​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 9 February 2020

சித்தன் அருள் - 843 - சுகப்பிரம்ம மஹரிஷி அருளிய சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சுகரூபாய வித்மஹே சுபீக்ஷ காரகாய தீமஹி
தன்னோ சுகப்பிரம்ம ப்ரசோதயாத்!

ஒரு அகத்தியர் அடியவர், சுகப்பிரம்ம மகரிஷி, நாடியில் வந்து அருளிய ஒரு ஸ்லோகத்தை, மற்ற அகத்தியர் அடியவர்களுடன் பகிர்ந்து கொள்ளச்சொல்லி அனுப்பித்தந்தார். நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் குழந்தைகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு வந்துவிடும். கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை ஜெபம் பண்ணைச் சொல்லுங்கள். குழந்தைகள் படித்தவற்றை மனதில் வைத்துக்கொள்ளவும், மனதில் நின்றவற்றை தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் வாங்கவும், இது சரஸ்வதி தேவியின் அருளை பெற்றுத் தரும், என வாக்கு வந்துள்ளது.

ஸ்ரீ வித்யா ரூபிணி; சரஸ்வதி; சகலகலாவல்லி;
சாரபிம்பாதரி; சாரதா தேவி; சாஸ்திரவல்லி;
வீணா புஸ்தக தாரிணி;
வாணி; கமலபாணி; வாக்தேவி: வரதாயாகி;
புஸ்தக ஹஸ்தே; நமோஸ்துதே!

நாமும் இதை மனப்பாடம் பண்ணி, குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

9 comments:

  1. மிக்க நன்றி ஐயா.
    இந்த ஸ்லோகத்தை மத்திய அரசுப் பணித்தேர்வுகளுக்குத் தயாராகுவோரும் பயன்படுத்தலாமல்லவா.

    ReplyDelete
    Replies
    1. தாராளமாக ஜபம் பண்ணலாம். நல்ல பலனை தரும்.

      Delete
    2. மிக்க நன்றி ஐயா. 😊🙏
      ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி ❤🙏🙏🙏

      Delete
  2. ஓம் அகத்தீசாய நமக,

    ஐயா, நான் 12 வருடங்களுக்கு முன்பு சென்னையில் திரு. அனுமத்தாசன் ஐயா அவர்களின் பெரும் உதவியால் அகத்திய பெருமான் கருணையால் தீராத உடல் உபாதை தீர வழிகாட்டுதல் பெற்று நலம் அடைந்தேன், அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள வார்த்தைகள் இல்லை. ஐயா நான் மீண்டும் குரு அகத்தியர் அவர்களின் ஜீவ நாடியை பார்க்க தகுந்த வழிகாட்டுதலை எனக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி

    எனது மின்னஞ்சல் முகவரி : rkvijay833@gmail.com
    தொலைபேசி : 8144386111

    ReplyDelete
    Replies
    1. follow the link

      https://siththanarul.blogspot.com/2015/11/to-read-naadi-palm-leaf.html

      Delete
  3. Agnilingam arunachalam ayyavukku vanakkam .ayya thanjavur thiru ganesan ayyavudaiya mugavari matrum phone no send pannuga ayya agathiyar jeeva nadi parka vendum anuppuga ayya

    ReplyDelete
    Replies
    1. follow the link

      https://siththanarul.blogspot.com/2015/11/to-read-naadi-palm-leaf.html

      Delete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  5. Plz post these mantra in english too for wide acceptance.Request to have this post at Gnanaboomi too.

    ReplyDelete