​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 10 June 2023

சித்தன் அருள் - 1348 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை அனுபவம், கேள்வி/பதில்!


21/4/2023 அன்று  குருநாதர் அகத்திய பெருமான் கருணை வாக்கும் உபதேசங்களும்.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் கருணையே வடிவானவர்.. என்பது அனைவரும் அறிந்ததே!!!!!

ஜீவநாடி வாக்குகள் அனைவருக்கும் கிடைக்கின்றதா என்பதை பார்த்தால் தேடலும் பக்தியும் நம்பிக்கையும் இருக்கின்றவர்களுக்கு குருநாதர் ஏதாவது ஒரு ரூபத்தின் மூலம் தன்னுடைய வாக்கினையும் வழிகாட்டுதலையும் உபதேசத்தையும் நலமுடன் நல்கி வழி நடத்துகின்றார்.

சில நல்லுள்ளங்களுக்கும் ஜீவனாடி பற்றியே அறியாத பக்தி செலுத்தும் சேவைகள் செய்து வரும் மக்களுக்கும் குருநாதர் கருணையுடன் வாக்குகள் தந்து கொண்டே இருப்பதை நாம் அறிவோம்.

ஒவ்வொரு திருத்தலங்களிலும் திரு ஜானகிராமன் ஐயா யாத்திரை செய்யும் பொழுது கூட அடியவர்களுக்கு மட்டுமல்ல ஆங்காங்கே இருக்கும் நல் பக்தியுள்ளங்களுக்கும் வாக்குகள் தந்து அருளாசிகள் செய்வார்!!!

அதேபோன்று கடந்த மாதம் திருவண்ணாமலையில் பிரம்ம தீர்த்தம் குளத்திற்கு அருகே மாலை வேளையில் திரு ஜானகிராமன் ஐயா குருநாதரின் உத்தரவுப்படி வாக்குகள் தந்து கொண்டிருக்கும் பொழுது திருவண்ணாமலை ஆலயத்தில் பணிபுரியும் துப்புரவு பெண் பணியாளர்கள் அனைவரும் குருநாதர் வாக்கினை கேட்டுக்கொண்டே நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் முகத்தில் ஒரு வியப்பும் ஒரு தயக்கமும் புரிந்தும் புரியாமலும் இருக்கும் மனோநிலையும் அவர்களிடம் தேங்கி நின்றது!!!

ஆனால் கருணை கடலான நம் குருநாதர் அவர்களை அருகே அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டு அவர்கள் அனைவருக்கும் அங்கு கூடியிருந்த அனைத்து மக்கள் முன்பாக அவர்களுக்கு நல்வாக்குகள் தந்தார் அந்த இடமும் ஆலய வளாகமும் பிரமிப்பும் பக்தியும் நிறைந்த ஒரு அற்புத சூழலாக அமைந்தது.

நமக்கு எப்பொழுது?? வாக்குகள் கிடைக்கும் !!! நமக்கு ஏன் குருநாதர் வாக்குகள் தரவில்லை திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை எவ்வளவு கட்டணம் ஆயினும் சரி கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம் ஆனால் வாக்குகள் எப்பொழுது கிடைக்கும் என்று பலவித எண்ணங்கள் பல விதமான மக்கள் மனதில் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்றது.

ஆனால் உண்மையான பக்தியும் சேவை மனப்பான்மையும் இருந்தால் குருநாதரே தேடி சென்று வாக்குகள் தருவார் என்பதற்கு உதாரண சம்பவங்களில் திருவண்ணாமலை வாக்கும் ஒன்று.

பொருளுக்காக ஜீவநாடி வாக்குகள் வாக்கு வாசிப்பது என்பது ஒரு காலத்திலும் நடக்காத ஒன்று!!!!!  குருநாதர் மைந்தனும் குருநாதரின் உத்தரவுப்படிதான் நடந்து கொள்வாரே தவிர மற்றவைகளை ஒதுக்கிவிடுவார். 

அங்கு செல்க!!!! இந்த ஆலயத்திற்கு விரைக!!! என்று குருநாதர் உத்தரவுகள் தரும் பொழுதெல்லாம் அதை அப்படியே அனுசரித்து மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அந்த இடத்திற்கு சென்றால் அங்கு யார் யாருக்கு என்னென்ன வாக்குகள் தர வேண்டும் எதனை உரைக்க வேண்டும் எந்த இடத்தில் எதைச் சொன்னால் மதிப்பு என்பதை குருநாதரே தன்னுடைய வாக்குகளால் அனைவருக்கும் புரியும் படியான வாக்குகள் தந்து நல்வழிப்படுத்துகின்றார்!!

அப்படியான அற்புதம் நிறைந்த திருவண்ணாமலையில் நடந்த குருநாதரின் கருணை வாக்குகள் நல்கிய சம்பவத்தினை தற்பொழுது காண்போம்!!!!

குருநாதர் வாக்குகள் தந்து கொண்டிருந்த பொழுது தயங்கி நின்ற துப்புரவு பெண் பணியாளர்கள் அவர்களை அழைத்து இதில் பார்வதி தேவியின் மாற்று பெயர்கள் கொண்டவர்கள் இங்கே வந்து அமருங்கள் என்று குருநாதர் உத்தரவிட்டார்!!!

என் பெயர் உண்ணாமலை என்று  ஆலய பணியாளர்களில் ஒரு பெண்மணி முன்னே வந்து அமர!!! மீதி இருந்த பணியாளர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்த குருநாதர் வாக்குகளை கேட்க தொடங்கினர்!!!

அம்மையே எதை என்றும் அறிய அறிய அம்மையே பின் எவை என்று உணர்ந்து உணர்ந்து அம்மையே ஈசன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அம்மையே கவலைகள் பல பல ஆனாலும் நிச்சயம் கவலைகள் பட்டு பட்டு ஆனாலும் கவலைகள் இல்லை!!!

ஈசன் அனைத்தும் செய்து விடுவான் என்பேன் அம்மையே கவலைகள் விடுங்கள்!!!!! உங்கள் அனைவரின் இல்லத்திற்கும் ஈசன் வந்து வந்து ஆசீர்வதித்து சென்று கொண்டே தான் இருக்கின்றான் அதனால் கவலைகள் விடுங்கள் ஈசனுக்கு நல் படியாக சேவைகள் செய்யுங்கள்!!!!

அம்மையே எதை என்று அறிய அறிய ஈசன் தவழ்ந்து வந்து கொண்டே இருக்கின்றான்!!! உங்கள் ஒவ்வொரு மனதையும் ஆராய்ந்து கொண்டே தான் இருக்கின்றான் அதனால் அம்மையே எவை என்று கூட.... உங்கள் கடமையை சரியாக செய்து வந்தாலே ஈசன் அனைத்தும் கொடுப்பான் உங்கள் அனைவருக்கும் சொல்லிவிட்டேன் அம்மையே!!!!

யாரும் எதை என்று கூட கவலைப்பட அவசியம் இல்லை!!!!

நீங்கள் அனைவரும் ஈசன் இடத்தில் இருந்து கொண்டு அம்மையே!!!!  யாங்களும்( சித்தர்கள்) உங்களைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் இங்கேதான்!!! அதனால் அம்மையே நீங்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள் தான்!!!

ஏனென்றால் நீங்கள் அனைவருமே பின் ஒரு பிறப்பில் ஈசனுக்காகவே சேவைகள் செய்ய வேண்டும் என்று எண்ணி வந்துள்ளீர்கள்!!!

ஆனால் எதை எதையோ மனதில் எண்ணி எதையும் கேட்டு விடாதீர்கள் அனைத்தையும் ஈசன் உங்களுக்காக செய்வான் நிச்சயம் நீங்கள் கேட்டதை எல்லாம் ஈசன் அறிவான் அதை எல்லாம் நிச்சயம் ஈசன் தருவான் கவலையை விடுங்கள்!!!

நீங்கள் செய்துவரும் பணிகளை இங்கிருக்கும் யாரையாவது செய்ய சொல்லி பாருங்கள் செய்வார்களா?? என்று அம்மையே!!!!! ஆனால் அம்மையே நீங்கள் ஈசனுக்காகவே சேவைகள் செய்ய வேண்டும் என்று பிறப்பெடுத்து வந்தவர்கள் நீங்கள் செய்யும் பணிகளை இங்கிருக்கும் யாராலும் செய்ய முடியாது!!! புதிதாக யாராக  வந்தாலும் சண்டைகள் போட்டு விடுவீர்கள் யார் என்று நீங்கள்!!!

அதனால்தான் பின் எவை என்று கூட ஈசன் எவை என்று கூட சேவைகள் செய்வதற்கு உங்களுக்கு பாக்கியம் கொடுத்துள்ளான் அதை வைத்துக் கொண்டு நிச்சயம் அப்படியே செல்லுங்கள் அம்மையே ஈசன் நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு எவை என்று அறிய அறிய என்னென்ன தேவையோ நிச்சயம் ஆனாலும் அம்மையே சில கஷ்டங்கள் வரலாம் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளுங்கள் அம்மையே கவலைகள் இல்லை.

கஷ்டங்கள் இல்லாமல் யாரும் இல்லை அம்மையே ஆனாலும் ஈசன் நிச்சயம் அம்மையே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன் எவை என்று கூட நீங்களே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அம்மையே ஈசன் இடத்தில் இருந்து கொண்டே!!..... 

ஆனாலும் அம்மையே பின் யோசித்துப் பாருங்கள் இன்னும் ஈசன் இல்லாமல் எவை என்று கூட பக்திகள் இல்லாமல் எவை என்று கூட எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை கூட!!!

அதனால் அம்மையே உயர்ந்தவர்கள் பணக்காரர்கள் எதை என்று கூட அம்மையே வேறுபாடுகள் இல்லை அம்மையே ஈசனுக்கு !!

எவை என்று கூட ஈசனுக்கு முன் அனைவரும் சமமானவர்களே!! அனைவருக்கும் கஷ்டங்கள் உண்டு தாயே கவலைகள் இல்லை எதை என்று அறிய அறிய!!!

நிச்சயம் யானும் இங்கே வந்து கொண்டே தான் இருக்கின்றேன் அம்மையே உங்கள் கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து விடுகின்றேன் அதி விரைவிலேயே அம்மையே!!!

கவலைகளை விடுங்கள்!!!!

அம்மையே எதை என்று அறிய அறிய எவை என்று உணர உணர அம்மையே எதை என்று கூட உங்கள் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் ஈசன் தன் பக்கத்தில் அமர்த்தி கொண்டு அம்மையே பின் அரசு சார்ந்ததையும்( அரசாங்க உத்தியோகம்) கூட ஏற்படுத்தி விடுவான் அம்மையே!!!

என்று நல்லாசிகள் தந்து அவர்களுக்கு வாக்குகள் தந்தார்!!!!!

இந்த வாக்குகளுக்கிடையே ஆலயத்திற்கு வந்த ஒரு பெண்மணி வந்து வாக்குகள் தந்து கொண்டிருந்த பொழுது ஓ இதுதான் அகத்தியர் ஜீவநாடியா என்று கேட்டார் அவருக்கு சில விளக்கங்கள் தந்த பொழுது!!! நானும் நிறைய இடங்களில் இது போன்று நாடி பார்த்துள்ளேன் என்று கூறினார்!!!

அவருக்கு ஜீவனாடி குறித்தும் வெற்று பனை ஓலையில் பொன்னிற அக்ஷரங்களில் குருநாதர் வந்து வாக்குகள் தருவதை எடுத்துக் கூறி அவரும் அருகே வந்து பார்த்துவிட்டு இப்பொழுதுதான் முதல் முறையாக ஜீவநாடி சுவடியை பார்க்கின்றேன் அது மட்டுமல்லாது நான் நிறைய இடத்தில் நாடிகள் படித்துள்ளேன் ஆனால் எந்த ஒரு நாடி படிப்பவர்களும் ஆலயத்திற்கு வந்து ஆலயத்திற்கு உள்ளே நாடி வாசித்து வாக்குகள் தந்ததை பார்த்ததில்லை தனித்தனியே தனக்கென்று ஒரு அறைகளை அமைத்து கட்டணத்தைப் பெற்றுக் கொண்டுதான் நாடி வாசிக்கின்றார்கள் ஆனால் முதல் முறையாக காசு பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் அனைவருக்கும் வாக்குகள் குருநாதர் தருகின்றாரே திரு ஜானகிராமன் ஐயாவும் படிக்கின்றாரே என்று பேசிக்கொண்டே குருநாதரிடம் குருவே எனக்கும் தங்களுடைய உபதேசம் வேண்டும் என்று நாடி வாசிக்கும் இடத்தில் வந்து முன்பே நின்று கொண்டார்!!!

அவருக்கும் குருநாதர் நல்வாக்கினை தந்தார்!!!!

அம்மையே உந்தனுக்கு ஈசனே துணை இருப்பான் கடைநாள் வரையிலும் அம்மையே அதனால் எதை என்றும் அறிய அறிய ஈசன் வழி நடத்துவான் என்பேன் அம்மையே!!!! ஆனாலும் சோதனைகள் உண்டு அம்மையே ஆனாலும் கடைசியில் வெற்றி வாய்ப்புகள் உண்டு!!!!!

என்று குருநாதர் வாக்கினை தந்த பொழுது

என்னுடைய மகளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அந்த பெண்மணி கேட்ட பொழுது!!!!

அம்மையே எதை என்றும் அறிய அறிய நீ இவ்வாறு கேட்டதே தவறு என்பேன் அம்மையே!!!!

ஈசனுடைய குழந்தை என்று நீ சொல்லி இருந்தால் இன்னும் மேல் நோக்கி தூக்கிச் சொல்லி இருப்பேன்!!!

நீ என்னுடைய குழந்தை என்று எப்படி சொல்லலாம் ஈசனுடைய குழந்தை என்று சொல்!!!! ஈசனே அனைத்துமாக இருக்கும் பொழுது ஈசனே அனைத்தையும் உங்களுக்கு செய்வான் அம்மையே என்று குருநாதர் வாக்குகள் தந்தார்!!!!!

இந்த இடத்தில் நாம் அனைவரும் உணர வேண்டிய ஒன்றும் உள்ளது என் குழந்தை என் மகள் திருமணம் என் மகன் படிப்பு என் மகன் கல்வி என் மகன் வேலைவாய்ப்பு என்று நிறைய இடங்களில் குருநாதரிடம் வாக்குகளாக சில பேர் கேட்கின்ற பொழுதெல்லாம் குருநாதர் தரும் வாக்குகள் எல்லாம் அந்த நேரத்தில் மக்கள் அப்படியே மறந்து விடுகின்றனர் யாரும் முழுமையாக உணர்வதே இல்லை!!!!

ஒரு இடத்தில் குருநாதர் இதைப் பற்றி உரைத்ததை இங்கே மீண்டும் குறிப்பிடுகின்றோம் ஒரு பெண்மணி என் மகன் நன்றாக இருக்க வேண்டும் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று ஒரு பெண்மணி குருநாதரிடம் கோரிக்கை வைத்த பொழுது

அம்மையே!!! முதலில் உணர்ந்து கொள்!!! இங்கே இருக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்!!! அனைத்து பிள்ளைகளும் நன்றாக இருக்க வேண்டும்!!! அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நீ வேண்டிக் கொள்!!!! உன் மகனுக்கும் நல்லதே நடக்கும் !!! அதை விட்டுவிட்டு தம் தனக்கு என்று சுயநலத்தோடு கேட்டுக் கொண்டே இருந்தால் என்ன தான் லாபம்??? என்று குருநாதர் கடுமையுடன் உத்தரவு தந்தார் அதை நாம் இங்கே உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து துப்புரவு பணியாளர்களுக்கு வாக்குகள் தந்து கொண்டு இருந்த பொழுது தூரத்தில் இருந்து அண்ணாமலையார் தரிசனத்திற்காக வந்து சென்ற ஒரு தம்பதியினர் ஒரு ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் அவந்தனையும் அழை!!!! என்று குருநாதர் உத்தரவிட்டார்!!!!!

அப்பனே பெருமாள் நாமம் கொண்டான் அவனை அழை என்று குருநாதர் உத்தரவிட!!!!! சிறிது தூரமாக இருந்து கொண்டு ஓரமாக கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அவரிடம் தங்களுடைய பெயர் என்று கேட்ட பொழுது ராமச்சந்திரன் என்று கூறும் பொழுது நீங்கள் தான் வாருங்கள் என்று அழைத்து குருநாதர் முன்பு அமர்த்த!!!!

எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே கவலைகள் இல்லை நன்றாகவே எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் உன் இல்லத்தில் அங்காள பரமேஸ்வரி அருள் பரிபூரணம் அப்பா!!!

இதனால் ஒருமுறை அங்கு சென்றிட்டு வா!!! இன்னும் நீ விரும்பியதை எளிதில் அடைந்து கொள்ளலாம் அப்பனே அதனால் தான் சொன்னேன் அப்பனே கவலையை விடு அப்பனே எதை என்றும் அறிய அறிய உன் இல்லத்தில் கூட உயர உயர நிச்சயம் அங்காள பரமேஸ்வரியும் வந்து வாக்குகளும் செப்புவாள் அப்பனே!!!!

அந்த அடியவரும் என்னுடைய குல தெய்வமே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி தான் என்று மனமகிழ்ந்து நன்றியை தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் குருநாதர் அடியவர்கள் கேட்ட கேள்விகளுக்கு குருநாதர் தந்த உபதேசங்கள்!!!

குருவே இந்த கேள்வியை கேட்பதற்கு முதலில் மன்னிப்பை கேட்கின்றோம் தங்களிடம் சில விஷயங்கள் செய்யலாமா வேண்டாமா சிலவற்றை எப்படி செய்வது என்று உங்களிடம் உத்தரவு கேட்டு அதனை செய்கின்றோம் அதில் சில விஷயங்கள் தோல்வியில் முடிவடைகின்றது அல்லது ஏதாவது ஒரு வகையில் இழப்பும் ஏற்படுகின்றது இதனால் மன சஞ்சலம் அடைகின்றது பயம் ஏற்படுகின்றது  இதற்கு காரணங்கள் என்ன???

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் எதை என்று கூட ஏனென்றால் அப்பனே பின் எவை என்று கூட உங்களுக்கும் கூட தெரியவில்லை என்பேன். அப்பனே!! எதை என்று கூட

கர்மா அப்பனே அவைதன் விலக்குவதற்காகவே அப்பனே ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே யான் செய் என்று சொல்லிவிடுகின்றேன் அது தோல்வில்தான் முடியும் என்பதை கூட எந்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!! எவை என்று கூட ஆனாலும் அதன் மூலம் அப்பனே எவை என்று அறிய அறிய பின் கர்மா அப்படியே இருந்தாலும் கூட உங்கள் பிள்ளைகளை பாதித்துவிடும் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே பின் தைரியமாக எவை என்று அறிய அறிய யான் இருக்கின்றேன் என்று கூட அப்பனே உங்களை நுழைத்து விடுகின்றேன். ஏனென்றால் கர்மா வினை அப்படித்தான் அகற்ற முடியும்.

 ஏன் அனைவரையும் கூட இப்படித்தான் செய்கின்றேன். அப்பனே ஏதாவது ஒரு முறையில் கர்மத்தை  அழிக்கத்தான் வேண்டும் என்பேன் அப்பனே. என்னை நம்பியவர்களுக்கு அப்பனே.

குருவே தங்களுடைய வாக்கினை நாங்கள் ஈசனுடைய வாக்கினையும் பார்வதி அம்மாவின் வாக்கினையும் கேட்கின்றோம் தங்கள் உரையாடலை நாங்கள் கேட்கின்றோம் ஆனால் எங்கள் அம்மா லோப முத்ரா தாய் எப்பொழுது வந்து உரையாடுவார்கள்????

எதையென்றும் அறிய அறிய நிச்சயம் யாங்கள் இருவரும்( அகத்தியர் லோபமுத்ரா  தாய்) உரையாடுவோம் மிகப்பெரிய திருத்தலத்தில்.

குருவே நீங்கள் கருங்காலி குறித்து நிறைய வாக்குகளில் குறிப்பிட்டுள்ளீர்கள் கருங்காலி மர வகைகளில் இரண்டு வகை உள்ளது செம்மை நிறத்திலும் அதாவது பழுப்பு நிறத்திலும் மற்றொன்று கருப்பு நிறத்திலும் உள்ளது வட மாநிலங்களில் பழுப்பு நிறத்தில் கிடைக்கின்றது தென்னிந்திய பகுதிகளில் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது இதில் எது உண்மையான கருங்காலி எது சக்தி மிக்கது???!

அப்பனே!!! எதை என்று கூட சிதம்பரத்தில் இருக்கும் சிவனா? அண்ணாமலையில் இருக்கும் சிவனா? யார் பெரியவன் என்று நீ கூறு!!!!

குருவே எல்லா இடத்திலிருக்கும் ஈசன் ஒன்றே தான் அவர் ஒருவர் தான் பெரியவர்.

அப்பனே அப்படியானால் உணர்ந்து கொள்!!!!

( அதாவது இரண்டு கருங்காலி வகைகளும் ஒன்றே தான்!!! இரண்டும் சம பலம் மிக்கது)

குருவே சில யந்திரங்களை/ தாயத்துகளை அணிந்து கொள்ளச் சொல்லி நீங்கள் கூறுகின்றீர்கள் நாங்கள் அதை இரவிலும் அணிந்து கொண்டே இருக்கலாமா? ஏனென்றால் இரவில் உறக்கம் மட்டுமல்ல குடும்பமாக இருக்கும் பொழுது இரவிலும் அணிந்து கொள்ளலாமா?

அப்பனே எவை என்று அறிய அறிய இருக்கட்டும்!!!!

குருவே கருமஞ்சள் சிறிது நீல நிறமாக இருக்கின்றது அது கருமஞ்சள் அதனுடைய மகத்துவம் என்ன??

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதை வைத்துக் கொண்டாலே போதுமானது அப்பனே!!!!

நீல நிறமாக இருப்பதும் கருப்பு நிறமாக இருப்பதும் அனைத்தும் ஒன்றே!!!

அதை அருகில் வைத்துக் கொண்டாலே போதுமானதப்பா!!!!!

குருவே ஜெபம் செய்யும் பொழுதும் தியானங்கள் செய்யும்பொழுதும் சில மரப்பலகைகளை உபயோகிக்க நேரிட்டால் எந்த மரப்பலகையை பயன்படுத்துவது??? உதாரணத்திற்கு  சிலர் பலா மரத்தை பயன்படுத்த சொல்கின்றார்கள்

அப்பனே பின் முதலில் பக்தி தான் முக்கியம் அப்பனே எந்த மரத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அப்பனே!!!

இருப்பினும் அப்பனே சொல்லிவிடுகின்றேன் அப்பனே கருங்காலிக்குத்தான் சக்திகள் அதிகம்!!!!

குருவே தினமும் ஜெபம் செய்யும் மாலைகளை நீரில் கழுவலாமா???

அப்பனே முதலில் தம்தனை கழுவ வேண்டும்!!! அப்பனே எதை என்று கூட தியானங்கள் செய்யும்பொழுது எவை என்று அறிய அறிய அப்பனே சில மாயைகள் வந்து தடுக்குமப்பா!!! எண்ணங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய எங்கெங்கோ செல்லுமப்பா அதனால்தான் கழுவச் சொன்னேன் அப்பனே!!!!( தியானத்திற்கு முன்பாக நீராட வேண்டும்)

குருவே எங்கு பார்த்தாலும் பசுவதைகளும் பசு கொலைகளும் நடக்கின்றது!!!

அப்பனே இதை யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே விட்டுவிடு!!!

குருவே நாங்கள் அனைவரும் ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கின்றோம் இயற்கை உபாதைக்காக நாங்கள் ஒதுங்கும்பொழுது ருத்ராட்சம் அணிந்து கொண்டு இருப்பதால் தோஷங்கள் ஏற்படுமா???

அப்பனே இல்லை!!!!

குருவே மனிதர்களாகிய எங்களுக்கு நோய்கள் வருவதற்கு சில பரிந்துரைகள் மூலிகைகள் எங்களுக்காக கூறி எங்களை ஆரோக்கியமாக வாழ வழி நடத்துகின்றீர்கள் அதுபோல் கால்நடைகளான கோமாதாக்களுக்கும் சில விசித்திர நோய்களும் ஏற்பட்டு அதனால் அவர்கள் மடிய நேரிடுகின்றது அவர்களுக்கும் மூலிகை மருந்துகள் ஏதாவது இருக்கின்றதா கொடுப்பதற்கு நீங்கள் கூறுங்கள்

அப்பனே அதை யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே எதை என்று அப்பனே நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே அதற்கும் கூட அப்பனே ஏதாவது ஒரு வடிவில் அப்பனே!!!

கோசாலையிலே அப்பனே யான் உறங்கிக் கொண்டே இருக்கின்றேன் பல கோசாலைகளில் அப்பனே!!!

குருவே புராணங்களில் படித்திருக்கின்றோம் தங்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றார்கள் என்று அதைப் பற்றி குருநாதர் விளக்கங்கள் தாருங்கள்

அப்பனே அனைத்தையும் யான் சொல்கின்றேன் அப்பனே நேரங்கள் வரும்பொழுது அப்பனே!!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே என் பக்தர்களுக்கு யான் சொல்லுவதை கேட்டு நடந்தாலே அனைவருக்கும் நன்மையே ஏற்படும் அப்பனே அண்ணாமலையை நாட சொன்னால்.... அப்பனே அண்ணாமலைக்கு வந்து விட வேண்டும் பல பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு இடம் அண்ணாமலையே என்பேன் அப்பனே இங்கு வரச் சொல்லில் யானே அனைத்தையும் நீக்கி நல்லாசிகள் கொடுத்து அனுப்புவேன் அப்பனே!!!

அண்ணாமலையிலே பல ரகசியங்கள் இருக்கின்றன அப்பனே பல பேருடைய பிரச்சினைகளை தீர்க்கும் தலம் அண்ணாமலையை என்பேன் அப்பனே இங்கு அடிக்கடி வந்து செல்பவர்களுக்கு ஈசனே அனைத்தையும் தருவான் என்பேன் அப்பனே!!! எனது ஆசிகளும் கிட்டிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே..

அப்பனே நலமாக ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏 🙇‍♂️

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா ஜீவநாடி பார்க்க வேண்டும்.வாட்சப்ல் பதில் தரவில்லை.வேறு எண் இருந்தால் தரவேண்டும்.

    ReplyDelete
  3. அற்புதமான அனுபவங்கள்.. ஓம் அகத்திசாய நம.

    ReplyDelete
  4. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

    ReplyDelete
  5. Om Sri LopaMudra Devi Sametha Sree Agastheeswaraya Namaha

    ReplyDelete