​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 30 September 2025

சித்தன் அருள் - 1945 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் சித்தரின் காசி வாக்கு!





 15/6/2025 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: மீர்காட் கங்கை கரை.காக்கும் சிவன் காசி.

ஆதி நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் புசண்டனவனே!!!

அறிந்தும் இன்னும் பல பிறவிகள் மனிதன் எடுத்தாலும்.. அதனைப் பற்றி உணர்வதில்லை. 

அதனால்தான் சித்தர்கள் வந்து நிச்சயமாய் பின் பிறவியை முடித்துக் கொள்ளுங்கள் முடித்துக் கொள்ளுங்கள்... அதாவது புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் பின் கூறிட்டு கூறிட்டு!!

ஆனாலும் மனிதன் தன் போக்கிலே போயிட்டு அனைத்தும் இழந்து மீண்டும் இறைவன் பாதையை பின் வந்தடைகின்றானே!!...

நிச்சயம் இதுதான் பின் அறிவா?????

நமச்சிவாயன் கொடுத்த பின் அறிவா???

அறிவின் பயனை என்னவென்று சொல்வது???

அறிந்தும் யான் இதைத்தான்.. அறிந்தும்... ஆனாலும் பின் இப்படியே இப்படியே காலங்கள் செல்லச் செல்ல அழிவுகள் எதனால் என்பதை எல்லாம் புதுப்புது அழிவுகள் எதற்கு? ஏன்? 

ஏனென்றால் இறைவன் இருக்கின்றான் என்று காட்டுதல்!!

அதாவது வேண்டும் நிச்சயம். 

இதனைத் தான் நிச்சயம் இறைவன் உணர்த்தி வைப்பான். 

அப்படி உணர்த்தினால் மட்டுமே மனிதனுக்கு பயம் தோன்றும். 

இறைவன் இருக்கின்றான் நிச்சயம் அதாவது பின் தவறுகள் செய்தால் அறிந்தும் நிச்சயம் தண்டனைகள் கொடுப்பான் என்று நிச்சயம்.. இக்கலியுகத்தில் பின் உணர வேண்டும்.

ஏன்? எதற்கு? அறிந்தும் நிச்சயம் பின் சித்தர்கள் சொல்லிச் சொல்லி அதாவது... கலியுகம் என்பதன் பொருள்..அழியுகம்.

நிச்சயம் இக்கலி யுகத்தில் அனைவருமே பின் துன்பங்களோடு தான் வாழ்வார்கள்.

துன்பங்களோடு தான் பிணைத்து வாழ்வார்கள்.

இன்பம் இறைவன் கொடுத்தாலும் அதை அதை ஏற்றுக்கொள்ளும் சக்தி மனிதனிடத்தில் இல்லை.

இதனால் நிச்சயம் பின் இவை அறியாமல் இருந்தாலும்...அதை அத் தத்துவத்தை இறைவன் புகுத்தி புகுத்தி நிச்சயம் வெற்றிகளை தர வெற்றிகளை தர இன்னும் ஆழ்ந்த மனதோடு தியானங்கள் செய்ய அதற்காகவே ஓர் சித்தன் பின் வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!

அச் சித்தன் எங்கு? ஏது? மர்மமாக ஒளிந்து இருப்பான். 

அனைத்து பின் ஜீவசமாதிகளுக்கும் சென்று கொண்டே இருப்பான். 

நிச்சயம் அறிந்தும் ஏன்? எதற்கு? ஒவ்வொரு பின் ஜீவ சமாதிக்கும்..எவ்? நேரத்தில் பின் செல்லுதல் அவசியம் என்பவை எல்லாம்! 

அவ்வாறு சென்றடைதல்... ஒவ்வொரு ஆன்மாவிற்கும் நிச்சயம் என்ன பிடிக்கும்? என்பவை எல்லாம் பின் அகத்தியன் சொல்லி பக்குவங்கள் ஏற்படுத்தி பின் நிச்சயம் அதை எடுத்துச் சென்றால் அவன் ஆன்மா மகிழ்ந்து! மகிழ்ந்து! 

ஆனாலும் அனைத்து ஞானிகளுக்கும் பின் பிடித்தது ஒன்றே!!

"""அன்னத்தை அளித்தல்!!!...

(அன்னதானம்)

பரிபூரணமாக!!!... பின் நல் மனதை ஏற்படுத்துதல்.

நல் மனதை ஏற்படுத்தி பின் உண்மையை கூறுதல். 

போட்டி பொறாமையை நீக்குதல். 

ஞானங்கள் அதாவது அனைத்திற்கும் பின் காரணங்கள் பின் அறிந்தும்.. ஆசைகள்.

இதனால் அவ்வாறாக இல்லை என்றாலும் நிச்சயம் அறிந்தும் அமைதி காத்தல். 

இதனையே  அனைத்தும் பின் ஞானிகள் உணர்ந்திருந்து!! உணர்ந்திருந்து!!

இதனால் யாம் என்ன? ஏது? செய்ய?...

அதனால் நிச்சயம் தன்னில் கூட நமச்சிவாயனும் அறிந்தும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்க ! கொடுத்துக் கொண்டே இருக்க! 

கலியின் நிச்சயம் தன்னில் கூட காலம் முற்றிக் கொண்டே!! முற்றிக்கொண்டே!!

முற்றிக்கொண்டே வருகின்ற பொழுது நிச்சயம் துன்பத்தோடு தான் வாழ்வான். 

அதற்காகத்தான் சித்தர்கள் பல வழிகளிலும் தோன்றி நிச்சயம் வாக்குகள் செப்பி செப்பி... அதை பயன்படுத்த நன்று என்று சொன்னால்..

ஆனாலும் நிச்சயம் அதையும் கூட மனிதன் பொய்யாக்குகின்றான். 

அதாவது சித்தர்கள் சொன்னார்களே!!!... உண்மையை பின் பொய்யாக்குவான்! 

பொய்யை உண்மையாகுவான். 

கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் பொய்களாகவே 

கலியுகம் பொய்யுகம் என்பதை எல்லாம் அறிந்ததே!!

இங்கு நியாயத்தையும் தர்மத்தையும் எதிர்பார்க்க முடியாது!!

இதனால் இறைவன் கடுமையான தண்டனைகள் கொடுத்தால் அனைவரும் அமைதியாகி விடுவார்கள். 

நிச்சயம் பின் கொடுக்கத்தான் போகின்றான்...

நிச்சயம் அமைதி மனிதன் ஆகத்தான் போகின்றான்... நிச்சயம் உணரத்தான் போகின்றான்... நம்மால் பின் ஏதும் முடியாது என்று!!

அப்படி இறைவன் நிச்சயம் அறிந்தும் பின் நிச்சயம் பின் புரிந்தும் பின் தண்டனைகள் பல பல! 

அதாவது தண்டனைகள் அதிகரிக்க அதிகரிக்கத்தான் மனிதன் திருந்துவான். 

ஆனால் மனிதனோ இன்பங்களாக வாழ வேண்டும்!!

இறைவா அனைத்து துன்பங்களையும் களைய வேண்டும் நீதான்.. உத்தரவு அதாவது ஆசிகள் கொடுக்க வேண்டும்.. என்றெல்லாம் இறைவனிடத்தில் பின் சென்று!! சென்று!! வழிபட்டாலும் நிச்சயம் அறிந்தும் பின் அதாவது இறைவன் தர மாட்டான். 

ஏன்? எதற்கு? என்றால் நிச்சயம் உன் எண்ணத்தை அதாவது பின் மேன்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம்... பல சித்தர்கள் நிச்சயம் ஞானிகள் சொல்லிவிட்டனர்.

அவ் மனதை பின் உயர்வாக நிச்சயம் பின் வைத்துக் கொண்டால் அறிந்தும்.. இறைவனே உங்களிடத்தில் வருவான் இக்கலி யுகத்தில்!!

நிச்சயம் பல யுகங்களாக யான் பார்த்திட்டேன்!!

பல ஹோமங்கள் நிச்சயம் மந்திரங்கள் நிச்சயம் பரிசுத்தமான எதை எதையோ செய்து கொண்டு இறைவனை தேடி தேடி அலைந்தார்கள். 

ஆனால் கலியுகத்தில் உண்மையான பின் பக்தியும் அன்பும் கருணையும் நிச்சயம் இருந்தால்... அதோடு நல் மனதும் இருந்தால் பின் இப்படிப்பட்டவன் ஒருவனா? என்றெல்லாம் நிச்சயம் இறைவன் வந்து உங்களை ஆசீர்வதித்து நிச்சயம் மேலே அழைத்துச் செல்வான். 

மேலே அழைத்துச் செல்வான் என்பதை எல்லாம் நிச்சயம் உயர்வான இடத்தில் வைத்து நிச்சயம் அழகு பார்ப்பான்...

இதுதான் நிச்சயம் உண்மை. 

இதனால் இறைவனை தேடுங்கள் தேடுங்கள்.. ஆனால் கிட்டி விடுவானா??? என்ன!! இறைவன்!!

பைத்தியக்கார மனிதனே அறிந்தும்!!

ஆனாலும் எதை? யான்!! எதற்கு? சொல்கிறேன்.. நிச்சயம் தன்னில் கூட தந்தையானவன் ஒரு பிள்ளையை திட்டி தீர்த்தால்தான் புத்திகள் வரும்.

அதேபோலத்தான் பிள்ளைகளாகிய உங்களை.. நிச்சயம் திட்டி தீர்த்தால் மட்டுமே!!

பின் நிச்சயம்.

அவ்வாறாக பின் திட்டி தீர்த்தாலும் திருந்தவில்லை என்றால் நிச்சயம் தண்டனைகள்.. அதிகமாகும். 


இவ்வாறு தண்டனைகள் அதிகமாக அதிகமாக... நிச்சயம் மனிதன் திருந்துவான். 


அவ்வாறு தண்டனைகள் குறைய குறைய... நிச்சயம் யான் தான் பக்தன்!!

யான் இறைவனின் சேவகன்!!.. என்றெல்லாம்!!


அதாவது கலியுகத்தின் எப்பொழுது? முற்றிய காலம் தொடங்கும்? என்பதை எல்லாம் நிச்சயம் அதாவது மனிதனை தெய்வமாக எண்ணுவார்கள்! 


இதை தன் எப்படி?? அதாவது மனிதனுக்கு பூசைகள் பின் அபிஷேகங்கள் நடக்கும்! 

நிச்சயம் மனிதனை வணங்குவான் மனிதனே!!!


இதெல்லாம் எப்பொழுது நடக்கின்றதோ? 

அப்பொழுது கலியின் முற்றிய காலம் பின் தொடங்கிவிட்டது. 


எப்பொழுது பின் மனிதனுக்கு அபிஷேகங்கள் பின் மனிதனுக்கு பல ஆராதனைகள் செய்கின்றார்களோ!?!? 


அப்பொழுதே அழிவுகள் தொடங்கிவிட்டது!!


ஏனென்றால் மனிதன் மனிதன் தான். 

நிச்சயம் இறைவன் அனைத்து மனிதர்களுக்கும் ஒரே அறிவைத்தான் நிச்சயம் கொடுத்து அனுப்புகின்றான். 


ஆனால் மனிதனோ அவ் அறிவை பயன்படுத்திக் கொண்டு... நிச்சயம் பொய்களாக்கி திரிந்து கொண்டிருக்கின்றான்.. வேடங்களாக அணிந்து...


யாம் எதையும் ஏற்கப்போவதில்லை.. நிச்சயம் தன்னில் கூட...


யான் ஈசனின் நண்பன்!!... இன்னும் இன்னொருவன் பார்த்தால் நிச்சயம் தன்னில்... எந்தனுக்கு ஈசனையே தெரியும் என்பது...


அப்பப்பா!!... கலியுகத்தில் இப்படி.. அதாவது பக்திகள் பொய்யாக வேண்டும் என்பதை கூட!!! கலியின் கட்டாயம்!!


அதாவது கலியுக புருஷனின் கட்டாயம். 


இதனால் நிச்சயம் கலி அதாவது நிச்சயம் தன்னில் கூட கலியின் காலம் நிச்சயம் தன்னில் கூட கையில் இருப்பதால் !! எங்கு? இங்கு!! ஒழுங்காக வாழப்போகின்றான்?? மனிதன்!!


நிச்சயம் பின் எங்கள் பேச்சைக் கேட்டால் பிழைத்துக் கொள்வார்கள். 


ஆனாலும் கலியும்  அதாவது கலியனும் (கலிபுருஷன்)கொடுப்பான்!!.... ஆனாலும்.. நிச்சயம் கடைசியில் பின் இப்படியே நின்று விடு. 


நீ!! இறைவனால் படைக்கப்பட்டவன்!!

இதனால்  பின் என் பின்னே வந்தாய் அல்லவா!!!

நிச்சயம் அறிவுகள் இறைவன் கொடுத்தான் அல்லவா!!

அதை நீ பயன்படுத்தி கொள்ளவில்லை.. அப்படியே நின்று விடு! என்று நிச்சயம் நடுக்காட்டில் விட்டு விடுவானப்பா. 


இதனால் அப்பனே மீண்டும் துன்பங்களோடு துன்பங்களோடு...


இதனால் நிச்சயம் பின் நல்லோர்கள் எல்லாம் தீயோர்கள் ஆவார்கள்!!

தீயோர்கள் எல்லாம் இறைவன் நல்லோர்கள் ஆக்குவதற்கு நிச்சயம் ஏன் எதற்கு என்றெல்லாம். 


இதனால் எதை புரிந்து கொள்ள நிச்சயம்.. கலியுகத்தில் நிச்சயம்.. கலியின் காலம் தான் பின் கை ஓங்கி நிற்கும்!!!


அவ் கையை நிச்சயம் பின் கீழ் இழுக்க நிச்சயம் பின் சித்தர்கள் யாங்கள் இருக்கின்றோம். 


இதனால் மனிதன் இன்னும் வாழ்க்கையைப் பற்றி பின் நிச்சயம் தெரிந்து கொள்ளவே இல்லை. 



அவை தெரிந்து கொண்டால்... எங்கு பிரச்சனை வரப்போகின்றது??


நிச்சயம் துன்பம் இல்லாமல் வாழலாம். 


ஆனாலும் நிச்சயம் மனிதன் எவ்வளவு சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை கலியுகத்தில். 


ஏனென்றால் நிச்சயம் மனிதன் ஒரு சோம்பேறி... எதைச் சொன்னாலும் நிச்சயம் பின் அதை அதாவது பணத்திற்காக இவ் மந்திரத்தை சொன்னால் பணம் வரும் என்பது!!


நிச்சயம் பின் அவ்வாறு இவ்வாறு செய்தால் நிச்சயம் வாழ்க்கை இன்பமாக மாறிவிடும் என்பது. 

நிச்சயம் இவ்வாறு செய்தால் தொழில் வந்துவிடும் என்பது. 

இவ்வாறு செய்தால் பின் திருமணம் நடந்து விடும் என்பது!!!


நிச்சயம் ஆனால் மனிதன் மனிதன் கணக்கு இட்டுக் கொண்டே இருக்கின்றான். 


ஆனால் இறைவன் இட்ட கணக்கு நிச்சயம் பின் எப்பொழுதும் பின் மாற்றவும் இயலாது.. மனிதனாலும் கூட..


ஏனென்றால் மனிதன் சொல்லலாம் அவை நடக்கும் இவை நடக்கும் என்று!!!


ஆனாலும் உண்மையைக் கூட எடுத்துரைத்தால் நிச்சயம்... ஆனாலும் மனிதன் சொல்லலாமே.. யானே தடுக்கின்றேன் என்று!!


முடியவில்லையே!!


நிச்சயம் அவ்வாறு பின் அறிந்தும் கூட... வாயால் மட்டுமே!!!


இதனால்தான் பின் யாங்களும் சொல்வதில்லை... எங்களால் பின் நிச்சயம் அனைத்தும் தடுக்க முடியும்..


இறைவன் கோபப்பட்டாலும் நிச்சயம்... உலகம் தலைகீழாகவே....

ஆனாலும் தடுத்துக் கொண்டிருக்கின்றோம். 

பின் ஏதோ ஒரு ரூபத்தில் அனைவரையும் சித்தர்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் நலமாகவே. 


இதனால் நிச்சயம் இன்னும் ஒரு சக்தி ஏன்? எதற்கு? இன்னும் பலங்கள் காசி தன்னிற்கு... ஏற்பட்டது என்று பின் இங்கு விவரிப்பேன்.


அதாவது பின் விஷ்ணு பக்தன்.. ஒருவன் இருந்தான். 


அதாவது அறிந்தும் பின் இப்பொழுது  மலையில் ஏழுமலையில் (திருப்பதியில்)


அவ்வாறாக.. அவனையே நினைத்து நினைத்து... நினைத்து நினைத்து உருகி கொண்டு உருகி கொண்டு!!


இதனால் பின் விஷ்ணுவோ... இன்னும் அதிகமாக அதிகமாக பின் தண்டனைகள்... தண்டனைகள் என்று சொல்லப் போவதில்லை இதை.. நிச்சயம் துன்பங்கள் கொடுத்துக் கொண்டே இருந்தான்... நிச்சயம் பார்ப்போம்... இவன் நம் தன்னை நம்பி விடுகின்றானா??.. இல்லை பின் கடைசியில்.. அதாவது பாதியில் விட்டு செல்கின்றானா??.. என்று!! மீண்டும் பல அதாவது... அவனுக்கு உண்ணுவதற்கு உணவு கூட கிடைக்கவில்லை. 

பல பிரச்சினைகள் பின் வந்தது.. வீழ்ந்தது எதை என்று புரியாமலும் துன்பத்திலே... ஆழ்ந்து ஆழ்ந்து!!!


இன்னும் எப்படி எல்லாம் துன்பம் கொடுக்க வேண்டுமோ!? அப்படியெல்லாம்... அதாவது நம் தனை வணங்க கூடாது... நம் தன் மேல் பின் அதாவது.. வெறுப்பு ஏற்பட வேண்டும்... என்றெல்லாம் அறிந்தும் கூட பின்!! விஷ்ணு அவன். 


இதனால் நிச்சயம் ஆனாலும் நிச்சயம் அவனோ!? பின் விடவில்லை விடவில்லை!!! பின் அதாவது... நாராயணா நாராயணா என்றெல்லாம்!!!

மீண்டும் அறிந்தும்!!



ஆனாலும் தேவர்களும் இந்திரர்களும் இன்னும் ஏனைய ஞானியர்களும் கூட...ஏன்??? விஷ்ணு பகவான்...இவ் நிலைக்கு வந்து விட்டான்???


தன் பக்தனை இவ்வாறு சோதிப்பதா???? என்றெல்லாம் நிச்சயம் அனைவரும் இந்திரனும் கூட பின் தேவர்கள் கூட நிச்சயம்.. விஷ்ணுவிடத்திற்கு வர!!


 பின் நிச்சயம்...

இறைவா!!!... இவையெல்லாம் பின் சாத்தியம் இல்லை... அதாவது உன் பக்தன்... ஏழை பக்தன் ஒருவன் இருக்கின்றான் அல்லவா... நிச்சயம் இவந்தனக்கு இவ்வளவு கஷ்டங்களா???

கடைசியில் இவந்தனுக்கு பின் நோய்களும் ஏற்படுத்தி விட்டாய் அல்லவா..

நிச்சயம் இவ்வாறு...

எப்படி பிழைப்பான்?? இவன்!


ஆனாலும் நிச்சயம் இது தவறு என்றெல்லாம்!!


ஆனாலும் பின் விஷ்ணுவோ.... இவன் என் பக்தன். 

சோதிப்பது என் கடமை. 

ஏன்? எதற்கு? என்றெல்லாம் முடிவில் தெரியும்! 


ஏன் ?எதற்காக? இவனை சோதிக்கின்றேன்?... என்றெல்லாம் நீங்கள் முடிவில் உணரத்தான் போகின்றீர்கள். 


அதனால் என்னை யார் தடுத்தாலும்... நிச்சயம் தன்னில்... அறிந்தும் கூட... இவந்தனுக்கு கஷ்டங்கள் தான் கொடுப்பேன் என்று!!!


ஆனாலும் பத்மாவதி தாயாரும்... நிச்சயம் பின் வந்து... அறிந்தும் நிச்சயம்... விஷ்ணு எதை என்று புரிய.. அமைதி காத்தாள்!!!


ஆனாலும் மீண்டும் மீண்டும்... அடித்தான்... ஆனாலும் பின் அனைத்தும் தாங்கினான்... இதனால் பின் பைத்தியக்காரனாகவே.. அவனை ஆக்கிவிட்டான் விஷ்ணுவே!!!


அறிந்தும் அப்பொழுதும் பின் சென்று பிச்சைகள் ஏந்தி அறிந்தும் நிச்சயம் ஆனாலும் பின் அதாவது உடம்பில் கூட... துணி இல்லாமல் வலங்கள்.... எங்கெங்கோ சென்று சென்று. 


ஆனாலும் அனைவருக்குமே பின் விஷ்ணுவின் பின் விஷ்ணுவின் மீது கோபங்கள் ஏற்பட்டுவிட்டது.. அறிந்தும். 


ஆனாலும் இப்படியா அதாவது... நிச்சயம் விஷ்ணுவின் கருணை யாங்கள் என்னவென்று நினைத்தோம்!!!


ஆனால் இதற்கு தகுந்தார் போல் இல்லை!!!


இதனால் நிச்சயம் அறிந்தும் கூட... புரியாமலும் கூட நிச்சயம் நிச்சயம்..இவை தன் உணர்ந்து... உணர்ந்து இதற்கு மேற்கொண்ட பல வகையிலும் கூட. 


இதனால் பின் அனைவரும் வெறுத்தார்கள்... இந்திரர்களும் தேவர்களும் இன்னும் தேவாதி தேவர்களும் கூட!!... நிச்சயம் விஷ்ணுவின் இவ்வாறா??... கருணை படைத்தவன் இல்லையே... என்றெல்லாம். 


ஆனாலும் நிச்சயம் பின் பலமாக இந்திரனும் வந்து!!!


பின் விஷ்ணுவே!!!... உனை யான் எங்கேயோ வைத்திருந்தேன்!!... நிச்சயம் தன்னில் கூட..

பின் கருணை இல்லாதவன் நீ. 

அவ் ஏழையை இவ்வளவு சோதிக்கின்றாயே என்று!!!


இன்னும் பல ஞானிகளும் கூட பின் நிச்சயம் அதாவது...


விஷ்ணுவே இவ்வாறு கருணை அறிந்தும் பின் நிச்சயம்... இவ்வாறாக கருணை படைத்தவனாகவே.. நீ இல்லையே!!!


இதனால் என்ன? ஏது? என்றெல்லாம்.. அனைவருமே கூட!!


இதனால் எதை என்று புரிந்து கொள்ள... இங்கு ஆள் இல்லை. 

இங்கு இறைவனை நிச்சயம் புரிந்து கொள்ள ஆள் இல்லை. 


இறைவனை யான் பார்த்தேன்... அறிந்தும் இறைவன்... என் வாக்கில்!!... அதாவது இறைவன் எனக்குள் வருகின்றான்.. நிச்சயம் இவையெல்லாம் பின் இக்கலியுகத்தில்... ஏற்க முடியாது. 


ஏனென்றால் இறைவன் வந்து விட்டால்... நிச்சயம் அமைதியாகி விடுவான்..

நிச்சயம் இதோ இதைத்தான்.. சொல்லிக் கொண்டு சொல்லிக்கொண்டு!!


இதனால் நிச்சயம் இவ்வாறாகவே... அலைந்து திரிந்து கடைசியில்... எங்கெங்கோ அவன் சென்று அரங்கத்தை... அதாவது தற்பொழுது ஸ்ரீ அரங்கம் (ஸ்ரீரங்கம்) அரங்கத்தில் அமர்ந்து விட்டான். 


அமர்ந்திட்டு நிச்சயம் அறிந்தும் இவைதன் உணராமலும் கூட.. ஆனாலும் மீண்டும் வயதாக... அதாவது கண்களும் மங்கி போயிற்று!! நிச்சயம் காதுகளும் கேட்காமலும்... நிச்சயம் நடக்கவும் முடியாமல்.. வயதான காலத்தில்!!


ஆனாலும்.... இறைவா!! இறைவா!!.. அரங்கனே!! அறிந்தும் இவ்வளவு சோதனைகள் கொடுத்திட்டாய்!!


யான் என்ன உன்னை வெறுப்பேனா!?!? என்ன!! அறிந்தும் புரிந்தும்!!


இதனால் நிச்சயம் தன்னில் கூட... யான் எப்பொழுதும் பின் சந்தோசமாகவே!!!... நீ துன்பங்கள் அனைத்தும் கொடுத்தால்... ஆனால் இவை துன்பமாக யான் எண்ணவில்லையே!!!


நிச்சயம் பின் உன் மேல் அன்பு கொண்டதனால் இவையெல்லாம் எனக்கு இன்பமாகவே!!!


அடடா!!... மனிதா!!!.. அறிந்தும் இவந்தனும் ஒரு மனிதன் தான்.

நிச்சயம் பக்திகள் இருந்தால்... இப்படி இருக்க வேண்டும். 


அப்படி இல்லை என்றால்... ஒதுங்கிக் கொள்ள வேண்டும். 


ஆனாலும் இப்படி இல்லையே !!!


கஷ்டங்கள் கொடுத்தால் நிச்சயம் இறைவனை... நிச்சயம் நினைப்பது.... இறைவா!! கஷ்டத்தை கொடுத்து விட்டாயே!!!

நிச்சயம் தீர்க்கும் வழிகள் நிச்சயம்... ஓடோடி செல்வது!!!


இன்பம் வந்தால் இறைவனா??? எங்கு இருக்கின்றான்??

அனைத்தும் என்னிடத்தில் இருக்கின்றது... என்னிடத்தில் காசுகள் இருக்கின்றது பொருள்கள் இருக்கின்றது... இதோ இன்னும் பின் இன்ப நிகழ்ச்சிகள் இருக்கின்றது. 

இவை எல்லாம் நிச்சயம் என்றெல்லாம்.



இதனால் இன்பம் வந்தால் இல்லை!!!

துன்பம் வந்தால் இருக்கின்றது...


எப்படிப்பட்ட மனிதன்?? அதாவது அறிவுகள் படைத்த மனிதனா ? இது!?


ஆனாலும் நிச்சயம் வயதும் அதிகமாகிவிட்டது ஆனாலும் அறிந்தும்.. ஆனாலும் ஒரு துளி கூட பின் நிச்சயம் தன்னில் கூட துன்பத்தை... துன்பமாகவே எண்ணவில்லை!!!


துன்பத்தை துன்பத்தாலே அடித்தான்!!

துன்பத்தால் அடித்து இன்பமாய் அவனே மாற்றிக் கொண்டான். 


ஆனாலும் கடைசியில் நிச்சயம் விஷ்ணு பார்த்து... பின் அறிந்தும் பின் கண்ணீர் சிந்தினான்...


இப்படி ஒரு பக்தனா!????

இதுவும் கலியுகத்தில் நடந்ததுதான். 


இப்படி ஒரு பக்தனா? என்று!!!.. ஆனந்தக் கண்ணீர்... பார்த்துக் கொண்டே அரங்கத்தில் நிச்சயம்.. அறிந்தும்! 


அக் கண்ணீர் ஆனது.. நிச்சயம் அவன் தலை மேல் விழ நிச்சயம்.. அறிந்தும் அறிந்தும். 


ஆனாலும் மேலே கீழே பார்த்தான். 


ஆனாலும் பின் படும் படியாக நிச்சயம் வெளிச்சம்... அதாவது வெயில் என்று அறிந்தும்...


ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் நிச்சயம் அறிந்தும் பின் இங்கு விழுகின்றது...எது? ஏது? என்றெல்லாம்... நிச்சயம்!!


இதனால் பின் மறுரூபம் எடுத்து கீழே வந்தான் விஷ்ணுவே!!

அறிந்தும்... வந்து இதை தன்... புரிய நிச்சயம்..


. முதியவனே!!!... ஏன்? இந்த நிலைமை?....இவ் வெயில் தன்னில் கூட இப்படி... அமர்ந்திருக்கின்றாயே!!


நிச்சயம் தன்னில் பின் யாராவது உந்தனுக்கு.. இருக்கின்றார்களா? என்று கேட்க!!



அறிந்தும் புரிந்தும் எனக்கு... பெரிய சொந்தங்கள் இருக்கின்றது...


பின் ஏது சொந்தம் என்று விஷ்ணு அவன் கேட்க!!


நிச்சயம் எனக்கு ஒருவன்... நாராயணன் மட்டுமே சொந்தம்!!!

இவன் இவ்வுலகத்தில் மிகப்பெரியவன்... இவன் சொந்தக்காரன் என்றால் இவ்வுலகத்தில் பின் என்னை விட அதிர்ஷ்டசாலி... இங்கு இல்லை என்று. 



நிச்சயம் பின் விஷ்ணுவோ... குபு குபுவென்று பின் கண்ணீர் விட்டான்...


இப்படி ஒரு பக்தனா???


இவ்வளவு சோதனைகள் செய்தேனே அறிந்தும்.. எதை என்று புரிய என்று!!!


ஆனாலும் அவ் முதியவன் விஷ்ணுவை  பார்த்து... நிச்சயம் அறிந்தும் பின் மகனே!!!... ஏன் எதற்காக இவ்வளவு...(கண்ணீர்) நீர்?? 


யானே... அதாவது எந்தனுக்கே பல கஷ்டங்கள்... யானே வருத்தப்படவில்லை!!

யான் ஒரு வார்த்தை தானே சொன்னேன். 

நிச்சயம் பின் நீ இவ்வாறு... அழுகின்றாயே!!!

நியாயமா???... அறிந்தும் புரிந்தும்! 

இதனால் வாழ்க்கை தத்துவத்தை உந்தனுக்கு புரியவில்லையா என்று!!



ஓடோடி வந்து கட்டி அணைத்துக் கொண்டான்...அவ் முதியவனை!!!


முதியவனும் கூட மகனே!!... மகனே!!..ஏன்? என்று!!


 நிச்சயம்!!

நீங்கள் என் தந்தையே என்று விஷ்ணுவும்..கூட!!


பின் விஷ்ணுவும் அழகாகவே நிச்சயம் காட்சிகள் கொடுத்தான். 


ஏனென்றால் இவனை உள்ளே அனுப்பவில்லை


(அந்த பக்த முதியவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை உள்ளே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அனந்த சயன கோல ரூபத்தில் விஷ்ணு பகவான் அந்த முதியவருக்கு தரிசனம் கொடுத்தார்) இதனால்... சராசரியாகவே நிச்சயம் அறிந்தும் அதாவது பின் பாற்கடலில் பள்ளி கொண்டார் போல் நிச்சயம் அழகாக... இதனால் கெட்டியாக பிடித்துக் கொண்டு!! பிடித்துக் கொண்டு!


 பின் நிச்சயம் அறிந்தும்.. அதாவது பின் இதை என்று அறிய... நீயே என் தந்தை என்று... விஷ்ணுவும் கூற!!!


நிச்சயம் அறிந்தும் அவ்வாறாக... பின் இறைவா உன்னை காணவே... ஓடோடி வந்தேன் இப்பிறவி தன்னில். உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். 



அப்படியெல்லாம் நிச்சயம் நீ கூறக்கூடாது.. நிச்சயம் இவை புரிய... புரிந்துகொள் என்றெல்லாம். 


நிச்சயம் இவ்வாறாக எவ்வளவு கஷ்டங்கள் வைத்தாலும்.. இவையெல்லாம் நிச்சயம் தன்னில் பின் துன்பம் பின் இன்பமாக மாற்றினாயே!!!!!!! நிச்சயம் இவ்வாறாக.. இருக்கும் மனிதன் தான் எந்தனுக்கு தேவை.. என்று அறிந்தும்!


பின் அதாவது பின்.. எவை புரிய எதை என்று கூட.... தந்தையே இவ்வுலகத்தில் உந்தனுக்கு என்ன வேண்டும்?? என்று!!



நிச்சயம் அதாவது இவ்வுலகத்தில் நிச்சயம் கலியுகத்தில் பின் பாவங்கள் தான் மனிதன் அதிகம் செய்யப் போகின்றான்.. நிச்சயம் அவற்றின் தன்மையைப் போக்க நிச்சயம்.. ஒரு வரம் பாருங்கள் என்று. 


அவ்வளவு கஷ்டங்களிலும் கூட மனிதனுக்கு... அறிந்தும் கூட நன்மைகள் செய்யத்தான்.


ஆனாலும் பல மனிதர்களையும் பார்த்து விட்டான்... இவந்தனுக்கு பின் அதாவது... முதியவனுக்கு எங்கு சென்றாலும் உணவு வேண்டுமென்று. ஆனாலும் உணவு இல்லை என்று.. நிச்சயம் எதையெதையோ..

ஆனாலும் மனிதனுக்காக...


(முதியவர் பிச்சை ஏந்தி கொண்டு இருந்த பொழுது ஒருவேளை உணவு கூட தர மறுத்த மனிதர்களுக்காக நன்மையே செய்ய நினைத்தார்)



ஆனாலும் நிச்சயம் தந்தையே அருள்கின்றேன்!!!


 நிச்சயம் பின் அதாவது பின் கங்கை நதிக்கு செல்!!!! 


அங்கு நீராடு!!!


நிச்சயம் அங்கு நீராடிக் கொண்டே இருப்பாய் நீ எப்பொழுதும்!!!

அதை நிச்சயம் அங்கு வந்து.. நீராடுபவர்கள் எல்லாம் தன் பாவத்தை நிச்சயம்.. போக்கிக் கொள்வார்கள் என்று. 


இதனால் அதாவது சாகா வரத்தை உந்தனுக்கு.. கொடுக்கின்றேன் என்று!!!


நிச்சயம் தேவாதி தேவர்களும் இந்திரர்களும்... கூட இப்படிப்பட்ட... கருணையா??.. விஷ்ணுவிற்கு என்று!! எண்ணி!!!


நிச்சயம் இதனால்... சாகா வரத்தோடு... அறிந்தும் கூட இன்னும் கூட...


 இங்கு அதாவது காசி தன்னில்... அடியில் கூட பின் நிச்சயம்..(கங்கை நதியில் உள்ளே). அமர்ந்து அழகாக இருக்கின்றான். 


நிச்சயம் அறிந்தும் கூட பின்... தண்ணீர் அவன் மேலே ஓடுகின்றது!!


இதனால் நிச்சயம் அனைத்து பாவங்களையும் கூட நிச்சயம் பின் கரைந்து ஓடிக் கொண்டே இருக்கின்றது. 


இதனால்தான் இறைவனை நம்பினோருக்கு நிச்சயம்.. விடிவெள்ளி உண்டு. 


துன்பங்கள் துன்பங்கள் என்ற வாழ்க்கையை கொடுத்து... இன்பம் என்பதை கூட நிச்சயம்.. காலங்கள் காலங்களாக கொடுத்து விடுவான். 


ஆனால் பின் மனிதன் எவ்வளவு? புத்தி கெட்டவன்!!... பின் அதன் உள்ளே.. ஒரு பத்து, இருபது ஆண்டுகள் கஷ்டங்கள் கொடுத்துவிட்டால்.... அய்யய்யோ!!!!.... கஷ்டங்கள் வந்துவிட்டதே!!!...


இறைவனே இல்லை!! இறைவனை வணங்கினால் கஷ்டம் தான்.. என்று!!


உண்மை இக்கலி யுகத்தில் நீ எதை எதையோ பின் செய்து கொண்டு இறைவனை வணங்கினால் இன்பத்தை கொடுத்து விடுவானா?? என்ன!!


இறைவனை காண்பது அவ்வளவு சுலபமில்லை!!


நிச்சயம் இறைவனை உணர்வது அவ்வளவு சுலபமில்லை!!


நிச்சயம் தன்னில் கூட... இறைவன் நினைப்பு பின் சொல்லலாம்... என் தந்தை அவை செய்வான் இவை செய்வான் என்று!!


நிச்சயம் செய்யப் போவதில்லை!!


உன் எண்ணத்திற்கு தகுந்தவாறு தான் அனைத்தும் நடக்கும். 


இதை உணர்ந்து கொள்ள வேண்டும்..


பின் அறிந்தும் இதனால் தான் நிச்சயம் இன்னும் சிறப்புகள் இருக்கின்றது. 

அவையெல்லாம் வருகின்ற காலத்தில் அழகாகவே செப்புவேன்!!


ஆசிகள்!! ஆசிகள்!! கோடி மனிதர்களே!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 27 September 2025

சித்தன் அருள் - 1944 - திரு ஹனுமந்ததாசனின் கஞ்சமலை (சித்தர் கோயில்) வாக்கு - 4!


சித்தன் அருள் - 1937 ன் தொடர்ச்சியாக ......

அகத்தியனுக்கு சிறிது பங்கு உண்டடா. ஏனென்றால் சிலசமயம் அகத்தியன் தன்னடக்கமில்லாமல் பேசுகிறானோ என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடக்கூடாது. எல்லாம் நானே நானே என்று சொன்னால் அதுகூட தலை கவுரவம் தானே. ஆக என் பொறுப்பை கூட காலாங்கிநாதர் பாதத்தில் வைக்கிறேன். அன்னவனும் இந்த பிரளயத்தை ஏற்படுத்தியவன். பிரளயத்தை காப்பாற்றியவன். இன்னும் அடுத்த பிரளயத்தை உண்டு பண்ணக்கூடியவனும் காலாங்கிநாதனே. அந்த ப்ரளயத்துக்குக்காக இப்போவே உங்களயெல்லாம் கூப்பிட்டு, உங்களுக்கெல்லாம் புனர்வாழ்வு கொடுத்து, உங்களில்  சிலரை விண்ணிலே நட்சத்திரமாக மாற்றி, உங்களை உலா வர செய்ய போகிறான். அந்த புண்ணியம் உங்களுக்கும் உண்டு, அவனுக்கும் உண்டு. 

அந்த பிரளயம் எதிர்காலத்தில் ஏற்பட போகின்றது. என்றைக்கு உலகத்தை பற்றி கேட்கிறார் பலர், 2012 இல் உலகம் அழியுமா என்று பலர் பலர்  அகத்தியனை கேட்டதெல்லாம் உண்மை. ஆக உலகம் அழியாது என்றெல்லாம் விளையாட்டாக சொல்வதெல்லாம் உண்டு. ஆக உலகம் அழிந்தாலும் இவன் அழியக்கூடாது அவ்வளவுதானே, எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கிறது. உலகமே பிரளயத்தில் அழிந்து போனாலும் நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் மாந்தர்களிடம் அதிகப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த எண்ணம் மாற வேண்டும் என்று ஒரு பக்கம் இருக்கட்டும், என்றைக்காவது ஒருநாள் உலகத்தில் பிரளயம் ஏற்பட்டால் ? அப்பொழுது உங்களுக்கு பின் வருகின்ற சந்ததிகள் எல்லாம் பிரளயத்தில் மாண்டு விடக்கூடாது, அவன் மேலாக இறைவனின் பொற்பாதங்களில் அடையவேண்டும். அதற்கும் வழியிலே காலாங்கிநாதன் இன்றைக்கு அனுமதி தந்திருக்கிறான். ஏனென்றால் அவன்தான் பிரளயத்தை உண்டு பண்ணக்கூடியவன், அவன் கூட நிற்பேன். ஆகவே எனக்கும் தெரியாமலே அவன் குடுக்கின்ற வாக்குறுதியடா இது. 

உங்களுடைய சந்ததிகள் பிற்காலத்தில் இன்னும் சில காலங்களிலே இந்த உலகம் பிரளயத்தில் அழியப்போகிறது, அப்பொழுது அழியும் பொழுதெல்லாம். உங்களுடைய சந்ததிகள், வம்சாவளிகள் நீ செய்த புண்ணியங்களெல்லாம் வீணாக கடலிலே கலந்து அழிந்துவிடக்கூடாது. அது உயர்ந்த நிலையில் உன்னை தூக்கி உட்கார வைக்க வேண்டும். அந்த புண்ணியத்தையும் அவன் ஏற்கிறான். ஆகவே இப்பொழுது இங்கு வந்த நேரம் அனைவருக்கும் அவர்கள் பிற்கால சந்ததியினருக்கு, வம்சாவளிகளுக்கு கூட, அவன் வாழ்க்கை கொடுக்க காலாங்கிநாதன் முன்வந்திருக்கிறான். அந்த நல்லநாள் இந்தநாள் என்பதால் எனக்கும் மகிழ்ச்சியாக இருகின்றது. 

இன்னும் சொல்லப் போனால் சிலநாட்களுக்கு முன்பு அகத்தியன் சொன்னேன்,  அகத்தியன் குள்ளமைந்தன்  அல்ல, குள்ளமுனி அல்ல, தொந்தியை போட்டு அரிதாரம் பூசி ஒருவன் அகத்தியனாக நடித்ததால், அன்று முதல் அரிதாரம் பூசியவனே அகத்தியனாக மாற்றி விட்ட பெருமையெல்லாம் உங்களுக்கு உண்டடா. ஆனால் நானோ நெடுது உயர்ந்தவன், நீன்றசடைமுடி கொண்டவன், கருநிறமுடிகொண்டவன், ஒல்லியான தேகத்தை கொண்டவன் என்றெல்லாம் சொன்னேன், யாரும் கேட்க மறுக்கிறார்கள். அப்பொழுது சொன்னேன் இன்றைக்கு தினம் உங்களுக்கு சந்தோஷமாக கூடச்சொல்வேன், காலாங்கிநாதனும் உங்களையெல்லாம்  அழைத்து இந்த நல்ல ஒரு கருணை மிகுந்த தனங்களையெல்லாம் வழங்கி கொண்டிருக்கிறானே ! இதை கேட்கும் பொழுது எனக்கே ஒரு சுற்று வயிறும் உடம்பும் பெருத்து விட்டது. ஆகவே நீங்கள் பழைய அகத்தியனாகவே எண்ணிக்கொள்ளலாம் ! யாரும் கவலைப்பட வேண்டாம். ஆகவே மனம் சந்தோஷப்பட்டால் வாழ்கை நன்றாக இருக்கும்! சிரித்தாலே வியாதிகளும் போகும்! சிரிப்பதற்கு யோசிக்கின்ற காலமடா இது.  ஆகவே அகத்தியனையே சிரிக்க வைத்தார் காலாங்கிநாதர்!

அவன் இன்னும் பல பல ஆய்வு  செய்ய போகிறான். இன்னும் பல்வேறு தொண்டுகளை செய்ய போகிறான். அந்த பெருமைகள் எல்லாம் இங்குள்ள அத்தனை பேருக்கும் தானாக நிச்சியம் கிடைக்கும். இவர்கள் மிக 102 கோடி மக்கள் இல்லை, மிக மிக புண்ணியம் பெற்றவர்கள் இங்கு இருக்கிறார்கள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இருக்கிறது என்று அகத்தியன் சொல்லுவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அகத்தியன் சொல்லி வரவேண்டியது கட்டாயம் இல்லை, எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறது, எத்தனையோ பேர் இன்றைக்கு கூட தொடர்ந்து நிழலாக வந்து கொண்டிருக்கிறது. 

ஒரு சமயம் இங்கு வரும் பலருக்கு கூட, காலாங்கிநாதர் இங்கு வரச்சொன்னாய் போகிறோம் என்று சொன்னால் கூட, எண்ணமெல்லாம் வீட்டிலும் , குழந்தைகள் மேலும், அவர்கள் மேல் பாசத்தோடு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாசம் அவர்கள் கண்ணை மறைப்பதெல்லாம் எனக்கு தெரியும். ஆக எதோ வந்துவிட்டோம் எப்பொழுது திரும்ப போகிறோம் என்ற எண்ணம் கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் அவர்கள் தாண்டி அவர்கள் செய்த தவறுகளையும், இன்னும் ஆன்மீக நெறியில் இன்னும் ஈடுபடாமல் இன்னும் அலைபாய்கிறார்களே அவசியம் வருத்தப்பட்டாலும் கூட, என்னருமை நண்பன் காலாங்கிநாதனே வரச்சொல்லி, அதையும் மரியாதை கொடுத்து வந்தீர்கள் அல்லவா? சித்தனுக்கு மரியாதையை கொடுக்கின்ற காலம் எதுவோ? இனி சித்தர்களே இந்த காலத்தை உலகத்தை ஆட்சி செய்யப்போகிறார்கள்! காலாங்கிநாதர் தான் அதற்கு தலைமை ஏற்பார்! நான் பின்னிருந்து செயல்படுவேன்! இனி தெய்வத்தை நோக்கி கூட நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டாம், சித்தர்களை நெருங்கினால் தெய்வத்திடம் நேரடியாக போய் சேர்ந்துவிடும்! இனி எதிர்காலம் முழுவதும் சித்தர்களின் ஆட்சி என்பதற்கு இன்றைக்கு தான் முதல்முதலாக ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது !

இறைவனுக்கும் எல்லா சித்தர்களுக்கும் இன்றையதினம் மாலை மூன்று மணிக்கு மேலே நாலேகால் மணிக்கு உள்ளே இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருக்கின்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 25 September 2025

சித்தன் அருள் - 1943 - திருவனந்தபுரம் வாக்கு - 21-09-2025 !


ஆதி சிவசங்கரியின் திருக்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே எனது ஆசீர்வாதங்கள் அனைவருக்கும். குறைகள் வேண்டாம் அப்பனே. நீயும் சொன்னாய் அப்பனே, அதாவது கேள்விகள் என்னிடத்தில் இல்லை என்று. ஆனால், உந்தனை யான் கேள்விகள் கேட்க போகின்றேன் அப்பனே! அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.

அறிந்தும், பாபங்களில் முதலில் வருவது பித்ரு சாபங்கள்.  ஏனப்பா? நீங்கள் சொல்லுங்கள்! பல விளக்கங்கள் கொடுத்துவிட்டேன் நான். அக்காவே உங்களிடம் கேள்வியை கேட்டு, பார்ப்போம் நீங்கள் எப்படி (கூறுகின்றீர்கள்) என்று!

அடியவர்: பித்ரு சாபங்கள் என்றால் ஜாதகத்தில் கடுமையாக காட்டும். ஏதாவது நல்ல நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும் என்றால் (குடும்பத்தில்)  அதற்கு தடங்கல்கள் இருந்து கொண்டே இருக்கும்.  அதனால் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் வரும். இதில் எனக்கு அந்தப்பக்கம் (உண்ணலிடம்) திருப்பி ஒரு கேள்வி இருக்கிறது. என்ன தெரியுமா? நல்லபடியாக வாழ்ந்து கரையேற்றிவிட்டு போனவர்கள் தானே, அப்புறம் எதுக்கு அவர்கள் சபிக்கிறார்கள்? ஒருத்தருக்கு நாலு குழந்தைகள் இருக்கு என்றால் ஒருவர் கர்மா செய்தால் போதாதா? நான்கு பேருமே எதற்க்காக பண்ண வேண்டும்? 

அகத்தியர்: அப்பனே இதுவும் உண்மைதான். யான் ஒன்று கேட்கின்றேன். நான்கு பேரில் ஒருவனுக்கு அனைத்தும் கிடைக்கின்றது, வேறொருவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இன்னொருவனுக்கு ஏதுமே கிடைப்பதில்லை.  இன்னொருவன், சாதாரணமாக தர்மம் ஏந்துகின்றான். அப்பொழுது அனைவரும் ஒன்று தானே அப்பா?

அடியவர்: அவனவன் கர்மவினையை பொறுத்துதான் கிடைக்கின்றது. 

அகத்தியர்: அதுபோல்தான் அப்பனே! நீ சொல்கிறாய் அப்பனே, இப்படி நடந்தால் நல்லது என்று. நிறைய நபர்களுக்கு கூறுகிறாய். அதில் ஒருவன் நீ சொன்னதை செய்தால், உன் ஆன்மா மகிழும். அதாவது, நீ சொல்கிறாய் அல்லவா, அதனால், உன் புண்ணியம் அவனை போய் சேரும். அதனால் அவன் நன்றாக இருப்பான் அப்பனே. மற்றவன், இவன் ஏதோ சொல்கின்றான், நான் ஏன் கேட்க வேண்டும் என்று. மற்றொருவன், ஏதோ சொல்கின்றான், பார்ப்போம் என்று. மற்றொருவன் ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கின்றான் என்று மட்டும் நினைக்கிறேன். இதனால் தான் அப்பனே, நிச்சயம் ஒருவன் எண்ணம் எப்படியோ அது போல் தான். அப்பனே, முன்னோர்களும் நல்லவைகளை எடுத்துரைக்கின்றார்கள் அப்பனே! ஒருவன் கேட்கின்றான், ஒருவன் கேட்க்காமல் அப்படியே திரிகிறான். பித்ருக்கள் ஆத்மா பாதிப்படையும் பொழுது ஒருவன் கஷ்டங்கள்தான் பட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அவனவன் செய்த விஷயங்களுக்கு அவனவன் தான் செய்ய வேண்டும் அப்பனே! கேள் இன்னும் அப்பனே!

அடியவர்: நான் கேட்பது என்னவென்றால், என் தந்தை, அவருக்கு நன்கு பிள்ளைகள். அவரை உட்காரவைத்து நான்கு சாப்பாடுகளை போட்டால் தான் அது சரியாகுமா?

அகத்தியர்: பாசத்தை காட்டுங்கள் அப்பனே. தாயும் தந்தையும் தன குழந்தைகள் அழுதால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமப்பா. அது போல் தான் ஆன்மாக்களும். இப்படி எல்லாம் வளர்த்தோம், பசி என்றதும் எல்லாம் கொடுத்தோம் என்றெல்லாம் அவ் ஆன்மாக்கள் நினைத்து அலையும். அவைகள் ஏங்கிக்கொண்டிருந்து திரியுமப்பா! ஒரு ஆத்மாவும் அனைத்தையும் உட்கொள்வதில்லை அப்பனே! இன்னும் சூட்ச்சுமமாக சொல்கின்றேன். நீங்கள் கொடுத்தீர்களல்லவா, யான் உங்களுக்கு கொடுக்கின்றேன் என்று நினைத்து செய்திட அவைகள் திருப்த்தியுறும்.  இன்னும் தெளிவுகள் பெற வைக்கின்றேன் அப்பா!

அடியவர்: நீங்கள் சொல்கிற அத்தனை சாஸ்திர சம்பிரதாயங்களும், விபரீதமாக நடக்கின்ற பொழுதுதான் அத்தனையும் கேள்விக் குறியாக இருக்கின்றது!

அகத்தியர்: கேள்வி வந்தால் தான் அதை பற்றி அறிய முடியும். அப்பொழுது நீ ஒரு படி மேல் ஏறுகின்றாய் அப்பனே! அதனால் கேள்விகள் வரட்டும் அப்பனே, யங்கள் உரைக்கின்றோம் அப்பனே! அனைத்தும் உரைப்பதற்கு யாங்கள் தயார் அப்பனே!

அடியவர்: அடுத்தமாதம் நிறைய தூமகேதுக்கள் பூமியின் சுற்று பாதைக்குள் வரப்போகின்றது. என்ன நடக்கும்?

அகத்தியர் : நிச்சயம் அப்பனே! இதனால் தான் அப்பனே கருணை காட்டி அப்பா! அப்பா! என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருக்கின்றேன்! நிச்சயம் தவறு செய்யாதீர்கள், மனதை ஒன்று போல் எண்ணுங்கள், போட்டிகள் வேண்டாம், பொறாமைகள் வேண்டாம், ஒன்றாக இருங்கள் என்று. ராகுவும், கேதுவும் சக்திகளை ஒன்றிணைத்து அனைத்தையும் சேர்த்து எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவேன்.

அடியவர்: அதில் ஒரு தூமகேதுவானது செவ்வாய் கிரகத்தில் பதிந்துவிடும் என்கிறார்களே! அது உண்மையா?

அகத்தியர்: நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் உண்மை தானப்பா! அதிலிருந்து வரும் கதிர் வீச்சுகள் மனிதனை தாக்கும். அதற்காகத்தான் ஏன் ருத்திராட்சம் அணியச்சொன்னேன் என்று உணருங்கள். ருத்திராட்சம் ஆனது கதிர் வீச்சுக்கள் மனிதனை தாக்காமல் தடுக்கும்,. ஆகவே ஏன் ருத்திராட்சம் அணியச்சொன்னோம் என்பதை அனைவரும் உணர வேண்டுமப்பா. ருத்ராக்ஷத்திற்கு இருக்கும் சக்தி வேறு எதிலும் இல்லை அப்பா.

அடியவர்: இரண்டு முறை சிவபுராண கூட்டு பிராத்தனை நடந்த இரு இடங்களிலும் (பாபநாசம், திருவண்ணாமலை) நிறைய கெட்டகர்மாக்களை சேர்த்துக் கொண்டவர்கள் வந்திருக்கிறார்களே!

அகத்தியர்: நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே. ஒரு சக்தி மிகுந்த இடத்தில் வைத்து அனைத்தும் ஒழித்து ஏறிய வேண்டும் என்பதே! அதனால், ஒவ்வொருவரும், எங்கெங்கோ, எதை என்றோ ஓடி ஓடி! யாங்கள் முன்னரே சொன்னோமே, எங்கெங்கு சக்திகள் அதிகமோ அங்கு தான் திருத்தலங்கள் அமைப்போம் என்று! அதனால், ஒரு இடத்திற்கு, பல சிறப்புக்கள்  உண்டப்பா! பல சக்திகள் உண்டப்பா. அவ்சக்தி இடமானது யங்களே அறிவோம் அப்பனே! இங்கு பாபம் என்பது தீய சக்தி, புண்ணியம் என்பது நல்ல சக்தி. இவை அப்பனே! அங்கும் இங்கும் திரியுமப்பா! அப்படி திரியும் பொழுது, அவ்விடத்தில் எங்கேனும் யாரினிலேனும் ஏறுவோமா என்று அலையும். போகப்போக புரிய வைக்கின்றேன் அப்பனே, உந்தனுக்கு ரகசியமாகவே.

அடியவர்: இப்படிப்பட்ட சக்திகளால், இதனை நடத்துபவர்கள் உடல் அளவிலும், மனஅளவிலும் நிறையவே பாதிக்கப்படுகின்றார்கள். என்ன செய்ய?

அகத்தியர் : இதனை நீயே அறிவாய். காப்பு அணிவது முதல் அனைத்தையும் சொல்லிக்கொடு.  கூட்டமாக இருந்தால் வலுவாக அமையும் அப்பனே. இவ்வாறாக பக்தர்களிடம் கூட்டு இல்லை என்றால் இறைவனே இல்லை. பல திருத்தலங்கள் அழிந்துவிடுமப்பா. வரும் சந்ததிகளும் எப்படி எப்படியோ போகுமப்பா. தலை கீழாக மாறுமபப்பா. இது கலியுகம் என்பேன். அப்பனே! கடைசி வாக்கை வழங்கியிருக்கின்றேன், இவ்வாறாகவேனும் திருந்தட்டும் என்று. அவ்வாறும் திருந்தவில்லை என்றால், ஒருவராலும், இறைவனே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாதப்பா.

அடியவர்: போன முறை மதுரை சென்ற பொழுது அம்மாவை பார்க்க முடியவில்லை!

அகத்தியர்: ஆம், முன்னரே சொன்னேன்! நீ செல்லவில்லை ஆயினும் அம்மாவுக்கு உன் சார்பாக சீர் வரிசை சென்று விட்டது.

அடியவர்: ஆமாம்! அந்த புடவையை (அம்மா மீனாக்ஷிக்கு) என் சார்பாக எதுக்காக கொடுக்க சொன்னீர்கள்?

அகத்தியர் : இப்பொழுதுதான் சொன்னேனே! சீர் வரிசையாக போயிற்று!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1942 - அன்புடன் அகத்தியர் - குருநாதரின் சபரிமலை வாக்கு!






6/9/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னதி.

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே ஆசீர்வாதங்கள்!!

அப்பனே எப்பொழுதும் அதாவது அப்பனே இவ் மணிகண்டனின் ஆசிர்வாதங்கள் பரிபூரணமாக இருக்கின்ற பொழுது  அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட வெற்றிகள் அப்பனே. 

ஆனாலும் அப்படி சரியான வழியில் சென்று !! சரியானவற்றையெல்லாம் செய்திட்டு வந்தாலே... அப்பனே அதாவது நீதி நேர்மை.. சரியான வழியிலே        அப்பனே தர்மத்தையும் கடைப்பிடித்து வந்தாலே.. உயர்ந்த இடத்தில் வைப்பானப்பா. 
அனைத்தும் கொடுப்பானப்பா. 

இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட இவந்தனுடைய அப்பனே பின் அதிசயங்கள் இருக்கின்றது. 

அவையெல்லாம் அப்பனே நிச்சயம் போக போக.. நிச்சயம் பின் சொல்வேன் அப்பனே.. இவ்வாறெல்லாம் என்று அப்பனே...

இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. தெரிந்து கொண்டு பல வெற்றிகளை.. அப்பனே இவ் அழியும் உலகத்தில்.. நிச்சயம் அழியாத செல்வத்தை... அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம்.. நல்விதமாகவே அடைந்து... அப்பனே இவனுடைய (ஐயப்பனின்) அருளைப் பெற்று.. நீடூழி வாழலாம் என்பவையெல்லாம்! 

அப்பனே அவை மட்டுமில்லாமல்.. எப்பொழுதும் அப்பனே ரகசிய.. நிச்சயம் தன்னில் கூட மரங்கள் எல்லாம் இங்கு உள்ளது என்பேன் .

அப்பனே இதில் தான் நிச்சயம் பிடித்தமான இவந்தனக்கு... நிச்சயம் தன்னில் கூட அழகாகவே அப்பனே மரத்தின் மீது ஏறி.. அமர்ந்து சரியான வழியில்... நல்விதமாகவே அனைவருக்கும் ஆசிகள்.. அப்பனே பின் இவந்தனும்.!!

அங்கேயே (மரத்தில்) நிச்சயம் தன்னில் கூட.. உறங்கி அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட நடப்பானப்பா!!

இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அங்கு இருக்கும் அப்பனே.. அழகாகவே... இவன் அழகாக உறங்குகின்ற பொழுது..  சூரியனும் கூட அழகாக!!.. இவன் மீது அப்பனே... பின் அதாவது அவ் மரமானது சரியாகவே பல வகையிலும் கூட பின்.. நிச்சயம் தன்னில் கூட ஒளி... அப்பனே பல நன்கு எதை என்று அறிய அப்பனே...

சூரியனின் வெளிச்சத்தை அப்பனே.. நன்கு நன்கு அப்பனே நிச்சயம்.. ஈர்க்கும் சக்தி !!

அவ் ஈர்க்கும் சக்தியை அப்படியே வைத்துக் கொள்ளும் அப்பா அவ் மரங்கள்!!!

அப்பனே இவையெல்லாம் ஐயனின்.. திருவிளையாடல்களே என்பேன் அப்பனே..

இப்பொழுது எதை என்று அறிய அப்பனே...

அங்கு அய்யன் உறங்குகின்றான் என்றால்... இவையெல்லாம் நிச்சயம் அப்பனே... அதாவது சிறு குழந்தையாக.. அய்யன் இருந்த பொழுது அப்பனே... ஒவ்வொரு ஞானிகளும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாகவே.. விளையாடுகின்ற பொழுது... அங்கங்கு நிச்சயம் எதை என்று அறிய நிச்சயம்.. அதாவது மரங்கள் தான் அதிகம் பிடிக்கும். 

( ஐயப்பன் பால்ய பருவத்தில்.... மரங்களில் ஏறி விளையாடுவதும் உறங்குவதும் அவருடைய திருவிளையாடல்கள்

அவர் ஏறி விளையாடுவதற்கும் உறங்குவதற்கும் சித்தர்களும் ஞானிகளும் கூடு விட்டு கூடு பாய்ந்து மரம் ரூபங்கள் எடுத்து நின்றனர் அந்த மரங்கள் இன்றும் இருக்கின்றன
)




அப்பனே இதனால் நிச்சயம் அவ் ஞானிகளே அப்பனே நிச்சயம் தன்னில் கூட மரங்களாகி நின்று அப்பனே. 

அதாவது கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை கூட.. அப்படியே பின்  நிச்சயம் தன்னில் கூட உடம்பை வைத்துவிட்டு.. அப்படியே நிச்சயம் பின் அது.. மரங்களாயின என்பேன் அப்பனே!!

இப்பொழுதெல்லாம் பின் நிச்சயம்.. அங்கு எவை என்று அறிய.. அப்பனே கீழிருந்து பல வழிகளிலும் கூட பின் மனிதர்கள்.. ஏறுகின்றார்கள் அப்பனே!! மேலே அப்பனே!!

(மலைக்கு மாலை அணிந்து சபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள்)



(சபரிமலைக்குச் செல்ல பல வழிகள் உள்ளன, அவற்றில் முக்கியமாக பெருவழிப்பாதை (எருமேலி வழி), வண்டிப் பெரியா பாதை, சாலக்காயம் பாதை, மற்றும் புல்மேட்டுப் பாதை ஆகியவை அடங்கும். பெருவழிப்பாதை ஐயப்பனின் யாத்திரைப் பாதை எனப் போற்றப்படுகிறது, மற்ற பாதைகளும் பக்தர்களால் பயன்படுத்தப்படுகின்றன. 
முக்கியமான சபரிமலை பாதைகள்:
1. பெருவழிப்பாதை (எருமேலி வழி):
இது ஐயப்பன் தான் யாத்திரைக்காக சென்ற பாதை . 
எருமேலி, பேரூர் தோடு, அழுதை, கல்லிடுங்குன்று போன்ற பகுதிகள் வழியாக இந்த பாதை செல்கிறது. 
இந்த வழியே சென்றால்தான் ஐயப்ப யாத்திரை முழுமையடையும் 
பெரிய பாதை என்பது எருமேலி, பேரூர் தோடு, காளைகட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை-உடும்பாறை, முக்குழி, கரிவலம் தோடு, கரிமலை, பெரிய யானை வட்டம், சிறிய யானை வட்டம், பம்பா நதி வழியாகப் பயணிக்கும் பாதையாகும்.



2. வண்டிப் பெரியார் பாதை:
இதுவும் பக்தர்களால் பயன்படுத்தப்படும் மற்றொரு பாதை ஆகும்.
 
3. சிறுவழிப்பாதை (புல்மேட்டுப் பாதை):
இது புல்மேடு வழியாகச் செல்லும் பாதை ஆகும். 
இதுவும் சபரிமலை யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வழியாகும். 

4. சாலக்காயம் பாதை:
பம்பா நதிக்கு அருகேயுள்ள இந்தப் பாதையும் ஒரு புனிதப் பாதையாகும். 
இந்த வழியில் புனித நீராடிய பிறகு, பக்தர்கள் நீலிமலை ஏறத் தொடங்குவார்கள். )



ஆனாலும் அப்பனே நிச்சயம்.. அதிசயங்கள் அப்பனே.. அவையெல்லாம் பின் எங்கு ?ஏது? என்பதை எல்லாம் அப்பனே வரும் காலத்தில் யான் செப்புவேன் அப்பனே. 

இப்பொழுது செப்பினாலும் அப்பனே.. அதனையும் கூட பாழாக்குவார்கள்.. மனிதர்கள் அப்பனே!!

இதனால் அப்பனே சூரியனின் பின் நிச்சயம்.. சரியான வெளிச்சத்தை அதாவது.. அப்பனே பின் பன் மடங்கு.. அவை நிச்சயம் ஈர்த்துக் கொள்ளுமப்பா!!

இதனால் அப்பனே நிச்சயம் எப்பொழுதும் அப்பனே பின் அனைத்தும்.. அதாவது அவ்வாறு ஈர்த்து.. உலகத்தில் வாழும் பின் அனைத்திற்கும் காரணம் பின் சூரியனின்.. அதிக ஆற்றலே!!!

அவ் ஆற்றலை அப்பனே இவ்வாறாக அவ் மரங்கள் ஈர்த்துக் கொள்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதர்கள். (மலை மீது செல்லும் பக்தர்கள்). அப்பனே நிச்சயம் செல்வார்கள் என்பேன் அப்பனே!!
அதாவது வந்தும் சென்றும் அதாவது மேலேயும் கீழேயும் ஏறுவார்கள் இறங்குவார்கள் அப்பனே...

அப்பொழுது அவ் மரத்திலே.. உறங்கிக் கொண்டிருப்பான் அப்பா அய்யன். 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட.. வெப்பமானது அதிக அளவு அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவ் மரங்கள்.. வெளியேற்றும் என்பேன் அப்பனே. 

அவ் வெப்பம் நிச்சயம் மனிதர்களிடையே படுகின்ற பொழுது அப்பனே புண்ணியங்கள்.. புண்ணிய ஆத்மாக்கள் ஆகின்றார்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே சிலரால்... ஏன் முடியவில்லை?? என்றால் அப்பனே!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பாவம் அதிக அளவு இருக்கின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் தன்னில்.. எதை என்று அறிந்தும் கூட அவ் வெப்பமானது நிச்சயம் அவ்வாறு விடுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பல வகையிலும் கூட கரைகின்றது.

அப்பனே அவையிலும் கூட புண்ணியங்கள் பல மடங்கு இருக்கின்ற பொழுது அவ் வெப்பம் நிச்சயம் தன்னில் கூட... மனிதனிடத்தில் படுகின்ற பொழுது அப்பனே நிச்சயம்.. அவை தன் அப்படியே பன்மடங்கு இல்லத்திற்கு பின் எடுத்துச் செல்கின்றான் என்பேன் அப்பனே.

இதனால் அவனால் பல மனிதர்கள் பயனடைகின்றார்கள் என்பேன் அப்பனே. 

அதனால்தான் சரியாக பின் அதாவது தியானத்தையும் கூட அப்பனே... சரியான வழியில் கூட அப்பனே பின் உடம்பை.. சரியாக பயன்படுத்திக் கொண்டு அப்பனே ஆற்றல்களோடு வந்தால்.அவ் வெப்பம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஐயனே மனிதரிடத்தில் அதாவது..அவ் மரங்களே மனிதரிடத்தில் கொடுக்கும் என்பேன் அப்பனே.

இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இதனால் அவனவன்

 (மலைக்கு மாலையிட்டு விரதமிருந்து இருமுடி கட்டி ஐயப்பன் தரிசனம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள்) 

 பின் இல்லத்திற்கு செல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் பரிசுத்தமான ஆற்றல் எப்பொழுதும் ஒரு பத்து அல்லது இருபது நாட்கள் அப்பனே... அப்படியே இருக்கும் அப்பா...

 இதனால் அப்பனே பின் அவனால் பலர் பலனடைகின்றார்கள் என்பேன் அப்பனே. 

அப்பனே பின் அதனால்தான் பின் நிச்சயம் தன்னில் கூட சரியான வழியில் அப்பனே நிச்சயம் ஐயனை... விரதங்கள் இருந்து.... எப்படி ஒரு மனிதன் வாழ வேண்டுமோ அப்படி எல்லாம் இருந்தாலே. உடம்பை சரியாக கவனித்துக் கொண்டு அப்பனே... உடலில் சில தாதுக்கள் அதிகமாக.. இருந்தால்தான் பின் அவ் வெப்பத்தையும் கூட நம்மால் பின் நிச்சயம் பெற முடியும் அப்பா!!

அதனால்தான் நிச்சயம் வகுத்திருக்கின்றார்கள் இவ்வாறெல்லாம் நிச்சயம் இருக்க வேண்டும் (விரத முறைகள்) 

அதாவது நிச்சயம் தன்னில் கூட விரதம் மேற்கொள்ள வேண்டும் இப்படித்தான் பின் இருக்க வேண்டும்!!

பின் எதையும் எண்ணக் கூடாது!!

பின் ஐயனை மட்டும் எண்ணிக் கொண்டே வரவேண்டும் என்றெல்லாம் அப்பனே. 

அப்படி எண்ணிக் கொண்டு வந்தாலே உடம்பில் நிச்சயம் தன்னில் கூட.. சில வழிகளிலும் கூட இருக்கும் தீய கதிர்கள் நிச்சயம் தன்னில் கூட வெளியேற்றப்பட்டு.. அப்பனே அவை அப்படியே...இவ்  மலை ஏறுகின்ற பொழுது.. நிச்சயம் அப்பனே 
அவ் மரத்தை சொன்னேனே!!!...அவ் வெப்பமானது.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே..

அப்பனே பின் இவ்வாறாகவே.. அதாவது இவ்வாறாக இருந்தால் மட்டுமே உடம்பு ஈர்க்கும் அப்பா. 

அப்படியே ஈர்க்கின்ற பொழுது...அவை தன் அப்பனே இல்லத்திற்கு அப்படியே எடுத்துச் செல்கின்ற பொழுது. 

ஆனாலும் அப்பனே தற்பொழுது மனிதர்கள் அப்படி இல்லையப்பா!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட சென்று விட்டு... விரதத்தை அப்பனே பின் அப்படியே முடித்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அவ் வெப்பமும் பயனில்லாமல் சென்று விடுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் விரதத்தை பின் இல்லத்திற்கு அப்பனே.. செல்கின்ற பொழுதும்.. அப்படியே ஒரு பத்து, இருபது நாட்கள் அமைதியை காத்தருள வேண்டும் என்பேன் அப்பனே. 

இப்படி இருந்தால் நிச்சயம் இன்னும் சுகங்கள் தேடி வரும் அப்பா... இன்னும் மாற்றங்கள் கிடைக்குமப்பா. 

அப்பனே இது போல் பல மரங்கள் உள்ளது என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவையும் கூட.. ஒளிரும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இருட்டில் கூட. 

அப்பனே இன்னும் அதிசயங்கள் பல அப்பனே பின் நிச்சயம் இருக்கின்றது என்பேன் அப்பனே... 

அது மட்டும் இல்லாமல் அங்கு தான் அப்பனே அவ் வெப்பத்தை தேடி பல சிறுத்தைகளும் கூட.. அப்பனே புலிகளும் கூட இன்னும் பல ஜீவராசிகளும் வரும் அப்பா. 

ஏன்? எதற்கு? என்றால் அப்பனே நிச்சயம்.. இங்கு வந்தாலே அப்பனே பரிசுத்தமான உடம்பில் பின் பல வியாதிகள் இருந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஒவ்வொரு உயிரினத்திற்கும் பசி என்ற வார்த்தை அப்பனே நிச்சயம் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

அங்கு நெருங்குகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட.. அவையெல்லாம் மாறுகின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.

இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் அனைத்தும் பின் அதாவது கட்டுப்படுத்தி வந்தால் அப்பனே.. பின் உள்ளத்தையும் உடம்பையும் அப்பனே கட்டுப்படுத்தி வந்தால் அப்பனே அவ் ஆற்றல் உங்களுக்கும் கிட்டுமப்பா!!

அப்பனே அவ் ஆற்றல் பின் உங்களுக்கு கிட்டுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை நிச்சயம் ஒரு பத்து நாட்கள்.. மீண்டும் இதைத்தான் செப்புகின்றேன் அப்பனே.. கிடைக்கும் அப்பா. 

இதனால் நீங்கள் நிச்சயம் தன்னில் கூட.. அவ்வாறு நீங்கள் செல்கின்ற பொழுது இல்லத்தில் உள்ள அனைவருக்குமே அவ் ஆற்றல் கிடைக்குமப்பா. 

நீங்களும் கேட்பீர்கள் அல்லவா அப்பனே.. எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று அப்பனே... இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பல விஷயங்கள் அப்பனே இல் சபரி தன்னில் கூட அமைந்துள்ளது.. என்பேன் அப்பனே... நிச்சயம் இன்னும் அப்பனே அவையெல்லாம்..யாங்கள் அப்பனே வெளிக்காட்டுவோம் என்போம் அப்பனே. 

இவ்வாறு வெளிக்காட்டுகின்ற பொழுது.. அப்பனே மக்கள் நிச்சயம் தன்னில் கூட.. இன்னும் திருந்துவார்கள் என்பேன் அப்பனே... அவ்வாறு திருந்தவில்லை என்றால் அப்பனே.. கலியுகத்தில் நிச்சயம் அப்பனே பின் வாழ முடியாத காலங்களாகவே வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

இதனால் பின் நிச்சயம் கலியுகத்தில் அப்பனே நிச்சயம்.. காலம் வாழ முடியாத காலம்...

ஆனாலும் அப்பனே வாழ முடியும் அப்பனே காலமாக..யாங்கள் சித்தர்கள் யாங்கள்  செய்வோம் அப்பனே 
பல வாக்குகளாக அப்பனே நிச்சயம் ரகசியங்களாக செப்புவோம் அப்பனே. 

அதனால் தர்மத்தை கடைப்பிடித்து உடம்பை அப்பனே பேணிக்காத்து.. அப்பனே பின் உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு.. அய்யனின் தரிசனத்தை கண்டாலே போதுமானதப்பா. 

அப்பனே பின் இல்லத்தில் ஒருவன் கண்டால் அப்பனே பின் அவன் மீண்டும் அப்பனே அதாவது ஐயனை தரிசித்துச் சென்றால் இல்லத்தில் அனைவருக்குமே.. ஆசிர்வாதங்கள் அப்பனே. 
பல நோய்களும் மறையும் அப்பா. 

ஆனாலும் சரியான வழியில் அப்பனே பின் நிச்சயம் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

நிச்சயம் இன்னும் ஐயனின் லீலைகள் இன்னும் பரப்புகின்றேன் அப்பனே இன்னும் பொறுத்து இருந்தால் அப்பனே 

ஆசிகள் ஆசிகள் இப்பொழுது.... ஆசிகளப்பா!!!



சபரிமலைக்கு மாலையிட்டு எப்படி கார்த்திகை மாதம் தொட்டு மண்டலகால விரதம் இருந்து பக்தர்கள் வாழ்கின்றார்களோ அதே போல வாழ்க்கை முழுவதும் விரத நெறியை கடைப்பிடித்து வாழ வேண்டும்.

சபரிமலை ஏறி ஐயப்பனை கண்டு மழையில் இருந்து இறங்கியவுடன் மனிதர்கள் அசைவ உணவு உண்பது அவர்கள் சராசரி வாழ்க்கையை வாழ்வது என இப்படி இருந்தால் அழிவுகள் தான் வரும் கஷ்டங்கள் தான் வரும்.

இதைப் பற்றி ஏற்கனவே நம் குருநாதர் சபரிமலை தன்னில் வைத்து....

 19/7/2022 ல் சித்தன் அருள் 1163... வாக்கில் விரதம் என்பது என்ன? எப்படி இருக்க வேண்டும்? என்பதை தனது பற்றி வாக்கில் உபதேசம் செய்துள்ளார். மீண்டும் ஒருமுறை படிக்க நன்று.

அது மட்டும் இல்லாமல் 7/1/2023 சித்தன் அருள் 1257 ல் சபரிமலை 18 படிகள் தத்துவ ரகசியங்கள் ஐயப்பனின் அனுக்கிரகம் குறித்து குருநாதர் வாக்குகள் உரைத்துள்ளார் அனைவரும் மீண்டும் ஒருமுறை படித்து உணர்ந்து கொள்ளவும்.


ஹரிஹரசுதன் ஐயப்பன் முதல் முறையாக ஜீவனாடியில் வந்து வாக்குரைத்த வாக்கு 

சித்தன் அருள் 1802... வெளிவந்துள்ளது அனைவரும் மீண்டும் ஒருமுறை படிக்கவும். 

ஐயப்பன்... மீது சித்தர்கள் கொண்ட பாசம் நடந்த திருவிளையாடல்கள் ஐயப்பன் ஜீவசமாதி குறித்து அனைத்தையும் 

சித்தன் அருள் 1751.. மேக்கரை புலஸ்தியர் வாக்கில் படித்து தெரிந்து கொள்ளலாம்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 23 September 2025

சித்தன் அருள் - 1941 - நவராத்திரிக்காக அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் அகத்தியப்பெருமானை நாடியில் சந்தித்து அவர் வாக்கை கேட்கிற பாக்கியம் உருவானது. பல விஷயங்கள் கூறப்பட்டாலும், நவராத்திரி காலத்தை பற்றி அவர் கூறிய பொழுது,

"இவ் நவராத்திரியில் அம்பாள் வீட்டுக்கு வருவாள். ஆகவே, பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் தேவையான சீர்களை செய்வது நன்று. அம்மையே வந்து பெற்றுக் கொண்டு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், அருள் புரிவாள்." என்றார்.

ஆகவே, நவராத்திரி தொடங்கிவிட்ட நிலையில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற வழிகளில், மேற்கூறியபடி நன்மை செய்து, தாயின் அருளை பெற்றுக் கொள்ளவும். வாங்கும் பொருட்களை அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்பாள் கோவிலில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, தாயிடம் வந்து வாங்கிக்கொள்ளும் படி விண்ணப்பித்து, பின் கொடுக்கவும். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 22 September 2025

சித்தன் அருள் - 1940 - அன்புடன் அகத்தியர் - குருநாதரின் காசி வாக்கு!







14/9/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி.

அழகாக வீற்றிருக்கும் 
அழகாக வீற்றிருக்கும் விக்னேஸ்வரனே!!!
விக்னேஸ்வரனே!!!

அழகாக பாய்ந்து அனைத்தும் சமமாக்கும் கங்கை தாயே!!!..... ஈசனே!!!...

மனதில் எண்ணி வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியனே!!!

அழகாக எம்முடைய ஆசிகள்!!!!

அறிந்தும் எவ்வளவு பின்... அறிந்தும் உண்மைதனை பின் தெரியாமலும் கூட மக்கள் பல வழிகளிலும் கூட... திரண்டு திண்டாடுவார்கள்!!!

ஏன்? எதற்கு? என்றெல்லாம்... தெரியாமலும் கூட!!...

வழி வழியாக வந்த எதை என்றோ?.. நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று உணர்த்தும் அளவிற்கு.. அப்பனே பல வழிகளிலும் கூட.. செப்பி விட்டேன் அப்பனே. பல வழிகளிலும் கூட!! சுவடிகளிலும் கூட!!

ஆனாலும் அவையெல்லாம் எதை எதற்கோ? பயன்படுத்தி அப்பனே பின்  அதில் உள்ள பின்... பல வகையான சில மூலிகைகளையும் கூட.. சிலவற்றையும் கூட... எவ்வாறெல்லாம்?? பின் பயன்படுத்த வேண்டும்? எப்படி என்றெல்லாம் நிச்சயம்...

(அச் சுவடிகள்) அவையெல்லாம் பின் காசுகளுக்காகவே.. விற்கப்பட்டது!!!

ஆனாலும் நிச்சயம் இவையெல்லாம் அப்பனே பின் சந்தோசமாய்.. வரும் காலத்தில் யாங்கள் நிச்சயம் தன்னில் கூட.. எவ்வாறு??.. யார் மூலம்? எதன் மூலம்? பரப்ப வேண்டும்???... என்பதையெல்லாம்.. பரப்பி அப்பனே.. நல் முறைப்படுத்தி மக்களை.. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.. பல வகையிலும் கூட... அப்பனே அதாவது நிச்சயம் இக்கலியுகத்தில் என்னென்ன??? ஏது? என்பதையெல்லாம்... நிச்சயம் தெரிந்ததே!!!

இவை தன் நிச்சயம் தன்னில் கூட... எவை என்று அறிய அறிய பின்... மனிதன் எத்தனை ஏது.. என்று அறியாமலும் கூட மூடனாகவே இருக்கின்றான்!!!

அவற்றையெல்லாம் நிச்சயம் வரும் காலத்தில்... இன்னும் கூட பல வகையான... இன்னல்களை எல்லாம் மாற்றி.. அறிந்தும் எதை என்று கூட இன்னும் விளக்கங்களுடன்.. சொல்வேன். 

ஆனாலும் இங்கு பல வகையிலும் கூட ஏன்? எதற்கு? பின் தொழுகின்றோம்??? ஏன்? எதற்கு? அதாவது பின்...இவ் எதை என்று கூற...""""'''"""மகாளய பட்சை""" (பட்சம்) தன்னில் கூட !!!

ஏன் எதற்காக செய்கின்றோம்?? என்பதையெல்லாம் வழி வழியாக.. நிச்சயம் பின் அப்படியே பின் செயல்பட்டதை பின் நீங்களும்.. பின் செயல்பட்டு வந்து கொண்டே இருக்கின்றீர்கள். 

ஆனாலும் இதன் உண்மை மறைமுகமாக.. என்னவென்று நிச்சயம் பின்... இங்கிருக்கும் பின்... அழகாக!!!

""". இளவரசி!!! லோபா முத்திரையும் அழகாகவே.. பல வகையிலும் கூட பின்.. பல  எண்ணற்ற பின் கண்டுபிடிப்புகளையும்.கூட!! எதை என்று நிரூபிக்க!!!... 

நிச்சயம்.. அவற்றை இப்பொழுது சொல்கின்றேன்!!!

(நமது அன்னை லோப முத்திர தாயார் காசியின் இளவரசி அவருக்கு மிகவும் பிடித்த ஸ்தலம் காசி.. இங்குதான் சுற்றி திரிந்து கொண்டிருப்பார் என்று குருநாதர் ஏற்கனவே வாக்குகள் உரைத்திருப்பது நினைவில் கொள்க!)

எத்தனை? ஏது? என்று அறிய!!... அதாவது பின்... வளிமண்டலத்தில் பல கிரகங்கள்!!!

அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய  தெரியாமலும் தெரிந்தும் சில சில விஷயங்கள்!!!

(பிரபஞ்சத்தில் மேலே இருக்கும் கிரகங்கள் மற்றும்... இயக்கங்கள் முழுமையாக தெரிந்தும் தெரியாமலும்)



அறிந்தும் இதைத் தன் சமநிலைப்படுத்த நிச்சயம் தன்னில் கூட எப்படி??... ஏது? என்று அறிய... அதாவது பின் பல உரைகளிலும்.. சொல்லிவிட்டேன். 

 காந்தகம் இறைவனே என்று!!!

ஆனாலும் பல வகையான சில பின்.. அதிர்வினுடைய நிச்சயம் தன்னில் கூட.. அனைவரும் பின் அதாவது... மனிதரிடத்தில் அனைவரிடத்திலும்.. நிச்சயம் பின் அதிர்வெண்கள் பல பல பின் எதை என்று.. நிரூபிக்க!!

ஆனாலும் அவை தன் கூட... சரியான பின்... பூதம் தன்னிலே.. அதாவது பூத பிம்பம்  எதை என்று.. அறிய அறிய நிச்சயம் பின் காணலாம்!!

(பூதக்கண்ணாடி.. லென்ஸ். அதாவது நுண்ணோக்கி  மைக்ரோஸ்கோப் இதன் மூலம் மனித உடம்பில் உள்ள அதிர்வெண்களை காணலாம்)

அதையெல்லாம் நிச்சயம் பின்.. எதை என்று கூற பிம்பத்தை.. நிச்சயம் கண்டுபிடிக்க லோபா முத்திரை பல வழிகளிலும் கூட... பாடுபட்டு !! பாடுபட்டு !!

அதனை நிரூபிக்க எதை என்று.. புரிய அதாவது... குறித்தான பின்....இவை தன் உண்மைதனை நிலை அறிந்து அப்பனே பல வகையிலும் கூட எதை என்று புரிய.

இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது...குறி!!.. அறிந்தும் புரிந்தும் கூட இதை தன் நிச்சயம் இவை தன் விளக்கங்களாகவே அதை பின் துகளாகவே.. குறி என்றே நிச்சயம் எதை என்று புரிய. 

இதை தன் நிச்சயம் தன்னில் கூட.. இறைவனிடத்தில் அதாவது.. காந்தகம் இடத்தில் நிச்சயம்.. பல வகையிலும் கூட பல பல கதிர்வீச்சுக்கள் பின் எவ்வாறு என்பதும் சுற்றிக் கொண்டே இருக்கும். (காந்த புலம் போல கதிர் இயக்கங்கள்)

இதில் கூட எவை என்று புரிய...இக் குறி (துகள்) எதை என்று புரிய கதிரியக்கங்கள் பலமாகவே நிச்சயம் பின் மேலே அதாவது பின் சுற்றிக்கொண்டே.. கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும்.. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்.. இவை என்று புரிய. 

(அதாவது இறைவன் என்ற காந்தகத்திலிருந்து கதிர்வீச்சுக்கள் வெளிப்பட்டு நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் மேலே பட்டு பிரதிபலித்துக் கொண்டே இருக்கும் சுற்றி சுற்றி)



அப்பனே பின் அதாவது வட்டம் வட்டமாக பின் பல கோடி நிச்சயம்.. வேகத்தில் அதாவது நிச்சயம் தன்னில் கூட.. வேகத்திலே சுற்றிக் கொண்டிருக்கும்.

இதை தன் நிச்சயம் தன்னில் கூட... யாராலும் கணிக்க முடியாது. 

நிச்சயம் அவ்வாறாக கணிக்கவும்.. எதை என்று புரிய அதற்கும்.. தகுந்த வாய்ப்பாடு உள்ளது. 

அதையும் கூட நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே லோபா முத்திரையும்.. நிச்சயம் தன்னில் கூட சரியாக.. கண்டுபிடித்து!!!


நிச்சயம் இன்றைய...... எவ்வளவு பின் விஞ்ஞானிகள்.. எதை என்று அறிய அறிய பின் எதை என்று கூற இவ்வாறு.. பல மைல் பின் நிச்சயம்.. தன்னில் எவை என்று கூற.. எதை என்று அறிய அறிய பின் நிச்சயம் சுற்றுகின்ற பொழுது.. நிச்சயம் அவை தன் அதாவது... ஒரு துளி!! அதாவது கடுகளவு நிச்சயம் தன்னில் கூட... கண்ணிமைக்கும் நேரத்தில் நிச்சயம்.. பல கோடி பின் மைல்களை கடந்து விடும்.

இவ்வாறு இருப்பதை யாராலும்... எதனாலும் கண்டுபிடிக்க முடியாது 

(இன்றைய விஞ்ஞானிகளால்) 

இதனால் பின்.. நடுவில் தன்னில் கூட காந்தகம் ... பரிபூரணம் பரிபூரணம் இவை அறிந்தும்.

(நடுவில் காந்தகம் எனும் இறைவன் அதைச் சுற்றி கிரகங்கள் நட்சத்திரங்கள்)

இவை தன் நிரூபிக்கவே.. எதை பொறுத்து நிச்சயம் தன்னில் கூட... ஆனாலும்... அவற்றுக்குள்ளே செல்ல வேண்டும்...அக் குறி!!... அறிந்தும் புரிந்தும் கூட!!




இதனை எப்படியோ வைத்துக் கொள்ளலாம் இக் குறி யானதை அதாவது.. இவ்வாறு கிரகங்களாக பின்.. அதாவது நாமத்தையும் பின் நட்சத்திரங்களின் நாமத்தையும் அதே போல்...குறி.... என்ற நிச்சயம் ஒரு துகளே... என்று நிச்சயம்.. இவை தன் அறிந்தும் கூட அப்பனே..

இதனால் அப்பனே இதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.. இவ்வளவு வேகத்தில் நிச்சயம் பின்... கதிரியக்கங்கள் பல வழிகளிலும் கூட.. நிச்சயம் எவை என்று புரிய.. கதிர்கள் பின் இன்னும் சிறிய சிறிய அணுக்கள்... எவை என்பதெல்லாம் சுற்றி கொண்டிருக்கும் பொழுது நிச்சயம் தன்னில் கூட இவை.. நிச்சயம் அவ் காந்தகத்தில் பின்... அதாவது ஒட்டி கொள்வது என்பது.. சாதாரண விஷயம் இல்லை. 

ஆனாலும் இதை என்று புரிய.. எவை என்று அறிய.. இதைத் தன் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும்... இவ்வளவு வேகத்தில் நிச்சயம் சுற்றுகின்ற பொழுது நிச்சயம் பின் அக் கதிரியக்கம் எதை என்று.. பொறுத்து அனுகூலம்!!

இன்னும் அதிலிருந்து துகள்களும் இன்னும் இன்னும் ஏராளம்...அவை பின் நாமத்தையும்.. கூட வரும் வரும் காலத்தில்.. எங்கு எதை என்று... குறிக்க.... நிச்சயம் குறித்த இடத்திலே யான் சொல்வேன்.. எதை என்று புரிய. 

இதனால் நிச்சயம் அக் காந்தகத்தில்... நிச்சயம் பின் இவ்வளவு.. அதாவது வேகத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும் பொழுது.. சில சில நேரங்களில் கூட நிச்சயம்.அக். காந்தகம் நிச்சயம் பின் அசைவடையும்!

இவ்வாறு அசைவடைகின்ற பொழுது நிச்சயம்...அக் குறி!... துகளானது... நிச்சயம் கீழே விழும். அறிந்தும் புரிந்தும். 

இதனால் அவ் குறி பின்.. துகளானதிற்கு உயிர் இருக்கும்.. நிச்சயம் தன்னில் கூட. 

அதேபோல் நிச்சயம் தன்னில் கூட... இப்பொழுது பின் மனிதர்கள்.. எதை எதை என்று அறிய அறிய... பின் எவை என்று கூற... சரியான நிச்சயம் தன்னில் கூட... சக்தி படைத்தவர்களுக்கு மட்டுமே... நிச்சயம் தன்னில் கூட அக் குறி... நிச்சயம் தன்னில் கூட... எதை என்று புரிந்தும் கூட ....அவை என்றே நிச்சயம்... அதை ஈர்த்துக் கொள்ளும். 

இதனால் நன் முறைகளாகவே... இதை தன் நிச்சயம் உடம்பில் பட்டு பட்டு... இதனால் எவர்??... அதை தன் பின் நிச்சயம்... அங்கிருந்து விழும் நிச்சயம்... அது தன் குறியானது.. எதை என்று கூற துகள் நிச்சயம்.. மனிதனின் பின் உடம்பில் அதாவது ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது... நிச்சயம் தன்னில் கூட அதற்கு ஏற்ற... பின் குறிகளையும் கூட.. நிச்சயம் குறிகள் அறிந்தும் கூட பின் அனைத்தும் ஒன்றாக இணைக்கும்.

இதனால் நிச்சயம் எங்கெங்கு... அதாவது நிச்சயம் இவை எங்கிருந்து.. பின் சென்றதென்றால்.... குவியில் இருந்தே சென்றது... 

(காந்தக குவியில் இருந்து)

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.. தெரியாமல் எதையும் செய்து விடாதீர்கள் என்பேன் அப்பனே. 

தெரியாமல் நிச்சயம் செய்து விட்டாலும் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின்.. இறைவனை உணரப்போவதில்லை. 

அதனால் தெரிந்தும் அனைத்தும் கூட... அப்பனே இதனால் புதுமையான.. விஷயங்களை யான் சொல்வேன் அப்பனே.. நீங்களே அப்பனே புது புது விஷயங்களை கூட அவற்றை அப்பனே நிச்சயம்.. பின் அகத்தியன் சொல்லி இருக்கின்றான்...

எவ்வாறு பயன்படுத்தலாம்?? என்றெல்லாம்.. யோசனைகள் வரும்!!

ஆனாலும் அப்பனே அவ் யோசனைகள் வருவதற்கும் சில புண்ணியங்கள் வேண்டும்...அவ் புண்ணியத்தை கூட வரும் காலத்தில் யானே புகுத்துவேன் என்பேன் அப்பனே.. நீங்கள் கேட்கா விடிலும் கூட அப்பனே...

இதனால் நிச்சயம் தன்னில் கூட அக் குறி துகளானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய... அப்பனே அக் குறியானது அப்பனே நிச்சயம்... பலவற்றாக (பல்வேறாக) பிரியுமப்பா!!

அப்பனே ஒவ்வொரு எதை என்று கூற அப்பனே ஒன்று இரண்டு.. அப்பனே இதற்கு பல பெயர்கள்.. பின் வைத்துக்கொள்வோம் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் அப்பனே பின் எதை என்று அறிய .. இதனால் அக்குறி எதை என்று கூற துகள் பின் நிச்சயம் தன்னில் கூட பின்...குவி எதை என்று அறிய அறிய...... அங்கங்கு பிரிந்து கிடக்கின்ற பொழுது.. நிச்சயம் பின் மனித உடம்பில் அதிக சக்திகள் பின் இருக்கின்ற பொழுது நிச்சயம் ஒட்டும். 


இதனால் நிச்சயம் ஏற்கனவே பல அவ் பின் சொந்தங்கள் நிச்சயம் தன்னில் கூட.. மனிதனிடத்தில் நிச்சயம் இருக்குமப்பா!!!

இதனால் எதை என்று புரிய இதனை பொறுத்தே நிச்சயம் சொந்த பந்தங்கள் கூட நிச்சயம்... திருமணங்களும் கூட இன்னும்... தாய் தந்தையர் என்றெல்லாம்... நிச்சயம் அப்பனே தீர்மானிக்கப்படுகின்றது என்பேன் அப்பனே.

இவையெல்லாம் நிச்சயம் எவை என்று புரிய... இதனால் அப்பனே அனைத்தும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்பவை எல்லாம்... உங்களுக்கு தெரியும். 

ஆனாலும் எப்படி தீர்மானிக்க ப்பட்டது?? என்பதையெல்லாம் அப்பனே தெரியாதப்பா!!

இதேபோல் அப்பனே நிச்சயம் அப்பனே... இதற்கு பல வகையிலும் கூட.. கருவிகள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.... சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட....

பின் இளவரசியான லோபா முத்திரை... அப்பனே அறிந்தும்.. எதை என்று அறிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பல வகையான கண்டுபிடிப்புகளால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட..

ஏனென்றால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே.... ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய... காந்தகம் அப்பனே பல வகையான.. எதை என்று புரிய அப்பனே ஆங்காங்கு பிரிந்து கிடக்கும். 

இதேபோல் அப்பனே இறைவன் ஏன் அப்பனே.. (இறைவன் பல்வேறு அவதாரமாக பல்வேறு நாமங்களாக பல்வேறு இடங்களில் பரவி பரந்து விரிந்து கிடக்கின்றார்)

பின் ஆனாலும் இறைவன் ஒருவனே!!!

எதை என்று கூற ஏன் இவ்வளவு அவதாரங்கள்??? ஏன் எதற்கு பின்... இத்தனை பூஜைகள்????
ஏன் இத்தனை மந்திரங்கள்????... என்பதை எல்லாம்... வரும் காலத்தில் யான் செப்புவேன் அப்பனே. 

இதை சரியாக ஒவ்வொன்றாக அப்பனே புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே... அப்பொழுது நீங்கள் எதைச் செய்தாலும்.. வெற்றியாகும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பன நிச்சயம் தன்னில் கூட.. கலியுகம் அப்பனே அழிவுக்காலம் என்பதை எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே வந்து கொண்டே இருக்கின்றேன்..

அப்பனே நிச்சயம் பாவம் செய்த மனிதர்களே...  இங்கு அதிகமாக பிறக்கின்றார்கள்... இதனால் அப்பனே உண்மை நிலை.. அப்பனே மாறாகவே எதை என்று.. உரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ் பாவம் செய்தவர்கள் அப்பனே.. உண்மையாக இருந்தாலும் அவை பொய்.. என்றே சொல்வார்கள்.. எதை என்று புரிய அப்பனே அவர்களையும் கூட.. மாற்றி எதை என்று கூற புண்ணிய நிலையை பெற செய்து அப்பனே எதை என்று கூற புண்ணிய நிலை அப்பனே நிச்சயம் பின் பெற்றால் மட்டுமே.. நிச்சயம் பல உண்மைகள் தெரியுமப்பா!!!

இல்லையென்றால் குழப்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான் அப்பனே

வாழ்க்கையில் பின் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்க வேண்டியது தான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பரிசுத்தமாக அப்பனே எவை என்று அறிய அதாவது குறி துகள்.. சொன்னேனே அப்பனே அவை தன்.. அப்பனே நிச்சயம்.. ஓரிரு இடங்களிலே நிச்சயம் விழும் அப்பா.. எதை என்று அறிய பல முக்கியமான அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையான பின் புண்ணிய.. தீர்த்தங்களில் கூட..

எதை என்று கூற அவற்றுக்கெல்லாம்.. ஈர்க்கும் சக்தி...

முதலில் அப்பனே வருபவை...

""""கங்கை நதியே என்பேன் அப்பனே!!

அதாவது நிச்சயம் தன்னில் கூட இமயத்தில் இருந்து 
. அப்பனே பின் ஈசனின்.. தலையில் இருந்து அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட...

பின் ஓடுவது எங்கெல்லாம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட எவை.... என்று கூற அவ்வளவு சக்திகள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அவையும் கூட...

வில் விஷ்ணு ரகசியம்


 அப்பனே பின்.. எதை என்று அவ் காந்தகத்தை.. எதை என்று அறிய அப்பனே இன்னொரு.. அதாவது எவை என்று கூற பின் !!
..

"""...... வில் வடிவத்தில் அப்பனே......

நிச்சயம் அப்பனே ஒரு ஒளி அப்பனே இப் புரட்டாதி... மாதத்தில் அப்பனே நிச்சயம்.. நேராக சென்று அக் காந்தகத்தை அடையும் அப்பா...

அப்பனே மீண்டும் அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று.. அறிய அறிய அவ்.. அப்பனே பின் செல்கின்றதே ...அவ் "" வில்லானது... அப்பனே அதுதான்... விஷ்ணு என்றே... தெரிவிக்கின்றார்கள்  அனைவருமே.. அப்பனே..

அதுதான் விஷ்ணு அப்பனே.....

அங்கு நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் எதை என்று கூற...அவ் காந்தகத்தை ஒரு....      """" இடி..."""".. இடிக்கும் என்பேன் அப்பனே 

அதற்கும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இவை தன் அப்பனே நிச்சயம் சில வருடங்கள் என்பேன் அப்பனே.

அதாவது நிச்சயம் இவை தன் அப்பனே
.. எவ்வளவு அதாவது ஒரு கோடி அப்பனே... எவை என்று அறிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாத அளவிற்கு கூட.. இருந்தாலும் அப்பனே.. நல்விதமாகவே பல மைல்கள் எட்டி நிச்சயம் தன்னில் கூட.. தொடும் என்பேன் அப்பனே. 

அவை தொட்டுவிட்டு மீண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் திரும்புகின்ற பொழுது.. அப்பனே அதாவது எதை என்று.. அறிய அறிய அதைச் சொன்னேனே... குறி துகள் என்று அப்பனே.. அவை தன் நிச்சயம் தன்னில் கூட சில சில.. அப்பனே நிச்சயம் குறி துகள்கள் அப்பனே மீண்டும்.. அப்பனே அவை இடிக்கின்ற பொழுது... அங்கு நிச்சயம் தன்னில் கூட..அக் காந்தகத்தில் பின் ஒட்டிக்கொண்டிருக்கும் அல்லவா...

அப்பனே நிச்சயம் அவை தான் கூட திரும்பி.. பூலோகத்தில் வருமப்பா!!

அப்பனே எதை என்று கூற... இதைத்தான் அப்பனே ஆன்மாக்கள் என்று.. வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே... எதை என்று பொறுத்து. 

இதனால் அப்பனே மீண்டும் அப்பனே அதனால் தான் அப்பனே நிச்சயம்.. உங்களை அதாவது உடம்பை.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே தியானங்கள்... இன்னும் தவங்கள் அப்பனே... யோகாசனங்கள்... மனதை கட்டுப்படுத்தி அப்பனே.. இன்னும் இயற்கை உணவுகளை நிச்சயம் தன்னில் கூட... உட்கொண்டு இறைவன் எப்பொழுதும் செப்பி கொண்டு இருந்தாலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அவை தன் அதாவது.. அவை தன் இடித்தாலும் நிச்சயம்.. கீழே வராதப்பா...

அப்பனே பின் அவை தன் நிச்சயம் தன்னில் கூட அப்படி பின் நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே உடம்பை சரி இல்லாமல்.. அப்பனே நிச்சயம் வைத்துக் கொண்டாலும்.....

அவ் அணு எதை என்று புரிய அப்பனே... குறி துகள் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் கீழே விழுந்து விடுமப்பா!!

இதனால் எதை என்று புரிய மீண்டும்.. பிறப்பெடுத்துவிடும்.

அப்பனே அறிந்தும் புரிந்தும் இதனால் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அதுவும் கூட இவ்... புரட்டாதி பின்... மாதத்தில்தான் நிச்சயம் தன்னில் கூட...

அவ் வில் அம்பானது இடித்து... மீண்டும் வரும். 

ஆனாலும்.. அப்பனே எதை என்று புரிய... அதன் சொந்தங்கள் அப்பனே...அக் குறி துகள் எதை என்று புரிய 
அப்பனே நிச்சயம் அதன் சொந்தங்கள்.. கீழே இருக்குமப்பா... அப்பனே எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட. 

அவ் அப்பனே.. எதை என்று பொறுத்து பொறுத்து...

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஆனாலும் அக் குறி துகளுக்கானது....

அனைத்து ஞாபகங்களும் இருக்குமப்பா!!!

ஆனாலும் காந்தகத்தில் பின் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது.. அப்பனே நிச்சயம் எதுவும்.. தெரியாதப்பா. 

அதாவது காந்தகம் என்பது இங்கு இறைவன் என்று சொல்லிவிட்டேன். 

அப்பனே அக் காந்தகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அக் குறி துகளுக்கு ஒன்றும் தெரியாதப்பா. 

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..அக் குறி துகளானது.. நிச்சயம் பின் சொந்தங்கள் அப்பனே.. புவியில் இருக்கும் அல்லவா அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதை என்று புரிய.. நீங்கள் அதாவது உங்கள் உடம்பில் இருக்கும் அப்பா. 

அவை தன் நிச்சயம் அவ்வாறாக நிச்சயம் அப்பனே எங்கெங்கு பல வகையான பின் ராமேஸ்வரம் 
காசி 
இன்னும் அப்பனே பல வகையான புண்ணிய நதிகளிலும் கூட.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. சக்திகள் அதிகம். .. உடனடியாக ஆற்றல் இங்கிருந்து அப்பனே...

இங்கு நினைத்து அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் அதாவது... அறிந்தும் புரிந்தும் கூட மனதில் நினைத்துக் கொண்டாலே இக் குறி எதை என்று அறிய அறிய அப்பனே துகளானது... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் கூட அப்பொழுது நிச்சயம்... அங்கு பின் காந்தகத்தில்... ஒட்டிக் கொண்டிருக்கும் அல்லவா நிச்சயம் தன்னில் கூட... அதாவது இறைவனிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அல்லவா...
அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எவை என்று அறிய அப்பனே... அவ்வளவு சக்திகள்...இக் குறி துகளானது அப்பனே நிச்சயம் இங்கு மனதார நினைத்துக் கொண்டு... அப்பனே நிச்சயம் இவ்வாறு.. எதை என்று புரிய புண்ணிய நதிகளில்.. நீராடி அப்பனே இவை விடுகின்ற பொழுது.. அப்பனே  நிச்சயம் எதை என்று அறிய... யாரோ பின் நிச்சயம் தன்னில் கூட... அதற்கும் அப்பனே ஒரு சத்தம் கேட்கும் அப்பா.. நினைக்கின்றார்கள் என்று அப்பனே. 

இவை தன்.. அப்பனே அதாவது ஓங்கி அடித்தால்... எப்படி சத்தம் கேட்கின்றதோ!?
அதேபோல் அப்பனே.. அமைதியாக பின் மனதில் நினைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற நினைத்தாலே அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அக் குறி துகளுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 
... அடி போல்..... சப்தம் போல் கேட்கும் அப்பா... நிச்சயம் தன்னில் கூட..
அப்பொழுது ஞாபகம் வரும்.. நிச்சயம் தன்னில் கூட... நம் சொந்தங்கள் பின் கீழே இருக்கின்றது.. நிச்சயம் பின் அப்பொழுது காந்தகத்தில்.. எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அப்பனே... சிறிதளவு மேலே செல்லும்.... கீழே செல்லும் உராய்ந்து கொண்டே நிச்சயம் தன்னில் கூட. 

பின் காந்தகம் பின் புரிந்துகொள்ளும்!!... அதாவது.. இறைவன் புரிந்து கொள்வான்!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட நினைக்கின்றான் என்று!!

அப்பனே நிச்சயம் எவை என்று கூற.. அவ் அணு அதுதான் ஆன்மா என்பேன் அப்பனே.. இறைவனிடத்தில் கூறும் என்பேன் அப்பனே..

நினைத்துக் கொண்டிருக்கின்றான்!!
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான்!!

ஏதோ ஏதாவது கொடு என்று  அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... இவை எல்லாம் நிச்சயம் எவை என்று.. அறிய அறிய நிச்சயம் அப்பனே... இவையெல்லாம் பின் பொதுவாக அனைவருக்கும்.. தெரிந்ததே!!!

ஏன் எதற்கு பின் கொடுக்கின்றார்கள்?? (தர்ப்பணம்) என்பதை எல்லாம் நிச்சயம் ஏதோ.. கொடுக்கின்றோம் ஆன்மாக்களுக்கு என்றெல்லாம்! அப்பனே!!

ஆனாலும்... ரகசியம் அப்பனே உடம்பு... சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே... பல.. நிச்சயம் தன்னில் கூட கம்பிகளால் பின் உருவாக்கப்பட்டது என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அதாவது சாதாரணமாக.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எவை என்று கூற ஒரு மின்சாரம்...எதை என்று அறிய அப்பனே எத்தனை? எத்தனை? அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எவை என்று அறிய ஆனால் உடம்பில்.. அப்பனே பலவகையான... நரம்புகள் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே எதை என்று கூற அப்பனே பின்.. மின்சாரம் போன்று அப்பனே.. நிச்சயம் அதில் கூட பல வகையான துகள்கள் ஒட்டி உள்ளது என்பேன் அப்பனே நிச்சயம்.. இதற்கெல்லாம் அப்பனே சாதாரணமாக 
... எவை என்று கூற அதனால் தான் அப்பனே உண்மை நிலை... என் பக்தர்கள் நிச்சயம் வரும் காலத்தில் புரிந்து கொண்டு அப்பனே எதை என்று அறிய அறிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. புதுமை புதுமையான விஷயங்கள். 

ஏனென்றால்... அப்பனே பின் மனிதன் எதை என்று.. எவை என்று அறிய அப்பனே... அதாவது கலியுகத்தில் பின் அழிவுகள் எதை என்று கூட... மற்றவனை அழித்துக் கொண்டே இருக்கின்றான்.. அவை இவை என்றெல்லாம் சொல்லி சொல்லி... அப்பனே 

ஆனாலும் உண்மை நிலையை யாங்கள் தெரிவிப்போம் அப்பனே..

யார் எதைச் செய்தாலும் எத் தடங்கல் கொடுத்தாலும் அதை எல்லாம்.. அடித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எதை என்று கூற புது புது... விஷயங்களைக் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட வரும் சந்ததிகளுக்கு.. எடுத்துச் செல்வோம் என்போம் அப்பனே. 

நிச்சயம் அப்பனே ஒருவன். ஆனாலும் சரி... பல கோடி பேர்கள் பிழைப்பார்களப்பா.

இதனால் அப்பனே நிச்சயம் தண்டனைகள்.. உண்டு  அப்பனே... சித்தர்கள்... எதை என்று புரிய அப்பனே..

இது எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இளவரசியான அப்பனே லோபா முத்திரை சரியாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் கண்டுபிடித்து.. அப்பனே பின் பல தெளிவுகளும் பெற்று.. அப்பனே இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் எதை என்று புரிய புரிய அப்பனே பல வழிகளிலும் கூட பின் சுவடிகளில் எழுதி வைத்து !! எழுதி வைத்து!!

அவையெல்லாம்.. அப்பனே நிச்சயம் இன்னும்.. கங்கை தன்னில் அடியில் மிதந்து கொண்டு... எதை என்று அறிய அறிய அப்பனே பின் அடியில்.. தான் உள்ளது. 

பல சுவடிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய... பின் தஞ்சை (தஞ்சாவூர்) தன்னில் கூட!!!

அப்பனே பின் தஞ்சையில் இருக்கும் பல வகையிலும் கூட அப்பனே சுவடிகள் அதாவது... எங்கேயோ எடுத்துச் செல்லப்பட்டது என்பேன் அப்பனே...

இன்னும் அப்பனே சில எவை என்று அறிய சுவடிகள்... பழனி தன்னில் கூட அறுபடை வீடுகளிலும் கூட... நிச்சயம் தன்னில் கூட 
பஞ்ச பூத தலங்கள் அடியிலும் கூட.. அப்பனே நிச்சயம்.

இதனால்தான் அப்பனே... அதற்கும் எவை என்று கூற பின் சக்திகள் என்பேன் அப்பனே. 

சுவடிகள் எப்பொழுதும் அழியாதப்பா... நிச்சயம் தன்னில் கூட அப்பனே உண்மை.. சுவடிகள் எப்பொழுதும் அழியாதப்பா. 

பின் நிச்சயம் தன்னில் கூட பலவகையான.. நிச்சயம் தன்னில் கூட அவை தன் எதை என்று பொறுத்தே.. அதனால்தான் அப்பனே.. இன்னும் இன்னும் அப்பனே.. பின் அங்கங்கு செல்லச் செல்ல அப்பனே.. புண்ணியம் எவை என்று அறிய... நிச்சயம் திருத்தலங்களுக்கு செல்ல செல்ல..அப்பனே இன்னும் மாற்றங்கள் இதனால்தான்.. நிச்சயம் தன்னில் கூட... இவை தன் தொடர்ந்து தான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட நீங்கள் எவ்வாறு... நிச்சயம் எவை என்று புரிய....

அவை மட்டும் இல்லாமல் அமாவாசை திதிகளில் கூட ஏன் இவை எல்லாம் அப்பனே பின் தர்ப்பணம்... இடுகின்றோம் என்றால் அப்பனே... இதற்குத்தான் காரணம் என்பேன் அப்பனே. 

ஏனென்றால்.. அப்பனே கதிரியக்கம் அதிகமாக.. இருக்குமப்பா அமாவாசை திதிகளில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறாக பின் சுற்றுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே காந்தகத்தில் உள்ள சில..குறி துகள் அப்பனே... ... மீண்டும் எவை என்று அறிய அப்பனே.. எதை என்று அறிய அப்பனே மீண்டும்... அதாவது எதை என்று புரிய ... அதாவது ஆசைகள் அதிகமாக இருக்கின்ற பொழுது.. அப்பனே இவ் ஆன்மாவானது மீண்டும்.. அப்படியே கீழே விழும். 

அதேபோலத்தான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட. அப்பனே அதாவது சக்திகள் இல்லாது அப்பனே .. பின் அதாவது எதை என்று புரிய ஒட்டிக்கொள்ளும் குறி துகள் அப்பனே மீண்டும்.. கீழே விழுந்து விடும் என்பேன் அப்பனே.

அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட.... இவை செய்து செய்து அப்பனே பின் எதை என்று கூற இறைவனை நினைத்து நினைத்து.... அதை சக்தி ஊட்டினால் அப்பனே... அப்படியே இறைவனிடத்தில் நிற்குமப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ்வாறு நிற்கின்ற பொழுது.. அது தன் அப்பனே நிச்சயம் இவ் சொந்த துகள்களுக்காக அவை வேண்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே...

இதனால் பரிசுத்தமான தன் சந்ததிகள் பெருகும் அப்பனே... இன்னும் அப்பனே ஆசிர்வாதங்கள் கிடைத்து.. அப்பனே பின் முன்னேற்றங்கள் கிடைக்கும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே எதை என்று புரிய அப்பனே... புரிந்து கொள்ளுங்கள் அப்பனே... 

புரியாமலும் கூட வணங்கி!?!? எதை என்று... அப்பனே நிச்சயம்...

இதனால்தான் அப்பனே.. நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய... அதாவது புறப்படும் என்பேன் அப்பனே... பட்சை அதாவது மஹாளய பட்சை தன்னில் கூட..

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... வேகம் எடுக்கும் என்பேன் அப்பனே.. சரிசமமாக... அப்பனே அதாவது முக்கால் பங்கு... அப்பனே நிச்சயம் தன்னில் கூட கடந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் வில்லானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட எட்டிவிடும். 

அப்பனே பின்... பதினொன்று (நாட்களில்) எவை என்று கூற அதாவது சில நாட்களிலே.. எதை என்று புரிய அப்பனே பின்.. அவை எட்டுகின்ற பொழுதே கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அவை தொடுகின்ற பொழுதே அப்பனே... இதையெல்லாம் செய்து கொண்டு வந்தாலே அப்பனே. பின் நிச்சயம் இன்னும் பலமாக... எதை என்று புரிய அப்பனே பின்..அத் துகள் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே இன்னும் அப்பனே விளக்கத்தோடு இன்னும்... பல வகையான... ஆனாலும்.. சித்தர்கள் ரகசியங்கள் அப்பனே.. புரியாதப்பா. 

அங்கு இவை.. செப்பினார்கள்!!... இங்கு இவை செப்பினார்கள்!!!.. அப்பனே சித்தன் இப்படி சொல்லுகின்றான்.. எதை என்று கூற அங்கு.... அப்படி வாக்கு வந்தது!!!!.. எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் .. அதாவது சித்தன்.. எதை என்று புரிய இங்கும் அங்கும்.. என்றெல்லாம் எதை எதையோ என்று குழப்பிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே. 

நிச்சயம் சித்தர் வழி அப்பனே பின் பைத்தியக்கார வழி என்பேன் அப்பனே. 

ஆனாலும் உண்மை நிலையை புரிந்து கொண்டால்... அப்பனே பின் உத்தமமாக போகுமப்பா!!!... அப்பனே பின் புண்ணியங்கள் சேருமப்பா!!!

இதனால் தான் அப்பனே.. உடம்பை சக்தியாக்குங்கள் என்பேன்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று புரிய அப்பனே... இதனால்தான் அப்பனே இயற்கை உணவுகளையும் கூட.. அப்பனே சரியாகவே உட்கொண்டாலே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

செயற்கைக்கு எவ்வளவு மர்மம்.. இருக்கின்றது என்பதை எல்லாம்... அடுத்தடுத்த வாக்கில் சொல்வேன். என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

இதனால் குறைகள் இல்லை அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட எம்முடைய ஆசிகள்.. அப்பனே பின்.. அதாவது காசிநாதனின் நிச்சயம் தன்னில் கூட காசி தேவியையும் பணிந்து... அப்பனே நிச்சயம் தன்னில் கூட மறுவாக்கும் இன்னும் பல வாக்குகளும் கூட சித்தர்கள் பின்.. எவை என்று கூற பின் வாக்குகள் உரைக்க காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே..

லோபா முத்திரையோடு அப்பனே பின் நலன்கள்.. ஆசிகள்!! ஆசிகளப்பா!! ஆசிகள்!! கோடிகளப்பா!

சித்தன் அருள்.....தொடரும்!