​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 18 July 2016

சித்தன் அருள் - 380 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"ஒரு வீட்டை வாங்கும்போது இருக்கின்ற மகிழ்ச்சி, அதை விற்கும் பொழுதும் இருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது இருக்கும் மனநிலை, அது இறக்கும் பொழுதும் இருக்க வேண்டும். தனம் வரும் பொழுது இருக்கும் மனநிலை, அது கையை விட்டு போகும் பொழுது இருக்க வேண்டும். இப்படி மனம் பக்குவமடைய வேண்டும். இது கடினம்தான் என்று எமக்கு தெரியும். என்றாலும், முயற்சியும், பயிற்சியும் செய்தால் அது சாத்தியப்படும். அந்த பக்குவத்தை பெற நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் தாங்க வேண்டும். இதுவே பற்றை அறுக்கும் வழி." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

No comments:

Post a Comment