ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:-
1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2 )
குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு நீண்ட தனி வாக்குகள் பல உரையாடல்களுடன்.)
அப்பனே தன் நிலைமைக்கு, தன் சக்திக்கு ஏற்ப்பவாறுதான் இறைவன் அனைத்தும் செய்வான் அப்பனே. புரிகின்றதா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரிகின்றதா? (திறமை) ஒன்றும் இல்லாதவர்களுக்கு (வேலை) கொடுத்து விட்டால் அங்க ( அவர்களால் வேலையில் திறமையாக )
ஒன்றும் செய்ய முடியாது.
அடியவர்கள் :- புரிகின்றது ஐயா.
குருநாதர் :- இதனால்தான் அப்பனே, திருமணங்கள் கூட அப்பனே இறைவனே தடுத்து நிறுத்துகின்றான் அப்பனே. ஏன் எதனால் என்றால் வாழ்க்கை நிச்சயம் வாழத்தெரியாமல் வாழ்வார்கள் அப்பனே. பின்பு பிரிவு நிலை ஏற்படும் என்பேன் அப்பனே. அதனால்தான் இறைவனே நிறுத்தி வைக்கின்றான். ஆனாலும் அப்பனே இதற்குப் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று ஓடுகின்றார்கள்.
இதனால் ராகு கேதுக்கள் செவ்வாய் இன்னும் தோடங்கள் ( தோஷங்கள் ) என்றெல்லாம் சொல்லி , மக்களைத் திசை திருப்பி, காசுகளைப் பறித்து அப்பனே ஆனாலும் கடைசியில் பார்த்தால் ஒன்றும் நடப்பதில்லை. அப்படி நடந்தாலும் பிரிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றதப்பா.
அவ் பக்குவங்களை ஏற்படுத்தித்தான் மணங்களும் இறைவன் முடிப்பான். அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.
என்ன ஏது என்றெல்லாம் இறைவன் அப்பனே அதாவது மனிதன் யோசிப்பதைவிட இறைவன் கோடி மடங்கு யோசிக்கின்றானப்பா.
இதனால்தான் அப்பனே தெரியாமல் வாழ்ந்தவர் எல்லாம் அப்பனே தெரிந்தவர்கள். அதாவது அவர்களும் தெரியாதவர்கள்தான். ஆனாலும் சரியாகப் பயன்படுத்தி , திசை திருப்பி, அப்பனே கர்மத்தில் அப்பனே விட்டுவிடுகின்றார்கள். என்ன லாபம்?
(அதாவது திருமணம் நடக்கக் கூடாது என்பவர்களை ஜோதிடத்தின் மூலம் திசை திருப்பி, அவர்களிடம் பணம் பறித்து, திருமணம் செய்ய வைத்து, அவர்களைக் கர்மத்தில் நுழைத்து விடுகின்றனர். எனவே இதே காரணங்களால் அங்கு ஒரு அடியவருக்குத் திருமணம் அதனைத் தாமதப்படுத்தி குருநாதர் அமைதி காத்துள்ளேன் என்று உரைத்தார்கள்.)
குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. ஆனால் அனைவருக்கும் நல் நேரங்கள்தான் அப்பனே. ஆனாலும் ஏன் இப்படி நடக்கின்றது என்று கூட நீயும் கேட்கலாம் அப்பனே. இதனால்தான் அப்பனே தான் தன் செய்த எவை என்று அறிய அறிய.
அப்பனே ஏன் எதற்கு என்றால் அறிந்தும் உண்மைதனைக் கூட அப்பனே சனீஸ்வரனிடத்திலும் கூட யான் சொல்லிவிட்டேன். தன் மகனை எதையும் செய்யாதே என்று அப்பனே. சனீஸ்வரனும் சரி என்று சொல்லிவிட்டான் அப்பனே. அப்பொழுது தீய நேரமானாலும், நல் நேரமே அப்பனே.
( தீயவை நடக்க இருந்த இவ் அடியவருக்கு நல்லதே நடந்தது.)
குருநாதர் :- அதனால்தான் அப்பனே எண்ணம்போல் வாழ்க்கை என்று. இதற்கு எடுத்துக்காட்டாக அப்பனே நீயும் கூறும்.
(இப்போது யாரும் இதுவரை உலகம் அறியாத மனதில் நுழைந்து இறைவன் அருளாட்சி செய்யும் அற்புத நிகழ்வு ஒன்று நடந்தேறியது)
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- (அங்குள்ள ஒரு அடியவரைப் பார்த்து) ஐயாவை வைத்தே சொல்லலாம். ஆசிரியர் பணியில் உள்ளார்கள். எல்லா குழந்தைகளுக்கும் , மொத்த வகுப்பிற்கும் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்? பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்த மாதிரி பூசைகள் செய்தால், குழந்தைகள் சொல் பேச்சு கேட்கும் என்று எல்லாம் நிறைய குழந்தைகளுக்குச் சொல்லி இருக்கின்றார்கள். அப்படி எல்லோருக்கும் நல்லது செய்ததால், ஐயாவோட குடும்பத்தை, (குருநாதர்) ஐயன் வந்து காத்து அருளியுள்ளார்கள்.
குருநாதர் :- அப்பனே, இதையும் யான்தான் பேசவைத்தேன் அப்பனே. புரிகின்றதா அப்பனே. இதனால் குற்றம் எங்கு உள்ளது என்பதை நீயோசி.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை பேச வைத்தது நான்தான் என்று உரைக்கின்றார். (ஐயா இங்கு அவர் உங்கள் மனதில் நுழைந்து பேச வைத்துள்ளார்.)
குருநாதர் :- அப்பனே அவரவர் வழியில் அவர்கள் சென்று கொண்டிருந்தாலே போதுமானது. யாங்கள் வந்து நிச்சயம் வழி நடத்துவோம் அப்பனே. மீறிச் சென்றால்தான் அப்பனே.
இதனால் மீறிச்சென்றாலும் அப்பனே எதை என்று தெரியாமலும், அறியாமலும் இருந்தாலும் பின் சண்டை, சச்சரவுகள் , பின் மீண்டும் நேராக சென்று கொண்டிருந்தால் என்ன இருக்கும்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நேராக போய்க்கொண்டே இருந்தால் என்ன இருக்கும் என்று கேட்கின்றார் ஐயா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஏதாவது ஒரு இடத்தில் முட்டி நின்றுவிடுவோம்.
குருநாதர் :- அப்பனே இதுதான் வாழ்க்கையப்பா. அப்பனே ஆனாலும் நேராகச் சென்றால் அப்பனே இறைவனை அடைய வேண்டும். அதற்கு என்ன வழி?
சுவடி ஓதும் மைந்தன் :- நேராக போய்க்கொண்டே இருக்க வேண்டும். முட்டி கீழே விழுகின்றீர்கள். ஆனாலும் போய்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்று (குருநாதர்) கேட்கின்றார்?
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயன் உத்தரவுப்படி அறப்பணிகள், தான தர்மங்கள், இறை நம்பிக்கை ….
குருநாதர் :- அப்பனே தன் கடமை என்னவென்று யோசித்து, யோசித்து எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சரியான வழியில் அதாவது நேரான வழியில் சென்று கொண்டே இருந்தாலே இறைவனை கண்டுவிடலாம் அப்பா. ஆனால் அப்பனே அவ்வாறு கண்டுவிடுவதே இல்லையப்பா மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே (நேர்கோட்டில் சென்று கொண்டே) தன் கடமையை செய்து கொண்டு, ( அங்குள்ள ஒரு அடியவரை உதாரணம் காட்டி, உங்களுக்கு ) இப்போது என்ன கடமை? நீங்க படிக்க வேண்டிய வயதில் படித்துக்கொண்டு , (வேலைக்கு போக வேண்டிய நேரத்தில் ) வேலைக்கு, அதாவது அந்தந்த நேரத்தில் முயற்சி எடுத்து , முயற்சி எடுத்து, முடியவில்லை என்றாலும் அதனை சரி செய்து சரியான வழியில் சென்று கொண்டே இருந்தால் , ஒரு நாள் நேராக இறைவனிடமே சென்று விடுவீர்களாம்.
குருநாதர் :- அப்பனே அப்படி சென்றால்தான் அப்பனே உத்தமம். அப்படி செல்லாவிடில்தான் இறைவனை நாடுகின்றார்கள். புரிகின்றதா இப்பொழுது?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ, தன் கடமையை யார் சரியாக செய்ய வில்லையோ அவங்கதான் (இறைவனை நாடுகின்றனர்). ஐயா, கொஞ்சம் differentஆக இருக்கு( நம் அனைவருக்கும் முற்றிலும் புதிய வாக்கு இது) . புரியுதுங்களா ஐயா? அப்போ தன் கடமையை யார் சரியாக செய்கின்றார்களோ, அவங்க Direct ஆக இறைவனிடம் போகலாமாம். ஐயா இது எப்படி ( புரிந்து கொள்வது என்றால்) சொல்கின்றார் என்றால் நாம் கீழே விழுந்து கும்பிட்டாலும் , என்ன செய்தாலும் (இறைவன்) ஆசிகள் கிடைப்பது (கடினம்). அப்ப, தன்னோட கடமை என்ன? அதை செய்து கொண்டே கரக்டாக போய்க்கொண்டே இருந்தோம் என்றால் , இறைவனிடமே directஆக போய் பேசலாமாம். ஐயா புரியுதுங்களா?
அடியவர் 4 :- அவங்கவங்க அவங்க வேலையை செய்கின்றார்கள்தானே?
சுவடி ஓதும் மைந்தன் :- ம்..
அடியவர் 4 :- அதில் ஏன் இடையூறு செய்கின்றார்கள்?
குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே. அதாவது வாகனத்தை ஒருவன் இயக்குகின்றான் அப்பனே. இடையே ஏன் நிறுத்துகின்றான் கூறு?
அடியவர் 4 :- எங்க நான் நிறுத்துகின்றேன்? அது நிற்கின்றது இல்லையா. (அதாவது) இடிக்கின்றதில்லையா?
குருநாதர் :- அப்பனே , எப்படியப்பா (அதுவாகவே தானாக) நிறுத்தும்? அப்பனே காவலாளிகள் நிறுத்தினால் என்ன செய்வாய் அப்பனே? பின் (நிற்காமல்) நீயே சென்றுவிடுவாயா என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வண்டி செல்கின்றது. வாகனம் இயக்குகின்றோம். ஒரு காவலாளி ஏன் நிறுத்தி வைக்கின்றார் என்று கேட்கின்றார். ஐயா நீங்க சொல்லுங்க ஐயா.
அடியவர் :- சோதனை செய்வதற்காக…
குருநாதர் :- அப்பனே பக்குவத்தைக் கொடுத்தால்தான் அப்பனே அடுத்த படி ஏற முடியும் அப்பா. அப்பனே நீயும் தெரியாமலே கேட்கின்றாய் அப்பனே, தெரிந்து வைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, சோதனை. போய்க்கொண்டே இருக்கின்றீர்கள் நேர் வழியில். ஏன் நிறுத்துகின்றீர்கள். நீங்கள் (அப்படியே) போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே? ஐயா புரியுதுங்களா? அங்கு அவர்கள் சோதனை செய்கின்றார்கள். இது போல்தான் நாம் நேர் வழியில் செல்லும் பொழுது…
(இப்போது சுவடி ஓதும் மைந்தன் அங்குள்ள அடியவர்களை மேலும் கேள்வி கேட்க ஊக்குவித்தார்கள்.)
ஐயா (மேலும் கேள்விகளை) கேளுங்கள். இந்த சமயம் (நீங்கள் கேள்விகள் கேட்க) நல்ல சமயம்.
அடியவர் 4 :- செய்துகொண்டே இருப்பார்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் அடுத்த படிக்கு , ஒரு பெரிய நிலைக்குச் செல்வதற்கு இந்த சோதனை இருந்தால்தான் அடுத்த படியைப் பிடிக்க முடியும். இந்த சோதனை இல்லை என்றால் அதைப் பிடிக்க முடியாது.
அடியவர் 4 :- எப்படி உணர்ந்து கொள்ளமுடியும், அடுத்த அடுத்த படிக்குச் செல்வதை?
குருநாதர் :- அப்பனே உணர்ந்து கொண்டேதான் வருகின்றாய் அப்பனே.
அடியவர் 4 :- (எங்கள் வாழ்க்கையில்) எங்கே முன்னே போனாலும் இடிக்குதுல்ல? (தடைகள் பல வருகின்றது. முன்னே போக முடியவில்லை).
குருநாதர் :- அப்பனே சோதனை செய்பவன் , அப்பனே அங்கேயா நீ நின்று விடுகின்றாய் அப்பனே? மீண்டும் கிளம்பிவிடுகின்றாய் அல்லவா அப்பனே?
( நம் பலரின் உள் குரல் இவ் அடியவர் இப்போது உரைத்த பதில்/கேள்வி. இந்த இடத்தில் இதனை உங்கள் உரையாடலாக நினைத்து வாக்கினை உள்வாங்கப் பல புரிதல்கள் உங்களுக்கு உண்டாகும்.)
அடியவர் 4 :- (எனக்கு) எங்கே போனாலும் பரம்பதத்தில் ( பரம்பதம் விளையாட்டில்) பாம்பு கடிச்சு முதல் கட்டதிற்கு வருவோம் இல்லையா? அந்த கதைதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.
குருநாதர் :- அப்பனே அப்படி இருந்தால்தான் அப்பனே என்னிடத்தில் வரவும் முடியும் அப்பா. இப்பொழுது என்னையும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றாய் அப்பா.
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புக்கள் )
அடியவர் 4 :- (பரம்பத விளையாட்டில்) முதல் இடத்திலேயே இருந்தால் கூட பரவாயில்லை…(நல்ல உயரம் சென்று அங்கிருந்து அல்லவா கீழே விழுந்து கொண்டே இருக்கின்றேன். மனசு வலிக்கின்றது.)
குருநாதர் :- அப்பனே அதாவது பாவத்தைக் கரைத்துக் கொள்பவனே, என்னிடத்தில் வருகின்றானப்பா.
(நமது வாழ்க்கை என்ற பரம்பதம் விளையாட்டில் பாம்பு கடித்து கீழே விழுந்தால் , ஆரம்பித்த முதல் கட்டத்திற்கே வந்தால் - பாவம் கரைகின்றது என்று பொருள் கொள்க.)
குருநாதர் :- இப்படி நீ கஷ்டங்கள் படவில்லையென்றால் ஏனப்பா நீ வந்து என்னிடம் வாக்குகள் கேட்கப் போகின்றாய்? அகத்தியனா? யாரோ ஒருவன் என்று சென்று கொண்டிருப்பாய் அப்பனே. இதனால்தான் அப்பனே அதாவது உந்தனுக்கு இப்பொழுது கொடுத்திருக்கின்றது நல்லதா? தீயதா ? நீயே யூகித்துக் கொள் அப்பனே. அப்பனே எழுந்து நின்றவனே இதைக் கேள் அவனிடத்தில் நீயே.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- உங்களுக்குச் சோதனைகள் நிறைய வந்துள்ளது , அதைக் கடந்து வந்துள்ளேன் என்று சொல்கின்றீர்கள், இல்லையா? இந்த சோதனைகளைக் கொடுத்ததில் உங்களுக்கு நன்மையா தீமையா என்று ஐயன் (குருநாதர்) கேட்கின்றார்.
அடியவர் 4 :- எனக்கு எது வந்தாலும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அடுத்த தேவை என்று ஒன்று உள்ளது அல்லவா? அதை வந்து நமக்கு…..
குருநாதர் :- அப்பனே தேவை இப்பொழுது உந்தனுக்கு அதாவது தண்ணீர் வேண்டும் என்பேன் அப்பனே. நேரடியாக உள்ளே செல் பார்ப்போம்?
அடியவர் 4:- புரியவில்லை ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்கு இப்போது தண்ணீர் தாகம் தேவை என்று (பொதிகை வேந்தன்) நான் சொல்கின்றேன். (நீங்கள் இப்போது இந்த வீட்டில்) நேராக உள்ளே சென்று குடித்து விடுவீர்களா என்று கேட்கின்றார். ஐயா புரியுதுங்களா?
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- (இந்த வீட்டில்) கேட்டுத்தானே தண்ணீர் குடிப்பீர்கள்?
அடியவர் 4 :- ஆமாம். கேட்டுத்தான் (வாங்கி) குடிப்பேன்.
குருநாதர் :- அப்பனே (நீ உள்ளே சென்று) நேரடியாக ஏன் அருந்தக்கூடாது?
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வீட்டில் எங்கு தண்ணீர் உள்ளது என்று தெரியும். அப்படி இருக்கையில் ஏன் நேரடியாக உள்ளே சென்று அருந்தக்கூடாது என்று கேட்கின்றார்.
அடியவர் 4 :- நம்ம வீடு என்றால் (யாரையும் கேட்காமல்) எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வெளியே போனால் கேட்டுத்தான் வாங்க வேண்டும்.
குருநாதர் :- அப்பனே இப்படித்தான் இறைவன் மனிதனைப் படைக்கின்றான் அப்பனே. அதனால் அவன் கட்டுப்பாட்டில்தான் ஒவ்வொரு ஆன்மாவும் என்பேன் அப்பனே. பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவாறுத்தான் இறைவனும் இயக்குவான் என்பேன். புரிகின்றதா? அப்பனே இன்னும் கேள்?
அடியவர் 4 :- ஐயா இதை எப்படி நாங்கள் உள்ளே உணர்ந்து கொள்வது?
குருநாதர் :- அப்பனே இப்பொழுது இதுவரை உணர்ந்து கொண்டுதான் வந்துவிட்டாய் அப்பனே. இதுவரை பின் பாவத்தில் மிதந்துதான் வந்து கொண்டு இருந்தாய். இப்பொழுதுதான் அதாவது யான் மீட்டெடுக்கவில்லை என்றால் அப்பனே, நீ ஏற்கனவே பைத்தியமாகி இருப்பாய் என்பேன் அப்பனே.
அடியவர் 4 :- (வாழ்க்கை என்ற பரம்பதம் விளையாட்டில் பல முறை கீழே விழுந்த வலியினால்) ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றேன். ஒன்னும் வித்தியாசம் இல்லைங்க.
அடியவர்கள் :- (பலத்த சிரிப்புக்கள்)
அடியவர் 4 :- இன்னும் நடக்க வேண்டிய ஒரு டைம்ல ( time ) வந்து delay ஆகி…..
குருநாதர் :- அப்பனே உடம்பே உன்னிடத்தில் இல்லை அப்பா. நீ கேள்விகள் கேட்கின்றாய்!
( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..)
(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து, உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். நம் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் அவசியம் கட்டாயமாக சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பின் அன்னமிட அவ் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். புண்ணியங்கள் மலரட்டும். தர்மம் செழித்து ஓங்குக. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteதங்கள் உடல்நிலை பரவாலைங்களா?
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAI
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete