்நாடு.)


அதாவது  பின் பேய்களாக இருந்தாலும்..அப் பேயை அகற்றுவதற்கே...யாங்கள் சில துன்பங்களை ஏற்படுத்துகின்றோம்!!!

ஆனால் அதனுள்ளே... இறைவனே துன்பம் ஏற்படுத்தி விட்டான் துன்பம் ஏற்படுத்தி விட்டான் என்று!!!

நிச்சயம் அப் பேய்களை மாற்றவே மனிதனாக வாழவே சில துன்பங்கள். 

அதற்குள்ளே... ஓடோடி வந்து துன்பம்.. எந்தனுக்கு!!!
அவை இவை என்றெல்லாம்!!

 நிச்சயம் துன்பத்தை போக்க சாதாரணமில்லை!!
துன்பத்தை கொடுப்பவன் இறைவன் என்பவையெல்லாம் பின் முன் உரைத்தாற்போல் பல பல வாக்குகளில் கூட உரைத்து விட்டார்கள் சித்தர்கள். 

அதையும் கூட புரிந்து கொள்ள இயலாதவர் நிச்சயம் எப்படி வாழ்க்கையை நடத்துவார்?????
எப்படி இறைவனை???... நிச்சயம் அறிந்தும்!?!?!?

மனிதனுக்கு ஏதோ!!!!....?
கொடுத்து வைத்தார் போல்... உடனடியாக அனைத்தும் நடக்க வேண்டுமாம்....!?!?!?!?!?!

மனிதா!!!!.....
தெரிந்து கொள்!!! அதாவது பேயே!!! தெரிந்துகொள்!!!

இங்கு பாவத்தை அனுபவிக்க தான் வந்திருக்கின்றாய்!!
அவை மட்டும் இல்லாமல் பின்... அதாவது இவ் உடம்பே ஒரு பாவம்!!!
அவ் பாவம் பின் நிச்சயம்.. எப்பொழுது????
பின் அதாவது அறிந்தும் இவ் பாவத்தை கழிக்க.. சில சில வகைகளும் கூட பின்... அதாவது வயதுகள் ஏறிக்கொண்டே ஏறிக்கொண்டே.. இருக்க இருக்க நிச்சயம் அப் பாவங்கள் எப்படி எல்லாம்... பின் கரைகின்றது என்று பார்த்தால்.... நோய்களாகவே கரையும். 

இதனால் அறிந்து என்ன பலன்????

நிச்சயம் எங்கெங்கு பின் சக்திகள் இருக்கின்றது!??? என்பதையெல்லாம் அழகாக கருணை படைத்த அகத்தியனே வந்து... எடுத்துரைக்க!!!

ஆனாலும்... அதற்கும் அங்கெல்லாம் செல்ல மனம் இல்லையே!!!!

ஏன்??? மனம் இல்லையென்றால்.... பின் பேய்களாகவே மனிதன் பின்.. இருப்பினும் நிச்சயம் அதை.. ஏற்க மாட்டான். 

பின் அகத்தியன் பொய் சொல்லுகின்றான் என்று!!!

ஆனால்... இப்படித்தான் கலியுகத்தில் உண்மை சொன்னால் பொய் என்று!!!!

பொய் சொன்னால் உண்மை என்று!!!

இதனால்தான் நிச்சயம் இக்கலி யுகத்தில்... இப்படித்தான் தலைகீழாக மாறும். தர்மம். 

பின் நிச்சயம் தர்மம் தலைகீழாக இருக்கின்ற பொழுது.. உண்மைகள் எல்லாம் தலைகீழாக மாறும். நிச்சயம். 

இதை தன்.. கூட இதனால்தான் மனிதனுக்கும் பின்.. அறிந்தும் எதை எவை என்று புரிய... நிச்சயம் பேய்களே!!!
எங்களுக்கு எதுவும் தேவையில்லை.... நீங்கள் நிச்சயம் மனிதனாக வாழ்ந்தால் போதுமானது என்று கூறுகின்றோம்!!!

ஆனாலும் அனைத்தும் செய்கின்றீர்கள்!!! ஆனாலும்
அதையும் கூட ஏற்று பின் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் தவற்றை நிச்சயம் பின் அறிந்தும் பின் மீண்டும் அதைத்தான் செய்து கொண்டு !!செய்து கொண்டு!!

இதனால்தான்... இவ்வினை... ஊழ்வினையாகவே!!
ஊழ்வினையாகவே!!
தொடர்ந்து கொண்டு இருக்கின்ற பொழுது எப்படி? நிம்மதி கிடைக்கும்????
எப்படி? சந்தோசங்கள் கிடைக்கும்????
என்பதையெல்லாம் தீர ஆராய்ந்தால்.... மனிதனுடைய படைப்பு ஒரு கேவலமான படைப்பு!!!

இதனால்... மனிதரிடத்தில் திருட்டுத்தனங்கள்.. பொய் சொல்லுதல்..
ஏமாற்றுதல்... நிச்சயம் பின் வஞ்சித்து வாழ்தல்.. பின் அதாவது ஒருவனை பின் கீழே வைத்து அவனை அதாவது மேலே ஏறி அடித்து இவ்வாறு பொய் சொல்லுதல்...
இதுதான்.. மனிதனுடைய பின் இயல்பு..

இதை விட்டுவிட்டு யார் ஒருவன் பின் வருகின்றானோ!!!.. அவன் ஞானி!!!!

ஆனால் இல்லையே!!!!!!


மனித குலத்தில்!!!
அழிவுகள் வந்து கொண்டே!!! அவை இவை என்று... இன்னும் சோம்பேறிகள் கூட்டமாக கூடி கூடி நிச்சயம் இறைவனை பின் வழிபடுவார்கள்!!! ஏன்? எதற்கு? என்று தெரியாமலே!!!

ஆனால் இறைவனை எப்படி வழிபட வேண்டுமென்றால்... நிச்சயம்... தன் கடமையை ஒழுங்காக செய்து... பணியினை சிறப்பாக செய்து... அதிலிருந்து பின் வரும் வருமானத்திலிருந்து பின் இறைவனுக்கு சேவை செய்தால் மட்டுமே!!!!.... இறைவன் ஏற்றுக் கொள்வான்!!
நிச்சயம் அறிந்தும்!!!

இதனால் பல அதாவது இறைவனை தேடி வந்து விடுகின்றான்!!!
அதாவது திருமணமும் செய்கின்றான் அதில் பிரச்சனைகள் என்றால் பின் ஓடோடி வந்து விடுகின்றான்.

பின் நிச்சயம் அறிந்தும் இன்னும் இன்னும் எதை எதையோ பின் இழந்த பின்பு தான் இறைவனிடத்தில் வருகின்றான். 

பின்பு அனைத்தும் பின் இருக்கின்ற போது... இறைவனிடத்தில் வருகின்றானா???? என்றால்!!???... இல்லை! 

இன்னும் பல சோம்பேறிகள் யான்.. நிச்சயம் அறிந்தும்.. இவ்வாறாகவே சிறுவயதிலிருந்தே இறைவனை வணங்கினேன் என்று!!

ஆனால் அதற்கும் பயன் இல்லையே!!

இன்னும் சிலர் இறைவனுக்காக அனைத்தும் செய்தேனே என்று!!!

நிச்சயம் பின் கேடுகெட்ட.. பேய்களே!!!

பின் இறைவன் என்ன கேட்டானா????

உன் சுயநலத்திற்காக அனைத்தும் செய்து விட்டு... இறைவனை கேட்டால் என்ன????

இதுதான் பேய்கள்!!!

பின் அதாவது... எண்ணங்கள் பேய்களாக இருக்கும் வரையில்... நிச்சயம் துன்பங்கள் தான் பட வேண்டும். 

ஏன் துன்பங்கள் வருகின்றது??? என்பதை யாராவது சிந்தித்தீர்களா???? என்றால் நிச்சயம் இல்லை!!!

அதாவது பேய்களாகவே.. மனங்கள் இருக்கின்ற வரை நிச்சயம்... யாராலும் பின் எப்பொருளாலும்... நிச்சயம் எதனாலும் எவ் சக்திகளாலும்... மாற்ற முடியாது!!!... துன்பங்களை!!!

அத் துன்பத்தை மாற்ற வேண்டுமென்றால்... நல் மனதாக இருக்க வேண்டும்...

ஆனாலும் அது நிச்சயம் கலியுகத்தில் முடியாது!!!

இதனால் துன்பமும் மனிதனை விட்டுப் போகாது!!!!

சண்டை சச்சரவுகள் இன்னும் சந்தேகங்கள் இவையெல்லாம் வந்து வந்து!!!

இதனால்தான்... எப்படியும் ஆனால் நிச்சயம்... மனிதனுக்கு சில வகைகள்... வகைகளில் கூட கொடுக்கின்ற பொழுது... மனிதன் பின் திமிர் பிடித்தவன் போல் ஆகி விடுகின்றான்..

யான் சொல்லுவதை தான் கேட்க வேண்டும்!!! எங்களிடத்தில் தான் பின்!!.............. என்று!!

வேடங்கள் போட்டு நிச்சயம்.. பின் மனிதனை மனிதனே ஏமாற்றுகின்றான்...

அதாவது பேய்!தனே.. பின் மனிதனை ஏமாற்றுகின்றது என்பதுதான்..இதன் உள்நோக்கம்!!

உள்நோக்கம் எதுவாயினும்கூட ஆனாலும்... இதற்கெல்லாம் இக்கலி யுகத்தில்... சனி தேவனே வந்து பார்த்துக்கொண்டே இருக்கின்றான். பின் நிச்சயம். இதனால் பின் நிச்சயம் பின்.... நீங்கள் செய்யலாம் அனைத்தும்!!!
சந்தோசங்களாக இருக்கலாம்!!!.......

என்ன...????..... சனி தேவன் விட்டு விடுவானா!! என்ன???

இதனால் தான் சனி தேவன்... அங்கங்கு அமர்ந்து பரிசுத்தமான கண்களோடு பார்த்து.... நிச்சயம்!!......

நீ செய்!!!!!....

நீ செய்!!!....

பேய்களே நீ செய்!!!...... என்றெல்லாம்!!!

நிச்சயம் தக்க சமயத்தில் இப் பேய்களுக்கு... அடிகள் பலமாக கொடுத்து... மனிதனாக மாற்ற வைக்கின்றான். 

மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது... துன்பங்கள் இல்லையடி பாப்பா!!!
அறிந்தும்!!

பின் அப்படி நிச்சயம் பின் அறிந்தும் பின் மனிதனாகவில்லை என்றால் நிச்சயம் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்..

அப்பொழுது எங்களிடத்தில் கேட்டாலும்... என்ன தவறு செய்திருக்கின்றாய்? என்பதை எல்லாம்... யாம் நிச்சயம் வரும் காலத்தில்.. சுட்டிக்காட்டுவோம்!!

இத் தவறை தான் நீ செய்தாய்!!!!.... இதற்காகத்தான் தண்டனை என்று!!!
பின் ஒவ்வொரு பேய்களுக்கும் கூட.


 அறிந்தும் இதை என்று புரிய!!! நிச்சயம் சித்தன் பின் திட்டுகின்றான் என்று... என்று பின் எண்ணி கொள்ளாதீர்கள்!!!

நிச்சயம் சித்தர்கள் அனைவருமே கருணை படைத்தவர்கள் தான்!!

ஆனாலும் நிச்சயம் பின் ஓர் முறையை அறிந்தும் பின் கர்மங்கள்.. பின் நிச்சயம் ஏற்றுக் கொண்டு இருக்கின்றாய் 

 நிச்சயம் இவ்வாறாகிலும் கூட நிச்சயம்... தந்தையாயினும் தாயுமாயினும்... நிச்சயம் தன் பிள்ளையை நிச்சயம் பின் பயம் காட்டாத வரையில்... அப்பிள்ளை திருந்துவதே இல்லை..

அதனால்தான் வரும் காலங்களில் சிறிதாவது.. நிச்சயம் உங்களை பயம்.. காட்டவில்லை!!!

நிச்சயம் பின் அறிந்தும் கிரகத்தோடு... உலகத்தோடு ஒப்பிட்டு.. பார்க்கையில் பின் பயம் காட்டுவோம்.... அதுவும் அப்படியும் திருந்தவில்லை என்றால்... நிச்சயம் இதற்கு பின் நோய் நொடிகள் தான்.. நிச்சயம் பின் இயக்கம் என்பதெல்லாம்.. கூட. 

இதனால் தெரிந்து கொள்ளுங்கள்... இன்னும் இன்னும் நோய்களோடே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கையில்.. நிச்சயம் எப்படி???

அதாவது பேய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கையில் எப்படி??? ஏது??? அறிந்தும்!!

இதனால் பல பல திருத்தலங்கள் பின் சித்தர்கள் யாங்கள் பின் நிச்சயம் அமைத்தோமே!!!!

அங்கெல்லாம் பின் என்ன செய்ய வேண்டும்?? என்று யாருக்காவது தெரியுமா? என்றால்!???

நிச்சயம் இல்லை!!!

பின் நிச்சயம் அறிந்தும் வருவோரெல்லாம் நீதியினை.. பின் கடைப்பிடிக்காமல் தர்மத்தையும் கடைப்பிடிக்காமல்... நிச்சயம் தன்னில்  கூட பின் பொய் பேசிக்கொண்டு... நிச்சயம் கோபத்தோடு பொறாமைகளோடு இன்னும் அழுக்குகளோடு, அழுக்குகளோடு... அதாவது மனம் பின்.. நிச்சயம் மற்றவர்களை மனம் வருத்தி... வருகின்றானே!!!....

இறைவன் என்ன செய்வான்?????

அடி முட்டாள்களே!!!!... அறிந்தும் இதற்கென்ன? லாபம்? 


வந்து இறைவனை தொழுதாலும் என்ன லாபம்???

பூசைகள்  என்ன செய்தாலும் என்ன லாபம்???

அன்னதானங்கள் செய்தாலும் என்ன லாபம்???

ஒன்றும் லாபமில்லை!!!

கடைசியில் பின் மிச்சம் கஷ்டம் தான்!!

நிச்சயம் அதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்களா?? என்றால் இல்லை!!!

எப்படி ஏது எப்பொழுது உணர்ந்து கொள்வீர்கள் நிச்சயம்!!!!.... அப்பொழுதுதான் நிச்சயம் பின் இவ் பிறவி.. நிச்சயம் நீக்கும்!!(நீங்கும்)

அதற்குள்ளேயே இறைவன் தான் பல கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது... நிச்சயம் அதை யாராலும் தடுக்க முடியாது!!!
யாராலும் தடுக்க முடியாது!!!

சொல்லிவிட்டேன்!!

ஆனால் மனிதனோ.. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பரிகாரங்களாம்!?!?!?!?!?!
பரிகாரங்களாம்!?!?!?!?!?

பின் பைத்தியக்கார மனிதர்களே!!!... நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது ஒன்றைக் கேட்கின்றேன் நிச்சயம்... அறிந்தும் கூட பின் அதாவது...

இறந்தவனை உயிர் பிழைக்கச் செய்!!

 இதனை யான் ஏற்றுக் கொள்கின்றேன்.. பரிகாரமாக!!!

நிச்சயம் அறிந்தும் நிச்சயம்..இவை தன் நிச்சயம் இதனால்... இவையே செய்ய முடியவில்லை என்றால்... அனைத்தும் பின் இங்கு வீணே!!!!

இதனால் மனதை மாற்றாமல்... ஒன்றுமே நடக்காது... உண்மைதனை கடைப்பிடித்து வாருங்கள்... பொறாமை குணத்தை நீக்குங்கள்... பொய் பேசாமல் இருங்கள்!!!


 நிச்சயம்... அனைத்தும் உங்கள் பரம்பரை நிச்சயம்... பின் நீண்டு கொண்டே செல்லும்!!

அப்படி நிச்சயம் மாற்று வழியாக... சென்றால் நிச்சயம் முடிந்து விடும் பின் அதாவது... சிறப்பாகவே பின் பாவம் உங்களை முடித்து விடும்.. அழகாகவே உனை சார்ந்தோரையும் முடித்து விடும்!!

நீ எண்ணிய எண்ணங்கள் எல்லாம்... நிச்சயம் அறிந்தும் கூட பின்... என்னவாகவே... அவை தன் பதிவாகவே பாவத்தில்.. நிற்கின்றது!!!

அப் பாவம்... ஒரு சரியான நேரத்தில் வந்து... உன்னை பின் கவிழ்த்து விடும்!!!.. அப்படி கவிழ்த்ததோடு நிச்சயம்... அனைத்தும் நிச்சயம் மீண்டும்... இறைவனிடத்தில் சென்றாலும் பின்... நிச்சயம் இறைவனும் காப்பாற்ற போவதில்லை.

நிச்சயம் இதனால் பின் அறிந்தும் இதனால்... நீங்கள் நீங்கள் செய்த தர்மங்களே... உங்களை பிழைக்கவும் வைக்கும்!!
அழகாக பார்த்துக் கொள்ளும்!!

இறைவன் நிச்சயம் அமைதியாக பார்த்துக் கொள்வான்!!!
தீர்ப்புதான் கொடுப்பான்!!!

அதனால் உங்களுக்கு நீங்களே தண்டனைகள் கொடுத்துக் கொள்ளாதீர்கள்!!!

நிச்சயம் வரும் காலத்தில்... ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்டவன்.. ஏது என்று அறிந்தும்... என்னவென்று கூட நிச்சயம் சொல்வோம். 

அதை திருத்திக் கொண்டால் நிச்சயம்.. நீடூழி வாழ்வார்கள் பிள்ளைகளோடு!!

அப்படி இல்லை என்றால்... குற்றங்களோடு வாழ்வார்கள்... அவ்வளவுதான் நிச்சயம்!!!!

இவ் சனி தேவன் அழகாகவே... நிச்சயம் இங்கு நிற்கின்றான்!!!

(சனி நஸ்தான்பூர்)

இங்கு வருவோருக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றான்... ஆனாலும் நிச்சயம் நல் மனதோடு பின் வந்தால்தான் சனி பகவானும் கூட பின் அனைத்தும் கொடுப்பான்...

இல்லையென்றால் அடியோடு பின் அனுப்புவான் இன்னும்.. கஷ்டங்கள் படு!!. என்று!!

இதனால் பின் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்... அறிந்தும் கூட பின் அதாவது... பின் நல் மனதோடு செல்லுங்கள் திருத்தலத்திற்கு!!!
நல்முறையாக வாழுங்கள்!!! வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்!!!

ஆசிகள் ஆசிகள்!!! பெரும் ஆசிகள்!!!



வணக்கம் அகத்தியர்  அடியவர்களே இந்த சனி மகாராஜ் ஆலயத்தில் ஏற்கனவே குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகள் 10/10/2022 சித்தன் அருள் 1229 அன்புடன் அகத்தியர் பதிவில் வெளிவந்துள்ளது 


ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 
முகவரி
சனி மகாராஜ்  ஆலயம்
பிம்பார்கெட். 
நஸ்தான்பூர் 
நாசிக் மாவட்டம் 
மகாராஷ்டிரா .,

நந்த்கான்-சாலிஸ்கான் சாலை ரயில்வே கிராசிங் கேட் அருகில், நந்த்கான் 424109.  

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 

யோகேஷ் துவாரகாதாஸ் குல்கர்னி  841298428/ 9272007198

Shani maharaj mandir,post pardhadi, SH 25, Pimparkhed,Dist Nashik Maharashtra 424109.
website: http://www.shanimandirnastanpur.com/

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. அகத்தியர் அருளாளும், அக்னிலிங்கம் அன்பரின் உதவியாலும் சித்தர்கள் வரும் அன்று கரூர் பசுபதீஸ்வர் ஆலயம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது, நிறைய அகத்தியர் அடியவர்கள் கரூரார் ஜீவசமாதியில் தியானம் செய்வதை காண முடிந்தது.

    நன்றி அக்னிலிங்கம் அன்பரே 🙏

    ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete