​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 23 August 2025

சித்தன் அருள் - 1923 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 9






அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு (22, 23 June 2025  - பகுதி 9

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1 
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911  - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
5.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
6.சித்தன் அருள் - 1916 - பகுதி 6
7.சித்தன் அருள் -  1917 - பகுதி 7
8.சித்தன் அருள் - 1918 - பகுதி 8 )

குருநாதர் :- அப்பனே நிச்சயமாய் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் கடை நாளும் உண்டு. இதனால் (யான்) உங்களை அங்கங்கு சந்தித்தவன்தானப்பா. 
(குருநாதர் கருணையால் கர்ம வினைகள் நீக்கம்.) 

இதனால் நன்மைகள்தான் நடக்கும் என்பேன் அப்பனே. குறைகள் கொள்ள வேண்டாம். குறைகள் கொள்ள வேண்டாம். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்.  

“””””தாமதம் ஆகலாமே தவிர , நிச்சயம் அனைத்தும் உண்டு அனைவருக்குமே!!!!””””” 

இவ்வுலகத்தில் சண்டைகளும் சச்சரவுகளும் எதை என்று புரியாமல் கூட நிச்சயம் பலத்த அழிவுகள். 

அதனால்தான் அனைவரையுமே காக்க வேண்டும். நிச்சயம் உங்களையும் கூட காத்திடுவேன். நிச்சயம் தீபத்தை , நவகிரகதீபத்தை ஏற்றிக்கொண்டே வந்தால் அனைத்தும் நிச்சயம் கிடைக்கும். ஆனாலும் சில நேரங்களில் கூட சில பாவங்கள் அதை ஏற்ற விடாது. ஆனாலும் நிச்சயம் காசுகள் கொடுக்கின்றேன். நிச்சயம் பின் ஏற்றுங்கள் என்றால் நிச்சயம் ஏற்றிவிடுவீர்கள்.  

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்வாறே ஆகட்டும். நீங்கள் (நவகிரகதீபம்) ஏற்றுங்கள். நிச்சயம் தானாகவே வருமப்பா. 

( அடியவர்கள் கண்ணீர் விட்டு வருத்தப்பட வேண்டிய ஒரே வாக்கு இந்த வாக்குதான். பேரழிவுகளில் இருந்து உலகைக் காக்க நவகிரக தீபம் ஏற்றுங்கள் என்று எவ்வளவு சொல்லியும் பலரும் ஏற்றவில்லை. இவ்கலியுகம் ஒரு தலையாய சித்தரை , ஆதி குருவை இப்படிக் கீழ் இறங்கி வந்து வாக்குகள் செப்பும் அளவிற்கு செய்துவிட்டதே. இதனை நன்கு உணர்ந்து நம் குருநாதரின் பிள்ளைகளான நாம் அனைவரும் நவகிரக தீபத்தை ஏற்ற வீடு வீடாகச் சென்றாவது அனைவரையும் இவ்வுலகைக் காக்க நவகிரக தீபங்களை மீண்டும் மீண்டும் பலமுறை ஏற்றச் சொல்லுவோம். ) 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் ) 

குருநாதர் :- அப்பனே நல்விதமாக இன்னும் அப்பனே ஆசிகள். ஆசிகள் இருக்கின்ற பொழுது இன்னும் உலகம் எவ்வாறெல்லாம் ஆனாலும் அப்பனே அதைக் காக்க யாங்கள் இருக்கின்றோம். நல்விதமாகவே நீங்கள் வாழ்வீர்கள். 

************************


“””””யார் யாருக்கு எதை என்று புரிய, நிச்சயம் இவ்வருடமே இப்படித்தானப்பா இருக்கின்றது. பக்தர்களுக்கு பல சோதனைகளுக்கான காலம்!!!!””””

************************

சுவடி ஓதும் மைந்தன் :- எவ்வளவு பக்தி இருந்தாலும் சோதனைக் காலம்தான். அதனால் அமைதியாக இருங்கள் அப்பா என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே நலமாக இறுதியில் வெற்றி உண்டு. 

அப்பனே நிச்சயம் மனிதனின் வாழ்க்கை ஒரு போராட்டமே என்பேன். 

அப்பனே அவ்போராட்டம் நிச்சயம் ஒரு வட்டத்திற்குள்ளே போராடிக் கொண்டிருக்கின்றான் அப்பனே: ஆனாலும் அதை வெளியே இழுத்து வந்து,  நிச்சயம் அதாவது வெளியே இழுத்து வந்தால்தான் பாவத்தை நீக்க முடியும் என்பேன் அப்பனே. அதனால் வெளியே இழுத்து வந்து, நிச்சயம் பாவத்தை நீக்கி , புண்ணியத்தைக் கொடுத்து , அவ்வட்டத்திற்குள் அனுப்பி விடுகின்றேன் அப்பனே. 

(இந்த வாழ்க்கை வட்டம் குறித்து நன்கு புரிந்து கொள்ள , அகத்திய மாமுனிவர் வாக்கு ஒன்று இங்கு பதிவிட்டுள்ளோம். இதனை படித்து உணர்ந்து கொள்ள நன்று. இவ்வாக்கு மதுரையில் ஓர் அடியவர் இல்லத்தில்,  சில அடியவர்களுக்கு இரவு நேரம் உரைத்த வாக்கு. செப்டம்பர்.2023.

https://siththarkalatchi.blogspot.com/2024/02/349.html?m=0 


குருநாதர் :- அப்பனே நலன்களாகவே இதனால் குறைகள் கொள்ள வேண்டாம் அப்பனே. நன்முறைகளாகவே நம்பி ஓடோடி வந்துவிட்டீர்கள் அப்பனே. இதனால் நிச்சயம் உங்கள் குறைகளை யான் அறிவேன் அப்பனே. நிச்சயம் அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. அதாவது ஒவ்வொன்றாக அனைவருக்கும் கொடுப்பேன். குறைகள் இல்லை. 

ஆடி மாதம் முடியும் வரை நிச்சயம் அம்பாள் இடத்திற்குச் சென்று, நிச்சயம் அம்பாள் பாடல்களைப் பாடிட்டே வந்தாலே சில சிறப்புக்கள், சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. 

நிச்சயம் இதற்குப் பலன் என்னவென்று யான் சொல்வேன். ஆனாலும் நீங்கள் பலனை எதிர்பார்க்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். 

************************
 ஆனி, ஆடி மாதம் - அபிராமி அந்தாதி ரகசியங்கள். 

************************

குருநாதர் :- அப்பனே ஆனி, பின் ஆடி தன்னில் கூட நிச்சயம் அபிராமி அந்தாதி ஓதுபவன் நிச்சயம் சிறப்பு மிக்கவன் என்பேன் அப்பனே. புண்ணியசாலி என்பேன். 

நிச்சயம் தீபம் ஏற்றி , பின் இவ்வாறு  ஓதிட்டு வந்தாலே பாடல்கள் அனைத்தும் பாடிட்டு வந்தாலே நிச்சயம் வெற்றி தாயே.  இதனை பின் நீங்கள் மட்டும் இதனை செய்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள். மற்றவர்களைத் தூண்டி விடுங்கள். அவர்களும் பின் புண்ணியமாகின்ற பொழுது , அவ்புண்ணியம் உங்களைச் சேரும். 

இதனால் விதிவிலக்காகவே அனைத்தும். அழிவுகள்தான் பலம் என்பேன்.ஆனாலும் சிலவற்றைச் சொன்னால் பயங்கள் (உங்களுக்கு உண்டாகிவிடும்).  

இதனால் பிறர் நலனை விரும்புங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- திரும்பத் திரும்ப இதுதான் வருது. 

குருநாதர் :- நிச்சயம் சில சில தரித்திரங்கள் நீங்க , பின் கந்த சஷ்டியினை ஓதிக் கொண்டே வாருங்கள். நிச்சயம் குழந்தைகளுக்கு திறமைகள் வளர கந்த சஷ்டியினை ஓதிக்கொண்டே வந்தாலே நிச்சயம் அனைத்தும் மாறும்.  ஏற்கனவே பல உரைகளில் உரைத்திருக்கின்றேன். 

—————————————————-
( உங்கள் குழந்தைகள்  வாழ்வில் முன்னேற்றம் அடைய,  தினமும் இல்லத்தில்,  கந்தப்பெருமான் முன்பு தீபம் ஏற்று அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து , கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து இடைவிடாமல் பாடிக்கொண்டே வாருங்கள். அத்துடன் ஜீவராசிகளுக்கு தினமும் குடும்பத்துடன் உணவளியுயங்கள். இது அனைத்து வழிபாடுகளுக்கும் உரித்தானது. உங்கள் குழந்தைகள் பல திறமைகள் பெற்று வாழ்வு முன்னேற்றம் அடைவது உறுதி. உங்கள் குழ்ந்தைகள் பல வெற்றிகள் அடைவார்கள். அனைவருக்கும் எடுத்துச் சொல்லிச் செய்யச் சொல்லுங்கள். உங்களுக்கு பல புண்ணியங்கள் உண்டாகும்.  மற்றொரு அடியவருக்கு உரைத்த வாக்கில் அதிகாலையில் 3:00 மணிக்குத் தீபம் ஏற்றி படிக்க அருளினார்கள். அவ்குழந்தையும் அவ்வாறே படித்து நல்ல மதிப்பெண் பெற்று 15ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு ஆச்சரியப்படும் அளவில் முன்னேற்றம் கண்டது என்று அடியவர்கள் அறியத் தருகின்றோம்.) 
__________


குருநாதர்:- (இங்கு) திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் யான்தான் திருமண பாக்கியம் ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் பரிகாரங்கள் செய்து செய்து அலுத்துவிட்டனர்.

அப்பனே பின்பு நோய்களைப் பற்றி. இதனைப் பற்றியும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே. 

அப்பனே காசுகள் யானே கொடுக்கின்றேன் அப்பனே. சில பேருக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை. (நிம்மதியான வாழ்க்கை) அதையும் கொடுத்து விடுகின்றேன். ஆனால் யான் சொல்லியதை நீங்கள் செய்ய வேண்டும். 

அப்பனே அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக கேட்பீர்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அனைவருக்கும் அப்பனே எண்ணி யான் சொல்லாததை யாராவது கேட்பீர்களா? 

(நடக்க இயலாத ஒரு குழந்தை) அடியவர் :- நடக்கனும். 

குருநாதர் :- தாயே நிச்சயம் அனுதினமும் ஆற்றங்கரையில் மண் அருகில் இருக்கும் இடத்திற்கு சென்று, பின் காலை முட்டி (அளவு) வரை புதைத்து சிறிது கைகளையும் பிடித்து ஆடிட்டு வா. நடக்க வை கைகளை பிடித்துக் கொண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) 

குருநாதர் :- அனுதினமும் நிச்சயம் பொன்னாங்கன்னி என்னும் மூலிகைகளையும் எடுத்துக்கொண்டு , இவ்வாறாகவே அதிகாலையிலும் பின் மாலை வேளையிலும் நிச்சயம் மென்று தின்ற நன்று. இதைத் தன் உருவாக , மருத்துவனாக முருகன் வருவான். 

அடியவர் :- ( முருகப் பெருமான் ஆலயம் கட்டும் முயற்சியில் தடை குறித்து கேட்டபோது) 

குருநாதர் :- அப்பனே அனைத்து திருத்தலங்களுக்கும், அதாவது ஆறுபடை வீடுகளுக்குச் சென்று, அப்படியே மருதமலைக்கும் சென்று, நிச்சயம் அனைத்து இடங்களிலும் கூட மண்ணை எடுத்துக்கொண்டு (கட்ட உள்ள ஆலயம்) அங்கு வை அப்பனே. நிச்சயம் அதி விரைவிலே நடைபெறும் என்பேன் அப்பனே சிறப்பாகவே. 

அடியவர் :- (பல மதங்கள் தொடர்பான ஒரு கேள்வி) 

குருநாதர் :- அப்பனே இல்லத்தில் கீதையையும் , குரானையும் கூட , விவிலியத்தையும் கூட வைக்கச் சொல். பின்பு இதற்குத் தகுந்தாற்போல் சொல்வேன் அப்பனே. 

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————————————-

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…) 

Friday, 22 August 2025

சித்தன் அருள் - 1922 - அன்புடன் அகத்தியர் - எகிப்து வாக்கு - 6!






10/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 6

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை  பணிந்தே செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே நலன்களாக அதாவது... சுகனின் (சுக பிரம்ம ரிஷி) அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே சிறு விளையாட்டைப் பற்றி இங்கு அப்பனே செப்ப போகின்றேன் அப்பனே!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்தும் அனைவரும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.. பின் ரிஷிகளும் கூட அதாவது சப்தரிஷிகளும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது நிச்சயம் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே... உண்மை நிலையை கூட அறிந்து.. அப்பனே பின் நிச்சயம் கைலாயத்திலிருந்து அப்பனே நிச்சயம்.. இங்கு புறப்பட்டனர் என்பேன் அப்பனே. 

ஏன்? எதற்கு? எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது இவ் நதியானது (நைல் நதி) பின் அழிய தொடங்கி விட்டால் அப்பனே  நிச்சயம் உலகம் பின் நிச்சயம் அழிந்துவிடும் என்பதற்கிணங்க நிச்சயம் தன்னில் கூட..

இதனால் அப்பனே வறட்சி ஏற்படும் என்று உணர்ந்தான் அப்பனே பின் ஈசன்!!

இதனால் நிச்சயம் பின் கைலாயத்திலிருந்து பின் ஈசனும் பார்வதியும் நிச்சயம் தன்னில் கூட பின் அங்கே நீங்கள் செல்லுங்கள் நிச்சயம் அதை... அதாவது அவ் ஓடும் நதி நின்றுவிட்டால் நிச்சயம் உலகம் அழிவதற்கு... பின் நிச்சயம் எதை என்று புரிந்து கூட  நிச்சயம் சந்ததிகள் அதாவது... உலகம் பின் அழிந்து விடும்.

 இதனால் நிச்சயம் அழியாமல் இருக்க நிச்சயம் அதாவது பின் அப்படியும் இவ் நதி அழிந்து விட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் மனிதர்கள் பின் அனைவருமே அழிந்து போவார்கள். 

நிச்சயம் இதை பின் நீங்கள் தான் பின் நிச்சயம் தன்னில் கூட... அங்கு செல்க!!!

என்று நிச்சயம் அப்பனே பின் ரிஷிகளையும் கூட நிச்சயம் தன்னில் கூட அனுப்பி வைத்தான் ஈசன் அப்பனே!!

இதனால் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே பின் யாகங்கள் நடத்த பின் தயாராக இருந்தனர் என்பேன் அப்பனே!!

ஏன்? எதற்கு? இங்குதான் யாகங்கள் நடக்க வேண்டுமா???..

என்ற... எண்ணங்கள் கூட அப்பனே பின் உங்களுக்கு தோன்றும். 

ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமாக அப்பனே பின் அனைத்து அப்பனே பின் அதாவது நட்சத்திரங்களையும் கூட அப்பனே அதில் கூட அப்பனே... பின் ஒரு நட்சத்திரம் பலமாக அப்பனே பின் அதாவது சுக்கிரனின் நட்சத்திரம் பலமாக அப்பனே இவ்... நதியிலும் கூட அப்பனே பின் இவ் நதியில் (நைல் நதியில்) விழுந்து விழுந்து... அப்பனே......

(சுக்கிரனின் அதாவது விடிவெள்ளி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுக்கள் இந்தியா நாசிக் பஞ்சவடியில் உள்ள கோதாவரி ஆற்றிலும் 

நவராத்திரி காலகட்டத்தில்... பௌர்ணமி வரை விடிவெள்ளி சுக்கிரனின் கதிர்வீச்சுக்கள் கோதாவரி ஆற்றில் படியும்... அப்பொழுது இரவில் கோதவரி ஆற்றில் நீராடினால் மேன்மைகள் உண்டு.. என்று குருநாதர் ... வாக்குகள் 

சித்தன் அருள் 2022 ம் ஆண்டில் 1225.அன்புடன் அகத்தியர் பஞ்சவடி வாக்கு பாகம் 2

எதை என்று அறியாமலே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே அதாவது பின் நவதினங்கள் அதாவது நவராத்திரி என்கிறீர்கள் ஆனாலும் இதனை பயன்படுத்திக் கொண்டு அப்பனே இவ் நவராத்திரிக்கான வழிகளையும் யான் எதை என்று கூற பின் இவற்றின் தன்மைகளை உணர்ந்து அப்பனே இவ் நவராத்திரி அன்று பின் சுக்கிரனின் ஆதிக்கம் அதாவது நட்சத்திரம் எதை என்று அறிந்து அறிந்து அனைத்து நதிகளிலும் விழும் என்பேன் !!!!அப்பனே

அதனால் பின் ஒவ்வொரு எதனை என்று அறிந்து பின் இரவிலும் கூட இரவிலும் கூட நீராடி புண்ணிய நதிகளில் நீராடி அப்பனே நவராத்திரியில் வழிபட்டால் அப்பனே மேன்மைகள் தான் உண்டு என்பேன் அப்பனே!!!!

இதை(நவராத்திரி) முடிந்தவுடன் அப்பனே இங்கு தான்(பஞ்சவடி) அதிகம் அப்பனே  இப் பௌர்ணமியில் தான் அதிகம் சுக்கிரன் இங்கு அதிகம் ஆதிக்கம் !!!அதனால் தான் அப்பனே இக்கோதாவரிக்கு பெரிய ஒரு உபதேசம் உண்டு என்பேன் அப்பனே இதை சூட்சுமமாகவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இதை(நவராத்திரி) முடிந்தவுடன் அப்பனே இங்கு தான்(பஞ்சவடி) அதிகம் அப்பனே  இப் பௌர்ணமியில் தான் அதிகம் சுக்கிரன் இங்கு அதிகம் ஆதிக்கம் !!!அதனால் தான் அப்பனே இக்கோதாவரிக்கு பெரிய ஒரு உபதேசம் உண்டு என்பேன் அப்பனே இதை சூட்சுமமாகவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதையென்று அறியாத அளவிற்கும் கூட அதனால் இன்றிலிருந்து (பௌர்ணமியில் இருந்து ) அப்பனே அதன் ஒளி சற்று தாமதப்படும் அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அப்பனே நட்சத்திரங்கள் பல பல !!!எங்கெல்லாம் ஒளி விழுகின்றது!!! அப்பனே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கின்றது அப்பனே அவையெல்லாம் வரும் காலங்களில் நிச்சயமாய் சொல்வேன் அப்பனே!!!

இப்பொழுது சொல்லிவிட்டேன் அப்பனே சுக்கிரன் நட்சத்திரம் பற்றி!!!!

அப்பனே இதை என்று அறியாத அளவிற்கு ஒரு சூட்சமம் அதாவது தெரியாத ஒன்றை இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!

ராகு கேதுக்கள் சாதாரண!!மானவை இல்லை சாதாரணமானவை இல்லை !!!ஆனாலும் இதன் ஒளி அப்பனே அமாவாசை திதியிலும் பௌர்ணமி திதியிலும் கூட திடீரென்று திருத்தலங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!!!

இதை சரியாக வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே அனைத்தும் சார்ந்தே செல்லும் என்பதின் அப்பனே இதனை என்றும் நிமித்தம் காட்டி அப்பனே. அவ் ஒளியானது அப்பனே எங்கெங்கு செல்கின்றது??

முதலில் திருநாகேஸ்வரம் என்னும் இடத்திலே இருந்து ஆரம்பிக்கும் அப்பனே படிப்படியாக சென்று அப்பனே நேர்கோட்டிலே சென்று அப்பனே கேதார்நாத் அங்கு சென்றடையும் என்பேன் அப்பனே ...இதைதன் பௌர்ணமி எதை என்று பின் அமாவாசை திதிகளில் மட்டுமே  அவ் ஒளியானது அப்படியே அப்பனே செல்லும் என்பேன் அப்பனே அதுவும் பின் திருத்தலங்களை நோக்கி எதை என்று அதை என்று( ஆலயங்களை) கூட உராய்ந்து செல்லும் என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே எதை என்று கூட அதில் நேர்கோட்டில் செல்லுங்கள் அப்பனே!!! அவ் அந்த ஆலயங்களில் மட்டும் சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

நட்சத்திரங்கள் மேலே இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!! ஆனால் அப்பனே கீழே இருந்து அவை அவற்றின் ஒளியானது அப்பனே அனைவரையும் ஒளி வீசி அப்பனே
அது மேல் இல்லை அப்பனே கீழிருந்தே ஆட்டுவிக்கின்றது!!!

அதனால் அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே ராகு கேதுக்களை அப்பனே எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பேன் அப்பனே!!!

அப்பனே இதை என்றும் அறியாத அளவிற்கும் ஆனால் இதிலும் சூட்சமம் உள்ளது அப்பனே ஆனாலும் நமச்சிவாயனை பிடித்து விட்டால் அப்பனே நிச்சயம் ராகு கேதுக்களின் ஒளி அப்பனே அதிகமாக படும் என்பேன் அப்பனே அப்பொழுது தோஷங்கள் நீங்கிவிடும் என்பேன்!!!

அப்பனே ஆனாலும் எதற்கு இவ் அர்த்தங்கள் உண்டு என்பதை என்று ஆனாலும் ஈசனுடைய பக்தர்கள் நமச்சிவாயா!!!!! நமச்சிவாயா!!!! நமச்சிவாயா !!!!என்று உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் அப்பனே !!!!!அவ் உச்சரிக்கும் திறன்கள் ஆனது திறன்கள் ஆவது பின் ராகு கேதுக்களை எதை என்று கூற அப்பனே நம்மிடம் உராயும் பொழுது அப்பனே அவ் மந்திரமானது அப்பனே....எதை என்று எதிரொளித்து அவை தன் எதிரொளித்து அவை அப்படியே சென்றுவிடும்!!!!

அப்பனே இவை என்று அறிய பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் அப்பனே இதை அறிந்திருந்தனர் இதனால் அப்பனே நமச்சிவாயனை நமச்சிவாயா!!! நமச்சிவாயா !!என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வொளியானது எதை படும் பொழுது ஆனாலும் எதை என்று நிமித்தம் காட்டி பின்  அவ் ஒளிக்கு அவ்வளவு சப்தம் அப்பனே நமச்சிவாயா என்பது கூட சாதாரணமான விஷயம் இல்லை அப்பனே!!!!

இதனைப் பற்றி தெளிவாக சொல்கின்றேன் ஆனால் மக்கள் எதை என்று அறியாமலே இருக்கின்றார்கள் ஒவ்வொன்றை பற்றி யான் சொல்லிவிட்டுத்தான் அதனை பற்றியும் விரிவாக சொல்வேன் அப்பனே!! என்று வாக்குகள் ஏற்கனவே உரைத்திருந்தார்.

முழுமையான வாக்கினை மீண்டும் படித்தால் மேலும் புரிந்து கொள்ள முடியும்)







 பின் நிச்சயம் சுக்கிரனின் ஒளி அதாவது... அங்கு""" மூலம் (மூலஸ்தானம்) என்றேனே

 (கிசா பிரமிட்)

 அங்கு விழுந்து விழுந்து... பிரதிபலிக்கப்பட்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட !!!

அனைவரும்... ஒன்று கூடி அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் தியானிப்பார்களே!!!!!

....மெகனன்......

 நிச்சயம் அவ் ஊரில் படிந்து அப்பனே!!

(பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 5 ல்..... அப்பனே அதாவது அனைவரும் ஒன்று கூடுவார்களே !! அப்பனே.... அங்கு விழுகின்றது என்பேன் அப்பனே. 

அங்கும் அப்பனே ஈசனுடைய ஆலயம் அறிந்தும் கூட..)

என்று குருநாதர் குறிப்பிடும் ஸ்தலமும்..!!!

 இப்போது மெகனன்...

எனும் ஸ்தலம் 

புனித மெக்கா!!. அல் முக்கர்ரமா..மதீனா.  )


 நிச்சயம் தன்னில்... கூட!!!

 இவ் மாதம்..

.(ஜூன் தமிழ் மாதம் ஆனி. துல்ஹஜ்)

 அப்பனே நிச்சயம் பின் ஒளி எழுந்து அப்படியே காணப்படும் என்பேன் அப்பனே. 

அப்பனே ஒவ்வொரு வருடத்திற்கும் கூட அப்பனே பின் அதாவது சில மாதங்களில் அப்பனே அவ் ஒளியானது சரியாகவே அப்பனே... நிச்சயம் மாறுபடும் என்பேன் அப்பனே. 

இவ்வாறாக அப்பனே மாறுபட்டு.. அங்கு விழுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கூட்டு பிரார்த்தனை செய்கின்ற பொழுது.. அனைவருக்கும் அனைத்தும் கிட்டுமப்பா!!

(மெக்காவில் அனைவரும் ஒன்று கூடி தொழுகை.... மக்காவில் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை

மக்கா நகரில் இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படும் தொழுகை, `ஃபர்ளு' தொழுகை என்று அழைக்கப்படுகிறது
ஒவ்வொரு தொழுகையும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன: ஃபஜ்ர் (வைகறை தொழுகை), லுஹர் (நண்பகல் தொழுகை), அஸர் (மாலை தொழுகை), மக்ரிப் (சாயரக்கால தொழுகை), மற்றும் இஷா (இரவு தொழுகை).

இங்கு தொழுகை என்பது கூட்டு பிரார்த்தனை.



 மற்றும் தவாஃப்!!செய்யும் ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணம்... குருநாதர் குறிப்பிடும் இந்த மாதத்தில் அதாவது தமிழ் மாதம் ஆனி ஆங்கில மாதம் ஜூன் இஸ்லாமிய நாள்காட்டி மாதம் துல்ஹஜ் /துல் ஹிஜ்ஜா மாதத்தில் நடைபெறுகின்றது) 

இன்னும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே ஆனாலும்... தர்மத்தை செய்ய நிச்சயம் அப்பனே மனிதன் அப்பனே தயங்குகின்றான் என்பேன் அப்பனே!!
நிச்சயம் அப்பனே!!

(இங்கு செல்வதற்கு மற்ற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்ற அரசாங்க நிலைப்பாடு உள்ளது ஆனால் குருநாதர் இந்த இடத்தில் சொல்வதை கவனித்தால்... இதனையும் எளிதில் மாற்றுவோம் என்று கூறி இருக்கின்றார்)


இதனையும் அப்பனே நிச்சயம் எளிதில் மாற்றுவோம்!!!அப்பனே!!





சப்தரிஷிகளின் யாகம்!



அப்பனே இவ்வாறாக நிச்சயம் உலகம் பின் அழியக்கூடாது!!

ஏன்? எதற்கு? அப்பனே அதாவது இவ் நதி நின்றுவிட்டால் அவ்வளவுதான்!!! என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் எதை என்று அறிய அறிய.. அறிந்தும் கூட! 

இதனால் அப்பனே அனைவரும் கூட (சப்தரிஷிகள்) யாகத்தை அப்பனே இங்கு நடத்தினார்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய... அப்பனே இருந்தும் கூட அப்பனே விசுவாமித்திரன்.. இதற்கு தலைமை ஏற்றான்.. என்பேன் அப்பனே!!! அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட!!

ஆனாலும் அப்பனே யோசனைகள் பலமாகவே!!... அப்பனே!!

ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் இவ்... எதை என்று அறிய அறிய யாகம் நடத்தலாம்.. என்று தயாராக இருந்தனர் அனைவருமே!! அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 

யாகத்தை நடத்தினால் நிச்சயம் பின் மீண்டும் நதி பெருக்கெடுத்து ஓடும்!!
பின் குறை இல்லாமல்!!

 இதனால் மக்கள் அனைவருமே இன்னும் சிறப்பாகவே!!!

அறிந்தும் இவ் நதி இன்னும் பின்.. அதாவது விஞ்ஞான முறையிலும் கூட யான் நிச்சயம் அடுத்தடுத்து அறிவிப்பேன் அப்பனே. 
அறிந்தும்!!

இதனால் பின் யாகத்திற்கு தயாராக இருந்தார்கள் அப்பனே 
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் தயாராக இருக்கும் பொழுது அப்பனே... நிச்சயம் விசுவாமித்திரன் அறிந்தும்... அப்பனே நிச்சயம் இவ்வாறாக... மறந்துவிட்டோமே.

 யாகத்திற்கு..... இன்னும் புண்ணிய நதிகளின் தீர்த்தம் வேண்டுமே?!!

எவ்வாறு நிச்சயம் அறிந்தும் கூட அவ்வாறு பின் புண்ணிய நதிகளில் தீர்த்தம் இல்லாவிடில்? நிச்சயம் இவ் யாகத்தை நடத்தினாலும் வீண்!!

எப்படி? இங்கிருந்து அறிந்தும்.....(எகிப்து ல் இருந்து)... எதை என்று மீண்டும்..... எவரை பின் அனுப்ப??? அனுப்ப???

(பாரத கண்டத்தில் இருந்து புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை கொண்டு வர) 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மூன்று புனித நீர்கள் வேண்டுமே!!!.. அதை எப்படி எடுத்து வர??? என்றெல்லாம் நிச்சயம் அதாவது.. பின் அறிந்தும் கூட அதாவது!!

"""கங்கையும்!!... நிச்சயம் தன்னில் கூட. 

"""காவிரியும்!!
 நிச்சயம் தன்னில் கூட.

நிச்சயம் பின் அவை மட்டும் இல்லாமல்... நிச்சயம் பின் இராமேஸ்வரத்திலும்.. நிச்சயம் நீரை எடுக்க வேண்டும். 

அதாவது அதை மட்டும் இல்லாமல் இன்னும் அறிந்தும் எதை என்று புரிய இவை.. முக்கியமானது.

இவை எடுத்து வந்தால் தான் யாகமும் பின் நிறைவு பெறும். 

நிச்சயம் இப்பொழுது எப்படி எடுப்பது??? யாரை அனுப்புவது???

ஆனாலும் நிச்சயம் யாம் அதாவது பின் ஏழ்வரில் கூட (சப்தரிஷிகள் ஏழு பேர்) 
பின் நிச்சயம் ஒருவர் தான் செல்ல வேண்டும்.. அறிந்தும் கூட பின். 

ஆனாலும்.  நிச்சயம் தன்னில் கூட பின் யாம் அதாவது ஈசன் கட்டளையோடு செய்தால்தான் நிச்சயம் ஆனாலும்... இதை பின் எவ்வாறு என்பதையும் கூட!!! 

பின் ஒருவர் பிரிந்தாலும்.. யாகத்தை செய்ய முடியாதே!!!.... எப்படி ?ஏது !? என்று அறிய!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!

ஆனாலும் பின் இவ் வித்தையை எப்படி பயன்படுத்த??? என்று நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய 

பின் சுகனும் நிச்சயம்....
(சுக பிரம்மரிஷி)... யான் செல்கின்றேன்.. அறிந்தும் என்னால் முடியும் என்று!!

எப்படி செல்வாய்???.. அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் நிச்சயம் எதை என்று புரிய இதனால் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட என்னால்... அனைத்தும் பின் முடியும்... அறிந்தும் புரிந்தும்... நிச்சயம் தன்னில் கூட பின்.. இவை என்று அறிந்தும் கூட... இதனால் நிச்சயம் அறிந்தும் அதாவது பின் அப்பொழுதெல்லாம் சுகனுக்கு என்னென்ன?.. பின் புத்திகள் தோன்றுகின்றதோ??.. பின் நிச்சயம் அவ் புத்திகள் படி பின் வெவ்வேறு ரூபத்தை எடுப்பான்!!!

ஆனாலும் இம்முறை நிச்சயம்... அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம்.. எவை என்றும் நிச்சயம் எவ்வாறெல்லாம்... பலமுறை பின் 

""கிளி வடிவிலே சுற்றி வந்தான்!!! 

அறிந்தும் நிச்சயம் இவ்வாறாகவே!!!...

நிச்சயம் இப்பொழுதும் கூட பின் அதாவது பின் யான் பின் கிளி ரூபமே எடுத்து... நிச்சயம் இவை மூன்றையும் (மூன்று புனித தீர்த்தங்கள்).. எப்படியோ எடுத்து வருகின்றேன் என்று!!


நிச்சயம் அதிவிரைவில் வரத்தான் வேண்டும் என்று! 

நிச்சயம் யான் கிளி ரூபமாக எடுத்து விமானம்.. மூலமாகவே அதாவது... விமானம் எப்படி செல்கின்றதோ அவ்வாறு பின் நிச்சயம் தன்னில் கூட பின்... பலமாக பறந்து நிச்சயம் எடுத்து வருவேன் என்று!! அறிந்தும்!!

இதனால் நிச்சயம் பின் முதலில்  ராமேஸ்வரத்தை அடைந்தான்... அவ்வாறாகவே நீரை எடுத்தான்... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும்... அதாவது புண்ணிய தீர்த்தங்களை கூட.. அதாவது கடல் நீரையும் கூட!!!(அக்னி தீர்த்தம் உட்பட)

பின் கங்கைக்கு வந்தான்.. நீரையும் எடுத்தான் மீண்டும்.. பின் காவிரியில் தீர்த்தம் !எடுத்தான் மீண்டும் பின்... பிரம்மபுத்திரா!!! இன்னும்....

தேவைப்பட்டது மூன்று தீர்த்தங்கள்!!

 ஆனாலும் இன்னும் எடுத்துக் கொள்வோம்.. பின் ஆனாலும் அங்கு விசுவாமித்திரன்.. நிச்சயம் பின் மீதி தேவைப்படுகின்றது என்று அதாவது.. அறிந்தும் அறிந்தும்.. எதை என்று அறிய அறிய அங்கும் எடுத்தான். 

எவ்வாறெல்லாம் மீண்டும் பின் அறிந்தும் கூட பின் அதாவது அங்கும் இங்கும்... எங்கு நிற்கின்றது?? என்று... பல பல பின் சில... வழிகளிலும் கூட நிச்சயம் பின்..

ஆனாலும் பின் அனைத்து நதிகளின் தீர்த்தத்தை எடுத்து பின் சமமாக... மீண்டும் ஏதாவது ஒன்று குறைந்தால்... நிச்சயம் அழிந்து விடுமே இவ் தேசம்... நிச்சயம் என்று. 

இதனால் அனைத்தும் பின் சென்று எவை என்று அறிய அறிய... ஆனாலும் பின் நிச்சயம் வருகின்ற பொழுது!!!

பளு (எடை) தூக்காமல்.. அறிந்தும் கூட பின் அதாவது பின் நீரை நிரப்பி கொண்டு..பளு..(பாரம்அதிகமானதால் ) அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட.... பின் மெதுவாகவே....

ஆனாலும் பின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் அறிந்தும் புரிந்தும் பின் வேகத்தை அதிகரித்தான்!!!

இதனால் பின் அங்கிருந்து வருகின்ற பொழுது நிச்சயம்.... வருகின்ற வழியில் ஆங்காங்கே சிந்தியது... நிச்சயம் அவ் நீர் (தீர்த்தங்கள்) 

அங்கு சிந்தியதெல்லாம் நிச்சயம் பன்மடங்கு... இதனால் முதலில் பின் சிந்தியது இப்பொழுது கூட.... ஸ்ரீசைலம் என்றே கூறப்படுகின்றது. 

(ஆந்திர மாநிலம் பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் இரண்டாவதாக மல்லிகார்ஜுனர் ஸ்ரீசைலம் மலை ஆறு இருக்கும் இடம்) 


பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பொழுது நிச்சயம் பின் அங்கும் பின் அறிந்தும் உஜ்ஜயினி.. இடத்திலும் கூட!!

மத்திய பிரதேசம் உஜ்ஜைன் ஜோதிர் லிங்கம் மகாகாலேஸ்வரர்...

அப்படியே அறிந்தும் புரிந்தும்... நிச்சயம் எவை... என்று அறிந்தும் கூட மீண்டும்.. இவ்வாறாகவே அறிந்தும்... அங்கங்கு சிந்தியது!!!

அதாவது எங்கும் நிறைந்த பின் முறையானவற்றையெல்லாம் எடுத்து நிச்சயம் தன்னில் கூட பின்... இன்னும் இன்னும் எதை என்று கூற அங்கும் இங்கும் பின் அதாவது திரிந்து திரிந்து இதனால் நிச்சயம் பின்... அதாவது பின்... யாகம்!!

யாக குண்டம் அமைப்பதற்குள்ளாகவே....

 பின் உலகம் அழிய... நிச்சயம் பின் அதாவது... எச்சரிக்கையாகவே தொடங்கி விட்டது... என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

இதனால் பின் நிச்சயம் காற்றும் தாங்காமல் பின் நிச்சயம்... அதாவது கிளியானது!!!
அதாவது அறிந்தும்.. கிளி ரூபத்தில் இருக்கும் சுகமும் அங்கும் இங்கும் காற்றில் அலைந்தான் அறிந்தும் கூட. 

இதனால் நிச்சயம் பின் மேலிருந்து கீழ் நோக்கி!!

பின் அங்கும் இங்கும் நிச்சயம் தன்னில்!!!

 (தீர்த்தங்கள் பாரத்தோடு கிளி வடிவிலே இருக்கும் சுக பிரம்ம ரிஷி காற்றின் வேகத்தில் அலைகழிக்கப்பட்டு).......அறிந்தும் கூட எவை என்று புரிந்தும் கூட.. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... காசி தன்னில் கூட நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் அங்கிருக்கும் காற்று பின் மேல் நோக்கி... செல்ல... பின் கீழ் நோக்கி செல்ல!!!

கடைசியில் நிச்சயம் பின் வந்து.. விழுந்து விட்டான்!! அண்ணாமலையிலே!!!

(கிளி வடிவத்தில் இருக்கும் சுகர் பிரம்மரிஷி அண்ணாமலையில் விழுந்துவிட்டார் மேலிருந்து) 

அய்யய்யோ!!!
 அனைத்து நீரும் சென்றுவிட்டதே!!!! என்று எண்ணி!!!... மீண்டும் அறிந்தும் புரிந்தும் பின் எப்படி? எடுப்பது???

நிச்சயம் இவ்வாறு உலகம் அழிய தொடங்கி விட்டதே!!!.....

நிச்சயம் பின் அங்கு (சப்தரிஷிகள் யாகத்திற்காக) என்ன செய்து கொண்டிருப்பார்களோ!??!?!!?!?! என்றெல்லாம் 


 

ஆனாலும் இங்கு!!

 (எகிப்து நைல் நதி கரையில் சப்த ரிஷிகளும்) 


பின்...சுகன் போனானே!!!!..... இன்னும் வரவில்லையே!!!... எப்படி பின் எடுத்து வருவது... என்றெல்லாம் நிச்சயம்!!

ஈசனாரே!!!....... நிச்சயம் பின் அறிந்தும்..... நீங்கள் எங்களை அனுப்பினீர்கள் ஆனாலும்... உலகம் நிச்சயம் பின் அழிய தொடங்கிவிட்டதே!!!!

எப்படி ஏது என்று கூட இன்னும் அதாவது சுகனும்... சென்றான் யான் எடுத்து வருகின்றேன் என்று.. தைரியமாக!!!

ஆனாலும் இன்னும் வரவில்லையே!! வரவில்லையே!! என்றெல்லாம்!!

மீண்டும் நிச்சயம் எப்படியாவது.. எடுக்க வேண்டும் நிச்சயம் தன்னில் கூட... இறைவா!!! சக்திகள் கொடு.!!!. நிச்சயம் என்றெல்லாம்!!

 மீண்டும் நீரையெல்லாம் எடுத்தான்!! பின் மீண்டும் அறிந்தும் பின் மீண்டும் உடனடியாக.. பின் பறந்து பறந்து எடுத்தான்.... அறிந்தும் கூட மீண்டும்...

 அதாவது நிலை தாங்காமல் உலகம் இன்னும். இன்னும் வேகம் அதிகரித்தது... நிச்சயம் தன்னில் கூட...(பிரளயம்)

அவ்வாறு (கிளியின் வேகம்) பின் வேகம் அதிகரித்து நின்று விட்டது..

மீண்டும் அங்கும் இங்கும்.. எதை என்று புரிய நிச்சயம்.. கீழும் உலகம் மேலும் நிச்சயம் கொந்தளித்தது. 

இதனால் பின் இறைவா!!!!..

பின் அங்கிருந்தே நிச்சயம் தன்னில் கூட.. விழுந்து என்னால் எழுந்திருக்க முடியவில்லை.. என்று கிளி ரூபமாகவே.. இருந்தான். 

மீண்டும் எப்படி? எடுப்பது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!... 

ஆனாலும் இங்கிருக்கும் அறிந்தும் எவை என்று கூட பின்.. அதாவது பரப்புவதில்லை... நிச்சயம் தன்னில் கூட அழியத்தான் போகின்றது.. என்றெல்லாம் நிச்சயம். 

ஆனாலும் அவை இல்லாமல் செய்ய முடியாதே!!!... என்று எண்ணி நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அறிந்தும் கூட மீண்டும் பின் ஈசனை நோக்கி.... அறிந்தும் புரிந்தும்... எதை என்று அறிய. 

நிச்சயம் தன்னில் கூட பின்...

ஈசனே!! நிச்சயம் பின் அதாவது... ஈசனாரே!!!... பின் தாய்!! தந்தையரே! அறிந்தும் என்றெல்லாம்!!

 நிச்சயம் பின் ஒரு மீண்டும் முயற்சி எடுத்து நிச்சயம் அனைத்தும் பின் எதை என்று புரிய பின் அவ்வாறாகவே... எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட பின்... அவை எடுத்து எடுத்து நிச்சயம் தன்னில் கூட பின் வருகின்ற பொழுது... பின் எவ்வாறாகவோ சமாளித்து வருகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட..

. காற்றும் அறிந்தும் இன்னும் பின் வெப்பமும் பின் அதிகமாக அதிகமாக நிச்சயம் பின்... சோர்ந்து விட்டான்!!

மீண்டும்.. ஆனாலும் இவ்வாறாக இருந்தாலும் ஈசனை நினைப்போம்!! நிச்சயம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

பின் ஈசனை நினைத்து நினைத்து... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் எதை என்று கூற எப்படியோ... இங்கு வந்து சேர்ந்து விட்டான்!!! நிச்சயம் தன்னில் கூட!!

 பின் ஆனாலும் பின் வந்த உடனே எதை என்று அறிய அறிய... இரும் (இரு) பறப்பதற்கு எவை என்று கூற.. இறக்கைகளும் கூட வெப்பத்தாலும் சுருங்கிவிட்டது!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட உயிர் போகும்.. நிலை!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் விசுவாமித்திரனும் கூட அறிந்தும்.. எவை என்று சப்தரிஷிகளும் பின்.. மனமுவந்து பின் பாடலை.. பாடி நிச்சயம் தன்னில் கூட பின்..

அதாவது சாகா!! நிலையை நிச்சயம் தன்னில் கூட. பின் ஏற்படுத்தி எதை என்று புரிய பின் மீண்டும்.. உண்மை நிலையை அதாவது பின் மனித ரூபத்தை எடுக்க நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் நிச்சயம் மீண்டும் பின் தொடங்கினார்கள்.. யாகத்தை!!

நிச்சயம் தொடங்கும் பொழுதே நிச்சயம்.. அழிவுகள் வந்து கொண்டே!! வந்து கொண்டே!! நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட.. நிச்சயம் தன்னில் கூட பின் 

ஆனாலும் இவ் நதிகளை எடுத்து.. எதை என்று கூற அறிந்தும் முதலில் அறிந்தும் இதை இட்டு.. நிச்சயம் தன்னில் கூட யாகம் பின் நிச்சயம் நடத்தினார்கள். 

ஆனாலும்.. பல இன்னல்கள் அறிந்தும் கூட.. பின் நடத்திய பிறகே எதை என்று அறிய அறிய... பின் அதாவது தொடங்கிய சில வினாடிகளிலேயே... நிச்சயம் தன்னில் கூட... மீண்டும் மீண்டும் எவை என்று கூற மந்திரங்கள் ஓத!! ஓத!!... பின் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் அப்படி அப்படியே... நிச்சயம் அனைத்தும் பின் சிறிது சிறிதாக பின்... காற்றும் நீரும்..பின் வெப்பமும் தணிந்து!! தணிந்து!!! ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (கட்டுப்பாட்டிற்குள்) வந்துவிட்டது !!
வந்துவிட்டது!!

ஆனாலும் பின் வெற்றி எதை என்று அறிய அறிய ஈசன்... அனுப்பியது நாம் தனே... வெற்றி கொள்ள... அறிந்தும் எதை என்று புரிய... சாதாரணமாகவே...

 இதனால் நிச்சயம் தன்னில் கூட உலகம் அமைதி காத்தது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட..

இவ்வாறு பின் ஹோமத்தை பின் அறிந்தும்.. எதை என்று அறிய அறிய பின் அதாவது... பல வழிகளிலும் கூட நடத்தி பல மனிதர்கள் எவை என்று அறிய பின் அதாவது பின் பாதி... எதை என்று கூறப்பின்... நடத்து நடத்தி நிச்சயம் தன்னில் கூட உலகம் அமைதி பெற்றது. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும்.. பெருக்கெடுத்து பின்!!
 சிறிது சிறிதாக பின் ஓடிய ஆறு!!! (சிறிதளவாக மட்டும் ஓடிக் கொண்டிருந்த ஆறு)

பின் மீண்டும் பெருக்கெடுத்து ஓடியது!!! எதை என்று அறிய அறிய !!!


இதனால் நன்மைகளாகவே பின் நிச்சயம் தன்னில் கூட பின் நீடூழி வாழும் என்பதற்கிணங்க நிச்சயம் தன்னில் கூட 

இவ் நதி பின்...இவ் நதி பின் நிற்கக் கூடாது....

நின்றுவிட்டால் நிச்சயம் பின்... அதாவது காய்ந்து விட்டாலும் நிச்சயம் பல அழிவுகள் வரும் நிச்சயம்...

ஆனாலும் நிச்சயம் வரக்கூடாது என்பதற்கிணங்க அன்றையே...(அந்தக் காலத்திலேயே) பல பின் யாக குண்டங்களை அமைத்து நிச்சயம் தன்னில் கூட... பரிசுத்தமாக பல வழிகளிலும் கூட பின்... எவை என்று அறிய அறிய இந்திரனும் சந்திரனும்... அனைவரும் அனைத்தும் வரவழைக்கப்பட்டு... மேலோகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு.. அனைத்தும் செய்தனர். 
கடைசியில் பின் அறிந்தும் கூட!!


 இதனால்... மூலாதாரமே!!!
அனைத்தும் இங்கிருந்து தான் பின் வருகின்றது என்று பாருங்கள்... நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால்தான் இவ்வாறு இவ் தேசமானது பின்... அகண்ட தேசமாகவே நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனாலும் போக போக பின் பிரிந்துவிட்டது!!!

அனைத்தும் (அனைத்து கண்டங்களும்) ஒன்றாகத்தான் இருந்தது!!

ஆனாலும் போகப் போக.. கால சூழ்நிலையில் பிரிந்து விட்டது..

ஆனாலும் அவையெல்லாம் நிச்சயம்... இணையுமா?? என்றெல்லாம்!!

நிச்சயம் பின் சித்தர்கள் யாங்கள்  பின் அனைவரும் பின் இணைய வேண்டும் என்பதே... நிச்சயம் தன்னில் கூட!!

அனைவரும் ஒன்றாக செயல்பட்டு தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதே... நிச்சயம் தன்னில் கூட...

அவ்வாறு நிச்சயம் பின் வரும் காலத்தில்... அழிவுகள் இருந்தாலும்... எங்களால் நிச்சயம் காக்கவும் முடியும். 

எப்பொழுதோ!?????!?!?!?!?!..... பின் அழிந்திருக்கக் கூடியது இது!!! .... எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட!!

இவையும் ஏற்பட்டது நிச்சயம்... கலியுகத்திலே.. அறிந்தும் தொடங்குவதற்கு...

இதனால் பல வழிகளிலும் கூட... எங்களால் பின் அறிந்தும் பின் எதை எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட 

இவ்வாறாக விசுவாமித்திரனால்... நிச்சயம் தன்னில் கூட பின்... ஏற்பட்டு அறிந்தும்... எதை என்று புரிய இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட... நீண்டு போய்க் கொண்டே இருக்கின்றது இவ் நதி!!! ( நைல் நதி)


இதனால் அருள்கள் பலம் பெற்றவர்கள் நிச்சயம் தன்னில் கூட இதை தன் பின் விசுவாமித்திரனுக்கும் பின் இந்த ஆறு (நதி)எதை என்று.. நிச்சயம் தன்னில் கூட பின் சப்த ரிஷிகளுக்கும் கூட சொந்தமானது என்பேன்.

அதை நிச்சயம் தன்னில் கூட... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுதும் அறிந்தும் கூட...இங்கும் அங்கும் அதாவது இவ் நதிக்கும் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.... அப்பொழுதெல்லாம் எதை என்று கூட கிளி ரூபம் எடுத்து... நிச்சயம் தன்னில் கூட... அதாவது அவ் மூலம் (மூலஸ்தானம்) சொன்னேனே!!! அங்கும் இங்கும் பறந்து கொண்டு.. இருப்பான்.. நிச்சயம் விசுவாமித்திரன் காலப்போக்கில்!!!


 ஆனாலும் பின் சுகன் (சுகப்பிரம்மரிஷி) பறவைகள் எதை என்றும்... நிச்சயம் புறா வடிவிலும் கூட... எதை என்று அறிய அறிய இன்னும்... பல வடிவங்களில் கூட நிச்சயம் பெற்று பெற்று அறிந்தும் எதை என்று புரிய !!!

இதனால் நிச்சயம் அவந்தனுக்கு இவ்வாறாகவே அமைந்துவிட்டது... பறக்கும் எண்ணம் பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் சுக்கிரன் ரூபமாகவே காணப்பட்டு இன்றளவும்.. ஜொலி ஜொலித்துக் கொண்டே இருக்கின்றான் பல வழிகளிலும் கூட பின் அனைவருக்கும் பின் இன்பத்தை தந்து கொண்டே இருக்கின்றான் இங்கு!!

பின் அதாவது பின் உலகத்தை சுற்றி வந்து கொண்டே இருக்கின்றான்... ஆங்காங்கு மக்களை பின் பார்த்து பார்த்து குறை தீர்த்துக் கொண்டு இருக்கின்றானே பின் கிளி ரூபமாகவே எடுத்து எடுத்து!!

இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... அவந்தனுக்கும் நிச்சயம் பின்... அறிந்தும் கூட பின் அதாவது....


ஈசன் பார்வதி தேவியின் மடியிலும் கூட... அவந்தனுக்கு இடம் கிடைத்தது!!!
நிச்சயம் தன்னில் கூட!!

பின் ஏன்??? இடம் கிடைத்தது... என்பதை எல்லாம் நிச்சயம் பின் ஒரு.. மாயப்பிறவி உணர்ந்து நிச்சயம் அறிந்து எதை என்று கூற... மனிதனுக்கு தெரியாவிடிலும்.. பின் ஏற்றங்கள் வாழ்க்கையில் ஒளி வீசுவதாக """"சுகன்!!! கொடுத்துக் கொண்டே இருப்பான்... கவலைகள் அறிந்தும் புரிந்தும்... இல்லாமல் பின் போய்க்கொண்டே இருக்கும்!!!

இதனால்தான் நிச்சயம் அறிந்தும்.. எதை என்று புரிய பின் ஞானிகளும் சித்தர்களும் அறிந்தும் ரிஷிமார்களும் இன்னும் குருமார்களும் இவ்வுலகத்தை பின் நிச்சயம் எங்கெங்கு??? அதிக சக்திகள் இருக்கின்றதோ!?!?!? பின் அங்கெல்லாம் சென்று வந்தால் உடம்பிற்கு சக்திகள் அதாவது... உடம்பிற்குள் நிச்சயம் தன்னில் கூட.. இருக்குமே. அச் சக்கரம்.. இன்னும் அப்பனே பன்மடங்காகவே பின் அதிக விரைவில்  சுற்றுகின்ற பொழுது!!! அவனால் அனைத்தும் சாதிக்க முடியும்!!!

இதனால்தான் அப்பனே ஓர் இடத்தில் இருந்து கொண்டு...அவ் சக்கரத்தை.. பின் இயக்காமல் இருந்தால் அப்பனே பின் ஒன்றுமே சாதிக்க முடியாதப்பா!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் ஆனாலும் புண்ணியம் பெற்றவர்கள் தானாகவே... அப்பனே அவ் இடத்திற்குச் சென்று..அவ் சக்கரத்தை அப்பனே.. தானாகவே இயங்கி விடும் என்பேன் அப்பனே. 

அவ்வாறு இயங்குகின்ற பொழுது.. அவனுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூட பெருகி வரும் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எங்கெங்கு??? வாக்குகள் பின்... எவருக்கு? சொல்ல வேண்டும்? என்பதையெல்லாம் அப்பனே யாங்கள்... நினைத்தால் மட்டுமே அப்பனே... உண்டு என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே நீங்கள்.. கேட்கின்ற பொழுதெல்லாம் அப்பனே யாங்கள் பின் உரைக்க முடியாதப்பா!!

ஏன் ?எதற்கு? அப்பனே!! உடம்பு பக்குவப்பட்டு இருக்கின்றதா?? எதற்கு என்று.. எவை என்று கூற எதற்காக... பிறந்தது??? என்றெல்லாம் அப்பனே... விதியின் அப்பனே பாதையை யாங்கள் வகுத்து வகுத்து... அப்பனே விளக்கிக் கொண்டே இருக்கின்றோம்.. என்போம் அப்பனே........

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட....இவ் நதியானது அப்பனே... மீண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய... ஓடவிட்டு எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட சப்தரிஷிகள் கூட!!!

இதனால் அப்பனே எப்பொழுதும் அப்பனே இவ் நதியில் எவை என்று கூற.. அப்பனே தவங்கள் செய்து கொண்டே... இருக்கின்றார்கள் உலக நன்மைக்காகவே என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே இன்னும் அப்பனே அழிவுகள் பின்.. எதை என்று புரியாமல் பலமாக... கலியுகத்தில் வந்த வண்ணம் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட..

.. அதை காத்திட அப்பனே யாங்கள் இருக்கின்றோம்.. என்போம் அப்பனே..

ஆனால் மனிதன் அதை இதை சொல்லி... அழியப் போகின்றது...அவைதன் இவைதன் அழியப் போகின்றது என்றெல்லாம். 

ஆனால் அப்பனே இறைவன் என்று ஒருவன் இருக்கின்றான்.. அவன் நினைத்தால் தடுத்து விடுவான் என்றெல்லாம் பின் எவனும் சொல்வதில்லையப்பா..
நிச்சயம் தன்னில் கூட!!


இதுதான் அப்பனே நிச்சயம் மனிதனுக்கு.. அப்பனே நிச்சயம் தோல்விகளாக அமைந்து விடுகின்றது என்பேன் அப்பனே. 

அப்பனே எல்லையில்லா சக்திகள் படைத்தவன் இறைவன் என்பேன் அப்பனே. 

அவன் அருளால் தான் அப்பனே பின் நிச்சயம் அப்பனே நடந்து கொண்டிருக்கின்றது...

ஆனால் மனிதன் சொல்வது... நடக்குமா??? என்றால் அப்பனே நிச்சயம்... அனைத்தும் ஒரு அப்பனே கணிப்பே..... எதை என்று அறிய அறிய அப்பனே 

பின் எதையும் எவராலும் மாற்ற முடியாது என்பேன் அப்பனே. 

இறைவன் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றான் ஒவ்வொருவரையும் கூட. 

பார்த்துக் கொண்டே இருக்கின்றான்!!

ஏது? எவ்வகை? எதை என்று புரிய அப்பனே இதனால் சுக பிரம்மனின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட விளையாட்டு மிகப் பெரும் விளையாட்டப்பா!!!

அப்பனே அவனைப் பற்றி கூட இன்னும் வரும் வாக்கியத்தில் சொல்வேன் அப்பனே..

இப்பொழுது போதுமப்பா!!! ஆசிகள்!!

இன்னும் அப்பனே பல பல தேசங்களில் கூட அப்பனே வாக்குகள் உண்டு அப்பனே எதை என்று புரிய அப்பனே. 

அவை அனைத்தும் நீங்கள் தெரிந்து கொண்டால் அப்பனே.. நீங்கள் உங்களையே ஆளலாம் என்பேன் அப்பனே. அனைத்து சுகங்களும் அப்பனே!!

இதனால் எந்தனக்கு பணம் வேண்டும்.இன்னும் அவை வேண்டும் இவை வேண்டும்... என்று கூறிக் கொண்டிருக்கின்றீர்களே!!.... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எவை என்று கூற இவையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கும் கூட அப்பனே யான் நிச்சயம் தன்னில் கூட பின் தந்து கொண்டே தான் இருக்கின்றேன் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே சக்திகளும் கூட உண்டு என்பேன் அப்பனே..

இவ்விடத்தில் என்னால் வர முடியவில்லை என்று அப்பனே ஏங்குபவர்களும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் இதைப்பின் இவ்விடத்திலிருந்தே கேட்கும்பொழுது அவந்தனக்கு ஒரு சக்திகள் பிறக்குமப்பா!!

இதனால் நன்மைகள் ஏற்படுமப்பா!!

அப்பனே  அனைத்தும் பின் என் பிள்ளைகளுக்காகவே செய்கின்றேன் அப்பனே...

அப்பனே ஆசிகள் ஆசிகள்... மீண்டும் பின் நிச்சயம் பின்... எவை என்று கூற இன்னும் தேசங்களில் சந்திப்போம் அப்பனே!!

ஆசிகள் ஆசிகளப்பா!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே நம் குருநாதர் அகத்திய பெருமான் உத்தரவுப்படி அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா எகிப்து தேசத்தில் பயணம் செய்வித்து  பிரமிடு ரகசியங்கள் மற்றும் சக்திகள் விழும் ரகசியங்கள் என அனைத்தும் வாக்குகளாக உரைத்தார்... எகிப்து பயண  அனைத்து வாக்குகளும் நிறைவு பெற்றது... திரு ஜானகிராமன் ஐயா அவர்களின் எகிப்து பயணமும் நிறைவு பெற்றது!!! நன்றி வணக்கம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

Tuesday, 19 August 2025

சித்தன் அருள் - 1921 - அன்புடன் அகத்தியர் - எகிப்து வாக்கு - 5!







9/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 5

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே ஆசிர்வாதங்கள் அப்பனே அனைவருக்குமே!!

அப்பனே ஏன்? எதற்கு? அப்பனே.. பின் தெளிவு பெற அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே

நிச்சயம் தன்னில் கூட ஒருவனாவது அப்பனே சரியான வழியில் அப்பனே சரியான பாதையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.... அதாவது வழியும்!!!... பாதையும் ஒன்றா???... என்றெல்லாம் அப்பனே சிந்திப்பது... எவை? 

அப்பனே.. பாதை அப்பனே வேறு!!! வழி என்பது  வேறு!!!

இவற்றிற்கு இருக்கும் வேறுபாடே.. மனிதனுக்கு பின் தெரியாமலும் அப்பனே பின் புரியாமலும் அப்பனே.... எதை யான் சொல்கின்றேன் இங்கு என்பதையெல்லாம் பின் புலப்படுவதற்கு முன்பே அப்பனே சில உண்மைகளை விவரிப்பேன். 

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இவ்வாறாக பின் அனைவரும் கூட பின் மோட்சத்திற்கான.. வழிகள் இறைவன் ஏற்படுத்துவான் ஏற்படுத்துவான் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 
அப்பனே. 

அதாவது மோட்ச கதி அடைவதற்கு அப்பனே அவ்வளவு சுலபமான வழிகள்... அப்பனே இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!

இதனால்தான் நம்பிக் கொண்டே இருக்கின்றான்  இன்னும் கூட மனிதன் அப்பனே. பின் அதாவது இறைவனை நம்பினால் நிச்சயம் தன்னில் கூட மோட்ச கதி கிடைக்கும் என்பது..

இன்னும் எதை என்று புரிய புரிய இன்னும் நிச்சயம் தன்னில் கூட பின் ஆன்மா வெளியேற்றம் என்பவை எல்லாம்.. அப்பனே 

ஆனாலும் நிச்சயம் அப்பனே எதை உணர்ந்து எவை அறிந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைத்தும் அப்பனே... தேவர்கள் ஆயினும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாமலும் கூட வாழ்ந்தாலும் அப்பனே இறைவனை புரிந்து தான் !!!!

அப்பனே பின் அதாவது பல... அப்பனே ஒரு பிறப்பில் அப்பனே எவரும் இறைவனை கண்டதில்லை என்பேன் அப்பனே. 

பல பிறப்புகளை பிறந்து பிறந்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு தான்.. உண்மை இறைநிலையை அப்பனே அறிய முடிகின்றது. 

அப்படி அறிந்தவர்களுக்கு மட்டுமே யாங்கள் பின் வாக்குகள் செப்பி அப்பனே!!!


 பின் அறிந்தவர்களால் மட்டுமே அப்பனே... எங்கள் வாக்குகளை அப்பனே புரிந்து கொள்ள முடியும் என்பேன். அப்பனே. 

அப்படி இல்லையென்றால் அப்பனே ஏனோ!?? தானோ!?? என்று விட்டுவிட்டு.. அப்பனே அவன் வேலையை அவன் பார்த்துக் கொண்டே இருப்பான் அப்பனே! 

ஆனாலும் அப்பனே மீண்டும்.. வரவேண்டியது எங்களிடத்தில் தான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 

ஆனால் அப்பொழுது பின் அதாவது அப்பனே... எதை என்று புரிய அனைத்தும்.. எவை என்று புரியாமலும் இழந்திட்டு வருவான் அப்பனே மனிதன்.
அப்பனே மீண்டும் பிறவிகள் எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... மோட்ச கதி அவ்வளவு சுலபம் இல்லை என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அதனால்... உடம்பிற்குள்ளே அப்பனே பின் சக்திகள் இருக்கின்றது..

அப்பனே பின் அதாவது உடம்பு பின்  வலிமை பெற இன்னும் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே... அதாவது இயற்கையான உணவுகளை உட்கொள்ள.. என்றெல்லாம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே... நிச்சயம் அதாவது எதை என்று புரிய... அதாவது துகளை வலுப்பெற அப்பனே பின் என்னென்ன?? உபயோகிக்க வேண்டும்!!... எப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

எவை என்று புரியாமலும் கூட அப்பனே.. எவை என்று தெரியாமலும் கூட இதனால் அப்பனே...அத் துகள் வலிமை பெற்றால் தான்... அப்பனே நிச்சயம்... அனைத்தும் சமமாக பின் அனைத்து.. பின் கிரகங்களையும் கூட நட்சத்திரங்களையும் கூட அப்பனே விலக்கிக் கொண்டு சென்று காந்தகத்தை அடைந்து விடும் என்பேன் அப்பனே.

அதாவது பின் நிச்சயம் இறைவனை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. 

அப்படி இல்லை என்றால் அப்பனே இங்கேயே கிரகங்களாலும் நட்சத்திரங்களாலும் தடுக்கப்பட்டு மீண்டும் அப்பனே அவை தன் அப்பனே பின் மனித உடம்பில்... ஏதோ வகையில் உன் நுழைந்து... அப்பனே மீண்டும் அவ் ஆன்மா பிறந்துவிடும் என்பேன் அப்பனே. 

அதாவது ஒரு துகள்!! சிறிய கண்ணுக்குத் தெரியாத துகள் எவ்வளவு? வேலைகள் செய்கின்றது??? என்பதை பார்த்துக் கொண்டே இருங்கள் என்பேன் அப்பனே!!

அதனால்தான் அப்பனே பாவம் ஆனாலும் சரி புண்ணியம் ஆனாலும் சரி... அப்பனே ஒவ்வொரு துகளும் சேகரித்துக் கொண்டே எதை என்று அறிய அறிய அப்பனே!!

நீ என்ன செய்கின்றாயோ??.. அதற்கு பின் அதாவது பின் எதிரொலிப்பாகவே கொடுத்துக் கொண்டே கொடுத்துக் கொண்டே!!

இதனால்தான் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே எதையும்.. அப்பனே பேசக்கூட தேவையில்லை என்பேன் அப்பனே.

நிச்சயம் அமைதியாக இருந்து கொண்டாலே அப்பனே..

இதனால்தான் ஞானி நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தெரிந்து கொண்டு அமைதியாக போய்விடுவான் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அமைதியாக போய்விட்டால் அப்பனே 
நிச்சயம் தன்னில்  கூட அத் துகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்பேன் அப்பனே. 

சக்திகள் பின் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே. 
சக்திகள் அதிகமாகிட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ் கிரகங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய.. பின் நட்சத்திரங்கள் அப்பனே எதைத் தடுத்தாலும்... பின் நேராகச் சென்று காந்தகத்தில் அதாவது இறைவனிடத்தில் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே. 
சொல்லிவிட்டேன் அப்பனே. 

அதேபோல் எதை என்று புரிய அப்பனே... அதேபோல் எதை என்று அறிய அறிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே சரியாகவே அப்பனே பின் இங்கு (எகிப்து பிரமிடு)
அதாவது யான் சொன்னேனே!!! அப்பனே !!!


எதை என்று அறிய அறிய இவ் மூலஸ்தானத்தில் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட.. பின் அனைத்து கிரகங்களும் கூட அப்பனே... சிறிது நேரம் அப்பனே எவை என்று புரியாமலும்... அறியாமல் இருந்தாலும் அப்பனே... அறிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

இதனால் அப்பனே சுற்றிக் கொண்டே இருக்கும்பொழுது ஒரு பின் அதாவது பின் வட்டமான பாதையில் கூட அறிந்தும் கூட.. அப்பனே சில நிமிடங்கள் அப்பனே பின்... ஒவ்வொன்றாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு சக்தி வெடிக்கும் என்பேன் அப்பனே... 

இவ்வாறு வெடிக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே... மீண்டும் அப்பனே அறிந்தும்... அதாவது ஒரு துகள் அப்பனே... மேல் நோக்கி சென்று அப்பனே பாவமா??? புண்ணியமா??? என்றெல்லாம் அப்பனே ஆராய்ந்து... மீண்டும் அப்பனே அதாவது காந்தகத்தில் பின் ஒட்டிக் கொள்ளாமல் மீண்டும் அப்பனே வந்துவிடும்.. மீண்டும் அப்பனே.

( ஆன்மாக்கள் இறைவன் என்ற காந்தகத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும் அதற்கு முருகன் என்ன செய்வார்???

நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே குருநாதர் அகத்தியர் பெருமான் 

14/11/2023 ல் 
சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1501 பதிவில் வெளிவந்துள்ளது அதை மீண்டும் படித்தால் மேலும் புரிந்து கொள்ள முடியும்)

அவை மட்டும் இல்லாமல்... இறைவன் அப்பனே உடனடியாக எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அத் துகள் எவ்வாறு? என்பதையும் கூட எவ்வாறு என்று நினைத்து பாவமா?? புண்ணியமா??? என்றெல்லாம் அப்பனே மீண்டும் உடனடியாகவே அனுப்பி விடுவான் என்பேன் அப்பனே எதை என்று புரிய புரிய.

இதனால் தான் அப்பனே நிச்சயம்...உயிரோட்டமாகவே மனிதன் மீண்டும் மீண்டும் இதில் தன் (பிரமிடு உள்ளே) அப்பனே இட்டால்... நிச்சயம் தன்னில் கூட பின் மீண்டும் உயிர் பெறுதல் நிச்சயம்...சாத்தியம் ஆகும் என்பேன் அப்பனே !!
ஆனாலும் அப்பனே இப்பொழுது கூட அதை நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது அப்பனே எதை என்று புரிய 

எத்தனை??? அறிஞர்கள்??? எத்தனை மருத்துவர்கள்?? எத்தனை எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் அல்லவா!!!!!

அப்பனே நிச்சயம் அவர்களால் செய்ய முடியாதது அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இங்கிருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எதை என்று அறிய அறிய..

என்ன செய்ய வேண்டும்?? என்பவை எல்லாம் அப்பனே... இருந்தாலே அப்பனே மீண்டும் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!

இதுதான் அப்பனே எதை என்று புரிய... முதல் சித்துக்கள் என்பேன் அப்பனே 
(அஷ்டமா சித்துக்களில் முதல் சித்து)

இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!

அப்பனே இதை கண்டுபிடித்தவர்கள் எல்லாம் மாண்டு போயிட்டனர் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே நிச்சயம் இறைவனை பற்றியும் கூட சித்தனை பற்றியும் கூட... அப்பனே ஆராய்ச்சி செய்பவர்கள்... அப்பனே எப்பொழுதும்.. கற்றுக்கொள்ள முடியாதப்பா. அப்பனே அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே நீங்கள் நிச்சயம் தன்னில் கூட முதலில் அப்பனே  அப்படி இறைவனையும் கூட எங்கிருக்கின்றான்??? என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் துடி துடித்துக் கொண்டே இருக்கின்றான் காண்பதற்கு..

சித்தர்கள் எங்கு இருக்கின்றார்கள்??? என்றெல்லாம் அப்பனே துடிதுடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே !!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதலில் அப்பனே 

""""மின்சாரம் எங்கெங்கோ... செல்கின்றதல்லவா!!!

அப்பனே அதை அப்பனே முதலில் பாருங்கள் என்பேன் அப்பனே..

பின் அப்பொழுது இறைவனை.. பின் நிச்சயம் மின்சாரத்தை பார்ப்பவன்.. இறைவனை.. அறிந்து கொள்ள எதை என்று அறிய அறிய!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட உணரத்தான் உங்களால் முடிகின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட.

அப்பனே ஆனாலும் பார்க்கவும் முடியும் என்பேன் அப்பனே இறைவனை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறாக அப்பனே நீங்கள் பக்குவத்திற்கு வர வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறு பக்குவம் இல்லையென்றால் அப்பனே... இறைவனை அப்பனே பின் வணங்குவதும் வீண் என்பேன் அப்பனே. 

ஏனோ தானோ என்று வணங்கி விட்டு... அப்பனே பின் இறைவன் நிச்சயம் தன்னில் கூட... அவை செய்வான் இவை செய்வான் என்றெல்லாம்.. நினைத்து அப்பனே வீணாகி சோம்பேறியாகி இருந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே என்ன பயன்???

அவ் சோம்பேறியை தடுக்கவே... அப்பனே இறைவன் அப்பனே துன்பம் என்ற பாதையை அப்பனே வகுக்கின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் நீ துன்பப்பட்டால்தான் சில விஷயங்கள் தெரியும் என்பேன் அப்பனே. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட அவை இவை என்றெல்லாம் அப்பனே... இதனால் அப்பனே பல பல அரசர்களும் கூட இங்கு வந்து... எதை என்று அறிய அறிய அப்பனே பின்... சக்திகள் பெற்றுக்கொண்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்து பின் நட்சத்திரங்களையும் கூட ஒன்றிணைந்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஒளியானது.. அப்பனே பின் அறிந்தும் கூட இங்கு.. விழுந்து அப்பனே மீண்டும்.. பிரதிபலித்து... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் எதை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே அதாவது அனைவரும்.... ஒன்று கூடுவார்களே அப்பனே!!! அங்கு விழுகின்றது என்பேன் அப்பனே!!!

அங்கும் அப்பனே ஈசனுடைய ஆலயம்!!!
அறிந்தும் கூட!!!

(குருநாதர் குறிப்பிடும் இவ்விடம் அடுத்த வாக்கில் அது எந்த இடம் என்பது அனைவருக்கும் புரியவரும் அதாவது பாகம் 6 ல் தெரியவரும்)

இதனால் அப்பனே... எங்கெங்கு?? அப்பனே சமமாக நிச்சயம் தன்னில் கூட... சக்திகள் விழுகின்றதோ??? அங்கெல்லாம்.. அப்பனே முந்தைய அதாவது... பண்டைய சமுதாயத்திலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே.... அப்பொழுதே இறைவன் மூலம்... பின் சக்திகள் பெற்று... அதையும் கூட அப்பனே நிச்சயம்... தன்னில் கூட கண்டுணர்ந்து... அங்கெல்லாம் அப்பனே... பலமாக அப்பனே எதை என்று அறிய அறிய... இதேபோல் (பிரமிடுகள்) அமைத்தார்கள்.. என்பேன் அப்பனே!!

அதாவது நல்விதமாக அப்பனே மனிதன் கூடும் அளவிற்கு கூட என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதனால்தான் அப்பனே... போட்டி பொறாமையை நீக்குங்கள்... அனைவரும் ஒன்று சேருங்கள் அப்பனே... கூட்டு பிரார்த்தனையை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே. 

அப்பனே ஒவ்வொருவரும் கூட அப்பனே.. பின் அதாவது ஒருவன் தனியாக செய்வான் அப்பனே !!! ஒருவன்... அதாவது யான் தவம் செய்ய வேண்டும்... யான் அப்பனே தியானம் செய்ய வேண்டும்... அப்பனே பின் யோகா ஆசனங்கள் செய்ய வேண்டும்.... இன்னும் வசி...(வாசியோகம்) என்றெல்லாம் எதையெதையோ செய்து கொண்டிருப்பான் அப்பனே! 

ஆனாலும் இவற்றை விட... அதிகமான சக்தி அப்பனே...

கூட்டு பிரார்த்தனையில் தான் உள்ளது என்பேன் அப்பனே. 

ஒரு ஆயிரம் பேர் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... எதை என்று இறங்கி வந்து அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறங்கி வருவான் இறைவன் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே பின் அதாவது... உயிரையும் கூட அப்பனே எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே மாற்றி அதாவது... உயிர் போகும் நிலையில் இருந்தாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே உங்களுடைய... அப்பனே சொல்லிவிட்டேன் நேற்றைய பொழுதில் கூட. அப்பனே !!!

(பிரமிடு ரகசியங்கள் பாகம் 4 கூட்டு பிரார்த்தனையால் உயிர் பிரியக்கூடிய நிலைமையை கூட மாற்றி மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று குருநாதர் கூறியதை இங்கு நினைவு படுத்துகின்றார்)

உடம்பில் உள்ள பின் வரும் கதிர்வீச்சுக்கள் அது பின் அறிந்தும் கூட பின் அதாவது காந்தகத்துடன் இணையும் அளவிற்கு சக்தி படைத்தவை!!
அதாவது இறைவன் தான் காந்தகம் என்று சொல்லிவிட்டேன் அப்பனே. 

இவ்வாறாக அப்பனே 1000, 2000, அப்பனே இவ்வாறாக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப் பலங்கள்  அப்பனே இன்னும் சேர்கின்ற பொழுது அப்பனே அறிந்தும் கூட.

இவ்வாறாகத்தான் அப்பனே!!!.... நிச்சயம்... நால்வரும் கூட (சமயக்குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்) அப்பனே பல பாடல்கள் இயற்றினார்கள் என்பேன் அப்பனே! 

(பன்னிரு திருமுறைகள் தேவாரம் திருவாசகம்)

ஒவ்வொரு பாடலிலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய பக்குவங்கள். 

இதனால் அப்பனே.. பல பேர்கள் அப்பனே பின் கூட்டு சேர்ந்து...(தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்) பாடுகின்ற பொழுது அப்பனே... விதியை கூட வென்றிடலாம் என்பேன் அப்பனே. நல்விதமாக. 

இதனால் அப்பனே... இதை இவை எவை என்று புரியாமலும்... அப்பனே அதாவது இவ் மூலாதாரமானது (பிரமிடு )அப்பனே... விதியை கூட வெல்லக்கூடியது என்பேன் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நோய் நொடி என்று அப்பனே பின்... அதாவது அறிந்தும் கூட அதனால் அப்பனே... இங்கு பின் தியானங்கள் செய்து கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் நோய் நொடிகள் கூட வராதப்பா. 

ஏன் ? எதற்கு? அப்பனே உடம்பு அப்பனே தேகம் அதாவது அறிந்து எதை என்று.. அப்பனே நிச்சயம்... இளமையாகவே நிச்சயம் கடை நாளும் அப்பனே இருக்குமப்பா. 

அப்பனே நிச்சயம் முன்பெல்லாம்.. பின் நிச்சயம் பின் அரசர்கள் எதை என்று புரிய அப்பனே அதாவது... அப்பனே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கூட... அப்பனே ஒவ்வொரு இடைவெளி உண்டு. 

அதாவது சில மாதங்களே என்பேன் அப்பனே... அதாவது சில நாட்களே.. என்றும் கூறலாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சிலருக்கு 10 நாட்களில் சிலருக்கு 20,... சிலருக்கு 30... ஆனாலும் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவ் சக்திகள்.. இயக்க அப்பனே பலமாக அப்பனே இன்னும் இன்னும்... அப்பனே கிரகங்கள்... அப்பனே தொட்டிட்டு போகுமப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஒவ்வொரு அப்பனே பின் ரிஷியின் கூட நட்சத்திரங்கள் அறிந்தும் கூட சமமாகவே இங்கு விழுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட அப்பனே...இவை தன் அப்பனே புரிந்து கொள்ளுங்கள்...

ஏன்??? நட்சத்திரங்களாக பின்.. ஜொலிக்கின்றார்கள்..??? 
எதை என்று புரிய அப்பனே..

இன்னும் ஞானியர்கள் பலர் அப்பனே பின் அறிந்தும் கூட அனைவரும் அப்பனே ஆனாலும் அப்பனே இது அனைவருக்கும் தெரிந்ததப்பா... இவ் விஷயங்கள் அப்பனே!!

உண்மையான பக்தி உள்ளவன் அப்பனே ஞானம் பெற்றவனுக்கு அப்பனே நிச்சயம் எங்கு சக்திகள் உள்ளது??? என்பதெல்லாம் தெரியுமப்பா!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதை மறைத்துவிட்டு அப்பனே பின்.... அங்கு சென்றால் நலமாகும் இங்கு சென்றால் நலமாகும்... இதைச் செய்தால் நலமாகும் என்பதை எல்லாம் அப்பனே..

ஆனாலும் ஒன்றும் நலமாகாதப்பா. 

ஏதோ??!!.... அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீங்கள் அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய நிச்சயம் பின்... மழைக்கு அதாவது ஒதுங்கலாம்!!!... அல்லது அப்பனே பின் குடையும் பிடித்துக் கொள்ளலாம்...
அவ்வளவுதான் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில்  கூட மழை நின்று விட்டால் அப்பனே... என்னவாகும்?? என்று!!

அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் பலமாக மழை பெய்தால் என்ன ஆகும்?? என்பதை எல்லாம் அப்பனே... பின் தீர அப்பனே யோசித்தால் புரிந்து அறிந்து... எதை என்று தெரிந்தும் கூட. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் பின் புண்ணியங்கள் அப்பனே எங்கு சேர்க்கப்படுகின்றது??
அப்பனே... எங்கு நீக்கப்படுகின்றது??? என்பதையெல்லாம் அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா!!

இதனால் அப்பனே மனிதன் சொல்லிக் கொண்டே இருப்பான்.. பாவம் செய்யாதே!! புண்ணியம் செய்யாதே என்று!!

ஆனாலும் அப்பனே ஏன்? எதற்கு? சொல்கின்றான் என்று பின் தெரிகின்றதா??? என்ன!!! அப்பனே!!!

நிச்சயம் அப்பனே ஒவ்வொரு எதை என்று செயலுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...அவ் துகள்கள் அப்பனே... நிச்சயம் பாவத்துகள்... மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே... புண்ணிய துகள்கள் அப்பனே நீங்கள்... எதை செய்கின்றீர்களோ அப்பனே அதை.. அப்படியே பின் எதிரொலிக்கும். 
அப்பனே அதாவது அறிந்தும் கூட. 

எவை? நிச்சயம் தன்னில் கூட... எவையெல்லாம் பாவக்கணக்கில் போகும்??? எவையெல்லாம் புண்ணிய கணக்கில் போகும்? என்பதையெல்லாம் அப்பனே தீர பின் நிச்சயம் யானே சொல்வேன் அப்பனே.

எங்கெங்கு??? வாக்குகள் செப்ப வேண்டும்??? என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அதனால் ஒரு பொக்கிஷமாகவே அப்பனே எதை என்று புரிய... இன்னும் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் பின் சென்று நிச்சயம் பின்.. அதாவது அறிந்தும் கூட எவை என்று புரிய நிச்சயம் உடம்பே... தேவையில்லை...

இன்னும் அறிந்தும் எதை என்று அறிய அறிய ஆன்மா மட்டும் போதும் என்று பின்... அதாவது கூட்டமாக அப்பனே எதை என்று புரிய இங்கு உள்ளதப்பா. 

இதனால் அப்பனே.. அங்கு செல்பவர்களுக்கு எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது அறிந்தும் கூட இறைவன்.. பலத்தை பெற்ற ஆன்மாக்கள் இன்னும் கூட... அப்பனே அங்கேயே ஒளிந்து தூங்கிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

(இதேபோன்று மத்திய பிரதேசம் ஓம்காரேஸ்வரர் ஜோதி லிங்கம் திருத்தலத்தில் நர்மதா நதியில் ஈசன் அருளால் தன்னுடைய உடல்களை துறந்து ஞானிகள் உள்ளே தவமிருந்து கொண்டிருப்பதை முருகன் வாக்கில் கூறிய பதிவை மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது மேலும் புரியும் 

(Tuesday 24 January 2023

சித்தன் அருள் - 1275-அன்புடன் அகத்தியர் ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்!

12/10/2022 ஸ்ரீ முருகப்பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம், மார்கண்டேய ஆஸ்ரமம் சாலை. சிவபுராணம் மாந்தாத்தா தீவு, காண்ட்வா மாவட்டம் மத்திய பிரதேசம்.)

இதனால் அப்பனே நன் முறைகளாக பின்.. நல் மனதோடு செல்பவர்களுக்கெல்லாம்.அவ் ஆன்மா அனைத்து திறமைகளையும் கொடுத்து அப்பனே.. மாற்றங்கள் அதாவது அறிந்தும்.. எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம்... அப்பனே 

நீங்கள் சொல்கின்றீர்களே!!!!.. அப்பனே அறிந்தும் எவை என்று அறிய அறிய.... மற்றவர்களுக்கு பின் அதாவது ஏவல் செய்து விட்டார்கள்... நிச்சயம் அறிந்தும் கூட பின் ஏதோ செய்து விட்டார்கள்... எவை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இங்கெல்லாம்... (பிரமிடுக்குள்) அப்பனே பின் உள் நுழைந்தாலே அப்பனே பின் அடியோ அடி என அடித்து... அப்பனே எதை என்று அறிய... நிச்சயம் தன்னில் கூட மீண்டும்... அப்பனே எவை என்று அறிய அறிய அவை (ஏவல் ) கிட்டவும்.. நெருங்காதப்பா!!!

(பில்லி சூனியம் மாந்த்ரீகம் ஏவல் பிரச்சினைகள்)

 அனைத்தும் ஒழிந்து தூரே போகுமப்பா!!!

அப்பனே அதனால் தான் அப்பனே நிச்சயம்... மனிதன் ஒன்று ஏற்படுத்தினால்... அப்பனே அதை தடுக்கும் சக்தி. அப்பனே நிச்சயம் தன்னில் இன்னொரு சக்திக்கும் உண்டு என்பதை நிச்சயம் உணர வேண்டும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அதனால்தான் பொறாமை என்பதை அப்பனே பின் நிச்சயம் ஒரு... கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே..

அறிந்தும் கோபம் என்பது கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே..

அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


ஒரு வாய் சொல்லானது கொல்லும் அளவுக்கு சமம் என்பேன் அப்பனே. 

அதாவது பொய் சொல்லுதல் அப்பனே பின்... கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே...

இவ்வாறெல்லாம் அப்பனே பின் பாவங்கள் செய்துவிட்டு அப்பனே இறைவனிடத்தில் அப்பனே பின் சென்றால் இறைவன் என்ன செய்வான் அப்பா???

குழந்தைகளே!!! நிச்சயம் கேட்டு அறிந்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் அப்பனே நிச்சயம் யாங்கள் உங்களை காத்திட தயாராகவே இருக்கின்றோம் என்போம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே அவ்வாறு காத்திட்டாலும் கரை சேர்த்தாலும்.. அப்பனே மீண்டும் அப்பனே.. பின்.யாங்கள் அங்கு தான் செல்வோம் என்று நீங்கள் தான் அப்பனே எதை என்று புரிய. 

இதனால் அப்பனே வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே  நிச்சயம் எவை என்று புரிய.. அனைத்தும் அப்பனே அதாவது எங்களிடத்தில்... வரவேண்டும் என்றால்... கடும் அப்பனே பின் கஷ்டங்கள்... அதாவது பட்டு பட்டு.. எழுந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அவ்வாறு கஷ்டங்கள் பட்டு எழுந்திருப்பவனுக்கே அனைத்தும் யாங்கள் கொடுப்போம் அப்பனே. 
அனைத்தும் பின்... எங்கள் அருள்களால் கொடுத்து அவனை அப்பனே பின் மக்களுக்கு சேவை புரிய வைப்போம் என்போம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீங்கள்... கேட்டாலும் யாங்கள் நிச்சயம் கொடுக்கப் போவதில்லை!!!

ஏன்? எதற்கு???... ஏனென்றால் உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியுமப்பா!!!

ஆனாலும் எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதப்பா!!!

இதனால்தான் அப்பனே ஆனாலும்... மனிதன் சொல்லிக் கொண்டே இருப்பான்...

யான் வணங்கினேன்... என் அன்னை!!!..... பின் அதாவது என் தந்தை அனைத்துமே... அகத்தியன்!! அதாவது ஈசன்!... முருகன்.. என்று...

அவையெல்லாம் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதப்பா!!!

அப்பனே பின் தெரிந்துதான் அதாவது பின் எவை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட தந்தை... என்று அடையாளம் காட்டினால்தானா?????? அப்பனே!!!???

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

இவ்வுலகம் விசித்திரமானது!!! பொய்யானது!!!
அப்பனே பின் பொய்யானவற்றிற்கே... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால் அப்பனே தர்ம நிலையை காக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் அப்பனே மூலத்தில் (பிரமிடு ) அப்பனே... பல ஆன்மாக்கள் அப்பனே ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே... எதை என்று புரிய!!

இன்னும் அப்பனே இங்கிருந்து வழிகள் அப்பனே எங்கெங்கு???
அப்பனே இருக்கின்றது பின் அதாவது அப்பனே பின் (பிரமிடு)அடியிலே இங்கிருந்து அப்பனே பின் அனைத்து உள்ளும் கூட அப்பனே கூடிட்டு அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின்... நேற்றைய பொழுதில் சென்று விட்டதே அறிந்தும் எதை என்று... நிச்சயம் தன்னில் கூட வழிபாடுகள்... அப்பனே அங்கே ஒரு அப்பனே பின் எதை என்று அறிய அறிய... அப்பனே இங்கிருந்து... அப்பனே பின் வழிகள்... அங்கிற்க்கும் (அங்கும்) செல்கின்றது என்பேன் அப்பனே... அங்கிருந்து (கீசா பிரமிடு வளாகம்) அப்பனே அப்படியே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கடைசி தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... தனுஷ்கோடியை அடைந்து அப்பனே பின்... இலங்கைக்கு சென்று.. அப்பனே எதை என்று கூட முடிகின்றதப்பா!!!

இதனால் அப்பனே இதன் உள்ளே.. அப்பனே நிச்சயம் பல திருத்தலங்கள் உள்ளது என்பேன் அப்பனே

இதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இங்கிருந்து ஆரம்பித்து அப்பனே பின்... அப்பொழுதெல்லாம் இங்கு ஆரம்பித்து.. அப்பனே எதை என்று அறிய அறிய கடை.. கோடியில் அப்பனே பின் முடிப்பார்கள் என்பேன் அப்பனே.. நிச்சயம் பயணங்கள்..

அதாவது இதை 

 """* தீட்சை பயணங்கள்!!!!!

 என்பார்கள்... என்பேன் அப்பனே.

இவ் தீட்சை பயணத்தை தொடங்குபவனுக்கு அப்பனே பின்...

""" பிறப்பும் இல்லை!!! """இறப்பும் இல்லை!!!!

 என்பேன் அப்பனே!!!

காலப்போக்கில் அவை மறைந்து விட்டது என்பேன் அப்பனே...

மனிதனாலே இவை தெரிந்து கொள்ள.. அப்பனே இப்பொழுதும் அங்கங்கு... மறைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே.... அங்கெல்லாம் சென்றால் அப்பனே உங்களுக்கு அனைத்தும் தெரியும் என்பதெல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் உண்மையான பக்தியில் மனிதன் இருந்தால்... அதை நிச்சயம் யாங்களே அழைத்துச் சென்று அப்பனே... பின் காட்டுவோம் அப்பனே... சக்திகளை பெற செய்து அப்பனே... நீங்களும் கூட மற்றவர்களுக்கு... அப்பனே சக்திகள் பின் உட் புகுத்தலாம் என்பேன் அப்பனே!!

அப்பனே ஒன்றையே சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே...

பின் சனீஸ்வரன் மாறினால்... அப்பனே நிச்சயம் பின் கெட்டதை செய்வான்!!.. இவனுக்கு நல்லதை செய்வான் என்று அப்பனே. 

பின் நிச்சயம் சனீஸ்வரன் எவனுக்கும்.. பின் நிச்சயம் கெட்டதை செய்வதில்லை... அப்பனே பின் நல்லதும் செய்வதில்லை என்பேன் அப்பனே...

நிச்சயம்... அவனவன் அப்பனே பின் செய்த... அப்பனே பாவத்திற்கு பின்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... எவை என்று அறிய அறிய புண்ணியத்திற்கு ஏற்ப.. நிச்சயம் நடந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே..

இக்கிரகங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இவ்வாறாக தொடுகின்ற பொழுது.. அப்பனே அக்கதிர்வீச்சுகள் பின் நிச்சயம்... அவ்வாறு ஒவ்வொரு இடத்திற்கும்... சனீஸ்வரன் அப்பனே பின் வருகின்ற பொழுது...அக் கதிர்வீச்சில் அப்பனே அதிக புண்ணியங்கள் இருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அதிக அளவு நன்மைகளாக பின் பெற முடியும் என்பேன் அப்பனே. 

அவ் கதிர்வீச்சுகள் அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது... பாவங்கள் அதிகமாக இருந்தால். பாவ கதிர்வீச்சு அதிகமாக இருந்தால் அப்பனே இவை தன் பின் அதாவது.பின் சனீஸ்வரன் கிரகம் அப்பனே... எதை என்று அறிய அறிய கீழே தொடுகின்ற பொழுது அதாவது சமமான அப்பனே பின்... உடம்பை பின் தொடுகின்ற பொழுது அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட கஷ்டங்கள் தான் ஏற்படுவது உறுதியப்பா. 

(கிரக தோஷங்கள் என்பது நம்மளுடைய பாவம் மற்றும் புண்ணியத்தால் தீர்மானிக்கப்படுகின்றது... புண்ணியங்கள் அதிகம் இருக்கின்றவர்களுக்கு சனி கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் படும்பொழுது நன்மைகள் ஏற்படுகின்றது....

பாவங்கள் அதிகமாக இருந்தால் கிரகத்தின் கதிர்வீச்சால் கஷ்டங்கள் ஏற்படுகின்றது 

இது அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும் 

இங்கு கிரகங்களின் பார்வை பலன் தோஷம் அனைத்தும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றது)

இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்களே அப்பனே... நிச்சயம் தன்னில் கூட சனீஸ்வரன்... எதை என்று கூற ஏழரை.. இன்னும் என்னவோ!??
(கண்டது சனி அஷ்டமத்து சனி என) 

பின் சனீஸ்வரன் கெட்டதை செய்வான் என்று!!

நிச்சயம் செய்ய மாட்டான் என்பேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே 

ஏன்? எதற்கு ?பயப்பட வேண்டும்??? சனீஸ்வரனுக்கு அப்பனே!!!

ஆனால் அப்பனே நீங்கள் ஒழுங்காக இல்லை... அவ்வளவுதான் என்பேன் அப்பனே..

அதாவது யான் நிச்சயம் தன்னில் கூட... ஒழுங்கானவன்! யான் தவறே செய்யாதவன் என்று அப்பனே பின் நிச்சயம் நின்றால் அப்பனே நிச்சயம்.... சனீஸ்வரனா???... சரி என்னை தொடட்டும் பார்ப்போம் என்று!!!.. நீங்கள் சொல்லலாமே!!!!!!!! அப்பனே!!!

ஏன்? சொல்வதில்லை???? அப்பனே!!!

அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!.... அவை மட்டும் இல்லாமல் குரு (ஜாதகத்தில் குரு) இவ்விடத்தில் இருந்தால்?????....... அவ்விடத்தில் இருந்தால்?????? என்பதை எல்லாம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மாற்றி அமைத்து.. அப்பனே பின் எதை என்று புரியாமலும்...

இவற்றிற்கெல்லாம் இடைக்காடன் (இடைக்காட்டு சித்தர்) வந்து.. வாக்குகள் பலமாக அப்பனே பின்.. செப்புகின்ற பொழுது புரியுமப்பா !!

அப்பனே இன்னும் விளக்கத்தோடு.. கூறுகின்றேன்!!!

இப்பொழுது ஆசிகள்!! ஆசிகளப்பா!!.

முந்தைய காலத்தில் எகிப்து தேசம் மட்டுமல்லாமல் அனைத்து தேசங்களிலும் பிரமிடுகள் அமைக்கப்பட்டது பின்பற்றப்பட்டது காலப்போக்கில் மற்ற தேசங்களில் உள்ள பிரமிடுகள் அழிந்துவிட்டது இதில் தற்பொழுதும் அமெரிக்கா நைஜீரியா தென் ஆப்பிரிக்கா கம்போடியா இந்தோனேஷியா இந்த தேசங்களில் எல்லாம் பிரமிடுகள் என்றும் ஓரளவு பாதி சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றது.. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் சில குறிப்பிட்ட கோயில்கள் விமானங்கள் பிரமிடு வடிவத்தில் இருப்பதை காணலாம்..

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திரட்டுவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 16 August 2025

சித்தன் அருள் - 1920 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் வாக்கு!







அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு -  கூட்டுப் பிரார்த்தனை ரகசியங்கள்  ( 27 July 2025 )

வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மருதுபாண்டியர் மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

( இவ் தொடர் வாக்கு பல வாக்குகள் அடங்கியது. அதன் ஒரு பகுதி வாக்கு

1. சித்தன் அருள் - 1912 ) 


அகிலமெல்லாம் ஆளக்கூடிய இறைவா போற்றியே!! போற்றியே!! பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா. 

ஏன்? எதற்காக அப்பனே இவ் கூட்டுப் பிரார்த்தனையைச் செய்யச் சொன்னேன் என்றால் அப்பனே நிச்சயம் ஒருவர் கேட்பது வேறு. அப்பனே பல பேர் கூடிக் கேட்பது வேறப்பா. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல பேர் கேட்டுப் பெற்றால் வரங்கள் , அப்பனே அழியாதப்பா. இதனால் அப்பனே ஒருவர் கேட்டால் அப்பனே வரங்கள் (இறைவன்) பின் கொடுத்துவிடுவான். ஆனாலும் இப்படியே பின் கொடுத்துக் கொடுத்து ஈசனும் ஏமாந்தானப்பா!!!

இதனால் அப்பனே ஒருவர் கேட்டால், மன்றாடினால் கொடுக்க மாட்டானப்பா ஈசன். 

“””””இதனால் அப்பனே அனைவரும் சேர்ந்து பின் கேட்டால்,  தொலையட்டும் என்று வரங்கள் கொடுத்து விடுவானப்பா. “””””

இன்னும் அப்பனே நிச்சயம் தீமைக்கு மக்கள்தான் காரணம் என்பேன் அப்பனே. அதனால்தான் உங்களை வைத்தே உங்கள் கர்மாக்களை நீங்களே நீக்குங்கள் என்று இவ் கூட்டுப் பிரார்த்தனை வரச்சொன்னோம் அப்பனே. 

இறைவன் அழகாகப் புண்ணியத்தை அப்பனே புகுத்தி , புகுத்தி அனுப்புகின்றான் அப்பனே. ஆனாலும் அப்புண்ணியத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, நிச்சயம் நாடி நாடி எங்கெல்லாம் சென்று வந்தாலும் அப்பனே ஒன்றும் (நடக்கப்போவது இல்லை). அப்பனே மீண்டும் பின் கவலைதான். துன்பம்தான் தொற்றுக் கொண்டு, தொற்றுக் கொண்டு. நோய்கள்தான் தொற்றுக் கொண்டு, தொற்றுக் கொண்டு. 

அப்பனே இவ்வாறாகவே இருந்தால் அப்பனே, வயதும் ஆகி, அப்பனே இறந்து, மீண்டும் வந்து, அப்பனே அவ்வவாறுத்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே. அப்புண்ணியத்தை எப்படி நீங்கள் நிச்சயம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லையப்பா. 

இதனால் நிச்சயம் அப்பனே ஒருவன் சொன்னால் கேட்க மாட்டான் அப்பனே. 

****இதனால்தான் அப்பனே நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை மூலம் அனைவரும் ஒன்றாக இருந்தால் பாவம் ஒழிந்துவிடும் என்பேன் அப்பனே.****

இதனால் அனைத்திற்கும் காரணம் நீங்களே என்பேன் அப்பனே. இதனால்தான் உங்களை வைத்தே அதாவது பாவப்பட்ட ஜென்மங்களப்பா !!!!!!

அவ்பாவத்தை எப்படிப் போக்குவது????

அப்பனே யாங்கள் வழிகாட்டுவோம் அப்பனே. ஏனென்றால் பாவத்தை நிச்சயம் பின் பாவத்தினால் பல வழிகளிலும் கூட துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் இவ்ஆன்மா  நிச்சயம் தன்னில் கூட அதாவது ஈசனுடைய கட்டளை. 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அவ்பாவத்தை அனுபவித்தே தீரவேண்டும். எங்கு சென்றாலும் பின் ஒன்றும் அவ்பாவத்தைக் கழிக்க முடியாது நிச்சயம். ஆனாலும் நிச்சயம் எப்படிக் கழிக்க முடியும் என்பதையெல்லாம் சித்தர்கள் யாங்கள் அறிவோம். இதனால் அப்பனே பின் ஈசனே ஆயினும் சில அனுபவங்கள் தேவை என்பதை எல்லாம் உணர்ந்து , 

“””””அப்பனே இதனால்தான் அப்பனே (சித்தர்கள் யாங்கள்) நிச்சயம் ஒரு முடிவு எடுத்தோம் நிச்சயம் அப்பனே.”””””

இதனால் எங்கு சென்றாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. எவ்வளவு மந்திரங்கள் ஜெபித்தாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. அங்கும் இங்கும் அலைந்தாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. ஆனால் சாவை நிச்சயம் பின் யாரும் தடுக்க முடியாது. 

###### ஆனாலும் அப்பனே பாவத்தைத் தடுத்து விட்டால் நிச்சயம் பலவகையான நன்மைகள் பெறமுடியும் அப்பா கலியுகத்தில் அப்பனே. #######

இதனால் அப்பனே நிச்சயம் ஒரு பழமொழியும் உண்டு. அதாவது ,  

*தான் என்ன நிலைமையில் இருக்கின்றோமோ அதற்கு நிச்சயம் தான் தான் காரணம் *** என்று. 

இதனால் அப்பனே பாவத்தோடுதான் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  

அப்பனே ஒருவொருவருக்குச் சக்திகள் அதிகமாக இருக்கும் அப்பா.  ஒருவருக்குச் சக்திகள் குறைவாக இருக்கும் அப்பா. இவை ஒன்று அனைவரையும் சேர்த்தால்,  அதிகம் உள்ளவர்களிடம் இருந்து அவ்சக்தி வருகின்ற பொழுது, குறைவாக இருக்கின்ற சக்தியைக் கூட அவை தாக்குகின்ற பொழுது , அப்பனே சம அளவு பெரும் அப்பா. ஆனாலும் அப்பனே (சக்தி) அதிக அளவு இருப்பவர்கள் உடனே குறைகின்ற பொழுது மீண்டும் அவ்சக்தி தெளிவடைந்துவுடும். அதிகமாகிவிடும். குறைந்து விடாது என்பேன் அப்பனே. இல்லாதவருக்கு அது நிச்சயம் அப்படியே சமமாகப் பங்கிடப்படும் என்பேன் அப்பனே.

 இப்பொழுதுதான் அப்பனே, இப்படி இருந்தால் மட்டுமே (கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும்) பாவத்தைத் தொலைக்க முடியும் என்பேன் அப்பனே. 


———————————-
(வணக்கம் அடியவர்களே, கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் பாவங்கள் விலகும் இந்த சக்தி பரிமாற்றத்தால். இறைவன் அருளால் அனைவருக்குமே மிக எளிதாக பாவ விலக்கம் நிகழும் கூட்டுப் பிரார்த்தனையில். எனவே அடியவர்களே , இயன்றவரை முழு வேகத்தில் பலரையும் மிக அதிக அளவில் ஒருங்கிணைக்கவும் - ஒவ்வொரு  கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யும் பொழுது. இதுவே மாபெரும் புண்ணியச் செயல். பிறருக்குப் புரியாமல் இருந்தாலும் அவர்களை கூட்டுப் பிரார்த்தனையில் இனைத்து, இவ் வாக்குகளை எடுத்துச் சொல்லிச் செயல்பட ப‌‌‌ல நன்மைகள் உலகிற்கு உண்டாகும். மக்கள் பலரின் பாவங்கள் விலகட்டும் உங்கள் சேவையால்.) 
————————————

குருநாதர்:- அப்படி இல்லை என்றால் அப்பனே நீங்கள் அலைந்து திரிந்து, அப்பனே நிச்சயம் ஒன்று ஆகவில்லையே என்றெல்லாம். பின் நிச்சயம் அலைந்தோமே… அங்கு சென்றோமே… இங்கு சென்றோமே என்றெல்லாம் (வருத்தங்கள்) அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை செய்தால் அப்பனே, அனைவரிடத்திலும் கூட அதாவது நீங்கள் அனைவருமே கைகளில் அப்பனே பின் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள் (Mobile / அலைப்பேசி) ஒன்றை வைத்து. நிச்சயம் அதில் மின்கலம் (Mobile battery) தீர்ந்துவிட்டால் ஒன்றும் செய்ய இயலாதப்பா. மீண்டும் அப்பனே எங்கேயாவது மின்சாரம் இருக்கின்றதா என்று தேடி அப்பனே மீண்டும் வலுப்படுத்துவீர்கள் (Mobile charging) என்பேன் அப்பனே. 

அப்படித்தானப்பா….

*** கூட்டுப் பிரார்த்தனை செய்தால் மட்டுமே அப்பனே உங்கள் , நிச்சயம் சக்திகள்  கூட்டப்படும் அப்பா. ***

இல்லையென்றால் அப்பனே நிச்சயம் அங்கும் இங்கும் திரிந்தாலும் , அப்பனே ஆனாலும் அப்பனே 10, 20 சதவிகிதம் மட்டுமே நிச்சயம் ஏறும் அப்பா. மீதியெல்லாம் ஏறாதப்பா. இதனால் அப்பனே நிச்சயம் பின் 100 சதவீதம் ( 100 % battery charge ) ஏறவேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் இறைவன் எங்கிருக்கின்றான்? இறைவனை எப்படிக் காணலாம்? இறைவனை எப்படி அழைத்தால் வருவான் என்பவையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!!! அப்பனே. உங்களை நீங்கள் அறிந்து கொள்ளாவிடில் அப்பனே, உங்களைச் சுலபமாக மற்றொருவன் ஏமாற்றி, அவன் கர்மாவை எல்லாம் உந்தனுக்குக் கொடுத்து, நீங்களும் அனுபவிக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, உண்மை தெரியாமல் இறைவனை வணங்கக் கூடாது என்பேன் அப்பனே. அதே போல் அப்பனே உண்மை தெரிந்தவனும் அப்பனே இறைவனை வணங்கப் போவதில்லை. ஏன் ? எதற்கு ? நிச்சயம் இறைவனைக் கண்டுவிட்டால் , இறைவனை ஒன்றும் கேட்கப் போவதில்லை அப்பனே. 

************

“”””” இதனால் அப்பனே கூட்டுப் பிரார்த்தனைக்கு இருக்கும் நிச்சயம் சக்தி வேறு எதற்கும் இல்லை அப்பா“””””

************

“”””””””” அதனால்தான் அப்பனே வரும் காலத்தில் இன்னும் அப்பனே இவ்வாறு பிரார்த்தனைகள் பின் நிச்சயம் கூட்டிக் கொண்டே சென்றால் அப்பனே தொல்லைகள் அகலும் அப்பா.  “””””””

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இவ்வாறாக அனைவரும் ஒன்று சேர்ந்து , அப்பனே நிச்சயம் உருகி, மனம் உருகி அழைத்தால் அப்பனே பிரம்மாவும் * அடடா !!!! இப்படியா*** என்றெல்லாம் அப்பனே மனம் இறங்குவானப்பா. விதியும் அப்பனே நிச்சயம் எங்களால் எளிதாக மாற்ற முடியும் அப்பா. 

நிச்சயம் ஒருவன் அதாவது எங்களுக்கு மட்டும் நன்றாக இருக்க வேண்டும், எங்கள் பிள்ளைகள் பின்  நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினால், ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன் அப்பனே. மீண்டும் மீண்டும் இதைத்தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். 
ஆனாலும் அதுவும் நடக்கும். தொல்லைகள் ஏற்பட்டுவிடும் அப்பா. 

இதனால் அப்பனே, நிச்சயம் அனைவரும் சேர்ந்து , ஒன்றாக இனைந்து பிரார்த்தனையை செய்தால், அப்பனே பிரம்மனும் பார்பானப்பா. 

சரி. நிச்சயம் அவரவர் இவ்வாறாக ஒற்றுமையாக இருக்கின்றார்களே!!! பின் நிச்சயம் விதியை மாற்றுவோம் என்று அப்பனே. ஏன் என்றால்  கலியுகத்தில் அப்பனே ஒவ்வொருவருக்கும் சண்டைகள், சச்சரவுகள், இன்னும் ஏராளமான மனக்குழப்பங்கள் , இன்னும் அப்பனே கூறிக்கொண்டே இருக்கிறேன் அப்பனே. 

அதாவது கலியுகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் பாவம் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே.  இதனால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாது அப்பா. நிச்சயம் இதனால்தான் அப்பனே, ( இப்பொழுது பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் ) இங்கு சம அளவு (சக்திகள்) எதை என்று (நீங்கள்)  உணராமல் இருந்தாலும் , அப்பனே அதாவது சூரியன் இடத்திலிருந்து , அப்பனே அதாவது வளிமண்டலத்திலிருந்து அதற்கு மேலேயும் அப்பனே ஒரு படலம் உண்டு என்பேன் அப்பனே. அறிந்தும் கூட அவை யாருக்கும் தெரியாதப்பா. 

( இவை மனிதர்களின் விஞ்ஞான கருவிகளால் , அறிவால் என்றுமே கண்டுபிடிக்க இயலாத மண்டலங்கள்.) 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட (மனிதர்களின் விஞ்ஞான கண்களுக்குத் தெரியாத சூரியனின் கதிர்கள்) அவ்வாறாக நேரடியாக விழுகின்ற இடம் இவ்பாபநாசம்தானப்பா. 

அதனால் ஈசன் இருக்கின்றானே, அவந்தன் அங்கு இருக்கின்றானே அழகாகவே (பாபநாசர் ஆலயம்) , பின் ஏதோ ஒன்று நினைத்து விடாதீர்கள் அப்பனே. அவ்சக்தி அங்குதான் விழுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அவ்சக்தியானது வளிமண்டலத்திலிருந்தே இவ்ஆன்மா துகள்கள் பிரியும் என்பேன் அப்பனே. அதாவது நன்முறைகளாக நீங்கள் பிறக்கின்ற பொழுது நிச்சயம் அவ்வளிமண்டத்தில் உள்ள (கிரகங்களின்) துகள்கள் நிச்சயம் (மனிதர்களின்) மூளை பின் பக்கத்தில் நின்று விடும் என்பேன் அப்பனே. ஆனாலும் அவை வளர வளர , அப்பனே ஆனாலும் உடம்பும் வளரும். அவைதன் நிச்சயம் சில சில வகைகளிலும் கூட அழித்திட வேண்டும். அதாவது நிச்சயம் மீண்டும் அவைதன் வளிமண்டலத்திற்கே அனுப்பிட வேண்டும். 

அப்பனே ஈசன் இருக்கின்றானே இங்கு , அது நிச்சயம் ஒரு மணி நேரத்திற்குச் சரியாக ஓர் முறை பல கோடி வேகத்தில் , சம அளவில் திடீரென்று வரும். திடீரென்று போகும் அப்பா. 

அப்பனே அவ்வாறாக 5 மைல் தொலைவில் அவைதன் இருக்கவே , அப்பனே வளிமண்டலத்திற்கு (திரும்பி) மீண்டும் போகின்ற பொழுது , உங்களிடத்தில்  உள்ள , அதாவது மூளையின் பக்கத்தில் இருக்கின்றதே அதை மீண்டும் எடுத்துச் செல்லக் கூடும் என்பேன் அப்பனே. 

“””” இங்கு இதனால்தான் இவ்வளவு வலிமைகள் இன்னும் அப்பனே. “””””

எங்கெங்கு சில (கதிர்கள் விழுகின்றதோ) அதாவது அன்றே (அங்கெல்லாம் ஆலயம்) அமைத்தார்கள் ஞானிகள் அப்பனே. 

இவை சுற்றிப் பல வழிகளில் கூட நவகிரகங்கள்,  ஒவ்வொரு இடத்திலும்  சரியாகவே விழுந்து, மீண்டும் எழுந்து, அவ்வாறு பிரதிபலிப்பினால் நிச்சயம் பல வகை உண்டு அப்பா. 

(* பாவங்கள் நீங்கும் பாபநாச விஞ்ஞான ரகசியங்கள் *) 


இதனால் ஓடுகின்ற நதியிலே (555) நிச்சயம் அவைதன் விழுந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. அவை விழுகின்ற பொழுது உங்கள் கண்களுக்குத் தெரியாதப்பா. பைரவர் கண்களுக்குத் தெரியும் அப்பா. அப்பனே விளக்கு போல் மிளிரும் அப்பா. அவ்வாறு அவ்விடத்தில் நிச்சயம் நீங்கள் நீராடினால் மட்டுமே பாவங்கள் தொலையும். 

ஆனாலும் அப்பனே பாவங்கள் நீங்கள் கொண்டு வரலாம் எந்நேரத்திலும் அப்பனே நிச்சயம் நீராடலாம் என்பேன் அப்பனே. ஆனால் (உங்கள் பாவங்கள்) அது நீங்காதப்பா. 

** சரியான நேரத்தில் எப்பொழுது விழுகின்றது என்பது யாங்கள் அறிவோம் அப்பா. **

அவைதன் நிச்சயம் வருங்காலத்தில்  இவ்வாறாக கூட்டுப் பிரார்த்தனையில் யாங்கள் சொல்வோம் அப்பனே. 

“”””” ஒவ்வொரு ரகசியம் செப்புகின்ற பொழுது நீங்களே உங்களை வெல்லலாம் என்பேன் அப்பனே. “””””

அழகாக இடைக்காடன் சென்னானே , அதைச் செய்தாலே உங்களுக்கு மாற்றம் ஏற்படும் என்பேன் அப்பனே. 

———————————
 (சித்தன் அருள் - 1912 - இடைக்காடர் சித்தர் அருளிய , உலகத்தில் யாரும் அறியாத,  ராகு கேது துகள்களை உங்கள் இதயத்தில் இருந்து நிரந்தரமாக அழிக்கும்  அதி ரகசிய பூசை முறை)
——————————————

பின் எனக்கு நோய், அறிந்தும் இவ்வாறாகப் பணம் வரவில்லை, இன்னும் எதை எதையோ சண்டை சச்சரவுகள், நிச்சயம் பின்  கடனாளியாகி விட்டோமோ என்றெல்லாம் அப்பனே அனைவருக்கும் ஒவ்வொரு குறையப்பா!!!!!

** அப்பனே ஏதாவது ஒரு குறை இருந்தால்தான் இறைவனையும் நாடி வருகின்றான் மனிதன். இறைவன் குறை வைக்கவில்லை என்றால் நிச்சயம் ஒன்றும் தெரியாதப்பா. **

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. இது நரகம் என்பேன் அப்பனே. இவ்நரகத்தில் வாழ்வது மிகவும் கடினம்தான் அப்பா. அவ்வாறாக இல்லாமல் இன்னும் நிச்சயம் மனிதர்களுக்கு நல்லதையே சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே. ஏனென்றால் அனைத்தும் மாற்றும் சக்தி மனிதனிடத்தில் இருக்கின்றதப்பா. இதனால் அப்பனே யாங்களே உங்களுக்கு கொடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே நீங்கள் சோம்பேறி ஆகிவிடுவீர்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே இவ்வாறு உருவாக்கினால்,  நிச்சயம் பக்தி உள்ளவர்களைக் கூட அப்பனே மேலான பதவிகளில் யாங்கள் அமரவைத்து அனைத்தும் பக்திமயமாக்குவோம் என்போம் அப்பனே. 

ஆனாலும் நிச்சயம் அதேபோல் எனக்கு நன்றாக இருக்க வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணினால் நீங்கள் நிச்சயம் அப்படியே இருக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

(தனியாக இறை பாடல்களை ஓதும்  அனைத்து அடியார்கள் கவனத்திற்கு) 

** இதனால் நிச்சயம் பல அடியார்கள், ஈசனுடைய அடியார்கள்,  இன்னும் பல பக்தர்கள் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றார்கள் ஏன் இந்த நிலைமை என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. ****

** இப்பனே இவ் நிலை மாறவேண்டும் என்றால் ஒன்றே, கூட்டுப் பிரார்த்தனை  மட்டுமே என்பேன் அப்பனே. **

**** அப்பனே எங்கெங்கு ஒளி விழுகின்றது என்பதெல்லாம் வருங்காலத்தில் யான் எடுத்துரைக்கும் பொழுது, அங்கெல்லாம் சென்றால் அப்பனே உங்கள் பாவங்கள் தொலையும் அப்பா. பல கண்டங்கள் அப்பனே நீங்கும் அப்பா. பல தோஷங்கள் நீக்கும் அப்பா. பல நோய்கள் நீங்கும் அப்பா. ****

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். இறைவன் படைக்கும் பொழுதே நீ பாதுகாத்துக் கொள் என்று நிச்சயம் தன்னில் கூட ஒரு கருவியை வைத்திருக்கின்றானப்பா முதுகின் பின்னாலே!!!!!!. 

அப்பனே முதுகின் பின்னாலே வைத்திருக்கின்றானப்பா. அவைதன் கழுத்தை வரை ஏறவேண்டும் என்பேன் அப்பனே. அப்படி ஏறினால் மட்டுமே உங்களுக்கு அனைத்தும் தெரியும் அப்பா. அப்படி ஏறாவிடில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும் பிறந்து, திருத்தலங்களுக்குச் சென்று,  கஷ்டங்கள் பட்டுப் பட்டு, தானும் அழிந்து , தன்னைச் சார்ந்தோரையும்  (அழித்து) … ஒன்றும் லாபமில்லை அப்பனே. 

அக்கருவி உன் முதுகின் பின்னே நிச்சயம் உள்ளதப்பா. அவைதன் இயக்க வேண்டும். எப்படி இயக்குவீர்கள்? என்பேன் அப்பனே. அதாவது சொன்னேனே முன்னே, 

“””””” நலன்களாக  இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை நிச்சயம் சொல்கின்ற பொழுது, அப்பனே அனைவரிடத்திலும் ஒவ்வொரு சக்தியும் வெளிப்படும் என்பேன் அப்பனே.  “”””””””

இவ்வாறாக அவைதன் நிச்சயம் அதாவது ஒருவன் தட்டினால் அப்பனே நிச்சயம் ஒளி ஓரிடத்தில் மட்டும் போகும் என்பேன் அப்பனே. ஆனால் அனைத்தும் சேர்ந்து தட்டினால் எங்கோ சென்றுவிடும் என்பேன் அப்பனே. 

நீங்கள் அப்பனே பாடுகின்றீர்களே… அப்பனே ஏன் பாடுகின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா அப்பனே ? 

“”””” நிச்சயம் சக்திகள் வாய்தான் அப்பனே….. “””””

(உங்களிடம் இருந்து வாய் வழியாக ) வருகின்ற பொழுது அப்பனே உங்களுக்குத் தெரியாதப்பா. அவைதன் அப்பனே பிம்பத்தின் மூலம் காணலாம். அவ் பிம்பம் கூட அப்படியே கண்டுபிடித்து அப்படியே வைத்திருக்கின்றார்கள் ஓரிடத்தில். அதையும் யான் தெரிவிப்பேன் அப்பனே. 

** அவைதன் நிச்சயம் இவ்வாறு ஒளி அலைகளாக மாறுகின்ற பொழுது , நன்முறைகளாகவே நிச்சயம் பின்னே இருக்கின்றதே அவ் கருவியை இயக்கப் பயன்படுகின்றது என்பேன் அப்பனே.  ** 
இவ்வாறாக அக்கருவி சிறிது சிறிதாக மேல் எழும்பும் என்பேன் அப்பனே. இதனால் அனைத்தும் உங்களுக்கே தெரியவரும் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன். 

உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி வாழுங்கள். இப்படி இருந்தால் நல்லது நடக்கும் என்று சொல்லிவிட்டால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே. 

** அதேபோல்தான் அப்பனே, நிச்சயம் நீங்கள் எங்கள் பிள்ளைகளப்பா!!!!!   ***

** இப்படி இருந்தால் நிச்சயம் வாழ்ந்து விடுவீர்கள் என்று யாங்கள் கற்றுக் கொடுக்கின்றோம் அப்பனே.  **

ஏனென்றால் அனைத்தும் யாங்கள் செய்கின்றோம். பின் இறைவன் செய்வான் என்று நிச்சயம் நீங்கள் வந்து கொண்டே இருந்தால் பின் உங்களுக்கும் தெரியாமல் போய்விடும். உங்களுடைய வாரிசுகளுக்கும் தெரியாமல் போயிற்று , கஷ்டங்களும் பின் அள்ளி அள்ளி வருமப்பா. 

இதனால் அப்பனே கவலைகள் வேண்டாம். இன்னும் வாக்குகளில் எப்படி வாழ வேண்டும்? எப்படி இன்னும் பின் தாந்திரீகம் என்ன? பின் மாந்திரீகம் என்ன? அப்பனே உங்களிடத்திலேயே இருக்கின்றது அப்பனே!!!! அவையெல்லாம் எப்படி இயக்க வேண்டும் என்று உங்களுக்கே யாங்கள் சொல்லித்தருவோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அதே போலத்தான் அப்பனே நிச்சயம் சிறு வயதிலிருந்தே ஒழுக்கமாக எப்படி வாழ்ந்தால் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்கள் அல்லவா? 

அதே போலத்தான் அப்பனே. 

** யானும் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே. அதை யார் ஒருவன் சரியாகப் பயன்படுத்துகின்றானோ அவன் வெற்றியாளனாக இருப்பான் அப்பனே.  **

சரியாகப் பயன்படுத்தாதவன் மீண்டும் பாவத்தில் நுழைந்து பல கஷ்டங்கள் பட்டு மீண்டும் ஓடோடி வருவானப்பா. 

“”””” உலகத்தில் இறைவனைக் காண முடியாதப்பா. ஆனால் அப்பனே யான் சொல்வதைக் கேட்டால் நிச்சயம். “”””””

அப்பனே நிச்சயம் ஏன் எதற்கு உங்களை எல்லாம் பிரித்து விட்டார்கள்.  கூட்டுப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் அனைவரும் பிழைத்துக் கொள்வார்கள் என்று சரியாக எழுதப்பட்டதை எல்லாம் மாற்றி அமைத்து , இவ்வாறாக (கூட்டுப் பிரார்த்தனைகள் )  செய்யக் கூடாது என்று என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள் என்பேன் அப்பனே. அவ்வாறாக, இவர்களும் கூட  பக்தர்கள்தான் என்பேன் அப்பனே.  இவ்வாறு செய்துவிட்டார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே. 

** ஏனென்றால் பின் சித்தர்களை நம்பி நம்பி ஓடோடி வருகின்றீர்கள் நீங்கள் அப்பனே.  இதனால் அப்பனே உங்களுக்கு யாங்கள் நன்மையே செய்வோம் அப்பனே!!!! **

(கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைத்து அடியவர்களுக்கும் பின் வரும் வாக்கு மகத்தான வரப்பிரசாதம். அந்த ஒருவர் நீங்களாக இருக்கலாம்…) 

“””””” இன்னும் அப்பனே இவ்வாறாகச் செய்து கொண்டிருந்தால் அப்பனே உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து,  ஓர் உயர் பதவியில் வகித்து (அளித்து) , பின் உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை எல்லாம் அப்பனே அவன் மூலம் யாங்கள் கொடுக்க வைப்போம் அப்பனே. “”””” 

“””” இதனால் அதி விரைவிலேயே அனைத்தும் நடக்கும் அப்பா. “”””””


“””””” அப்பனே மனம் இறங்கினார்கள் பின் ஈசனும் பார்வதி தேவியும் கூட அனைவரையும் ஆசிர்வதித்தார்கள் என்பேன் அப்பனே !! “””””

இன்னும் அப்பனே அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதங்கள் உண்டு என்பேன் அப்பனே !!!!!! 

இன்னும் அப்பனே ஹோமங்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்று எல்லாம் ரிஷிகள் வந்து சொல்வார்களப்பா. அதை நீங்கள் பயன் படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது அனைத்தும் கிடைக்கும் அப்பா. 

அப்பனே ஓரே நேரத்தில் சொல்லிவிட்டால் அப்பனே மதிப்பிருக்காதப்பா. அப்பனே நீங்கள் அனைவருமே இப்பொழுது ஒன்றாம் வகுப்பில் தான் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  

இன்னும் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி  பெற வேண்டும். மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் உயர் கல்வியில் எவ்வாறு தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றும் வகுப்பிற்குச் சொல்லிக் கொடுத்தால் முடியாதப்பா. அதனால் அப்பனே தள்ளிக்கொண்டே வருகின்றேன். 

பாவத்தைத் தள்ளியே வைப்பேன் அப்பனே. 

ஆசிகள் !!!! ஆசிகள் !!!!!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!