​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 22 June 2025

சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


வணக்கம்!

அன்பர்கள் அனுப்பி தந்த கேள்விகளை ஜீவநாடியில் அகத்தியரிடம் சமர்ப்பித்து பதிலை கீழே தருகிறேன்!

1. பாப புண்ணியம் என்பது ஒரு பண்டமாற்று முறை போலத்தானோ. ஒருவனிடமிருந்து அதை எடுத்து நல்லது அல்லது கெட்டது செய்கின்ற இன்னொருவனுக்கு கொடுக்கிறாரோ  இறைவன்?

அப்பனே! பாபம் புண்ணியம் இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளதப்பா. அப்பனே! யான் முதலிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அழகாக இவ்வுலகத்திற்கு அனுப்புகிறான் இறைவன் என்பேன். ஆனால், இதிலெல்லாம் இறைவன் என்ன சொல்லுகின்றானோ அது போல் நடந்துவிட்டால் புண்ணியம். அப்பனே! அதற்க்கு எதிர் மறையாக நடந்தால் பாபம் அப்பனே! இதில் யார், எங்கு பெற்றுக் கொள்ளுகின்றார்களோ அதன் படி புண்ணியம். ஆகவே, பாபமும், புண்ணியமும் இறைவனால் உருவாக்கப்பட்டதல்ல. அவரவர் தேர்ச்சியை பொறுத்து யான் விளக்குவேன், பாப புண்ணியத்தை. ஆகவே இதை பற்றி தெளிவடையுங்கள், அப்பனே!   

2. ஓம் அகஸ்தீசாய நமக. குருவே! இன்பம் துன்பம் நிறைந்த இந்த இல்லற வாழ்வில் சில சமயங்களில் சில நிகழ்வுகள் ஏற்படும்போது அதிலிருந்து சில நாட்களுக்கு கோவில்களுக்கு செல்லக்கூடாது , அர்ச்சனை செய்யக்கூடாது, குறிப்பாக மலைக்கோவிலுக்கு செல்லக்கூடாது என சொல்வதுண்டு. கோவில்களில் உள்ள ஒரு சில குருக்கள் அப்படி எதுவுமில்லை தாராளமாக செல்லலாம், அரச்சனை செய்யலாம் என்றும் சொல்கிறார்கள்.

இதில் எதை நாம் ஏற்றுக்கொள்வது... ?

கேள்வியின் நோக்கம் , மனம் கோவிலுக்குச்சென்று இறைவனை தரிசிக்க தடை வருவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. குருவாகிய அகஸ்தியபெருமான் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்!

அப்பனே இதை பற்றியும் யான் சொல்லுகின்றேன் அப்பனே! ஆன்மா என்பது ஒரு துகள் தானப்பா! இதனை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன், அப்பனே! அதனால், உண்டம்பு வேறு, ஆன்மா வேறு.  ஒருவனுக்கு எத்தனை சொந்த பந்தங்கள். அப்பனே! அவ் துகள் சம்பந்தப் பட்டிருக்கின்றது. இதனால், அவ் துகள் வெளியில் சென்றுவிட்டால் பதிவுகள் அனைத்தும் அடங்கியிருக்கும் என்பேன். இதனால், அவ் துகள் மற்ற துகள்களை தூண்ட வைக்கும் அப்பனே! துன்பத்திலே ஆடவைக்கும் அப்பனே. இதனால் அப்பனே, இறைவன் திருத்தலத்திற்கு சென்றாலும் வேதனையுடன்தான் செல்வான் அப்பனே! இறைவனை கூட நினைக்க மாட்டான் அப்பனே! அவ் துகள் இருந்த உடலானது அழிந்து போயிருக்கும் அப்பா. இதனால் அவ் துகள் ஏங்கி கிடக்கும் அப்பா.   எவ்வாறெல்லாம் வாழ்ந்தோம், இவரை விட்டுவிட்டோம், அவரை விட்டுவிட்டோம் என்றெல்லாம் அப்பனே! அதாவது ஆன்மா. அப்பனே, இவ்வாறாக அவ் துகள் நினைக்கும் பொழுது, இவர்களுக்கும் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் அப்பா! எத்திருத்தலத்திற்கு சென்றாலும் கஷ்டங்கள் தீராதப்பா! இறுதியில், இறைவன் கஷ்டத்தை தீர்க்கவில்லை என்று கூறி விடுவான் இறைவன். இதனால் அப்பனே! அவ் துகளை சமநிலை படுத்தவேண்டும். துகள் சமநிலைப்பட, போராடு காலம் ஆகுமென்பேன். புரிகின்றதா? இன்னும் விளக்கத்தோடு புரிய வைக்கின்றேன் போகப்போக!

3. கோவிலுக்கு போவதில் தடைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் பதிமூன்றாவது நாள் அன்று "சுபாசுவீகாரம்" என்கிற ஒரு பூஜையை பண்ணுகிறார்கள். அன்று கோவிலுக்கு போய்விட்டு வர சொல்கிறார்கள். ஆதலால், கோவிலுக்கு போவதில் தவறில்லையே!

அப்பொழுதெல்லாம், இதற்கு என்ன செய்தார்கள் என்றால், வெளியிலிருந்து இறைவனை அழைத்தார்கள் அப்பனே.  காசி,ராமேஸ்வரம், அயோத்தி போன்ற புண்ணியத்தளங்களுக்கு சென்று அவ் ஆன்மாவை கட்டுப்படுத்த பிரார்த்தனை செய்தார்கள். அதெல்லாம் தற்போது மறைந்துவிட்டதப்பா! 

4. குருநாதர் அப்பாவின் திரு அடிகள் சரணம் 🙏 அகத்தியர் அப்பா பொதுவாக சித்தர் பெருமான்கள் ஆண் பெண் என்ற பேதங்கள் இன்றி அனைத்து உயிர்களையும் அணுக்கள் என்று கூறுகின்றீர்கள். பெண் பிறவி எடுக்கும் ஒரு அணுவானது, காடுகளிலும் மலைகளிலும் தங்கி தவம் செய்ய வேண்டும், சித்தர்களோடு பயணிக்க வேண்டும் என்று ஆவல் அல்லது முயற்சி செய்யும் போது, ஒரு இனம் புரியாத பயம் ஏனோ வருகின்றது தந்தையே.  சித்தர்கள் நீங்கள் தான் அந்த வாய்ப்பை முடிவு செய்ய வேண்டும் என்று அறிந்த போதிலும், பெண் நிலையில் உள்ளவர்கள், சித்தர் பெருமான்களோடு முழுமையாக பயணிக்க / வாழ வழி காட்டுங்கள் தந்தையே!

அப்பனே! ஒன்றை மட்டும் சொல்லுகின்றேன் அப்பனே. எங்களுக்கு அனைத்தும் உயிர்தான் அப்பனே. 

5. அகத்தியர் அப்பா முத்ரா அம்மா திருவடிகள் போற்றி போற்றி 🙏 அகத்தியர் அப்பா ஹனுமான்தாசன் ஐயாவை போல் அரசண்ணாமலை ஆலயத்திற்கு சென்று ஒரு நாளேனும் இரவு நேரத்தில் பெண்கள் தங்கலாமா அகத்தியர் அப்பா. ஐமுகப் பெருமான்களுடன், என் அப்பன் ஆறுமுகப் பெருமானையும் அங்கு தரிசிக்க அருள் வழங்க வேண்டும். 

அப்பனே! சென்றாலும், இல்லத்தில் விடுவார்களா என்பது சந்தேகமே! ஆகவே, நேரம் வரும் பொழுது யானே அழைத்து செல்வேன், எங்களின் காட்சிகளும் கிடைக்கும்.

6. அகத்தியர் அப்பா உங்கள் திருவடிகளே கதி. ரண மண்டல மலை குறித்து இந்த அடி நாய் அரிய விரும்புகின்றேன். தயவு செய்து இது குறித்து யாம் பின்பு உரைப்போம் என்று மட்டும் கூறி விடாதீர்கள் தந்தையே. மலைக்கு செல்வதும், அங்கு உள்ள வழிபாடுகள் குறித்தும் உங்கள் பிள்ளைகளுக்கு வழி சொல்லுங்கள் அப்பா.

அப்பனே! ரணம், எவை என்று புரிய, நீங்களே சொல்லுங்கள் அப்பனே! ரணம் என்றால் என்ன?

அடியார்: ரணம் என்றால், காயம்!

அப்பனே! காயம் என்றால் உடம்பை கூட குறிக்கும் அல்லவா?

அடியார்: உடம்பிருந்தால் தான் காயம்!

அது சென்றுவிட்டால்? நிச்சயம் அப்பனே, என்ன ஆகும்? இதற்கு பதில் அனைத்தும் முடிந்துவிட்டது என்று பொருள். இன்னும் வாழ்க்கை இருக்கின்றதப்பா! 

அடியார்: வழிபாடுகளை பற்றி?

சென்றாலே போதுமானதப்பா. இன்னும் ரகசியத்தை, எங்கு செப்ப வேண்டுமோ, அங்கு செப்பினால்தான் நல்லதப்பா. . அதுவும் அதிவிரைவில் உண்டு. 

7. ஐயா வணக்கம் ஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றி.. இறைவா நீ நலமா என்று யாரும் கேட்பதில்லை என்று சமீப வாக்கு..சிலர் பொதுவாக ஆலயத்தில் இறை நாமத்திற்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று  கூறுவதுண்டு...இதை இறை எவ்விதம் ஏற்று கொள்கிறது என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன்..  நன்றி

அப்பனே! இறைவன் எனக்கு பூஜை செய்யுங்கள் என்றெல்லாம் செப்புவதே இல்லை. அப்படி ஒருவேளை, இறைவன் எந்தனுக்கு பூசைகள் செய் என்று சொன்னால் மனிதன், ஏன் நான் செய்ய வேண்டும் என்று ஓடிவிடுவானப்பா. இதனால் அப்பனே! அவனவன் எண்ணத்தை பொறுத்ததே என்பேன், அப்பனே! அதாவது இறைவன்தான் அனைத்தையும் காக்குகின்றான் அப்பனே. ஆனால் மனிதனோ, இறைவனை காக்குகின்றானாம், அப்பனே! இதனால் தான் மனிதர்களிடையே சித்தர்கள் வந்து, புத்திகெட்ட மனிதர்கள் என்று திட்டி தீர்க்கின்றார்கள் அப்பா! எதற்காக, உயிரோடு இருப்பவனுக்கு பூசைகள் அப்பா! இன்னும் விளக்கத்தோடு வாக்குகள் சொல்கின்ற பொழுது புரியுமப்பா. இதனால் அப்பனே, இறைவன் எதையும் கேட்பதில்லை அப்பனே! அன்பை மட்டும் கேட்கின்றான் அப்பனே. ஆனால் மனிதன் அன்பை தவிர மற்றவை எல்லாம் செய்கின்றான் அப்பனே!  

8. அந்த அன்பு என்ற ஒன்று இருப்பதினால்தானே, மனிதன் சற்று வித்யாசமாக சிந்திக்கிறான்!

சிந்திப்பதெல்லாம் கலியுகத்தில், பொய்களாக போய்க் கொண்டிருக்கிறது அப்பனே! உண்மை நிலையை சிந்திப்பதே இல்லை அப்பா!

9. கோவில் சென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டால் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் செல்கிற பொழுது.....

அப்பனே! திருத்தலத்திற்கு ஏன் செல்கின்றோம் என்றால், அப்பனே, ஒவ்வொரு முறையும் தன்னுள் உள்ள அழுக்குகளை திருத்தம் அடைய செய்ய வேண்டும் அப்பனே. ஆனாலும் அப்பனே! செல்லச்செல்ல இன்னும் அழுக்குகளை நிரப்பிக்கொண்டுதான் வருகின்றான் அப்பனே! அப்பொழுது என்ன பயனப்பா?

10. அப்படிப்பட்ட நிலையிலும், அங்கு போய் இருந்து, தனக்கும், தன் குடும்பத்துக்கும் ...............
  
அப்பனே! திருத்தலம் என்பது ஆடை என்று பொருள். அங்கு செல்லும் பொழுது ஒவ்வொன்றாக அடைக்கப்படவேண்டும். மாயை அடைக்கப்படவேண்டும். மூச்சை அடைக்கப்படவேண்டும். சிறிது சிறிதாக கைகளை அடைக்கப்படவேண்டும்! கால்களை அடைக்கப்படவேண்டும்! அனைத்தும் அடைந்தால்தான், அத்திருத்தலத்தில் உள்ள சக்தி உன்னுள் புகுந்து அனைத்திலும் வெற்றியை காண்பாய் அப்பனே.

11. அது சரி! நான் கேட்க வந்த கேள்வியை முழுவதும் கேட்க விடவில்லை நீங்கள். நீங்க மாட்டுக்கு பதில் சொல்லிண்டே இருந்தால், நான் கேள்வி கேட்க முடியாது. முதலில் என்னை முழுமையாக கேள்வியை கேட்க விடுங்கள். மனிதன் என்பவன் ஆசைக்கு அடிபணிந்தவன். சரியா?

அப்பனே! நிச்சயம்தன்னில் கூட, அப்பனே! அடிபணியாமல்தான் அனுப்புகிறான் இறைவன் என்பேன்.  இங்குதான் ஆசைகள் பேயாக இருக்கின்றது. அப்படியாயின் எப்படியாப்பா இறைவன் இறங்குவான் என்பேன்?

12. மறுபடியும், என் கேள்வி என்னவென்றால், ஆசைகள் உருவே ஆன மனிதன், சற்று உணர்ந்து கொண்டு, அங்கு போய், தனக்கும், தன் குழந்தைகளுக்கும், தன் உறவுகளுக்கும், தன் சுற்றத்தாருக்கும் வேண்டாமல்,  இறைவன் நன்றாக இருக்க வேண்டும் என்று அர்ச்சனை செய்வது நியாயமான முறை தானே?

நிச்சயம் தன்னில் கூட, அப்பனே! இறைவனுக்கு தன்னை பார்த்துக் கொள்ள தெரியுமப்பா? ஆனாலும் நீ அப்பனே, உன்னை நீ பார்த்துக் கொண்டால் போதுமானதப்பா. உண்மையாகவே இறைவன் என்ன விரும்புகின்றான் என்றால், நான் படைத்தாற்போல் நீ இரு. அதுவே போதும்! என்றுதான் நிச்சயம் போராடுகிறான் இறைவனே.

13. அப்படியானால், சித்தர்கள் இத்தனை கோவில்களை கட்டியிருக்கவே வேண்டாம்!

அப்பனே எதற்க்காக என்றால், ஒவ்வொரு திருத்தலத்தில் ஒருவகை மின்சாரம் உள்ளது. அங்கு செல்லும் பொழுது அது மனிதன் உடலுக்குள் சென்று எல்லாம் சரியாக நடக்கின்றதப்பா. மின்கலமாக உடல் இருக்கும் பொழுது சக்தி ஊட்டத்தான் திருத்தலங்கள் என்பேன். 

14. நான் கூற வருவது என்னவென்றால், இப்படிப்பட்ட நிலையில், அவ்விடத்தில், ஒரு மனிதன் தன்னை திருத்திக்கொள்ள ஒரு நிலை உருவாகிறது இல்லையா?

அப்பனே! நிச்சயம் தண்ணில்கூட, இதைத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!

15. அவனுக்கு சொல்லிக் கொடுத்தவரையில் புரிந்து கொண்டு, தனக்காக வேண்டாமல், கோவிலுக்கு சென்று "இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்" என பூசை செய்துவிட்டு வருவது, எப்படி தவறாகும்?

தவறு என்று சொல்லவில்லை அப்பா! சொன்னால் தான் செய்கின்றான் மனிதன் என்கிறேன்.

16. என்ன செய்வது? இது கலியுகம்!  நீங்கள் எல்லோரும் சேர்ந்து மனிதனை ஏத்தி ஏத்திவிட்டு, தூக்கி விட்டிருப்பது எல்லாம் தான் காரணம்!

நிச்சயம் தன்னில் கூட. இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், "இறைவா! நீ படைத்திட்டாய்! நீ படைத்தது போல் நான் இருக்கின்றேன்" என்று! 

17.  பலவிதமான தெய்வ ரூபங்கள் பல விதமான வழிபாடுகள். பலரும் சொல்வது என்னவென்றால் ஏதாவது ஒரு தெய்வத்தை மட்டும் பிடித்து அந்த தெய்வத்தின் நினைவிலேயே இருந்தால்தான் அனைத்தும் சித்திக்கும் என சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அனைத்து தெய்வங்களுமே மனதுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இருந்தாலும் குருநாதர் அகஸ்தியரின் திருவடிகளை இறுக்கமாக பற்றி குருநாதர் மூலமாக அனைத்து தெய்வங்களையும் குருவழியில் நின்று வழிபட்டு வருகிறேன்.

அப்பனே! அனைத்தும் ஒன்றே! யாரை வணங்கினாலும் ஒருவனைத்தான் சேரும்! இதை மூலன் அழகாக எடுத்துரைத்திருக்கின்றான் அப்பா! ஒருவனே தெய்வம்!

18. அனைத்து தெய்வங்களும் மூலத்தில் ஒன்றுதான் என நன்றாக அறிந்தாலும், மனம் பலவித தெய்வங்களை இன்னும் நாடுகிறது இதற்கு என்ன செய்வது?

இறை பலவித காரணங்களுக்காக பலவிதமாக அவதாரங்கள் எடுத்தது. அதை பக்குவமாக விளக்கி சொன்னால் தான் புரியும். ஆகவே, முதலில் உங்களுக்கு பக்குவத்தை உருவாக்கியபின் இதன் ரகசியத்தை உரைக்கின்றேன்! 

19. ஒரு மனிதனுக்கு இறையருளோ முக்தி,ஞானமும் அவனுடைய கர்மா மற்றும் ஜாதகப்படியோ, விதிப்படி நடக்குமா? இல்லை மனித முயற்சிக்கு அதில் இடம் உண்டா?

அப்பனே! இங்கு மனிதனை பற்றி புரிந்து கொள்ள முடியாதப்பா! எதை, ஏன் என்று இங்கு சொல்ல முடியாத நிச்சய காரணங்கள் என்பேன். அதை புரிந்து கொள்ளும் சக்திகளை கொடுத்து அதை தெரிவித்தால்தான் நன்று என்பேன், அப்பனே! அதனால் அப்பனே, "நான்" என்ற எண்ணத்தை பிரித்து எறிந்து, இறைவனை, ஒரு மண்டலம் திருத்தலத்திற்கு செல்லச்சொல், அமர்ந்து தியானங்கள் செய்யச்சொல், இதற்க்கு பதில் தெரிவிப்பேன் அப்பனே! 

20. இறைவனை ஏமாற்றுவது எப்படி? உங்களுக்கு தெரிந்த ஒரு வழியை காட்டுங்களேன்!

அப்பனே! நிச்சயம், மனிதனை ஏமாற்றுவது எப்படி?

21. திரும்பி எங்களிடம் கேள்வி கேட்க கூடாது!

இறைவன், மனிதன் மீது நம்பிக்கை வைத்து தான் அழகாக பிறக்க வைக்கின்றான். ஆனால், கால போக்கில், பொய் சொல்லி, ஏமாற்றி, நடிப்பதில், இறைவனையே ஏமாற்றுகிறான் மனிதன். இதனால் அப்பனே! விட்டுவிடுவானா இறைவன் என்ன? இதற்க்கு அப்பனே, நீங்கள் அனைவரும் தெரிவியுங்கள், கருத்துக்கள். 

22. இறைவன் நல்ல மனதோடு படைத்தாலும், பின் காலங்களில் மனிதன் அனைத்திற்கும் ஆசை படுவான் என்று தெரிந்ததுதானே படைக்கின்றான்?

அப்பனே! அப்படி இல்லை அப்பனே! ஒருக்காலும் இல்லை அப்பா! நீ கேட்டாயே, திருத்தலங்கள் ஏன் உருவாக்குகிறார்கள் என்று! அங்கெல்லாம் செல்கிற பொழுது ஒருவகை மின்சாரம் மனிதன் உடலுக்குள் ஓட்ட வைக்கப்படும் அப்பா! அப்பனே! புரிந்து கொண்டாயா அப்பா! ஆனால் செல்ல வைக்க, வழிகாட்ட ஆள் இல்லையே! ஆசைகளுடன் ஒரு துகள் சென்றுவிட்டால், மீண்டும் மீண்டும் பிறவிகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், யாங்களோ வந்து வந்து வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.  கேட்பார் இல்லை அப்பா!

23. என்னுடைய கேள்வி அது மட்டுமல்ல. நான் சொல்ல வந்ததை சொல்லி முடித்துக் கொள்கிறேன்! அதன் பின் நீங்கள் பேசவும்! இறைவனுக்கு மனசுக்குள் ஒரு எண்ணம் எப்பொழுதுமே உண்டு. உனக்கு என்ன வேண்டும் என ஒரு மனிதனிடம் இறைவன் கேட்டால், எனக்கு வீடு வேண்டும், வாகனம் வேண்டும், பொண்டாட்டி வேண்டும், குழந்தை வேண்டும், பணம் வேண்டும் என கேட்ப்பான், அதை கொடுத்து ஏமாற்றிவிட்டு போய்விடலாம் என்று சொல்லி, பின்புலத்தில் (background) Plan- B வெச்சுட்டுத்தான் வாரார். அதை புரிந்து கொண்டு, அவர் நம்மிடம் வந்து, உனக்கு என்னடா வேண்டும் என கேட்க்கிற பொழுது, எனக்கு எதுவுமே வேண்டாம், நீர் இருக்கிறீர் இல்ல, அது போதும், முதலில் மற்றவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யுங்கள் என்பதுதான், இறைவனை ஏமாற்றுகிற வழி.

அப்பனே! போதும் பிறவிகள், நீயே எடுத்துக் கொண்டுவிட்டு என மனிதன் சொல்வானா என்று இறைவன் ஏங்கிக் கொண்டிருக்கிறான். 

24. அதைத்தான் இன்னொருவிதமாக மேலே கூறியுள்ளேன். அது போதும் என்று.  அதுதான் இறைவனை ஏமாற்றும் வழி என்று அடியேன் கூறுகிறேன். அப்போ! இறைவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்றால், மனிதன் ஆசைக்கு அதீதமாக உட்பட்டவன். எனக்கு இந்த உலகத்தாயா பொருட்கள் அனைத்தும் வேண்டும் கேட்பவன். அதனால், இறைவா மனிதனை பற்றிய உன் எண்ணம் தவறு, நீ எதை கொடுக்க தயாரானாலும் அதை வேண்டாம் என்று கூறுகிற மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள் என்று சொல்லலாம் அல்லவா. இறைவனும் ஏமாந்துவிடுவான் அல்லவா! 

அப்பனே! இந்த அறிவு ஏன் 20 வயதில் வருவதில்லை?

ஏன் என்றால், அந்த ஞானம் அன்று சித்திக்கவில்லை. 

சிறுபிள்ளை வயதிலேயே ஞானப்பால் அருந்தியவர்களும் இங்கு இருக்கிறார்கள்!

ஆம் உண்மை! அனைவரையும், இந்த ஞானத்துடன் தான் இறைவன் பிறக்க வைக்கின்றான் அப்பா! ஞாபகம் இருக்கின்றதா? அனைவருமே இறைவன் பிள்ளைகள் என்று! 

இல்லை. எங்களையும் குளக்கரையில் போட்டுவிட்டு சென்றிருந்தால், ஒருவேளை மீனாட்ச்சி எங்களுக்கும் ஞானப்பால் தந்திருக்கலாம்.

இன்றும், நிச்சயம் தன்னில் கூட, ஞானப்பாலை, கொட்டி கொட்டித்தான் கொடுத்துக்கொண்டுதான் என் அன்னையவள் இருக்கின்றார்கள் அப்பா. வேண்டாம், வேண்டாம், பின் பள்ளத்தில் விழாதே என்று. நான் வீழ்வேன், வீழ்வேன் என்று, மனிதன் பள்ளத்தில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பா!

எல்லாம் நன்றாக சொல்வீர்கள், ஏன் என்றால் கலியுகத்தில், ஏமாற்றுவதற்கு இத்தனை பேர் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும்?

25. இந்த நாட்களில், பல காரணங்களுக்காக எல்லோரும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டி வரும் பொழுது, உணவு விடுதிகளில் உண்ணத்தான் வேண்டியுள்ளது. சைவ உணவையே உண்டாலும், அதை சமைப்பவனோ, பரிமாறுகிறவனோ அசைவம் உண்டு பாபத்தை சேர்த்துக் கொண்டவனானால், அந்த பாபம் சைவ உணவை உண்பவனுக்கு வருமா? அப்படியாயின், உள்வாங்கிய அந்த பாபத்தை நம்மை விட்டு விலக்குவது எப்படி?

அப்பனே! ஏன் மனது அப்படி செல்கின்றது? அப்பனே! பாபத்தை சம்பாதிப்பதற்காகத்தான் அப்படி செல்கின்றது. எண்ணத்தில் ஏதும் வைக்காமல், பின் பசி தீர உண்டுவிட்டு வந்தால் எதுவும் வராது. அவனுடைய கர்மம் அவனிடமே சேரும். இதனால், எண்ணினால் கர்மம் வந்துவிடும்.

எண்ணினாலே கர்மம் வந்துவிடும் என்பது வேறு! இந்த காலத்தில் அசைவம் சமைக்கிற இடத்தில் கூட........

அதனால் தான் அப்பனே! பலி எண்ணிக்கை கூடி கொண்டு போகிறது அப்பனே! விபத்துக்கள் நடந்து கொண்டே போகிறது என்பேன் அப்பனே! தடுக்க முடியாது அப்பா. இன்னும் அழிவுகள் கொடுத்துக் கொண்டே இருப்பான் இறைவன். இதை அப்பனே, நிறுத்த முடியாதப்பா. 

அதை பற்றி நான் கேட்கவில்லை. நான் கேட்க வந்த விஷயம் வேறு. அப்படியானால், அசைவம் பரிமாறுகிற இடத்தில் அமர்ந்து சாப்பிடலாம் என்கிறீர்களா?

இதனை பற்றி ஆழ்ந்து சிந்திக்க, தெரியுமப்பா!

ஆழ்ந்து சிந்திப்பது இருக்கட்டும். ஒரு உயிரை கொன்று பரிமாறுகிற இடத்தில், நாம் அமர்ந்து சாப்பிட்டால், அது எப்படி புண்ணியமாக இருக்கும்? 

அப்பனே! சில உயிர்களை, கண்ணுக்கு தெரியாவிடினும் கொன்றுவிட்டு போய் அமர்ந்தாள் தான் இப்படி அமையும், அப்பனே! ஒரு உயிரை கொன்று விட்டுத்தான் இவனே செல்கின்றான் அங்கு! இவன் தன நேர்மையாக இருந்தால், அப்படிப்பட்ட இடங்களுக்கு இவன் தன் செல்ல முடியாதப்பா! பாபத்தையும் ஏற்க முடியாதப்பா! 

உங்கள் விளக்கங்கள் எங்கோ செல்கின்றது. நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள். ஒரு மனிதன் தன்னை சுத்தம் செய்து கொள்வதெப்படி? அதை மட்டும் சொல்லுங்கள்.

பல திருத்தலங்களுக்கு செல்லச்சொல். அயோத்தி, காசி, ராமேஸ்வரம் என்று போகச்சொல். அறுபடை வீடுகள், பஞ்ச பூத ஸ்தலங்கள், போன்ற இடங்களுக்கு சென்று வரவும். நன் முறையாக இல்லத்தில் பக்தியுடன் அமர்ந்து, திருத்தலத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு,  சிவபுராணம் போன்றவை பாடினால், இறைவன் வந்து ஆசீர்வதிப்பார் அப்பா! 

நான் ஆசீர்வாதம் என்கிற தலைப்பை பற்றி கேட்கவே இல்லை. நீங்கள் சொல்கிறபடி பார்த்தாள், ஆடு, மாடும் வெட்டி உணவாக போடுகிற இடத்தில் அமர்ந்து நன்றாக உண்டுவிட்டு, சிவபுராணமும், காயத்ரி மணித்திரமும் 108 முறை ஜெபித்துவிட்டால் உடல் சுத்தமாகிவிடுமா?

அப்பனே! இப்பொழுது சொன்னாயே, அந்த காயத்ரி மந்திரத்தை சொன்னாலே, இங்கெல்லாம் போய் அமர்ந்து சாப்பிடவேண்டும் என்கிற எண்ணமே வராதப்பா!

நாங்களெல்லாம் மனிதர்கள் அப்பா! இங்கிருந்து மதுரை போகிறேன் என்றால், தண்ணீர் குடிக்காமலா இருக்க முடியும்? 

அப்பனே! நிச்சயம் தன்னில் கூட, உடம்புக்குத்தான் தேவை அப்பனே!

ஆமாம்! தேவைதான். உடம்புக்கு தேவை. 

அப்பனே! உணவில்லாமலும் வாழலாம் அப்பனே!

அந்த வித்தை எங்களுக்கு தெரியாது. சித்தர்களுக்கு இதெல்லாம் தெரியுமாக இருக்கலாம்.

அப்பனே! அமைதியாக இரு. அனைத்தும் தெரிவிப்பேன்!

எப்போ? அடுத்த ஜென்மத்திலா?

எல்லாம் தானாக நடக்குமப்பா! நீயே, சிறு வயதில், இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்தாயா அப்பா! எல்லாம் அதனதன் காலத்தில் நடக்குமப்பா. 

நான் நினைக்காத விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் நான் நினைத்த நல்ல விஷயங்கள் எல்லாம் தவறு என்று புரிகிறது எனக்கு.

புரிந்தால் நன்று என்பேன் அப்பனே!

அதில்லை ஒருமுறை ஒரு காலத்தில் உங்களால் கூறப்படுகிற உண்மைகள் கூட பின் ஒரு காலத்தில் தலை கீழாக கூறப்படுகிறதே!

பொய்யை உண்மையாக்குவதும், உண்மையை பொய்யாக்குவதும் மனிதனிடத்தில் என்பதே உண்மை.

அப்படியானால், நிரந்திரமாக உண்மை என்பது சித்தர்களுக்கும் இல்லை, இல்லையா?

நிறைய அழிவுகளை கொடுத்து, மனிதனை அடித்தால்தான் திருந்துவான். அதைத்தான் யாங்கள் செய்கிறோம். 

போதும், அடியேன் அடுத்த கேள்விக்கு செல்கிறேன்!  

26. தலைகீழ் லிங்கம் த்யானத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம்?

அப்பனே! தலைகீழாக நின்று த்யானம் செய்தால், அனைத்தும் புரியுமப்பா! அப்பனே,  அமைதியாக நில் போதுமானதப்பா!

27. ராகு, சனி கும்ப ராசியில் சேர்ந்திருப்பது மிகப்பெரிய அழிவை உருவாக்கும் என்கிறார்களே!

அப்பனே! இதை யார் சொன்னது. அப்பனே கிரகங்கள் கூட நிச்சயம் நன்மைகளைத்தான் செய்யும் என்பேன். மனிதன் திருந்துவதற்காகவே இவை எல்லாம். சனி எண்பகவமே ராகு, ராகு என்பவனே சனி. இவற்றிற்கு ஒன்றும் வித்தியாசமில்லை அப்பனே. சனியும், ராகுவும் கூட அநியாயத்தை யார் ஒருவன் செய்கிறானோ, அவனை எதிர்த்து அடிக்குமப்பா. போர் போன்று நடக்கும் அப்பா. இவை மனிதனை எதிர்த்து போராடுகின்றது அப்பனே. இவை கெட்டவையா  என்ன, மனிதன்  தீர்மானிப்பது போல். 

அவை இத்தனை பெரிய அழிவை உருவாக்குமா? தினமும் மனிதர்கள் கொத்து கொத்தாக சாகின்றார்களே!

யுத்தத்தில் நீங்களும் ஜெயிக்கலாமே?

நாங்களும் ஜெயிக்கலாம் தான். ஆனால், அந்த 258 மனிதர்கள் என்ன தவறு பண்ணினார்கள்?

அப்பனே! வாயில்லா ஜீவராசிகள் என்ன தவறு செய்தது அப்பனே! வாயில்லா ஜீவராசிகளை கொல்லாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேனே! அதனால் அப்பனே! நிச்சயம் தன்னில் கூட அனைவருமே அழியாத்தான் போகின்றார்கள்! அப்பனே! 

அதான்! இந்த ராகு, சனி சேர்ந்தபின் தினமும் மனிதர்கள் கொத்து கொத்தாக சாகிறார்கள்!

இது மனிதனுக்கும், கிரகங்களுக்கும் நடக்கும் யுத்தம் அப்பனே! இதை பற்றி மட்டும் ஏன் கேட்க்கின்றாய் அப்பனே. உலகத்தில் தினமும் லட்சத்துக்கும் மேல் உயிர்கள் போய்க்கொண்டிருக்கின்றதே! 

28. ராகு சனி ஒன்று சேர்ந்த பின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதே. விமான விபத்தில், யுத்தத்தில், படகு விபத்தில், கூட்ட நெரிசலில், விஷ உணவை உண்டதினால் என பல விதங்களிலும் மனிதர்களும் பிற உயிரினங்களும் மடிகிறார்கள்! இன்னுமா இறைவன் திருப்தி அடையவில்லை?

இது கலியுகம். அனைவரும் கூடிய விரைவில் அழியாத்தான் போகின்றார்கள் அப்பா. நிலையானவர்கள் என்று யாரும் இங்கு இல்லை. கலியுகத்தில் யான் கூறிய வாக்குகளை யாரும் கவனிக்கவில்லை அப்பனே! கலியுகம் என்பது அழியுகம் என்று சொல்லிக்கொண்டு வருகின்றேனே. அப்பனே! இந்த அழிவை நிறுத்தவே முடியாதப்பா! அப்பனே! இன்னும் நோய்களால் மடிவார்கள் என்பேன் அப்பனே! மனிதனின் புதுப்புது கண்டுபிடிப்புகள் அதற்க்கு ஒரு காரணமாக அமையும். யாங்கள் அனைவரும் மனிதனையும், உலகத்தையும் காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம். எப்படியும் மனிதனை திருத்தி, மறுபடியும் வந்து வாக்குகள் செப்பி செப்பி, பாபமடா! வேண்டாமடா! என்றெல்லாம் கூட! அப்பனே! எண்களும் கருணை படைத்தவர்கள்தான் அப்பனே! ஆனால், மனிதன் தான் தவறுக்கு மேல் தவறு செய்து தன்னையே அழித்துக் கொண்டு இருக்கின்றான். தீபத்தை ஏற்றச்சொன்னேன் அப்பனே! அனைவரும் சேர்ந்து ஏற்றியிருந்தால், இவை எல்லாம் வந்திருக்காது அப்பனே. மேலிருந்து வரும் ஒரு ஒளி, பூமிக்கு வறுமாப்பா. அதை எதிர்த்து போராடத்தான் விளக்கேற்றச்சொன்னேன். செய்தார்களா என்ன அப்பனே. ஒருவர்கூட இல்லை அப்பா. கேட்டால் யான் செய்கிறேன் என்று பொய் சொல்கிறான் அப்பா. யான் மறந்துவிட்டேன் என்று, என்னால் செய்ய முடியவில்லை என்று. பாருங்கள் அப்பனே. யானே இறங்கி வந்து சொன்னேன் அப்பனே. உங்களிடத்தில் கொடுத்தேன் அப்பனே, காப்பாற்றுங்கள் என்று. வெட்கம் கேட்ட மனிதர்கள் அப்பா!

ஒருவன் சொல்கின்றான் இது பொய் என்று. இன்னொருவன் சொல்கின்றான் யான் கூறுவதே மெய் என்று. இப்படி அனைத்து இடங்களுக்கும் சென்று கேட்டு குழப்பிக்கொள்கிறார்கள் அப்பனே. 

அடியார்: இதாவது பரவாய் இல்லை. தொலைபேசி வழி நாடி வாசிக்கிறேன் என்று கூறி........

அப்பனே, ஒன்றை சொல்கின்றேன். எப்பொழுது எவன் ஒருவன் எனக்கு அனைத்தும் தெரியும் என்று சொல்கிறானோ, அதுவே கலியின் முற்று! எப்பொழுது ஒருவன் யான் இறைவனை அழைத்து வரவைப்பெண் என்று கூறுகிறானோ, அப்பொழுது கலியின் முற்று. எப்பொழுது மாலைகள் வந்து விழுகிறதோ, அப்பொழுது கலியின் முற்று. எப்பொழுது மனிதர்கள் அதிசயங்கள் செய்கின்றார்களோ அப்பொழுது கலியின் முற்று. இறைவன் எல்லைக்கு உட்படாதவன் என்பேன் அப்பனே! எல்லைக்கு அப்பாற்பட்டவன் என்பேன் அப்பனே! கலியுகத்தில் மனிதனுக்கு அபிஷேகங்கள் நடக்குமப்பா. யான் தான் இறைவன் என்பானப்பா! இதுதான் கலியுகத்தின் முற்று. 

அடியவர்: இதற்குத்தான் அன்றே சொன்னேன்! தன படைப்பு சரியாக வேலை பார்க்க மாட்டேன் என்கிறது என்று தெரிந்தும் இன்னும் இறைவன் படைத்துக் கொண்டு இருக்கின்றார் இல்லையா? இது யார் செய்த தவறு என்று நான் அன்றே கேட்டேன்.

29. அகத்தியரிடம் எப்படி பேசுவது, எங்கே பார்ப்பது கூறுங்கள். மனம் ஆறவில்லை பேசியே ஆக வேண்டும்.

அப்பனே! இல்லத்திற்கு வந்து கொண்டேதான் இருக்கின்றேன். நிச்சயம் பேசிவிடுகின்றேன்!

30. கணினி மற்றும் மென்பொருள் அறிவைப் பெறுவதற்காக சுசரிதா சரஸ்வதி தேவியை வழிபடுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சுசரிதா சரஸ்வதி தேவியை எங்கு வழிபடலாம் என்று தயவுசெய்து எங்களுக்குச் சொல்லுங்கள்.

​அப்பனே! முதலில் ஹயக்ரீவன் மந்திரத்தை ஒதச்சொல் அப்பனே! மனப்பாடம் செய்யச்சொல். 

31.பிறப்பு ஜாதகத்தில் சில தசைகள் நடக்கும் போது தவறான வழிகளில் சென்று விடுகிறார்கள். இதை தவிர்த்து ஓழுக்கமாக வாழ்வதற்கு வழி காட்டுங்கள் அப்பனே!

அப்பனே! நிச்சயம் இல்லை அப்பா! நீங்கள் நிச்சயம் நன்மைகள் செய்து கொண்டிருந்தாள் கிரகங்கள் உங்களுக்கு நல்லது செய்யுமப்பா. இறைவன் நவகிரகங்களுக்கு இட்ட கட்டளை என்னவென்றால், இவன் எதன் வழி செய்கிறானோ, அதன்  வழி அடித்து பக்குவப்படுத்து என்று.  இதனால் அப்பனே!, நீங்கள் என்ன யோசிக்கின்றீர்களோ, அதன் படி நடக்குமப்பா! அதாவது தீயவை யோசித்தால், தீயவையாகவே கிரகங்கள் செய்யுமப்பா. அதாவது, குரு பகவான் நல்லது தான் செய்ய வேண்டும் அப்பனே! ஆனால் சிலருக்கு கெடுதல் செய்வான் அப்பனே! ஏன் என்றால், நீங்கள் நினைப்பது அப்படியப்பா! 

32. ஸ்ரீ பாலாம்பாள் கோவில், நந்தி ரெட்டிப்பட்டி, திண்டுக்கல் - இங்கு கும்பாபிஷேக பணிகள் தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என பிரார்த்தனை அய்யா!

அப்பனே! நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள் யாங்கள், பாடுபட்டு முடித்திடுவோம். 

33. ஸ்ரீ வித்யா உபாசனை பற்றி கூறவும்!

அப்பனே! இதை எடுப்பவன்/எடுப்பவளுக்கு, நீண்ட வாக்குகள் உண்டப்பா. இப்பொழுது இல்லை அப்பா. 

34. அகத்தியப்பெருமானின் பெயரை சொல்லி, நான் நாடி வாசிக்கிறேன் என்று சொல்லி, தொலைபேசி வழி எதையோ சொல்லிவிட்டு, வாக்கு சொன்னதே அகத்தியப்பெருமான் தான், மரியாதையாக பணத்தை gpay பானு என்று கூறி உங்கள் பெயரை இன்னும் தவறாக உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்களே இவர்களுக்கெல்லாம் இன்னும் நீங்க விமோசனம் கொடுக்கவில்லையா? 

அப்பனே! அறிந்தும் புண்ணியம் மெதுவாக செயல்படும் என்பேன் அப்பனே! பாப்பம் அதை விட மெதுவாக செயல் படும் என்பேன் அப்பனே! அப்பனே! விட்டு பார்ப்பேன் அப்பனே! அவ்வளவுதான். சற்று பொறுத்துக் கொள் அப்பனே! சித்தனை பற்றி தெரிவதே இல்லை அப்பா. இருந்தும், பாபத்தில் விழுந்து அவனே அழிந்துவிடுகின்றான் அப்பா! 

அடியவர்: கேள்விகள் நிறைவு பெற்றது. குருநாதருக்கு மிக்க நன்றி!

அப்பனே! நிச்சயம் நிறைவு பெறவில்லை. மீண்டும் வருவேன் அப்பனே!

அடியவர்: You  Are Welcome!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment