வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
மதுரையில் 22/6/25 மற்றும் 23/6/25 இவ் இரண்டு தினங்களில் குருநாதர் மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத குருநாதர் அகத்திய பெருமான்.. பொதுமக்களுக்கு வாக்குகள் உரைத்தார்.
இது அவசர உத்தரவாக மக்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தார்.
சத் சங்க கூட்டத்தில் வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட கேள்விகள் கேட்பதற்கு முன்பாக அனைவருடைய மனதையும் ஆராய்ந்து இந்த உலகத்திற்கு எதிர்வரும் ஆபத்துக்கள் என்னென்ன அதை எல்லாம் எப்படி தடுத்து நிறுத்துவது??? அதற்கு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்??? என்பதையெல்லாம் குருநாதர் கூறினார்.
ஏற்கனவே பெங்களூரு சத்சங்கத்தில் என் பக்தர்கள் அனைவரும் நவகிரக தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருதல் வேண்டும் இது மற்றவர்களுக்காக உலக அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு செய்ய வேண்டும் என்று உத்தரவு தந்திருந்தார்.
ஆனால் சிலர் செய்தனர் பலர் அந்த வழிபாடு செய்யவில்லை... அதன் பலனாக திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் அழிவுகள் ஏற்பட்டன. உயிரிழப்புக்கள் மற்றும் வெள்ளம் பொங்கி வழிந்து அழிவுகள் ஏற்பட்டது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் அன்று தீபமும் சரியாக தெரியவில்லை.
ஈசனும் குருநாதரிடம்
அகத்தியனே மக்கள் நிச்சயம் திருந்திய பாடு இல்லை அதனால் நிச்சயம் அடிக்கின்றேன் பின் கிரகங்களிடம் சொல்லி விட்டேன் பின் அறிந்தும் பயம் ஏற்படட்டும் என்று!!!
ஆனாலும் இதை தன் உணராத மக்களுக்கு அறிந்தும் கூட
ஈசனும் பார்ப்போம் அறிந்தும் நீ சொல்வதை அதாவது அகத்தியர் சொல்வதை எத்தனை பேர்? கேட்கின்றார்கள் என்று!!
அகத்தியர் பெருமானும் எதையும் எதிர்பார்க்காமல் செய்த என்று ஆனால் மனிதர்கள் செய்யவில்லை..
இதனால் என்ன நடந்து என்பதை அனைவரும் அறிவார்கள்.
நவகிரக தீபம் ஏற்றாமல் நடந்த நிகழ்வுகள் ஈசன் அடைந்த கோபம் சித்தர்கள் நடந்த கோபம் அனைவரும் தனது ஒவ்வொரு வாக்கிலும் உரைத்துக் கொண்டே வருகின்றார்கள்!!
திருவண்ணாமலை தீபம் அன்று குருநாதருக்கும் ஈசனுக்கும் நடந்த விவாதங்கள்... ஜனவரி 2025 அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1765 மற்றும் 1766 ல் வெளிவந்துள்ளது அதை மீண்டும் படித்தால் அந்த வாக்கில் வீரியம் புரியும்!!
மற்றவர்களுக்காக நீங்கள் செய்ய வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை இடும் பொழுது அதை சரிவர செய்யாமல் மக்கள் ஏனோதானோ என இருந்து விட்டதால்... சித்தர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிட்டு அதிக கால தாமதங்கள் ஏற்படாமல் நடந்து கொண்டிருந்த சத்சங்கங்களும் காலதாமதம் ஆயின .
இது எல்லாம் சித்தர்களின் கையில் உள்ளது!!
தனிப்பட்ட வாக்குகளுக்காக நிறைய பேர் முயற்சி செய்தாலும் குருநாதர் கூறிய ஒரே வார்த்தை என்னவென்றால் முதலில் யான் சொல்லியதை செய்யவில்லை அதை செய்து வரச் சொல்.. என்பதையே வலியுறுத்தி வாக்கில்.. உரைத்திருந்தார்.
என் பேச்சைக் கேட்டு முறையாக தீபம் ஏற்றி வழிபட்டவர்களுக்கு எங்கள் ஆசிர்வாதங்கள் அவர்களுக்கு புண்ணியங்கள் பெருகும் அவர்கள் சந்ததிகள் நீடூழி வாழும் என வாக்குகள் உரைத்திருந்தார்.
தற்பொழுது இந்த உலகில் நடந்து வரும் அசாதாரண சூழலில் வரும் வாக்குகளில் எல்லாம் நீரால் அழிவு!!
கடும் மழை பொழிவு ஏற்படும்!! கடல் பொங்கி உள்ளே வரும்..
என குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் தெரிவித்துக் கொண்டே வருகின்றார்!!
அதற்கு சான்றாக சமீபத்தில் கூட கேரளாவில் கடல் பொங்கி ஊருக்குள் புகுந்தது.
அதற்கு தீர்வாக பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் குருநாதர் கூறிக் கொண்டே வருகின்றார்.
மதுரையில் சத்சங்கத்தில் குருநாதர்!!
தன்னுடைய பிரச்சனைகளுக்காக வந்திருந்த அனைவரிடமும் உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் பிரச்சனைகளை இல்லை !!
சிறு சிறு பிரச்சனைகளே இவை!!
ஆனால் உலகத்தில் பேரழிவு வர காத்திருக்கின்றது!! இதிலிருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும்!
அதனால் முதலில் யான் என்ன சொல்லி இருக்கின்றேனோ!!!.. அதை ஏற்று நடங்கள்..
உங்கள் பிரச்சனைகளை யான் பார்த்துக் கொள்கின்றேன்!!
மற்றவர்களுக்காக நீங்கள் உழையுங்கள் உங்களுக்காக யான் போராடுகின்றேன்!! என்று வாக்குகளில் உரைத்திருக்கின்றார்.
முழு வாக்குகள் பாகம் பாகமாக வெளிவரும்!
சத்தங்கம் நிறைவு பகுதியில் அடியவர்கள் அனைவரும் தன்னுடைய சொந்த பிரச்சினைகளுக்காக வாக்குகளை கேட்கத் தொடங்கினார் அப்பொழுது குருநாதர்
அப்பனே நிச்சயம்தன்னில் கூட அனைவருமே சொல்லி விட்டேன் அப்பனே. !!
நிச்சயம் மீண்டும் ஒரு சந்தர்பத்தை கொடுத்தேன் அப்பனே.
அப்பனே உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் யான் கொடுக்கின்றேன் அப்பனே.
பணம் வேண்டுமா? திருமணம் வேண்டுமா? இன்னும் என்னென்ன வேண்டும்?? என்று.
அப்பனே யான் சொல்லிய வேலையை சரியாகச் செய்க அப்பனே.
அப்பனே ஒன்றை மட்டும் கடைசியில் சொல்கின்றேன். அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
அப்பனே வேலை கொடுத்திருக்கின்றேன் உங்களுக்கு.
அவ் வேலையை நீங்கள் சரியாகச் செய்தால், உங்கள் வேலையை யானே செய்வேனப்பா.
யான் மற்றவர்களுக்காக வணங்குங்கள் என்று சொன்னேன் அப்பனே.
ஆனால் நீங்கள் எதை என்று புரிந்து கொள்ள (இயலவில்லை).
ஆனாலும் நிச்சயம் அப்பனே அதாவது கூலி ( ஊதியம் ) கொடுக்கின்றேன் உங்களுக்கு.
அதனால் வேலை கண்டிப்பாக, நிச்சயமாக செய்தால் உங்களுக்கு கூலி கொடுப்பேன். சொல்லிவிட்டேன்.
இதுதான் இப்பொழுது நிலைமைக்கு செப்ப முடியுமப்பா.
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். யான் சொல்லியதை நிச்சயம் பின் இயக்கிட்டால் ( செயல்படுத்தினால் ) சிறப்பாக அனைத்தும் செய்வேன். அனைத்தும் செய்வேன். மீண்டும் மீண்டும் இதையே தெரிவிப்பேன்.
அனைவருக்கும் வாக்குகள் உண்டு.
அப்பனே என்னுடைய ஆசிர்வாதங்கள் அப்பனே. யான் சொல்லியதை ஏற்று நட.
தாயே! அப்பனே! நிச்சயம் அப்பனே,
அனைவரும் ஈசனை வேண்டிக்கொண்டு செல்லுங்கள்.
அகத்தியன் சொல்லியிருக்கின்றான் இவையெல்லாம். நிச்சயம் முழு முயற்சியோடு யாங்கள் செய்கின்றோம்.
அனைவரும் ஈசனிடத்தில் சென்று நிச்சயம் யான் அதாவது அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் அறிந்தும் கூட யான் அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் நீயே அனைத்தும் கொடு என்று அனைவருமே சொல்லுங்கள்.
அப்பப்பா !!!!! சிறு குழந்தைகளுக்குப் போல் சொல்கின்றேன் அப்பனே.
மற்றவர்களுக்காக உழையுங்கள் , உழையுங்கள் என்று. யாராவது சொன்னீர்களா??? இதுவரை????
அப்பனே அப்படி? எப்படியப்பா??? உங்களுக்கு கஷ்டங்கள் வராமல் போகும்???
யானும் ஒரு விடயத்தை தெரிவித்தேன் அப்பனே. ஆனாலும் அனைவரும் பின் அகத்தியனே நிச்சயம் செய்கின்றோம்.
இதனால் எங்களுக்கு அனைத்தும் தந்தருள வேண்டும் என்று நிச்சயம் யாராவது கேட்டீர்களா??? என்ன?
நிச்சயம் அங்கே யானும் லோபாமுத்திரையோடு அங்கே இருக்கின்றோம். அப்பனே அங்கு கேளுங்கள் நிச்சயம் என்ன வேண்டும் என்று (அங்கு) போய்.
என குருநாதர் கடைசியாக தனிப்பட்ட கேள்விகளை அதாவது திருமணமாகவில்லை !
வேலை கிடைக்கவில்லை!
பிள்ளைபேறு இல்லை!!
சொத்து பிரச்சனை!!
நிலப் பிரச்சனை!!
என அவரவர் சொந்த கேள்விகளை கேட்க ஆரம்பித்ததால் குருநாதர் நான் சொல்வதை ஏற்று நடப்பேன் என்று உங்கள் வாயிலிருந்து யாருக்கும் வரவில்லை முதலில் நான் சொல்வதை கேளுங்கள் அனைவரும் ஈசனிடம் செல்லுங்கள் சென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் சத்சங்கம் நடந்த இடத்தில் இருந்து மாரியம்மன் முன் சன்னதியில் இருக்கும் குருநாதர் அகத்திய பெருமான் லோப முத்திரை தாயார் சன்னதிக்கு சென்று கேள்வி கேட்க நினைத்தவர்கள் அனைவரையும் அவர்கள் மனதில் உள்ள குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டு செல்லுங்கள் என்று குருநாதர் கடைசியாக அதாவது சத்சங்க நிறைவாக வாக்குகளில் தெரிவித்தார்.
குருநாதர் ஏற்கனவே என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன் வாக்கில் தெரிவித்திருக்கின்றோம் அதன்படி நவகிரக தீபம் சிவபுராணம் தேவாரம் திருவாசகம் விநாயகப் பெருமானின் விநாயகர் அகவல் என அனைவரும் ஒன்று கூடி பாடி துதித்து மற்றவருக்காக இந்த உலகம் நலம் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டால் குருநாதர் நமக்காக நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.
ஏற்கனவே குருநாதர் சொன்னதை சரிவர கேட்காமல் செய்யாமல் இருந்ததால்தான் பல அழிவுகளை சந்தித்துக் கொண்டே இருக்கின்றது இவ்வுலகம்.
தெய்வ வாக்கு இது!!
தெய்வத்தின் வாக்கினை உணர்ந்து முறையாக செய்து வருதல் வேண்டும்!!
சாதாரண மனித ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் ஓடி ஓடி செல்கின்றார்கள் அதுவும் பணம் கொடுத்து!!
இதையும் சித்தர்கள் கண்டு திட்டி தீர்க்கிறார்கள் மனிதர்களை!!
இந்த உலகம் நன்மை பெற பஞ்சபூதங்கள் காற்று நீர் நெருப்பு ஆகாயம் நிலம் என நமக்கு இலவசமாக கொடுத்த இறைவன் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு கட்டணம் இல்லாமல் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் பக்தர்கள் நன்றாக இருக்க வேண்டும் மனிதர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை கோயில்கள்? எத்தனை எத்தனை யாத்திரைகள்? எத்தனை எத்தனை வாக்குகள்? கிட்டத்தட்ட 900 வாக்குகளுக்கு மேல் குருநாதர் சுவடி ஓதும் தும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை தல யாத்திரைகளுக்காக அனுப்பி வைத்து உண்ணாமலும் உறங்காமலும் தொடர் பயணங்களை மேற்கொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்று ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நலம் பெற வாக்குகள் உரைத்து மனிதகுலம் மேம்பட சித்தர்கள் பாடுபடுவதை அகத்தியர் மைந்தன் உழைப்பதை உணர்ந்து கொண்டு அனைவரும் இதை தொடர்ந்து நவகிரக தீபம் ஏற்றி சிவபுராணம் பாடி வழிபாடு செய்து வருதல் வேண்டும்...
ஏற்கனவே ஒவ்வொரு பிரச்சனைகளாக இந்த உலகத்திற்கு வரும் பொழுது அதற்கான தீர்வு முன்கூட்டியே குருநாதர் தெரிவித்து விடுவார்.
புற ஊதா கதிர்கள் அகச்சிவப்பு கதிர்கள் மனிதர்களை தாக்கும் பொழுது கேன்சர் உருவாகும் அசைவ உணவு குறிப்பாக பசுவினை வெட்டிக்கொண்டு தின்பதால் பசுவின் கழுத்தில் இருந்து வெளியாகும் நுண்ணுயிர்கள் கேன்சர் நோய்களை ஏற்படுத்தும் இதை கட்டுப்படுத்துவதற்கு உயிர் பலியிடுதல் கூடாது!!!
இந்த சூரியனிடமிருந்து வெளிப்படும் தீய கதிர்வீச்சுகளை தடுப்பதற்கு மரம் வையுங்கள்
அதாவது மரம் நடுங்கள் என்று குருநாதர் கூறினார்.
இன்று நாம் காடுகளிலும் சாலை ஓரங்களிலும் காணும் மரங்கள் நாம் வைத்த மரங்கள் அல்ல!!!
நமது முன்னோர்களும் பிற ஜீவராசிகளும் இறைவன் கருணையால் வைக்கப்பட்ட மரங்கள்.
நம் கையால் எந்த மரமும் வைக்கவில்லை ஆனால் குருநாதர் அனைவரும் மரம் நடுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்.
அதேபோல்
மோர் தானம் செய்யுங்கள் மோர் தானம் செய்தால் கடும் வெயில் காலங்களில் தீய கதிர்வீச்சுகளால் உடலில் கேன்சர் செல்கள் வளரும் அதை தடுப்பதற்கு மோர் தானம் செய்யும் பொழுது அவை செல்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும்
என்றெல்லாம் !!!!
ஒரு பக்கம் மனிதர்கள் ஆத்மா ஞானம் பெறுவதற்கும் தன்னை தானே வெல்வதற்கும் வாக்குகள் தருவது ஒருபுறம்.
மறுபுறம் மனிதர்களின் வாழ்வியல் முறை லோக சேமம் குறித்தான வாக்குகள் என குருநாதர் அனைத்து விதத்திலும் அனைத்து நன்மைகளையும் அளிக்கக் கூடிய வாக்குகளை இலவசமாக நமக்கு கூறிக்கொண்டு வருகின்றார்.
இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைத்தால் மதிப்பில்லை போல!!!
மனிதகுலம் நன்மை பெற குருநாதர் கூறிய அனைத்தையும் செய்து வந்தால் நலம் பெறலாம் வாக்குகள் கிடைக்கும் குருநாதர் நமக்கு நம்முடைய ஆத்மாவிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து தருவார்.
குருநாதரை கூறிவிட்டார் நீங்கள் வேலையை செய்யுங்கள் அதற்கான கூலியை தருகின்றேன் என்று
இந்த அளவுக்கு சித்தர்களை பேச வைத்து விட்டோம்!! இதுவே வருத்தத்திற்குரியது!!
இதனால் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் நவகிரக தீபம் அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் செய்து இந்த உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete