​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 5 July 2016

சித்தன் அருள் - 367 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"ஒவ்வொரு மனிதன் பின்னால், எத்தனையோ பாவவினைகள் மறைந்து நின்று செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப்போட வேண்டுமென்றால், பகவானின் திருவடியை, சதா சர்வகாலம் எண்ணுவதோடு, எந்த வித குழப்பம் இல்லாமலும், சந்தேகமில்லாமலும் அள்ளி அள்ளி தந்துகொண்டே போகிற "தர்மம்" ஒன்றுதான், எளிய வழி. இந்நிலை உயர உயர ஒரு மனிதனின் உச்சநிலையிலே "இனி என்னுடையது என்று ஏதும் இல்லை! எல்லாம் இறைவன் தந்து, என் கண்ணில் படுகின்ற மனிதர்களுக்கு என்ன தேவையோ, பிற உயிர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ, என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உதட்டால் முடிந்த உதவியை செய்கிறேன். உள்ளத்தால் முடிந்த பிரார்த்தனையை செய்கிறேன். யான் பெற்ற பொருளால் முடிந்த உதவியை செய்கிறேன், என்று உடல், பொருள், ஆவி அனைத்தையும் பிறருக்காக அர்ப்பணம் செய்கின்ற குணம் வந்துவிட்டால், இறைவன் அருள் அவனிடம் பரிபூரணமாக பரிமளிக்க தொடங்கும். இகுதொப்ப நிலையிலே, பிறருடைய பிரச்சினைகளை நீக்க ஒரு மனிதன் முயற்சி செய்தாலே, அவனுடைய பிரச்சினைகளை தீர்க்க இறைவன் முன் வந்துவிடுவான்." - அகத்திய பெருமான் அருள் வாக்கு! 

No comments:

Post a Comment