​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 26 February 2020

சித்தன் அருள் - 848 - பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் திருவிழா!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லா வருடமும் நடைபெறும், பலராமபுரம் அகத்தியர் கோவில் 10 நாட்கள் திருவிழா, இந்த வருடம் 5-4-2020 முதல் 14-04-2020 வரை மிக சிறப்பாக ​பூஜை, யாகம், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அகத்தியப் பெருமானின் அருளாசியுடன், அனைத்து "சித்தன் அருள்" வலைப்பூ வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் பங்குபெறுவதற்காக, ஒரு அழைப்பிதழ் சமர்ப்பிக்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள், அழைப்பிதழில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு, பங்கு பெற்று, ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ வேண்டிக்கொள்கிறேன்.












சித்தன் அருள்................. தொடரும்!

1 comment:

  1. மிகவும் அற்புதம்... நன்றி ஐயா

    ReplyDelete