அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 4
ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:-
1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2
3. சித்தன் அருள் - 1876 - பகுதி 3 )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்கள் ஐயா.
அடியவர் 4 :- ( யோசித்தபடி) ஐயா அதை எப்படிக் கேட்பது? ( என்று தெரியவில்லை )
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ( இந்த அடியவர் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, அடியவர் சார்பில் அழகாகத் தொகுத்துப் பின்வருமாறு கேட்டார்கள் நம் குருநாதரிடம் )
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா என்ன கேட்க வருகின்றார் என்றால், எனக்கு எல்லாமே புரிகின்றது. என் முன் ஜென்ம வினைப்படி நான் சுக துக்கங்களை அனுபவித்து வந்து கொண்டிருக்கின்றேன். இனி எப்போது அடுத்த வளர்ச்சி என்பது அவர் கேள்வி ஐயா.
குருநாதர் :- அப்பனே மலர்ச்சியும் கொடுத்து விட்டேன் அப்பனே. இல்லையென்றால் அப்பனே இவன்தன் இங்கேயே இருந்திட வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே …( தனி வாக்குகள்). அப்படிச் செய்யவில்லை இவ் அகத்தியன்.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா (உங்களை, உங்கள் குடும்பத்தை ) அவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து (நம் அன்பு குருநாதர்) காப்பாற்றியுள்ளார்.
குருநாதர் :- அப்பனே கேள் இன்னும்.
அடியவர் 4 :- நமக்காக எந்த பிரார்த்தனையும் செய்ததில்லை. இப்பொழுது அல்ல. எப்போதுமே செய்ததில்லை.
குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் கேட்டாய் அப்பனே. இவையெல்லாம் நியாயமா என்று கூறு?
அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் அடுத்தவர்களுக்காகப் பாடு பட்டவர்கள் , நிச்சயம் ஓர் நாள் அப்பனே சுகம் அப்பனே உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவர்களுக்காக நாம் வேண்டிக்கொண்டால் , அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று, அவர்களுக்கு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாகச் சுகம் உண்டு என்று (அகத்திய மாமுனிவர்) சொல்கின்றார் ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- கேளுங்கள் ஐயா. ஐயா இதுதான் ஜீவ நாடி என்பது. இதுவரைக்கும் நேரில் நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கின்றேன். உங்களை cross question ( குறுக்கு விசாரனை நம் குருநாதர்) அவர் கேட்பார்கள் ஐயா.
அடியவர் 4:- ( தனி கேள்விகள் , வாக்குகள் )
குருநாதர் :- அப்பனே ஆனாலும் ( தனி வாக்குகள் விதி ரகசியங்கள்) அதாவது ஒரு தந்தையும் கூட ___ எவ்வாறு என்பதையும் கூட அப்பனே அனைத்தும் நல்லவைதான் செய்யவேண்டும் என்றெல்லாம் மனம் உருகியதையெல்லாம் அதாவது யுகம் யுகங்களாகப் பார்த்துக்கொண்டே வருகின்றேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே எனை நம்பியவர்கள் எதை என்றும் புரியப் புரிய ஆனால் அப்பனே விதியில் என்ன உள்ளது (என்பது) எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பனே. அதனால்தான் என் பக்தர்களை பக்குவப் படுத்தி கடைசியில் நல்லதைச் செய்வேன். கவலையை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். விதியில் உள்ள துன்பங்களை எல்லாம் கழித்த பின்பு , குருநாதரே அனைத்தையும் நடத்தி அருளுவார்கள் என்று எடுத்து உரைத்தார்கள்.)
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா ( அப்படிச் செய்யும் போது) எந்த ஒரு தடங்கல்களும் வராது.
அடியவர் 4 :- ஐயா கால நிர்ணயம் ஏதும் உண்டா? இல்லை நான் ரொம்ப நாள் wait பன்னனுங்களா?
குருநாதர் :- ( தனிப்பட்ட வாக்குகள். அதில் ஒரு முக்கிய வாக்கு ..) அப்பனே காலங்கள் நேரங்கள் அனைத்தும் என்னிடத்தில். (தனி வாக்குகள்) பொறுத்திரு அப்பனே. யானே முடித்து வைக்கின்றேன். அப்பனே ஆனாலும் உன் கடமையைச் செய்ய வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலும் வாக்குகளைக் கேட்க உற்சாகப் படுத்தினார்கள். அதனுடன் குருநாதர், அவர்கள் அழைத்ததால் தான் அங்கு இவ் அடியவர்கள் வர முடிந்தது என்று உரைத்தார்கள். )
அடியவர் 6 :- (காலம் சென்ற முன்னோர்கள் வழிபாடு குறித்து கேள்வி ஒன்று கேட்டார்கள். அதாவது முன்னோர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்களா என்று கேள்வி கேட்டார்கள். ஒரு முறை இவர்கள் முன்னோர் கனவில் வந்துள்ளார்.)
குருநாதர் :- இதே போல் அனுதினமும் நீ நிச்சயம் செய்திருந்தால் நிச்சயம் உன் சொப்பனத்திலே வந்து சொல்லிருப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள்)
குருநாதர் :- அப்பனே (உங்களுக்கு) பக்குவங்கள் இல்லாமல் யான் எதைச் செய்தாலும் வீணாகப் போய்விடும் அப்பனே.
( பல முக்கிய தனி வாக்குகள் )
குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு முரண்பாடாக கடுமையாக விதியில் உள்ளது. இப்படிப்பட்ட விதியை மாற்றுவதற்குக் குருநாதர் போராடித்தான் நடத்த வேண்டும் என்றும், இவ்விதியின் ரகசியங்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்றும் மனிதர்களிடத்தில் (விதி தெரியாமல் ஜோதிடர்கள்) இடத்தில் சென்றால் குழப்பி விடுவார்கள் என்றும், இப்படிப்பட்ட விதி மாற்றங்களைச் செய்ய குருநாதர், சித்தர்கள் உதவி மனிதர்களுக்கு அவசியம் தேவை என்றும் , விதியில் உள்ளதை சித்தர்களைத்தவிர யாரும் எடுத்துரைக்க இயலாது என்றும், அப்படி எடுத்துரைத்தாலும் தோல்வியில் போய் முடிந்து விடும் என்றும் எடுத்து உரைத்தார்கள் நம் அன்பு கருணைக் கடல்.)
(ஜீவ நாடி மர்மங்கள்)
குருநாதர் :- தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும், தந்தை நினைக்கின்றார்கள் அப்பனே. அதே போலத்தான் அப்பனே. (உங்களின் அன்புத் தந்தையாக) யான் அனைத்தும் (உங்களுக்கு வாக்குகளாக) சொல்வேன் அப்பனே. ஆனால் சில பாவங்கள் கூட சுவடியைக்கூட அதாவது எதை என்று அறிய அறிய யான் சொல்லி விடுகின்றேன் அப்பனே. அதாவது அதைப் படித்தாலும் அப்படித்தான் அப்பனே. பாவத்தை நெருங்க விடமாட்டேன் (எனது இவ் சுவடியை ஓதும் என் மைந்தனான ஜானகிராமன்) இவந்தனையும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா. ஐயா (எதிர்காலத்தில் விதியில் கடுமையாக நடக்க உள்ளதை) சில ரகசியங்கள் சொல்லிவிட்டால் , (நம் குருநாதரால் எளிதாக) easyஆகச் சொல்லிவிடுவார். (சுவடி ஓதும்) என்னையும் அதாவது இவனையும் பாவத்தில் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார்.
குருநாதர் :- அப்பனே கேட்கின்றாயா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது கேளுங்கள்.
அடியவர் 4 :- (தெளிவு நிலை)
குருநாதர் :- அப்பனே புரிகின்றதா? எதற்காக என்னைத் தேடி வந்தாய் என்பதை? அப்பனே இதுதானப்பா புண்ணியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா தெரிகின்றதா? நீங்கள் அப்படி இல்லையென்றால் நீங்க பல இடங்களுக்கு (விளக்கங்கள் தேடி) போய்க் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது (உண்மை நிலை) தெரிகின்றதா? இந்த விசயங்களை யாரும் சொல்ல மாட்டார்கள் என்று சொல்கின்றார் ஐயா. விதியில் உள்ளதை யாரும் சொல்ல மாட்டார்கள். (சித்தர்களால் மட்டுமே சொல்ல இயலும்.)
அடியவர் 4 :- இவங்க தினப்படி என்ன செய்ய வேண்டும்?
குருநாதர் :- அப்பனே யான் மாற்றுகின்றேன் என்று சொல்லி விட்டேன் அப்பனே? மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் அப்பனே? இதைத்தான் கூறுகின்றாய்.
அடியவர் 4 :- அது சரிங்க ஐயா. Surrender ஆகின்றேன் ஐயா. ( உங்கள் முன் பணிகின்றேன்.) தினமும் routine என்ன செய்ய வேண்டும்.
( ####### விநாயகர் அகவல் பாடல் ரகசியங்கள் ####### )
குருநாதர் :- அப்பனே விநாயகனின் சீதக்களப என்னும் பாடலை அப்பனே விநாயகப் பெருமானின் அருகில் தீபம் ஏற்றிப் பாடச்சொல் அப்பனே. பின் போதுமானது. அதுமட்டும் இல்லாமல் அனுதினமும் விநாயகப் பெருமானுக்கு
ஏதாவது புஷ்பத்தைச் சாற்றி, அப்பனே பின் வணங்கி வரச்சொல் அப்பனே. நிச்சயம் நவ முறை சுற்றச்சொல் அப்பனே. நிச்சயம் பிள்ளையோனும் மகிழ்ந்து அனைத்தும் செய்வான் அப்பனே. ஞானத்தை அள்ளித் தருவான் என்பேன் அப்பனே. இன்னும் சிறப்பான வாழ்க்கை உண்டு.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அளித்த வாக்கு - சித்தன் அருள் 1668 - காசி மீர்காட் கங்கை கரை. விநாயகர் அகவல் பாடலில் உள்ள முழு அதி ரகசியம் அதனைத் தெரிந்து கொள்ள இந்த பதிவினை படியுங்கள்.
அடியவர்களுக்காக இட்ட விநாயகர் அகவல் பாடல் கானொளி ( YouTube link ) :-
https://youtu.be/tOvBaBg6Ih4
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1764 - திதியில் செய்ய வேண்டியவை!
(# சங்கடஹர சதுர்த்தி ரகசியம் #) :-
“சங்கடஹர சதுர்த்தி அன்று அப்பனே பின் பிள்ளையோனுக்கு, நல்முறையாக 9 குடங்களில் நீர் நிரப்பி, அவனை குளிப்பாட்டினால் யோகங்கள் வரும் அப்பா.”
சங்கடஹர சதுர்த்தி அன்று ஆலயத்தில் அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒன்பது குடங்கள் அல்லது ஒன்பது தீர்த்த சொம்புகளில் நீர் நிரப்பி 9 முறை விநாயகருக்கு அபிஷேகம் செய்து வர வேண்டும்... ஆலயங்களுக்குச் சென்று செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் கணபதி சிலைக்குச் செய்து வரலாம். விநாயகப் பெருமானை இவ்வாறு அபிஷேகம் செய்தால் யோகங்கள் உங்களுக்கு வரும் என்று குருநாதர் வாக்கு.
அடியவர்கள் பயன்படுத்திக் கொள்க.
வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம். )
அடியவர் 4 :- ஐயா ஒரு கேள்வி கேட்கலாமா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்க ஐயா. அவர் அருமையாக வந்து நிற்கின்றார் (நம் குருநாதர்).
அடியவர் 4 :- நான் ஏதாவது தவறு செய்கின்றேனா? ஏதும் திருத்திக் கொள்ள வேண்டுமா? அதனால் time waste ஆகுதுங்களா?
குருநாதர் :- அப்பனே எழுந்து எழுந்து உட்கார். பார்ப்போம்.
அடியவர் :- ( குரு நாதர் உரைத்தவாறு உடனே செயல்பட ஆரம்பித்தார்)
மற்றொரு அடியவர் :- ( சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்)
சுவடி ஓதும் மைந்தன் :- அவருக்கு வாக்கு போய்க் கொண்டிருக்கும் போது நீங்கள் கேட்கக் கூடாது அம்மா. உங்களுக்கும் குருநாதர் வாக்கு உரைப்பார்கள். (சற்று பொறுங்கள் தாயே!).
( சில மணித்துளிகள் அடியவர் #4 எழுந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே இருந்தார்கள். அதன் பின் இறைவன், குருநாதர் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள்.)
குருநாதர் :- அப்பனே இப்பொழுது என்ன ஞாபகம் வருகின்றது?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இப்போது எழுந்து எழுந்து உட்கார்ந்தீர்களே, (அப்போது அந்த நேரத்தில் ) என்ன ஞாபகம் வந்துள்ளது என்று கேட்கின்றார் ஐயா.
அடியவர் 4 :- சொல்லத் தெரியவில்லைங்க. இப்பதான் (எழுந்து எழுந்து உட்கார்ந்து ) முடித்தேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எழுந்து எழுந்து உட்கார்ந்த அந்த நேரத்தில் என்ன ஞாபகம் வந்தது என்று சொல்லுங்கள் ஐயா.
அடியவர் 4 :- நீங்க சொன்னவற்றை follow பன்னேன்ங்க. ( எழுந்து எழுந்து உட்கார்ந்ததை).
குருநாதர் :- அப்பனே அதனால் பின் சொல்லியதைச் செய். மீதி எல்லாம் பார்த்துக்கொள்கின்றேன் யான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி உட்கார்ந்து எழுந்த போது ஏதாவது நினைத்தீர்கள் என்றால் நீங்க இங்க கேட்கலாம். அதேபோல் (நீங்கள்) போய்க்கொண்டே இருங்கள் என்று சொல்கின்றார் ஐயா. (உங்களை) நான் பார்த்துக்கொள்வேன் என்று கூறுகின்றார். அடுத்த கேள்வி ஐயா?
அடியவர் 4 :- தினமும் ஒரு நாளை எப்படி (கடக்க) pass பன்னவேண்டும் என்று தெரிந்தால் இந்த (மாதிரி) சிக்கல் வராது ஐயா.
குருநாதர் :- அப்பனே அதனால்தான் (இறை வழங்கும் கஷ்டங்கள், சோதனைகள் என்ற) அலைக்கழிப்புக்கள். இப்பொழுதே இவ்வாறு இருக்கின்றாய். மீண்டும் கொடுத்தால் தாங்க மாட்டாய் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? ( அங்குள்ள மற்றொரு அடியவரைப் பார்த்து) ஐயா கொஞ்சம் explain பன்னுங்கய்யா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- நான் சொல்வதை மட்டும் கேட்டு இதையே followபன்னுங்க என்று சொல்கின்றார் ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- (இன்னும்) கேளுங்கள் ஐயா.
அடியவர் 4:- ஒவ்வொருத்தரும் வளர்கின்ற குழந்தைகள் இருக்கின்றார்கள். இப்போ parents வந்து எல்லாமே தெரியிரதில்லை. இல்லைங்களா? அப்போ அவங்க இடத்தில் இருந்து guide பன்னுவது எப்படி?
குருநாதர் :- அப்பனே ஒரு குழந்தை எழுந்து நிற்கின்றது அப்பனே. நீதான் அப்பனே எழுந்து நிற்கச்சொன்னாயா என்ன?
அடியவர் 4 :- இல்லைங்க ஐயா.
குருநாதர் :- அப்பனே அடிபட்டு , வீழ்ந்து எழுந்து நின்றால்தான் அனைத்தும் தெரியும் அப்பனே. அதுபோலத்தான் அப்பனே. சில மனிதர்களை யாங்கள் விட்டுவிடுவோம் அப்பனே. பின் அடித்து , மனக்குழப்பம் எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே, கடைசியில் வந்து நிற்பானப்பா எங்களிடத்தில் அப்பனே. ( உலகில் அனைத்தும் பட்டுத் தெரிந்து சித்தர்களிடம் வருவார்கள்.)
( சித்தர்களே, இறைவனே மனிதர்களின் அன்னை , தந்தை என்ற ரகசியம்)
அப்பொழுது தீவிரமாக தன் தாயவளைக் கூட பிடித்துக் கொண்டால் சிறிது சிறிதாகத் தூக்கி விடுவாள். அதே போலத்தான் யாங்களும்.
அதனால் கெட்டியாகப் பிடித்துக்கொள். ( அகத்தியன் ) என்னைப் பிடிக்க வில்லையென்றாலும், இறைவனைப் பிடித்துக்கொள்.
( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..)
(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து, உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள் - முதல் உயர் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். நம் வருங்காலத் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான உயர் புண்ணிய இறை வாக்கு இவ்வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் அவசியம் கட்டாயமாக சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களுக்குப் புரிய வைத்து, அதன் பின் அன்னமிட, அவ் சேவையில் பங்கு பெறும் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். உங்கள் வாழ்வில் புண்ணியங்கள் மலரட்டும். இவ்வுலகில் தர்மம் செழித்து ஓங்குக.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!