​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 2 June 2022

சித்தன் அருள் - 1146 - அன்புடன் அகத்தியர் - பாலராமபுரத்தில் அகத்தியர் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

நம் பாலராமபுரம் திருத்தலத்தில் புனித தீர்த்தங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு குருநாதர் அகத்தியப் பெருமானிடம் வாக்கு கேட்கலாம் என்று ஆவலுடன் அமர்ந்திருந்த அடியவர்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக ஜீவநாடியில் ஓதியப்பர் வந்து வாக்குரைத்தார்....

ஓதியப்பர் வாக்குரைத்து விட்டு ஆசிர்வாதங்கள் தந்து விட்டுச் சென்றதும்... நம் குருநாதர் அகத்தியப் பெருமான் ஜீவ நாடியில் தோன்றி அடியவர்கள் அனைவருக்கும் கருணையோடு வாக்குகளை தந்தார்...

26/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : பாலராமபுரம் .ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தியர் திருக்கோயில். 

ஆதி சிவசங்கரியின் பொற்பாதத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அனைத்தும் சொல்லிவிட்டான்... வேலனவனே!!!!!!! 

யான் எப்படி???  சொல்ல!!!!!

இத்திருத்தலத்தை பற்றியும் சொல்லி விட்டான். 

ஆனாலும் பூசைகள் நன்றே!!!!!! என்பேன்.  எந்தனுக்கு சந்தோஷமே என்பேன்!!!

அதனால் குறைகள் ஏது?? அதனால் இதையன்றி கூற மக்களை காப்பாற்றுவதற்காகவே யான் இங்கு வந்தேன்!!!!!

ஒரே வார்த்தையில் சொல்லி விட்டேன் எதையென்று கூற அதனால் நிச்சயம் எவை இதனையும் கூட இத்திருத்தலத்தை பற்றியும் கூட முருகனே சொல்லிவிட்டான் அதனை. இதனால் எதுவென்று யான் செப்புவது!!!! 

அப்பனே பத்பநாபனுக்கும் இங்கிருந்து தொடர்புகள் உண்டு உண்டு.... இன்னும் இன்னும் வழிகளில் கூட எப்பொழுது எதை  உரைக்க வேண்டுமோ.. அப்போதெல்லாம் வந்து உரைக்கின்றேன் அப்பனே இன்னும்.

அப்பனே முருகன் சொல்லியதை பார்த்தால் அப்பனே  மனம் பின் அமைதியாகி விட்டது. அதனால் மறு வாக்கில் அனைத்தையும் கூறுகின்றேன்.

ஆனாலும் அனைவருக்கும் எம் ஆசிகள்!!!!! 

அப்பனே கவலைகள் இல்லை யான் இருக்கின்றேன் .இன்னும் விளக்கங்கள் உண்டு உண்டு!!!

அப்பனே அனைவரும் பக்தியை நாடிச் சென்றாலே நினைத்த காரியங்கள் நன்றாகவே நடந்து விடும். 

அப்பனே சனியவன்...அவந்தனை மகிழ்விக்க பின் மனித உடம்பில் குறை இருப்பவர்களுக்கு நிச்சயம் உதவிட வேண்டும் அதை நீங்கள் செய்தால் நிச்சயம் நலன்களே உண்டாகும்.

அவை மட்டுமில்லாமல் முன்னோர்களை நிச்சயமாய் இல்லத்திலே அழைத்து நல் விதமாக பின் அமாவாசை திதிகளிலும் நிச்சயமாய் அவர்களுக்கு எதை எதை என்று பிடித்துள்ளதோ அவையெல்லாம் செய்ய வேண்டும்.. அதுமட்டுமில்லாமல் அனுதினமும் நல் முறையாகவே வணங்கி வணங்கி ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவு கொடுத்தே வந்தால் நிச்சயம் எவையன்றி இன்னும் பல பல வழிகளிலும் நிச்சயமாய் சனியவன்.. மனம் இரங்குவான்.

இதனையும் யான் செப்பிவிட்டேன்.... இதனால் நிச்சயம் எதை என்று கூற தன்னைப் பற்றி!... நினைக்காமல் பிறரைப்பற்றி எண்ண!!! நினைத்தால் சனியவன் ஏதும் செய்ய மாட்டான்... தன்னைப் பற்றியே நினைத்திருந்தாலே அனைத்தும் கெடுதல் ஆகி விடும். இதுதான் சனியவனுக்கு.... உறுதியாகச் சொல்கின்றேன்....

அப்பனே நல் முறையாக ஈசனை பிடித்துக் கொள்ளுங்கள்!!!! நல் விதமாக.... நமச்சிவாயா நமச்சிவாயா என்று பின் அழைத்துக் கொண்டிருந்தாலே.... சனியவனுக்கும்..... இவந்தன் பின் ஈசனுடைய... அடிமையா!!!! என்று நினைத்து விட்டு பின் எதை என்று எதற்காக.. வந்து விட்டானோ அதற்கு. தலை இறங்கி பின்.... எப்படி பிடிப்பது!??? பின் நம் குருநாதரிடம் சென்று முறையிடுவோம் என்று கூட முறையிட்டு விடுவான்.

அதனால் சொல்கின்றேன் சனியவன் வந்து விட்டால் அப்பொழுதும் கூட நமச்சிவாயா! நமச்சிவாயா!!! என்று உரைத்துக் கொண்டே இருங்கள் சொல்லிவிட்டேன்.

அப்பனே நலன்கள் நலன்கள் அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே எவை என்று ஆனாலும் எம்முடைய ஆசிகள்... நலன்கள் ஆக நலன்கள் கருதி... எக்குறையும் கொள்ள வேண்டாம் அப்பனே நல் விதமாக யானும் வந்து அனைவருக்கும் ஆசீர்வாதம் தந்து விட்டேன் அதனால் நலமே என்பேன்.

அப்பனே நல் முறையாக எவை என்று ஆனாலும் கடைசியில் கூட சொல்லி விடுகின்றேன் எவை எதனை என்று கூறும் விளக்கம் இல்லாத அளவிற்கு கூட அடிக்கடி நல் முறையாகவே சூரியனிடத்தில்(அதிகாலை சூரிய ஒளியில்) நின்று தியானங்கள் செய்து... அரை மணி நேரமாவது நல்விதமாக...அவந்தனை போற்ற வேண்டும்... போற்றிட்டு!!!  நல் துதிகளை அவந்தனுக்கு பாட வேண்டும். (எடுத்துக்காட்டாக ஆதித்ய ஹிருதயம்)

பாடவேண்டும் பாடிட்டும்.. பலபல ஜீவராசிகளுக்கும் உணவு அளித்தே வந்தால் நிச்சயம் எதையென்று கூற ""பகலவன்"" அனைத்தையும் கொடுப்பான் என்பேன்... சில சில சூட்சுமங்கள் அதிவிரைவில் கூட தெரியவரும் என்பேன் சொல்லிவிட்டேன்.

அப்பனே கலியுகத்தில் பிரம்மன் அழகாகவே படைத்திருக்கின்றான்.. மனிதனை இவையன்றி கூற.... இப்படி இன்னார்க்கு இன்னார் தான் என்று கூட எழுதி வைத்திருந்தான்... ஆனாலும் அப்பனே இப்பொழுது மனிதன் மாயையால் தான் என்ற அகங்காரத்தோடு அனைத்தும்  இவையன்றி கூற... மாற்றி பின் மாற்றியே பின் திருமணம் செய்து கொள்கின்றான் அப்பனே இதனால்தான் அப்பனே... வருவது வினையப்பா!!!

அப்பனே அனந்த பத்மநாபனுக்கும் இத் தலத்திற்கும் தொடர்புகள் உண்டு அப்பனே... ஆனாலும் பின் ஒன்றை மட்டும் கூறுகின்றேன் பின் பெருமாள் எதை என்று கூற பின் அடிக்கடி என்னை இங்கிருந்து அழைத்துச் செல்வான்.....

அதை எதற்காக என்று கூட யான் உங்களுக்கே உணர்த்தி வைக்கின்றேன்.. அப்படி தெரியாவிடினும் அடுத்த வாக்கில் குறிப்பிடுகின்றேன்.

அவை மட்டுமில்லாமல் எதையென்று கூற பின் முருகனையும் அழைத்துச் செல்வான் அப்பொழுது புரிகின்றதா???

ஆனாலும் இன்னொரு விஷயத்தையும் கூறுகின்றேன் பின் எதையென்று கூற...யான் காட்டிய அன்பு( அனந்த பத்மநாப சுவாமி) பெருமாளுக்கு எதை? எதை? என்று கூறுவது? அதனால்"""" அங்கிருந்து இங்கே வந்து உறங்கி விடுவான்!!!!

அதனால் இன்னும் பல சூட்சுமங்கள் உண்டு சொல்லி விடுகின்றேன்... வரும் காலங்களில்.!!!!

அப்பனே உணர்வதற்குள் அப்பனே ஆனாலும் அப்பனே கந்தனவன் சொன்னான் அப்பனே எதனை என்று கூற யானும் வந்துவிட்டேன் என்று கூட அப்பொழுதே ஆசிர்வாதங்கள் தந்துவிட்டேன் அப்பனே!!!

நன்மைகள் செய்யுங்கள் அப்பனே  பிறருக்கு நன்மையைச் செய்யுங்கள் தான் பற்றி நினைக்காத அளவிற்கு ஒன்றும் இல்லை ஆனாலும் தன்னைப் பற்றி நினைத்து விட்டால் நிச்சயம் சனியவனே அப்பனே எதை என்று பின் அறியாத அளவிற்கும் கூட...... இவன் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருக்கின்றானே!!! என்று எண்ணி சில கஷ்டங்களை கொடுப்பான்.

அவை போன்று நினைக்காமல் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினையுங்கள் அப்பனே!!!

நீங்களும் நன்றாகவே இருப்பீர்கள் என்பேன்.

இதுதான் அப்பனே வாழ்க்கையின்  சூட்சுமம்.!!

ஆனாலும் இதைதன் யாரும் உணர்வதில்லை அப்பனே!!! 

எதையென்று இதை அதைத்தான் முன்னதாகவே சொல்லி விட்டேன். அதனால்தான் அப்பனே ஒன்றும் இல்லாமல் மனிதன்.. எதையென்று கொண்டுவருவதற்கு தான் ஏற்படுத்திய வண்ணம் தான்,  தான் தான் சுயத்திற்கு ஆகவே வணங்கி இறைவனை எப்படி  எதையென்று கூற தன் சுயத்திற்காகவே(சுயநலம்) இறைவனை வணங்குபவர்கள் நிச்சயம் இறைவன் வழி விடவும் மாட்டான்!! நன்மைகளும் செய்ய மாட்டான்!!! செப்பி விட்டேன்...இதையென்று கூற. 

அனைவருக்காகவும் எதை என்று கூற அனைத்து ஜீவராசிகளுக்காகவும் நல் முறையாக பிரார்த்தனை செய்யுங்கள்!!! இறைவன் உங்கள் மீது அன்பு கொண்டு அனைத்தும் செய்வான். இது தான் சூட்சுமம் என்பேன்.

இன்னும் பல பல வழிகளிலும் அப்பனே நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதனால் இன்னும் வரும் வரும் காலங்களில் அப்பனே மனிதனால் வாழவும் முடியாது இவ்வுலகத்தில் அப்பனே.

ஆனாலும் யான் எதையென்று கூற என்னை நம்பியவர்களை அழகாகவே காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் அன்பின் மூலமே யான் காப்பாற்றுவேன்... மற்றவர்களை எல்லாம் நிச்சயம் காப்பாற்றவும் இயலாது என்பேன்...எதையன்றி வருபவர்களையும் எதை எதையன்றி கூற சொல்லிக்கொண்டே தான் வருகின்றேன் அப்பனே.

ஏமாற்றி ஏமாற்றி என்று சித்தர்கள் பெயரை சொல்லி எதையன்றி கூற சித்தன் பார்க்கவா??? போகின்றான்?? என்று கூட பல மனிதர்கள் எதை எதையோ செப்பி!! செப்பி!! ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள் .

அதனால் யாரும் ஏமாறத் தேவையில்லை!!!

இறைவனை நம்புங்கள் நிச்சயம் வழி விடுவான்!!!

வழி விடுவான் என்பதற்கு இணங்க அதனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது.!!!

ஆனால் வார்த்தைகளோ என்னால் செய்ய முடியும் அனைத்தும் செய்ய முடியும் இவை போன்று!!! அதைப் போன்று!!! என்றெல்லாம்!!. 

ஆனால் அவந்தனுக்கே அவன் வாழ்க்கை பற்றித் தெரியாது!!! இதுதான் அப்பனே.

அதனால் எதையென்று கூற அதனால் எவை எவை என்று கூற இப் பக்திக்கும் வந்துவிட்டால்... மனிதனையும் ஏமாற்றலாம் தன்னையும் ஏமாற்றிக் கொள்ளலாம் என்றுகூட வரும் காலங்களில் வருவார்களப்பா!!! திருடர்கள் கோடி !!கோடி!!!

அப்பனே!!நம்பி விடாதீர்கள்!

யான் தான் அகத்தியனே!! அகத்தியன். எதை எந்தனுக்கு எதையென்று கூற பல உத்தரவுகளையும் பொய் சொல்லி பொய்சொல்லி  பிழைப்புத்தான் நடத்துவார்கள்.

ஆனாலும் அவர்கள் அழிவார்கள் என்பதைக் கூட... அவர்களுக்குத் தெரியாமல் போயிற்று!!!!

அதனால் சிறிது காலமே எஞ்சியுள்ளது!!!

பின் நல் முறையாக சந்தோசமாக அப்பனே வாழ்க்கையை கடக்க பிறர் நலனை விரும்புங்கள்.. அப்பனே.

எதை எதை என்று கூற சில சில தொண்டுகளை செய்யுங்கள்!!!

அப்பனே நல் முறையாக இயலாதவர்களுக்கு ஏதாவது முடிந்த அளவிற்கு தானத்தை உணவு தானத்தையும் நல் முறையாக கொடுங்கள் அப்பனே!!!

இறைவன் நிச்சயம் காப்பாற்றுவான் என்பேன் அப்பனே!!!

இன்னும் பல சூட்சும ரகசியங்கள் அப்பனே வரும் காலங்களில் சித்தர்கள் செப்பிக்கொண்டே வருவார்கள். மனிதனைப் பற்றி அப்பனே.


மனிதன் தரித்திரனப்பா!! இதைத்தான் யான் செப்புவேன் அப்பனே. மனதில் கோட்டை கட்டி வைத்திருக்கின்றான் மனிதன்!!! என்னென்ன ஆகப் போகிறான்!? என்று!!!

ஆனால் அது இறைவனுக்குத் தான் தெரியும்...... ஆனால் எதையன்றி கூற... மனிதனோ கோட்டைகள் கட்டி கட்டி கட்டி இவையன்றி இப்படி எல்லாம் வாழலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றான்.

ஆனால் இறைவனோ ஐயோ!!! பாவம்!! மனிதன்!!

இப்படியெல்லாம் இருக்கின்றானே!!! என்று கூட சலனப்பட்டு கொண்டிருக்கின்றான்!!!

அதனால் அப்பனே எதை மீதும் எவை என்று கூற நன்மைகள் இறைவணை பக்தியோடு வணங்குங்கள்!!

அன்பை செலுத்துங்கள் போதுமானது மற்றவையெல்லாம் அனைத்தும் எதை என்று...உந்தனுக்கு நிச்சயம் உந்தன் இல்லத்தைத் தேடி வருவான் இறைவனே!!! அப்பனே இக்கலியுகத்தில்.

இதைத்தான் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் பலப்பல மனிதர்களுக்கும்.

மனிதர்களுக்கும் எவை எவை என்று கூற நன்மைகள் செய்தால் இறைவன் வந்து உன்னை வணங்குவான் என்பேன் அப்பனே!!!! அவை போல் நீ நடக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!

அனைத்தும் செய்துவிட்டு இறைவனை கைகூப்பி வணங்கினால்??  இறைவன் என்ன??? செய்து விடுவானா??? என்ன??!!!!! 

அப்பனே!!! இல்லை. நிச்சயம் செய்ய மாட்டான் அதனால்தான் செப்பினேன் அப்பனே!!!

இறைவனை எவையன்றி கூற இக்கலியுகத்தில் இப்படி ஒரு மனிதனா என்று கூட யோசிக்க வைக்க வேண்டும்!!!!!

இறைவனே தன் வீட்டுக்கு நாட வேண்டுமென்றால் அப்பனே நல்லெண்ணங்கள் நல்லெண்ணங்கள் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொண்டாலே போதுமானது!!!

இறைவன் கையெடுத்து வணங்கிடுவான் உந்தனை!!! பன்மடங்கு உயர்த்தி விடுவான்!!! அனைத்தும் செய்வான் அப்பனே.

ஆனாலும் தான் தான் என்ற அகங்காரம் இவையென்று கூற... மனிதர்களுக்கு வரும் காலங்களில் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!! 

அதுதான் அப்பனே இறைவனுடைய எதை என்று கூற அப்படிப்பட்டவர்களை இறைவன் எப்படி?? காப்பாற்றுவான்?? அப்பனே!!!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்..ஆசிகள் பலமாக இருப்பதாலும் அப்பனே... யான் சொல்லியவற்றை  மனதில் நிறுத்துக!!!!! நிறுத்துக!!!!!  என்பேன். 

அனைவருக்கும் நல் விதமாகவே ஆசிகள்!!! இன்னும் அப்பனே எங்கெங்கு எதனை எதனை என்று கொண்டு செல்ல அப்பனே !!!இயற்கைச் சீற்றங்களால் அப்பனே உலகத்தில்... எதுவெதுவோ நடந்து கொண்டுதான் வரும் கலியுகத்தில் அப்பனே. 

நிச்சயம் எவையென்று கூற எதனால் என்பதை கூட யான் காப்பாற்றியே வருவேன் என் மக்களை அப்பனே!!! கவலை கொள்ளாதிருங்கள். 

நன்மையே ஏற்படும்!!! அப்பனே ஆசிகள் !!!ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

3 comments:

  1. ஐயா ரே பஞ்சட்டி ஸ்தலத்தை பற்றி கூறவும் ஐயா ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. ஓம் நமச்சிவாய ஓம் அகத்தீசாய நமக அருமையான பதிவு அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete