21/4/2025 அன்று புலத்திய மகரிஷி உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: பொதிகை மலை.
ஆதிகுருவான அகத்தியரை மனதில் அறிந்து புலம்பி கூறுகின்றேன் புலத்தியனே!!!
அன்பு வடிவமாக எங்கும் நிறைந்தவரே!!
இருப்பவரே!!
அறிந்தும் அனைத்து உலகத்தையும் காப்பவரே!!!
காத்து அருள் ஈந்து அறிந்து வழி நடத்துபவரே!!!
அன்பு அன்பு எனும் மூலப் பொருளை மனிதனுக்கு பின் இடுபவரே!!!
இட்டு இட்டு அன்பு ஒன்றே.. இவ்வுலகத்தில் பின் சாலச் சிறந்தது என்று உணர்த்திய பிறகு அன்பே.. பின் அதுவே குருவே!!!
குருவே!!! தமிழே!! அனைத்தும் நீயே!!!
இறைவா நீயே!!!
அனைத்தும் நீயே!!
ஆண்டும் 16ம் பின் 18ம்
அறிந்தும் இவை மனிதனுக்கு புரியாத நிலையில்.. இருந்ததைக் கூட எடுத்துரைத்து பின் உலகிற்கு பின் அறிந்து மூலாதாரத்தை இயக்குபவரே!!
அனைத்தும் நீயே இறைவா!!
அறிந்தும் உன் தாள் பணிந்து.. பரப்புகின்றேனே இங்கிருந்தே!!!!
பொதிகை தன்னில் அழகாக வீற்றிருக்கும்
இறைவா!!!
அறிந்தும் உன்னை தேடி பின் வந்து வந்து பின்... வர முடியவில்லையே என்று.. ஏங்குபவருக்கும் அருளாசிகள்!! அருளாசிகள்!!
அறிந்தும் ஏன்? எதற்கு? அங்கு போய்.. அமர்ந்தீர்??
என்பதையெல்லாம் யானே அறிவேன்!.
என்னிடத்திலே அறிந்தும் பின் அனைத்து சித்தர்களாலும் பின் உனை தேடி தேடி வந்து வந்து அங்கே பின் அமர்ந்து பின் உறங்கி உறங்கி!!
இதனால் அறிந்தும் பின் சந்தோஷங்களே!!!
இதனை அறிந்தும் எவ் உயிரையும் கொல்லாது!! பின் அறிந்தும் அதாவது என்னிடத்திற்கு வருவோர்கள் எல்லாம் இங்கெல்லாம் அறிந்தும் பின் எதனையும் பின் எவ் உயிரையும் தாக்காமல் அறிந்தும் வந்தால் தான் பின் பிறவி கடலை நீந்த முடியும்.. என்பதற்கிணங்கவே இங்கு அமர்ந்தீரே!!!
அறிந்தும் யான் கண்டேன் இதனை!!
இன்னும் வரக்கூடிய காலங்களைப் பற்றியும் அழகாக பின் எடுத்துரைத்தாலும் பின் மனிதனுக்கு அறிந்தும் புத்திகள் இல்லையே!!! குருநாதா!!
அறிந்தும் குருவே பின் போற்றி!!! இறைவா போற்றி!!! இறைவா போற்றி!! நின் தாள் பணிந்தேனே!!!
நின் தாள் பணிந்து விட்டால்.. அழைத்து அழைத்து அனைத்தும் செய்வீரே!!!
கலியுகத்தில் மனிதனுக்கு அப்படி செய்தாலும் புத்திகள் இல்லையே!!! புத்திகள் இல்லையே!!!
அப்படி புத்திகள் இல்லை என்றாலும் அனைத்தும் பின் நிச்சயம் பின்.. அதாவது புத்திகள் இல்லாத மனிதனுக்கும்... கீழிறங்கி அவந்தனை அதாவது புத்தி உள்ளவனாக்கி நிச்சயம் பின் தன் பால் அழைத்து வரும் பின் பாசத் தலைவா!!!
அறிந்தும் அனைத்தும் நீயே!!!
ஆனாலும் இதில் கூட புத்திகள் கொடுத்து மீண்டும் புத்தியிலே அதாவது தவறான புத்தியிலே சென்றாலும் பின் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து கடைசியாக தண்டிப்பவரே!!!
அறிந்தும் இதனால் நின் கருணை எங்கு?? காண முடிகின்றது??
பல காடுகளிலும் மலைகள் மீதும் அறிந்தும் பின் நிச்சயம் தன்னில் கூட பல விலங்குகளும் கூட பல இடங்களிலும் பாசங்கள் காட்டி காட்டி அறிந்தும் கூட பின் அதாவது அனைத்து விலங்கினங்களையும் கூட உன் பால் அணைத்து உன் பின்னே. பின். வரும்படி செய்தீரே!!! அனைத்தும் கூட..
அதனை அறிந்தும் கூட மக்கள் பின் உனை வணங்கியும் பின் அதை தன் நிச்சயம் பின்.. அதாவது உந்தன் பொருளை பின் அனைத்தும் அதாவது பின் அறிந்தும் அதை உட்கொண்டு உட்கொண்டு மனிதன்.. கர்மத்தில் அதாவது பாவத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான் சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்.
அதனால் என்ன பயன்?? என்ன பயன்?? அறிந்தும் என்ன பயன்???
பயனில்லாமல் திரிந்து கொண்டிருக்கின்றானே மனிதன்... அறிந்தும் உண்மைதனை கூட.
ஏன்?? அறிந்தும் இதை தன் பின் கர்மத்தில் பின் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது.. பாவம் அதிகமாக இருந்தாலும் நிச்சயம்... அவனைத் தேடி வந்து... ஆசிகள் பின் கொடுப்பவரே!!!
பின் நிச்சயம் இறைவா!! அறிந்தும் உந்தனுக்கு இணை எவர்??? இங்கு எவர் இங்கு??
பின் அவை பாவத்தை போக்கியும். இன்னும். அறிந்தும் கூட பின் அதாவது சிறுக சிறுக பாவத்தை போக்கி போக்கி நிச்சயம் அனைத்தும் தந்தருளும் இறைவா!!! போற்றி!! போற்றி!!
கருணை வடிவானவரே போற்றி!! போற்றி!!
பாசமிகு தலைவரே!! போற்றி!! போற்றி!!
அனைத்திலும் இருப்பவரே போற்றி போற்றி!!
அறிந்தும் என் உள்ளத்தை புரிந்தும் பின் அனைத்தும் தருபவரே போற்றி போற்றி!!!
மனிதனை மனிதனாக ஆக்குபவரே போற்றி போற்றி!!
பாசத் தலைவரே! கருணைத் தலைவரே! போற்றி போற்றி!!!
பின் இவை அனைத்தும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் கூட பின் வாழ வேண்டும் என்று நினைப்பவரே போற்றி போற்றி!!!
அறிந்தும் கருணை!!
கருணைக்கு பொருள் அகத்தியன்!!
பாசமிகு.. பாசத்திற்கு பெருமை அன்பிற்கு பெருமை அனைத்திற்கும் பெருமை அகத்தியர்.
இப்படி எல்லாம் அறிந்தும் மனிதனை திருத்த நிச்சயம் பிரம்மாவிடம் சென்று முறையிட்டு... பின் பிரம்மா அறிந்தும்!!...
அதாவது மனிதனிடத்தில் கலியுகத்தில் பல குறைகளோடு பின் படைக்கப்பட்டு.. படைக்கப்பட்டு பின் நீ அனுப்பி அறிந்தும் அதாவது... தெரியாமலே பின் மனிதன்... நிச்சயம் யான் அதை மாற்றுகின்றேன்.. என்று பிரம்மாவிடத்தில் சண்டையிட்டு பின் மனிதனை பின் அதாவது... சிறிது காலம் அன்பாக உரைப்போம்..
அப்படி இல்லையென்றால் அடிப்போம்!!!... என்று சபதத்தை..ஏற்றி வந்தாயே!!!!
பின் குருநாதா குருவே போற்றி போற்றி!!!
ஆனாலும் பிரம்மனும்
அகத்தியனே!!! உன்னால் மாற்ற முடியாது!!! யான் படைத்தேன் அல்லவா!! அப்படித்தான் என்று பின் கூறிட்டாலும்!!!
நிச்சயம் பின் பிரம்மனே.... நிச்சயம் மாற்றுகின்றேன்... ஆனாலும் பின் அறிந்தும்... நிச்சயம் பின் கர்மா அதாவது பாவ வினைகள் பின் புண்ணிய வினைகள் எப்படி ஆயினும்... அதை சமநிலைப்படுத்தி... அறிந்தும் மனிதனை பின்... சீர்படுத்தி அதை தன்... சமநிலைப்படுத்துவேன் என்று!! பின் பிரம்மாவிடத்திலும் முறையிட்டு முறையிட்டு!!
அறிந்தும் ஏன் இந்த மனிதனின் புரியாத நிலை?? அறியாத நிலை???
வந்ததும் இன்னும் வரப்போவதும்.. ஒன்றில்லாமல் நிச்சயம்... அறிந்திருக்க முடியவில்லையே மனிதன் !!
ஆனாலும் பின் என் குருவை நோக்கி மனிதன் படையெடுத்து படையெடுத்து சில நாட்கள்... அறிந்தும் குருநாதன்! என்னிடத்திலேயே பேசி விடுகின்றான் என்றெல்லாம்... அறிந்தும் நிச்சயம் பின் பொய்களாக்கி, பொய்களாக்கி!!
ஏன் இந்த அடிமைத்தனம் என்று தெரியவில்லையே!!! மனிதா அறிந்தும்!! அழகாகவே உன் நீ வழியில்... சென்றிருக்க சென்றிருக்க... அழகாகவே என் குரு.. அறிந்தும் நிச்சயம்.. உன் பக்கத்திலே வந்து அமர்வான்!
அனைத்தும் தெளிவுபடுத்துவான்!
தெளிவுபடுத்தி நிச்சயம்... உந்தனுக்கே பிறவி வேண்டாம் என்று!!! நிச்சயம் அறிந்தும் மனதில் எடுத்துரைக்கும் பொழுது!!!
ஏன் இந்த மாற்றங்கள் அறிந்தும் இதனை நிச்சயம் பின் கடைப்பிடிக்க ஆனாலும்... கடை பிடிக்காத சூழ்நிலைகள் வந்தாலும்... ஏன் எதற்கு இப்படியே... இருந்திடலாமா?? என்றெல்லாம்!!... அறிந்தும் பயனில்லையே!!!
மனிதா!! எதை வணங்கி பயன்???
பின் எதை பின் வணங்கி பயன் பயன்??
அதாவது ஒன்றும் இல்லையே!!! கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருக்கின்றாய்!!
கஷ்டத்தை அனுபவித்து அறிந்தும் பின் அதாவது உன் கஷ்டத்தை அதாவது அனைவரிடமும் கொடுக்கின்றாய்.
ஏன் எதற்கு இதனால் அறிந்தும் அகத்தியனுக்கு.. பிடிக்காத ஒன்று நிச்சயம்.. அறிந்தும் அகத்தியன் பெயரைச் சொல்லி... அறிந்தும் அறிந்தும்... எதனால் என்பவை எல்லாம் யான்... இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... பின் குருவைப் பற்றி எல்லாம்... அறிந்தும் புறத்தின் வழியே... அறிந்தும் எதை என்று.. குருநாதன்.. பின் ஆனாலும்.. அதற்கும் கூட சில காலம் நீட்டி வைத்து நிச்சயம் பின்.. பிறர் அறிய வண்ணம் பின் தண்டனைகள் கொடுக்க பின் தவறுவதில்லை. அறிந்தும்!!
இதனால் நிச்சயம் பின் பின் அறிந்தும்.. அனைத்து உலகத்தையும் பின் காத்தருளும் அழகாகவே மனிதனை நிச்சயம் காக்கும்!!..
ஆனாலும்... மனிதனோ!? அகத்தியன் எங்கு!? பார்க்கவா?? போகின்றான்??? என்றெல்லாம்!! நிச்சயம் அகத்தியருடைய யான் அன்பான பக்தன்.. அன்பான சீடன்.. யான் அகத்தியன் என்று பொய் சொல்லி நிச்சயம் வலம் வந்து கொண்டிருக்கின்றீர்களே!!!! உங்களுக்கு என்னதான்??? அறிந்தும்!! என்று எதை என்று புரிய!!! நிச்சயம் தண்டனைகள் என்னவென்று.. அறிந்திருக்கக் கூட பின் உங்களுக்கு முடியவில்லையே!!
இன்னும் இன்னும் பக்திக்குள் நுழைந்து நுழைந்து இதனால் அவை இவை என்றெல்லாம்.. பொய் சொல்லி பொய் சொல்லி... நிச்சயம் அதனால்தான் பின் என் குரு அழகாகவே... வழிநடத்தி நிச்சயம் அதற்காகவும் சில விஷயங்களை செப்பி செப்பி... இருந்தாலும் அதனைக் கூட... பயன்படுத்த தெரியவில்லையே!!!
இவ்வாறு பின் பயன்படுத்த தெரியாததனால்.. கிரகங்களின் நிச்சயம் பின் கூட்டுக்கள் சேர்ந்து... உனை அடிக்கும்!!
இதனால் எங்களை அறிந்தும்.. எதை என்று புரியாவிடிலும் கூட.. பின் அறிந்தும் சித்தர்களை வணங்குவோர் நிச்சயம் பின் கிரகங்களுக்கும் கூட அறிந்தும் பின்.. ஆட்கொள்ள!!! அவை மட்டும் இல்லாமல் எவையும் தேவையில்லை... அறிந்தும் பரதேசியே!!!
அதாவது உண்பான்!! உறங்குவான்!! ஓடுவான்!!.. அறிந்தும் எதை என்று அறிய.. சித்தரை நோக்கி வருபவன் பின் நிச்சயம்.. எங்கெங்கோ எதை என்று அறிய பின் ஏதோ பின் வாங்கி.. பின் வரங்கள்!! பின் சென்று நிச்சயம் அதை இதை என்று கஷ்டங்கள் பின் பட்டு பட்டு ஒரு நிலைக்கு வந்து... பின் அதனையும்.. எடுத்துரைத்து நிச்சயம் பின் தெய்வத்தைப் பற்றி இங்கு யான் பேசவில்லை!!
அறிந்தும் எதற்கு தெய்வத்தைப் பற்றி பேசுதல் வேண்டும்???
என்பவை எல்லாம் நிச்சயம்... தெய்வமாகவே பின் அழகாகவே... நிச்சயம் பாசம் மிகுந்தே... அன்பு மிக ஆகவே... அகத்தியனை பின் பணிந்து... போற்றினாலே... பின் தெய்வங்கள் ஒன்று கூடி உங்களுக்கு.. உணவளிக்கும்.
உணவளிக்கும்.
இதை மாற்றாகவே அறிந்தும்.. ஒரு பின் காட்சி பொருளாகவே ஆக்கிவிட்டார்களே பின் மடையர்கள்... அதாவது மனிதர்கள்... எப்படி? எப்படி?
பின் அறிந்தும் மனிதனை... பார்த்தேன் பூலோகத்தில்... அறிந்தும் யான் அகத்தியன் சீடன் என்று சொல்கின்றான்!!.. ஒருவன் யான் அகத்தியன் பக்தன் என்று சொல்கின்றான்!!.. பின் அறிந்தும் இன்னொருவன்.. பின் அகத்தியன் என் தந்தை என்று கூறுகின்றான்!!! இன்னொருவன் அறிந்தும் எதை எதையோ புலம்பி கொண்டிருக்கின்றான்!!
ஆனால் அகத்தியன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்... யாரை தேர்ந்தெடுக்கின்றான்?? என்று!! தெரியவில்லையே!!!
அறிந்தும் புரிந்தும் கூட.
இதனால் எப்படி? ஏன்? எதற்கு? அகத்தியனை வைத்து பொருள்!!... அறிந்தும் இதை என்று யார்? யார்? எப்படி பட்ட நிலையில் அறிந்தும்!!! இன்னும் கூட!!
இங்கிருந்தே கடைக்காலத்தில் நிச்சயம் அகத்தியன் பின் அழிவதில்லை!! அழிவதில்லை!! பின் சிரஞ்சீவியாகவே!!! அறிந்தும் இங்கு அனைவரையும் கூட.. பொதிகை தன்னில் வீற்றிருந்து பார்த்துக்கொண்டே இருக்கின்றான்.
ஆனால்... மனிதனோ?? நிச்சயம் பின்.. அவனை கீழே அதாவது... இறக்கி வர வேண்டும்.. என்று நிச்சயம் அகத்தியனை கீழே யான் வரவழைத்து விடுவேன்!!; இங்கே இருக்கின்றான்... பொதிகை மலையில் வாழும் அகத்தியன் என் இல்லத்திலே இருக்கின்றான்!! நிச்சயம்.. என் அதாவது குடிலில் இருக்கின்றான்... என்றெல்லாம்!!!
எப்படி?? அறிந்தும் எதை என்று புரிய!!
எங்கெங்கு? எதை எப்பொழுது.?.. எவற்றைப் பற்றி? இருக்க வேண்டுமோ? அங்கங்கு இருந்தால்தான் நன்று!!
அதை தவிர்த்து விட்டு ஏன்?? எதற்கு? தந்தை இங்கு இருக்கின்றார் அழகாகவே!!! என்றால் நிச்சயம் அறிந்தும் பின் அனைத்தும்... அதாவது இங்கிருக்கும்.. அனைத்து விலங்குகளும் உயிரினங்களும் கூட நிச்சயம் பின் இறைவனுக்கு சொந்தம்!! அகத்தியருக்கு சொந்தம்!!!
இதனால் நிச்சயம் இதையெல்லாம் யார் ஒருவன்.. நிச்சயம் தன்னில் அறிந்தும் பின் அதாவது கொல்லாமல்.. அறிந்தும் அதாவது உண்ணாமல்.. நிச்சயம் வருகின்றார்களோ ? அவரை அதாவது அவர்களை வழி நடத்துவார் பின் தந்தையானவர்!!
அறிந்தும் இதனால் தான் பின் தெய்வங்களும் கூட மலை மேல் நிற்கின்றது.. பின் யான் அறிந்து இதை யான் செப்பினேன்.
ஆனால் பின் கந்தன் மேலே இருக்கின்றான்.. நிச்சயம் அறிந்தும் ஈசன் மலை மீது இருக்கின்றான்..
ஏன் இருக்கின்றான்??? என்று தெரியவில்லையே மனிதனுக்கு!!!
பின் இதை தெரியாமல் சென்றாலும் இறைவன் ஆசிகள் கிட்டி விடுமா???
மனித உடம்பை பாதுகாக்க முடியுமா???
பின் அதாவது உயிரை நிச்சயம் அப்படியே பின் அழைத்து... அழைத்து அழைத்து நிச்சயம் அறிந்தும்... இதன் தத்துவத்தையும் கூட பின் எடுத்துரைத்தாலும் பின் பிரயோஜனங்கள் இல்லை!! பிரயோஜனங்கள் இல்லை அறிந்தும் கூட!!
ஞான உபதேசங்கள் நிச்சயம் பின் பல புத்தகங்கள் அழகாகவே !!
இவ் ஞான உபதேசங்கள் கூட பின் நிச்சயம் மாற்றி அமைத்து... மனிதர்கள் ஏன்? எதனால்? என்பவையெல்லாம் அறிந்தும் கூட!!
ஆனாலும் இன்றும் இன்றும் கூட நிச்சயம் அழகாகவே பின் அறிந்தும் பின் சொகுசாகவே மனிதன் உட்கார்ந்து அங்கு இங்கு இறைவன் இருக்கின்றான்!!! அறிந்தும் கூட பின் அதாவது (திருநீறு) பூசிக்கொண்டு முகத்தில் பல வழிகளிலும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் தொலைநோக்குப் பார்வையில் அறிந்தும் அவை!! இவை!!! என்று நிச்சயம் பன்மடங்கு எடுத்துரைக்க!! எடுத்துரைக்க!!
ஆனால் உயிரை காப்பாற்றுவது எப்படி???
கண்டத்தை தடுத்து நிறுத்துவது எப்படி???
அழிவுகளில் இருந்து பின் காப்பது எப்படி??
என்று பின் அறிந்தும் புரிந்து இருக்கவில்லையே!!!
ஏன் சொல்கின்றானே!!!
அவனாலே அறிந்தும் பின்... அவனுக்கு அவன் யார் ????என்று பின் அறியாத வரையில் இன்னும் பாவத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்...
அவனை முதலில் அறிய வேண்டும்!!!
உங்களையும் சேர்த்து சொல்கின்றேன்... நீங்கள் யார்???
அறிந்தும் பின் உண்மை அறிந்தும் என்றெல்லாம்!!!
நிச்சயம் ஒருவரை ஒருவர்!!!.. ஏன் பிறந்துள்ளீர்கள்?? என்று அறிந்தால் மட்டுமே!!!...... பிறவிக் கடலை நீந்தலாம்!!
அப்படி இல்லையென்றால் நீந்தவும் முடியாது.
இதனால் தான் என் தந்தை அழகாகவே
இறைவனாகவே வந்து நிச்சயம் பின் உங்களுக்கெல்லாம்..
நீ!!! இதற்காகத்தான் வந்தாய்!!!
இதைச் செய்!! என்பதையெல்லாம் பின் சொல்லிக் கொண்டு!! சொல்லிக்கொண்டு!!
(குருநாதர் தனது வாக்குகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை வாக்கில் கூறுவது)
அதனுள்ளே மனிதன் இன்னும் பின் சுயநலத்திற்காக பல பல கேள்விகளை கேட்டு கேட்டு... நிச்சயம் அறிந்தும் பின்.. இதை பின் அதாவது என் தந்தை கொடுத்திடுவானா??!!!
இறைவன் கொடுத்திடுவானா?? என்ன???
நிச்சயம் முடியாது!! அறிந்தும்!!!
எதை என்று புரிய!!
அதாவது உங்களை நீங்கள் அறிந்தால் தான் பின்... வெற்றி கொள்ள முடியும் வெற்றி கொள்ள முடியும்... என்றெல்லாம் பின் சொல்லிக்கொண்டே சொல்லிக்கொண்டே!!! ஏனைய சித்தர்களும் கூட அறிந்தும்!!!
இதை என்று புரிய நிச்சயம் அழகாகவே பொதிகை முனி நிச்சயம் இங்கு.. அதாவது பொதிகை முனி அறிந்தும் இதை அழகாகவே.. ஜீவராசிகளையும் வழிநடத்த !! வழி நடத்த!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்... அவனுக்கு சொந்தமானவையே இவ் விலங்குகள் தான்.
அதாவது பாசமிகு இவ் விலங்குகள் தான்.
இதனால்... அதனால் அறிந்தும் சித்தர்களுக்கு அனைவருக்குமே பாசமிகு பின் பொருளாக விளங்குவது.. அனைத்து உயிரினங்களுமே.!!!
அதை தன் நிச்சயம் அதாவது ஒரு உயிரை நிச்சயமாய்.. சிறிதுபடித்தியும் பின் ஒரு உயிரை பெரிது படுத்தியும் நிச்சயம் இல்லை.. சித்தர்களுக்கு.
(அனைத்து ஜீவராசிகளுக்கும் சித்தர்கள் சமமான அளவில் அன்பு)
இதனால் அனைத்தும் ஒன்றே என்று!!
ஆனாலும் ஒன்று!!!!
நீங்கள் பின் கொன்று உட்கொள்வது...அது சித்தனுக்கு எக்காலமும் பிடிக்காது...
பின் சித்தனை வணங்கினாலும்... இன்னும் பாவம் சேர்ந்து கொண்டே இருக்கும்..
ஒரு நாள் அடிக்கும் அப்பொழுது.. சித்தனை வணங்கினேனே என்று நீங்கள்.. சொல்லக்கூடாது புலம்பக் கூடாது.
நான் பார்த்து விட்டேன் புலம்புவதை.. அறிந்தும் பல பேர்களை அறிந்தும்!!
இதனால் நீங்கள் செய்த குற்றம் உங்களை நிச்சயம் பின் பாவக் கணக்கில் ஏற்றி பின் அதை சுமந்து அப்பொழுது சுமந்து!!!!!...
அதனால்.. பின். என் குரு இறைவன் !!!நிச்சயம் அவ் பாவத்தை அதாவது நீங்கள் சுமந்து செல்வதை சிறிது பின் அதாவது எடுத்து.. எடுத்து வருவான் அருகிலே இருந்து!!
பின் அப்பொழுதும் கூட நீங்கள் திருந்தவில்லை என்றால்... நிச்சயம் பின் அறிந்தும் அனைத்தும் நீங்களே என்று... !!!
(திருந்தாவிடில் விளைவுகளுக்கு காரணம் நாம்)
இதனால்தான் சித்தர்கள் இன்னும் வாக்குகளாக பின் பரப்பி மனிதனை திருத்த பார்த்து.......
நிச்சயம் திருந்தாவிடில் அடி கொடுத்து நிச்சயம்.. அறிந்தும் கூட.
தந்தையானவன் நிச்சயம் தன் மகனாயினும் தன் மகளாயினும்... நிச்சயம் நல்வழியில் சென்றால் நிச்சயம் சந்தோசம்.
அப்படி இல்லையென்றால் அடித்து தான் திருத்த வேண்டும் நிச்சயம்.
அதேபோலத்தான் சித்தர்கள்.. தடியை எடுத்தால் தான் நிச்சயம் திருந்துவார்கள்.
ஆசிகள்!! ஆசிகள்!!!
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDeleteஅகத்தியர் உரைத்த ஆண்டும் 16ம் பின் 18ம் என்பதின் விளக்கம் அறிந்தவர்கள் தெரியபடுத்தவும். நன்றி
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA
ReplyDelete