​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 12 July 2016

சித்தன் அருள் - 374 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"நீங்கள் அனைவருமே, முன் ஜென்மங்களில் சித்தர்களிடம் உரையாடியவர்கள்தான், உறவாடியவர்கள்தான். அப்போது நீங்கள் எல்லாம் யாது கேட்டீர்கள்? என்றால், "எத்தனை பிறவிகள் எடுத்தாலும், உங்களை மறக்கக்கூடாது" என்று கேட்டீர்கள். எனவே, நீங்கள் மறந்தாலும், நாங்கள் யாரையும் மறக்க மாட்டோம். மறந்தும் கை விடமாட்டோம், என்பதால் (நீங்கள் அனைவரும்) சித்த வழி தொண்டு செய்ய வேண்டும். அந்த வழியிலே இறையை காணவேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

1 comment:

  1. Gurudeva ungal pathangalil panikirom...om agatheesaya namah

    ReplyDelete