​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 1 August 2022

சித்தன் அருள் - 1167 - பொதிகை மலையும், திரிகூட மலையும்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப்பெருமானை பற்றி ஏதோ ஒன்றை தேடிய பொழுது, பொதிகை மலை, திரிகூட மலைகளின் புகைப்படம் கிடைத்தது.

இரண்டு மலைகளுக்கும் நம் குருநாதருக்கும் நிறையவே தொடர்பு உண்டு. புகைப்படங்களை சற்று உன்னிப்பாக கவனித்த பொழுது, ஏதோ ஒன்று புலப்பட்டது.

உங்கள் பார்வைக்கு அதை சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......... தொடரும்!

14 comments:

  1. அகத்தீசாய நம

    ReplyDelete
  2. நம் குருநாதர் படுத்திருப்பது போல் எனக்கு தெரிகிறது. The second one

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்! இரண்டு படங்களிலும், ஒரு சித்தர் த்யானத்தில் சயனித்திருப்பது போன்ற தோற்றம் மலைகள் உருவாக்குகின்றது. இரண்டு மலைகளையுமே சிவபெருமான், அகத்தியருக்கு கொடுத்தார். ஒன்று தங்குவதற்கு, இன்னொன்று நித்ய தவ பூசைகளுக்கு. ஆகவே இரண்டு மலைகளுக்கும் அதனதன் முக்கியத்துவம் உண்டு.

      Delete
    2. வணக்கம். நன்றி உங்கள் பதிலுக்கு. கடந்த வாரம் குற்றாலம் சென்று வந்தேன். தெரிந்திருந்தால் நிச்சயம் கவனித்திருக்கலாம் என்று தோன்றுகிறது

      Delete

    3. வணக்கம்! மேலும் ஒரு தகவல். திரிகூட மலையில் ஒரு சித்தர் கோவில் உள்ளது என கேள்வி. வழி தெரிந்தவர்களை உதவிக்கு அழைத்து சென்று அபிஷேக பூஜைகள் கூட செய்யலாம். எல்லாம் அவர் செயல்.

      Delete
    4. வணக்கம் அன்பரே. சித்தன் அருள் அகத்தியர் ஆசிர்வாதத்தால் எங்களுக்கு இருகூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மனது நிரம்ப நீலகண்டேஸ்வரரை தரிசனம் செய்தோம். தந்தை அகத்தியருக்கு நன்றி மனதார. ஐயா ஜானகி ராமன் அவர்களுக்கும் எங்களுக்காக இந்த செய்தியை தர வேண்டும் என்று மனமார நினைத்த தங்களது நல் உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஜீவ நாடி அங்கு பார்த்ததை பூசாரி கூறினார் நாங்களும் அதை படித்து தான் வந்தோம் என்றோம். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்

      Delete
  3. அகத்திய‌ குருவடிகள் திருவடிகள் சரணம் சரணம்

    ReplyDelete
  4. எம் பெருமானே அகத்தீசா... நின் திருத்தாள் போற்றி போற்றி... ஞானக்கடலே - ஞானச்சுடரே... அடியேன் மறந்தாலும் எம்மை மறவாதே அய்யா.... வருகிறேன் உம்மைக்கான பொதிகைக்கு... உம்மை காண கண் கோடி வேண்டும். இப்பதிவின் மூலமாய் அடியேன் வருவதை உங்களிடம் தெரிவித்துவிட்டேன் நீங்களும் பொதிகை வந்து ஆசி செய்வீர் என்ற நல் உறுதியான நம்பிக்கை உணர்வுடன்...

    ReplyDelete
  5. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  6. வணக்கம்! இரண்டு படங்களிலும், ஒரு சித்தர் த்யானத்தில் சயனித்திருப்பது போன்ற தோற்றம் மலைகள் உருவாக்குகின்றது.

    ReplyDelete
  7. Om Agatheesaya Namaha!!! I could see Agathiya peruman Thiruneer [3 layers] on his forehead. Om Agatheesaya Namaha!!

    ReplyDelete
  8. அந்த நாள் இந்த நாள் என்ற கூற்றுப்படி வருகிற 8.8.22 அன்று நம்பி மலையில் அகத்தியர் பூஜித்த நாள் வருகிறது என்று அறிந்தேன்.அன்றைய தினம் அடியவர்கள் நம்பி மலைக்கு வருகிறீர்களா என தகவல்கள் தெரிவிக்கவும்.

    ReplyDelete