​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 26 July 2016

சித்தன் அருள் - 388 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"அருமையான அற்புதமான "சாலை" அல்ல எமது "சித்தர்கள் சாலை". கற்களும், முற்களும், ஆணித்துண்டங்களும் நிறைந்தது, எமது "சாலை". பாதத்தில் ரணம் ஏற்படும், குருதி வழியும், வலிக்கும். அதோடுதான் வர வேண்டும். ஏன் என்றால், எளிய மார்க்கம் என்றால், அனைத்து மூர்க்கர்களும், இது வழி வருவார்கள். ஆகவே, சகலவித ஆதரவோடு, மெய்யான, மெய் ஞானத்தை நோக்கி வர முடியாது." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு.

No comments:

Post a Comment