​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 14 November 2015

சித்தன் அருள் - 255 - உபதேச தத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓதியப்பரின் மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அடியவர்கள் அனைவருக்காகவும், குருநாதர் அகத்தியப் பெருமான் அவர்கள் காட்டித்தந்த நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முருகன், தந்தை சிவபெருமானுக்கு உபதேசித்ததன் தத்துவம் என்ன?

சிவபெருமான் முருகனிடம், "அப்பா முருகா! உலகிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் என் ஸ்வரூபமே. ஆகவே, நீ எனக்கு ஞான உபதேசம் செய்தால் உலகிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் கேட்டு உய்யும்" என்றார். அதன்படியே முருகன் சிவம் மூலம் ஜீவராசிகளுக்கு உபதேசம் செய்து கொண்டே இருக்கிறான். இதனால் சிவனின் உள்ளம் குளிர, ஜீவராசிகளின் உள்ளமும் குளிர்ந்ததாம்.

"சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு 
செவி மீதிலும் பகர் செய் குருநாதா" 

என்று பெரியவர்கள் எப்போதும் வேண்டிக் கொள்வார்கள்.

இந்த உபதேசத்தை ஜீவராசிகள் மனம் கொடுத்துக் கேட்டால் தானே, பகவான் உருவாக்கிய நந்தவனத்தில் ஆனந்தமாக விளையாடலாம்!

பகவான் விளையாடும் நிலமே நந்தவனம். தன்னுடன் விளையாடுவதற்காக பல ஜீவராசிகளைப் படைத்துள்ளான். இந்த ஜீவா ராசிகளுக்கு அவன் கொடுத்த "சுயேச்சை" (சுதந்திரம்) காரணமாக. இவைகள் அவன் உபதேசத்தை மறந்து, "நான்" என்ற பிசாசின் வயப்பட்டு அல்லல் படுகின்றன. இந்த சுயேச்சையை பகவானிடம் "இச்சையாக" மாற்றிவிட்டால் என்றும் பேரின்பமே.

ஐந்து பூதங்களிலும் மேலான அதிகன் முருகன். அதனால் அருணகிரிநாதர் அவரை "அதிகா" என்கிறார். "அனகா" என்றால் பாவமற்றவன். ஒருவன் மற்றொருவனை வைதால் (திட்டினால்), வையப்பட்டவனுடைய பாவத்தை வைதவன் வாங்கிக் கொள்கிறான். புகழ்ந்தால் புகழப்பட்டவனுடைய புண்ணியத்தை பங்கிட்டுக் கொள்கிறான். (இங்கே அகத்தியப் பெருமான் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வருகிறது. குருநாதர் சொல்வது இதுதான். பிறரை புகழ்வதில் எப்பொழுதும் தயங்காதீர்கள் என்கிறார். அதனால் பிறருடைய மனதை குளிர்விப்பதினால், நமக்கும் புண்ணியம் சேருகிறது என்று அர்த்தம்.]

சுப்ரமண்ய மூல மந்த்ர ஸ்தவம் என்கிற ஒலி நாடா உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது. எடுத்துக் கொண்டு அவர் அருள் பெற்று வாழ்க!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

2 comments:

  1. பணிவான நன்றி அய்யா!

    ReplyDelete
  2. https://m.youtube.com/watch?v=XwCoqyrT8Js

    ReplyDelete