​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 18 December 2021

சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு!


11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

இவ்வுலகத்தை ஆளும் என் தந்தையை மகேஸ்வரனை தாய் பார்வதி தேவியைப் பணிந்து வாக்குகளை பரப்புகின்றேன் கந்தனவன்.

எவ்வாறு பக்திகள் பக்திகள் செலுத்தினீர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் .

ஆசிகள் என்பதுபோல் மனிதனின் செயல் மாறுபட்டவை மாறுபட்டவை என்று உணர ஆனாலும் உண்மை இல்லை மனிதனிடத்தில் எதை எதை செய்யக்கூடாது அதையே செய்து கொண்டிருக்கின்றான் இன்னமும்கூட.

ஏற்கனவே செப்பி விட்டோம் பல சித்தர்களும் ஞானிகளும் செப்பி விட்டார்கள் ஒழுங்காக நடந்து கொள்ள சிறப்பு தரும் சிறப்பு தரும் ஆனாலும் மனித ஜென்மங்கள் திருந்துவதாக தெரியவில்லை.

தெரியவில்லை என்றபோதும் என் தந்தை என் தந்தையவனே சில வினைகளை உட்புகுத்தி கஷ்டங்களை ஏற்படுத்துவான் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் இதனால் மனிதனே பிழைத்துக் கொள்ளுங்கள் திருந்துக்கொள்ளுங்கள் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்வது எப்படி என்று தெரியாமலேயே மனிதன் சுற்றி சுற்றி வருகின்றான் என்னையும் .

யான் பல என் அறுபடை வீடுகளிலும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அதை தவிர்த்து என் ஏழாவது படை வீடான மருதமலையிலும் .

ஆனாலும் உண்மை பொருளை முருகா அனைத்தும் நீயே என்று கூற எவரும் இல்லை எதனால் பக்தி எதனை எப்பொழுது எதனை என்று கூட அவனவன் சுயநலத்திற்காக என்னை வந்து கேட்கின்றான் ஆனாலும் யானும் இதை தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். கொடுக்கின்றேன்.

ஆனாலும் கடைசியில் திரும்பவும் வருகின்றான் அனைத்தும் இழந்துபோய்.

இவை என்ன எவ்வாறு பக்திகள் செலுத்துவது என்று கூட தெரியப்பட்டால் அவன்தான் மனிதன்.

தாய் தந்தையரை எவ்வாறு மதிக்கின்றீர்களோ அதையும் யான் பார்த்து தான் நிச்சயம் ஆசீர்வதிப்பேன்.

தாய் தந்தையரை மதிக்காதவர்களை யான் என்னிடத்தில் வந்தாலும்கூட கண்டுகொள்ள மாட்டேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.

உறுதியாக சித்தர்களும் ஏன் என் தந்தையும் தாயும் இப்படித்தான் செய்வார்கள் அதனால் வருங்காலங்களில் கஷ்ட காலங்கள் என்பேன் உறுதியாக.

இதனால் ஒவ்வொருவரும் பிழைத்துக் கொள்வதற்கான வழிகள் தேட வேண்டும்.

எவ்வாறு பிழைத்துக் கொள்வதற்காக?

எந்தனுக்கு பணம் தேவைகள் சொத்துக்கள் சுகங்கள் தேவைகள் இவையெல்லாம் அழியக்கூடியது அதை கேட்டுவிட்டால் யான் கொடுத்து அனுப்புவேன் ஆனாலும் அழிந்து மீண்டும் என்னிடத்தில் வரக்கூடாது என்பேன்.

வந்தாலும் நான் நிச்சயம் தர மாட்டேன் என்பேன்.

ஏனென்றால் எதனையும் என்று கூறாமல் பக்தி என்பது எவ்வாறு மனிதனுக்கு தெரியாமலே வாழ்ந்து வாழ்ந்து வருகின்றான்.

பக்தி என்பதை எவ்வாறு என்று சொல்கின்றேன்.

முருகா அனைத்தும் நீயே என்ற எண்ணத்திற்கு எப்பொழுது வருகிறீர்களோ?  தூய எண்ணங்கள் எப்பொழுது வருகின்றதோ?

போட்டி பொறாமைகள் எப்பொழுது வராமல் நின்றுகொண்டு இருக்கின்றதோ பின் இதனையும் தாண்டி பின் அனைத்தும் இறைவனுடைய செயலே என்று எவன் நினைக்கிறானோ அவனிடத்தில் யான் பரிபூரணமாக இருப்பேன்.

துன்பங்கள் துன்பங்கள் என்று வரும்போதெல்லாம் இறைவனிடத்தில் மனிதர்கள் ஓடோடி வருகின்றனர்.

ஆனாலும் இதில் தான் சூட்சமம் உள்ளது துன்பம் எவருக்கு வருகின்றதோ.     அவரிடத்திலே நிச்சயமாய் இறைவன் இருப்பான். குடி கொண்டு இருப்பான்.

எதனால் எதனையும் என்று அறியாமலே அறியாமல் இருப்பது மெய்யோ என்ற உணர்வை ஏற்படுத்தத்தான் இவ்வுலகத்தில் தாழ்ந்து சித்தர்கள் திரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.

திரிந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை ஏன் மக்களுக்கு தெரியவில்லை??

இன்னும் மக்கள் பொய்யானவைகளையே  தேடி தேடி செல்கின்றனர்.

ஆனாலும் அதன் உண்மை நிலை தெரிவதில்லை இதனால் அன்புடன் இறைவனை வணங்கினாலே போதுமானது.

எதையும் கொடுக்க வல்லவன் இறைவன் இதன்பால் நினைத்து நினைத்து நிச்சயம் தண்டனைகள் உண்டு.

தண்டனைகள் உண்டு என்பேன் பல பல விரதங்கள் பல பல வழிகளில் என்னையும் வணங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் ஆனாலும் அனைவருக்கும் ஆசிகளா?? என்பதற்கிணங்க இல்லை தான் என்பேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுயநலத்திற்காக வே பின் வந்து கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு பின் ஆனாலும் இதில் கூட ஒருவன் என்னைக் கேட்டான்.

பின் ஏன் பின் அவனை அழித்து விடு என்றெல்லாம் என்னிடத்தில் கூறி வணங்குகின்றான். 

மனிதர்கள் மனிதர்களையே அழித்துவிடு என்கின்றார்களே இது நியாயமாப்பா ??

நியாயமா?? அப்பனே??

இதனையும் உணர்ந்தால் 

ஏன் சித்தர்களின் ராஜ்ஜியம் என்பதைப்போல் சித்தர்கள் நிச்சயம் மனிதர்களை காப்பார்கள் நல்லோர்களை.

ஆனாலும் நல்லோர்கள் எங்கு இருக்கின்றார்களா என்பதே மிகவும் வருத்தப்படக் கூடிய ஒன்றுதான்.

நிச்சயம்  எதனை எதனை என்று விரும்பி விரும்பத்தகாதது என்பதைக்கூட இனிமேலும் நீங்கள் பிழைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.

அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

பிறர் கோபப்படும் அளவிற்கு நடந்து கொள்ளுதல் ஆகாது.

கோபம் வரக்கூடாது.

இதனையும் மிஞ்சினால் தன் கோபம் அழிவைத்தரும்.

உயர்வான எண்ணங்கள் வேண்டும்.

பொய் பொறாமை இவையெல்லாம் விட்டுவிடுதல் வேண்டும்.

பிறர் மனைவியை விரும்புதல் இவையெல்லாம் இவைதான் இக்கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

என் இடத்திலே வருகின்றார்கள் ஆனாலும் பிறன் மனைவியை எடுத்து எடுத்து கொண்டு வருகின்றார்களே 

இவர்களுக்கெல்லாம் நிச்சயம் தண்டனை உண்டு என்பதற்கிணங்க நிச்சயம் என் தந்தையவன் பின் உறுதி அளித்து விட்டான்.

நிச்சயம் இனிமேலும் தண்டனைகள் உண்டு என்பேன்.

மனிதன் சொல்லிச் சொல்லித் திருந்த போவதாக இல்லை.

ஏன் என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.

அது பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

இவையெல்லாம் உண்மையே

ஆனால் பொய்யான பக்தியைக் காண்பித்து கொண்டிருக்கிறான் மனிதன்.

அபிஷேகங்கள் இவை எல்லாம் எதற்காக செய்கின்றான் என்பது தெரியாமலே செய்து கொண்டிருக்கின்றான்.

இதனையும் முன்னிறுத்தி இனிமேலும் இதனையும் என்று கூற தெரியாமல் பின் பின் தீயவினைகள் செய்து பின் அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்தால் திரும்பவும் அவனுக்கு கெடுதல்கள் தான் வரும்.

கெடுதல்கள் தான் வரும். அப்பொழுது இறைவன் மீது பழி போடுவதா??

ஆனாலும் தூய மனதோடு எதை எடுத்துக் கொண்டாலும் எதைக் கொடுத்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான் மற்றவை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள படமாட்டான்.

இதனையும் அறிந்து உண்மை நிலையை குறிப்பது உண்டா??

இவ் என் தந்தையின் மலையிலே(மாதேஸ்வரன் மலை). நிச்சயமாய் இவந்தன்   அதிகாலையிலே கண்ணப்பன் (கண்ணப்பநாயனார்) அனுதினமும் வந்து இப்பொழுதுகூட எதனையும் என்று நினைக்கும் அளவிற்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து கொண்டு வருகின்றான்.

இதனையும் அறிந்து ஏன்  இவந்தனக்கு(கண்ணப்பநாயனார்) அவ்வளவு கொடுத்தான் என் தந்தை ஈசன்.

இவன் பக்தன்

என் பக்தன்.

பக்தனென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் .

ஈசனே எல்லாம். மற்றவையெல்லாம் பொய்யென்ற நிலைமைக்கு வந்துவிட்டான்.

ஈசனே உண்மை உண்மை உண்மை என்றெல்லாம் திரிந்து திரிந்து என் தந்தை அருளைப் பெற்று விட்டதால் அதனால் இவந்தனும் என் தந்தையிடம் கேட்டான்.

இப்பொழுது இவ்வுலகத்தில் எப்போதெல்லாம் தர்மம் அழிந்து நிற்கின்றதோ அதர்மம் தலை தூக்கி நிற்கின்றதோ அப்போதெல்லாம் நான் வந்து பூஜைகள் அபிஷேகங்கள் உந்தனுக்கு செய்ய வேண்டுமென்று அதனால் தான் இப்பொழுது தர்மங்கள் அழிந்து கொண்டிருக்கும் வேளையில் கண்ணப்பன் இப்பொழுது பூசைகள் செய்து செய்து என் ஈசனே வா வா என்று கூட அழைத்துக் கொண்டிருக்கின்றான்.

பின் ஆழ்ந்து சிந்தித்து கேட்டுக்கொண்டே இருக்கின்றான் இதுதான் பக்தி. மற்றவையெல்லாம் பக்தி ஆகாது.

தன் சுயநலத்திற்காக சுயநலத்திற்காகவே செய்கின்ற படியினால் பக்திகள்  ஆகாது.

காசுக்காக பக்திகளா??

எதனையும் என்று மனிதர்களே !

காசுக்காக பக்திகளா??

மனிதர்களே திருந்திக் கொள்ளுங்கள்.

அதுதான் நல்லவை. மேன்மை நிலை தரும்.

அனைவரும் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். போதுமானது.

யாங்களே வந்து ஏன்? ஞானிகளே வந்து அனைத்தும் கொடுப்பார்கள் அதை தவிர்த்துவிட்டு நீங்கள் சென்று கொண்டேருந்தால் இயற்கையால் அழிவுதான் ஏற்படும் என்பேன்.

இயற்கையும் அசைக்கப்பட்டு பின் எதன் மூலம் அழிவுகள் ஏற்படுத்த முடியுமோ அவையெல்லாம் என் தந்தையே ஏற்படுத்துவான் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.

அதனால் பொய்யான மனிதர்களே இனியும் திருந்திக் கொள்ளுங்கள் திருந்தா விடில்  நிச்சயம் என் தந்தை மூலம் தண்டனைகள் உண்டு.

இதனையும் அறியாமல் பொய் வேடதாரிகள் பொய் மனிதர்கள் சித்தர்கள் என்றெல்லாம் மனிதர்கள் சொல்லி திரிந்து கொண்டிருக்கின்றனர் இதனால் மக்கள் சித்தர்கள் பொய்யானவர்கள் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

ஆனாலும் இனிமேலும் அனைவரையும் ஏமாற்றலாம் ஆனாலும் இறைவனிடத்தில் உன் ஆட்டம் செல்லாது. செல்லாது என்பேன்.

இதனையும் நன்கறிந்தால் இனிமேலும் சித்தர்கள் ஒவ்வொருவராக பின் நன்கு அறிந்து ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுப்பார்கள் அதற்கு தகுதி உடையவராக நீங்கள் இருந்தால் போதுமானது.

ஆனாலும் சித்தர்கள் எங்களுக்கு வரம் தரவேண்டும் அருள் கூற வேண்டும் என்றெல்லாம் பல மந்திரங்கள் இதையெல்லாம் பலிக்காது.

இவையென்றும் எதனை என்று மனதால் நிறுத்தி அன்பாக வழிபட்டாலே போதுமானது.

வந்துவிடுவார்கள்.

இதனையும் முன்னிறுத்தி எதனை எதனை என்று கூற அதிலும் பொய் பித்தலாட்டங்கள் கூறி காசும் பறிப்பார்கள்.

வருவார்கள் திருடர்களப்பா.!

அகத்தியன் 

போகன்

திருமூலன் இவர்கள்தான் வாக்குகள் செப்பு கின்றார்கள் என்பதைக்கூட பொய் கூறுவார்களப்பா இனிமேலும்.

காசுகள் பறிப்பார்களப்பா.

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்றெல்லாம் காட்டி கற்புகளைப் சூறையாடுவார்களப்பா.

அப்பனே வேண்டாம்.

இவையன்றி கூற இனிமேலும் வருவார்களப்பா.

பின் அகத்தியன் வாக்குகள் உரைக்கின்றான் என்பது தவறாக பயன்படுத்தி காசுகள் பறிப்பான் பித்தலாட்டங்கள் செய்வான் .

யான் விதியவே மாற்றவல்லான் என்பான். 

திருடனப்பா.

அப்படியெல்லாம் கூறுகின்றவன் திருடனப்பா! திருடன்ப்பா!

இவற்றையெல்லாம் நம்பாமல் இருப்பது நன்றே நன்று. 

இனிமேலும் பின் பல பெண்கள் இனிமேலும் சாமிகள் சாமியார்கள் என்று தேடிப் போவார்கள்.

ஆனாலும் என்னுடன் அகத்தியன் இருக்கின்றான் என்னுடன் அகத்தியன் பேசுகின்றான் போகன் பேசுகின்றான் திருமூலன் பேசுகின்றான்,  ஈசன் பேசுகின்றான், கந்தன் பேசுகின்றான் என்றெல்லாம் பொய் கூறுவார்கள் நம்பி போய்விடாதீர்கள்.

நம்பி போய்விடாதீர்கள் பெண்களுக்கு இனிமேலும் தண்டனைகள் எவ்வாறு வரும் என்பதால் சிறிது ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

உண்மை இல்லைப்பா இவ்வுலகத்தில். போலியானவர்களே வந்து விடுகின்றார்கள்.

அப்பனே எதற்கு வருகின்றார்கள் என்பது தெரியுமா?

அப்பனே ஒன்றும் நடக்கவில்லை அவந்தன் தன் வாழ்க்கையில் பின் இப்படி சாமியார் வேடமாவது போட்டு பறித்தால் அனைத்தும் நடக்கும் என்பதை கூட தெரிந்திருக்கின்றான்.

இதனால் அனைவரையும் அழைத்து பொய் கூறி பித்தலாட்டங்கள் கூறி அனைத்தும் செய்கின்றேன் என்றெல்லாம் கூறி வாழ்ந்து வருகின்றான்.

ஆனாலும் இவ்வுலகத்தை படைத்தவன் இறைவன் அவந்தனுக்கு தெரியும் மனிதனுக்கு எவ்வாறு செய்வது என்று.

ஆனால் மனிதன் தான் பெரியவனா??

இதனையும் நன்கறிந்து இனிமேலும் வேண்டாமப்பா.

வேண்டாமப்பா பொய் கூறாமல் இருக்க வேண்டும்.

இறைவன் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

கஷ்டங்கள் எதற்காக வருகின்றது என்பதை கூட சிறிது யோசியுங்கள்.

அவ் கஷ்டத்திற்கு யார்? காரணம்? நீங்கள்தான் காரணம். என்பேன்.

மனிதன் மனிதனை அழித்துக் கொள்வான் என்பேன்  அழித்துக் கொள்வதற்கு சமமான வழிகள் மனிதனுக்கு உண்டா என்பதற்கிணங்க எதனால் என்பதைக்கூட ஒவ்வொரு படைப்புக்களும் இறைவனுடைய படைப்புக்கள் அதனால் இதனையும் என்றும் கூட ஆனாலும் பொய்யான மனிதர்களே சித்தர்கள் எவை என்று கூற ஒருவன் பின் இனிமேலும் அகத்தியன் தான் யான் என்று கூட சொல்லிக்கொண்டு போய்க்கொண்டு திரிவான் .

இதனையும் என்று கூட உண்மையா? பொய்யா? என்று மனிதர்களை பார்த்தால் 

பின் காப்பதா? இல்லை கஷ்டங்களை கொடுப்பதா? 

என்பதை அறியாமல் போய்க் கொண்டிருக்கின்றது நிச்சயம் தண்டனை உண்டு தண்டனை உண்டு.

எதனை எதனையோ நினைத்து எதன் மூலம் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை கூட சரியாக சித்திரகுப்தன் கணித்துக் கொண்டு தான் இருக்கின்றான்.

இதனால் நிச்சயமாய் அவனவன் பாவங்கள் செய்து விட்டு இருக்கின்றனர்.

இதற்குப் பின் யானும் பார்த்தேன் சென்றேன்.          சித்திர குப்தனிடம் 

பாவங்கள் பெரிதாக இருக்கின்றதா? புண்ணியங்கள் பெரிதாக இருக்கின்றதா? மனிதர்களிடத்தில் என்று கேட்டேன் சித்ரகுப்தனிடம்.

சித்திரகுப்தனோ

அன்பான மகனே பாவங்கள் தான் முக்கால் பங்கு இருக்கின்றது கால் பங்கு தான் புண்ணியம் மனிதர்கள் அதிலும் கால்பங்கு கூட இப்போது குறைந்து விட்டதே எவ்வாறு? என்று கூறினான்.

யானும் சொன்னேன் என் தந்தையிடம் இவ்வாறு மனிதர்கள் இருக்கின்றார்களே

இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று.

திருந்தப் போவதாக இல்லை சித்தர்கள் பல ஞானியர்கள் பலப்பல ஞானியர்கள் வந்து இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை கூட குறிக்கோள் ஆகவே நல்லெண்ணத்தோடே பின் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார்கள் ஆனாலும் மனிதன் அதையெல்லாம் ஏற்கவில்லை.

நிச்சயமாய் தண்டனைகள் மூலமாகத்தான் இதனை கொடுத்து நல்வழி படுத்த முடியும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டான் என் தந்தையவன்.

மாற்றிக்கொள்ளுங்கள்.

மாறா விடில் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் யானும் இனிமேலும் சொல்ல மாட்டேன்.

அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே வணங்கி வணங்கி

இந்த சஷ்டி தனிலே நல்லாசிகள் பலவும் தந்து விட்டேன்.

ஆனாலும் அவ் ஆசிகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது உங்கள் இடத்திலேயே இருக்கின்றது ஆனாலும் சரியானது எவை எதனை என்று கூட ஏன் ஈசனான என் தந்தையும் தண்டனைகள் இனிமேலும் அடிக்கடி கொடுப்பான் இப்புவிதனிலே.

இப்புவிதனிலே சித்தர்களை தேர்ந்தெடுத்து என் தந்தையே இவ்வாறு செய்க என்று அனுப்புவான் அனுப்பிவிட்டு மனிதர்களை மாற்றுவான் நிச்சயம் சித்தர்கள் தரிசனமும் நிச்சயம் நல் மனதோடு இருக்கின்றவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

அப்பனே வாக்குகள் இன்னுமும் உண்டு இன்னும் உண்டு பல கோடிகள்.

சித்தர்களும் செப்புவார்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

6 comments:

  1. என்னுடைய முருகப்பெருமான் நான் கேட்ட கேள்விக்கு பதில் தந்துள்ளார் ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  3. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  4. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  5. Translation:
    https://drive.google.com/file/d/19v4JsBZZUZcTOAngdPoWYfZKQm53bUoi/view?usp=sharing

    ReplyDelete