​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 12 November 2015

சித்தன் அருள் - 253 - சுப்ரமண்ய த்ரிசதி - அடியவர்களுக்கு அகத்தியரின் பரிசு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தீபாவளியை அகத்தியரின் அருளால் இனிதே கொண்டாடியிருப்பீர்கள். நானும் அவ்வாறே இனிதாக கொண்டாடியதில், இந்த வார "சித்தன் அருள் - பெருமாளும் அடியேனும்" தொகுப்பை தட்டச்சு செய்து தயாராக வைக்க மறந்துவிட்டேன். ஆதலால், இந்த வார "பெருமாளும் அடியேனும்" தொடருக்கு ஒரு வார இடைவேளை விட்டுவிட்டு, அடுத்த வாரம் தரலாம் என்று நினைத்தேன்!

திடீரென அகத்தியரின் குரு சுப்ரமண்யரின் "மகா சஷ்டி" ஞாபகம் வர, எத்தனையோ அன்பர்கள் என்னென்னவோ விஷயங்களுக்காக விரதமிருப்பார்களே! அவர்கள் எண்ணம் ஈடேற முருகரின் அருள் எப்பொழுதும் அவர்களை சூழ்ந்திருக்க ஏதேனும் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது.

ஆம்! "சத்ரு சம்ஹார யாகம்" முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால், அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி" எனப்படுகிற சுலோகம்தான்.

அகத்தியப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு அந்த ஸ்லோகத்தை தேடத்தொடங்கினேன். விரைவில் அது கைவல்யமானது. அந்த ஸ்லோகத்தை, உங்களுக்கு, "மகா சஷ்டிக்கு" முன்பாக அகத்தியர் உங்கள் அனைவருக்கும் அளித்த பரிசாக கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும்.

உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், அகத்தியப் பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு ...........

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

8 comments:

  1. We all are blessed. Thank you very much. I will be more thankful if I could get the "Lyrics" in Tamil

    ReplyDelete
  2. sir, thank you very much for this moola manthiram

    ReplyDelete
    Replies
    1. Dear Sir, The Manthira link is not downloaded, u can please share it with me (gopalayogabala@gmail.com).
      Thank you,

      Delete
    2. Dear Sir, the above link is not able to download, so please share the manthira to my mail gopalayogabala@gmail.com ,Thank you, Om agathiswaraya namaga...

      Delete
    3. Sir, It is available. With too much of people accessing it, normally google drive gives such a message. I could not send it thro gmail since it is around 65 MB. I am planning to give another link in some other site. After uploading the same, i will provide the link in Siththan Arul

      Delete
    4. http://www.mediafire.com/listen/i3eand1wtlsdvai/Sri_-_Subramanya_Moola_MantraThrisadhi.mp3

      Delete
  3. @ Mr Gurumurthy : The lyrics are available in the following link : http://stotram.co.in/subrahmanya-trishati-namavali/

    ReplyDelete
  4. சத்ரு சம்ஹார திரிசதியை இயற்றியது யார் ஐயா?

    ReplyDelete