​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 30 August 2025

சித்தன் அருள் - 1928 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு!







15/8/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: வஜ்ர வாராஹி தேவி திருக்கோயில். சப்பாங்கான் கிராமம்.காத்மாண்டு நேபாளம்.

ஆதி கைலாய நாதனையும் கைலாய நாயகியையும் போற்றி பணிந்தேனே...

இறைவா அனைத்து உலகும் காப்பாய்!!

உரைக்கின்றேனே அகத்தியனே!!!

நல்முறையாகவே அனைவருக்குமே  ஆசிகள்!!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பார்வதி தேவியின் அருள்கள் பல பல!!! உண்டு!!

உண்டு அப்பனே அறிந்தும் பின் பின்.. வரும் அளவிற்கு கூட அப்பனே... நன்முறையாகவே பல அவதாரங்கள்.. பார்வதி தேவியின் அவதாரங்கள் அப்பனே. 

இக் கைலாய மலையிலே அப்பனே நல் விதமாகவே அப்பனே !!!.....பல வழிகளிலும் கூட உலகை காக்க வேண்டும்.. என்று எண்ணி அதாவது... நிச்சயம் கலியுகத்தில் இப்படி எல்லாம்.. நடக்கும் என்பதை எல்லாம் தெரிந்து.. நன் முறைகளாகவே... ஈசனிடத்தில் கோபித்துக் கொண்டு!!! கோபித்துக் கொண்டு.!!!!. பல அவதாரங்களையும் கூட அன்னை... நிச்சயம் தன்னில் கூட.
பல வழிகளிலும் கூட அப்பனே அவதாரங்கள்..


 இதனால் நிச்சயம் தன்னில் கூட... ஒவ்வொரு அதாவது கலியுகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள்.. அதிகரித்தது. 

இதனால் அப்பனே அவ்.. நிச்சயம் பாவங்களையும் பல.. மனிதர்களையும் கூட. பாவத்தினை சரியாக தீர்க்க..... பின் எப்படி? ஏது ? அவதாரம்?? எடுத்தால் நன்மை தரும்.. என்பதையெல்லாம்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட அடிக்கடி... அன்னை அவதாரங்கள் என்பேன். அப்பனே. 

இதனால் கலியுகத்தில் துஷ்டர்களை அழிப்பதற்காகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் பார்வதி தேவி நிச்சயம் பின்.. வாராஹி தேவி அவதாரமாக எடுத்தாளப்பா!!!

இதனால் அப்பனே..இக் கதையும் அப்பனே அறிந்தும்... பல வகையிலும் கூட யாருக்கும் தெரியாதப்பா. 

அப்பனே உண்மை கதையை.. கலியுகத்தில் யாரும் விளக்குவதே இல்லையப்பா.

பொய்யானவற்றையெல்லாம்... விளக்கி அப்பனே... பொய்யானதை எல்லாம் பின்பற்றி.. அழிவுக்கு காரணமாகி... நிச்சயம் மதி மயங்கி அப்பனே.. எதை எதையோ.. மனிதனே மனிதனை மயக்கி அப்பனே... எதை எதையோ செய்து கொண்டிருக்கிறான்ப்பா.

இதனால் அப்பனே இதை திருத்துவதற்காகவே...யாங்கள் சித்தர்கள் அப்பனே அழகாகவே... வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 


அவை மட்டும்  இல்லாமல்.. சிலர் என்னிடத்தில் தான்.. அகத்தியன் இருக்கின்றான்... இன்னும் அவை பொய் இவை பொய்... என்றெல்லாம் 

ஆனாலும் அப்பனே!!!

"""" அவனே பொய் !!!!!

 என்பதெல்லாம்.. உணர்வதே இல்லை என்பேன் அப்பனே. 

இதனால் அவந்தனக்கே நிச்சயம்......!?!?!?!?!?!


அப்பனே சித்தர்கள் (தவறான வழியில் சித்தர்கள் பெயரை) நாமத்தை எடுத்தவர்கள் அப்பனே.. நிச்சயம் அழியாமல் விட மாட்டார்கள் எதை என்று புரிய அப்பனே. 

சரியாக நல் மனதாக வந்தால் தான் அப்பனே நிச்சயம்... பின் அனைத்தும் கிடைக்குமப்பா!!


அப்படி இல்லை என்றால் அனைத்தும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் அதாவது... நிச்சயம் அவர்களே உணர்வார்களப்பா!!!

மூடநம்பிக்கைகளை கூட காலை வேளையில் கூட புஜண்டன்.. எடுத்துரைத்தான் அப்பா 

(பசுபதி நாதர் ஆலயத்தில்..  காகபுஜண்டர் மகரிஷி உரைத்த வாக்கு..அக் வாக்குகளும் விரைவில் வெளிவரும்)

அப்பனே நல்விதமாக எதை என்று தெரியும் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

நிச்சயம் புரிந்து கொள்ளா விடில் நிச்சயம் கஷ்டங்கள்.. கூட வந்து கொண்டு இருக்கும் என்பேன் அப்பனே. 

இக் கஷ்டங்களை தடுப்பது யார்???

அப்பனே நிச்சயம் முடியாதப்பா. 

இதனால் தான் அப்பனே மனிதன் கலியுகத்தில்.. பல பல வழிகளில் கூட.. சென்று கொண்டிருப்பான் அப்பனே.

இதனால் அப்பனே பல வினைகளை சம்பாதித்து கொள்வான் என்பதை கூட...யாங்கள் அறிந்ததே!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அழகாக நிச்சயம் புத்திகளை ஈசன் அழகாக... மனிதனுக்கு புத்திகளை கொடுத்து அனுப்புகின்றான் அப்பனே.

அவ் புத்திகளை சரியாக பயன்படுத்தாதினால் தான் அப்பனே... துன்பம் என்பதையெல்லாம்.. நிச்சயம் தன்னில் கூட.

அதை விலக்குவதற்காகவே... நிச்சயம்... அனைத்தும் யாங்கள் சொல்வோமப்பா!!!

வரும் காலத்தில் என்ன நடக்கும்??? ஏது??... எதை என்று புரிய அப்பனே..

எதை என்று கூற... எவ்வாறு அழிவுகள் வருகின்றது?? என்பதை எல்லாம் அப்பனே

அவ் அழிவுகளை தடுக்க அப்பனே... மனிதனால் தான் முடியும் என்பதை எல்லாம்..யாங்கள் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம் அப்பனே.

ஆனால் மனிதன் கேட்பதே இல்லை என்பேன் .

இதனால் எதை என்று புரிய சுயநலத்திற்காகவே... அப்பனே நிச்சயம் தனக்கு இல்லம் வேண்டும்.. அதாவது மனைவி அமைய வேண்டும்.. பின் எதன் மூலம் சொத்துக்கள் அமைய வேண்டும்?? என்பதை எல்லாம் அப்பனே பின் அதாவது... சுயமாகவே சிந்தித்தால் !?!?!?!??அப்பனே...

இறைவனும் கூட... சுயமாகவே அப்பனே பின் அனைத்தும்... அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்வான்...அப்பனே.

அதனால்தான் அப்பனே பின் கூட்டுப் பிரார்த்தனைகள் வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே... எடுத்துரைத்துக் கொண்டு வருகின்றேன் அப்பனே.

நிச்சயம் அப்பனே இறைவனிடம் அனைவரும் மன்றாடினால் இறைவன் செவி சாய்ப்பானப்பா!!!

இல்லையென்றால் அப்பனே அழிவுகள் தான் என்பேன் அப்பனே ... வரும் காலத்தில் பலமாக.

ஆனாலும்(கூட்டு பிரார்த்தனையை பற்றி) இதையும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

ஆனாலும் சில மனிதர்கள் இதை கேட்கவில்லை என்பேன் அப்பனே.

ஆனாலும் இதையும்..(கூட்டு பிரார்த்தனை) பொய் !  எதை என்று பொய் !! என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர் என்பேன் அப்பனே.

ஆனாலும் அவனுக்கு அழிவுகள் தான்...அப்பனே.

கூட்டுப் பிரார்த்தனை எதை என்று புரிய மற்றவர்களை காப்பாற்ற....!!;

அப்பனே எங்கள் அருகில் (நெருங்க) எப்பொழுது... நிச்சயம் அதிகமாகும் என்றால்... நல்விதமாக அப்பனே நிச்சயம்....

 இவ்வுலகத்தில் பெரிய பரிகாரமே....... மற்றவர்களுக்காக... வணங்குவதே என்பேன் அப்பனே. 

என் பக்தர்கள் பின் நிச்சயம்... மற்றவர்களுக்காகவே வணங்கினால் மட்டுமே...

நிச்சயம் தன்னில் கூட அவர்கள் தான் என் பக்தர்கள் என்பேன். அப்பனே. 

தன் சுயநலத்திற்காகவே அனைத்தும் கேட்டுக் கொண்டே இருந்தால் அப்பனே பின் அவன் என் பக்தனே இல்லை என்பேன் அப்பனே 

நிச்சயம்... ஏதோ நிச்சயம் சித்தர்கள் வருகின்றார்கள்... நிச்சயம் பின் அதாவது... ஜாதகங்களையும் சொல்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்...

அப்பனே அப்படி இல்லையப்பா!!!

அப்படித்தான் ஆக்கிவிட்டார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே...
சித்தர்களை நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட....



 எப்படி எல்லாம் கிரகங்கள் கலியுகத்தில் செயல்படும்??? என்பதை எல்லாம் அப்பனே.... அண்ணாமலையிலேயே உரைப்பேன் என்பேன்  அப்பனே!!!
நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே...

நல்விதமாகவே அப்பனே இன்னும்... மனிதனுக்கு வாழ்க்கையை பற்றி பின் தெரிவதில்லை.. அப்பனே சிந்திப்பதும் இல்லை என்பேன் அப்பனே !!!

எதை எதையோ சிந்தித்து எதையெதையோ பின்... சிந்திப்பதெல்லாம் பின் அழிவுக்கு... காரணம் என்பது அப்பனே மனிதனுக்கு தெரிவதில்லை அப்பனே.

இதனால் என்ன ஏது எதை என்று புரிய அப்பனே...

இதனால் அப்பனே நல்விதமாகவே... அப்பனே எதை என்று அறிய அறிய... அப்பனே கைலாய மலையில் தன்னில் கூட... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அழகாகவே நிச்சயம்... அறிந்தும் அப்பனே பின்... ஈசனும் பார்வதி தேவியும் அழகாக.... உட்கார்ந்து தியானங்கள்... இப்படியே நிச்சயம் தன்னில் கூட கந்தனும் அப்பனே... பின் அழகாக.... செந்தூரிலிருந்து மயில் மீது ஏறி... கைலாய மலைக்கு வந்து எதை என்று புரிய!!!

அப்பனே கந்தன் அதாவது தாயே!! தந்தையே !! நிச்சயம் நீங்கள் இங்கே அமர்ந்திருந்தால் மட்டும் போதுமா???

நிச்சயம்  கலியுகத்தில் பல வருத்தங்கள் மனிதனுக்கு!!

இதனால் பின் ஏதோ நீங்கள்...முடிவெடுங்கள்.....

நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு.. முடிவெடுத்தால் மனிதனுக்கு யாங்கள் எதை என்று பின் புரிய வைப்போம் என்பதையெல்லாம். 


மகனே கேள்!!! என்று ஈசனாரும்.. கூட !!!


 கந்தனே!! எதை என்று..புரிய அதாவது கர்மாக்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது...

கந்தனே !!

அறிந்தும் புரிந்தும்... இதனால் நிச்சயம் தன்னில் கூட... அவனவனுக்கு பின் நிச்சயம் தன்னில் கூட நல் மனதாக உனை பின்... எதை என்று புரிய என்று அறிய.... நல் மனதாகவே பின் வந்தால் பின் நிச்சயம் தன்னில் கூட...(நல் மனதோடு முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்)

. அதாவது உன்னுடைய பின் நிச்சயம் சக்திகள் அவனுக்கு போகும். 

இதனால் அவன் பலமடைவான்... பின் அதுவே போதும் என்பதை எல்லாம்... ஈசன் பின் கந்தனிடத்தில் கூட.




இதனால் அப்பனே நல்முறையாகவே... நல்மனதாகவே... சென்றால் கூட... இறைவன் சக்திகள் அப்பனே... உந்தனுக்கு கொடுத்து விடுவானப்பா!!!

அவை இல்லாமல் அப்பனே எதை எதையோ வேண்டிக்கொண்டு.. சென்றால் அப்பனே இறைவன்... கொடுக்கப் போவதில்லை. 

அப்பனே அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட பின்...

 கந்தனும்!!

.தாய் !!தந்தையே!!! நிச்சயம் தன்னில் எதை என்று புரிய .... நிச்சயம் செந்தூரிலே அனைவரும்... வருகின்றார்கள்!!

பின் அதாவது... பாவ வினைகளை எல்லாம் சுமந்து தான் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனாலும் நிச்சயம்  அங்கு பின் சிலர் உறங்குகின்றார்கள் (திருச்செந்தூரில்) 

அங்கு அவர்களை பார்க்கின்ற பொழுது... பாவக்கணக்கு அதிகமாக இருக்கின்றது..

அதை நீக்க நிச்சயம்... நீங்கள் தான் வரவேண்டும்... அறிந்தும் புரிந்தும் கூட... அதாவது பின் முருகனும் கூட... தன் தந்தையிடம்....

அறிந்தும் எவை என்று கூற பின்... ஈசனார் 

கந்தனே கேள்!!!!..

எதை என்று கூட புரிந்துகொள்!! நிச்சயம் தன்னில் கூட!!

அவ்வாறாக... கர்மங்கள் தான் செய்தவர்கள் தான் அங்கு வருகின்றார்கள்!!!

பின் நல்லதே செய்துவிட்டால் யார்?? வருவார் நிச்சயம் தன்னில் கூட !!!

அதனால் அங்கு வருபவர்கள் எல்லாம்.. பாவம் செய்தவர்கள் தான். 

யாம் அறிவோம். 

ஆனாலும்... அப்பொழுதும் கூட பின் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது... நிச்சயம் தன்னில் கூட... சரியாகவே எதை என்று புரிந்தும் கூட... ஒவ்வொருவர்... அதாவது ஒவ்வொரு மனதையும் கூட நீ நிச்சயம் ஆழ்ந்து.. நிச்சயம் சிந்திப்பாய். 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறு நல் மனதாக இருந்தால்....அவர்களை

. """"""மிதித்துச் செல்!!!!

நிச்சயம் பாவங்கள் தொலையட்டும் அறிந்தும் புரிந்தும். 

இதனால் பின் ஈசனாரும் கூட... கந்தன் இடத்தில் நிச்சயம்...

யான் அறிந்தேன்!!! எதை என்று புரிய எவை என்று அறிய... நிச்சயம் தன்னில் கூட !!


பின் முருகனும்...

பின் அதாவது தந்தையே!!!

 பாவம் செய்தவர்கள் தான் என்னிடத்தில் அதிகம்.. வருகின்றனர். 

இதற்கு? எதை என்று புரிந்து.....!?!?!




ஈசனார் நிச்சயம் அதாவது மகனே கேள்!!!!

திருத்தலத்திற்கு பின் பாவம் செய்தவன் தான்... நிச்சயம் வருவான். 

நல்லோன் வருவானென்றால்!?!?!!!!!!?!.... நிச்சயம் பின் இல்லை!!!

அதாவது எனை உணர்ந்து விட்டால் நிச்சயம்... பின் அவனிடத்தில் யான். தங்கி விடுவேன்.

இதனால் நிச்சயம்.. அவனுக்கு நிச்சயம் என்னிடத்தில் தான்... ஈசன் இருக்கின்றான் என்று. 


ஆனாலும் நிச்சயம் இக்கலியுகத்தில்... இன்னும் அதிக பாவங்கள் பின்.. சேர சேர நிச்சயம் அதாவது...

அதிக அளவு மனிதனுக்கு அழகாக அனைத்தும் கொடுத்து தான் அனுப்புகின்றேன். 
அதை சரியாக உபயோகப்படுத்தாமல் நிச்சயம் திரிந்து... நிச்சயம் அவ்வாறாகவே...


கந்தன் 


பின் தாயே !!!...நீயும் கூட.. அறிந்தும் அதாவது தந்தையே... இப்படி பேசிக்கொண்டு!!!

ஆனால் நீயும் பின் வரவேண்டும்... நிச்சயம் தன்னில் கூட. 

இதனால்... அறிந்தும் எதை என்று புரிய...

ஏதாவது ஒரு அவதாரத்தை எடுத்து நிச்சயம் தன்னில் கூட மனிதனை பின்... காக்க தாயே நிச்சயம்...

அதாவது தந்தை தான் இங்கு அமர்ந்து கொண்டு.. இருக்கின்றார். 

பின் தாயே நீ என்னிடத்தில் வருவாயாக!!!!...... நிச்சயம் தன்னில் கூட.

அதாவது தாய் தந்தை!!! எதை என்று புரிந்து... அதாவது தந்தை நிச்சயம்.. இங்கு அமர்ந்து கொண்டு நிச்சயம் தவத்தில் இருக்கட்டும்!!

  நிச்சயம் தன்னில் பின் தந்தைக்குத் தெரியும்!!.. பின் யாரை எப்பொழுது காப்பாற்ற வேண்டும்?? என்று!!

ஆனாலும் அழிவுகள் நிச்சயம் பாதி அழியப் போகின்றது... தாயே நீயும் வாரும்!!! என்றெல்லாம்!!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும்...எவை என்று அறிய...

பின் அதாவது மயில் மீது ஏறி... அதாவது அழகாக தன் மயில் வாகனம் இருக்கின்றது. 
அழகாக வா தாயே!!. என்று நிச்சயம் தன்னில் கூட!!!

எங்கெல்லாம்... அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய... நிச்சயம் தன்னில் இவை என்று அறிய...

இதனால் நிச்சயம் தாயே... நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய பின் அதாவது எவை என்றும் உண்மை தனை கூட.... அதாவது மனிதனின் நிச்சயம் தன்னில்  கூட... அறிந்தும் பாவத்தை நீக்க நிச்சயம்... ஏதாவது பின் அகோரமாக... பின் அறிந்தும் புரிந்தும்... நீ அவதாரம் எடுக்க வேண்டும்... என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால் நிச்சயம் தாயே.. எதை என்று புரிய அதாவது நிச்சயம் நீ வா!!! அன்போடு அழைக்கின்றேன்!!

நிச்சயம் இவ்வாறாக... பார்வதி தேவியும் நிச்சயம் பின்.....

ஈசனாரே!!!... அறிந்தும் நம் குழந்தை இவ்வாறாகவே கேட்கின்றான்... மனித குலத்தை காக்கவே!!!

இதனால்... நிச்சயம் யான் அவதாரமாகவே.. எடுக்கத்தான் போகின்றேன் நிச்சயம் குழந்தைகளிடம் செல்லத்தான் போகின்றேன் என்று..

ஈசனாரும்... நிச்சயம் பின் தேவியே செல்லும்!!!

நிச்சயம் குழந்தை என்றாலே தாய்க்கு பாசம் வந்து விடும்!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட.

மகனே கிளம்பு!!!!... அறிந்தும் புரிந்தும் கூட!! எதை என்று அறிய அறிய!!

தாயே நிச்சயம் தன்னில் கூட அதாவது...இவ் வாகனம் அதாவது அறிந்து... நிச்சயம் எங்கெல்லாம் பின் அழிவுகள்.. வரப் போகின்றதோ... அங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட கூச்சலிடும்!! அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஏதாவது.. அதாவது சரியாகவே.. எதை என்று புரிய பின் கைலாயத்தில் நிச்சயம் பின் அதாவது... அதாவது மணலை (கைலாய புனித மண்) எடுத்து அங்கங்கே வீசு!! என்று!!!

(மயில் வாகனத்தில் செல்லும் பொழுது பூலோகத்தில் எங்கெல்லாம் அழிவுகள் வரும் இந்த இடத்திற்கு மேலே மயில் வாகனம் பறக்கும் பொழுது மயில் சப்தம் எழுப்பி அகவும்) 


இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக எங்கெல்லாம்.. அழிவுகள் அடுத்து வரப் போகின்றது ?என்று.. என்பதையெல்லாம் நிச்சயம் உணர்ந்து..

 பின் அதாவது நிச்சயம்.. அதாவது மகன் எடுக்கச் சொல்கின்றான்!!! கைலாய நாதனே... நிச்சயம் பின் அன்பு கருணை.. நிறைந்தவனே நிச்சயம் தன்னில் கூட!!

மண்ணை நீயே அள்ளி.. எடுத்துக் கொடு என்று.. ஈசனிடம் பார்வதி தேவி.

நிச்சயம் ஈசனும் சரியாகவே.. நிச்சயம் அதாவது தாயிடம்.....பார்வதி தேவியிடம் மண்ணை கொடுத்தார் ஈசன்.

இதனால் கந்தன் நிச்சயம் தன் மயில் வாகனத்தில் அமர்ந்தான்... நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக... அங்கங்கு நிச்சயம் பின் மயில்..... எங்கெல்லாம் அழிவுகள் வருகின்றதோ....... பலத்த சப்தத்துடன் நிச்சயம் கூச்சலிட்டது!!
அவ்வாறாக.. நிச்சயம் சிறிது சிறிதாக......

இதனால் நிச்சயம் எதை என்று புரிய தாயே!!! மயில் மீது அமர்ந்து... பறந்து சென்று கொண்டே இருக்க...

குழந்தை அதாவது முருகன் யோசனை... நிச்சயம் தாயே... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அதாவது... எங்கெல்லாம் அழிவுகள் வருகின்றது? என்பதை எல்லாம்.. நிச்சயம் பின் மயில் எதை என்று அறிய அறிய...உணர்ந்ததே நாம்.

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... இவ்வாறாக... மயில் கூச்சலிடுகின்ற பொழுது... அங்கே கீழே சென்று நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் ஏதாவது ரூபத்தில் நிச்சயம் தன்னில் கூட...அங்கேயே இருந்து!!! எவை என்று அறிய மீண்டும் பின் அவ்வாறாக அவ்வாறாக என்றெல்லாம். 

(ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அங்கு ஏதாவது ரூபத்தில் ஆலயத்தில் பார்வதி தேவி அவதாரமாக அமர்ந்து கொண்டார் அழிவுகளை தடுக்க) 

நிச்சயம் இவ்வாறாக எங்கெல்லாம்.. பின் கைலாயத்திலிருந்து.. பின் முருகனும் எதை என்று.. பார்வதி தேவியும்.. மயில் மீது நிச்சயம் பின் அமர்ந்து.. எங்கெங்கு எதை என்று புரிய... மண்ணை கெட்டியாக பிடித்துக் கொண்டு... நிச்சயம் பின் அங்கங்கே.. பார்வதி தேவியும். தன் காலை அதாவது.. மயில் பலமாக.. போய்ச் சேர்கின்ற பொழுது நிச்சயம்... அறிந்தும் புரிந்தும் இவ்வாறாக.. நிச்சயம் பின் இறங்கி தன் கால்களை நிச்சயம் பதித்து.. நிச்சயம் பல வழிகளிலும் கூட சக்திகளை ஏற்படுத்தி விட்டாள்!!!.. சக்தியவள்!!

அதனால்தான் இவ் சக்தி.. நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே இங்கு.. அழிவுகள் வரும் என்பதையெல்லாம் நிச்சயம்.. எதை என்று அறிய தெரிந்து காலை பதித்தாள்!! இன்னும் பலமாகவே பார்வதி தேவி!!! (இந்த ஆலயத்திலும் பார்வதி தேவியாரின் கால்கள் பதித்தார்)

இன்னும் பல திருத்தலங்களை கூட எவ்வாறாக என்பதையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறாக கால்களை பதித்தாள் என்பதையெல்லாம்... அடுத்து  சென்று கொண்டிருக்க... பல பல திருத்தலங்கள்..


 எதை என்று கூற கடைசியில்... நிச்சயம் மலையனூரில் கால் பதித்தாள். 

(மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம்) 

அறிந்தும் புரிந்தும் கூட!!

ஏனென்றால் அங்கெல்லாம் சுற்றி அழியப்போகின்றது.. என்பதை எல்லாம்... அதாவது பின் அங்கும் அதாவது... நான்கு திசைகளிலும்... அதாவது வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு... இவ்வாறு அங்கு இருந்து பின் அழகாக பின் 500... மைல் தொலைவுகளிலும் கூட அழியும்.. எதை என்று புரிய என்றெல்லாம்... அங்கேயும் கால் பதித்து... இன்னும் பல இடங்களில் கூட!!!


திருச்செந்தூர் ரகசியம்.

 கடைசியாக... நிச்சயம் தன்னில் கூட அழகாகவே... நிச்சயம் அறிந்தும் புரிந்தும் சென்று... செந்தூருக்கே அழைத்துச் சென்று விட்டான்.. தன் அன்னையைக் கூட.. கந்தன்.

அங்கேயே  அறிந்தும் பார்வதி தேவி கால்பதித்து அறிந்தும் கூட... மறைமுகமாக நிச்சயம் பின்... அதாவது எதை என்று புரிய என் பின்னாலே இரு தாயே!! என்று.. நிச்சயம் தன்னில் வராஹி ரூபத்திலே!!!! செந்தூரிலே... அன்னை நிச்சயம் தன்னில் கூட!!

(திருச்செந்தூர் ஆலயத்தில் முருகன் மூலஸ்தானத்தில் முருகன் பின் பார்வதி தேவியார் வாராகி ரூபத்தில் அருள் பாலிக்கின்றார்) 

வருவோருக்கெல்லாம் அருள் பாலித்து கொண்டு இருக்கின்றாள்!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று கூற (திருச்)செந்தூரும்...!!!

 அங்கே முருகன் அருள் கொடுப்பதை விட.. வராஹி தேவி அருள் எதை என்று புரிய.......


 நிச்சயம் பார்வதி தேவியின்  பரிபூரணமாக...இக் கலியுகத்தில் நிச்சயம் பின் கந்தன்.. பின்னே (முருகனின் மூர்த்திக்கு பின்னால்)

 இருந்து வராஹி தேவியாக.. நிச்சயம் பின்.. மனிதர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டு.. இருக்கின்றாள். 

வருவோருக்கெல்லாம்.. பின் பாவவினைகளை தீர்த்துக் கொண்டே இருக்கின்றாள்..

இதை யார் அறிவார்?????

எதை என்று புரிய அதனால்தான் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட பல மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவே.. சித்தர்கள் யாங்கள் பின் அழகாகவே எதை என்று புரிய... அப்பனே.. சொல்லிக் கொண்டே வருகின்றோம் 

 இதனால் அப்பனே..

இங்கெல்லாம் பார்வதி தேவி அப்பனே இன்னும் அவதாரங்கள் எடுத்து நிச்சயம்... பின் எவை என்று கூற 

பள்ளூரில் !!!

(காஞ்சிபுரம் அருகில் 15 கிமீ.... இருக்கும் பள்ளூர் வராஹி தேவி அம்மன் ஆலயம்)

நிச்சயம் அங்கும் கூட 


காஞ்சி தன்னில் கூட பின் அழகாகவே.. எதை என்று காமாட்சியாக.. இருக்கின்றாளே நிச்சயம் தன்னில் கூட 
வராஹியாகவே இருக்கின்றாள்.

மதுரை தன்னில் கூட(மீனாட்சி) வாராஹியாகவே இருக்கின்றாள்.

ராமேஸ்வரத்திலும்   (பர்வதவர்தினி) வாராஹியாகவே இருக்கின்றாள். 

நிச்சயம் தன்னில் கூட... ஏனென்றால் காக்க வேண்டும்... மனிதர்களை...

எதை என்று கூற பின் காசி விசாலாட்சியிலும் கூட வாராஹி தேவியாகவே இருக்கின்றாள்...

இன்னும் இன்னும் அப்பனே எதை என்று புரிய... இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே.... இன்னும் பார்வதி தேவி வராஹி தேவியாக எப்படியெல்லாம்?? ஆட்சி புரிகின்றாள் என்பதை எல்லாம் அப்பனே...

கவலைகள் வேண்டாமப்பா!! இன்னும் நல் முறைகளாகவே ஆசிகள் அப்பனே!!..  இன்னும் அப்பனே தேவியின் பின்.. ரூபத்தை பற்றி எடுத்துரைப்பேன்... அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!! ஆசிகளப்பா!!!



குருநாதரிடம் அடியவர்கள் சில சந்தேகங்களை கேட்ட பொழுது குருநாதர் தந்த பதில்கள். 


குருவே சரணம் குரு பாதம் சரணம் குருவே இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் இருக்கும் திரிபுரா மாநிலம் பால திரிபுரசுந்தரி தாயாரின் பெயரில் இருக்கின்றது நீங்கள் அங்கு வாக்கு உபதேசமும் செய்தீர்கள்..

 சித்தன் அருள் 1599 .

 அங்கு பால திரிபுர சுந்தரி தேவி அன்னை சக்தியாக வீற்றிருக்கின்றார். 

அதேபோல் அருணாச்சல பிரதேசம் அருணாச்சல ஈஸ்வரனின் பெயரில் இருக்கின்றது அதன் விசேஷங்கள் மகிமையை கூறுங்கள் குருநாதா !!!!


அப்பனே இதைப் பற்றியும் சொல்வேன் அப்பனே... எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கைலாயத்திற்கும் இதற்கும் சம்பந்தங்கள் உண்டு என்பேன் அப்பனே.... சரியாக யோசித்து அப்பனே இதையாவது நீங்கள் கண்டுபிடித்து..... நிச்சயம் தன்னில் கூட பின்பு யான் உரைப்பேன். அப்பனே.

வஜ்ர வாராகி இந்த ஆலயத்தின் மகிமையை கூறுங்கள் குருதேவா!!!

அப்பனே வாக்கிலே உரைத்து விட்டேன் முன்பே... பார்வதி தேவி கால் பதித்து.. என்று ...
(இந்த ஆலயமும் பார்வதி தேவி தன் கால்களை பதித்த இடம்) 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே இங்கு வந்தால்.. சில மனப் பிரச்சனைகள் நிச்சயம் போகுமப்பா... நிச்சயம் சிலருக்கு மனம் மாறிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே அவையெல்லாம் நீங்குமப்பா... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட ஏராளம் என்பேன் அப்பனே.. கலியுகத்தில் அப்பனே அதாவது பில்லி சூனியங்கள் என்பேன் அப்பனே ... இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இத் தேவி அழித்து விடுவாள் என்பேன் அப்பனே.... இங்கு வந்தால் அப்பனே.


அடியவர்கள் கைலாச தரிசனம் செய்யும் பொழுது சில புகைப்படங்களை எடுத்தனர் அப்பொழுது சில புகைப்படங்களில் கைலாய மலைக்கு மேலே சில விசித்திரமாக பறக்கும் தட்டுகள் பறப்பது போன்று சில புகைப்படங்களில் பதிவாகி இருந்தது அதைப்பற்றி குருநாதரிடம் கேட்ட பொழுது 


அப்பனே யான் முன்பே சொன்னேனே.... மேலிருந்து தூதர்கள் சித்திர குள்ளர்கள் அதாவது இறங்கி வருவார்கள். இங்கு அடிக்கடி வந்து சென்று கொண்டே இருப்பார்களப்பா அவர்கள் தானப்பா அது என்று குருநாதர் உரைத்தார்.

மேலும் ஆண்கள் பெண்கள் அனைவரும் இடுப்பில் அரைஞான் கொடி அதாவது மணி மேகலை கட்டிக் கொள்கின்றார்கள் சிலர் நூல் கயிறினை பயன் படுத்துகிறார்கள் இதனைப் பற்றி குருநாதரிடம் சந்தேகமாக கேட்ட பொழுது 


அப்பனே இடுப்பில் கட்டிக்கொள்வதற்கு வெள்ளி சிறந்தது... அதாவது வெள்ளியில் அரைஞாண் கொடி இப்படி ஆண்கள் பெண்கள் அனைவரும் கட்டிக் கொண்டிருந்தால் உடம்பிற்கு நல்லது. வயிற்று இடுப்பு பாகங்கள் உள் உறுப்புகள் பலமாக இருக்கும்... என்று கூறினார்.

(ஏற்கனவே அனைவரும் இரவில் உறங்கும் பொழுது தொப்புளில் நல்லெண்ணெய் ஓரிரு துளி விட்டு உறங்குவது உடம்பில் வயிற்றில் உள்ள செல்களுக்கு நல்லது என்று குருநாதர் கூறியிருக்கின்றார் அதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்)


அதுமட்டுமல்லாமல் சில மரப் பிசின்கள் அதாவது மர கோந்து! உண்ணுவதற்கு ஏற்றவையா??? உதாரணத்திற்கு பாதாம் பிசின் நீரில் ஊற வைத்து உண்ணுகிறார்கள் அதே போன்று ஆன்லைன் வர்த்தகத்தில் நாவல் மர பிசின் போன்றவை விற்பனைக்கு வருகின்றது இவற்றை வாங்கி உண்ணலாமா??? என்று குருநாதரிடம் கேட்டதற்கு 

அதாவது நாவல் மரத்தின் பிசின் வேப்ப மரத்தின் பிசின் சிலாஜித் எனப்படும்.. பாறை கசிவு...இவை உட்கொள்வது நல்லதா?? இவை எல்லாம் முந்தைய காலத்தில் நடைமுறையில் இருந்தவையா??? என்று குருநாதரிடம் பணிவாக கேட்டதற்கு..

குருநாதர் அப்பனே இவையெல்லாம் சிறிதளவு நீரில் கலந்து ஊறவைத்து உட்கொள்ளலாம் அப்பனே இவையெல்லாம் உடலுக்கு அதிக சக்திகள் தரும் என்று குருநாதர் வாக்குகளில் கூறினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 29 August 2025

சித்தன் அருள் - 1927 - அன்புடன் அகத்தியர் - கைலாசம் வாக்கு!






10/8/2025 அன்று கைலாயத்தில் ஈசனார் பார்வதி தேவியார் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: கைலாய மலை .

எம் இடத்தில் இருந்து கொண்டே... எம்மிடத்தில் இருந்து கொண்டே.... வாக்குகளை ஈட்டுகின்றேன்.. மகேஸ்வரனே!!!!

இன்னும் எண்ணற்ற திருடர்கள் வருவார்கள்!!!

எனை நமச்சிவாயா!! என்று சொல்வார்கள்!!

ஆனாலும் யான் விட்டு விடுவேன்!!!

இதை பயன்படுத்திக் கொண்டு... அதாவது நமச்சிவாயன் ஒன்றும் செய்யவில்லையே!!!... பின் இன்னும் நாம் தவறுகள் செய்வோம் என்று பக்தன் ருத்திராட்சத்தையும் அணிந்து இன்னும்... விபூதியையும் பூசுகின்றேன்... என்றெல்லாம் சொல்லி நடிப்பான்! 

ஆனாலும் விட்டு விடுவேன்!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்று புரியாமல் மனிதன் வாழ்வான்... கலியுகத்தில்!!!

ஆனாலும் அவனை எப்படி சாய்ப்பது???.. என்பதையெல்லாம்!!

ஆனாலும்.. ஈசனை பற்றி அதாவது என்னைப் பற்றி... அனைவரும் உணர்ந்ததே!!!!

நிச்சயம் அன்னையும் பிதாவும்.. முன்னறி தெய்வம் என்று... நிச்சயம் நீங்கள் அறிந்ததே!!!

இங்கு சான்றாகவே விளக்குகின்றேன்!!!

இதனால் அனைத்தும் கொடுக்க யாங்கள் தயார்!!!... இங்கிருந்தே தன் கைலாய மலையில் இருந்தே.. சொல்கின்றேன். 

ஆனால்... வரும் காலத்தில் கலியுகத்தில்... இன்னல்கள் அதிகமாக!!!

இதனை காக்கவே!!!.. பல மலைகளில் ஏறி ஏறி... உங்களை.... பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்!!

ஏன்? பக்திக்கு நீங்கள் வருகின்றீர்கள்???? என்பதை யான் அறிவேன்!!!

திருடுவதற்காகவே வருகின்றீர்கள்!!!

மீண்டும் சொல்வேன்!!!
கைலாயத்திலிருந்து சொல்கின்றேன்!!

ஏன் பக்திக்கு??... நமச்சிவாயா!!!. என்று. என் பெயரை.. உச்சரிக்கின்றீர்கள் என்றால்... திருடுவதற்கே!!!

பின் நீங்கள் மனசாட்சி உள்ளவர்களா???.. என்று நீங்களே ஒரு முறை... உங்கள் மனதை அதாவது... உங்கள் மனதின் மீது கையை வைத்து தொட்டு... நிச்சயம் செப்புங்கள் பார்ப்போம்!!

நிச்சயம் ஒவ்வொரு மனதையும்...யான் ஆராய்வேன்!!!. ஏன்? எதற்கு? 

(படைத்து) அனுப்பியவன் யான் தானே!!!!

அறிந்தும் அனைத்திற்கும் யானாகவே விளங்குகின்றேன்...

அறிந்தும் பல யோகிகள்... பல ஞானவான்கள்... பல ரிஷிகள் பல சித்தர்கள்... எங்கும் பின் அனுதினமும்... இங்கு வந்து தியானத்தில் அமர்ந்து...... என்ன? இப்படி எல்லாம் கலியுகத்தில்... நடந்து கொண்டிருக்கின்றதே!??

நீங்களும் அமைதியாக இருக்கின்றீர்களே!!!.. என்றெல்லாம்!!!


ஆனாலும் அமைதி காத்திடுவேன்!!!

சொல்லிவிட்டேன்!!!.. அறிந்தும்.. பிறர் அறியா வண்ணம் கூட...

பிள்ளையை (குழந்தைகளாகிய மக்களை) அதாவது விட்டு விடுவேன்... பின் அறிந்தும் அறிந்தும்...

உங்களுக்கு யான் என்ன கொடுக்கவில்லை??????

அறிந்தும் நல்லறிவை கொடுத்து அனுப்பி இருக்கின்றேன்...

இதை பல சித்தர்கள் எடுத்துரைத்து!!! எடுத்துரைத்து!!!

ஆனாலும் அவ் நல்லறிவை சரியாகவே பயன்படுத்துவது இல்லை!!!

ஆனாலும் நின்று பின் நீங்கள்... தவறு செய்வதற்கு முன்பே...யான் உணர்த்துகின்றேன்..

.இது தவறு என்று!!!

ஆனாலும் உணர்வதில்லையே!!!

மீண்டும் தெரிவிக்கின்றேன்... யாராவது மூலமாக ஏற்படுத்தி.. நிச்சயம் அதை தடுக்கின்றேன். 

ஆனாலும் போய்க் கொண்டு !! போய்க் கொண்டு!!

ஏன் ?எதற்கு? எவை என்று புரியாமல்!!... நீங்கள் கேட்டதை தான்.. யான் தருகின்றேன்!!!

ஆனாலும் நீங்கள் அறிந்தும் புரிந்தும்... நீங்களே ஒவ்வொன்றாக ஏற்படுத்தி ஏற்படுத்தி கொண்டதே!!!

அறிவீர்களா!???

செப்புவீர்களா!??... மனதை தொட்டு!!!

நிச்சயம் யான் செப்புவேன்.. என்னிடத்திலிருந்து!!!

திருடர்கள் தான் அதிகம்... இன்னும் உழைக்க முடியவில்லையே!!!

இன்னும் பின் அறிந்தும் கூட அறிந்தும் புரிந்தும்.. பின் அதாவது இவ் வேடம்... சாமியாராம்!?!?!?

எதை என்று புரிய நிச்சயம்... யான் நகைக்கின்றேன் நகைக்கின்றேன்!!!

சாமி யார்? என்றே தெரியவில்லை!!

அவனுக்கு! அவன் சாமியாராம்....!?!?!?!?!?

அறிந்தும் எப்படி? இவையெல்லாம் நம்புவது???

ருத்ராட்சை இடுவது!! கண்களை மூடிக்கொண்டு தியானங்கள் போல்!! நடிப்பது!!!
அதைச் செய்கின்றேன். இதைச் செய்கின்றேன் என்று சொல்வது!!!

நிச்சயம் அவனைக் காப்பாற்ற முடியவில்லையே!!!

அவன் மனைவியை காப்பாற்ற முடியவில்லையே!!!

அவன் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையே!!!

ஐயகோ!!!... அறிந்தும் என்ன பயன்???

இவையெல்லாம் காப்பாற்ற தெரியாதவனுக்கு... நிச்சயம் என் மீது பாசம்!?!?!?!?!...

நமச்சிவாயா என்று சொல்கின்றானே... நியாயமா??????
தர்மமா???????

அறிந்தும் மனதை தொட்டு சொல்லுங்கள்..

நிச்சயம் உன் மனைவியை பாருங்கள்.. இல்லத்தில்.. நிச்சயம் உன் தாய் தந்தையரை பாருங்கள் இல்லத்தில்... மகனை பாருங்கள் இல்லத்தில்!!

ஐயகோ !!!... இவையெல்லாம் விட்டுவிட்டு.... நடித்தீர்கள் என்றால்....!?

கைலாய மலையில் இருந்து சொல்கின்றேன்... அடிப்பேன் பலமாக! பலமாக! 


மீண்டும்.. நீங்கள்.  நீங்கள் உன்னை தானே... நமச்சிவாயா என்று சொன்னேன்!!!

ஆனால் அப்படி கூறக்கூடாது!!!

உன்னைத்தானே இன்னும் பல பாடல்களை... பாடினேனே!!!... எதற்கு ஈசன் என்றெல்லாம்!! நிச்சயம் கூறக்கூடாது!!!

அவரவர் செய்த தண்டனைகள்... அவரவர் செய்த பாவங்கள்... உடனடியாக கலியுகத்தில்..யான் வழங்குவேன்!!!

தவறான கண்ணோட்டத்தில் உற்றுப் பார்ப்பவர்களை... கண்ணை மங்க செய்து விடுவேன். 

சொல்லிவிட்டேன்!!!

தவறான வார்த்தைகளை காதில் கேட்பவனை... பின் காதில் பின்... மாயமான நோயை.. ஏற்படுத்துவேன்!!!

தவறான நிச்சயம் தன்னில் கூட.. உச்சரிப்பவனை... பற்களே இல்லாமல் செய்து விடுவேன்!!!

பின் அறிந்தும் இன்னும் பல... வழிகளில் கூட அறிந்தும் புரிந்தும்... பொய் சொல்லுபவனை கூட நிச்சயம்... பின் இருதயத்தில்... அறிந்தும் புரிந்தும்... சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவேன். 

அவை மட்டும் இல்லாமல் நடுக்கங்களை.. ஏற்படுத்துவேன்... அவை மட்டும் இல்லாமல்... இன்னும் பின் சரியாக நீங்கள்.. இன்னும் உண்ணும் உணவு அதாவது... இனிப்பு அனைத்தும் அறுசுவை உணவு உண்ணாதவாறு யான் செய்து விடுவேன். 

சொல்லிவிட்டேன்.. கயிலாயத்திலிருந்து!!!


பக்தர்கள் பின் கோடி கோடியாகவே நிச்சயம் தன்னில் கூட நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்... நமச்சிவாயா நமச்சிவாயா என்று சொல்லி!!!

ஆனால் நீங்கள்... மனிதனிடத்தில் நடிக்கலாம்... ஆனாலும் பின் என்னிடத்தில்... நடிக்க முடியாது!!!
அறிந்தும் சொல்லிவிட்டேன். 

ஏன் எதற்கு இன்னும் சித்தர்களை... அனுப்பிக்கொண்டே இருக்கின்றேன்!!!

பின் செல்லுங்கள் மனிதனை திருத்துங்கள்!!

திருத்த முடியவில்லை என்றால் அடியுங்கள்!!! என்றெல்லாம்!!!

ஆனாலும் திருந்தவில்லையே!!!

பின் நமச்சிவாயா என்று சொல்லிவிட்டால்... அனைவரும் ஒன்றே!!!

ஆனால் ஒருவன் நமச்சிவாயா... என்று சொன்னால்..... மற்றொருவன்... அவன் பொய்யன் என்று கூறுகின்றான்.... இவன் மற்றொருவனை பொய்யன் என்று கூறுகின்றான்.... இவன். 

ஆனாலும்... ஒருவனை நிச்சயம் தன்னில் கூட.... யான் படைத்தவனை குறை கூறும் தகுதி... யாருக்கும் இல்லை!!!!

சொல்லிவிட்டேன்!!!

அவ்வாறு குறை கூறுபவன் நிச்சயம் தன்னில் கூட... மனிதனுக்கு அதாவது மனிதனாக வாழ தகுதியற்றவன்... தகுதியற்றவன். 

ஏது எதை என்று புரியாமல்... தவித்துக் கொண்டிருக்கின்றீர்கள் 

அதாவது எவ்? சக்தி... பார்வதி தேவியின் சக்தியை விட!!!

பார்வதி தேவிக்கு சக்திகள் அதிகம் கொடுத்துள்ளேன்!!!
அவ் சக்தியை விட பின்.. எது சிறந்தது??? இங்கு!!!!

இன்னும் இன்னும் பூசைகள்... புனஸ்காரங்கள்... என்ன ஏது அறிந்தும் கூட நிச்சயம்... அன்பில்லாமல் செய்தால்... யான் எதையும் ஏற்கப்போவதில்லை!!!

சொல்லிவிட்டேன்!!!

ஆனால்... கேட்டால் ஈசனை வணங்கினால்... நிச்சயம் தரித்திரம் வரும் என்று!!!

அதாவது இன்னும் மேலே சென்று..... நிச்சயம் ஈசனை இல்லத்தில் வைக்கக்கூடாது.. என்று!!!

அடடா!!!..... படைத்தவன் எதை என்று புரிய!!!!
படைத்தவன் யார் என்று தெரியாமலே!!!
ஏன் ?எதற்கு?.. இவையெல்லாம்... மனிதனிடத்தில் விட்டுவிட்டேன்... செல்லக் குழந்தைகள் என்று என்று!!

ஆனாலும் கடைசியில் பார்த்தால்... மனிதன் என் தலை மேலே... காலை வைக்கின்றானே!!!!!!!
அதுதான் நிச்சயம் தன்னில் கூட!!!!

பார்வதி தேவி பல அவதாரங்களில்.. பல அவதாரங்களில் வந்து கொண்டிருக்கின்றாள். 

தற்பொழுது வராகி எனும்... பின் அவதாரத்தை எடுத்து.. நிச்சயம் மனித குலத்தை காத்து... சில அரக்கர் கூட்டங்களை அழித்து அழித்து...

ஏன் எதற்கு நம்பியவர்களை பின்... நிச்சயம் யாங்கள் அதாவது.... அறிந்தும் பின் புரிந்தும்.... எதை என்று அறிய அறிய... தன் மகன் பின் முருகனும்... பிள்ளையோனும் (கணபதி) பின் அய்யனும் (ஐயப்பன்)... அறிந்தும் கூட பின் கைவிடப் போவதில்லை!!!

ஆனால் நிச்சயம் பெயரைச் சொல்லி... ஏமாற்றினாலே நிச்சயம் தண்டனைகள் உண்டு... நீங்கள் வெறும் கையோடு தான் பின் வணங்க வேண்டுமே தவிர!!

நிச்சயம் இன்னும் அழிவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது!!

அதை சித்தர்களே எடுத்துரைப்பார்கள்!!!
அதை தடுப்பதற்கும் வழிவகை செய்வார்கள். 

ஆனாலும் நிச்சயம் நீங்கள்.. பின் அதை ஏற்று... நடக்கவில்லை என்றால்... நிச்சயம் தன்னில் கூட..... சித்தர்கள் ஒருவருக்கு வந்து வாக்குகள் செப்புவதில்லை.....

அனைவரும் பின் எம் குழந்தைகளே என்று.. சித்தர்களுக்கு தெரியும்!!

அனைவர்களையும் கூட நிச்சயம் வரும் காலத்தில்.. கூட்டு சேர்த்து. எப்படி இயக்க வேண்டும்??... இக்கலி யுகத்தில் எப்படி? வாழ்ந்தால்? நன்மைகள் பெற வேண்டும்... என்பதையெல்லாம்... அறிந்து தானாகவே... செப்புவார்கள் .. அறிந்தும் புரிந்தும். 

மனிதனே!!!.. பல சக்திகளை கொடுத்துள்ளேன்.. பல சக்திகள் கொடுத்துள்ளேன்!!!

ஆனாலும் ஏன் நீங்கள் பயன்படுத்துவதில்லை??? சொல்லுங்கள்???

எதை? யார் மீது தவறு???

இன்னும் கலியுகத்தில் குறுக்கு வழியில் குறுக்கு வழியில்.. சம்பாதித்து சம்பாதித்து... எதை என்று புரியாமலும்... எதை என்று அறியாமலும் அனைத்தும்.. சேர்த்து வைத்து கடைசியில்...அது பிரயோஜனம் இல்லாமல் போய்விடுகின்றது!!

ஆனாலும் உண்மை நிச்சயம் சத்தியம் ஜெயிக்கும்

தர்மத்தை கடைபிடியுங்கள்... நேர்மையாக வாழுங்கள்!!!

இவையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு.. சொல்ல நிச்சயம் அறிந்தும்... யான் கடமைப்பட்டவனா??? என்பதையெல்லாம் நினைத்தால்... நிச்சயம் தன்னில் கூட!!

ஏனென்றால்... என்னிடத்தில் வந்து விட்டார்கள் !!

இதனால்.. யான் அறிந்தும் நிச்சயம் பின் வாக்குகள்.. பின் இட்டே ஆக வேண்டும்.. என்பது என் எண்ணி வந்து விட்டார்கள்.

இதனால்  ஈட்டியே ஆக வேண்டும் வாக்குகளை!!!

இதனால் தான்... இன்னும் அறிந்தும் பல.. கட்டிடங்கள் நிச்சயம் சரியப் போகின்றதே!!!

நிச்சயம் இதற்கும் சித்தர்கள்..........



ஏன்? அறியும் மனிதர்களுக்கு.. உணர்த்துகின்றார்கள் பலர். 

நிச்சயம் அதை இதை என்று... பணத்தை வாங்கிக் கொள்கின்றார்கள்.. நிச்சயம் அப்பணம் என்பது எப்படி? ஏது? என்று... தன்னை வாழவைக்குமே தவிர... தன் பிள்ளைகளையும் வாழ வைக்காது.. தன் மனைவியையும் வாழ வைக்காது... தன் சொந்த பந்தங்களைக் கூட வாழ வைக்காது. 

ஏனென்றால் நிச்சயம்...யான் படைத்தேன் இங்கு மனிதனை!!!

எனக்கு மட்டுமே தகுதி இருக்கின்றது!!!!

பின் இப்படிச் செய் அப்படி செய்!!.. எவ்வாறு எப்படி பின் விதியை.. எங்கிருந்து மாற்றுவது என்பதை கூட.....

ஆனாலும் மற்றவர்கள் எடுத்துக் கூறினால் நிச்சயம்... அழிவுதான்!!

சொல்லிவிட்டேன்...

சொல்பவனுக்கும் அழிவு!!!
கேட்பவனுக்கும் அழிவு!!!

நிச்சயம் மனித குலங்களே!!!

அழகாக உங்களை அருளக்கூடிய... சித்தர்கள் இருக்கின்றார்கள்... காப்பாற்ற அருள் கூர்ந்து இன்னும்.. பின் தன் அறிந்தும்... புரிந்தும்!!!

ஏன்?... இவ்வளவு கேவலமாக..?????

. நிச்சயம் படைத்தேனே!!!..யான் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய..

ஏன் கேவலமாக நடந்து கொள்கின்றீர்கள்???

நன்றாகத்தான் படைத்தேனே!!!

இன்னும் நிச்சயம் தன்னில் கூட..‌ சரியாக மனசாட்சியோடு... வாழவில்லை என்றால்.. அனைத்தையும் அழித்துவிட்டு சென்று விடுவேன்!!

சொல்லிவிட்டேன் இங்கிருந்தே!!.. பின் என் கைலாயத்தில் இருந்தே சொல்கின்றேன் மீண்டும் மீண்டும். 

நல் மனதாக இருங்கள்.. அறிந்தும் புண்ணியம் செய்யுங்கள்.. நல் மனசாட்சியோடு பிறருக்கு நிச்சயம்.. தீங்கு செய்யாது வாழுங்கள்!!

அனைத்தும் யான் கொடுக்க தயார்!!!

பிள்ளைகள் நிச்சயம் அனைவருமே எங்கள் பிள்ளைகள் தான்.. நிச்சயம் தன்னில் கூட... எங்கள் பிள்ளைகளை யாங்கள் விட்டுவிடுவோமா?? என்ன!!!

ஆனால் பிள்ளைகள் சரியில்லாத நேரத்தில்..யாங்கள் நிச்சயம் அழிப்போம்!!

அனைத்தும் எங்களுக்கு சொந்தமானது.. அனைத்து உயிர்களுமே எங்களுடைய.. உயிர் போன்றது!!

இதில் கூட நிச்சயம் ஏதாவது சாகடித்து.. சாகடித்து!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட விதி பின்.. போகும்.... அவை தன் என்னிடத்தில் வந்து விடும்......

ஆனாலும் நீங்கள் நிச்சயம் தன்னில் கூட.. என்னால் படைக்கப் பட்டதை... நீங்கள் அழித்தால் நிச்சயம்... உங்களை பின் சிறுகச் சிறுக... நிச்சயம் பின்.. நோயை விட்டு நிச்சயம் அழித்திடுவேன். 
சொல்லிவிட்டேன். 

மாற்றுவேன் நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட மாற்ற முடியும்... ஆனாலும் நிச்சயம் பின் எல்லை மீறிப் போய்விட்டது கலியுகத்தில். நிச்சயம் தன்னில் கூட. 

இதனால்தான்.. சித்தர்கள்.. ஆங்காங்கு வந்து பின்... நல்முறையாக நல் மனதோடு செப்பி கொண்டிருக்கின்றார்கள் வாக்குகளை....

அவை மட்டும் இல்லாமல்... வேலோடு தன் மைந்தன் நிச்சயம் தன்னில் கூட... அனைத்து இல்லங்களிலும் திரிந்து கொண்டிருக்கின்றான்.... யார் ?யார் ?எவர்? என்ன தவறு? செய்கின்றார்கள்?? என்பதை!!

அவை மட்டும் இல்லாமல்.. ஞான பிள்ளையோன் தன் மகன்... எங்கெங்கு அநியாயங்கள் அக்கிரமங்கள் நடக்கின்றது.. எவை விதி இவன் என்ன.. செய்கின்றான்?? என்றெல்லாம்
அங்கங்கு நிச்சயம் இருக்கின்றான்!!!

அதைக் கூட நிச்சயம் புரியாமல்.. தெரியாமல் நிச்சயம் அப்படியே.. அதாவது எங்கெங்கோ பின்.. என் .பிள்ளை ஞான கணபதியோன் இருக்கின்றான்...

நீங்கள் கடந்து செல்கின்ற பொழுது.. அவன் பதிவு செய்து கொண்டே இருக்கின்றான்... எழுதிக் கொண்டே இருக்கின்றான்.... பிரம்மாவிற்கு இருக்கும் தகுதி அவனுக்கும் உண்டு!!!
இப்பொழுது.. நிச்சயம் தன்னில் கூட.

இதனால் தான் அங்கங்கு கணபதி.. நிச்சயம் இருக்கின்றான்... நிச்சயம் தன்னில் கூட. 

இவை விட்டுவிட்டு.. நிச்சயம் கடந்து சென்று விட்டால்.... நிச்சயம் அவனை வணங்குகின்றீர்களே... அவன் கணக்கு சரியாக எழுதுவான். 

ஆனால் அக் கணக்கில் இருந்து நீங்கள்.. தப்ப முடியாது!!

சொல்லிவிட்டேன் அறிந்தும்... இன்னும் ஞானிகள் சித்தர்கள்.. வாக்குகள் வந்து செப்புவார்கள்.. நல்லோர்களை உயர்த்தி அறிந்தும் புரிந்தும்.. இன்னும் உலகத்தை பின்.. காப்பாற்ற நிச்சயம் சித்தர்கள் ஓடோடி.. வந்து கொண்டே இருக்கின்றார்கள்...

தவறு செய்யாது அறிந்தும் குழந்தைகளே... நல்மனதாகவே இருங்கள்...யான் கொடுக்கின்றேன் அனைத்தும் உங்களுக்கு.... பின் அதாவது அறிந்தும் புரிந்தும் கூட...


பார்வதி தேவியார்: 

தேவாதி தேவனே!!!... நிச்சயம் நில்லுங்கள்!... பின் இவ்வளவு சொல்கின்றீர்களே!!!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட.

நிச்சயம் குழந்தைகள் அனைவருமே பின் நன்றாக இருப்பார்கள்.. நிச்சயம் தன்னில் கூட. 

யான் பூலோகத்தில் நிச்சயம் தன்னில் கூட... வாராஹி... ஏற்றம் கொண்டு.. அனைவரையும் காத்தருளுகின்றேன்... இது சத்தியம்!!!

நிச்சயம் தன்னில் கூட... அனைவரின் மனதையும் குழந்தைகள்.. மனதையும் யான் மாற்றுவேன்... கைலாயத்திலிருந்தே உன் மீதே சத்தியம் வைக்கின்றேன்!!

இதோடு என்னோடு சித்தர்களும் இருக்கின்றார்கள்.. பின் பிள்ளை.. குரு அறிந்தும் புரிந்தும்.. முருகனும் கணபதியோனும் அய்யனும் இருக்கின்றான்... என்னிடத்தில். 

இதனால் மாற்றுவோம்!!
கவலைப்பட தேவையில்லை... அமைதியாக இருங்கள் தியானத்தில் இருங்கள். 
போதுமானது!!!

ஆசிகள் ஆசிகள் அனைவருக்குமே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 28 August 2025

சித்தன் அருள் - 1926 - அன்புடன் அகத்தியர் - மானசரோவர் வாக்கு - 2!





கைலாய மலை மானசரோவர் ஏரியில் வைத்து சித்தர்கள் ஈசன் பார்வதியுடன் உரையாடிய வாக்கு பாகம் 2 தொடர்கின்றது. 

இடைக்காடர்:

இடையன் பின் எந்தனுக்கும் கூட கோபங்கள்.... அண்ணாமலையிலேயே பல தவறுகள் நடந்த வண்ணம் இருக்கின்றது. 

அறக்கட்டளைகள் தொடங்கி அதன் மூலம் அன்னதானத்தை பின் இயக்குகின்றேன் என்று... பொய்கள் சொல்லி பணத்தை இன்னும் இன்னும் எதை எதையோ... பயன்படுத்திக் கொண்டு... நிச்சயம் அவன் பெரியவன் ஆகின்றான்...அவ் அரசியல்வாதி என்கின்றான்... இவன் என்கின்றான்... அவன் என்கின்றான்... எப்பொழுது!!!...

 ஆனால் யான்!!

அறிய சொல்கின்றேன் நிச்சயம்... இடைக்காடன் அறிந்தும் புரிந்தும்... கைலாயத்தில் இருந்து எவை என்று கூற... நீ நிற்கின்றாயே தேவாதி தேவனே!!!


நிச்சயம் முதலில் பின் அவன் குழந்தைகளிலிருந்து ஆரம்பிப்பேன்... நிச்சயம் யார் எவை என்று அறிய... அவர்கள் மனைவி மூலம் ஆரம்பிப்பேன்... அவர்களுக்கெல்லாம் கெடுதல்களை கொடுத்து நிச்சயம்... அவனை நிற்க வைத்து.. நிச்சயம் கொல்வேன் சொல்லிவிட்டேன்... இங்கிருந்து கைலாயத்திலிருந்து... கைலாய நாதனே சொல்லிவிட்டேன்!! சொல்லிவிட்டேன்!!!


அறக்கட்டளைகளை தொடங்கி தொடங்கி நிச்சயம்... நிச்சயம் எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றார்கள்.... 


இவந்தன் பிழைக்கட்டும் ஆனால்... எவன் தொடங்கினானோ அவன் பிழைக்கட்டும் முதலில்.... ஆனால் கிள்ளி எறிவேன்.. முளையிலே...


பின் அவன் பிள்ளைகளையும் கூட அவர்கள் மனைவிகளையும் கூட... எவ்வாறு என்பதையெல்லாம் நோய்களை ஏற்படுத்தியே தீருவேன்!!


ஏனென்றால் இவர்கள் மூலம் பல.. கோடி மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.....


 உண்மை ஞானத்தை தெரியவில்லையே!!!


புரியவில்லையே பின் நிச்சயம்... தன்னில் கூட கைலாய நாதனே... பின் கைலாய தேவியே!!!

நிச்சயம் பின் அதாவது... பின் உன்னிடத்தில் இருக்கும்... எதை என்று புரிய.... நிச்சயம் பின் ஆதங்கத்தில் பேசுகின்றேன்.. பின் அண்ணாமலையிலேயே யான் இருந்திருந்தேன்!!

ஆனால்....... இப்பொழுதெல்லாம்... என்னென்ன தவறுகள்????... நிச்சயம் பின் அடுத்தவன் மனைவியை அழைத்து வருகின்றான்... உன் முன்னே !!!.... இது எவ்வாறு நியாயம்??? 

எதை என்று புரிய!!!

நிச்சயம் தன்னில் கூட பின்... வரும் காலத்தில் நிச்சயம் எதை எதையோ.... தவறு செய்துவிட்டு!!!... நிச்சயம் கொன்று (கொலை செய்து விட்டு) விட்டும்... அண்ணாமலைக்கு வருகின்றான்!!! நிச்சயம் பிறர் சொத்தை அபகரித்தும்... வருகின்றான்!!

என்ன நியாயம்????

நிச்சயம் யான் விடப்போவதில்லை.... நிச்சயம் அங்கேயே... அமுக்குகின்றேன்... பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்...


மூக்குப்பொடியான் இருக்கின்றான் அல்லவா!!!!!!


(மூக்குப்பொடி சித்தர் ஜீவசமாதி) 


அங்கு தான் யான் இருக்கின்றேன்!!!... ஒருவன் ஒருவனை கூட அங்கு நிச்சயம்.. பின் அதிக அளவு... இப்படி செல்கின்ற பொழுது யான் நிச்சயம்... பார்த்து பார்த்து... அங்கேயே தண்டனைகள் கொடுத்து.. அனுப்பி விடுவேன். 


ஆனாலும் அண்ணாமலைக்கு... வந்தேனே ஒன்றும் நடக்கவில்லையே!!!


இவ்வாறு ஆகிவிட்டதே... யாரும் பின் நிச்சயம்... இவ்வாறாகவே சொல்லக்கூடாது..


இங்கிருந்தே யான்.... தேவியே பின்... கைலாய தேவியே!!! கைலாய நாதனே!!!

இங்கிருந்து நான் வரங்களை பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.. இப்பொழுதிலிருந்து!!!


பார்ப்போம் இனிமேலும் கூட!!!


மனிதனை இப்படியே விட்டுக் கொண்டே விட்டுக் கொண்டே... இருந்தால் எதை எதையோ.. என்று தெரியாமலே அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய அறிய. 





குருநாதர் அகத்திய பெருமான்:


நிச்சயம் பின் இடையனே நில்லும்!!! பின் அகத்தியன் இருக்கின்றேன்!!... நிச்சயம் உந்தனுக்கும் கூட அறிந்தும் கூட இவ்வாறாக... சிறிது செல்லட்டும் ஏ மனிதன்!!!... அவ்வாறாக பிழைத்துக் கொள்ளட்டுமே!!!


நிச்சயம் பின் கடைசியில் அடிப்போமே!!!......



இடைக்காடர்: 


நிச்சயம் அகத்தியரே... பின் இதில் நீங்கள் தலையிடாதீர்கள்!!!.. நிச்சயம் தன்னில் கூட.... இவ்வாறாக பின் போகட்டும் போகட்டும்... என்று நீங்கள் மனிதனை விட்டு.. ஒழித்ததால்தான் இவ்வாறு பிரச்சனைகளே ... வந்தது!!!


(குருநாதர் அகத்தியர் பெருமான் மனிதர்களை கருணையோடு சரி போகட்டும் பிழைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டதால்) 



இதனால் நீங்கள் நிச்சயம் இதில் தலையிடக்கூடாது...


நிச்சயம் எந்தனுக்கும் ஒரு வரம் வேண்டும்.. வரம் வேண்டும் சொல்லிவிட்டேன்... பார்வதி தேவியே!!! பின் ஈசனாரே!!!... எந்தனுக்கு நிச்சயம் இக்கட்டளை நிச்சயம் தன்னில் கூட... நிறைவேற்றி தாரும் நீங்களே!!!!



ஏனென்றால் பின் அண்ணாமலையிலே!!! நடக்கின்றது மிகப்பெரிய !!! மிகப்பெரிய !!! மிகப்பெரிய !!! பின் தவறுகள் நடக்கின்றது!!!


நிச்சயம் எங்கெங்கோ அழைத்துக் கொண்டு வந்து நிச்சயம் தன்னில் கூட... பின் விடுதியில் தங்கி... எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றான். 



இவையெல்லாம் யான் பார்க்க கூடாது!!!



 நிச்சயம் பின் அதாவது என் மனதில் இருக்கும்... என் தந்தையும் தாயும்... அதாவது பார்வதி தேவியும்... ஈசனாரும் இருக்கும் இடத்தில்.. பின் அனைத்தையும் எடுப்பேன் வரும் காலத்தில்... 


பின் நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறு அழிக்க வேண்டுமோ??????... அவ்வாறு அழித்து... நல்லோர்களையும் கூட... உயர்வு பெறச் செய்து.... நிச்சயம் அண்ணாமலையில் ஓர்.. கொடியோடு பின் வாழவைப்பேன். 

சொல்லிவிட்டேன். 

தாய் தந்தையரே!!!.. யான் வாழ வைக்க போகின்றேன் அவ்வளவுதான்!!..


நிச்சயம் இதை எந்தனுக்கு.... அருளாகவே (வரம்) நிச்சயம் தன்னில் கூட... நீங்கள் நிச்சயம் பின்... தராவிடிலும் யான்... நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எதை என்று.. கூட ஞானத்தின் வழியாகவே நிச்சயம் தன்னில் கூட...


பின் ஆனாலும் தவத்தை.. செய்தால் நிச்சயம் தன்னில் கூட தவம் செய்து கொண்டே இருந்தால்... என் ஈசன் மகிழ்ந்து பின் எந்தனுக்கு... வரம் அளித்து விடுவான்!!


இவ்வளவு பாசங்களா என்று!!

நிச்சயம் அளிப்பான். 


இவ்வாறு தான்.. பின் அறிந்தும் புரிந்தும் கூட..




அகத்தியர் பெருமான்:


பின் இடையனே நில்லும்!!! நில்லும்!!.. பின் அகத்தியன் பேசுகின்றேன்!!


நிச்சயம் யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். 




இடைக்காடர்:


அகத்தியரே!! நீர் நில்லும்!!! முதலில்!!!

நீர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள்....


ஆனால் என்ன முயற்சி செய்தீர்கள்????? இதற்கெல்லாம்???



அகத்தியர் பெருமான்:


நிச்சயம் பின்... இடைக்காடனே!!!... அதாவது சிறிது நிச்சயம் மனிதனுக்கு அனுபவத்தை கொடுப்போமே!!!! பின்பு அவ்வாறு செய்வோம் என்று!!



இடைக்காடர் சித்தர்: 


அகத்தியரே நிச்சயம் அறிந்தும் இவ்விஷயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள். 


ஏனென்றால் நிச்சயம் இப்படியே விட்டு விட்டால் நிச்சயம் தன்னில் கூட... மனிதன் பின் எவ்வளவோ.. அழித்து விடுவான்!! எதை என்று புரிய!!


இதனால் பின்... அதாவது உங்களை வணங்குகின்றேன்.. அகத்தியரே உங்களை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கின்றேன். 

அன்பு பின்பு அதாவது.. உங்களுக்கு அனைத்தும் தெரியும்... அதனால் நிச்சயம் தன்னில் கூட!!!...


ஒரு சந்தர்ப்பத்தை அதாவது ஈசனிடத்தில் கேட்கின்றேன் நிச்சயம் தன்னில் கூட... பின் இப்பொழுது இருந்து!!!


தந்தையே!!! தாயே!!!.. நிச்சயம்... உன்னை அழிவு நிலைக்கு எடுத்துச் செல்ல மாட்டேன் ஏனென்றால்!!..

அண்ணாமலை!!... வரும் காலத்தில் பின்... அழிவு நிலைக்கு செல்கின்றது...


சத்தியமாக சொல்கின்றேன் கைலாயத்திலிருந்து!!!


நிச்சயம் என் அண்ணாமலையை காப்பேன் காப்பேன்!!


இவை பின் என் இல்லம் என் இல்லம்... அண்ணாமலை என் இல்லம் சொல்லிவிட்டேன் இங்கிருந்தே!!!... யான் விலகுகின்றேன்.. இப்பொழுது சொல்லிவிட்டேன்!!! ஈசனாரே!!! பார்வதி தேவியே!!! அறிந்தும் நிச்சயம்!!



ஈசனார்: 


தேவியே!!!... பார்த்தாயா!!!

இடைக்காடன் என்ன கோபம்? கொண்டிருக்கின்றான்!!

நிச்சயம் அறிந்தும் புரிந்தும்... எதை என்று அறிய அறிய...


இருப்பினும்... நிச்சயம் அவன் எண்ணத்தை... நிச்சயம் தன்னில் கூட பின்... பக்குவங்களாக மனிதனுக்கு கொடுக்கட்டும்... நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று புரிய. 


ஏன் எவை என்று அறிய... இன்னும் இன்னும் எவை என்று புரிய... 



அழுக்காணி சித்தர் வருகை:


பின் அதாவது ஈசனாரே!!! அழுக்காணியே பேசுகின்றேன்!!!


ஏன் எதற்கு எவை என்று புரிய... பின் மனிதனின் அழுக்குகள் தான்.. எவ்வளவு???? எவ்வளவு???


எதை என்று புரிய அதாவது மனிதனுக்கு நிச்சயம் உடம்பை கொடுத்து விட்டாய். 


ஆனால் உடம்பினில் பின் எவ்வளவு அழுக்குகள்.. ஆனால் மனிதன் நிச்சயம்... நீராடினால் அவ் அழுக்குகள் போய்விடும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனே!!!.. பின் மனிதன்!!!


பின் எவ்வளவு புத்தி கெட்ட மனிதனாக இருக்கின்றான். 


ஆனால் மனதில் உள்ள அழுக்குகள்... போகவில்லையே!!!


கைலாய நாதனே!!

கைலாய தேவியே!!

எப்பொழுது அவையெல்லாம் நீக்க போகின்றீர்கள்???


நிச்சயம் பின் கலியுகத்தில்... மனிதனின் மனதில் அழுக்குகள் பொங்கிக் கொண்டே வருகின்றது!!


அதற்கு யான் என்ன செய்யப் போகின்றேன்???


எதை என்று அறிய அறிய ஈசனாரே!!!

நிச்சயம் தன்னில் கூட 

பார்த்து பார்த்து பின் கண்ணீர் வருகின்றது!!

ஏன் எதற்கு என்றெல்லாம்.. தெரியாமல் கூட!!!


ஏனென்றால் கலியுகத்தில் பின் மனிதனின் அழுக்குகள்.. போட்டி பொறாமைகளை... மற்றவர்களை இழிவு படுத்தி... நிச்சயம் தன்னில் கூட பின் ஏறி மிதித்து... முன்னுக்கு வருவது. 


நிச்சயம் எவை என்று புரிய... இன்னும் அநியாயங்கள் அக்கிரமங்கள் நடந்து கொண்டே... இருக்கின்றது..



ஈசனார்:


நிச்சயம் பின் அழுக்காணியே நில்லும்!!!


உந்தனுக்கு நிச்சயம் தன்னில் கூட... ஒரு வரத்தை தருகின்றேன். 

நிச்சயம் தன்னில் கூட புதிதாகவே!!!


நிச்சயம் மனதில் உள்ள இன்னும் அழுக்குகளை நீக்க செய்து... அண்ணாமலையில் வருபவருக்கெல்லாம்!!!


இடைக்காடன் கோபித்து சென்று விட்டான்!!.. அதைச் செய்கின்றேன் என்று!!


ஆனாலும் நீயும் கூட பின் வந்தால்... மனிதனின் உள்ளே இருக்கும் அழுக்குகள் நிச்சயம்... தூய்மை செய்து அப்படி... தூய்மை செய்ய முடியவில்லை என்றால்... சில கஷ்டங்களை கொடுத்து... அனுபவ பாடத்தை கொடு!!!


போதுமா!!!



அழுக்காணி சித்தர்:


ஈசனாரே!!!.... இவ்வளவு கஷ்டப்பட்டு... உன்னை பார்த்து பார்த்து இவ்வளவு... ஆண்டுகள் இப்படி.... இவ்வளவு சிறிய!!..... இவ்வளவு சிறிய!!...(வரமா)... இவ்வளவுதானா எந்தனுக்கு??? கொடுக்கின்றீர்கள்!!


நிச்சயம் பார்த்து பார்த்து அலுத்து விட்டேன்... ஈசனாரே... மனிதனின் செய்கைகளை!!!


நிச்சயம் உண்மையான பக்தி இல்லை !

அங்கு அண்ணாமலைக்கு வருபவர்களுக்கெல்லாம். 


ஏதோ? எவனோ? ஒருவன்!????..... அங்கு அண்ணாமலையில் சுற்றுங்கள் என்று சொல்லிவிடுகின்றான்!!!


அதனால் சுற்றுகின்றார்கள்... பின் அங்கு சுற்றினால் உந்தனுக்கு.. திருமணம் ஆகும் என்று!!!


சுற்றுகின்றான்!!


அங்கு சுற்றினால் பின் அடுத்தவன் மனைவியை அபகரிக்கலாம் என்று!!


சுற்றுகின்றான்!!


அங்கு சுற்றினால் பாவம் போகும் என்று!!!


பின் சுற்றுகின்றான்!!!



ஆனாலும் நிச்சயம் உன்னை அறியவில்லையே ஈசனாரே!!!!

உன் நிலைமையை அறியவில்லையே ஈசனாரே!!!


உன் அன்பை நிச்சயம் பின் அறியவில்லையே!! 


அவ்வாறெல்லாம் சுற்றுபவனுக்கு நிச்சயம் யான் தண்டனை கொடுப்பேன்!!.. யானும் நிச்சயம் பின் ஏதாவது.. இங்கு பேசிக்கொண்டே இருந்தால்... நிச்சயம் வேண்டாம்!!. வேண்டாம்!! என்று நீங்கள் சொல்லிவிடுவீர்கள்!!.. இதனால் நிச்சயம் யானும் விலகிக் கொள்கின்றேன்!!... இதை செய்யத்தான் போகின்றேன்!!.. அங்கே அண்ணாமலையில் நிச்சயம் அடிக்கத்தான் போகின்றேன்!!! செல்கின்றேன் சென்று வருகின்றேன்!!!... அம்மையே!!!... தாயே!!!

தாயே என்றும் அன்னையே என்றும் இங்கு... நிச்சயம் பின் பார்வதி தேவியே என்று ஈசனையும் கூட... எந்தனுக்கு இருவரும் ஒன்றே!!! ஒன்றே!!!



அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம்... பின் அறிந்தும்... எவை எவை என்று புரிந்து கொள்ள ஆள் இல்லையே... இங்கு!!!


பார்வதி தேவியார்:



நிச்சயம் தேவாதி!!! தேவனே!!!... எப்படித்தான்... ஒருவருக்கொருவர் சித்தர்கள் கையில் எடுத்துக் கொண்டால் நிச்சயம்... நீங்கள் என்னதான் செய்யப் போகின்றீர்கள்???



நிச்சயம் அதாவது தேவாதி தேவனே!!!.... இன்னொருவன் வருகின்றானே!!... இவன் என்னதான் பேசுகின்றான்... என்று பார்ப்போம்!!



போகர் மகரிஷி வருகை: 


கைலாய நாதனே!! போகன் பேசுகின்றேன்!!

நிச்சயம் அவனவனுக்கு.. அதாவது அவனவன் பின் செய்த தவறுகளால்... நிச்சயம் நோய்கள் ஏற்படுகின்றது. 


ஆனால் என்னுடைய மூலிகைகளை.. பின் எடுத்துக் கொண்டு சரி செய்து வருகின்றான் நிச்சயம் ஒருவன் கூட. 


அவந்தன் நிச்சயம் தன்னில் கூட!!.. போகட்டும் போகட்டும் என்று... விட்டுவிடுகின்றேன்! 


ஆனாலும் அவந்தன்.. இவ்வுலகத்தில்.. எதை எவை என்று புரிந்து கொள்ள!!!


ஆனாலும் பின் ஆனாலும் அறிந்தும் புரிந்தும் கலியுகத்தில்... இவ்வாறெல்லாம் நடக்க பின் அதாவது... நடந்து கொண்டே இருக்கின்றது என்பதற்கு... எந்தனுக்கு வேதனையாகத்தான் இருக்கின்றது!!!


ஆனால் முன்னொரு காலத்தில் பின் வரங்களை... பின் பெற்று வந்து விட்டானே!!... என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!



ஈசனார்:


அழகாக பின் போகனே!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட 

நல்லோர்களுக்கும் இங்கு நோய்கள் வருகின்றது கலியுகத்தில்...


ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட... தன்னிடத்தில் பின் இருப்பவர்களுக்கெல்லாம்... நிச்சயம் நல்லது பின் சொல்லாவிடிலும் இவைதன் வந்துவிடும். 


இதனால் நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் அறிந்தும் இதனால்... கலியுகத்தில் நோய்கள் நிச்சயம் தன்னில் கூட... காக்கப்படுவது சந்தேகமே!!


நிச்சயம் அறிந்தும் புரிந்தும் நோய்களால் தான் நிச்சயம்... மாண்டு போவான் என்பதை எல்லாம்... ஏற்கனவே நிச்சயக்கப்பட்டது. 


அதனால் என்ன செய்யப் போகின்றாய் போகனே!!!



போகர் மகரிஷி 


தேவாதி தேவனே!!! உத்தமனே!!!

அறிந்தும் அனைத்திற்கும் நீயே!!


இதனால் பின்... உன்னுடைய ஆசிகளோடு... நிச்சயம் தன்னில் கூட... ஏதோ நல்லவர்களையாவது காப்பாற்றிக் கொள்ள வரும் காலத்தில் நிச்சயம்... அதாவது என்னுடைய மந்திரத்தை.... அதாவது தற்பொழுதெல்லாம்... போகன் மருத்துவம்!!!

இன்னும் எதையெதையோ அகத்தியன் மருத்துவம் என்றெல்லாம்... சொல்லி சொல்லி பொய்களை சொல்லி சொல்லி... எதை எதையோ கொடுத்து... நிச்சயம் இன்னும் நோய்களாக்கிக் கொண்டே இருக்கின்றான். 


இதனால் என் அதாவது பக்தர்களுக்கு ஒரு ரகசியத்தை... செப்பப்போகின்றேன்!!!


குரு மந்திரத்தை எடுத்துரைக்கப் போகின்றேன். 


அதை நிச்சயம்... அதாவது ஆயிரம் தடவை சொல்லி.. சொல்லி அதாவது அறிந்தும் பின் இல் அவுஷதத்தை (மருந்து) உட்கொண்டால் மட்டுமே!!! நிச்சயம் பின்  மனிதன் பிழைத்துக் கொள்வான்!!!

என்பதையெல்லாம் நிச்சயம்... அடுத்தடுத்த வாக்கில் யான் சொல்லப் போகின்றேன்..


நிச்சயம் பின் தேவாதி தேவனே!!!... இதற்க்காவது வழி விடுவோம்!!! நிச்சயம்!!



ஈசனார்: 


சரி!!!!... சரி போகனே!!!

அழகாக நிற்கும் என் குழந்தையையும் (முருகனை) பார்த்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா!!!


நிச்சயம் தன்னில் கூட அவ் வரத்தை... நிச்சயம் கொடுக்கின்றேன்...


நீ எடுத்துரைக்கலாம் குரு மந்திரத்தை!!!... வரும் காலத்தில்!!!



போகர் மகரிஷி 


பின் சென்று வருகின்றேன்!!!... தேவியே!!!.. பின் தாயே பார்வதி தாயே!!! தேவாதி தேவனே!!! தந்தையே!!! நிச்சயம் தன்னில் கூட!!


ஏதோ என்னால் முடிந்தது... நிச்சயம் மனிதன் அதாவது பாவ கணக்குகளில் வீழ்ந்து இருக்கின்றான்..


ஆனால் காக்கப்படுவது.. நீங்கள் தான்!!!


ஆனாலும் நிச்சயம் என் குரு.. மந்திரத்தால் நிச்சயம்... பின் நல்லோர்களாவது காக்கப்பட்டு... நிச்சயம் அதன் மூலம்... தெளிவு பெற்று... உன்னிடத்தில் அழைத்து வருகின்றேன். 


நலம்!!!...



பார்வதி தேவியார்:


பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட... எதை என்று கூற அழகாக அனைவரும் பேசிக்கொண்டு பேசிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கின்றார்கள்... அகத்தியனே!!!!


நீர் மட்டும்... அமைதியாக இருக்கின்றீர்களே!!!... நிச்சயம் தன்னில் கூட என்ன? ஏது?.. எவை என்று புரிய!!!

நிச்சயம் அதாவது அன்னை பேசுகின்றேன்!!... அகத்தியனே சொல்லும்!!!



அகத்தியர் பெருமான்: 


தாயே நீங்கள் இருக்கின்ற பொழுது... எந்தனுக்கு என்ன கவலை??..... நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு நடத்தப்பட வேண்டுமோ?? ஈசன் நினைத்தாலே அதை யான் நிச்சயம்... அதாவது என் தந்தை தாயும்... என்ன நினைப்பீர்கள்??? என்ன அடுத்து பின் செய்வது? என்பதையெல்லாம் நிச்சயம் பின் அறிந்து...


அதாவது நீங்கள் மனதில் நினைத்தாலே யான் செய்து விடுவேனே!!!!!!


ஏன் எதை என்று புரிய... இதனால் ஒவ்வொரு மனதையும் கூட ஆராய்ந்து... வரும் காலத்தில் நிச்சயம்.. எடுத்துரைப்பேன்... நீ இப்படித்தான்!!! நீ இப்படித்தான்!! என்று!!!


விதியை நிச்சயம் தன்னில் கூட பின்... மாற்ற முடியாவிட்டாலும்... நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் புரிந்தும் கூட.. மாற்றிட நிச்சயம் தன்னில் கூட... வரங்களை அறிந்தும்... புரிந்தும் கூட எவர்.. ஏது என்று அறிய...


நிச்சயம் தாயே!!! தந்தையே!!! நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ!!! அதை யான் அறிவேன்!!

அதை யான் செய்து முடிப்பேன்.. அவ்வளவுதான். 


அமைதி காத்திருக்கின்றேன்!!


பின் நலமாக இன்னும்.. இன்னும் பின்... அறிந்தும் அழகாக.. பின் அனைவரும் பின் அதாவது... அறிந்தும் அறியாமலும்... செய்த பிழைகளை... நிச்சயம் தன்னில் கூட.. பின் பொறுத்துக் கொண்டு.. அனைவருக்கும் ஆசிகள்.. கொடுத்து விடுவீர் ! தேவாதி தேவனே!!!

மன்னனே!!!


நிச்சயம் இன்னும் அறிந்தும்... ஆனாலும் இவ் சக்தி இன்னும் பேசிக் கொண்டிருந்தால் (வாக்குகள்).. நிச்சயம் இவ் மைந்தனுக்கு.. நிச்சயம் அறிந்தும் சக்திகள்.... இதனால் அதாவது இன்னும்.. உடம்பு சக்திகள்.. பின் எதை என்று அறிய அறிய...


(கிட்டத்தட்ட 5000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் இல்லாத சூழ்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக்கொண்டு மூச்சு இழுத்துக் கொண்டு கடும் குளிரில் மானசரோவர் ஏரிக்கரையில் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் அய்யா வாக்குகள் ஓதினார்... இடைக்காடர் சித்தர் வந்த பொழுது கடும் ஆவேசத்துடன் கோபத்துடன் வாக்குகள் நல்கும் பொழுது... திரு ஜானகிராமன் ஐயா குரல் மற்றும் உடல் மொழி அப்படியே மாறிவிட்டது கடும் வேகத்துடன் ஆவேசத்துடன் வாக்குகள் வந்தது ஆக்சிஜன் குறைபாடு இருந்தாலும் அதை மூச்சு பிடித்துக் கொண்டு வாக்குகள் அதே வேகத்தில் ஓதி முடித்தார் திரு ஜானகிராமன் அய்யா. 


தன்னுடைய மைந்தனுக்கு இன்னும் இது போன்று வாக்குகள் தொடர்ந்து வந்தால்  அவருடைய உடலில் சக்திகள் தெம்பு இல்லாமல் போய்விடும் என்று குருநாதர் கருணையோடு வாக்குகள் உரைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். ஆசிர்வாதங்களோடு)




இதனால் அடுத்த வாக்கில் உனை  அழைக்கின்றேன் தேவாதி தேவனே... ஆசிகள் ஆசிகள்!!!

மானசரோவர்... கைலாச யாத்திரை பார்வதி தேவியாரின் அம்சமான மானசரோவர் ஏரி கரையில் வைத்து குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு!!

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!

நிச்சயம் தன்னில் கூட இங்கு இத்தனை பேர் வந்திருக்கின்றார்களே... ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... எங்கிருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட.. எதைச் செய்தாலும் நிச்சயம் தன்னில் கூட... ஈசன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். 

ஆனாலும் சில மனிதர்கள் வருகின்றார்கள் இங்கு பாவங்கள் போகும் என்று.

ஆனாலும் நிச்சயம் போகாது நிச்சயம் தன்னில் கூட!!!

நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் அவனவன் துன்பத்தை அவனவன் அனுபவித்து விட வேண்டும் ஏனென்றால்.. நிச்சயம் தன்னில் கூட ஏதோ பின்... அடித்து பலமாக.. பின் அறிந்தும் புரிந்தும் கூட பின்... அடி விழுகின்றது என்பதெல்லாம் ஈசனுக்கு தெரியும் ஆனாலும்.. இங்கு வந்து விட்டால் பிழைத்துக் கொள்ளலாம்... என்று ஏதோ மனதை மாற்றி அனுப்பி விடுகின்றான் அவ்வளவுதான். 

எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.. இங்கு வந்து இருப்பவர்கள் எல்லாம் முன் ஜென்மத்தின்.. தொடர்பே!! அதனால்தான் ஈசன் அழைத்துக் கொண்டே இருக்கின்றான்!!!

அப்பனே மானசரோவர் இதை பார்ப்பதே புண்ணியம் என்பேன். அப்பனே!!

இப்பொழுது தேவாதி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் கூட நீராடி கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே...

ஆனாலும் அப்பனே அமைதியாக நினைத்துக் கொண்டு.. நிச்சயம் கால்களை வைத்துக் கொண்டு.. நிச்சயம் தன்னில் கூட வணங்குங்கள்... அவர்களுடைய பார்வையும் ஆசீர்வாதமும் கிடைக்கும் அப்பா. 

அவ்வாறு அவர்கள் குளிக்கின்ற பொழுது இவ்வாறெல்லாம்... மந்திரங்கள் ஓதி கூச்சலிட்டுக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு கோபம் வந்துவிடும். 


(மானசரோவர் ஏரியின் கரையில். கைலாச யாத்திரை வந்திருந்த மற்ற மனிதர்கள் கத்திக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் நெருப்பை மூட்டிக்கொண்டும் சைனா காவல்துறை கட்டுப்பாட்டை மீதியும் தன்னுடைய செயல்களில் ஈடுபாடு காட்டிக் கொண்டிருந்தனர். 


மானசரோவர் புனிதமான ஏரி... அதில் தேவாதி தேவர்களும் ரிஷி முனிவர்களும் நீராடும் பொழுது இப்படி கூச்சலிட்டு கொண்டிருந்தால் அவர்களுக்கு கோபம் வரும் என்று குருநாதர் கூறினார். )



நிச்சயம் இவ்வாறு கூச்சலிட்டு எதை என்று அறிய அறிய எவ்வாறு கத்தினாலும் இறைவன்... பார்ப்பானா??? என்ன!!

அமைதியாக பின் சாந்தமாக வணங்கினாலே... அவர்கள் உங்களைப் பார்ப்பார்கள் அவ்வளவுதான்... ஆசிகளை சந்தோஷமாக... பார்க்கலாமே என்று கொடுத்து விடுவார்கள். 


ஆனால் இவ்வாறெல்லாம் கூச்சலிடக் கூடாது சொல்லிவிட்டேன்.. கைலாயத்தில்.



அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் 


ஈசனே அமைதியாக தான்.. இருக்கின்றானப்பா!! அவந்தன் கூச்சலிடவில்லை!!!


அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே இங்கு எதை என்று அறிய... இது பார்வதி தேவியின் உடம்பு அப்பா!!!... இதில் குளிப்பதே சில பாவத்தை உருவாக்கும் என்பேன் அப்பனே!!!


அதனால் நிச்சயம் தன்னில் கூட கால்களிலே இருக்க வேண்டும்... அவ்வளவுதான். 


(மானசரோவர் ஏரி பார்வதி தேவியின் அம்சம் ஏரிக்கரை அருகே இருக்கும் அலை நீர் நிலை நாம் அது பார்வதி தேவியின் கால்கள் அங்கே நின்று தொட்டு வணங்கி பிரார்த்தித்தாலே போதுமானது என்று குருநாதர் கூறுகின்றார்!! மான சரோவர் ஏரியில் மனிதர்கள் குளிக்கக் கூடாது பாவங்களை உருவாக்கும் என்று கூறி இருக்கின்றார்) 

எங்கு நீராட வேண்டும் என்றெல்லாம் இருக்கின்றதப்பா!!! இன்னும் காலங்கள் இருக்கின்றது அப்பா நிச்சயம் தன்னில் கூட!!!

இங்கு அனைவரும் ரிஷி முனிவர்களும் பறவைகள் ரூபத்தில் திரிவார்களப்பா!;!

அப்பனே இன்னும் உரைப்பேன் அப்பனே ஆசிகள்!!!!

Wednesday, 27 August 2025

சித்தன் அருள் - 1925 - அன்புடன் அகத்தியர் - விநாயகர் வாக்கு!




14/6/2025 சங்கட ஹர சதுர்த்தி அன்று மூத்தோன் பிள்ளையோன் விநாயகப் பெருமான் ஜீவநாடியில் வந்து உரைத்த வாக்கு.


வணக்கம் அகத்தியர்  அடியவர்களே உங்கள் அனைவருக்கும் மூத்தவன் முதல்வன் பிள்ளையோன் ஞான கணபதியின் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

வாக்குரைத்த ஸ்தலம்: மீர்காட் கணபதி ஆலயம் கங்கை கரை.காக்கும் சிவன் காசி.

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!

வைகாசி தன்னில் காசிக்கு செல்ல வேண்டும்... காசிக்கு செல்ல வேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்திருந்தார். 


ஏற்கனவே வைகாசி மாதம் காசிக்கு ஏன் செல்ல வேண்டும் என்பதை பற்றி... குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார். 

வைகாசி காசி முக்கியத்துவம்.

காசியில் முருகப்பெருமான் 

சித்தன் அருள் 1153 அன்புடன் அகத்தியர் கேதார் கார்ட். 

வாக்கில் முருகப்பெருமான் உரைத்திருந்தார்.


அகத்தியனோ மாபெரும்....!!! அகத்தியனுக்கு கூட இவைதன் பிடிக்கும் ஸ்தலம் (காசி).... அதனால்தான் என்னவோ!!!! பின் அவனுடைய சுவடியை (ஜீவநாடி) இங்கே அடிக்கடி வரவழைத்து கொண்டே இருக்கின்றான்.

இன்னும் ஏனைய சித்தர்களும் வருவார்கள்..!!! எவையென்று கூற இன்னும் பல ரிஷிகளும் இங்கே தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

அதனால் சாதாரணமாக வர முடியாது....

என் தந்தையின் அருள் இருந்தால் தான் இங்கே வரவும் முடியும்!!! காலடியும் வைக்கமுடியும்!!!

ஆனால் ஒரு வாக்கில் புசுண்டனவன் (காக புஜண்டர்) அழகாக உரைத்துவிட்டான்.....

காசிக்குச் செல்லுங்கள் என்று!!!!!!

[16/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி சித்ரா பவுர்ணமி அன்று திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் வாக்கில்..

 """"வைகாசி என்று சொல்கின்றீர்களே... அதுவே காசி...

அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...

மேற்க்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி. !!....என்று உரைத்திருந்தார்.
சித்தன் அருள் 1116 ல் வெளிவந்துள்ளது]



ஆனால் எத்தனை??? மனிதர்களுக்கு அவ் பாக்கியம்!!! கிடைத்ததென்றால்!!!! நிச்சயம் இல்லை...சில மனிதர்களுக்கே!!!!!

என்று முருகப்பெருமான் வாக்குகளில் கூறியிருந்தார்


சித்திரை மாதம் செய்யும் தான தர்மங்கள் சேவைகள் இவற்றின் புண்ணியங்கள் எல்லாம் சித்திரை மாதத்தில் சித்திரகுப்தன் அவரவர் புண்ணிய கணக்கில் எழுதுவார்.

அனைவருடைய புண்ணிய கணக்கு சித்திரை மாதம் துவங்கும். 



சித்தன் அருள் 1593.பதிவு எண்.22/4/2024 அன்புடன் அகத்தியர்.

சத்தியமங்கலம் பவானிசாகர் வீரபத்திர சோமேஸ்வரர் மங்களாம்பிகை ஆலயத்தில் குருநாதர் உரைத்த வாக்கில்.



சித்திரை மாதம் புண்ணியங்களை செய்து விட்டு வைகாசி மாதம் காசிக்குச் சென்றால் பல பாவங்களை ஈசன் அகற்றுவார் கங்கை தன்னில் கூட என்றும் குருநாதர் வாக்குகளை கூறியிருந்தார். 


முருகப்பெருமான் காகபுஜண்டர் மகரிஷி குருநாதர் அகத்தியர் பெருமான் வைகாசி மாதம் காசி செல்வதன் மகத்துவம் ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார்கள். 


அதன்படி இந்த வருடம் சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை காசிக்கு செல்லச் சொல்லி குருநாதர் உத்தரவிட்டார்.

குருநாதர் வாக்குகளை அப்படியே பின்பற்றும் சில அடியவர்களும் காசிக்கு சென்றிருந்தனர்.


14/6/2025 அன்று சங்கடகர சதுர்த்தி விநாயகருக்கு உகந்த நாள் அன்றைய தினத்தில் திரு ஜானகிராமன் ஐயா உட்பட அனைவரும் மீர்காட்டில் உள்ள கங்கைக்கரையில் நீராடிக் கொண்டிருந்த பொழுது கங்கை நீரில் அடியில் ஏதோ ஒரு பொருள் தட்டுபட்டது.

நீரில் மூழ்கி அந்த பொருளை எடுத்துப் பார்த்தால்... சாட்சாத்.. விநாயகப் பெருமானுடைய சிறிய சிலை ஒன்று கங்கை நதியில் இருந்து கிடைத்தது...

கிடைத்த விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு ஜீவனாடி பெட்டகத்துடன் மீர் காட்டில் உள்ள... கணபதி ஆலயத்தில் வைத்து ஜெயதேவ ஜெயதேவ ஸ்ரீ மங்கள மூர்த்தி பாடல் பாடி கணபதியை பொழுது ஆராதனை செய்யப்பட்டது.


அதன் பிறகு திரு சுவடி ஓதும் அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா சுவடியை வணங்கி ஓதத் தொடங்கிய பொழுது..

மூத்தோன் முதல்வன் பிள்ளையோன்... ஸ்ரீ விநாயகப் பெருமான் சுவடியில் வந்து வாக்குகள் பாடல் வடிவில் உரைத்துச் சென்றார்.

அவ் வாக்கு பின்வருமாறு!!!

அன்பென்று அசைந்தாடும் தந்தையே!!!
அடிபணிந்தேனே!!


காத்தருளி தாயே!!
மதித்து பரப்புகின்றேனே வாக்குகளாக!!
அன்பென்று இருந்தேனே!! மூத்தோனே !! மூத்தோனே!! பரப்புகின்றேனே!!!

அன்பென்று நன்றென்று இல்லோமே உள்ளோமே
அதை செய்தோமே!!
நன்று!!
அன்னையின் அருள் பெற்றோமே!!

அன்பின் எல்லை கருணை தன்னை 
தன்னையே வெளி காட்டா அருளை நின்றவனே தந்தையே!!

பின் அன்பின் கருணை என்றெல்லாம் மனிதனுக்கு தெரிவதே இல்லையே இல்லையே!!

அன்பென்ற உருவத்திற்கு அடையாளமாய் நிற்பவனே எங்கும் நிறைந்தும் நிறைந்தும் நிற்பவனே!!

அல்லல் பின் துன்பங்களை பின் நீக்குபவனே!! என்றென்றும் பின் பரிசுத்தமாக.. அனைவரின் இல்லத்தில் பின் இதயத்தில் குடியிருப்பவனே என்றென்றும் நீங்காது இறைவனே!!

பின் அன்பென்ற உருவத்திற்கு சொல்லாத தத்துவம் என்ற நிலைக்கு பின் ஆட்கொண்ட இறைவா என் தந்தையே!!

அன்னையே! அன்னையே!
 உனை மதித்து 
பெருமையும் கூட யான் கூறிடுவேன்.
அல்லல் பின் துன்பத்தை யான் பின் அறிந்து. 

அறிந்து அறிந்து பின் மக்களையே தாயே தாயே உன்னை உன்னையே தேடி வந்து
அதனையும் அதனையும் ஏற்று ஏற்று பாவத்தை பின் ஏற்று ஏற்று... அனைத்தும் பின் கொண்டாயே தாயே தாயே.. அனைத்தும் கொண்டாயே தாயே தாயே!!!
அணைத்தும் கொண்டாயே தாயே தாயே!!

இன்பம் எல்லாம் அருள்பவனே... இன்பம் எல்லாம் அருள்பவனே 
அனைத்து உலகும் காப்பவரே!!
அருள் எல்லை இல்லா எம் தந்தையே!!

தந்தையே என் தந்தையே அனைவரின் பாவத்தை பெற்றோனே
அனைவரின் பாவத்தை பெற்றிட்டு நிச்சயம் கங்கைக் தன்னில் பின் அமர்ந்தாயே!

கங்கையின் பின் தாயின் பின்.. தாயின் மடியில் அமர்ந்தாயே!!

உன்னை காண ஓடோடி வந்து 
உன்னை காண ஓடோடி வந்து 
கந்தனே பின் தாயே தந்தையே.. என்று பின் அணைத்தானே!!
தந்தையே தாயே என்றென்றும் பின் அன்னையும் தந்தையும் ஒன்றே பின் ‌.

நில்லும் அதனையும் பின்.. மக்கள் கோடி கோடி கோடி செத்து மடிவார்கள் உலகத்திலே. 

தாயே தந்தையே பாவம் ஏற்று... நிச்சயம் தன்னில் புண்ணியங்கள்.. பெருக்கி தன் பின் அனைவரையும் காக்க 
ஓடோடி வா ஓடோடி வா 
அன்னையே தந்தையே ஓடோடி வா!!

அன்னையே தந்தையே ஓடோடி வா
ஓடோடி வா ஓடோடி வா 

அனைத்தும் நீயே என்று சொன்னவரே! 
அனைத்தும் நீயே என்று சொன்னவரே!!!

நிச்சயம் தன்னில் முடிந்தவரை மனிதனுக்கு அருள்கள் தந்து கொண்டே இருக்கின்றேன். 
இருக்கின்றேனே பிள்ளையோன் பட்டியில்!! (பிள்ளையார்பட்டி)

இருக்கின்றேனே பிள்ளையோன் பட்டியில்!!

வருக வருக என்று துயர் துன்பங்களை அழிப்பதற்காகவே வந்தோமே 

தூய இன்பத்தை கொடுத்து பின் 
துன்பத்தை அறிந்தும் பின் கொன்றோமே. 

அன்பின் எல்லையில் பின் மனிதன் உணராதவனே பின் 
அன்பின் எல்லை உணர்ந்த போதிலும் 
அதற்கு மேலாக ஈடு இல்லையே. 

அன்பின் எதனை கண்டோமே 
அன்பின் எதனை கண்டோமே 
அம்மை அப்பரை துதித்து துதித்து 
நாட்களாக போய்க் கொண்டிருக்க!!

 
கலியுகத்தில் மனிதனாலே மனிதன் மனிதன் துன்பத்தில் மிகுந்து.. மிகுந்து மிகுந்து வருவதாலே நிச்சயம் தன்னில் காப்பாற்றுவாய் 
காப்பாற்றுவாயே தந்தையே!!
காப்பாற்றுவாயே தாயே!! தாயே!!

உன்னை நம்பி வந்தவர்களுக்கு விடிவெள்ளி கொடுப்பாயே 

என்றென்றும் நிச்சயமாய் 
என்றென்றும் நிச்சயம் நிச்சயமாய் 
கலியுகத்தில் மனிதன் அழிவானே
அழிவானே தந்தையே!

தந்தையே உந்தனுக்கு அனைத்தும் புரியுமே 
தாயே உந்தனுக்கும் புரியுமே 
பாவத்தை ஏற்று ஏற்று பின் புண்ணியத்தை பின் தந்தருளி கொண்டு இருக்கின்றீர். 

இன்னும் இன்னும் எத்தனை ? எத்தனை? இன்னும் இன்னும் எத்தனை எத்தனை 
பாவங்கள் மனிதன் சுமந்து இருந்தாலும் 
பின் நிச்சயம் தன்னில் அவற்றை அகற்ற 
அவற்றை அகற்றி நிச்சயம் தன்னில் தாயே பின் மனிதனுக்கு புத்திகள் கொடுப்பாயே!!


புத்திகள் கொடுத்தும் வாழத் தெரியாமல் 
புத்திகள் கொடுத்தும் வாழத் தெரியாமல் 
மனிதன் வாழ்ந்தாலும் 
யான் பார்த்துக்கொள்கின்றேன்!! தாயே தந்தையே தாயே தந்தையே!!


பாசம் உன் மீது அதிகரிக்குமே 
பாசம் உன் மீது அதிகரிக்குமே
நிச்சயம் தன்னில் காப்பாற்றுவாயே! 
இறங்கி வந்து காப்பாற்றுவாயே!!
காப்பாற்றுவாயே இறங்கி வந்து தாயே தந்தையே அணைத்து கொள்ளும்.

அனைத்தும் உன் பிள்ளைகள் தானே இங்கு!!
அனைத்தும் உன் பிள்ளைகள் தானே இங்கு!!

ஒவ்வொரு குறைகளையும் நீக்கி தன்னை நிச்சயம் தன்னில் பாவத்தை போக்கி புண்ணியத்தை அருளிடும் என் தாயே தாயே தாயே தாயே. 

கங்கை தன்னில் பின் இருக்கின்றாளே 
கங்கை தன்னில் இருக்கின்றாளே
பாவம் தன்னில் போக்கிடும் அதை  என் தாயே பின்  ஏற்றுக் கொண்டு 
தாயே தன்னே ஏற்றுக்கொண்டு 
அனைவருக்கும் புண்ணியத்தை அருளிட செய்பவளே!!

என் தாயைப் போல எவரும் இல்லை 
என் தாயைப் போல எவரும் இல்லை 
எத்தனை பாவங்கள் செய்தாலும் அதை ஈர்த்துக் கொள்ளும் என் தாயே தாயே!!
உனை பணிந்தேனே உனை பணிந்தேனே 
உனை பணிந்தேனே 
உனை பணிந்தேனே 

அப்பொழுது கூட புத்திகள் இல்லையே 
கலியுகத்தில் புத்திகள் இல்லையே 
புத்திகள் இல்லையே மனிதனுக்கு!!!

எத்தனை பாவங்கள் செய்துட்டு வந்தாலும் 
கருணை மிக்க மன்னித்து அருளும் தாயே தந்தையே உங்களையே போற்றி! 
தாயே தந்தையே உனையே போற்றி. 

எத்தனை பின் துன்பங்கள் வந்தாலும் மனிதனுக்கு அதை இன்பத்தை மாற்றி விட முயற்சி செய்து கொண்டிருக்கும் தாயே தந்தையே... உங்களைப் போல் இவ்வுலகத்தில் எவரும் இல்லையே எவரும் இல்லையே!!

கலியுகத்தில் மனிதன் தன்னை பின் நிச்சயம் தன்னில் யானே கடவுள் என்று சொல்வானே.. இதுதான் தன்னை அழிவிற்கு காரணம். காரணம் காரணம் என்றோமே. 

காரணம் காரணம் மனிதன் தான் மனிதன் என்று சொன்னோமே 

நிச்சயம் தன்னில் எங்களுக்கு நிச்சயம் தன்னில் எங்களுக்கு 
ஏதும் தேவையில்லை. 

குடும்பத்தோடு அன்பைச் செலுத்தினால் மட்டும் போதுமே!!!

மனிதன் பேய்களோடு வாழ்வானே 
மனிதன் பேய்களோடு வாழ்வானே 
பணத்தாசை பிடித்து அழிவானே
அழிவானே அழிவானே
அழிவானே 

மூத்தோனுக்கு அதாவது எந்தனுக்கு பின் திருத்தலங்கள் கட்டி கட்டி பின் தம்பிக்கும் (முருகனுக்கு) பின் கட்டி கட்டி பின் தாயிற்கும் கட்டி கட்டி பின் நிச்சயம் தன்னில் தந்தைக்கும் கட்டி கட்டி பின் வீணாக போவானே வீணாக போவானே!!

ஏன்??

அன்பு என்ற மனம் இல்லையே!!
மனம் என்ற உள்ளம் இல்லையே 
இல்லையே இல்லையே 
மனம் என்று அன்பு அது உள்ளே இல்லையே 

எத்தனை பின் (திருத்தலம்) கட்டினாலும் 
அன்பு இல்லையென்றால் நிச்சயம் தன்னில் எப்படி?? யாங்கள்? நிச்சயம் தன்னில்!! நிச்சயம் தன்னில் ஆசீர்வதிப்போம்????

நிச்சயம் இல்லை இல்லை இல்லை !!

அறிந்தும் உள்ளம் நிச்சயம் தன்னில் அகத்தியன் அனைத்தும் சொன்னானே!!!

அதை எப்பொழுதும் மனிதன் காக்கின்றானோ!?
அப்பொழுது நிச்சயம் விடிவெள்ளியே!! விடிவெள்ளியே!!
விடிவெள்ளியே!!

தந்தையே தாயே சித்தர்கள் எண்ணி 
தந்தையே தாயே சித்தர்கள் எண்ணி 
அனைத்தும் காப்பாய் போற்றுவாய் நிச்சயம் தன்னில்  கூட பின் அழிப்பதற்கு.

அழிப்பதாக இருந்தாலும்  நிச்சயம் தன்னில் பின் பின் இன்னொரு சந்தர்ப்பத்தை கொடுப்பாயே!!!

கொடுத்து கொடுத்து பார்த்தாயே தந்தையே 
பின் மனிதன் திருந்துவதாக இல்லையே 

பின் தானே தானே காரணம் நோயும் தானே காரணம்.. துன்பத்திற்கு தானே காரணம் 
அனைத்திற்கும் காரணம் மனிதன் பின் விளங்குகின்றானே விளங்குகின்றானே 

பின் தன்னில் அனைத்தும் பின் அனைத்தும் எவை என்று அறிந்து அறிந்து 
தன்னைத்தானே கர்மத்தில் நுழைந்து பின் பின் இறைவன் என்று சொல்கின்றானே 
இறைவன் என்று சொல்கின்றானே. 

இன்னும் இன்னும் அழியுகத்தில் 
இன்னும் இன்னும் அழியுகத்தில் என்னென்ன? நடக்கப் போவதென்று சித்தர்கள் வந்து செப்புவார்களே!!!
என்னென்ன நடக்க போவது என்று சித்தர்கள் வந்து செப்புவார்களே!!

அழியும் காலம் வந்து கொண்டே இருக்க 
நோய்களின் காலம் வந்து கொண்டே இருக்க 
நிச்சயம் தன்னில்  அதில் யாரும் காப்பாற்ற முடியாதே!! காப்பாற்ற முடியாதே!!

தாயே தந்தையே வரும் வரும்!
தாயே தந்தையே காப்பாற்ற முடியும் நிச்சயம் தன்னில்..
நிச்சயம் தன்னில் அதனால் தானே 
உள்ளம் என்பது பெரும் கோயிலாக 
உள்ளம் என்பது பெரிய கோயிலாக 
அதில் தானே அன்பு முளைத்தாலே அனைத்துலகும் அன்பு முளைத்தாலே அனைத்துலகும் நல்லோர்  போற்ற வாழ்வீர்களே மனிதர்களே பின் சிந்தித்து வாழ்வீர்களே வாழ்வீர்களே. 

அனைத்தும் தாயும் தந்தையே.. அனைத்தும் தாயும் தந்தையே கொடுத்தார்களே!!

நிச்சயம் தன்னில் அவற்றை பின் ஒழுங்காக பின் பயன்படுத்தவில்லையே!!!
அவற்றை தன் ஒழுங்காக பயன்படுத்தவில்லையே! பயன்படுத்தவில்லையே! 

எப்படி? எப்படி ?மனிதன் வாழ்கின்றான்? 
எப்படி? எப்படி? மனிதன் வாழ்கின்றான்? 

பணத்தாசை கொண்டே வாழ்கின்றானே 
பணத்தாசை கொண்டு வாழ்கின்றானே 

அப்பொழுது தாயும் தந்தையுமே 
அப்பொழுது தாயும் தந்தையுமே 
கொடுத்து கொடுத்து நிச்சயம் தன்னில் சந்தோசத்தை பின் கொடுக்கின்றானே 

அதையும் தாண்டி நிச்சயம் தன்னில் 
கொடுத்து கொடுத்து எவை என்று கூட பாவத்தை சேர்த்துக் கொண்டு பின் மீண்டும் தாயின் மீதும் பின் தந்தையின் மீதும் பழி போடுகின்றானே!!

இதற்காகத்தான் நிச்சயம் தன்னில் இன்னும் கஷ்டங்கள் வருகின்றது. 
இன்னும் கஷ்டங்கள் வருகின்றது. 
எவராலும் மாற்ற முடியாதே!
எவராலும் மாற்ற முடியாதே!

எதை என்றும் எவை என்றும் நிச்சயம் தன்னில் முடியாதே 

மனசாட்சியோடு வாழ்ந்தால் போதும் 
மனசாட்சியோடு வாழ்ந்தாலே போதும் 
நிச்சயம் தன்னில் அவ்வாறாக பின் 
வாழப் போவதில்லை பின் மனிதனே!!
அவ்வாறாக மனிதன் பின் வாழப் போவதில்லை வாழப்போவதில்லை. 

எப்படி? எப்படி? எதை என்று !
எப்படி எப்படி எதை என்று... மனசாட்சியோடு வாழ்பவர்களுக்கு மட்டுமே அனைத்தும் அனைத்தும் கொடுப்போமே. 
மனசாட்சியோடு வாழ்பவர்களுக்கு அனைத்தும் அனைத்தும் கொடுப்போமே. 

ஏன்? எதற்கு? அனைத்தும் அனைத்தும் கொடுத்திட்டாலும் மனிதன் தன்னில் ஒழுங்காக அதை பயன்படுத்தவில்லையே பயன்படுத்தவில்லையே 

தானும் கெட்டிட்டு அனைவரையும் கெடுக்கின்றான் 
தானும் கெட்டிட்டு அனைவரையும் கெடுக்கின்றான் 
நிச்சயம் தன்னில் பின் அறிந்தும் கூட 

இன்னும் இன்னும் என் பக்தர்களே வருவார்கள்.
இன்னும் இன்னும் என் பக்தர்கள் வருவார்கள். 

யானும் கூட அறிந்து அறிந்து.. என் பக்தர்களை உருவாக்கி உருவாக்கி... அனைத்து தெம்புகளும் கொடுத்து கொடுத்து அனைத்து சக்திகளும் கொடுத்து கொடுத்து... இவ்வுலகத்தை நிச்சயம் தன்னில் மாற்றுவோம்.

மனிதன் எதை என்று என்னென்ன மனிதன் என்று என்னென்ன 
நிச்சயம் தன்னில் பயன்படாத மனிதனை 
இவ்வுலகத்தில் வாழ்ந்தும் பிரயோஜனம் இல்லையே
எதற்கும் பயன்படாத மனிதனே இவ்வுலகத்தில் வாழ்ந்தும் பயன் இல்லையே 

நிச்சயம் தன்னில் தாயும் தந்தையும் 
ஏதோ ஒரு நலனுக்காகவே பிறப்பு பிறப்பு எடுக்க வைத்திருக்கின்றான்.
நிச்சயம் தன்னில் அதனையும் கூட 
நிச்சயம் தன்னில் அதனையும் கூட 
அறிவதில்லையே தெரிவதில்லையே
என்னவென்று பின் மீண்டும் போவானே
போவானே போவானே பின் கட்டையில் போவானே...

நிச்சயம் தன்னில் அனைத்தும் கொடுக்க 
நிச்சயம் தன்னில் அனைத்தும் கொடுக்க 
யாங்கள் தானே தயாராக இருக்கின்றோமே என்று பல உரைகளில் உரைத்திட்டோமே 
பல உரைகளை உரைத்திட்டோமே 

ஆனால் மனிதன் என்னென்ன? 
தன் வினையாலே தன்னைத்தானே 
தன்வினையாலே தன்னைத் தானே 
நிச்சயம் தன்னில் மனிதன் என்பது மனம் என்பது பேயாக 
மனம் என்பது பேயாக கலியுகத்தில் பேயாக பேயாக பேயாக நிச்சயம் தன்னில் அறிவுகள் இல்லை 
நிச்சயம் தன்னில் அறிவுகள் இல்லை. 

அறிவுகள் என் தந்தை கொடுத்தாலும் அதை  பயன்படுத்த இங்கு ஆள் இல்லை 

அறிவுகள் தாயும் தந்தையும் கொடுத்தாலும் 
அதை பயன்படுத்த இங்கு ஆள் இல்லை 

எப்படி எப்படி நிச்சயம் தன்னில்  தாயும் தந்தையும்.. அனைவரைம் தான் குழந்தைகளாக நினைக்கின்றார்களே மனிதர்களை குழந்தைகளாக நினைக்கின்றார்களே 

நிச்சயம் தன்னில் அனைத்தும் கொடுத்து 
அனைத்தும் கொடுத்து கொடுக்கின்றானே 

ஆனால் புத்தி கெட்ட மனிதனோ!?
என்னவென்று பின் பாவத்தை பாவத்தை சுமந்து கொண்டிருக்கின்றான். 

மீண்டும் மீண்டும் தந்தையே தாயே 
வாய்ப்பு அளிக்கின்றீர்கள் நீங்களே 

கருணைமிக்க என் தந்தை போல் தாயைப் போல்... யாரை கூறுவீர்கள்??? யாரை கூறுவீர்கள்???

நிச்சயம் தன்னில் பாவத்தை பாவத்தை நிச்சயம் தன்னில் பாவத்தை பாவத்தை 
கங்கையில் பின் காவேரி தன்னில் எங்கெங்கோ பின் நதியிலும் கூட 
அனைத்தும் பின் என் தாயே அனைத்தும் தாங்கி கொண்டு மீண்டும் மீண்டும் பின் அறிந்தும் கூட ஏற்றுக்கொள்கின்றாள்.

அப்பொழுது  கூட புத்திகள் வரவில்லை 
அப்பொழுது கூட புத்திகள் வரவில்லை 
இன்னும் இன்னும் அதற்காகத்தான் அழியுகத்தில் மனிதன் அழிந்து கொண்டு இருக்கின்றான். 

எத்தனை பிறவிகள்? எத்தனை பிறவிகள்? 
என் தாயையும் தந்தையையும் காண ஓடோடி வந்தீர்களே! ஓடோடி வந்தீர்களே! 

என்ன பிரயோஜனம் என்று சொல்லுங்களே!
என்ன பிரயோஜனம் என்று சொல்லுங்களே! சொல்லுங்களே!!

மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது மனிதனால் வரும் காலத்தில் ஒன்றும் செய்ய முடியாது 

யாங்கள் ஆட்டம் தொடங்குவோமே 
யாங்கள ஆட்டம் தொடங்குவோமே 

மனிதனை விட்டு விட்டால் மனிதனை விட்டு விட்டால் யான் நான் கடவுள் என்று சொல்வானே கலியுகத்தில் பின் யான் தான் கடவுள் என்று சொல்வானே 
எந்தனுக்கு அபிஷேகங்கள் செய்யுங்கள் எந்தனுக்கு அபிஷேகங்கள் செய்யுங்கள் என்று சொல்வானே 

இதுதான் பின் கலியுகம் பின் முற்றும் முற்றும் என்று முற்றிற்றே!!
இதுதான் முற்றும் கலியுகம் பின் முற்றிற்று!! முற்றிற்று!! பின் முற்றிற்றே!!!

நிச்சயம் தன்னில் பின் மனிதனுக்கு அபிஷேகங்கள் மனிதன் செய்வானே 
செய்வானே செய்வானே இதுதான் பின் கலியுகத்தில் முற்றி முற்றி முற்றிற்றே!

இதனால் இன்னும் வருங்காலங்கள் 
இதனால் இன்னும் வரும் காலங்கள் 
அநியாயங்கள் அக்கிரமங்கள் நடக்குமே 

இதை யாராலும் பின் தடுக்க முடியாதே!!

நிச்சயம் தன்னில் கருணை மிகுந்து 
தாயும் தந்தையும் வந்து வந்து நிச்சயம் ஒரு சந்தர்ப்பத்தை பின் தந்து தந்து பின் நீக்குவார்களே 

அதையும் பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை 
அதையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை 

நிச்சயம் தன்னில் நிச்சயம் தன்னில் 
இதனால் பின் அய்யோ பாவம்... அப்பொழுது கூட பின் தாயே சொல்வாளே சொல்வாளே!!!
நிச்சயம் தன்னில் மனிதா உந்தனுக்கு 
தன் குழந்தை போன்று அனைத்தும் கொடுத்தார்களே 

அதை வீணாக பயன்படுத்திக் கொண்டாயே அதை வீணாக பயன்படுத்திக் கொண்டாயே!!

எண்ணற்ற எண்ணற்ற பிறவிகள்! 
எண்ணற்ற எண்ணற்ற பிறவிகள்!!

உணரவில்லையே மனிதன்!!.. என் தாயை தந்தையை உணரவில்லையே என் தாயை தந்தையையும் உணரவில்லையே!!

இன்னும் இன்னும் என் தாயையும் தந்தையையும் யாரும் இவ்வுலகத்தில் உணரவில்லையே உணரவில்லையே!!!

ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....;தொடரும்!