​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 14 July 2016

சித்தன் அருள் - 376 - "பெருமாளும் அடியேனும்" - 58 - பெருமாளின் விளையாட்டு!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த வார சித்தன் அருளை தொடரும் முன், ஒரு சிறிய விஷயம் கூறலாம் என்று ஒரு அவா. திரு.சரவணன் பழனிச்சாமி, இந்தவாரப் படத்துடன், அவரது 100வது படத்தை, சித்தன் அருளுக்காக வரைந்து, அகத்தியருக்கு சேவை செய்துள்ளார். அவரின் இந்த சிறந்த பணி, மேலும் மேலும் தழைத்தோங்கி, அகத்திய பெருமானிடம் எல்லா அருளும் பெற்று, அவரும் அவர் குடும்பமும் சிறப்பாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அகத்தியர் அடியவர்களாகிய நீங்களும், உங்கள் வாழ்த்துக்களை , இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

இனி சித்தன் அருளுக்கு செல்வோம்!]  

“எதிர்க் கரைக்குத்தானே போகவேண்டும்? இதோ என் பரிசல் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஏறுங்கள். பத்திரமாகக் கொண்டு சேர்க்கிறேன்” என்று சொன்னார் ஒரு வயோதிக பரிசல்காரர்.

“எப்பொழுது பரிசல் வரும்? கண்ணுக் கெட்டிய தூரம் வரை எந்தப் பரிசலும் காணவில்லையே”

“தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ வந்துவிடும்.” என்று பவ்வியமாகப் பேசினான் அந்தப் பரிசல்காரன்.

சிறிது நேரம் கழிந்தது.

தலையில் ஒரு பரிசலைத் தூக்கிக் கொண்டு நான்குபேர் கேசரியின் பக்கம் வந்தார்கள்.

“சிறு துளை விழுந்து விட்டது. ஒரே நாழிகையில் அந்தத் துளையை அடைத்து விடுகிறேன். பிறகு பரிசலில் போகலாம்.” என்று பரிசலைத் தூக்கிக் கொண்டு வந்தவர்களில் ஒருவன் பதற்றத்துடன் கூறினான்.

கேசரிக்கு பேச்சே வரவில்லை.

எவ்வளவு சீக்கிரம் இந்தக் கோனேரிக் கரையைக் கடக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நாமும் தப்புவோம். அனுமனும் தப்புவான். அஞ்சனையைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் கேசரி எண்ணினானே தவிர மற்ற எதைப் பற்றியும் கவலைப் படவில்லை.

இன்னும் சொன்னால் அனுமனுக்குப் பசித்தால் என்ன கொடுப்பது என்பதைக் கூட சிந்திக்கவில்லை.

பரிசல் தயாரானதும் கேசரி கேட்டான்.

“நான் மட்டும் பரிசலில் ஏறலாமா? அல்லது என்னுடன் வந்திருக்கும் குதிரையையும் பரிசலில் ஏற்றலாமா?”

“இரண்டு பேருமே பரிசலில் ஏறலாம்.”

“பயம் ஒன்றும் இல்லையா?.”

“இல்லை.”

“கோனேரிக் கரையில் வெள்ளம் வெகுவாக ஓடிக்கொண்டிருக்கிறதே! அந்தப் பரிசல் ஏதோ துளை ஒன்றைச் சரி செய்வதாகச் சொன்னீர்களே, அதனால்தான் பயம் ஏற்பட்டது.”

“தாங்களோ குறுநில மன்னர். தங்களுக்கு வேண்டிய படைபலமும் மனப்பலமும் இருக்கிறது. தன்னம்பிக்கையும் இருக்கிறது. அப்படியிருந்தும் தாங்களே இந்தப் பரிசிலில் செல்லப் பயந்தால் எப்படி?” என்று கிண்டலும் கேலியுமாகக் கேட்டான் அந்த பரிசல்காரக் கிழவன்.

இந்தப் பேச்சு கேசரிக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. இருந்தாலும் கரையைக் கடந் தாக வேண்டுமே என்பதற்காகப் பொறுத்துக் கொண்டான்.

சில விநாடிகளில் அந்தப் பெரிய பரிசலில் குதிரை ஏறிக்கொண்டது. அனுமனைக் கொண்ட அந்தப் பெட்டியை மிகவும் ஜாக்கிரதையாகத் தன் கையில் எடுத்துக் கொண்ட கேசரி பரிசலில் அமர்ந்தான்.

பாதி தூரம் பரிசல் சென்றிருக்கும். கேசரியின் பாதத்தில் ஜல்லென்று ஏதோ ஒன்று தொட்டது. குனிந்து பார்த்தான். பரிசலில் சிறு ஓட்டை லேசாகத் தெரிய அதன் வழியாக மெல்ல தண்ணீர் புகுந்து கொண்டிருந்தது. பதறிப் போனான் கேசரி.

ஒருவேளை பரிசலுக்குள் தண்ணீர் புகுந்து குதிரையோடு தானும் தன் மகன் அனுமனும் தண்ணீரில் விழுந்துவிட்டால் அனுமனை எப்படிக் காப்பாற்றுவது? என்ற பயம் விநாடிக்கு விநாடி அதிகமாயிற்று.

கேசரிக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை.

“பரிசலை உடனே கரைக்குத் திருப்பு” என்று ஆணையிட்டான் கேசரி.

“நடுவில் இருக்கிறோம். இங்கும் போக முடியாது. அங்கும் போகமுடியாது. மேலும் காற்றும் அதிகமாக வீசுகிறது. வானத்திலும் மேகம் கடுமையாகச் சூழ்ந்திருக்கிறது. கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். இன்னும் ஒரு விநாடியில் அக்கரையை அடைந்து விடலாம்.” என்று கேசரியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் முழுமுயற்சியோடு பரிசலை அக்கரைக்குச் செலுத்திக் கொண்டிருந்தான் அந்தப் பரிசல்காரன்.

“ஐயா! பரிசலில் துளை விழுந்து விட்டது”

“பயப்படாதீர்கள். எப்படியும் கரையில் சேர்த்து விடுகிறேன். சற்று இந்தப் பக்கம் சாய்ந்து உட்காருங்கள். குதிரை மிரள்கிறது. அதனை வார்த்தையால் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்”

தான் தர்மசங்கடமான நிலையில் மாட்டிக் கொண்டு விட்டதாக எண்ணிய கேசரி, எப்படி இக்கட்டிலிருந்து மீண்டு அனுமனைக் காப்பாற்றி அக்கரைக்குச் செல்லப் போகிறோமோ என்ற கவலை ஏற்பட்டது.

இவன் என்ன சொன்னாலும் காது கேட்காத பரிசல்காரன். இவனால் இனி எதுவும் செய்ய முடியாது. ஈசன் விட்டவழி என்று சோர்ந்து போனான்.

இத்தனை நாழிகையும் பொறுமையாக பெட்டியிலுள்ள பட்டு மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த பால ஹனுமானுக்கு சட்டென்று பசி ஏற்படவே ஏற்கெனவே வாங்கி வைத் திருந்த பசும்பாலை எடுத்து அனுமனுக்குக் கொடுக்க முற்பட்டான் கேசரி.

ஆனால்-

பால ஹனுமானோ பால் குடிக்க விரும் பாமல் தாய் அஞ்சனையை நினைத்தே அழ ஆரம்பித்தான். குழந்தையைத் தட்டிக்கொடுத் துப் பார்த்தான். ஏதேதோ விளையாட்டுகளைக் காட்டிப் பார்த்தான். குதிரையைக் காட்டி ஏதேதோ சொல்லி குழந்தை பால ஹனு மானைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றான் கேசரி.

நேரம்தான் வீணாகிக் கொண்டிருந்ததே தவிர பால ஹனுமான் அழுகை தான் நதியின் வேகத்தைவிட அதிகமாகிக் கொண்டிருந்தது.

இதைக்கண்டு தன் அத்தனைத் திட்டங் களும் பொடிப்பொடியாகி விட்டதாகவே எண்ணி நொந்துபோனான் கேசரி.

இதற்குள்-

பரிசலின் ஓட்டை அதிகமாகிவிடவே, பரிசலுக்குள் தண்ணீர் புகுந்து விடவே பரிசல் படிப்படியாக கோனேரி வெள்ளத்தில் பரிசல் மூழ்க ஆரம்பித்தது.

கேசரி திணறிப் போனான்.

பரிசலில் இருந்த கேசரியின் குதிரையும் திணற ஆரம்பித்தது. கையில் இருந்த பால ஹனுமானும் அழுகையை நிறுத்தவில்லை. நிலைமை கட்டுக்கு மீறிப்போகவே, “வேங்கடவா! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று முழுச் சரணாகதி அடைந்தான் கேசரி.

எப்போது முழுச்சரணாகதி அடைந்து விட்டானோ அப்போதே திருமலைவாசன் கேசரிக்கு அடைக்கலம் தர முன்வந்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் அந்த அதிசயமும் நடந்தது.

யாரோ ஒருவர் கேசரியின் கையிலிருந்து பாலஅனுமானை சட்டென்று தூக்கிக் கொண்டார்.

பரிசலில் இருந்த ஓட்டை அடைந்தது. பரிசலுக்குள் இருந்த நீர் சட்டென்று காணாமல் போயிற்று. கேசரியின் குதிரையைத் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்வதும் தெரிந்தது.

அதைவிட ஆச்சரியம் என்னவெனில் கோனேரி நதிக்கரையில் வந்த வெள்ளம் சட்டென்று மறைந்தது. படகு போன்று பரிசல் நிதானமாகச் சென்று கொண்டிருக்க பிரிசல்காரனைக் காணவில்லை.

அதைக் கண்டு கேசரி திகைத்துப் போனான்.

ஒருவேளை பரிசல்காரன் கோனேரி வெள்ளத்தில் விழுந்து மூழ்கியிருப்பானோ? வயதான கிழவன் ஆயிற்றே! என்று கவலைப்பட்டான். அப்போது-

ஓர் அசரீரிக் குரல் வடகிழக்கிலிருந்து கேட்டது.

“கேசரி! திகைக்காதே. உன் அருமைக் குழந்தை இப்போது என் கையில் பத்திரமாக இருக்கிறது. பரிசல் ஓட்டை அடைந்ததும் பரிசல்காரனாக வந்ததும் யாம்தான்.

உன் தவறான நடவடிக்கைக்கு ஒரு சிறு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவே யாம் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். உன்னால் அழும் குழந்தை யைச் சமாதானம் செய்ய முடியவில்லை. சில மணி நேரம் கூட உன்னால் காப்பாற்ற முடியாத உன் குழந்தையை திருமலையிலிருந்து தூக்கிக் கொண்டு போனது எவ்வளவு பெரிய தவறு? இந்தக் குழந்தையை எப்படி உன்னால் வளர்க்க முடியும்? யோசித்துப்பார்.” என்றார் திருமலை வாசன்.

ஐந்து விநாடி அமைதியானான் கேசரி.

“என்னை மன்னித்துவிடுங்கள். நானும் பாலஹனுமானும் மறுபடியும் திருமலைக்கே வந்து விடுகிறோம்” என்றார் திருமலை வாசனை நினைத்து. அடுத்த நாழிகையில் கேசரியின் கையில் பால ஹனுமான் சிரித்துக் கொண்டிருந்தான்.

சித்தன் அருள்.................. தொடரும்!

10 comments:

  1. சிறந்த பணி, மேலும் மேலும் தழைத்தோங்கி, அகத்திய பெருமானிடம் எல்லா அருளும் பெற்று, அவரும் அவர் குடும்பமும் சிறப்பாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் திரு. சரவணன்!!!

    ReplyDelete
  3. We are grateful to Shri Saravanan for his wonderful life-like illustrations!

    ReplyDelete
  4. Saravanan anna, Great service, which words can't explain, bringing out the visuals related to the article is perfectly a blessing indeed, May Guru bless you and family with all that is required for you in abundance and support you to continue your service.
    Thanks to Anna Karthikeyan and Anna Arunachalam for this opportunity,
    Aum Sairam, Om Agatheesaya Namaha;

    ReplyDelete
  5. உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் இறை அருளாலே, அகதியருடைய பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். நன்றி.எல்லோரும் இன்புற்று வாழ்க!

    ReplyDelete
  6. வணக்கம் திரு.சரவணன்,
    நீங்கள் வரைந்து கொடுக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் அற்புதம்.
    கதைக்கு ஏற்ற படி மிகவும் அருமையாக உள்ளது.
    உங்களுக்கும், மேலும் இவ்வலை தளத்தை நடத்தி வரும் திரு.அக்னி லிங்கம் மற்றும் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
    உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் அகஸ்தியர் அடியவர்கள் அனைவருக்கும் அகஸ்தியரின் பரிபூரண அருள் பெற அவரிடம் பிரார்த்திக்கிறேன்.

    என்றும் அன்புடன்,
    வெங்கடேஷ்

    ReplyDelete
  7. Namaskaram, Thiru.Karthikeyan Ayya, Thiru.Agnilingam Arunachalam Ayya & Thiru.Saravanan Ayya, its really a privilege for people like me from "Agasthiya perumanin Siddhan Arul" to know more about Sage Agastya and also the principles which they want every human being to follow, also more about the grace and bliss of Siddhar's.
    Also congratulations Thiru. Saravanan Ayya to this achievement, from the official posting of drawing on each and every week in this blog from Thursday, 8 May 2014 till date with the grace of Sage Agastya every time while we go through the context in the article the drawing posted also gives us the exact life-like situations.

    ReplyDelete
  8. Saravanan. Ur drawings are amazing. U r truly blessed soul. God Bless

    ReplyDelete
  9. Thanks for your beautiful drawing and Thanks for our Guru who is guiding us in right direction.Om Agasthiya Potri

    ReplyDelete