​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 14 June 2023

சித்தன் அருள் - 1350 - அன்புடன் அகத்தியர் - திருமூலர் வாக்கு!



22/4/2023 அன்று திருமூலர் சித்தமுனி உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் . திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில். 

உலகத்தை அழகாக படைத்து தன் கையில் வைத்துக்கொண்டிருக்கும் இறைவா!!!!!!!!!! உந்தனை மனதில் எண்ணி மூலன் தெரிவிக்கின்றேன்!!!!!! 

அறியாத ஒன்றை அறிந்து அறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில்!!!!!!!!! 

மனிதன் மூடனே!!!! 

நில்லாது செல்மின்!!! செல்மின்!!!! 

(நிற்காமல் ஓடிக்கொண்டே இருங்கள் இறையை தேடி) 

எதற்கு? ஏந்தி ஏந்தி உண்டு!!!!!  உண்டென்பதை நிச்சயமாய் அறிந்து திரிந்து அலைந்து.............அலைந்தும் வீணடா!!!!!!! 

( எதற்காக ?ஆசைப்பட்டு விருப்பப்படுவது எல்லாம் அடைவதற்கு அலைவது??  தேடி தேடி சென்று தின்று வாழ்க்கை நிரந்தம் என்று நினைத்து கொண்டு பொருளாசையோடு அலைந்து திரிந்து வாழ்வது வீண்) 



வீண்!!!!!  என்று வந்துவிட்டால் ஏதடா பிறவிகள்!!!!!!!!!!!! (அனைத்தும் மாயையே அனைத்தும் வீணே என்று நினைத்து விட்டால்... அடுத்த பிறவிகள் இருக்காது)

பிறவி தன்னை முடித்திட்டு முடித்திட்டு... மீண்டும் பிறவி எடுத்தால் என்ன லாபம்??? 

லாபங்களையும் கூட்டி கழித்தாலும் ஒன்றுமில்லை!! 

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்ற போதிலும்.... ஒன்றுமில்லாமல் வருபவன் இடத்தில் கூட என்ன இருக்கின்றது??????? 

என்ன இருக்கின்றது ??என்று கண்கூடாக பார்த்தாலும் இல்லையடா!!! 

இல்லையென்பது இருந்து விட்டால் இருப்பினும் மேலானது ஏதடா???? 

கூறடா!!!!!! 

கூறிய பின் வருந்துவது!!! 

வருந்தி!!!  பின் வருவது ஏது?????? 

ஏதென்பதை மறந்து விட்டாலும் மறப்பதற்கு ஒன்றுமில்லை!!! 

மறப்பதை நினைத்து நினைத்து பார்த்து பார்த்து பின் ஓடினால்!!!??........ 

எங்கு ஓடுகின்றாய்????? 

ஓட்டம் பிடித்து...... பிடித்து பின் கடைசியில் நின்று மீண்டும் இப்படியே வந்தால் நலன்கள் உருவாகுமா?????? 

போலியான மனிதர்கள் தான் நிற்கிறார்கள் இவ்வுலகத்தில்!!!! 

ஆடி அசைந்தும் அசைந்து வீணாக போய் கொண்டிருக்கின்றார்கள்!!! இதனால் என்ன லாபம்!???? 

லாபம் என்பதை கூட நின்று பார்த்தால்.... பார்த்திட்ட பின் ஓடி விடுவதாம் !?!?!?!! 

கணக்கு!!!!!  மனிதனுடைய கணக்கு!!!! 

மனிதனுடைய கணக்கூ எப்பொழுது தீருமோ??

அப்பொழுது இறைவன் நேரில் வந்து நிற்பான்!!!!

எதை என்றும் இன்னும் சித்தர்களின் ஆசிகள் மனிதனுக்கு கூடிக்கொண்டே தான் போய்க்கொண்டிருக்கும்!!!!

ஏனென்றால் இவ்வாறு கூடிக் கொண்டே போய்க் கொண்டிருக்கையில் மனிதன் மாற்றம் அடைந்து இன்னும் கர்மா சேர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது எங்கள் கடமையாகவே!!!!!

ஆனாலும் கடமை தன்னை விட்டொழித்தால் மனிதன் நிச்சயம் வாழ்ந்திடலாம் வாழ்ந்தும் விட்டுச் சென்றும் விடலாம்!!!

எங்களை நம்பியும் வந்து விட்டால் கஷ்டங்களை இட்டு இட்டு தீர்ப்பதே எங்கள் கடமையாகவே உள்ளது!!!!!

மாய வலையில் சிக்கிக் கொண்ட மனிதனை மீட்டெடுக்கும் வல்லமை எங்களைப் போன்ற சித்தர்களாலே முடியும்!!!!

ஆண் எதை என்று பெண் உணர்ந்து அறிவின் தன்மையையும் பொறுத்தறிந்து பொறுத்தறிந்து... பொறுப்பதாகவே இல்லையே.... மனிதனின் மனம்..... 

மனம் ஒன்று பின் கட்டுப்படுத்தி தனக்குள்ளே பின் நிச்சயம் ஆடினால் ஆடாதது ஏதடா?????

ஏதடா??? அடிபணிந்து பணிந்து கூறடா நமச்சிவாயனை!!!!!!!!! 

நமச்சிவாயனை பின் பணிந்து கூறுவது கூறுவது நிற்பதால் ஒன்றும் லாபமில்லை

நிற்பது எதை என்று யான் கூறுகின்றேன் கால்களை தானடா!!!! 

கால்களை வைத்து ஓட ஓட ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நிற்கின்றதால் அங்கு இறைவன் செயல்பட்டு நட்சத்திரங்களும் நவகிரகங்களும் கூட ஈசனுக்கு அடிமையாக போனதடா!!!!! 

ஆனாலும் ஈசனை கண்டு களிக்க நிச்சயமாய் அலைந்து திரிந்து திரிந்த பின் என்ன லாபம்???

ஆனால் கடைசியில் உன்னுள்ளே உன் ஊண் உடம்புக்குள்ளே நிச்சயம் ஈசன் வந்துவிடுவானா வந்து விடுவது ஏது எதற்கு நிச்சயம் தாழ்ந்து தாழ்ந்துசென்றாகையால் உம்மை!!! உம்மை காணவே நிச்சயம் பின் முடியாதடா!!!!

முடிந்த பின் கூறிற்று வழி விடுவது வழிந்த பின் ஏதடா அழுவது!!!!

அழுவது பின் நித்திரையில் நித்திரையில்  மீண்டும் பின் அனைவரும் அழுது தொழுது மீண்டும் பின் எழுந்தால் இது மாயம்!!! 

மாயப்பிறப்பு மாயப்பிறப்பு வந்து கொண்டே தான் இருக்கின்றது மனிதனுக்கு

மனிதனின் தன்மைகள் மனிதனுக்கே புரியவில்லை

புரிந்தும் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை!!!

ஏனடா வருந்துவது... வருத்தத்திற்கு பின் வருவது ஏதடா கூறடா நோய்கள் வருமடா வருத்தப்பட்டாலே நோய்கள் வந்துவிடுமடா!!! 

இதனை யான் நிச்சயம் அறிந்து அறிந்து பல வழிகளிலும் உண்மைகளை கூட திரிந்து திரிந்து ஆண்டுகள் பல தவமிருந்து தவமிருந்து எங்கடா ஈசனை காணப் போகின்றாய்????

முட்டாளே அறிந்தும் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அண்ணாமலையிலே காண்பாய்!!!!

அண்ணாமலைக்கும் வருவதற்கும் அவ்வளவு சுலபங்கள் இல்லை ஆனாலும் சில தரித்திரங்கள் நீக்கிய பின்பே அண்ணாமலை வருவது சிறப்பு!!!

சிறப்பு என்பது தாழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது உன்னுடைய இயல்பு!!!

உன் உடம்பை ஊண் உள்ளே உன் உடம்பு எதை என்றும் அறிவது மூச்சை கட்டுப்படுத்துவதே வயிற்றின் உள்ளே!!!

வயிற்றின் உள்ளே அலைய வைப்பது நிச்சயம் பின் காற்றடா!!!!!

அக் காற்றை வயிற்றுக்குள்ளே சுற்றி சுற்றி வந்தாலே ஞானங்கள் வருமடா !! இறைவனை உன் மனதில் வைத்துக் கொள்ளலாமடா!!!! 

ஆனால் தெரிவதில்லை மனிதனுக்கு அலைந்தும் திரிந்தும் இறைவனை இல்லை என்று தான் சொல்கின்றானே தவிர இன்னும் இறைவனை உணர்வதே இல்லை மனிதன்

மனிதனுக்கு எட்டாத ஒன்று நமச்சிவாயன் தான்!!!

அதை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு கூட நீங்கள் தகுதிகள் பெற வேண்டும் என்றால் சுற்றித் திரிய வேண்டும் அன்பை காட்ட வேண்டும்!!!!!

ஆனால்  அவ் அன்பு இல்லையடா!!!! இருந்தும் பயன் இல்லையடா

புத்திகள் இருந்தும் பயனில்லை உடம்பிற்குள் அனைத்தும் இருந்தும் பயனில்லை அறிவுகள் இருந்தும் பயனில்லை கைகள் இருந்தும் பயனில்லை கால்கள் இருந்தும் பயனில்லை கண்கள் இருந்தும் பயனில்லை பற்கள் இருந்தும் பயனில்லை வாய் இருந்தும் பயனில்லை!!!

ஆனால் உபயோகிக்க தெரிவித்து கொள்கின்ற மனிதா இதை எப்படி உபயோகிக்கலாம் என்பதை கூட நிச்சயம் பின் வழிகள் காட்டுவார்கள் சித்தர்கள்

ஆனால் அதற்கும் புண்ணியங்கள் தேவைப்படுகின்றது!!!

 தேவைப்பட்டால் மனிதன் இறைவனை வணங்குவானாம்!?!?!?!!

தேவையில்லாமல் போடா என்று பின் போயிட்டு சென்று விடுகின்றானாம்!?!?!?

இதுதான் கலியுகத்தில் பிறப்பு மனிதனின் பிறப்பு பின் ஈடு இணை உள்ளது

ஆனாலும் இணை அவை என்று கூட பின் கீழாகவே சென்று கொண்டிருக்கின்றது மனிதனின் பிறப்பு இதனால் தான் ஊண் உள்ளே அனைத்து திறமைகளும் இருக்கின்றது!!

அதை எப்படி பின் அறிந்து செயல்படுத்தி செயல்படுத்திக் கொண்டு வருவது என்பதை கூட தெரியாமல் போய்விட்டது மனித ஜென்மங்களுக்கு!!!!

ஆடி அசைந்து போவது ஏதடா????

ஆடி அசையாமல் போவது ஏதடா????

ஆடி அசைந்த பின் வருவது ஏதடா???

வந்த பின் நிற்பது ஏதடா???

நிற்பது பின் தவன்று விட்டால் ஒன்றும் புரியாது
புரியாது!!!! 

அனைத்தும் புரியுமாம் மனிதனுக்கு!!!!!

வாக்குகள் புரியாதாம்!!!! 

தெரிந்து தெரிந்து நடந்து கொண்டால் பயனற்றது புத்திகள்

ஆனாலும் இறைவன் இல்லை என்று ஆனால் மனிதனின் கணக்கு

ஆனாலும் ஆனாலும் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் ஆனால் இறைவன் உள்ளதை கூட

 ஆனால் வணங்கிக் கொண்டே இருக்கின்றான் இறைவனை

பின் இறைவன் என்ன செய்யப் போகின்றான் என்று

 ஆனாலும் இறைவன் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றான் இக்கலி யுகத்தில் கூட

இதனால் பொய்யானவர்கள் கோடி கணக்கில் இன்னும் பக்தர்களாக செயல்படுவார்கள் இவ்வுலகத்தில்

மனிதனை மனிதன் ஏமாற்றுவதற்கு தான் இவ் வேடங்கள்!!! 

அவ் வேடங்கள் எப்பொழுது முடியுமென்றால் என் அண்ணாமலையிலே ஈசன் ஒவ்வொருவரையும் கூட பார்த்திட்டு இவ்வுலகத்தில் சித்தர்களைக் கூட அனுப்பி அனுப்பி நிச்சயம் அடி பலமாகத்தான் விழப்போகின்றது என்பதை கூட

சித்தர்கள் அகத்திய மாமுனி நிச்சயம் எவ் வகையிலெல்லாம் மக்களுக்கு என்னென்ன தெரிவிக்க வேண்டும் என்பதை எல்லாம் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றான்!!!!

யான் அகத்தியன் பிள்ளை!!! அகத்தியனை நன்றாக தெரியும் அகத்தியன் என்னிடத்தில் பேசுவான் என்று பொய்தான் கூறுகின்றான்

ஆனால் அவ் பொய் கூறுகின்றவன் நன்றாக இருக்கிறானா என்றால் நிச்சயமாக இல்லை!!!!

அப்பொழுது அவந்தனுக்கே தெரிகின்றது....ஏன் இவ்வளவு ஆட்டங்கள் என்பதையெல்லாம்!!!!

அதனால் அகத்தியன் சொன்னான் பின் கனவில் வந்தான் அனைத்தும் சொன்னான் என்பதெல்லாம் பொய் கூற்று!!!!

அகத்தியன் பார்க்கவா போகின்றான் என்று நினைப்பு!!!!

ஆனாலும் சாட்டையடி விழ போகின்றது!!!!

ஆனால் அகத்தியன் அமைதியாக இருந்தாலும் பின் தந்தை ஈசன் அமைதியாக இருக்கப் போவதில்லை!!!!ஏனடா இன்னும் கஷ்டங்கள் ஏற்கனவே!!!! உந்தனுக்கு!!!

மனைவி பிரிந்து போதல் இல்லத்தில் சண்டைகள் பிள்ளைக்கு சண்டைகள் நோய்கள்.

அடிபட்டும் திருந்தவில்லையடா!!!!

எதற்காக???

மீண்டும் எச்சரிக்கின்றேன் யானே!!!! 

வருந்தி வருந்தி வருந்திய பிறகு வருவது ஏதடா கூறடா கூறிய பின் யோசித்து செயல்படுத்துவது ஏதடா

வாயில் வார்த்தை விட்டால் உந்தனுக்கு சொந்தமடா

சொந்தம் பின் யாருக்கு சொந்தமடா சொந்தம் என்பதை கூட விட்டு விட்டால் உங்களுக்கு சொந்தம் இல்லையடா அனாதையடா!!!

அனாதை பின் இறைவனிடத்தில் வந்து விட்டாலும் யார் அனாதை என்பவை எல்லாம் இறைவன் மூச்சு உயிர் மூச்சு உயிர் மூச்சை பிறகு விட்டொழித்தால் ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை நிஜமாகவே வருந்தி வருந்தி ஒன்றும் பயனில்லை.

வருந்தி வருந்தி இப்படியே உடம்பும் கெட்டுப் போகின்றது உயிரும் பிரிந்து போகின்றது

இறைவன் இறைவனை எதை என்று அறிந்து இறைவன் மனிதனைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்!!!

ஆனால் மனிதனால் தான் பார்க்க முடியவில்லையே தரித்திர மனிதா!!!

இவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கின்ற உந்தனுக்கே நாயினும் பிறவி எவை என்றும் அறிய பின் எவை என்று புரிய புரிய 

நாய்க்கு கூட இறைவனை கண்டால் பின் வாலாட்டும் ஆனால் மனிதன் கண்களுக்கு தெரிவதில்லையே

அப்பொழுது எண்ணிப் பார்!!

நாயை விட கேவலமான பிறவி மனித பிறவி....அறிந்து அறிந்து!!! 

நாய்களுக்கு கூட கண்களுக்கு இறைவன் எதை என்று கூட சரியாக தெரிந்து விடும்

ஆனால் மனிதனுக்கு தெரிவதில்லையே!!!!

ஏன்????? 

ஆசைகள் பேராசைகள் மற்றவர்களை கெடுக்க வேண்டும் என்பதை கூட மனதில் உறுதியாக இட்டுக்கொண்டு இருக்கின்றான்.

நிச்சயம் பேய் பிடித்த மனிதா குழப்பமடைந்த மனிதா பைத்தியக்கார மனிதா

திருந்திவிட்டால் திருந்திவிடு!!!

எதை என்று கூட அதனால் நாயினை விட சிறிது மேலாக வருவாய்!!!

ஆனால் இறைவன் கண்ணுக்கு தெரிவான்.

இப்பொழுது மனிதன் நாயை விட கீழாகவே இருக்கின்றான்.

அதனால்தான் நாய்களுக்கு இறைவன் தெரிகின்றது.

மனித ஜென்மங்களுக்கு தெரிவதில்லை.

இன்னொரு படி மேலாக சிறு உயிரினத்திற்கும் ஓர் நாள் இரு நாள் வாழ்கின்ற உயிர்களுக்கும் இறைவனை காண தகுதி உள்ளது!!! அவைகள் இறைவனை கண்டுவிடும்.

ஆனால் மனிதனால் காண முடியவில்லையே!!!!! 

எதற்காக??????

பொய் பித்தலாட்டங்கள் ஆசைகள் ஆசைகள் கோடி கோடி...

அப்படி இருந்து பணத்தின் மீது ஆசைகள் பெண்கள் மீது ஆசைகள் இன்னும் பல பல ஆசைகள் இவ்வாறே பின் சென்று கொண்டிருந்தால் சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்!!!!!

மீண்டும் பாழாய்ப்படுத்தி மீண்டும் வருவது அதையே எண்ணிக் கொண்டிருப்பது மீண்டும் மீண்டும் வருவது பின் வட்ட வடிவமாக!!!!

ஆனாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!!!

எப்பொழுது ஒருவன் ஈசனை நினைக்கின்றானோ அப்பொழுதே கஷ்டத்திற்கு வந்து விட்டான் என்பது பொருள்!!!!

அப்பொழுது கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்

ஆனால் ஈசனை வணங்கினோம் கஷ்டங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றது என்று மீண்டும் சென்று விடுவது!!!

இவ்வாறு சென்றுவிட்டால் மனிதா மீண்டும் பிறப்பு எடுத்து வர வேண்டும் இங்குதான் வரவேண்டும் அலைந்தும் திரிந்தும் அனைத்தும்.

அதனால் முதலிலே வணங்கி விடு ஈசனை!!!!

ஈசனை நின்றன் பின் நின்றபொழுது தொழுவது ஏதடா தொழுது பின் நின்றொழித்து பின் உடம்பில் உள்ள அழுக்குகளை கூட நீக்குவது எக்காலமடா???

காலம் இல்லையடா!!!!!

சிறிது காலமே மனிதனுக்கு கொடுக்கப்பட்டது அதனைக் கூட சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்றால் இன்னும் என்னதான் லாபம்????

கஷ்டங்கள் யார் கையில் இருக்கின்றது????

ஆனால் இறைவன் அதற்குரிய சம்பந்தங்கள் நிச்சயம் விஞ்ஞானம் தெரியாதா? அகத்தியனுக்கு!!!!!

நிச்சயம் எடுத்துரைக்கப் போகின்றான்!!!!

மனிதனை மாற்றவும் தெரியும் பின் பன்மடங்கு உயர்த்தவும் தெரியும்!!!! அகத்தியனுக்கு !!!!

ஏன்? உங்களை மாற்ற??

ஆனாலும் முடியவில்லை எதற்காக என்றால் நீங்கள் தான் காரணம் என்று தான் யான் தெரிவிப்பேன்!!!!

ஏனென்றால் மனிதன் மனிதன் எதை என்று அறிய அறிய பொய் சொல்லி பொறாமை பட்டு இன்னும் எண்ணங்கள் வேறு வேறு!!!!

இன்னும் அதை என்று அறிய அறிய இன்னும் புத்திகளே இல்லையடா

இன்னும் சொல்கின்றேன் ரேகைகளைப் பற்றியும் சொல்கின்றேன்!!!!

இடைக்காடனும் கூட இன்னும் சொல்வான் வாக்குகள்!!!!! மனிதனுக்கு!!!

அப்பொழுதுதான் புத்திகள் வருமே தவிர இன்னும் எதையெதையோ புத்தகத்தில் எழுதிக் கொண்டிருப்பதை படித்துப் படித்து அதைக் கூட இன்னும் எவை என்று பின்பற்றி பின்பற்றி தோல்விகளை தான் தழுவிக் கொண்டிருக்கின்றான்.

ஏதாவது உண்மை இருக்கின்றது என்றால் ஏதும் இல்லை!!!!

பொய் கூறுவது தான் மனிதனுடைய உண்மையான சக்தி என்பதை யான் புரிந்து கொண்டேன்.

ஆனால் அறிந்து செயல்படுத்தி நீ வாழலாம் இவ்வுலகத்தில் பல ஆண்டுகள் பல ஆண்டுகள் கோடிகள் கூட வாழ்ந்து விடலாம் உன்னால்.

ஆனால் ஏன் எழுவதை( 70 வயது) கடக்க முடியவில்லை???? பின்பு எண்பதையும்( 80வயது) கடக்க முடியவில்லை தொண்ணூறையும் கடக்க முடியவில்லை

ஏன்???  மனிதா!!!! பின் அழிந்து விடுகின்றாய்

ஏனென்றால் திரிந்து அலைந்து இறைவன் மீது பற்று இல்லாமல் எதை எதையோ நோக்கி சென்றால்...... நிச்சயம் உன் ஊண் உடம்புள்ளே சிறிய காற்று பின் பட்டு பட்டு அக் காற்றானது சேமிக்கும் திறன் அதிகம் என்பதை கூட ஊன்றி பார்த்து விட்டால் மூளையின் சோர்வுகள், மூளையில் பல துகள்கள் உள்ளது!!!!!

ஆனால் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது???

எதை எதையோ நீ யோசித்தால் அவை அழிந்து கொண்டே தான் போகின்றது

 அதை அழியாமல் காப்பதற்கு யான் வழிகள் கூறுகின்றேன்.

ஆனால் நீங்கள் கட்டாயம் சரியாக வழியில் ஆனால் சரியான வழிகளில் வருவீர்கள் என்றால் யானும் பார்ப்பேன் கற்றும் கொடுப்பேன்!!!

அப்படி இல்லை என்றால் மூளையை தட்டிட்டு அப்படியே சென்று விடுவேன்!!!!

அறிந்தும் அறிந்தும் சித்தர்கள் இல்லையா!???

சித்தர்கள் எதற்காக என்பதை எல்லாம் தாழ்ந்து ஏது பின் படி.....படின் படி ஒன்றின் படி, படி அறிந்து ஒன்றின் படி மேலாக மேலாக நிமித்தம் காட்டி மீண்டும் இறங்கி இறங்கி வந்து இதில் கூட பின் கல் என்று கல்லென்று தெய்வமடா தெய்வத்தை தொழுது அக்கல்லானது வெற்றி பெற்று விட்டது .மனிதன் தோல்வியுற்று விட்டான்!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் கல் என்று!!! அறிந்தும் செயல்படாத புத்தி இல்லாத மூளைக்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை புரிவதும் இல்லை. பூரிப்பதும் இல்லை

ஐயோ!!!! கஷ்டம் என்கின்றான்!!!

எதனால் வந்தது??? என்பதைக் கூட தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான்!!!

வருவோமாம்!?!?!?!?!?!!!?  சித்தர்கள் இவர்களை வழிநடத்த!?!?!?!!!!

ஆனால் கடைப்பிடிக்க மாட்டார்களாம்!?!?!?!?!!!  அறிந்தும் அறிந்தும்!!!!

இதனால் பின் சாகும் நிலை வருவாயினும் அப்பொழுதுதான் ஈசனை பிடிப்பானாம் !?!?!!?!?!?!!

ஈசனே!!!!!!! ஈசனே!!!!!  என்று ஓடோடி ஓடி!!! ஓடி!!!! வந்துவிடுவானாம் !?!?!?!

எதனை என்று கூட அதனால் மூளையில் செல்கள் அறிந்து அதை அழித்துவிட்டு தான் எவை என்று கூட யாங்கள் அதனைத் தான் வழிகள் காட்டுவதற்கு தகுதியாக இருக்கின்றோம்!!!!!

வரும் காலங்களில் சித்தர்கள் இன்னும் ஒவ்வொன்றாக உரைப்பதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி!!!!!

இல்லையென்றால் குலமும் அழிந்து விடும் அனைத்தும் அழிந்து விடும்!!! நீ அனைவரையும் அழித்துவிட்டு நீயும் கூட அழிந்து விடுவாய் பயனில்லை!!!!

பயனற்ற பிறவியை பயனுள்ளதாக மாற்றுங்கள்!!!

நிச்சயம் உதவிடுவோம் யாங்கள் சித்தர்கள்!!!!

அருளாசிகள் கோடிகளப்பா கோடிகள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. அருள்ஞானக்கடலே... நின்திருத்தாள் போற்றி போற்றி போற்றி போற்றி... இப்பதிவின் மூலமாய் தங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். எங்களது வாழ்வில் நன்மையும் வெற்றியும் தோல்வியும் தங்களது பாதத்திற்கே சமர்ப்பனம்... நின்திருத்தாளே சரணம் சரணம் சரணம்...

    ReplyDelete
  2. Appa Saranam pavangal kalainthu nin thiruvadigal saranam nanmaikal nadakka vendum

    ReplyDelete
  3. நல்லவர்களுக்கு தீர்வை சொல்ல வழியை காணும் இதில் மனிதனை குறை கூறுவதில் என்ன தாத்பரியம் இருக்கிறது

    ReplyDelete
  4. Om Sri LopaMudra Devi Sametha Sree Agastheeswaraya Namaha

    ReplyDelete