​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 7 August 2022

சித்தன் அருள் - 1169 - அன்புடன் அகத்தியர் - நமச்சிவாயன் வாக்கு!





25/7/2022 அன்று உலகை ஆளும் நமச்சிவாயன் உரைத்த பொதுவாக்கு - ஈசனின் சினமும் பார்வதி தேவி முருகன் பிள்ளையார் அழுகுணி சித்தர் காகபுஜண்டர் அகத்தியரின் சமாதானமும். வாக்குரைத்த ஸ்தலம் : அமர்நாத் பனிலிங்கம். 

உலகை ஆளும் நமச்சிவாயன் வாக்குகளாக மனிதர்களுக்கு ஈகின்றேன்!!

வரும் காலங்களில் நிச்சயமாய் மனிதனால் முன்னேற இயலாது இயலாது என்பேன் போராட்டங்கள் பட்டு தான் எழ வேண்டும் எழ வேண்டும் பின் ஏதென்று தெரியாமலே வாழுதல்!!

வாழுதல் கூடி கூடி எப்படி வாழ்ந்து முடிக்கலாம் என்பதை கூட தெரியாமல் வாழ்வார்கள்!!! வாழ்ந்து!! வாழ்ந்து ஆனால் புத்தி கெட்ட மனிதனுக்கு இன்னும் அறிவுகள் வரவில்லையே?????

கஷ்டங்கள் கொடுத்து கொடுத்து இன்னும் பின் அறிவுகள் வரவில்லையே!!!

ஏன்?? மனிதா!!!! மனிதா ஏன் இன்னும் பிறவிகள் வேண்டுமா??? உந்தனுக்கு?

வேண்டும் என்பதைப் போல் இன்னும் நிச்சயம் இல்லை உந்தனுக்கு!!!!

வரும் காலங்களில் பல சித்தர்கள் அழிவு காலம், அழிவு காலம் என்றே சொல்லிக்கொண்டு வருகின்றார்கள். ஆனாலும் இதனையும் கூட மனிதா நீ ஏற்பதில்லையே!!! ஏன்???

நிச்சயம் அப்பொழுதுதான் அழிவுகள் வந்தால் தான் தெரியுமா?????

இறைவா!!! என்று கூட ஆனால் நிச்சயம் திருந்தி கொள்ளுங்கள் திருந்தி கொள்ளுங்கள்!!!

பல எச்சரிக்கைகளையும் சித்தர்கள் நிச்சயமாய் நிச்சயமாய் செப்பி விட்டார்கள்!!!

எதிலிருந்து எழுந்து நின்று வாழுங்கள்!!!! இங்கு எழுந்து நின்று வாழுங்கள் என்பதற்கு பக்தியை பின்பற்றி வாழுங்கள் என்பதுதான் என்னுடைய!! என்னுடைய!! திண்ணமான வாக்கு!!!

இவை மட்டும் இன்னும் ஏராளமான அழிவுகளும் காத்துக் கொண்டே இருக்கின்றது நிச்சயம் ஆனாலும் பொய்கள் போட்டிகள் பொறாமைகள் இவைதான் மனிதனிடத்தில் அவை மட்டும் இல்லாமல் கொள்ளையடித்தல் இன்னும் ஏராளம் பொய் சொல்லுதல் பக்தி என்று ஏமாற்றுதல் பிழைப்பு நடத்த தெரிந்த மனிதா உந்தனக்கு எப்பேர்பட்ட எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வருவது என்பதை கூட நீ உணரவில்லையே!!!!

அதை உணர்ந்து விட்டால் நீ நிச்சயம் மனிதன்!!!

வேண்டாம்!!!

எதை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றாய்???? வாழ்வோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றாயா????

நிச்சயம் ஆகாது!!!!

எதனைப் பின்பற்றுவது என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். நிச்சயம் நிச்சயம் இவை போன்றே செயல்பட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் யானே அழிப்பேன்.

சிறிது சிறிதாக அழித்துக் கொண்டே தான் வருகின்றேன். ஆனாலும் நிச்சயமாய் பின் மனிதனே திருந்திக்கொள் திருந்திக்கொள் !!!!

திருந்திக்கொள்ளவில்லையென்றால் அடியோடு அழித்து விடுவேன்!!!!
அழித்துவிடுவேன்!!!!

பார்வதி தேவியின்  வாக்கு!!!! 

ஈசா!!!!! நில்லுங்கள்!!!! நில்லுங்கள்!!!

எதனையுமென்று அறிய உலகத்தை ஆளும் நீயே இப்படி எல்லாம் உரைக்கலாகாது!!!!!
உரைக்கலாகாது!!!!

ஏன்? இந்த மாற்றங்கள்!!??

எவை? எதையென்று அறியாதபடி அறியாதபடி நீ உலகை காக்கின்ற பின் அனைத்தும் தெரிந்த பின் நீயே!!! இது மாதிரி சொன்னால் எப்படி பின் மனிதர்கள் ஏற்றுவார்கள்?????


ஈசனாரின் பதில்

தேவியே! கேள்!!!!! 

மனிதரிடம் ஒழுக்கங்கள் இல்லை தரம் கெட்டவனாக செல்கின்றான் அவை மட்டும் இல்லாமல் எதை எதையோ எதை எதையோ நினைத்து நினைத்து பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அவை மட்டுமில்லாமல் என்னையே நமச்சிவாயா நமச்சிவாயா என்று அழைத்திட்டு ஏதேதோ செய்கின்றான். இன்னும் எதனை என்று ஆனாலும் அவந்தனுக்கும் யான் கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே தான் வருகின்றேன் என்பதைக் கூட ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன்... ஆனால் நிச்சயம் பலமான நோய்கள் யான் உருவாக்குவேன் சொல்லிவிட்டேன். 

மனிதர்களே!!! என்னை வணங்கியும் ஆனால் எதனைப் பின்பற்றுவது என்பது தெரியவில்லையே!!!!

ஏன் பல சித்தர்கள் இன்னும் நூல்களை எழுதி உள்ளார்களே அதைக் கூட படிக்காமல் எப்படி வாழ்வது என்பதை கூட வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் தேவியே!!!!

இப்படி இருக்க !!எப்படி?? யான் மனிதனை காப்பாற்றுவது??? காப்பாற்றுவது நீயே கூறு!!!

பார்வதிதேவியின் வேண்டுகோள் வாக்கு

ஈசனாரே!!!!! இதையென்று அறியாமல் நிச்சயமாய் உலகத்திற்கே படியளப்பவன் நீ!!!! அதனால் நிச்சயம் மனிதர்களை உன்னால் நிச்சயம் திருத்த முடியும்.

ஈசனாரின் பதில் வாக்கு 

தேவியே கேள்!!!! 

நிச்சயம் மனிதனை திருத்த முடியாது!!! எல்லைக்கு தாண்டி சென்றுவிட்டான்.

ஏனென்றால் யானும் சித்தர்களும் இதையன்றி அறிய போகட்டும் போகட்டும் என்றெல்லாம் விட்டுவிட்டேன்.

ஆனாலும் மனிதனின் நிலைமைகள் பார்த்தால் பேராசைகள். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் தன் தொழில்கள் நன்றாக சிறக்க வேண்டும்.

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் எதை என்று ஆனால் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை கூட எண்ணுவதில்லையே!!!!

ஏதேதோ மாய வித்தைகளை காட்டி மனிதனுக்குள் மனிதன் மயக்கி மாந்திரீகத்தில் நுழைந்து அனைத்தும் செய்து தருகின்றேன் என்று எண்ணி தன் இனத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். 

நிச்சயம் அவந்தனை வரும் காலங்களில் யான் கஷ்டத்திற்கு நிச்சயம் உள்ளாக்குவேன்.

உள்ளாக்குவேன் என்பதற்கு இணங்க நிச்சயமாய் சொல்கின்றேன் அழிந்து போகும் அவன் பரம்பரை கூட!!!!

ஏனென்றால் பின் யான் படைக்கப்பட்டவன் எதனை நின்று கூறுவதால் நிச்சயம் இல்லை.

இப்பொழுது இங்கே வந்து வந்து எதையன்றி கூட மாயமாக நிற்கின்றதோ அதுபோலத்தான் யான் அங்கங்கு அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

இப்பொழுது இல்லை எப்பொழுதும் இல்லை உலகம் தோன்றும் முன்பிருந்தே!!!!

எதை நிமித்தம் காட்டி ஆனால் மனிதனின் செய்கைகள் பார்த்தால் என் மேல் முதன் முதலில் அதிக பக்திகள் அதிக அன்புகள் மனிதர்கள் செலுத்தினார்கள்.

ஆனாலும் இப்பொழுதோ இல்லை தேவியே!!! இல்லை இல்லை!!!

நிச்சயம் அனைத்தும் செய்துவிட்டு பின் பக்தனாக நடித்துக் கொண்டிருக்கின்றானே அதுதான் பெரும் கவலையம்மா!!!!

ஆனாலும் இதையன்றி அவந்தனுக்கும் யான் நிச்சயம் தண்டனைகள் கொடுப்பேன்.

ஆனால் ஒன்றை நிச்சயம் எதையென்று இப்பொழுதே சொல்லி விடுகின்றேன்..

யான் ஈசனை வணங்கினேனே!!! ஏன்? இந்த அவல நிலை?? என்று கூட நிச்சயம் கூறிவிடுவான் வரும் காலங்களில். பின் இதையென்று .

பார்வதிதேவியின் வாக்கு

ஈசனே!!! ஈசனே!!!! 
எதையென்று அறிய நிச்சயமாய் உன்னால் அனைத்தும் செய்ய முடியும்.பின் ஏன்??? 

ஈசனாரின் பதில்

தேவியே கேள்!!!!! 

நிச்சயமாய் வரும் காலங்களில் யான் அழித்து தான் தீருவேன் சொல்லிவிட்டேன்!!!

ஆங்காங்கே என்னென்ன எதை என்று நடக்கக்கூடிய மனிதனின் தீமை எண்ணங்கள் நிச்சயம் மனிதனையே கொன்று விடும் ஒழுக்கங்கள் இல்லை இன்னும் ஏராளமான குடும்பத்தில் கூட பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் நிம்மதி இல்லை என்னை வணங்கினாலும் யான் நிம்மதியை நிச்சயம் கொடுக்க மாட்டேன் கொடுக்க மாட்டேன் சொல்லிவிட்டேன் தேவியே!!!! கேள்! கேள்.!

முருகன் வேண்டுகோள் வாக்கு. 

தந்தையாரே!!! தந்தையாரே!!! எதை என்று கூட நான் செந்தூரிலே அழகாகவே குடி கொண்டிருக்கின்றேன்.

இதையன்றி அறிய இப்படி நீ சொல்லிவிட்டால் இதையன்றி அறிய என் பக்தர்களும் நடந்து நடந்து வந்து என்னை ஏதாவது செய்வானா!? முருகன் என்றெல்லாம் நிச்சயமாய் உணர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனாலும் இப்படி செய்திட்டால்?? தந்தையே!!! எதை எப்படி என்று கூட நீ அனைத்தையும் அறிந்தவன் நீ தந்தையே!!!! அனைத்திற்கும் உரியவன் நீயே!!!

நீயே!! ஏன் இப்படி மனிதர்களை கைவிடலாமா?? மனிதர்களை!!!! எவை என்று கூட என்னுடைய பக்தர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள் என்னையே நம்பிக் கொண்டு இதனை செய்து கொண்டு வழிபட்டுக் கொண்டு வருகின்றனர். 

அவர்களுக்காவது வழிவிடுங்கள் தந்தையே!!! தந்தையே!!!!

ஈசனார் முருகனுக்கு பதில் வாக்கு 

வேலவா!!!!! யான் சொல்கின்றேன் கேளடா!!!!

நிச்சயம் மனிதனிடத்தில் புத்திகள் இல்லை.

நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாய். பின் எந்தனுக்கு சமமானவன் நீயும் கூட!!!

ஆனால் எப்படிப்பட்ட மனிதன் வருகின்றான் உன்னிடத்தில்  என்று நீ பார்த்தாயா??? செந்தூருக்கும் (திருச்செந்தூர்) யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். பின் நலன்கள் வேண்டி எப்படி எல்லாம் வருகின்றார்கள் தீய எண்ணத்தோடு வருகின்றார்கள் பொய் பொறாமை குற்றங்கள் இவையெல்லாம் வஞ்சகம் இதை என்று கூற அடுத்தவர் நலனை பார்க்காது பின் அடுத்தவரை எப்படி கெடுக்க வேண்டும் என்று போட்டி பொறாமைகள் ஒருவன் உயர்ந்து விட்டால் அவன் மீது இன்னும் பொறாமைகள் இவையெல்லாம் கேட்டுத்தான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

முருகா!!! இதையென்று அறிய.. வேலவா!! குழந்தாய்!!! உந்தனுக்கு ஏதும் தெரியாது... அமைதியாக இரு!!! அமைதியாக இரு!!!

முருகனின் வேண்டுகோள் வாக்கு 

இதையன்றி அறிய எதையென்று உணர தந்தையே!! தந்தையே!! அமைதி கொள்!!!

தாயே இதையன்றி அறிய ஈசனும் எனது நிமித்தம் அன்புக்குரியவரே எதனை என்று அறிய நிச்சயமாய் உலக மக்களை காக்குங்கள் உன்னால் முடியும்!!!

தாயே!!!! சொல்லும் நீயும்!!! தந்தையாருக்கு!!! உலகத்தை காக்கட்டும் நிச்சயம் அனைத்து மனிதர்களுக்கும் பிரச்சனைகளாக இருக்கின்றது பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். 

வரும் வரும் காலங்களில் பூலோகம் அழியப் போகின்றது. அவை மட்டும் இல்லாமல் எதையென்று கூற குடும்பங்களோடு நோய் நொடிகளும் வருகின்றது!! ஒருவருக்கொருவர் சண்டையிட்டு சண்டை இட்டு நிம்மதி இல்லாமல்....

தாயே நீயாவது கூறு!!!!! 

பார்வதி தேவி முருகனுக்கு பதில் வாக்கு 

மகனே! வேலவா!!!
யான் எப்படி?  கூறுவது?? 
எதனை என்று கூறுவது உன் தந்தையோ கோபம் மிக்கவன் தான்!!! ஆனாலும் கருணை உள்ளவன்.

ஆனால் மனிதனிடத்தில் மனிதர்களுக்கு பலவகையான வகையிலும் செய்தான். ஆனாலும் நிச்சயம் இப்பொழுது எல்லாம் மனிதன் மாறிக்கொண்டே இருக்கின்றானே!!!

பார்வதிதேவியின் ஈசனாரிடம் வேண்டுகோள் வாக்கு 

பின் ஈசனாரே!!!! 
பின் வேலவனும் இப்படி கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்னதான் சொல்லப் போகின்றாய்?? நீ!!!

ஈசனாரின் பதில் வாக்கு 

தேவியே! கேள்!!!!! 
வேலவா! கேள்!!!!! 
எதையென்று கூற மனிதனின் இனிமேலும் எவ்வளவு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அவனால் ஜொலிக்க முடியாது ஜெயிக்கவும் முடியாது முன்னேற்ற பாதையிலும் செல்ல முடியாது நிச்சயமாய் யான் தடுத்து விடுவேன்.

ஏனென்றால் இனி மேலும் முன்னேற்ற பாதையில் சென்றாலும் அவந்தன் பல பொய்களை உருவாக்கி பல பித்தலாட்டங்கள் செய்து எதையெதையோ கூறி பல செய்திகளை கூறி.........

ஏன்??  வேலவா!!!! உந்தனுக்கும் கோயில் கட்டுகின்றேன் என்று கூறி பல சித்தர்களுக்கும் பல பல திருத்தலங்களை உருவாக்குவோம் என்று கூறி பொய் சொல்லி ஏமாற்றி வரும் மக்களை இன்னும் துன்ப நிலைக்கு ஆக்குவான்.

அதனால் நிச்சயம் யான் மனிதனை விடப்போவதில்லை நிச்சயம்.

பின் எவை உணர்ந்து உணர்ந்து செயல்பட்டானோ எதனை அறிந்து செயல்பட்டானோ மனிதன் நிச்சயமாய் அறிவுகள் இல்லை மனிதனுக்கு புத்திகள் இல்லை.

காசுகள் சேர்க்க வேண்டும் காசுகள் சேர்க்க வேண்டும் தன் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தீராத காதலாக உள்ளது.

இப்படி இருக்க நிச்சயமாய் இனி வரும் காலங்களில் மனிதனுக்கு நல்ல புத்திகள் கிடைக்காது.

எதை என்று உணர்ந்தே சொல்கின்றேன். அதனால்தான் உலகம் அழியட்டும்! அழியட்டும்.!
அழியட்டும்!!! 

அகத்தியர் சமாதான வாக்கு!!! 

குருவே!!!!! எதையென்று அப்பனே!!!! ..... உன்னையே அப்பன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேனே!!!!!

எதையென்று முற்ப்போக்கி நீ தான் சொன்னாய்!!!!

ஈசனாரே!!!!! 

அகத்தியா!!! இதையன்றி அறிய பின் அனைத்தும் நல்லதை செய் என்று கூட நீ தான் என்னை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தாய்.

நீயே இதையன்றி அறிய ஈசனே இப்படி நீயே சொல்லிவிட்டால் யான் எதை என்று.....யானும் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றேன் இவ்வுலகத்தில் என் பக்தர்களை காக்க!!!

என் பக்தர்களும் எதை என்று அறியாமல் தெரியாமல் என்னையும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

அகத்தியன் பாதுகாப்பான் பாதுகாப்பான் என்றெல்லாம்!!!!

ஆனாலும் இதையறிந்து இவற்றிலிருந்து கூட யான் அதனாலே பூலோகத்தில் மனிதர்களுக்கு எதையெதையோ!!!!!.........

ஆனாலும் திருடனாக இருக்கின்றான் பொறாமைக்காரனாக இருக்கின்றான் ஆனாலும் அவந்தனையும் மாற்ற யான் ஏற்பாடுகள் செய்து கொண்டே இருக்கின்றேன்!!!

ஆனாலும் இப்பொழுது இப்படிச் சொல்கின்றாயே!!!!ஈசா!!!!!  எதையென்று கூட.... 

ஈசன் அகத்தியருக்கு பதில்

அகத்தியனே பொறுத்துக்கொள்!!!!! 

நீதான் இப்படி கூறுகின்றாய்!!! உன்னை வணங்குபவர்களே உன்னை ஏற்றுகின்றார்கள். உன்னை திட்டியும் தீர்த்துக் கொள்கின்றார்கள்.
எதனையென்று கூட உன்னை வணங்கியே உன்னை எதையெதையோ சொல்கின்றார்கள்.
அகத்தியன் பொய் என்றெல்லாம் அதை நீ உணர்வாயா!? முதலில்!...

அகத்தியர் பதிலுரை

தாயே!! தந்தையே !!! வேலவா!!! 
அனைத்தும் உணர்ந்தவன் யான்!!!! 

பரவாயில்லை!!!! என்னை திட்டினால் கூட பரவாயில்லை மனிதர்கள்.

ஆனால் யான் நல்லதைத்தான் செய்ய வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் இட்ட கட்டளை முதலில் நீங்கள் மறந்து விட்டீர்களா!!!! என்ன???
கலியுகம் தோன்றும் முன்பே!!!!!

ஈசனார் உரை!!! 

பின் பின் எதையென்று உணர பின் அகத்தியனே யான் நிச்சயம் மறக்கவில்லை!!

உந்தனுக்கு ஆனால் யான் தான் உன்னை அனுப்பினேன் உலகத்திற்கு!!!
நிச்சயம் பின் நன்றாக மனிதர்களை திருத்தி இவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்பதை எல்லாம் அனைவருக்கும் உதவிகள் செய் என்று கூட!!!!

ஆனால் மனிதன் பொய்யனப்பா!!!! பொய்யனப்பா!!!!

அகத்தியனே அதை நீ முதலில் உணர்ந்திடு!!!!!!! 

அகத்தியர் பதிலுரை. 

நிச்சயம் பெருமானே ஈசனே சிவபெருமானே யான் உணர்ந்து விட்டேன். நிச்சயம் ஆனால் எந்தனுக்கும் பல வழிகளில் தெரியும். பல பல விஷயங்கள் கூட!!!

என்னால் உன்னையே பயன்படுத்தி வரும் என்னை எதனை என்றும் அறியாத அளவிற்கும் கூட பொய் ,குற்றங்கள் கூட யான் அறிந்ததே!!!!!! ஆனாலும் நிச்சயம் ஒரு சந்தர்ப்பம் தான் ஒரு சந்தர்ப்பம் தான் கொடுத்து பார்ப்போமே!!! மனிதனுக்கு மனிதனுக்கு.

காகபுஜண்டர் இடைவாக்கு. 

நமச்சிவாயனே நில்லுங்கள்!!! நில்லுங்கள்!!! யானும் பல வழிகளிலும் கூட மனிதனுக்கு எடுத்துச் சொன்னேன். முட்டாள் மனிதனுக்கு யான் புசுண்டமுனியே எடுத்துச் சொன்னேன்....

இதையன்றி இவையன்றி அறிய  முட்டாள் மனிதனுக்கு எதுவும் தேவையில்லை..... அழித்து விடுங்கள் அழித்து விடுங்கள்.

எதை என்று கூற பல பல வழிகளிலும் பொய் சொல்லி ஏமாற்றி கொண்டு பிழைப்பை நடத்தி பக்தியை வீணாக்குகின்றான்!!! ஏன் பொய்யான பக்தி??

நிச்சயம் மனிதனை அழித்து விடுங்கள்!!! ஈசா!!!! யான் கட்டளை இடுகின்றேன்!! கட்டளையே இடுகின்றேன்!!!

பின் இதையன்றி கூற எவையென்றும் இன்னும் இன்னும் ஏராளம் ஏராளம் மனிதனுக்கு என்னென்னவோ எப்படி எல்லாம் சொல்லி பின் இப்படியெல்லாம் வாழ வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தால். மனிதன் நம்புவதாக இல்லை!!!!

இனிமேலும் நிச்சயமாய் நமச்சிவாயனே நீ அழிக்க விடிலும் யான் நிச்சயம் நோய்களை அளித்து விடுவேன்!!!!

என்னாலும் முடியும் பிரம்மனையும் யான் பார்த்திருக்கின்றேன் பின் எதை எதை என்று கூட விஷ்ணுவையும் பார்த்திருக்கின்றேன்!!!

உன்னையும் நான் பார்த்திருக்கின்றேன் அடிமுடி இல்லாதவன் நீ!!!

ஆனால் நிச்சயம் இவ் மனிதர்கள் திருந்தப் போவதாகவே இல்லை!!!!

இனிமேலும் பொய் பித்தலாட்டம் என்று கூறி இன்னும் உலகத்தை அழிக்க போகின்றார்கள். அவை மட்டும் இல்லாமல் இறைவன் எதை என்று கூட பக்தியைக் கூட அழிக்க பின் புறப்பட்டு விட்டார்கள் அதனால் நிச்சயம்....

நமச்சிவாயனே!!!! விட்டு விடாதே மனிதனை!!!! மனிதனை!!!!

ஆனாலும் இதையன்றி அறிய ஆனாலும் நிச்சயமாய் இவை என்றும் அறியாமலே இவை என்று உணராமலே

கணபதி இடைவாக்கு

தந்தையே!!!! தந்தையே!!! தந்தையே!!! தந்தையே!!!!
என்னைக் கூட இவ்வுலகத்தின் இதையன்றி அறியாத அளவிற்கு முழு முதற்கடவுளாகவே நீயே தேர்ந்தெடுத்தாய்!!!

அதனால் இதையன்றி இதனையுமன்றி உணர உணர ஒருமுறை மனிதனுக்கு சந்தர்ப்பம் தான் கொடுக்க கொடுக்க நன்று!!!!கொடுக்க கொடுக்க நன்று.
அதனால் நிச்சயம் பின் ஒரு முறை தந்தையே உன்னையே வணங்குகின்றேன்!!!!! எதையன்றி கூற நீயே எவை என்று கூற உன்னை முதலில் வணங்குபவர்களுக்கு அனைத்து ஆசிகளும் கிட்டும்!!!! ,
என்பதை கூட நீயே சொல்லிவிட்டு இப்படி நிச்சயம் நீ சொல்லலாகாது!!!!

அதனால் நிச்சயம் எவை என்று ஒரு சந்தர்ப்பம் மனிதர்களுக்கு கொடு!!!!

முருகனின் வேண்டுகோள் வாக்கு 

அப்பனே !!அப்பனே!! என்பதைக் கூட பின் எதை என்று கூட தந்தையே!!
தந்தையே!! 

என்னையும் பின் முருகா!! முருகா!! என்றெல்லாம் பின் பாடி துதித்து வருகின்றார்கள். நிச்சயம் மனிதர்களுக்கு ஒரு வழியை செப்புங்கள் ஈசனே!!!

அழுகுணி சித்தர் இடைவாக்கு 

எதையென்று அறிய அறிய பின் இன்னும் ஏராளமான உணர்வுகள் அதனால் நிச்சயம் உண்டு உண்டு ஏற்றங்கள் வழிகளில் உள்ள...உள்ளவைகளா என்பதை நிரூபிக்க தன்மைகள் உண்டென்று!!!
உண்டென்பதா!!???

இவையென்று கூட அழுகுணி  உரைக்கின்றேன்!!!!

ஆடடா!!!!  தேடடா!!! தேடுவது ஏதடா???
ஏதடா நின்று உதறுவது ஏதடா????
என் நிலைமை பாரடா!!
பார்த்திட்டு கூறடா!!!
கூறின்று வருவது கூட்டில் இருந்து வருவது இல்லையடா இல்லையடா இதையென்று அறிய அறிய!!!!!!!

பார்வதி தேவியின் வேண்டுதல் வாக்கு 

ஈசனே!!! ஈசனாரே !!!! எந்தன் அன்பு கணவனே!!!

யான் உந்தனுக்காக இங்கேயே தங்கி இருக்கின்றேன் பல வருடங்களாக!!!!!

யானும் மனிதனைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் ஏதேதோ செய்து விட்டு ஏதேதோ எதனை என்று கூற வந்துவிட்டு உன் ஆசிகள் பெற்றுக் கொண்டுதான் செல்கின்றான்...

ஆனாலும் இதையன்றி கூற திரும்பவும் திரும்பவும் எதை எதையோ செய்து செய்து செய்து செய்து இன்னும் கேவலமான பிறவியை படைத்துக் கொண்டிருக்கின்றான்.

அதனால் நிச்சயம் மனிதனுக்கு தண்டனை கொடு தண்டனை கொடு.

இதை என்றும் அறியாத முட்டாள் முட்டாள் என்பதற்கிணங்க எவை என்று கூட இன்னும் எதனை எவையும்  அறிந்து அறிந்து செயல்பட்டாலே...செயல்பட்டானா??? உண்டு என்பதை இதற்கிணங்க இதற்கிணங்க இன்னும்!!!

ஈசனாரின் பதிலுரை 

தேவியே கேள்!!!!

நிச்சயம் இவ்வளவு பெரியோர்கள் வந்து வாதாடுகிறார்கள்!!!!

ஆனாலும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாமா என்பதை கூட யான் சந்தேகத்திலே இருக்கின்றேன்!!!

இருக்கின்றேன் இதையன்றி கூற!!!!

அகத்தியா!!!!!! இன்னும் நீ கூறு!!!! மனிதனைப் பற்றி.
மனிதனைப் பற்றி நிஜமாகவே நீ கூறு!!!!

அகத்தியர் பதில் வாக்கு 

சொல்கின்றேன் சிவபெருமானே!!!!!

இதையன்றி அறிய நிச்சயம் வரும் காலங்களில் அழிவுகள் தான் ஏற்படப் போகின்றது.

ஆனாலும் மனிதரிடத்தில் தீய புத்திகள்!! தீய எண்ணங்கள் நிச்சயம் திருடர்கள் பொய்யான பக்தியை தான் செலுத்துவார்கள்!!

உண்மைக்கு வழிகள் இல்லை.

உண்மைக்கு நிஜமாகவே வழிகள் இல்லை.

ஆனாலும் நிச்சயம் எப்படியாவது மனிதனை!!!! ஏனென்றால் நிச்சயம் நல்லோர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

உண்மையான பக்தர்களும் மறைவாக ஏதும் தெரியாமல் அவர்களையாவது காப்பாற்றினால் நிச்சயம் அவர்கள் மூலம் இன்னும் மேன்மையான மனிதர்களை அவர்களும் காப்பார்கள்.

அதனால்தான் ஒரு சந்தர்ப்பம் நிச்சயமாய் !!!

ஈசனின் சமாதானம்

பின் அகத்தியனே சரி யோசிப்போம் !!யோசிப்போம்!!

இதையன்றி கூற பார்வதி தேவியே!!!  நீ கூறு!!!! மனிதனை பற்றி!!!! 

பார்வதி தேவி அம்மாவின் வேண்டுகோள் வாக்கு 

நிச்சயம் மனிதன் எதையென்று உணராமலே ஒரு தாயானவள் நிச்சயம் தன் பிள்ளையை பின் திருடன் என்றாலும் நிச்சயம் அவன் திருடன் இல்லை என்று தான்!!!......... அதனால் ஒரு சந்தர்ப்பம் கொடு!!!

ஈசனே!!!  யானும் நிச்சயம் மனிதனை ஏதாவது  முறையில் திருத்த பார்க்கின்றேன்!!! இதையன்றி கூற அதனால் நிச்சயம்!!!!

முருகன் வாக்கு 

தகப்பனே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் இதை அன்றி அறிய நிச்சயம் நல்வழிகள் கிடைப்பது என்பதை கூட நிச்சயம் மனிதனுக்கு ஏதாவது முறையில் நிச்சயம் ஆனாலும் எதையன்றி அறியாத அளவிற்கும் கூட ஆனாலும் இன்னும்!!!

ஈசனாரின் வாக்கு 

தேவியே கேள்!!!!

நிச்சயம் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப் போகின்றேன்!!

ஆனாலும் அவ்  சந்தர்ப்பத்தை நிச்சயமாய் மனிதன் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் வரும் காலங்களில் அழிவுகள் தான் நிச்சயம் சொல்லிவிட்டேன்!! சொல்லிவிட்டேன்!!

இதனால் மனித ஜென்மங்களே!!! உண்மையை உணர்ந்து உணர்ந்து திருந்திக் கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால் நிச்சயம் அழித்துவிட்டு செல்வேன்!!!

இப்பொழுதே!! அனைவருக்கும் தெரியும்!!அனைவருக்கும் ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு கஷ்டங்கள் என்பதை கூட!!!

மனிதா!!!! ஒழுங்காக வாழ கற்றுக்கொள்!!! தெரிந்து கொள்!!!!
பொய் சொல்லாமை பொய்யான பக்திகளை காட்டாதே!!!!
பொய்யான பக்திகளை காட்டி என்னிடத்தில் வராதே சொல்லி விட்டேன்!!!

நிச்சயம் அழித்து விடுவேன்!!!!

அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறியாத இன்னும் ஏராளமான செய்திகளையும் மனிதன் பக்திகளுக்காக கற்றுக் கொண்டே இருக்கின்றான் அவையெல்லாம் வீண்!!!!

சொல்லிவிட்டேன் நிச்சயம் அவை அழிவதற்கு சமமாகும்!!!! சமமாகும்!!! எதையன்றி கூற!!! 

காகபுஜண்டர் வாக்கு
 
நமச்சிவாயனே நிச்சயம் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் மனிதனின் நிலைமைகள் இன்னும் மாந்திரீகத்தில் எல்லாம் சென்றடைகின்றான் ஒன்றும் நடக்கவில்லையே என்று கூட மாந்திரீகத்தில் சென்றடைகின்றான் எவ்வாறு?? உண்மை!!!

ஈசனின் பதில் வாக்கு

புசுண்டனே இவையும் தவறு நிச்சயமாய் அவன் மாந்திரீகத்தில் நுழைந்தால் அவனையும் அழித்து அவன் பிள்ளைகளையும் அழித்து அவன் மனைவிமாரையும் அழித்து அவன் தாய் தந்தையரையும் அழித்து கடைசியில் அவன் பிறவியே பிறவியை எதை என்று கூற அவன் ஜென்மத்தை எதை என்று கூட அவந்தன் எப்படி என்பதை யான் தான் யூகிக்க வேண்டும்!!!! நிச்சயம்!!!

எதையன்றி கூட இப்பொழுது ஆணித்தரமாக புசுண்ட முனியே உந்தனுக்கே தெரியும்!!!

என்னை விட மீறிய சக்தி இங்கு இல்லை என்பதை கூட!!!!!

அதனால்  அவ் சக்தியெல்லாம் பயனற்று போகும்(மாந்தரீகம்) வரும் காலங்களில் பலிக்காது அப்பனே!!!!

எதை என்று கூட இன்னும் புசுண்டமுனியே!!! 

ஒரு வாய்ப்பைக் கொடுப்போம்!!!!

பார்ப்போம் மனிதன் எப்படி திருந்துகின்றான் என்று பின் இதையன்றி கூற பின் நீயும் வாக்குகளாக செப்பிக் கொண்டே வா!!!!

புசுண்ட முனியே!!! ஒரு வாய்ப்பை கொடுப்போம் கொடுப்போம் நன்று!!!!

புத்தி இல்லாத மனிதனே திருந்திக் கொள்!! அறிவில்லாத மனிதனே திருந்திக் கொள்!!
 
மூளை இல்லாத மனிதனே திருந்திக் கொள்!!

மறுவாக்கும் என்னுடைய மலையிலே உச்சிதனில் உரைக்கின்றேன் விவரமாகவே!!!!!

அமர்நாத் பனிலிங்கம் குகை கோயில். 
பாகல்காம் மலைச்சிகரம். 
ஆனந்த் நாக் மாவட்டம். 
ஜம்மு காஷ்மீர்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

12 comments:

  1. தீய மனிதர்களுக்கு தக்க தண்டனைகள் கொடுத்து திருத்துங்கள் ஈசபெருமானே பெற்ற வேர்களை மதிக்காத பிள்ளைகள் கணவணைமதிக்காத மனைவிகள் மனைவியை மதிக்க தெரியாத புருஷன் மாமனார் மாமியார் இவர்களை இழிவுபடுத்தி கேவல படுத்தும் மருமகள் நல்ல மருமகளை துன்புறுத்தி சந்தோஷபடும் மாமியார் வீட்டு ஜன்மங்கள் கோடானுகோடி சொத்து 💰 பணம் இவைகள் இருந்தும் இல்லாத ஏழைகளுக்கு உதவியும் சின்ன தர்மம் கூட செய்யமனமில்லாத கிருமிகளுக்கு நீங்கள் நிச்சயமாக தண்டனைகளை கொடுக்க வேண்டும் அப்பா வாயில்லா ஜீவா ராசிகளைபணத்திற்காக வெட்டி வியாபாரம் செய்யும் மனித மிருகங்களுக்கு தண்டியுங்கள் பரமாத்மாவே

    ReplyDelete
  2. Om agstishay namah .Anybody can please translate these.

    ReplyDelete
    Replies
    1. Greetings! I'm Akshita, a devotee of Agathiyar Maharishi. I've been translating the general Jeeva Naadi readings in English for a while. Currently, I'm preparing the translation of Idaikkadar Siddhar's reading which was done on 1/8/2022. I shall post the same in the comment section for your convinience. I would humbly request you to wait for another 2 or 3 days for this reading (Lord Shiva's) to be translated. I'll do my best to help the devotees of Agathiyar. Thank you!

      Om Agatheesaya Nama!
      Om Namashivaya!
      Om Saravanabhavaaya Nama!
      Om Lalitambikai Nama!
      Om Saneeshwaraya Nama!
      Om Brahmaney Nama!

      Always in service to God,
      Akshita.

      Delete
    2. Thank you sister .Agathiyar devotees from North will always be greatful to you sister

      Delete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. எனது அன்புள்ள ஈசா...பரம்பொருளே...
    எனது என்புள்ள தாயே... அகிலான்டகோடி பிரம்மநாயகியே...
    எனது அன்புள்ள காகபுஜண்ட தேவனே... அனைவரும் இம் மனித பிறவியை மன்னிக்கவும் மன்னிக்கவும். நீங்கள் அனைவரும் இறைவன். நாங்களோ மனிதப்பிறவி. ஏற்கனவே செய்த தவறுக்கு தன்டனைதான் மனிதப்பிறவி. பிறப்பிலும் பிறப்பு கேடுகெட்ட பிறப்பு மனிதப்பிறப்பு என்று தாங்களை போன்ற ஞானிகள் கூறியதுதான் இவ் வாசகம். இப்படியிருந்தும் எங்களை அழிப்பதில் என் இவ்வளவு வேகம் கோபம். இறைவா நீங்கள் எங்களை திருத்தி வாழ வைய்யுங்கள். உங்களால் முடியாதது ஒன்றுமில்லை. அதைவிடுத்து அழிப்பேன் தன்டிப்பேன் நோயை தருவேன் மனிதன் அழியட்டும் என்று கூறி அழிக்க முற்பட்டால் மனிதனுக்கும் இறைக்கும் என்ன வேறுபாடு. தாய் தந்தையே பெற்ற குழந்தைகளை அழிக்க முற்பட்டால் எப்படி??!!?? அதற்கு கருடபுராணத்தில் கூறியிருக்கும்படி அங்கேயே தன்டனை கொடுத்து அங்கேயே இவன் அடுத்த பிறவியை முடித்துவிடலாமே. அதைவிட்டு மனிதனை பூலோக பிறவியெடுக்க வைத்து பாவம் செய்ய வைத்து அவனை ஏன் மீன்டும் இறைவனாகிய நீங்கள் தன்டிக்கவேண்டும்!? அழிக்கவேண்டும்!?!? எங்கள் பெயரைகூறி ஆலயம் கட்டுகிறேன் என்று ஏமாற்றுகிறான் மனிதன் என்கிறீர்கள் - அவனுக்கு ஏன் அந்த சிந்தனையை ஏற்படுத்துகிறீர்கள். அந்த விதியை உருவாக்குவது அப்படிப்பட்ட பாவத்தை செய்யவைப்பது அப்படிப்பட்ட கர்மாவை கொடுப்பது உங்களால் ஏற்படுத்தப்பட்ட விதிதானே. பின் மனிதனை நொந்துகொள்வதில் என்ன லாபம் அய்யனே. .. அய்யனே பரம்பொருளே ஏதோ அகத்தியர் இருப்பதால் தப்பித்து கொண்டிருக்கிறோம். ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தையும் காட்டு என்கிறீர்கள். பொறுமை கடலினும் பெரிது என்கிறீர்கள். கோபம் மனிதத் தன்மை அழிக்கும் என்கிறீர்கள். இப்படி எல்லாம் கூறிவிட்டி நீங்களே அழிக்க முற்பட்டால் எப்படி அய்யனே???!!! ஆதலால் நல்முறையாக மனிதன் திருந்த நிலையான நிரந்தரமான தீர்கமான வழியை காட்டி ஆசி அருளுங்கள் அய்யனே. கயிலை வாசனே... பாவம் மனிதப் பிறவி ஏற்கனவே அல்லாடிக் கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  5. ஐயா, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பல அதர்மங்கள் தெரிந்தே நடக்கும்போதுதான் உலகம் அழியும். அனைத்து ஆத்மாக்களும் கர்மாவின் அனைத்து விதிகளையும் அறிந்தே பூமியில் பிறக்க விரும்பின. ஆனால் பல பிறவிகள் எடுத்த பிறகு மறந்துவிட்டோம். அதர்மத்தை அழிப்பதே சிவனின் பணி. அவர்கள் தொடர்ந்து எச்சரிக்கைகள் கொடுக்கிறார்கள் ஆனால் மனிதர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிவ பக்தர்களான ராவணன் அல்லது ஹிரண்யகஷ்புவும் இறக்க நேரிட்டது. அகத்தியர் ஐயாவின் பொருட்டு மனிதர்களாகிய நாம் தவறு செய்யக்கூடாது. நீங்கள் சொன்னது போல், கடவுள் மட்டுமே நமக்கு அந்த உணர்வைத் தர வேண்டும்.

    ReplyDelete
  6. ஆறு வருடங்களுக்கு மேலாக கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்.தினமும் வீட்டில் தீபம் ஏற்றி எனக்கு தெரிந்த வரையில் பூஜை செய்கிறேன்.திருவாசகம் சுந்தரகாண்டம் படித்து வருகிறேன்.பல கோயிலுக்கு போயி அலுத்து போச்சு.வாழ்க்கையில ஒரு மாற்றமும் வரவே இல்ல.ஒரு பிரச்சினையும் தீர்க்கல.ஒரு சித்தரும் உதவல.வெறுப்பா இருக்கு. அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு தான் சித்தன் அருள்.சுயநல வாதி ஏமாற்றுக்காரன் சொரியாரிஸ்ட் லஞ்சம் வாங்கிரவன் தகுதிக்கு மீறி சம்பளம் வாங்குபவன் ஆடு மாடு கோழி போன்ற உயிர்களை அறுப்பவன் கொள்ளை லாபம் பார்ப்பவன் இவர்களிடம் உங்கள் கோபத்தை காட்டலாமே.. நமச்சிவாயா அகத்தீசா நமஹ என்றால் எனக்குத்தான் எல்லா துன்பமும் வருகிறது.சாதாரண உடல் பிரச்சினை அத கூட தீர்க்க உதவி செய்யாம இழுத்தடிச்சு ... வாழ்க்கையே சலிப்பாகிவிட்டது.அகத்தியப் பெருமான் எனக்கு உதவி செய்ற அளவுக்கு எனக்கு தகுதி இல்ல போல

    ஒரு சின்ன டவுட்டு நம்ம சிவா ஐயாவோட கோப வாக்கு எல்லா மனிதர்களுக்கும் எப்படி செல்லும் அல்லது சித்தன் அருள் படிப்பவர்களுக்கு மட்டும் தானா
    என் அறிவுக்கு எட்டியவரை மனிதர்கள் திருந்த மாட்டார்கள்

    சித்தன் அருள் பெற்று பிரச்சினைகள் தீர்ந்தவர்கள் தங்கள் கருத்துகளை கூறினால் எனக்கு நம்பிக்கையாக இருக்கும்

    என் வாழ்க்கை எப்படி இருக்கும்.யாராவது ஊகிக்க முடிஞ்சா சொல்லுங்க..


    நமசிவாய வாழ்க..

    ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!
    மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!
    செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
    எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

    பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
    ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
    தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
    யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?..

    ReplyDelete
    Replies
    1. ​"சிந்தையில் இறையை வைத்து
      இருதயத்தில் லிங்கம் வைத்து
      நொடியும் தவமிருந்தால்
      துறவு தானே பற்றும்!
      சித்தன் அருள் அனைவருக்கும் உண்டு
      உள்சென்று இறையை தேடு
      கர்மா கழிய வேணும்
      இறை பாதம் உள்பதிந்ததால்
      விதியே விலகி வழிவிட்டு செல்லும்!
      அகத்தியர் அருள்! ஆசிகள்!

      ஆடடா!!!! தேடடா!!! தேடுவது ஏதடா???
      ஏதடா நின்று உதறுவது ஏதடா????
      என் நிலைமை பாரடா!!
      பார்த்திட்டு கூறடா!!!
      கூறின்று வருவது கூட்டில் இருந்து வருவது இல்லையடா இல்லையடா இதையென்று அறிய அறிய!!!!!!!

      Delete
    2. இறைவனை வணங்கிக் கொண்டே, தர்மத்தை செய்துகொண்டே வாழ்ந்தாலும், இதற்கு முன்பே எடுத்த ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலியால், சலனங்களும், சங்கடங்களும், சோதனைகளும், வேதனைகளும் ஒரு மனிதனுக்கு வரத்தான் செய்யும். இது போன்ற தருணங்களில் எல்லாம், இத்தனை தர்மம் செய்தோமே, இத்தனை இறை வணங்கினோமே, எதற்காக இத்தனை கஷ்டங்கள் வரவேண்டும்? என்று எண்ணாமல், தொடர்ந்து வைராக்கியத்தோடு இறைவனை வணங்கி வந்தால், எந்த கஷ்டமும் இல்லாத சூழல் வரும், அல்லது, அதை உணராத மனோபாவம் வந்து விடும். இதை மனதிலே வைத்துக் கொண்டு எம் வழியில் வர நல்லாசிகள்.

      source : https://siththanarul.blogspot.com/2016/12/535.html

      Delete