​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 18 June 2025

சித்தன் அருள் - 1879 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 4

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 4

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1

2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2

3. சித்தன் அருள் - 1876 - பகுதி 3 )

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்கள் ஐயா.

அடியவர் 4 :- ( யோசித்தபடி) ஐயா அதை எப்படிக் கேட்பது? ( என்று தெரியவில்லை ) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ( இந்த அடியவர் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, அடியவர் சார்பில் அழகாகத் தொகுத்துப் பின்வருமாறு கேட்டார்கள் நம் குருநாதரிடம் ) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா என்ன கேட்க வருகின்றார் என்றால், எனக்கு எல்லாமே புரிகின்றது. என் முன் ஜென்ம வினைப்படி நான் சுக துக்கங்களை அனுபவித்து வந்து கொண்டிருக்கின்றேன். இனி எப்போது அடுத்த வளர்ச்சி என்பது அவர் கேள்வி ஐயா.

குருநாதர் :- அப்பனே மலர்ச்சியும் கொடுத்து விட்டேன் அப்பனே. இல்லையென்றால் அப்பனே இவன்தன் இங்கேயே இருந்திட வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே  …(  தனி வாக்குகள்). அப்படிச் செய்யவில்லை இவ் அகத்தியன். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா (உங்களை, உங்கள் குடும்பத்தை ) அவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து (நம் அன்பு குருநாதர்) காப்பாற்றியுள்ளார். 

குருநாதர் :- அப்பனே கேள் இன்னும். 

அடியவர் 4 :- நமக்காக எந்த பிரார்த்தனையும் செய்ததில்லை. இப்பொழுது அல்ல. எப்போதுமே செய்ததில்லை. 

குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் கேட்டாய் அப்பனே. இவையெல்லாம் நியாயமா என்று கூறு?

அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அடுத்தவர்களுக்காகப் பாடு பட்டவர்கள் , நிச்சயம் ஓர் நாள் அப்பனே சுகம் அப்பனே உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவர்களுக்காக நாம் வேண்டிக்கொண்டால் , அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று, அவர்களுக்கு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாகச் சுகம் உண்டு என்று (அகத்திய மாமுனிவர்) சொல்கின்றார் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- கேளுங்கள் ஐயா. ஐயா இதுதான் ஜீவ நாடி என்பது. இதுவரைக்கும் நேரில் நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கின்றேன். உங்களை cross question ( குறுக்கு விசாரனை நம் குருநாதர்) அவர் கேட்பார்கள் ஐயா. 

அடியவர் 4:- ( தனி கேள்விகள் , வாக்குகள் )

குருநாதர் :- அப்பனே ஆனாலும் ( தனி வாக்குகள் விதி ரகசியங்கள்)  அதாவது ஒரு தந்தையும் கூட ___ எவ்வாறு என்பதையும் கூட அப்பனே அனைத்தும் நல்லவைதான் செய்யவேண்டும் என்றெல்லாம் மனம் உருகியதையெல்லாம் அதாவது யுகம் யுகங்களாகப் பார்த்துக்கொண்டே வருகின்றேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே எனை நம்பியவர்கள் எதை என்றும் புரியப் புரிய ஆனால் அப்பனே விதியில் என்ன உள்ளது (என்பது) எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பனே. அதனால்தான் என் பக்தர்களை பக்குவப் படுத்தி கடைசியில் நல்லதைச் செய்வேன். கவலையை விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். விதியில் உள்ள துன்பங்களை எல்லாம் கழித்த பின்பு , குருநாதரே அனைத்தையும் நடத்தி அருளுவார்கள் என்று எடுத்து உரைத்தார்கள்.) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஐயா ( அப்படிச் செய்யும் போது) எந்த ஒரு தடங்கல்களும் வராது. 

அடியவர் 4 :- ஐயா கால நிர்ணயம் ஏதும் உண்டா? இல்லை நான் ரொம்ப நாள் wait பன்னனுங்களா? 

குருநாதர் :- ( தனிப்பட்ட வாக்குகள். அதில் ஒரு முக்கிய வாக்கு ..) அப்பனே காலங்கள் நேரங்கள் அனைத்தும் என்னிடத்தில். (தனி வாக்குகள்) பொறுத்திரு அப்பனே. யானே முடித்து வைக்கின்றேன். அப்பனே ஆனாலும் உன் கடமையைச் செய்ய வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலும் வாக்குகளைக் கேட்க உற்சாகப் படுத்தினார்கள். அதனுடன் குருநாதர், அவர்கள் அழைத்ததால் தான் அங்கு இவ் அடியவர்கள் வர முடிந்தது என்று உரைத்தார்கள். ) 

அடியவர் 6 :- (காலம் சென்ற முன்னோர்கள் வழிபாடு குறித்து கேள்வி ஒன்று கேட்டார்கள். அதாவது முன்னோர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்களா என்று கேள்வி கேட்டார்கள். ஒரு முறை இவர்கள் முன்னோர் கனவில் வந்துள்ளார்.) 

குருநாதர் :- இதே போல் அனுதினமும் நீ நிச்சயம் செய்திருந்தால் நிச்சயம் உன் சொப்பனத்திலே வந்து சொல்லிருப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள்)

குருநாதர் :- அப்பனே (உங்களுக்கு) பக்குவங்கள் இல்லாமல் யான் எதைச் செய்தாலும் வீணாகப் போய்விடும் அப்பனே. 

( பல முக்கிய தனி வாக்குகள் ) 

குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு முரண்பாடாக கடுமையாக விதியில் உள்ளது. இப்படிப்பட்ட விதியை மாற்றுவதற்குக் குருநாதர் போராடித்தான் நடத்த வேண்டும் என்றும், இவ்விதியின் ரகசியங்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்றும் மனிதர்களிடத்தில் (விதி தெரியாமல் ஜோதிடர்கள்) இடத்தில் சென்றால் குழப்பி விடுவார்கள் என்றும், இப்படிப்பட்ட விதி மாற்றங்களைச் செய்ய குருநாதர், சித்தர்கள் உதவி மனிதர்களுக்கு அவசியம் தேவை என்றும் , விதியில் உள்ளதை சித்தர்களைத்தவிர யாரும் எடுத்துரைக்க இயலாது என்றும், அப்படி எடுத்துரைத்தாலும் தோல்வியில் போய் முடிந்து விடும் என்றும் எடுத்து உரைத்தார்கள் நம் அன்பு கருணைக் கடல்.)

(ஜீவ நாடி மர்மங்கள்)

குருநாதர் :- தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும், தந்தை  நினைக்கின்றார்கள் அப்பனே. அதே போலத்தான் அப்பனே. (உங்களின் அன்புத் தந்தையாக) யான் அனைத்தும் (உங்களுக்கு வாக்குகளாக) சொல்வேன் அப்பனே. ஆனால் சில பாவங்கள் கூட சுவடியைக்கூட அதாவது எதை என்று அறிய அறிய யான் சொல்லி விடுகின்றேன் அப்பனே. அதாவது அதைப் படித்தாலும் அப்படித்தான் அப்பனே. பாவத்தை நெருங்க விடமாட்டேன் (எனது இவ் சுவடியை ஓதும் என் மைந்தனான ஜானகிராமன்) இவந்தனையும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா. ஐயா (எதிர்காலத்தில் விதியில் கடுமையாக நடக்க உள்ளதை) சில ரகசியங்கள் சொல்லிவிட்டால் , (நம் குருநாதரால்  எளிதாக) easyஆகச் சொல்லிவிடுவார். (சுவடி ஓதும்) என்னையும் அதாவது இவனையும் பாவத்தில் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே கேட்கின்றாயா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது கேளுங்கள். 

அடியவர் 4 :- (தெளிவு நிலை)

குருநாதர் :- அப்பனே புரிகின்றதா? எதற்காக என்னைத் தேடி வந்தாய் என்பதை? அப்பனே இதுதானப்பா புண்ணியம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா தெரிகின்றதா? நீங்கள் அப்படி இல்லையென்றால் நீங்க பல இடங்களுக்கு (விளக்கங்கள் தேடி) போய்க் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது (உண்மை நிலை) தெரிகின்றதா? இந்த விசயங்களை யாரும் சொல்ல மாட்டார்கள் என்று சொல்கின்றார் ஐயா. விதியில் உள்ளதை யாரும் சொல்ல மாட்டார்கள். (சித்தர்களால் மட்டுமே சொல்ல இயலும்.) 

அடியவர் 4 :- இவங்க தினப்படி என்ன செய்ய வேண்டும்? 

குருநாதர் :- அப்பனே யான் மாற்றுகின்றேன் என்று சொல்லி விட்டேன் அப்பனே? மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் அப்பனே? இதைத்தான் கூறுகின்றாய். 

அடியவர் 4 :- அது சரிங்க ஐயா. Surrender ஆகின்றேன் ஐயா. ( உங்கள் முன் பணிகின்றேன்.) தினமும் routine என்ன செய்ய வேண்டும். 

(  #######     விநாயகர் அகவல் பாடல் ரகசியங்கள்    ####### ) 

குருநாதர் :- அப்பனே விநாயகனின் சீதக்களப என்னும் பாடலை அப்பனே விநாயகப் பெருமானின் அருகில் தீபம் ஏற்றிப் பாடச்சொல் அப்பனே. பின் போதுமானது. அதுமட்டும் இல்லாமல் அனுதினமும் விநாயகப் பெருமானுக்கு 

ஏதாவது புஷ்பத்தைச் சாற்றி, அப்பனே பின் வணங்கி வரச்சொல் அப்பனே. நிச்சயம் நவ முறை சுற்றச்சொல் அப்பனே. நிச்சயம் பிள்ளையோனும் மகிழ்ந்து அனைத்தும் செய்வான் அப்பனே. ஞானத்தை அள்ளித் தருவான் என்பேன் அப்பனே. இன்னும் சிறப்பான வாழ்க்கை உண்டு. 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அளித்த வாக்கு - சித்தன் அருள் 1668 - காசி மீர்காட் கங்கை கரை. விநாயகர் அகவல் பாடலில் உள்ள முழு அதி ரகசியம் அதனைத் தெரிந்து கொள்ள இந்த பதிவினை படியுங்கள். 

அடியவர்களுக்காக இட்ட விநாயகர் அகவல் பாடல் கானொளி ( YouTube link ) :- 

https://youtu.be/tOvBaBg6Ih4

அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

சித்தன் அருள் - 1764 - திதியில் செய்ய வேண்டியவை!

(# சங்கடஹர சதுர்த்தி ரகசியம் #) :- 

“சங்கடஹர சதுர்த்தி அன்று அப்பனே பின் பிள்ளையோனுக்கு,  நல்முறையாக 9 குடங்களில் நீர் நிரப்பி,  அவனை குளிப்பாட்டினால் யோகங்கள் வரும் அப்பா.”

சங்கடஹர சதுர்த்தி அன்று ஆலயத்தில் அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒன்பது குடங்கள் அல்லது ஒன்பது தீர்த்த சொம்புகளில் நீர் நிரப்பி 9 முறை விநாயகருக்கு அபிஷேகம் செய்து வர வேண்டும்... ஆலயங்களுக்குச் சென்று செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் கணபதி சிலைக்குச் செய்து வரலாம். விநாயகப் பெருமானை  இவ்வாறு அபிஷேகம் செய்தால் யோகங்கள் உங்களுக்கு வரும் என்று குருநாதர் வாக்கு.

அடியவர்கள் பயன்படுத்திக் கொள்க. 

வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம். )

அடியவர் 4 :- ஐயா ஒரு கேள்வி கேட்கலாமா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்க ஐயா. அவர் அருமையாக வந்து நிற்கின்றார் (நம் குருநாதர்). 

அடியவர் 4 :- நான் ஏதாவது தவறு செய்கின்றேனா? ஏதும் திருத்திக் கொள்ள வேண்டுமா? அதனால் time waste ஆகுதுங்களா? 

குருநாதர் :- அப்பனே எழுந்து எழுந்து உட்கார். பார்ப்போம். 

அடியவர் :- ( குரு நாதர் உரைத்தவாறு உடனே செயல்பட ஆரம்பித்தார்)

மற்றொரு அடியவர் :- ( சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்)

சுவடி ஓதும் மைந்தன் :- அவருக்கு வாக்கு போய்க் கொண்டிருக்கும் போது நீங்கள் கேட்கக் கூடாது அம்மா. உங்களுக்கும் குருநாதர் வாக்கு உரைப்பார்கள். (சற்று பொறுங்கள் தாயே!). 

( சில மணித்துளிகள் அடியவர் #4 எழுந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே இருந்தார்கள். அதன் பின் இறைவன், குருநாதர் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள்.)

குருநாதர் :- அப்பனே இப்பொழுது என்ன ஞாபகம் வருகின்றது?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இப்போது எழுந்து எழுந்து உட்கார்ந்தீர்களே, (அப்போது அந்த நேரத்தில் ) என்ன ஞாபகம் வந்துள்ளது என்று கேட்கின்றார் ஐயா. 

அடியவர் 4 :- சொல்லத் தெரியவில்லைங்க. இப்பதான் (எழுந்து எழுந்து உட்கார்ந்து ) முடித்தேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- எழுந்து எழுந்து உட்கார்ந்த அந்த நேரத்தில் என்ன ஞாபகம் வந்தது என்று சொல்லுங்கள் ஐயா.

அடியவர் 4 :- நீங்க சொன்னவற்றை follow பன்னேன்ங்க. ( எழுந்து எழுந்து உட்கார்ந்ததை). 

குருநாதர் :- அப்பனே அதனால் பின் சொல்லியதைச் செய்.  மீதி எல்லாம் பார்த்துக்கொள்கின்றேன் யான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி உட்கார்ந்து எழுந்த போது ஏதாவது நினைத்தீர்கள் என்றால் நீங்க இங்க கேட்கலாம். அதேபோல் (நீங்கள்) போய்க்கொண்டே இருங்கள் என்று சொல்கின்றார் ஐயா. (உங்களை) நான் பார்த்துக்கொள்வேன் என்று கூறுகின்றார். அடுத்த கேள்வி ஐயா?

அடியவர் 4 :- தினமும் ஒரு நாளை எப்படி (கடக்க) pass பன்னவேண்டும் என்று தெரிந்தால் இந்த (மாதிரி) சிக்கல் வராது ஐயா.

குருநாதர் :- அப்பனே அதனால்தான் (இறை வழங்கும் கஷ்டங்கள், சோதனைகள் என்ற) அலைக்கழிப்புக்கள். இப்பொழுதே இவ்வாறு இருக்கின்றாய். மீண்டும் கொடுத்தால் தாங்க மாட்டாய் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? ( அங்குள்ள மற்றொரு அடியவரைப் பார்த்து) ஐயா கொஞ்சம் explain பன்னுங்கய்யா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- நான் சொல்வதை மட்டும் கேட்டு இதையே followபன்னுங்க என்று சொல்கின்றார் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- (இன்னும்) கேளுங்கள் ஐயா. 

அடியவர் 4:- ஒவ்வொருத்தரும் வளர்கின்ற குழந்தைகள் இருக்கின்றார்கள். இப்போ parents வந்து எல்லாமே தெரியிரதில்லை. இல்லைங்களா?  அப்போ அவங்க இடத்தில் இருந்து guide பன்னுவது எப்படி? 

குருநாதர் :- அப்பனே ஒரு குழந்தை எழுந்து நிற்கின்றது அப்பனே. நீதான் அப்பனே எழுந்து நிற்கச்சொன்னாயா என்ன?

அடியவர் 4 :- இல்லைங்க ஐயா. 

குருநாதர் :- அப்பனே அடிபட்டு , வீழ்ந்து எழுந்து நின்றால்தான் அனைத்தும் தெரியும் அப்பனே. அதுபோலத்தான் அப்பனே. சில மனிதர்களை யாங்கள் விட்டுவிடுவோம் அப்பனே. பின் அடித்து , மனக்குழப்பம் எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே, கடைசியில் வந்து நிற்பானப்பா எங்களிடத்தில் அப்பனே. ( உலகில் அனைத்தும் பட்டுத் தெரிந்து சித்தர்களிடம் வருவார்கள்.) 

( சித்தர்களே, இறைவனே மனிதர்களின் அன்னை , தந்தை என்ற ரகசியம்)

அப்பொழுது தீவிரமாக தன் தாயவளைக் கூட பிடித்துக் கொண்டால் சிறிது சிறிதாகத் தூக்கி விடுவாள். அதே போலத்தான் யாங்களும். 

அதனால் கெட்டியாகப் பிடித்துக்கொள். ( அகத்தியன் ) என்னைப் பிடிக்க வில்லையென்றாலும், இறைவனைப் பிடித்துக்கொள். 

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 

(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து,  உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள் - முதல் உயர் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். நம் வருங்காலத் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான உயர் புண்ணிய இறை வாக்கு இவ்வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் அவசியம் கட்டாயமாக சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களுக்குப் புரிய வைத்து, அதன் பின் அன்னமிட,  அவ் சேவையில் பங்கு பெறும் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். உங்கள் வாழ்வில் புண்ணியங்கள் மலரட்டும். இவ்வுலகில் தர்மம் செழித்து ஓங்குக. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 17 June 2025

சித்தன் அருள் - 1878 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு!




21/4/2025 அன்று புலத்திய மகரிஷி உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: பொதிகை மலை.

ஆதிகுருவான அகத்தியரை மனதில் அறிந்து புலம்பி கூறுகின்றேன் புலத்தியனே!!!

அன்பு வடிவமாக எங்கும் நிறைந்தவரே!!
இருப்பவரே!!
அறிந்தும் அனைத்து உலகத்தையும் காப்பவரே!!!
காத்து அருள் ஈந்து அறிந்து வழி நடத்துபவரே!!!

அன்பு அன்பு எனும் மூலப் பொருளை மனிதனுக்கு பின் இடுபவரே!!!
இட்டு இட்டு அன்பு ஒன்றே.. இவ்வுலகத்தில் பின் சாலச் சிறந்தது என்று உணர்த்திய பிறகு அன்பே.. பின் அதுவே குருவே!!!

குருவே!!! தமிழே!! அனைத்தும் நீயே!!!
இறைவா நீயே!!!
அனைத்தும் நீயே!!


ஆண்டும் 16ம் பின் 18ம்
அறிந்தும் இவை மனிதனுக்கு புரியாத நிலையில்.. இருந்ததைக் கூட எடுத்துரைத்து பின் உலகிற்கு பின் அறிந்து மூலாதாரத்தை இயக்குபவரே!!
அனைத்தும் நீயே இறைவா!!

அறிந்தும் உன் தாள் பணிந்து.. பரப்புகின்றேனே இங்கிருந்தே!!!!

பொதிகை தன்னில் அழகாக வீற்றிருக்கும் 
இறைவா!!!
அறிந்தும் உன்னை தேடி பின் வந்து வந்து பின்... வர முடியவில்லையே என்று.. ஏங்குபவருக்கும் அருளாசிகள்!! அருளாசிகள்!!

அறிந்தும் ஏன்? எதற்கு? அங்கு போய்.. அமர்ந்தீர்??
என்பதையெல்லாம் யானே அறிவேன்!.
என்னிடத்திலே அறிந்தும் பின் அனைத்து சித்தர்களாலும் பின் உனை தேடி தேடி வந்து வந்து அங்கே பின் அமர்ந்து பின் உறங்கி உறங்கி!!
 இதனால் அறிந்தும் பின் சந்தோஷங்களே!!!

இதனை அறிந்தும் எவ் உயிரையும் கொல்லாது!! பின் அறிந்தும் அதாவது என்னிடத்திற்கு வருவோர்கள் எல்லாம் இங்கெல்லாம் அறிந்தும் பின் எதனையும் பின் எவ் உயிரையும் தாக்காமல் அறிந்தும் வந்தால் தான் பின் பிறவி கடலை நீந்த முடியும்.. என்பதற்கிணங்கவே இங்கு அமர்ந்தீரே!!!
அறிந்தும் யான் கண்டேன் இதனை!!

இன்னும் வரக்கூடிய காலங்களைப் பற்றியும் அழகாக பின் எடுத்துரைத்தாலும் பின் மனிதனுக்கு அறிந்தும் புத்திகள் இல்லையே!!! குருநாதா!!

அறிந்தும் குருவே பின் போற்றி!!! இறைவா போற்றி!!! இறைவா போற்றி!! நின் தாள் பணிந்தேனே!!!
நின் தாள் பணிந்து விட்டால்.. அழைத்து அழைத்து அனைத்தும் செய்வீரே!!!

கலியுகத்தில் மனிதனுக்கு அப்படி செய்தாலும் புத்திகள் இல்லையே!!! புத்திகள் இல்லையே!!!
அப்படி புத்திகள் இல்லை என்றாலும் அனைத்தும் பின் நிச்சயம் பின்.. அதாவது புத்திகள் இல்லாத மனிதனுக்கும்... கீழிறங்கி அவந்தனை அதாவது புத்தி உள்ளவனாக்கி நிச்சயம் பின் தன் பால் அழைத்து வரும் பின் பாசத் தலைவா!!!
அறிந்தும் அனைத்தும் நீயே!!!

ஆனாலும் இதில் கூட புத்திகள் கொடுத்து மீண்டும் புத்தியிலே அதாவது தவறான புத்தியிலே சென்றாலும் பின் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து கடைசியாக தண்டிப்பவரே!!!
அறிந்தும் இதனால் நின் கருணை எங்கு?? காண முடிகின்றது??

பல காடுகளிலும் மலைகள் மீதும் அறிந்தும் பின் நிச்சயம் தன்னில்  கூட பல விலங்குகளும் கூட பல இடங்களிலும் பாசங்கள் காட்டி காட்டி அறிந்தும் கூட பின் அதாவது அனைத்து விலங்கினங்களையும் கூட உன் பால் அணைத்து உன் பின்னே. பின். வரும்படி செய்தீரே!!! அனைத்தும் கூட..

அதனை அறிந்தும் கூட மக்கள் பின் உனை வணங்கியும் பின் அதை தன் நிச்சயம் பின்.. அதாவது உந்தன் பொருளை பின் அனைத்தும் அதாவது பின் அறிந்தும் அதை உட்கொண்டு உட்கொண்டு மனிதன்.. கர்மத்தில் அதாவது பாவத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான் சேர்த்துக் கொண்டே இருக்கின்றான். 

அதனால் என்ன பயன்?? என்ன பயன்?? அறிந்தும் என்ன பயன்???

பயனில்லாமல் திரிந்து கொண்டிருக்கின்றானே மனிதன்... அறிந்தும் உண்மைதனை கூட. 

ஏன்?? அறிந்தும் இதை தன் பின் கர்மத்தில் பின் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது.. பாவம் அதிகமாக இருந்தாலும் நிச்சயம்... அவனைத் தேடி வந்து... ஆசிகள் பின் கொடுப்பவரே!!!
பின் நிச்சயம் இறைவா!! அறிந்தும் உந்தனுக்கு இணை எவர்??? இங்கு எவர் இங்கு??

பின் அவை பாவத்தை போக்கியும். இன்னும். அறிந்தும் கூட பின் அதாவது சிறுக சிறுக பாவத்தை போக்கி போக்கி நிச்சயம் அனைத்தும் தந்தருளும் இறைவா!!! போற்றி!! போற்றி!!
கருணை வடிவானவரே போற்றி!! போற்றி!!
பாசமிகு தலைவரே!! போற்றி!! போற்றி!!
அனைத்திலும் இருப்பவரே போற்றி போற்றி!!

அறிந்தும் என் உள்ளத்தை புரிந்தும் பின் அனைத்தும் தருபவரே போற்றி போற்றி!!!
மனிதனை மனிதனாக ஆக்குபவரே போற்றி போற்றி!!
பாசத் தலைவரே! கருணைத் தலைவரே! போற்றி போற்றி!!!


பின் இவை அனைத்தும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் கூட பின் வாழ வேண்டும் என்று நினைப்பவரே போற்றி போற்றி!!!
அறிந்தும் கருணை!!
கருணைக்கு பொருள் அகத்தியன்!!
பாசமிகு.. பாசத்திற்கு பெருமை அன்பிற்கு பெருமை அனைத்திற்கும் பெருமை அகத்தியர். 

இப்படி எல்லாம் அறிந்தும் மனிதனை திருத்த நிச்சயம் பிரம்மாவிடம் சென்று முறையிட்டு... பின் பிரம்மா அறிந்தும்!!...

அதாவது மனிதனிடத்தில் கலியுகத்தில் பல குறைகளோடு பின் படைக்கப்பட்டு.. படைக்கப்பட்டு பின் நீ அனுப்பி அறிந்தும் அதாவது... தெரியாமலே பின் மனிதன்... நிச்சயம் யான் அதை மாற்றுகின்றேன்.. என்று பிரம்மாவிடத்தில் சண்டையிட்டு பின் மனிதனை பின் அதாவது... சிறிது காலம் அன்பாக உரைப்போம்..

அப்படி இல்லையென்றால் அடிப்போம்!!!... என்று சபதத்தை..ஏற்றி வந்தாயே!!!!

பின் குருநாதா குருவே போற்றி போற்றி!!!

ஆனாலும் பிரம்மனும் 
அகத்தியனே!!! உன்னால் மாற்ற முடியாது!!! யான் படைத்தேன் அல்லவா!! அப்படித்தான் என்று பின் கூறிட்டாலும்!!!

 நிச்சயம் பின் பிரம்மனே.... நிச்சயம் மாற்றுகின்றேன்... ஆனாலும் பின் அறிந்தும்... நிச்சயம் பின் கர்மா அதாவது பாவ வினைகள் பின் புண்ணிய வினைகள் எப்படி ஆயினும்... அதை சமநிலைப்படுத்தி... அறிந்தும் மனிதனை பின்... சீர்படுத்தி அதை தன்... சமநிலைப்படுத்துவேன் என்று!! பின் பிரம்மாவிடத்திலும் முறையிட்டு முறையிட்டு!!

அறிந்தும் ஏன் இந்த மனிதனின் புரியாத நிலை?? அறியாத நிலை???
வந்ததும் இன்னும் வரப்போவதும்.. ஒன்றில்லாமல் நிச்சயம்... அறிந்திருக்க முடியவில்லையே மனிதன் !!

ஆனாலும் பின் என் குருவை நோக்கி மனிதன் படையெடுத்து படையெடுத்து சில நாட்கள்... அறிந்தும் குருநாதன்! என்னிடத்திலேயே பேசி விடுகின்றான் என்றெல்லாம்... அறிந்தும் நிச்சயம் பின் பொய்களாக்கி, பொய்களாக்கி!!
ஏன் இந்த அடிமைத்தனம் என்று தெரியவில்லையே!!! மனிதா அறிந்தும்!! அழகாகவே உன் நீ வழியில்... சென்றிருக்க சென்றிருக்க... அழகாகவே என் குரு.. அறிந்தும் நிச்சயம்.. உன் பக்கத்திலே வந்து அமர்வான்! 
அனைத்தும் தெளிவுபடுத்துவான்! 
தெளிவுபடுத்தி நிச்சயம்... உந்தனுக்கே பிறவி வேண்டாம் என்று!!! நிச்சயம் அறிந்தும் மனதில் எடுத்துரைக்கும் பொழுது!!!
ஏன் இந்த மாற்றங்கள் அறிந்தும் இதனை நிச்சயம் பின் கடைப்பிடிக்க ஆனாலும்... கடை பிடிக்காத சூழ்நிலைகள் வந்தாலும்... ஏன் எதற்கு இப்படியே... இருந்திடலாமா?? என்றெல்லாம்!!... அறிந்தும் பயனில்லையே!!!

மனிதா!! எதை வணங்கி பயன்???
பின் எதை பின் வணங்கி பயன் பயன்??

அதாவது ஒன்றும் இல்லையே!!! கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருக்கின்றாய்!!
கஷ்டத்தை அனுபவித்து அறிந்தும் பின் அதாவது உன் கஷ்டத்தை அதாவது அனைவரிடமும் கொடுக்கின்றாய். 
ஏன் எதற்கு இதனால் அறிந்தும் அகத்தியனுக்கு.. பிடிக்காத ஒன்று நிச்சயம்.. அறிந்தும் அகத்தியன் பெயரைச் சொல்லி... அறிந்தும் அறிந்தும்... எதனால் என்பவை எல்லாம் யான்... இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... பின் குருவைப் பற்றி எல்லாம்... அறிந்தும் புறத்தின் வழியே... அறிந்தும் எதை என்று.. குருநாதன்.. பின் ஆனாலும்.. அதற்கும் கூட சில காலம் நீட்டி வைத்து நிச்சயம் பின்.. பிறர் அறிய வண்ணம் பின் தண்டனைகள் கொடுக்க பின் தவறுவதில்லை. அறிந்தும்!!

இதனால் நிச்சயம் பின் பின் அறிந்தும்.. அனைத்து உலகத்தையும் பின் காத்தருளும் அழகாகவே மனிதனை நிச்சயம் காக்கும்!!..

 ஆனாலும்... மனிதனோ!? அகத்தியன் எங்கு!? பார்க்கவா?? போகின்றான்??? என்றெல்லாம்!! நிச்சயம் அகத்தியருடைய யான் அன்பான பக்தன்.. அன்பான சீடன்.. யான் அகத்தியன் என்று பொய் சொல்லி நிச்சயம் வலம் வந்து கொண்டிருக்கின்றீர்களே!!!! உங்களுக்கு என்னதான்??? அறிந்தும்!! என்று எதை என்று புரிய!!! நிச்சயம் தண்டனைகள் என்னவென்று.. அறிந்திருக்கக் கூட பின் உங்களுக்கு முடியவில்லையே!!

 இன்னும் இன்னும் பக்திக்குள் நுழைந்து நுழைந்து இதனால் அவை இவை என்றெல்லாம்.. பொய் சொல்லி பொய் சொல்லி... நிச்சயம் அதனால்தான் பின் என் குரு அழகாகவே... வழிநடத்தி நிச்சயம் அதற்காகவும் சில விஷயங்களை செப்பி செப்பி... இருந்தாலும் அதனைக் கூட... பயன்படுத்த தெரியவில்லையே!!!

இவ்வாறு பின் பயன்படுத்த தெரியாததனால்.. கிரகங்களின் நிச்சயம் பின் கூட்டுக்கள் சேர்ந்து... உனை அடிக்கும்!!

இதனால் எங்களை அறிந்தும்.. எதை என்று புரியாவிடிலும் கூட.. பின் அறிந்தும் சித்தர்களை வணங்குவோர் நிச்சயம் பின் கிரகங்களுக்கும் கூட அறிந்தும் பின்.. ஆட்கொள்ள!!! அவை மட்டும் இல்லாமல் எவையும் தேவையில்லை... அறிந்தும் பரதேசியே!!!
அதாவது உண்பான்!! உறங்குவான்!! ஓடுவான்!!.. அறிந்தும் எதை என்று அறிய.. சித்தரை நோக்கி வருபவன் பின் நிச்சயம்.. எங்கெங்கோ எதை என்று அறிய பின் ஏதோ பின் வாங்கி.. பின் வரங்கள்!! பின் சென்று நிச்சயம் அதை இதை என்று கஷ்டங்கள் பின் பட்டு பட்டு ஒரு நிலைக்கு வந்து... பின் அதனையும்.. எடுத்துரைத்து நிச்சயம் பின் தெய்வத்தைப் பற்றி இங்கு யான் பேசவில்லை!!

அறிந்தும் எதற்கு தெய்வத்தைப் பற்றி பேசுதல் வேண்டும்???
என்பவை எல்லாம் நிச்சயம்... தெய்வமாகவே பின் அழகாகவே... நிச்சயம் பாசம் மிகுந்தே... அன்பு மிக ஆகவே... அகத்தியனை பின் பணிந்து... போற்றினாலே... பின் தெய்வங்கள் ஒன்று கூடி உங்களுக்கு.. உணவளிக்கும். 
உணவளிக்கும். 

இதை மாற்றாகவே அறிந்தும்.. ஒரு பின் காட்சி பொருளாகவே ஆக்கிவிட்டார்களே பின் மடையர்கள்... அதாவது மனிதர்கள்... எப்படி? எப்படி? 

பின் அறிந்தும் மனிதனை... பார்த்தேன் பூலோகத்தில்... அறிந்தும் யான் அகத்தியன் சீடன் என்று சொல்கின்றான்!!.. ஒருவன் யான் அகத்தியன் பக்தன் என்று சொல்கின்றான்!!.. பின் அறிந்தும் இன்னொருவன்.. பின் அகத்தியன் என் தந்தை என்று கூறுகின்றான்!!! இன்னொருவன் அறிந்தும் எதை எதையோ புலம்பி கொண்டிருக்கின்றான்!!

ஆனால் அகத்தியன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்... யாரை தேர்ந்தெடுக்கின்றான்?? என்று!! தெரியவில்லையே!!!
அறிந்தும் புரிந்தும் கூட. 

இதனால் எப்படி? ஏன்? எதற்கு? அகத்தியனை வைத்து பொருள்!!... அறிந்தும் இதை என்று யார்? யார்? எப்படி பட்ட நிலையில் அறிந்தும்!!! இன்னும் கூட!!

இங்கிருந்தே கடைக்காலத்தில் நிச்சயம் அகத்தியன் பின் அழிவதில்லை!! அழிவதில்லை!! பின் சிரஞ்சீவியாகவே!!! அறிந்தும் இங்கு அனைவரையும் கூட.. பொதிகை தன்னில் வீற்றிருந்து பார்த்துக்கொண்டே இருக்கின்றான். 

ஆனால்... மனிதனோ?? நிச்சயம் பின்.. அவனை கீழே அதாவது... இறக்கி வர வேண்டும்.. என்று நிச்சயம் அகத்தியனை கீழே யான் வரவழைத்து விடுவேன்!!; இங்கே இருக்கின்றான்... பொதிகை மலையில் வாழும் அகத்தியன் என் இல்லத்திலே இருக்கின்றான்!! நிச்சயம்.. என் அதாவது குடிலில் இருக்கின்றான்... என்றெல்லாம்!!!

எப்படி?? அறிந்தும் எதை என்று புரிய!!
எங்கெங்கு? எதை எப்பொழுது.?.. எவற்றைப் பற்றி? இருக்க வேண்டுமோ? அங்கங்கு இருந்தால்தான் நன்று!!

அதை தவிர்த்து விட்டு ஏன்?? எதற்கு? தந்தை இங்கு இருக்கின்றார் அழகாகவே!!! என்றால் நிச்சயம் அறிந்தும் பின் அனைத்தும்... அதாவது இங்கிருக்கும்.. அனைத்து விலங்குகளும் உயிரினங்களும் கூட நிச்சயம் பின் இறைவனுக்கு சொந்தம்!! அகத்தியருக்கு சொந்தம்!!!

இதனால் நிச்சயம் இதையெல்லாம் யார் ஒருவன்.. நிச்சயம் தன்னில் அறிந்தும் பின் அதாவது கொல்லாமல்.. அறிந்தும் அதாவது உண்ணாமல்.. நிச்சயம் வருகின்றார்களோ ? அவரை அதாவது அவர்களை வழி நடத்துவார் பின் தந்தையானவர்!!

அறிந்தும் இதனால் தான் பின் தெய்வங்களும் கூட மலை மேல் நிற்கின்றது.. பின் யான் அறிந்து இதை யான் செப்பினேன்.

ஆனால் பின் கந்தன் மேலே இருக்கின்றான்.. நிச்சயம் அறிந்தும் ஈசன் மலை மீது இருக்கின்றான்..

ஏன் இருக்கின்றான்??? என்று தெரியவில்லையே மனிதனுக்கு!!!

பின் இதை தெரியாமல் சென்றாலும் இறைவன் ஆசிகள் கிட்டி விடுமா???
மனித உடம்பை பாதுகாக்க முடியுமா???
பின் அதாவது உயிரை நிச்சயம் அப்படியே பின் அழைத்து... அழைத்து அழைத்து நிச்சயம் அறிந்தும்... இதன் தத்துவத்தையும் கூட பின் எடுத்துரைத்தாலும் பின் பிரயோஜனங்கள் இல்லை!! பிரயோஜனங்கள் இல்லை அறிந்தும் கூட!!

ஞான உபதேசங்கள் நிச்சயம் பின் பல புத்தகங்கள் அழகாகவே !!
இவ் ஞான உபதேசங்கள் கூட பின் நிச்சயம் மாற்றி அமைத்து... மனிதர்கள் ஏன்? எதனால்? என்பவையெல்லாம் அறிந்தும் கூட!!

ஆனாலும் இன்றும் இன்றும் கூட நிச்சயம் அழகாகவே பின் அறிந்தும் பின் சொகுசாகவே மனிதன் உட்கார்ந்து அங்கு இங்கு இறைவன் இருக்கின்றான்!!! அறிந்தும் கூட பின் அதாவது (திருநீறு) பூசிக்கொண்டு முகத்தில் பல வழிகளிலும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் தொலைநோக்குப் பார்வையில் அறிந்தும் அவை!! இவை!!! என்று நிச்சயம் பன்மடங்கு எடுத்துரைக்க!! எடுத்துரைக்க!!

ஆனால் உயிரை காப்பாற்றுவது எப்படி???
கண்டத்தை தடுத்து நிறுத்துவது எப்படி???
அழிவுகளில் இருந்து பின் காப்பது எப்படி??
என்று பின் அறிந்தும் புரிந்து இருக்கவில்லையே!!!

ஏன் சொல்கின்றானே!!!
அவனாலே அறிந்தும் பின்... அவனுக்கு அவன் யார் ????என்று பின் அறியாத வரையில் இன்னும் பாவத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்...
அவனை முதலில் அறிய வேண்டும்!!!

உங்களையும் சேர்த்து சொல்கின்றேன்... நீங்கள் யார்???
அறிந்தும் பின் உண்மை அறிந்தும் என்றெல்லாம்!!!


நிச்சயம் ஒருவரை ஒருவர்!!!.. ஏன் பிறந்துள்ளீர்கள்?? என்று அறிந்தால் மட்டுமே!!!...... பிறவிக் கடலை நீந்தலாம்!!

அப்படி இல்லையென்றால் நீந்தவும் முடியாது.

இதனால் தான் என் தந்தை அழகாகவே 
இறைவனாகவே வந்து நிச்சயம் பின் உங்களுக்கெல்லாம்..

நீ!!! இதற்காகத்தான் வந்தாய்!!!
 இதைச் செய்!! என்பதையெல்லாம் பின் சொல்லிக் கொண்டு!! சொல்லிக்கொண்டு!!

(குருநாதர் தனது வாக்குகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை வாக்கில் கூறுவது)


அதனுள்ளே மனிதன் இன்னும் பின் சுயநலத்திற்காக பல பல கேள்விகளை கேட்டு கேட்டு... நிச்சயம் அறிந்தும் பின்.. இதை பின் அதாவது என் தந்தை கொடுத்திடுவானா??!!!
இறைவன் கொடுத்திடுவானா?? என்ன???
நிச்சயம் முடியாது!! அறிந்தும்!!!
எதை என்று புரிய!!

அதாவது உங்களை நீங்கள் அறிந்தால் தான் பின்... வெற்றி கொள்ள முடியும் வெற்றி கொள்ள முடியும்... என்றெல்லாம் பின் சொல்லிக்கொண்டே சொல்லிக்கொண்டே!!! ஏனைய சித்தர்களும் கூட அறிந்தும்!!!

இதை என்று புரிய நிச்சயம் அழகாகவே பொதிகை முனி நிச்சயம் இங்கு.. அதாவது பொதிகை முனி அறிந்தும் இதை அழகாகவே.. ஜீவராசிகளையும் வழிநடத்த !! வழி நடத்த!! நிச்சயம் தன்னில்  கூட அறிந்தும்... அவனுக்கு சொந்தமானவையே இவ் விலங்குகள் தான். 
அதாவது பாசமிகு இவ் விலங்குகள் தான்.

இதனால்... அதனால் அறிந்தும் சித்தர்களுக்கு அனைவருக்குமே பாசமிகு பின் பொருளாக விளங்குவது.. அனைத்து உயிரினங்களுமே.!!!


 
அதை தன் நிச்சயம் அதாவது ஒரு உயிரை நிச்சயமாய்.. சிறிதுபடித்தியும் பின் ஒரு உயிரை பெரிது படுத்தியும் நிச்சயம் இல்லை.. சித்தர்களுக்கு. 

(அனைத்து ஜீவராசிகளுக்கும் சித்தர்கள் சமமான அளவில் அன்பு)



இதனால் அனைத்தும் ஒன்றே என்று!!

ஆனாலும் ஒன்று!!!!

 நீங்கள் பின் கொன்று உட்கொள்வது...அது சித்தனுக்கு எக்காலமும் பிடிக்காது...

பின் சித்தனை வணங்கினாலும்... இன்னும் பாவம் சேர்ந்து கொண்டே இருக்கும்..


 ஒரு நாள் அடிக்கும் அப்பொழுது.. சித்தனை வணங்கினேனே என்று நீங்கள்.. சொல்லக்கூடாது புலம்பக் கூடாது. 

நான் பார்த்து விட்டேன் புலம்புவதை.. அறிந்தும் பல பேர்களை அறிந்தும்!!

இதனால் நீங்கள் செய்த குற்றம் உங்களை நிச்சயம் பின் பாவக் கணக்கில் ஏற்றி பின் அதை சுமந்து அப்பொழுது சுமந்து!!!!!...

 அதனால்.. பின். என் குரு இறைவன் !!!நிச்சயம் அவ் பாவத்தை அதாவது நீங்கள் சுமந்து செல்வதை சிறிது பின் அதாவது எடுத்து.. எடுத்து வருவான் அருகிலே இருந்து!!

பின் அப்பொழுதும் கூட நீங்கள் திருந்தவில்லை என்றால்... நிச்சயம் பின் அறிந்தும் அனைத்தும் நீங்களே என்று... !!!

(திருந்தாவிடில் விளைவுகளுக்கு காரணம் நாம்)


இதனால்தான் சித்தர்கள் இன்னும் வாக்குகளாக பின் பரப்பி மனிதனை திருத்த பார்த்து.......

 நிச்சயம் திருந்தாவிடில் அடி கொடுத்து நிச்சயம்.. அறிந்தும் கூட. 

தந்தையானவன் நிச்சயம் தன் மகனாயினும் தன் மகளாயினும்... நிச்சயம் நல்வழியில் சென்றால் நிச்சயம் சந்தோசம். 
அப்படி இல்லையென்றால் அடித்து தான் திருத்த வேண்டும் நிச்சயம். 

அதேபோலத்தான் சித்தர்கள்.. தடியை எடுத்தால் தான் நிச்சயம் திருந்துவார்கள். 

ஆசிகள்!! ஆசிகள்!!!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 15 June 2025

சித்தன் அருள் - 1877 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு!



19/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னிதானம்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்தே செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!!

அப்பனே வரும் காலத்தில் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.... கிரக மாற்றங்களும் கூட அப்பனே... மனிதனுக்கு அப்பனே அறியாத வகையில்.. கூட தெரியாத வகையில் கூட.. அப்பனே வந்து அப்பனே.. சில தரித்திரங்களை தாக்கி!!!.....

இதனால்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனக்குழப்பங்கள் அப்பனே... பைத்தியமாகி போகும் நிலை... அப்பனே அதாவது ஒருவருக்கொருவர் இல்லத்திலே சண்டையிடுதல்... அப்பனே இவ்வாறு சண்டையிட்டு.. அப்பனே பிரிந்து போகுதல்... இவ்வாறெல்லாம் நடக்குமப்பா!!!

இதைத்தான் நிச்சயம் அப்பனே... சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!

இல்லத்திலே அப்பனே நிச்சயம் பின் சந்தோசங்கள் இருக்காதப்பா. 

ஏனென்றால் அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே. 

அதாவது சனி ஈஸ்வரன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் அறிந்தும் கூட.. இல்லத்துக்காரன் ஆகின்றான் அப்பனே.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இக் கிரகங்களைப் பற்றியும் கூட வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால்.. சரியாக பின் நீதியாக நியாயமாக பின் நடந்து கொண்டால்.. இல்லத்தில் சந்தோசங்களை ஏற்படுத்துவானப்பா!!! சனி ஈஸ்வரன்.

இல்லையென்றால் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட இல்லத்தில் குழப்பங்கள் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் சரியான தண்டனை கூட அப்பனே...

அப்பனே பின் முன் உரைத்த... பல வழிகளிலும் கூட இன்னும் இன்னும் இதனால் அப்பனே சரியாகவே சென்றால் அப்பனே.. சனீஸ்வரன் சரியாகவே உங்களுக்கு தேவையானதை அனைத்தும் கொடுப்பானப்பா!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே.பின் நல்விதமாகவே அனைத்தும் செய்வானப்பா. 

அப்படி இல்லையென்றால் அப்பனே நிச்சயம் முதலில் அப்பனே பின் குடும்பத்தில் பிரச்சினைகள் அப்பனே... ஒருவருக்கொருவர் அப்பனே சண்டைகள் வீணான பின் மனக்குழப்பங்கள்.. அப்பனே இவ்வாறு மன குழப்பங்கள் ஏற்பட்டு அப்பனே... குடும்ப வாழ்க்கையை வெறுத்தல் அப்பனே... பைத்தியமாகி போகும் நிலை... அப்பனே பின் இவ்வாறு தான் அப்பனே 

அதனால் அப்பனே இவை தீர்க்க... ஓடோடி வருவானப்பா!!! மீண்டும் பின் திருத்தலங்களுக்கு!!

ஆனாலும் பின் சனீஸ்வரனோ பின் அதாவது... இறைவனிடத்தில் இருந்து கையை காட்டி!!!

இறைவா!!!!... இவன் பின் சரியாக நடக்கவில்லை!!... நிச்சயம் எதையெதையோ செய்து விட்டு இங்கு வந்திருக்கின்றான்! 

இதனால் மீண்டும் இவனை அப்படியே அனுப்பி விடு என்றெல்லாம் நிச்சயம் சொல்வானப்பா. 

அப்பனே நிச்சயம் அறிந்தும் எதை என்றும் கூட புரிந்து வாழ வேண்டும் புரிந்து வாழ வேண்டும் என்றெல்லாம் அப்பனே...

அதாவது ஏன்? எதற்கு? அப்பனே இவ் சனீஸ்வரன்... அழகாகவே இவ் தன்னில் (சபரிமலையில்) கூட மணிகண்டன் அருகிலே இருக்கின்றானப்பா!!!

(2024 சித்தன் அருள் 1682 அன்புடன் அகத்தியர் சபரிமலை வாக்கில் சனீஸ்வரனுக்கும் ஐயப்பனுக்கும் உள்ள உறவு !!

இட்ட கட்டளை என்ன என்பதை பற்றி விரிவாக ஏற்கனவே குருநாதர் கூறியிருக்கின்றார் இந்த வாக்கினையும் ஒரு முறை அனைவரும் படித்து உணர்ந்து கொள்ளலாம்)

இதனால் அப்படி சரியாகவே யார் ஒருவன் அப்பனே பின் அதாவது அப்பனே பின் விரதத்தை....48 நாட்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கடைப்பிடித்து... அவ்வாறாகவே இருந்து விட்டால் அப்பனே.......

சனீஸ்வரனுக்கு வேலையே இல்லையப்பா!!!

அப்பனே அவ்வாறு பின் இல்லை என்றால்... அப்பனே பின் சனீஸ்வரனுக்கு வேலை அதிகமாகி கொண்டே போகின்றது. 

அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... இதனால் அறிந்தும் எதை என்று அறிய... பின் அதாவது மணிகண்டனை கூட விட்டு வைக்கவில்லை சனீஸ்வரன். 

பின் அதாவது பின் அறிந்தும் கூட அதாவது மணிகண்டனே!!!!!!! அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட... உன் பக்தர்கள் ஆயினும் நிச்சயம் அறிந்தும்... அதாவது இங்கு வருகின்றார்கள்!!!

ஆனாலும் சில காலத்திற்கே ஏதும் பின் அதாவது பின் போட்டி பொறாமை.. அதாவது ஒரு உயிரை கூட கொல்லாமை... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. போதைப் பொருட்கள் பின் உபயோகிக்க.. அறிந்தும் கூட இல்லை!!

 இதனால்... அறிந்தும் கூட மீண்டும் சில நாட்களில் இருக்கின்றார்கள் அறிந்தும்... மீண்டும் அதனையே போய் நிச்சயம் உட்கொள்கிறார்கள். 

இதற்கு என்ன தண்டனை???
மணிகண்டா!!.. நீயே !! கூறு !! என்று!!


மணிகண்டனும் 

நிச்சயம் சனி தேவனே!! அறிந்தும் அனைத்தும் உணர்ந்தவர் நீர்!!!

நிச்சயம் என் பக்தனாயினும்... நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் கூட தவறு செய்தால்... நிச்சயம் தண்டனை தண்டனை தான்... நிச்சயம் தன்னில் கூட. 

பின் என் அருகே இருந்தாலும் நிச்சயம் பின்... நியாயமான நீதியான தர்மத்தை அதாவது கடைப்பிடித்து நிச்சயம் உன் தர்மத்தை செய் என்று. 

இதனால்தான் அப்பனே... நிச்சயம் சனீஸ்வரன் பின் அறிந்தும்.கூட இதனால் அப்பனே...

பின் அவ்வாறு அப்பனே... சனிப்பெயர்ச்சி நிச்சயம் தன்னில் கூட... இங்கு செல்கின்றது!! அங்கு செல்கின்றது!!
அவை இவை நிச்சயம் அவ்வாறு சென்றால் நலம் என்றெல்லாம் சொல்கின்றார்களே!!!..

நிச்சயம் தர்மத்தை கடைப்பிடி!!!
சனீஸ்வரன் நன்மையே செய்வான்!!

உண்மையையே பேசு!!
சனீஸ்வரன் பின் நல்லதையே செய்வான். 

நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டு. 

நிச்சயம் சனீஸ்வரன் அனைத்தும் செய்வான். 

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் பின் அதாவது... உயிர் கொல்லாமை நிச்சயம் தன்னில் கூட.. பின் எதை என்று அறிய அறிய... நிச்சயம் தர்மத்தை கடைப்பிடித்து.. வந்தாலே சனீஸ்வரன் ஒன்றும் செய்ய மாட்டானப்பா!!!

அதை விட்டுவிட்டு... நிச்சயம் பின் அதாவது சனீஸ்வரன்... அங்கு செல்கின்றான் இங்கு செல்கின்றான்... இதனால் பாதிப்பு என்றெல்லாம்.. இருந்தால் அப்பனே முதலில்... இப்படி சொல்பவனுக்குத்தான் பாதிப்பு.. என்பேன் அப்பனே!!

அதை அவன் எவை என்று புரிய இதனால் அப்பனே அறிந்தும் கூட அவந்தனக்கு பாதிப்பு இல்லை என்று நினைத்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே பல கருத்துக்கள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஜோதிடத்தில் கூட. 

ஆனாலும் அவையெல்லாம் கர்மத்தை அவந்தனக்கு சேர்த்துக் கொண்டே இருக்கின்றது அப்பனே. 

ஆனால் உணரவில்லை என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் அப்பனே... இதற்குச் சான்றாக அப்பனே பின் நிச்சயம்... தன்னில் கூட பல வகையிலும் கூட அப்பனே புண்ணிய நதிகளில்... நீராடி அப்பனே நிச்சயம் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று... அப்பனே நிச்சயம் பல பல உயிர்களுக்கும் பின் அறிந்தும் கூட அன்னத்தை இட்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் அம்மாவாசை.. பௌர்ணமி தினங்களில் கூட அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட முன்னோர்களை வணங்கி... அப்பனே பல தான தர்மங்களை செய்து வந்தாலே நிச்சயம் அப்பனே...கர்மா அண்டாதப்பா!!!

நிச்சயம் அவர்களும் நிச்சயம் தன்னில் கூட இல்லத்தில் குழப்பங்கள் இல்லாமல் வாழ்வார்களப்பா!!! அப்பனே அறிந்தும்!

இதனால் அறிந்தும் இதனால் அப்பனே!!!

ஒரு ஜோதிடனை பற்றி சொல்கின்றேன் அப்பனே..

ஆனாலும் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... இவ‌ந்தன் நன்றாகவே அப்பனே பின் அதாவது குடும்பம் குழந்தைகளோடு வாழ்ந்து வந்தானப்பா..

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று புரிய அப்பனே பின் அனைவருக்கும் பின் ஜோதிடங்கள் அப்பனே பின் சொல்லி க்கொண்டே வந்தான். 
இவ்வாறு செய் அவ்வாறு செய்... இவ்வாறு செய்தால் நல்லதே நடக்கும் என்று. 

ஆனாலும் தன் இல்லத்தவள் நிச்சயம் தன்னில் கூட... நிச்சயம் ஏன் பின் அதாவது... காசுகள் வாங்கிக் கொண்டு சொல்!!

அறிந்தும் கூட பின் இவ்வாறு.. பின் இவ்வாறு வாய்க்கு வேலை கொடுக்கின்றாயே.. நிச்சயம் தன்னில் கூட பின் என்றெல்லாம். 

அவந்தனும் சரி.. நிச்சயம் நாம் நல்லது செய்கின்றோம்... அவர்களிடம் நிச்சயம் காசுகள் வாங்குவோம் என்று நிச்சயம்.. அப்பனே பின் அதாவது பின்... காசுகள் அப்பனே வாங்கினானப்பா!!!

வாங்கிக் கொண்டே இருந்தானப்பா.

அப்பனே குடும்பத்தில் சந்தோஷங்கள்.. பின் அனைத்தும் தேவையானதும் கூட... அப்பனே பூர்த்தி செய்ததப்பா.

அதனால் தன் மனைவியும் நிச்சயம் தன்னில் கூட.... பார்த்தாயா!!!!
யான் சொன்னேனே!!!

நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் காசுகள் இல்லை என்றால் ஒன்றும் இல்லை... இதனால் நிச்சயம் அறிந்தும் கூட யான்... சொல்லியதை கேட்டாயே!!! நிச்சயம் இவ்வாறு பின் காசுகள் நிச்சயம் அறிந்தும் கூட! 

ஆனாலும் அப்பனே அவனும் கூட... நிச்சயம் அப்பனே இவ் மணிகண்டனின் பக்தனப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் எதை என்று புரிய இதனால்... அப்பனே காசுகள்... வர வர அப்பனே நிச்சயம் தன்னில் கூட மணிகண்டனை மறந்து விட்டானப்பா!!! மணிகண்டனை கூட மறந்து விட்டானப்பா!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் கிடைத்தது அப்பனே... எவ்வாறெல்லாம் எதை என்று புரியப் புரிய அப்பனே. 

ஆனாலும் அப்பனே தர்மத்தை சிறிதளவாயினும் செய்யவில்லை அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின்.. அறிந்தும் கூட இவன்.. செய்யச் சொன்னால் இவன் மனைவி கூட நிச்சயம் தன்னில் கூட!!!...

ஏன்? தர்மத்தை செய்கின்றாய்??
ஏன் எதற்காக???... நிச்சயம் தன்னில் கூட!!
அவன் உழைத்து வாழுகின்றான் அவ்வளவுதான்... நிச்சயம் இயலாதவர்களுக்கு ஏன்... அறிந்தும் கூட அன்னத்தை கொடுக்கின்றாய்!!!

நிச்சயம் அவனால் உண்ண முடியாதா???.. என்றெல்லாம் அப்பனே நிச்சயம்.. அவன் மனைவி அவனை கட்டிப்போட்டு நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும் நிச்சயம் இன்னும் சேகரிப்போம்.. அதாவது நம் குழந்தைகள் இருக்கின்றார்கள் அல்லவா... நிச்சயம் அக் குழந்தைகளுக்காகவது.. நிச்சயம் தன்னில்  கூட பின் இவை பயன்படும்.. நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் திருமணங்கள் வேண்டுமல்லவா அதற்காகவாவது... நிச்சயம் இன்னும் பொருளும் இன்னும் தங்க நகைகளும் சேர்த்து வைக்க வேண்டும். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இதனால் பின் எவற்றிற்கும்... நீ செலவு செய்யக்கூடாது என்றெல்லாம்.. அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே... மணிகண்டனும் இதையெல்லாம் நிச்சயம் பார்த்தானப்பா.... நிச்சயம் தலை குனிந்தான்ப்பா!!

இப்படி ஒரு பக்தனா???
அறிந்தும் எதை என்று புரியாமலும்.. இருக்கக்கூட!! நிச்சயம் தன்னில் கூட! 

அப்பனே இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இன்னும் ஆடல் என்ன??? பாடல் என்ன???... அப்பனே நிச்சயம்... அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... அப்பனே சந்தோஷத்தில்... அதாவது பின் அனைவரும்...நம்தனைதான் நம்புகின்றார்கள்..... நாம் தான் உயர்வுகள்... உயர்ந்தவர்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.... ஆனாலும் தானம் தர்மத்தை எதையும் செய்யவில்லை என்பேன்.அப்பனே!!

அதாவது ஏன் செய்ய வேண்டும்???... அதாவது அவன் மனைவி சொன்னாள்... ஏன்?? தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்??? ஏன் தானங்கள் செய்ய வேண்டும்???

நிச்சயம் தன்னில் கூட அவனவன் பின் உழைக்கட்டும்.. பின் அவனவன் உண்ணட்டும் என்று. 

ஆனாலும் அப்பனே இதற்கும்... வரும் காலத்தில் நிச்சயம் தன்னில் கூட பின்.. பதில்கள் வருமப்பா!!

ஏன் ? எதற்கு ? அப்பனே பின்.... இயலான்!! இயலாதவன் இல்லாதோன் அப்பனே உள்ளோன்!!.. (இல்லாதவர்கள் இருப்பவர்கள்) அப்பனே... இதற்கும் வருங்காலத்தில் அப்பனே.. பின் அழகாகவே எடுத்துரைப்பேன் என்பேன் அப்பனே.

ஏன் எதற்கு என்றால் அப்பனே... ஒவ்வொரு வாக்கிலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பரிசுத்தமான அப்பனே சில விளக்கங்கள்... கொடுத்து தான் அப்பனே அனைத்தும் அப்பனே பின் செப்ப முடியும் என்பேன் அப்பனே.

நிச்சயம் அவை தெரிந்து கொண்டு நடந்தால் தான் அப்பனே உண்மை நிலை புரியும் அப்பனே இறைவன்... யார் என்பதை கூட தெரியும் என்பேன் அப்பனே. 

அவ்வாறு நிச்சயம் தன்னில்  கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரியாமல் வணங்கினாலும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா!!!

நிச்சயம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் அப்பனே!!

இதனால் அப்பனே அறிந்தும் ஏனென்றால்... தர்மம் தலைகீழாகவே அப்பனே பின் சென்று கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பல பேருக்கு நிச்சயம் அப்பனே தீபங்களை ஏற்ற சொன்னேன் அப்பனே அழிவுகள் வருகின்றது என்று அப்பனே. 

ஆனாலும் மனசாட்சி இல்லாதோர் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அவை கூட... ஏற்ற முடியவில்லையே!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே... பின் அழிவுகள் வந்துவிட்ட பிறகு... பின் இறைவன் இருக்கின்றானா??? என்ற கேள்வியும் கூட அப்பனே பின் மறைமுகமாக... சொன்னேனே அப்பனே... ஏற்றுங்கள்!! ஏற்றுங்கள் !! என்று!!

ஆனாலும் சில தரித்திரர்கள் அவை ஏற்றினால்... சில கர்மாக்கள்.. வந்துவிடும் என்றெல்லாம் அப்பனே. 


இன்னும் அப்பனே அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே.... வாக்குகள் கூட. பின் எவ்? தர்மத்தை கடைபிடிப்பவனுக்கு.. வாக்குகள் பின் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று கூட பின்... புண்ணியவானுக்கு... அப்பனே நிச்சயம் அப்பனே... பின் அனைத்தும் கொடுத்து.. அவன் இல்லத்திற்கே இச் சுவடி போகும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அனைத்தும் அவன் தனக்கு நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதனால் தான்.. அப்பனே தீபங்களையும் கூட...அப்பனே இன்னும் அப்பனே... புண்ணியங்கள் அப்பனே பின் எவை எதை என்று அறிந்து சொன்னால் அப்பனே... நீங்கள் எல்லாம் பயந்து கொள்வீர்கள் என்று அப்பனே. 

அதனால் தான் அப்பனே பின் மறைமுகமாக அதைத் தடுப்பதற்கு எல்லாம் அப்பனே... நிச்சயம் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

உண்மை ஞானி அப்பனே நிச்சயம்.. அவை நடக்கும் பின் இவ் அழிவு நடக்கும் என்பதையெல்லாம்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் கண்கூடாக அப்பனே எதை என்று அறிய அறிய சொல்ல மாட்டானப்பா!!

அதை தடுப்பதற்கு நிச்சயம்... பல வழிகளிலும் கூட அப்பனே.... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே. 

இதனால் அப்பனே ஏன் எதற்கு... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஒரு ரகசியத்தை சொல்கின்றேன். 

அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட.... அதாவது ஒரு மண்டலம் வரை... அப்பனே பின் விரதம் இருக்கின்றார்கள்... அப்பனே பின் இவ் ஐயனுக்கு (ஐயப்பனுக்கு) 

ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய அறிய... அப்பனே பின் எப்படி விரதம் இருக்க வேண்டும்????... என்பதை எல்லாம் அப்பனே... தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!..

அப்பனே விரதம் இருந்தாலும்... அப்ப நான் நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் எதையெதையோ தின்னுகின்றான்.. என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே எதை என்று புரிய அப்பனே... அதாவது உடம்பில் அப்பனே... தானாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அழுக்குகள் சேருமப்பா!!!!

அப்பனே அவ் அழுக்குகள்.. அப்பனே எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் அப்பனே பின் நீங்கள்.. அப்பனே உண்டு கொண்டு இருந்தாலே அப்பனே  அவ் அழுக்குகள் சேர்ந்து கொண்டே இருக்குமப்பா!!!

ஆனாலும் அப்பனே அவை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... முதுகின் பின்புறம் போகுமப்பா அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் யாருக்கும் தெரியாதப்பா. 

இவ்வாறு பின் அதாவது முதுகு பின்புறம் சென்று அப்பனே... அறிந்தும் பல அழுக்குகளை எதை என்றும் புரிய புரிய அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம்  அவ் அழுக்குகள் தேங்கி கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம் அப்பனே உடம்பு அப்பனே பின் அறிந்தும் கூட வயதானதைப்போல் தோன்றும் அப்பா. 

அவை பின் கரைக்க வேண்டும்!!

அப்பனே பின் எப்படி கரைப்பது?????

அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவ் சக்திகளாலும் அதை கரைக்க முடியாதப்பா!!!

அதனால் அப்பனே விரதத்தை... எதை என்று புரிய அப்பனே

எதை என்று கூற அதாவது.. உடம்பிற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பட்டினி போட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் எதை என்று அறிய அறிய அப்பனே... அப்படியே எதை என்று கூற பின்னால் (முதுகில் இருக்கும் அழுக்குகள்) இருப்பது தானாகவே நிச்சயம் தன்னில் கூட... முன்னுக்கு வந்து அப்பனே... அறிந்தும் பின் அதாவது... அறிந்தும் எதை என்று புரிய அப்பனே...அவ் அழுக்குகள் தானாக கரைந்து.. அப்பனே போதும் அப்பா. 

அப்பனே அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே சில சில வழிகளிலும் கூட அப்பனே பின் உடம்பு வயது ஆகின்றதை தடுக்கின்றது.

அவை மட்டுமில்லாமல் அறிந்தும் கூட.. பல நோய்களைக் கூட அப்பனே தடுக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அப்பனே பின்... அதாவது பின் முதியவன் யான் என்று பல நோய்கள்... வந்துவிட்டது என்றெல்லாம் அப்பனே.

ஆனாலும் அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே பின்... அழகாகவே சொன்னேன் அப்பனே... இதனால்தான் அப்பனே புரிந்து கொண்டு வாருங்கள் புரிந்து கொண்டு வாழுங்கள்.. என்று அப்பனே. 

இதனால் அப்பனே இவ் விரதத்தை கடைப்பிடித்து வந்தாலே நிச்சயம் உடம்பிற்கு எவை என்று அறிய அறிய... இதனால் அப்பனே பல வகையிலும் கூட... அப்பனே இப்பொழுதெல்லாம்... புற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது.. என்பேன் அப்பனே. 

இதற்கும் காரணம் அப்பனே அவ் அழுக்குகள் தான் என்பேன் அப்பனே...

அவ் அழுக்குகளை அப்பனே உடனடியாக நீக்க வேண்டும் என்றால் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... அப்பனே ஒன்று மூலாதாரம்... என்பேன் அப்பனே நிச்சயம்... அப்பனே உடம்பிற்கு பட்டினி போடுவதே என்பேன் அப்பனே. 

நிச்சயம் சொன்னேன் இங்கு. 

இதனால்தான் அப்பனே அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு பட்டினி இருந்து அப்பனே பின்... தேங்காயும் அப்பனே பின் எலுமிச்சை பழங்களும் கூட.. அப்பனே இன்னும் அறிந்தும் கூட... பின் அதாவது சுத்தமான.. அதாவது நீர் ஆகாரங்களையும் கூட எடுத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே...

நிச்சயம் தன்னில் கூட பல வகையான புண்ணிய நதிகளில் (நீர்) இருந்து எடுத்து வந்து!!!... அவை தன் எடுத்து வர அப்பனே... அருகம்புல் அப்பனே இறைவனுக்கு... பின் என்னன்னா சமர்ப்பிக்கின்றோமோ அவையெல்லாம்... அவையெல்லாம் கொண்டு வந்தாலே போதுமானதப்பா!!!.. நிச்சயம் நோய்களே வராதப்பா!!!

(இறைவனுக்கு படைக்கும் வில்வம் துளசி அருகம் புல் வாழைப்பழம் தேங்காய் இவற்றையெல்லாம் கொண்டு வர வேண்டும் புண்ணிய நதிகளில் இருந்து நீர் எடுத்து வந்து அதை பருக வேண்டும்... விரத காலங்களில் தேங்காய் எலுமிச்சம் பழச்சாறு அருந்த வேண்டும் இப்படி எல்லாம் செய்தால் நோய்கள் வராது) 

ஏற்கனவே இறைவனுக்கு படைக்கும் பொருட்களை பற்றி.. அதாவது பழம் தேங்காய் வில்வம் துளசி பச்சைக் கற்பூரம் அருகம்புல் இவற்றைப் பற்றி குருநாதர் ஏற்கனவே கூறிய வாக்கு... குறிப்பாக கணபதிக்கு என்றும் இளமையுடன் வாழ ஈசன் அருளிய அருகம்புல் பற்றிய மகிமை இவற்றை குறித்து 2022 ம் ஆண்டில் 

சித்தன் அருள் 1066 அன்புடன் அகத்தியர் மௌன குரு ரெட்டி ஜீவசமாதி வாக்கில் குருநாதர் கூறியிருக்கின்றார்.. மீண்டும் அந்த வாக்கினை விவரமாக படிக்கும் பொழுது மேலும் குருநாதருடைய வாக்கில் இருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம் உணர்ந்து கொள்ளலாம்)

பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பனே...

நீங்களே நோய்களை உருவாக்கிக் கொண்டு அப்பனே... இறைவனிடத்தில் வந்தால் அப்பனே... எப்படியப்பா???

அவை மட்டும் இல்லாமல்... அப்பனே நிச்சயம் ஒவ்வொரு மூலிகைக்கும் கூட அப்பனே பின்... அதாவது எதை என்று அறிய அறிய... அப்பனே அதை உயிர்பிக்க... அப்பனே பின் மந்திரங்கள் யாங்கள் தந்தோம் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அவை உண்டாலும் அப்பனே சில பேருக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவத்தால் அப்பனே அறிந்தும் கூட பின்... எதை என்று சரியாகுவதே இல்லை அப்பனே... அதற்கும் மந்திரங்கள் உண்டப்பா... அதைச் செப்பி உண்டால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைத்தும் சரியாகும். 

அதற்கும் நீங்கள் அறிந்தும் கூட பின் தர்மத்தின் வழியே செல்ல வேண்டும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பலவகையான... அப்பனே நிச்சயம் அப்பனே... பின் கலியுகத்தில் அப்பனே மனிதனுக்கு இன்னல்களோடு தான் வாழ்வான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ் இன்னல்களோடு வாழாமல் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் தடுத்து நிறுத்தவே அப்பனே பின் அனைத்தும் கூட அப்பனே தெரிந்து கொண்டு.... அப்பனே பின் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம் சித்தர்கள் யாங்கள்.

அப்பனே அறிந்தும் இதன் ரகசியத்தை கூட இவ்வாறாகவே அவ் ஜோதிடன் எதை என்று புரியாமலும் கூட அப்பனே..... பணங்கள் வந்துவிட்டதே!!!!!!! என்றெல்லாம் அப்பனே!!

ஆனாலும் குதித்தான் எதை என்று கூற இவ்வளவு... பணங்களா!?!?.. என்று நிச்சயம்... அப்பனே பின் அறிந்தும் கூட அதாவது... பின் பஞ்சம் வந்துவிட்டது அதாவது அவ் ஊருக்கு!!!

நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது பின் யாருக்கும் பின்... உணவில்லை!! நீரில்லை !!எதை என்று... அறிய அப்பனே!!!


ஆனாலும் இவனிடத்தில் அனைத்தும் இருந்ததப்பா!!!

இவன் கிணற்றில் நீர் அப்பனே... அறிந்தும் கூட பணங்கள் இன்னும். மூட்டைகள்.. அரிசி மூட்டைகள்.... ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

 அனைவரும் இவனிடத்தில் பின் வந்தனர் பின் தானங்கள் தாருங்கள் என்றெல்லாம்... நிச்சயம் பின்... ஏன் கொடுக்க வேண்டும்? எதற்கு கொடுக்க வேண்டும்? எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இதனால்...யாங்கள் கொடுக்க மாட்டோம். 

நீங்கள் பட்டினியாகவே இருங்கள் என்று...ஆனாலும் அப்பனே இவ்வாறு தான் அப்பனே... எதை என்று அறிய அறிய... அப்பனே ஆனாலும் பின்... ஆனாலும் பின் அப்பனே... அறிந்தும் இதன் உண்மையைக் கூட ஆனாலும்... மணிகண்டனுக்கு கூட கோபங்கள். 

ஆனாலும் பின் பொறுத்தருளினான்!!!

இதனால் அப்பனே எதை என்று புரிய... இதனால் உன் எண்ணங்கள்... அப்பனே எவ்வளவோ?????

அவ்வளவுதானப்பா... வாழ்க்கை சொல்லிவிட்டேன் அப்பனே!!!

உன் எண்ணங்கள் மேன்மையாக இருந்தால் அனைத்தும் கிட்டுமப்பா!!!

எண்ணம் மேன்மையாக இல்லை என்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே.

அதனால் அப்பனே நிச்சயம் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே.... எண்ணம் போல வாழ்க்கை என்று. 

எண்ணத்தை உயர்வாக வையுங்கள் அப்பனே அதாவது... நீங்கள் பின் எந் நிலையில் இருக்கின்றீர்களோ... அதற்கு நீங்கள் தான் காரணம் என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே வரும் வரும் பின் வாக்கியத்தில் இதைத்தான் சொல்லப் போகின்றேன்...

நீ எதை செய்தாய்???

எதற்காக வந்தாய்?? என்றெல்லாம்!!!

அதை புரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வாழ்ந்திடுவாய் என்பேன். அப்பனே... அதை புரியாமல் நின்றால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய... பின் வாழ்வதே வீணப்பா. 

இதனால் அப்பனே மீண்டும் அறிந்தும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது... இவர்கள் இருவருக்கு அப்பனே சொத்துக்கள் அப்பனே பல தங்க நகைகள் சேர்த்து வைத்திருந்தார்கள் அப்பனே... அதாவது அவர்கள் எதை என்று புரிய அப்பனே அவை அப்படியே.. எங்கோ சென்று விட்டது என்பேன் அப்பனே!!

அதனைப் பற்றியும் தேவையில்லை!!

ஆனாலும் பின் அழுது புலம்பினார்கள்... இவ்வாறாயிற்றே என்று... இதனால் அப்பனே தன் மனைவிக்கும் நிச்சயம்.. நோய்கள் பற்றிக் கொண்டது... இதனால் அப்பன நிச்சயம் பல.. மருத்துவங்களை தேடி தேடிச் சென்று அப்பனே.. அப்பனே அறிந்தும் கூட பின்.. எவ்வளவு மருந்துகளை உண்டாலும் பின்.. எவை என்று அறிய அறிய!!

பின் காசுகள் எல்லாம் செலவாயின.. நிச்சயம் தன்னில் கூட !!

பின்பு இவந்தனுக்கும் அதாவது ஜோதிடனுக்கும்.. நோய்கள் வந்துவிட்டது.. அப்பனே..

எங்கு போனாலும் தீர்வுகள் இல்லை. 

அப்பனே காசுகளை அள்ளிக் கொடுத்தனர் என்பேன் அப்பனே.. ஆனாலும் அப்பனே நோய் தீரவே இல்லை அப்பனே... நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட கடைசியில்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று கூறிய... அப்பனே பின் எதற்கும்... எவை என்று அறிய அறிய சேர்த்து வைத்தது... அப்பனே இவர்களுக்கே செலவுகள் செய்து... அப்பனே பின் மோட்சமும் கிடைக்கவில்லை.. என்பேன் அப்பனே. 

அவர்களும் இப்பொழுது இதே பிறவியில் பிறந்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. பாவ மன்னிப்பிற்காக பிறந்து... ஜோதிடத்தை கற்றுக்கொண்டு அப்பனே... சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... இனியாவது பக்தியை கடைப்பிடித்து மோட்சத்தை பெறுவோம் என்று பின் அவந்தனக்கு!!

அவந்தனும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றானப்பா.. அப்பனே இப்பொழுது கூட... இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

ஏன் கொடுக்க வேண்டும்??? என்று இருந்தால்!!???....... இறைவனும் இவந்தனுக்கு ஏன் கொடுக்க வேண்டும்?? என்று எண்ணுவான் என்பேன் அப்பனே!!

நிச்சயம் அப்பனே இவந்தன் எதை என்று அறிய அறிய.. கொடுத்து வாழ வேண்டும் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று அறிய அறிய... இதனால் அப்பனே நிச்சயம் என் பக்தர்கள் ஆயினும் கூட... ஈசனை வணங்கினாலும் கூட... போட்டி பொறாமைகள் குறைகள் சொல்வது இவைதான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அது தவிர... அப்பனே அவர்களைப் பற்றி.. அவர்களே உணர்வதில்லை. 

அவர்களை குறைகாரர்கள் அதனால் தான்.. அப்பனே யார் ஒருவர் அப்பனே... குறைகளாக இருக்கின்றார்களோ அவர்கள் தான்... குறைகள் கூறுவார்கள் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் இதை திருத்திக் கொள்ளாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... ருத்ராட்சமும் அணியலாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் பட்டையும் தீட்டிக் கொள்ளலாம்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் புரண்டு உருளலாம் அப்பனே!! பின் இறைவனை கட்டிப்பிடிக்கலாம்!!

ஆனால் மனது அப்பனே... சரி இல்லை என்றால் அப்பனே நிச்சயம்... இவையெல்லாம் வீணப்பா!!

 நிச்சயம் நோய்கள் கொடுத்து அப்பனே பின்பு...!!!

 இறைவனை இப்படி எல்லாம் யான் பூஜித்தேனே!!!... எந்தனுக்கு என்ன கிடைத்தது????? இறைவன் பொய் என்று சொல்லிவிடுவானப்பா!!

அப்படி அதாவது.. நீங்கள் செய்த தவறுகளுக்கு இறைவன் பொறுப்பா???? என்ன!!!

அப்பனே நிச்சயம் உரைக்கின்றேன் வரும் காலத்தில்.. என்ன ? என்ன நடக்கும் என்று!!

அப்பனே ஆசிகள் ஆசிகள் ஆசிகள் கோடிகளப்பா!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

Saturday, 14 June 2025

சித்தன் அருள் - 1876 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 3



ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2 )

குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு நீண்ட தனி வாக்குகள் பல உரையாடல்களுடன்.)

அப்பனே தன் நிலைமைக்கு, தன் சக்திக்கு ஏற்ப்பவாறுதான் இறைவன் அனைத்தும் செய்வான் அப்பனே. புரிகின்றதா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரிகின்றதா? (திறமை) ஒன்றும் இல்லாதவர்களுக்கு (வேலை) கொடுத்து விட்டால் அங்க ( அவர்களால் வேலையில் திறமையாக ) 
ஒன்றும் செய்ய முடியாது. 

அடியவர்கள் :- புரிகின்றது ஐயா.

குருநாதர் :- இதனால்தான் அப்பனே, திருமணங்கள் கூட அப்பனே இறைவனே தடுத்து நிறுத்துகின்றான் அப்பனே. ஏன் எதனால் என்றால் வாழ்க்கை நிச்சயம் வாழத்தெரியாமல் வாழ்வார்கள் அப்பனே. பின்பு பிரிவு நிலை ஏற்படும் என்பேன் அப்பனே. அதனால்தான் இறைவனே நிறுத்தி வைக்கின்றான். ஆனாலும் அப்பனே இதற்குப் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று ஓடுகின்றார்கள். 

இதனால் ராகு கேதுக்கள் செவ்வாய் இன்னும் தோடங்கள் ( தோஷங்கள் ) என்றெல்லாம் சொல்லி , மக்களைத் திசை திருப்பி, காசுகளைப் பறித்து அப்பனே ஆனாலும் கடைசியில் பார்த்தால் ஒன்றும் நடப்பதில்லை. அப்படி நடந்தாலும் பிரிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றதப்பா. 

அவ் பக்குவங்களை ஏற்படுத்தித்தான் மணங்களும் இறைவன் முடிப்பான். அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். 

என்ன ஏது என்றெல்லாம் இறைவன் அப்பனே அதாவது மனிதன் யோசிப்பதைவிட இறைவன் கோடி மடங்கு யோசிக்கின்றானப்பா. 

இதனால்தான் அப்பனே தெரியாமல் வாழ்ந்தவர் எல்லாம் அப்பனே தெரிந்தவர்கள். அதாவது அவர்களும் தெரியாதவர்கள்தான். ஆனாலும் சரியாகப் பயன்படுத்தி , திசை திருப்பி, அப்பனே கர்மத்தில் அப்பனே விட்டுவிடுகின்றார்கள். என்ன லாபம்? 

(அதாவது திருமணம் நடக்கக் கூடாது என்பவர்களை ஜோதிடத்தின் மூலம் திசை திருப்பி, அவர்களிடம் பணம் பறித்து, திருமணம் செய்ய வைத்து, அவர்களைக் கர்மத்தில் நுழைத்து விடுகின்றனர். எனவே இதே காரணங்களால் அங்கு ஒரு அடியவருக்குத் திருமணம் அதனைத் தாமதப்படுத்தி குருநாதர் அமைதி காத்துள்ளேன் என்று உரைத்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. ஆனால் அனைவருக்கும் நல் நேரங்கள்தான் அப்பனே. ஆனாலும் ஏன் இப்படி நடக்கின்றது என்று கூட நீயும் கேட்கலாம் அப்பனே. இதனால்தான் அப்பனே தான் தன் செய்த எவை என்று அறிய அறிய. 

அப்பனே ஏன் எதற்கு என்றால் அறிந்தும் உண்மைதனைக் கூட அப்பனே சனீஸ்வரனிடத்திலும் கூட யான் சொல்லிவிட்டேன். தன் மகனை எதையும் செய்யாதே என்று அப்பனே. சனீஸ்வரனும் சரி என்று சொல்லிவிட்டான் அப்பனே. அப்பொழுது தீய நேரமானாலும், நல் நேரமே அப்பனே. 
( தீயவை நடக்க இருந்த இவ் அடியவருக்கு நல்லதே நடந்தது.) 

குருநாதர் :- அதனால்தான் அப்பனே எண்ணம்போல் வாழ்க்கை என்று. இதற்கு எடுத்துக்காட்டாக அப்பனே நீயும் கூறும். 

(இப்போது யாரும் இதுவரை உலகம் அறியாத மனதில் நுழைந்து இறைவன் அருளாட்சி செய்யும் அற்புத நிகழ்வு ஒன்று நடந்தேறியது) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- (அங்குள்ள ஒரு அடியவரைப் பார்த்து) ஐயாவை வைத்தே சொல்லலாம். ஆசிரியர் பணியில் உள்ளார்கள். எல்லா குழந்தைகளுக்கும் , மொத்த வகுப்பிற்கும் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்? பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்த மாதிரி பூசைகள் செய்தால்,  குழந்தைகள் சொல் பேச்சு கேட்கும் என்று எல்லாம் நிறைய குழந்தைகளுக்குச் சொல்லி இருக்கின்றார்கள்.  அப்படி எல்லோருக்கும் நல்லது செய்ததால், ஐயாவோட குடும்பத்தை, (குருநாதர்) ஐயன் வந்து காத்து அருளியுள்ளார்கள். 

குருநாதர் :- அப்பனே, இதையும் யான்தான் பேசவைத்தேன் அப்பனே. புரிகின்றதா அப்பனே. இதனால் குற்றம் எங்கு உள்ளது என்பதை நீயோசி. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதை பேச வைத்தது நான்தான் என்று உரைக்கின்றார். (ஐயா இங்கு அவர் உங்கள் மனதில் நுழைந்து பேச வைத்துள்ளார்.)

குருநாதர் :- அப்பனே அவரவர் வழியில் அவர்கள் சென்று கொண்டிருந்தாலே போதுமானது. யாங்கள் வந்து நிச்சயம் வழி நடத்துவோம் அப்பனே. மீறிச் சென்றால்தான் அப்பனே. 

இதனால் மீறிச்சென்றாலும் அப்பனே எதை என்று தெரியாமலும், அறியாமலும் இருந்தாலும் பின் சண்டை, சச்சரவுகள் , பின் மீண்டும் நேராக சென்று கொண்டிருந்தால் என்ன இருக்கும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நேராக போய்க்கொண்டே இருந்தால் என்ன இருக்கும் என்று கேட்கின்றார் ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஏதாவது ஒரு இடத்தில் முட்டி நின்றுவிடுவோம். 

குருநாதர் :- அப்பனே இதுதான் வாழ்க்கையப்பா. அப்பனே ஆனாலும் நேராகச் சென்றால் அப்பனே இறைவனை அடைய வேண்டும். அதற்கு என்ன வழி? 

சுவடி ஓதும் மைந்தன் :- நேராக போய்க்கொண்டே இருக்க வேண்டும். முட்டி கீழே விழுகின்றீர்கள். ஆனாலும் போய்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்று (குருநாதர்) கேட்கின்றார்? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஐயன் உத்தரவுப்படி அறப்பணிகள், தான தர்மங்கள், இறை நம்பிக்கை ….

குருநாதர் :- அப்பனே தன் கடமை என்னவென்று யோசித்து, யோசித்து எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சரியான வழியில் அதாவது நேரான வழியில் சென்று கொண்டே இருந்தாலே இறைவனை கண்டுவிடலாம் அப்பா. ஆனால் அப்பனே அவ்வாறு கண்டுவிடுவதே இல்லையப்பா மனிதன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே (நேர்கோட்டில் சென்று கொண்டே) தன் கடமையை செய்து கொண்டு,  ( அங்குள்ள ஒரு அடியவரை உதாரணம் காட்டி, உங்களுக்கு ) இப்போது என்ன கடமை? நீங்க படிக்க வேண்டிய வயதில் படித்துக்கொண்டு , (வேலைக்கு போக வேண்டிய நேரத்தில் ) வேலைக்கு, அதாவது அந்தந்த நேரத்தில் முயற்சி எடுத்து , முயற்சி எடுத்து, முடியவில்லை என்றாலும் அதனை சரி செய்து சரியான வழியில் சென்று கொண்டே இருந்தால் , ஒரு நாள் நேராக இறைவனிடமே சென்று விடுவீர்களாம். 

குருநாதர் :- அப்பனே அப்படி சென்றால்தான் அப்பனே உத்தமம். அப்படி செல்லாவிடில்தான் இறைவனை நாடுகின்றார்கள். புரிகின்றதா இப்பொழுது? 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ, தன் கடமையை யார் சரியாக செய்ய வில்லையோ அவங்கதான் (இறைவனை நாடுகின்றனர்). ஐயா, கொஞ்சம் differentஆக  இருக்கு( நம் அனைவருக்கும் முற்றிலும் புதிய வாக்கு இது) . புரியுதுங்களா ஐயா? அப்போ தன் கடமையை யார் சரியாக செய்கின்றார்களோ, அவங்க Direct ஆக இறைவனிடம் போகலாமாம். ஐயா இது எப்படி ( புரிந்து கொள்வது என்றால்) சொல்கின்றார் என்றால் நாம் கீழே விழுந்து கும்பிட்டாலும் , என்ன செய்தாலும் (இறைவன்) ஆசிகள் கிடைப்பது (கடினம்). அப்ப, தன்னோட கடமை என்ன? அதை செய்து கொண்டே கரக்டாக போய்க்கொண்டே இருந்தோம் என்றால் , இறைவனிடமே directஆக போய் பேசலாமாம். ஐயா புரியுதுங்களா? 

அடியவர் 4 :- அவங்கவங்க அவங்க வேலையை செய்கின்றார்கள்தானே? 

சுவடி ஓதும் மைந்தன் :- ம்..

அடியவர் 4 :- அதில் ஏன் இடையூறு செய்கின்றார்கள்? 

குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே. அதாவது வாகனத்தை ஒருவன் இயக்குகின்றான் அப்பனே. இடையே ஏன் நிறுத்துகின்றான் கூறு?

அடியவர் 4 :- எங்க நான் நிறுத்துகின்றேன்? அது நிற்கின்றது இல்லையா. (அதாவது) இடிக்கின்றதில்லையா?

குருநாதர் :- அப்பனே , எப்படியப்பா (அதுவாகவே தானாக) நிறுத்தும்? அப்பனே காவலாளிகள் நிறுத்தினால் என்ன செய்வாய் அப்பனே? பின் (நிற்காமல்) நீயே சென்றுவிடுவாயா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வண்டி செல்கின்றது. வாகனம் இயக்குகின்றோம். ஒரு காவலாளி ஏன் நிறுத்தி வைக்கின்றார் என்று கேட்கின்றார். ஐயா நீங்க சொல்லுங்க ஐயா. 

அடியவர் :- சோதனை செய்வதற்காக…

குருநாதர் :- அப்பனே பக்குவத்தைக் கொடுத்தால்தான் அப்பனே அடுத்த படி ஏற முடியும் அப்பா. அப்பனே நீயும் தெரியாமலே கேட்கின்றாய் அப்பனே, தெரிந்து வைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, சோதனை. போய்க்கொண்டே இருக்கின்றீர்கள் நேர் வழியில். ஏன் நிறுத்துகின்றீர்கள். நீங்கள் (அப்படியே) போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே? ஐயா புரியுதுங்களா? அங்கு அவர்கள் சோதனை செய்கின்றார்கள். இது போல்தான் நாம் நேர் வழியில் செல்லும் பொழுது…

(இப்போது சுவடி ஓதும் மைந்தன் அங்குள்ள அடியவர்களை மேலும் கேள்வி கேட்க ஊக்குவித்தார்கள்.)
ஐயா (மேலும் கேள்விகளை) கேளுங்கள். இந்த சமயம் (நீங்கள் கேள்விகள் கேட்க) நல்ல சமயம். 

அடியவர் 4 :- செய்துகொண்டே இருப்பார்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :- இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?  நீங்கள் அடுத்த படிக்கு , ஒரு பெரிய நிலைக்குச் செல்வதற்கு இந்த சோதனை இருந்தால்தான் அடுத்த படியைப் பிடிக்க முடியும். இந்த சோதனை இல்லை என்றால் அதைப் பிடிக்க முடியாது.

அடியவர் 4 :- எப்படி உணர்ந்து கொள்ளமுடியும், அடுத்த அடுத்த படிக்குச் செல்வதை?

குருநாதர் :- அப்பனே உணர்ந்து கொண்டேதான் வருகின்றாய் அப்பனே.

அடியவர் 4 :- (எங்கள் வாழ்க்கையில்) எங்கே முன்னே போனாலும் இடிக்குதுல்ல? (தடைகள் பல வருகின்றது. முன்னே போக முடியவில்லை). 

குருநாதர் :- அப்பனே சோதனை செய்பவன் , அப்பனே அங்கேயா நீ நின்று விடுகின்றாய் அப்பனே? மீண்டும் கிளம்பிவிடுகின்றாய் அல்லவா அப்பனே?

( நம் பலரின் உள் குரல் இவ் அடியவர் இப்போது உரைத்த பதில்/கேள்வி. இந்த இடத்தில் இதனை உங்கள் உரையாடலாக நினைத்து வாக்கினை உள்வாங்கப் பல புரிதல்கள் உங்களுக்கு உண்டாகும்.)

அடியவர் 4 :- (எனக்கு) எங்கே போனாலும் பரம்பதத்தில் ( பரம்பதம் விளையாட்டில்) பாம்பு கடிச்சு முதல் கட்டதிற்கு வருவோம் இல்லையா? அந்த கதைதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. 

குருநாதர் :- அப்பனே அப்படி இருந்தால்தான் அப்பனே என்னிடத்தில் வரவும் முடியும் அப்பா. இப்பொழுது என்னையும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றாய் அப்பா. 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புக்கள் ) 

அடியவர் 4 :- (பரம்பத விளையாட்டில்) முதல் இடத்திலேயே இருந்தால் கூட பரவாயில்லை…(நல்ல உயரம் சென்று அங்கிருந்து அல்லவா கீழே விழுந்து கொண்டே இருக்கின்றேன். மனசு வலிக்கின்றது.) 

குருநாதர் :- அப்பனே அதாவது பாவத்தைக் கரைத்துக் கொள்பவனே, என்னிடத்தில் வருகின்றானப்பா. 

(நமது வாழ்க்கை என்ற பரம்பதம் விளையாட்டில் பாம்பு கடித்து கீழே விழுந்தால் , ஆரம்பித்த முதல் கட்டத்திற்கே வந்தால் - பாவம் கரைகின்றது என்று பொருள் கொள்க.) 

குருநாதர் :- இப்படி நீ கஷ்டங்கள் படவில்லையென்றால் ஏனப்பா நீ வந்து என்னிடம் வாக்குகள் கேட்கப் போகின்றாய்? அகத்தியனா? யாரோ ஒருவன் என்று சென்று கொண்டிருப்பாய் அப்பனே. இதனால்தான் அப்பனே அதாவது உந்தனுக்கு இப்பொழுது கொடுத்திருக்கின்றது நல்லதா? தீயதா ? நீயே யூகித்துக் கொள் அப்பனே. அப்பனே எழுந்து நின்றவனே இதைக் கேள் அவனிடத்தில் நீயே. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- உங்களுக்குச் சோதனைகள் நிறைய வந்துள்ளது , அதைக் கடந்து வந்துள்ளேன் என்று சொல்கின்றீர்கள்,  இல்லையா? இந்த சோதனைகளைக் கொடுத்ததில் உங்களுக்கு நன்மையா தீமையா என்று ஐயன் (குருநாதர்) கேட்கின்றார். 

அடியவர் 4 :- எனக்கு எது வந்தாலும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அடுத்த தேவை என்று ஒன்று உள்ளது அல்லவா? அதை வந்து நமக்கு…..

குருநாதர் :- அப்பனே தேவை இப்பொழுது உந்தனுக்கு அதாவது தண்ணீர் வேண்டும் என்பேன் அப்பனே. நேரடியாக உள்ளே செல் பார்ப்போம்? 

அடியவர் 4:- புரியவில்லை ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்கு இப்போது தண்ணீர் தாகம் தேவை  என்று (பொதிகை வேந்தன்) நான் சொல்கின்றேன். (நீங்கள் இப்போது இந்த வீட்டில்) நேராக உள்ளே சென்று குடித்து விடுவீர்களா என்று கேட்கின்றார். ஐயா புரியுதுங்களா? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- (இந்த வீட்டில்) கேட்டுத்தானே தண்ணீர் குடிப்பீர்கள்? 

அடியவர் 4 :- ஆமாம். கேட்டுத்தான் (வாங்கி) குடிப்பேன். 

குருநாதர் :- அப்பனே (நீ உள்ளே சென்று) நேரடியாக ஏன் அருந்தக்கூடாது? 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வீட்டில் எங்கு தண்ணீர் உள்ளது என்று தெரியும். அப்படி இருக்கையில் ஏன் நேரடியாக உள்ளே சென்று அருந்தக்கூடாது என்று கேட்கின்றார். 

அடியவர் 4 :- நம்ம வீடு என்றால் (யாரையும் கேட்காமல்) எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வெளியே போனால் கேட்டுத்தான் வாங்க வேண்டும். 

குருநாதர் :- அப்பனே இப்படித்தான் இறைவன் மனிதனைப் படைக்கின்றான் அப்பனே. அதனால் அவன் கட்டுப்பாட்டில்தான் ஒவ்வொரு ஆன்மாவும் என்பேன் அப்பனே. பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவாறுத்தான் இறைவனும் இயக்குவான் என்பேன். புரிகின்றதா? அப்பனே இன்னும் கேள்?

அடியவர் 4 :- ஐயா இதை எப்படி நாங்கள் உள்ளே உணர்ந்து கொள்வது? 

குருநாதர் :- அப்பனே இப்பொழுது இதுவரை உணர்ந்து கொண்டுதான் வந்துவிட்டாய் அப்பனே. இதுவரை பின் பாவத்தில் மிதந்துதான் வந்து கொண்டு இருந்தாய். இப்பொழுதுதான் அதாவது யான் மீட்டெடுக்கவில்லை என்றால் அப்பனே, நீ ஏற்கனவே பைத்தியமாகி இருப்பாய் என்பேன் அப்பனே. 

அடியவர் 4 :- (வாழ்க்கை என்ற பரம்பதம் விளையாட்டில் பல முறை கீழே விழுந்த வலியினால்) ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றேன். ஒன்னும் வித்தியாசம் இல்லைங்க. 

அடியவர்கள் :- (பலத்த சிரிப்புக்கள்)

அடியவர் 4 :- இன்னும் நடக்க வேண்டிய ஒரு டைம்ல ( time ) வந்து delay ஆகி…..

குருநாதர் :- அப்பனே உடம்பே உன்னிடத்தில் இல்லை அப்பா. நீ கேள்விகள் கேட்கின்றாய்!

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 

(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து,  உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். நம் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் அவசியம் கட்டாயமாக சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பின் அன்னமிட அவ் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். புண்ணியங்கள் மலரட்டும். தர்மம் செழித்து ஓங்குக. ) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 2 June 2025

சித்தன் அருள் - 1875 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 5!


சித்திரை திருநாள் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 5 

அப்பனே பின் எவை என்று அறிய அறிய சித்தனின் பாதை ஒரு பைத்திய பாதை என்பேன். அப்பனே. 

ஏனென்றால் அப்பனே பின் அனைத்தும்.. சொல்லி !!!!!!!..........

ஆனாலும் அப்பனே அவ்வாறு!? இவ்வாறு.!?. என்று யோசித்துக் கொள்வதற்குள்... காலமே ஓடிவிடுமப்பா!!!


அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...ஏன்? எதற்கு? அப்பனே உடம்பு... எவ்வாறு இயங்குகின்றது??  என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் சரியாகவே... இயங்குவதற்கு அப்பனே அருகம்புல் தேவைப்படுகின்றது என்பேன். 


அப்பனே இது ஏன் இங்கு வைத்தேன் என்றால்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல... அறிந்தும் கூட அதாவது... ஈர்ப்பு விசை அதற்கு அதிகம் என்பேன் அப்பனே.

அதைத்தான் நிச்சயம் அப்பனே அப்படியே உட்கொண்டால்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... கிரகங்களின் ஈர்ப்பு அப்பனே பின்... அதிகமாகி அதாவது கதிர்வீச்சுக்கள்... அதிகமாகி அப்பனே உடம்பு... வலிமை பெறும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பின் சக்தியை... அதாவது அப்பனே பின் அதாவது எளிதாக.பின் அவ் விஷ்ணு சக்கரத்தை.. இயக்கலாம்!!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே தெரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே மனிதனுடைய வாழ்க்கை அதாவது... அவனவன் தெரிந்து கொள்ளலாம் என்பேன். அப்பனே. 

அதாவது நிச்சயம் அப்பனே... சில பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய மாடு மீது மழை பொழிந்தால் என்னவாகும்.. என்னவாகும் என்று???

(எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல) 

(எதைப் பற்றியும் கவலைப்படாமல் சென்று கொண்டே இருக்கும்)


அறிந்தும் எதை என்று அறிய அறிய ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய...

அருகம்புல் அப்பனே பின் உட்கொள்ளும் பொழுது.. அப்பனே பின் அதிகமாகி...அப்பனே பின் எதிரொளிக்கும் கதிர்வீச்சுகள் அப்பனே பின் அதை அப்படியே.. வெளியேற்றுகின்றது என்பேன் அப்பனே. 

அதனால் தான் அப்பனே அதை கிருமிகளை... எடை என்று அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே... எவை என்று புரியாமல் இருந்தாலும் அப்பனே எதை என்று அறியாமல் இருந்தாலும் அப்பனே பின் இப்பொழுது புரியாதப்பா....

அவை இவை வார்த்தைகள் சொல்கின்றான் அகத்தியன் என்று ... இதனால் போக போக புரியுமப்பா!!!

அப்பனே பின் அதை தன் வீடு முழுவதும் (சாணம் மெழுகுதல்) நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதில் பல... அப்பனே எவை என்று அறிய அழிந்து போக கூடியவை என்பேன்!!!




பசுமாடுகள் வெளியேற்றும் சாணம் மற்றும் கோமியம் கிருமி நாசினி ஆக செயல்படுவதை குருநாதர் குறிப்பிடுகின்றார். 


வீட்டை சுத்தம் செய்வதற்கும் மாட்டு சாணம் கொண்டு மெழுகுகின்றோம்.. கோமியம் தெளிக்கின்றோம் இது எல்லாம் கிருமி நாசினி. 

உங்களுக்கு ஒரு விஷயத்தை தெரியப்படுத்துகின்றோம் கொரோனா ஆரம்ப காலகட்டத்தில் நோய் வராமல் எப்படி என்ன செய்ய வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு வெற்றிலையில் மிளகை வைத்து மென்று உமிழ் நீரை அப்படியே உள்ளே விழுங்கவும்!!...

 மற்றும் குருநாதர் சிறிதளவு கோமியத்தை உட்கொள்ள சொன்னார்..... அடியவர்களும் அதை கடைபிடித்து நோயிலிருந்து காத்துக் கொண்டனர். 

தற்போது உள்ள சூழ்நிலையில் மாட்டு சாணம் மற்றும் கோமியம் குறித்து மக்களுக்கு சொன்னாலும் அகத்தியர் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார் என்று அதை புரிந்து கொள்ளாமல் அறிந்து கொள்ளாமல் மனிதர்கள் அதை அப்படியே விட்டு விடுவார்கள் ஆனால் அவையெல்லாம் அதன் முக்கியத்துவம் என்ன என்பதெல்லாம் போகப்போக அனைவருக்கும் தெரியவரும் அதன் மகிமையை.       சித்தன் அருள் - 1723 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!

அப்பனே இதற்கு சரியான சான்று என்னவென்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பசுவும் கூட பசு மாடுகள் கூட அப்பனே நல் விதமாகவே அப்பனே எங்கு பின் சரியாகவே முன்பெல்லாம் அப்பனே புல்லை சரியாகவே அப்பனே.. அதாவது நவகிரகங்களின் கூட அப்பனே சக்திகள் விழுகின்ற இடத்தில் தான் அவை தன் நிச்சயம் உட்கொள்ளும் என்பேன். அப்பனே 

இதனால் அப்பனே பின் மாடுகள் அவ்விடத்தில் புற்களை உட்கொள்ளும் பொழுது நிச்சயம் அதாவது பின் அவை தன் உள்ளே நவகிரகங்களின் சக்திகளும் பின் உள்ளே போகுமப்பா!!!

அப்பனே அவ்வாறு நிச்சயம் வெளிவரும் பொழுது அப்பனே அவை தன் மருந்தாக செயல்பட்டது என்பேன் அப்பனே. (கோமியம் மற்றும் பசுஞ்சாணி)

இப்போதெல்லாம் அவை மாறிவிட்டது என்பேன் அப்பனே!!!

என்று ஏற்கனவே வாக்கில் உரைத்துள்ளார்....முழு வாக்கினையும் மேற்கூறிய பதிவு எண் சித்தன் அருளில் படியுங்கள்)


அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது அப்பனே அறிந்தும். கூட பின் எதை என்று புரிய அப்பனே... நல்லது செய்வதற்கு அப்பனே கஷ்டங்கள் தான் இருக்குமப்பா!!

அப்பனே அதற்கும் அதாவது பாவத்தை சுமப்பதற்காகவே அப்பனே... இறைவன் இங்கு அனுப்பி வைத்திருக்கின்றான் அப்பனே 

அதில் கூட எளிதில் அப்பனே கிட்டாதப்பா. 

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் பாவத்தை வைத்தவனே!!!............. நிச்சயம் தன்னில் எதை என்று அறிய அறிய அவ்வளவு சீக்கிரம்... அகற்றுவானா???? என்ன !!!!!

அப்பனே இவை அகற்றி விட்டால் அப்பனே புண்ணியம்.. பெரும் பங்கு வகிக்கின்றது.....


அப்பனே இன்னும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே... இன்றளவு போதுமப்பா அறிந்தும் கூட..

இதனால் அப்பனே நல்லாசிகள்... எம்முடைய ஆசிகள் அருளாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் உங்களுக்கே சில ரகசியங்களை புரிய வைக்கின்றேன் !!

அப்பனே இதனால் அறிந்தும் எதை என்று.. புரிய பின் நிச்சயம் தன்னில் கூட.... அவனவன் அப்பனே பின் என்ன சம்பாதிக்கின்றானோ!???!... 

(பாவமும் புண்ணியமும் அதன் நிலைக்கு ஏற்ப)

அப்பனே அதன்படியே நடக்கும்!!

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் எவை என்று புரிய இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே..

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய... நீங்கள் ஒரு தொழில் அப்பனே செய்கின்றீர்கள் அப்பனே!!... நிச்சயம் அப்பனே அதாவது.. செய்துவிட்டு எந்த எந்தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா??? என்ன!!!

அதற்கான கூலியை அப்பனே வாங்குகின்றீர்கள் அல்லவா!!!!!

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் நீங்கள் செய்வதை... இறைவனிடத்தில் கைகூப்பி எங்களுக்கு தாருங்கள் என்று நீங்கள் தான் அப்பனே நிச்சயம் வாங்கிக்கொண்டு இவ் பூலோகத்திற்கு வந்துள்ளீர்கள். 

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே... அதாவது பாவம் புண்ணியம் என்பது... அப்பனே நீங்கள் கேட்டு வந்த..... எதை என்று புரிய புரிய எதை என்று அறிய அறிய அப்பனே... சன்மானம் என்பேன்!!!


இதனால் அப்பனே ஒரு தொழில் செய்கின்றீர்கள் என்பேன் அப்பனே!!

 பணம் வருகின்றது என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே யார் செலவு செய்கின்றீர்கள்??.. அப்பனே!!! அதேபோலத்தான் அப்பனே... நீங்கள் கேட்டு இறைவனிடத்தில் வாங்கி வந்துள்ளீர்கள் என்பேன் அப்பனே! 

இதை எப்படி செலவு செய்வதப்பா???

நீங்கள் தான் செலவு செய்தாக வேண்டும்!!

அப்பனே இங்கு இறைவனை அப்பனே எப்படி... எதை என்று புரிய  பின் நிச்சயம் அப்பனே... யார் எவை என்று... அறிய இதனால் அப்பனே... இறைவனே பின் சிரிப்பானப்பா!!

பின் இறைவன் எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று!!

(இப்படி மனிதர்கள் புலம்புவதை பார்த்து இறைவன் சிரிப்பார்) 


இறைவனிடத்தில் பாவம் புண்ணியம் இவற்றை நம்மளுடைய வினைக்கு ஏற்ப வாங்கி வந்து விட்டு... நமது புண்ணியம் பாவம் இதற்கு ஏற்ப வாழ்க்கையில் நடப்பதை உணர்ந்து கொண்டு இதற்கெல்லாம் என்ன காரணம்? 

 இதிலிருந்து மீள்வதற்கான வழியை பின்பற்றாமல்... இறைவன் ஒன்றும் தரவில்லை என்று புலம்பினால்!!!

 இறைவன் அனைத்தும் கொடுத்து தான் அனுப்பினேன் ஆனால் இவர்கள் இப்படி இருக்கின்றார்களே என்று இறைவன் சிரிப்பார்)


அப்பனே இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் திறமையை வைத்துக் கொண்டு... அப்பனே நிச்சயம் அப்பனே மனிதன்... அப்பனே பின் எவை என்று அறிய அறிய... கஷ்டத்தில் தள்ளாடுகின்றான் என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே பின் உணர்த்துவதற்காகவே.சித்தர்கள் யாங்கள் !!!!

அப்பனே சில பேர்கள் அதை உணர்ந்து கொண்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய... காசாக்குகின்றார்கள் அப்பனே 

ஆனால் காசுகள் இல்லையப்பா!!!!! பாவங்கள் என்பேன் அப்பனே!!

அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே நிச்சயம்... அப்பனே பின் ஏதாவது கண்டு உணர்ந்து அப்பனே பின் சொல்லியதை எல்லாம் அப்பனே நிச்சயம் மக்களுக்காகவே!!!

பின் புண்ணியத்தை நிச்சயம் அப்பனே அதிகரிப்பதற்காகவே!!!!

ஆனாலும் அப்பனே... அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இலவசமாகவே தர வேண்டும். 

ஆனாலும் அப்பனே காசுகளாக்கி... பின் அவன் குடும்பத்தையே கெடுத்து விடுகின்றான்.


அப்பனே எதை என்று அறிய அறிய நன்மைகள் செய்வது அப்பனே இறைவன்...

இறைவன். அப்பனே இலவசமாகவே காற்றை தந்துள்ளான் அப்பனே!!!

இறைவன் காசுகள் அதற்கு கேட்பதில்லையே!!!!

அப்பனே இன்னும் இன்னும் அப்பனே... என்னென்னவென்று யோசித்துப் பார்த்தால் புரியுமப்பா!!!

(நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்... ஏன்னா பஞ்சபூதங்களையும் பஞ்சபூதங்களால் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அடையும் ஆதாயங்கள் அனைத்தையும் இறைவன் இலவசமாகவே கொடுத்திருக்கின்றார்)

அப்பனே நிச்சயம் அப்பொழுது... பின் ஆசிரியன் அப்பனே... நிச்சயம் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று பின் சொல்லி அனுப்புகின்றான் அப்பனே. 

ஆனாலும் அதற்கு மாறாக மனிதன் வாழ்வதால் தானப்பா பிரச்சனைகளே என்பேன் அப்பனே!!

அப்பனே பக்திக்கு வந்து பின் நிச்சயம் காசுகளுக்கு ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே. 

அப்பனே எங்களை வைத்து காசுகள் பிடுங்குகின்றார்கள் அப்பனே.

யாங்கள் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவந்தனக்கு என்ன கொடுப்பது???

அப்பனே தண்டனை கொடுத்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... இவன் நன்றாக செய்து கொண்டிருந்தானே!?!?!....

பின் இறைவன் (இவ்வாறு தண்டனைகள்) கொடுத்து விட்டானே என்று அப்பனே!!!!

(மக்கள் உண்மை தெரியாமல் பேசுவது)

அப்பனே இதனால் அப்பனே பின் அறிந்து அப்பனே புரிந்து வாழ வேண்டுமென்றால் அப்பனே இவ் ஆன்மாவுக்கு... பிறப்புக்கள் அப்பனே எடுக்க வேண்டியுள்ளது. 

(புரிந்து கொள்வதற்கே ஆன்மா பல பிறவி எடுக்க வேண்டி உள்ளது) 

அப்பனே ஒரே பிறவியில் கிடைத்து விட்டால்... அப்பனே அதற்கும் நிச்சயம்... புண்ணியம் வேண்டுமப்பா!!!

அப்பனே அறிந்தும் அதாவது இறைவனிடத்தில் அப்பனே பின் அதாவது..........


. தொழில் செய்பவர்கள் அப்பனே காசுகள் வாங்குகின்றீர்கள் என்பேன் அப்பனே அதை நிச்சயம் தன்னில் கூட  அப்பனே அறிந்தும் கூட... அதை சேமிக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் சேமித்து அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே... புரிந்து கொள்ளுங்கள்... அப்பனே வட்டியும் வருகின்றது என்பேன் அப்பனே. 

இதே போலத்தான் அப்பனே... இறைவனிடம் என்ன? அப்பனே வாங்கிக் கொண்டு எதை என்று கூற.... புண்ணியத்தையும் கூட அப்பனே பாவத்தையும் கூட அப்பனே!!!...

அவ் புண்ணியத்தை அப்பனே எப்படி.. சேர்க்க வேண்டும் என்று சேர்த்து... அப்பனே பின் வந்தால் அதற்கு வட்டியும் முதலுமாக பின் கிடைக்கும் பொழுது உயர்வான் ஒருவன்... அனைத்தும் தெரிவான் அப்பனே.

அப்போது இறைவன் இல்லத்திற்கு வருவான் என்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும் அறிந்தும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே அறிந்தும் கூட அப்பனே இதனால் நிச்சயம் எவை என்று அறிய.. அப்பனே நிச்சயம் அப்பனே


பின் யார் ஒருவன் எதை என்று புரிய... புரியாவிடிலும் கூட அப்பனே பின்... அனைத்தும் அப்பனே சித்தர்கள் செய்வதைக் கூட யார் ஒருவன் காசுகளுக்காக ... செய்கின்றானோ... அவன் எவை என்று அறிய அறிய நிச்சயம்... கர்மாவில் இறங்கிவிடுகின்றான் என்பேன் அப்பனே... அவன் குடும்பத்தை பார்த்தால் அப்பனே புரியுமப்பா.

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... அதனால் பின் அவன் கால்களிலே.. அவனால் நிற்க முடியவில்லையப்பா !!

(அவர்களுடைய சொந்த காலிலேயே அவர்களால் நிற்க முடியவில்லை மற்றவர்களை நிறுத்துவதற்கு பார்க்கின்றார்கள்) 

அப்பனே புண்ணியம் தெரிந்துவிட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்.. அனைத்தும் பின் எவை என்று அறிய அறிய முதலில்.. தெரிந்து கொள்ளுங்கள் பின்பு.. நீங்களே ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லிவிடுவான். 

அப்பனே இதுதானப்பா நிச்சயம் பின் இறைவனின் படைத்தானே... அதற்கு இறைவனுக்கு. பின் நன்றி செலுத்துதல் என்பேன் அப்பனே...

ஆனால் மனிதன் அப்படி இல்லையப்பா. 


அதனால்தான் அப்பனே பின் நன்றி கெட்ட மனிதனப்பா!!!.. என்றெல்லாம் அப்பனே!!


அப்பனே அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே ஒருவன் சொல்வான் அப்பா எதை என்று அறிய அறிய உலகத்தில்.. கூட பல பேர் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தான் வாழ்வாதாரத்திற்கு பின் என்ன செய்ய வேண்டும்?!! என்று 

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே பின் நிச்சயம் படைத்து விட்டான்....

பின் படைத்தவனுக்கு... அதாவது பாதுகாக்கவும் தெரியுமப்பா!!!

அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இதனால் அப்பனே காசுகள் வருகின்ற பொழுது... அப்பனே இதனால் தான் அப்பனே நிச்சயம்... பக்தி அப்பனே கலியுகத்தில்.. பொய்யாகிக் கொண்டே போகின்றது. 

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கலியுகத்தில் அப்பனே இறைவன்... நேரடியாக வந்து யான் இறைவன் என்று சொன்னாலும்... பின் நீயா ?? இறைவன் என்று சிரிப்பானப்பா!!! கலியுகத்தில் அப்பனே இப்படித்தான் நடக்கப் போகின்றது. 

அப்பனே இதை தெளிவாகவே (பகவத் கீதை) கீதையில் கூட அப்பனே நாராயணன் அப்பனே எதை என்று புரிய அப்பனே...

அதாவது அப்பனே பல அவதாரங்கள்... எதை என்று அறிய அறிய அழகாக உரைத்துள்ளானப்பா!!!

ஆனால் அவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதப்பா!!!

இன்னும் இன்னும் அப்பனே பின் கீதையிலும் கூட ராமாயணத்திலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட... அப்பனே சில ரகசியங்களை கூட மறைத்து விட்டார்கள் என்பேன்...

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே

நிச்சயம் தன்னில் கூட பல ஞானிகள்.. இவ்வுலகத்தை அப்பனே திருத்த பார்த்தார்கள் அப்பனே

ஆனாலும் அப்பனே முடியவில்லையே!!... இதனால் அப்பனே... ஒரே ஆயுதம் இறைவனுக்கு.... கஷ்டம் தானப்பா...

 (அதாவது கஷ்டத்தை கொடுத்து திருத்துவது) 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... தாயவள் நன்றாக உணர்வாள் அப்பனே தன் பிள்ளைக்கு எப்பொழுது எதை தர வேண்டும்?? என்று அப்பனே!!

இதனால் அப்பனே.. இறைவன் நன்கு உணர்ந்தவனப்பா!!!

அதனால் அப்பனே நிச்சயம் அவை இவை என்றெல்லாம்.. இப்பொழுது யான் செப்பமாட்டேன் என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே நிச்சயம் தன் குழந்தைகளுக்கு அப்பனே பின் என்ன புத்திகள் வேண்டுமோ அதை கொடுத்து விடுவேன் என்பேன் அப்பனே... சரியாக உபயோகித்துக் கொள்வதும் சரியாக உபயோகித்துக் கொள்ளாததும் உங்களிடத்திலே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

அப்பனே பின் இங்கு ஒரு தாயவள்.. தன் பிள்ளைக்கு புத்தியை சரியாக கொடுத்தால் அப்பனே அறிந்தும்.. எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் கொடுக்கின்றாள் அப்பா... நிச்சயம் அதை யார் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் பிள்ளையே என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறு தான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட... நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே......

உங்களுக்கு புத்திகளை கொடுக்கின்றேன்!!!

அப்பனே இப் புத்திகளால் குறைகளையும் நீங்களே நீக்கிக் கொள்ள முடியுமப்பா!!

அனைத்தும் யான் செய்ய மாட்டேன் அப்பனே.. அருகில் இருந்து கொண்டு!!!

அப்பனே நல்விதமாக அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே... பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்பேன் அப்பனே.. அனைத்தையும் கூட. 

அதாவது அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும்... இதனால் அப்பனே குறைகள் கொள்ள வேண்டாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் ஒவ்வொன்றாக நீக்குவேன். 

அப்பனே நன் முறைகளாக பல விளக்கங்கள் எதை என்று அறிய அறிய... இதனால் அப்பனே நற்பண்புகள்.. அப்பனே எதை என்று புரிய இதனால்.. அப்பனே எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் அப்பனே... பின் அறிந்தும் எதை என்று... புரியாமலும் கூட மனிதன் அப்பனே எவை என்று அறிய அறிய அதாவது... பக்திக்குள் வந்து விடுகின்றான்!!

இறைவன் இல்லை எதை என்று  அறிய அறிய....யான் இறைவனை நம்பினேன்... நிச்சயம் தன்னில் கூட இறைவன்... ஒன்றுமே செய்யவில்லை!!

அதனால் இறைவன்.. வேடத்தை நாம் போடுவோம் என்று அப்பனே!!

அப்பனே இதில் பணம் எவை என்று அறிய அறிய... சம்பாதிக்கின்றார்கள் அவ்வளவுதான் அப்பனே!!!

கலியுகத்தில் அப்பனே பின்... மனிதர்களுக்கே பூஜைகள் நடைபெறும் என்பேன் .

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... நன்றாக நிச்சயம் அப்பனே பின்... வேடம் போடுபவனையும் கூட... பின் மனிதன் அப்பனே... இன்னும் அப்பனே காசுகளை கொடுத்து... அவனை உயர்த்தி விடுகின்றான் என்பேன் அப்பனே.

ஆனால் இவந்தனுக்கும் கர்மா அப்பா!!!
கடைசியில் அனுபவிப்பான் என்பேன் அப்பனே. 

ஆனால் இவ்வளவு ஏன் கஷ்டங்கள் வந்தது???... குருவை தான் நாம் பிடித்தோமே என்று... பின் ஏன் கஷ்டங்கள் என்று!!!

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... நீங்களே சொல்லுங்கள் அப்பனே... நன்றாக இறைவன் உங்களை படைத்து விட்டான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே..

அவந்தன் பின் சரியாக உங்களை எடுத்துச் செல்ல மாட்டானா?????? என்ன!!! அப்பனே!!...

யோசியுங்கள் என்பேன். 

இதனால் அப்பனே இங்கு எதுவுமே பின் எவை என்று கூற மூலாதாரமே இல்லை என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அவரவருக்கு... என்ன தேவை என்று இறைவனே.. படியளப்பானப்பா!!!


அப்பனே இதை தெரியாதவன் நிச்சயம் தன்னில் கூட... காசுகளை பிடுங்கி கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!! அப்பனே வேடத்தை போட்டுக்கொண்டு என்பேன் அப்பனே!!..
தியானங்கள் செய்கின்றேன் என்று. நிச்சயம் தன்னில் கூட அமைதியாக இருந்து!!!

அப்பனே நிச்சயம் இவ் விஷயம் அவனுக்கு... தெரிந்திருந்தால்?????????

அப்பனே எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எவை என்று அறிய அறிய... எவை என்று புரிய நிச்சயம் அப்பனே... இறைவனை வைத்துக்கொண்டே... பிழைத்தால் அப்பனே... இறைவன் எதை என்று அறிய அறிய சிறிது காலம் அப்பனே.....

"""" போ.......போ.......!!.. என்று விட்டுவிடுவான் அப்பனே!!!

அப்பனே இதை எப்படி என்றால்... அப்பனே நிச்சயம் அதாவது... அப்பனே பின் எதை என்று அறிய அறிய... அப்பனே பின் அதாவது... அப்பனே வாயில்லா. ஜீவராசிகளை வெட்டி இறைவனுக்குத் தான் கொடுத்தேன் என்று!!! 
(உயிர் பலியிடுதல்) 

அப்பனே இறைவன் அப்பனே எதையும் எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து!!!

உங்களிடமிருந்து அன்பை மட்டுமே!!!.......

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின்... எதை என்று புரிய இதனால் அப்பனே... இறைவன் ..... உங்களிடம் இருந்து
எந்தனுக்கு அனைத்தும் செய் என்று கூட. உங்களுக்கு நிச்சயம் அழைப்பும் இல்லை !!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது உங்களுக்கு இஷ்டமானதை செய்து அப்பனே கடைசியில் இறைவன் பின் எவை என்று கூட ஒன்றும் செய்யவில்லையே... என்று நீங்களே!?!?!... அப்பனே!!!....


இதனால் அப்பனே முதலும் அப்பனே முடிவும்... நீங்களே எதை என்று கூற அப்பனே 

அப்படி நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே... தாயவளுக்கு தெரியும் அப்பா... நிச்சயம் தன்னில் கூட தன் பிள்ளைக்கு.. எப்பொழுது எதை கொடுத்தால் நன்று என்று!!!

இறைவன் பின் கருணை படைத்தவனப்பா!!!

எப்பொழுது தன் பிள்ளைக்கு... அப்பனே கொடுத்தால் நன்று என்று தெரியுமப்பா இறைவனுக்கு....

அதற்குள்ளே நிச்சயம் இறைவன் அதைச் செய்யவில்லை!!!.... இதைச் செய்யவில்லை!!!... என்று ஏங்கி!!!.... நிச்சயம் தன்னில் கூட... அங்கும் இங்கும் அலைந்து அப்பனே.... என்ன பிரயோஜனம் அப்பா ?????


அப்பனே அறிந்தும் இன்னும் அப்பனே.... ஞான உபதேசங்கள் உங்களுக்கு.. உரைப்பேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்று புரிய அப்பனே... எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இன்னும் அப்பனே... வாழ்க்கை எதை என்று அறிய அறிய இறைவன்... அப்பனே பின் நிச்சயம் இவ்வளவு... வயதுகள் வாழ வேண்டும்!!!... அதாவது... இத்தனை வருடங்கள் வாழ வேண்டும்... என்றுதான் அப்பனே எழுதி அனுப்புகின்றான்... அப்பனே!!!

அப்பனே இன்னும் அப்பனே விவரமாக குறிப்பிடுகின்றேன் அப்பனே....

இன்னும் வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.... பின் ஏனைய சித்தர்களும் வருகின்ற பொழுது... அப்பனே எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட யாங்கள் இருக்கின்றோம் அப்பனே... கவலைகள் இல்லை!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.... பின் எவை என்று அறிய அறிய யோசித்தீர்களா??? என்பேன் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட ஏன்... உங்களை  அழைத்தேன் என்று பின் நிச்சயம் தன்னில் கூட தெரியுமப்பா!!! போக !! போக!!!

(கூடியிருந்த அடியவர்களுக்கு) 

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எவை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.... எதற்காக வந்தோம்?? எதற்காக எவை என்று புரிய அப்பனே பின்... புரிந்து கொள்வதே இல்லை மனிதன் என்பேன்! 

இதனால்தான் அப்பனே கஷ்டங்கள்!!

அவையெல்லாம் உங்களுக்கு பின் தெரிய வைக்கின்றேன் அப்பனே!!! பின் படிப்படியாகவே!!

(எதற்காக வந்தோம் என்று) 

அப்பனே நன் முறைகளாக இன்னும் இன்னும்... விளக்கங்களப்பா!!!

போதுமப்பா!!!

எம்முடைய ஆசிகளப்பா!!!

நிச்சயம் முருகனின் ஆசிர்வாதங்களப்பா!!!

பின் எம்முடைய ஆசிகள் பரிபூரணமாக லோபா முத்திரையோடு!!!

இன்னும் அப்பனே.. உபதேசங்கள் கொடுத்து அனைத்தும்.. தருகின்றேன் அப்பனே மெது மெதுவாக கவலைகளை விடுங்கள்!!!

யான் அருகிலே இருப்பேன் என்பேன் அப்பனே!!!

ஆசிகள் !! ஆசிகள்!!!

சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு குருநாதர் உபதேசங்கள் நிறைவு பெற்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!