​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 15 February 2017

சித்தன் அருள் - 594 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, யாம் உணர்த்துவதைவிட, விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரந்து கேட்கும்பொழுது தராத மனிதனுக்கு இறைவன், கள்வனை படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும், துயரப்படும் மனிதனைப் பார்த்து, அங்கே நல்ல குணத்தை பயன்படுத்தவேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. "இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன? தேகம் ஆரோக்யமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும்?" என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான். "இவனுக்கென்ன? இவன் குடும்பத்தில், இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும், உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? அவர்கள் செய்யட்டுமே? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு? நாம் ஏன் இதிலே ஈடுபடவேண்டும்?" அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். "இவனுக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டால், அதற்கு நானா பொறுப்பு? நான் எதற்கு அதிலே தலையிடவேண்டும்?" என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால், மிக தந்திரமாக சிந்தனை செய்வதில், சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும், தன் சாமர்த்தியத்தைதான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி, அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும்பொழுது, மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்லை.

3 comments:

  1. ஓம் ஸ்ரீ குருசுவாமியே சரணம்

    ReplyDelete
  2. Respect to all , Have visited Lord Perumal , Lord Siva , Navagraha temples in Karunkulam near Tirunelveli. But unable to locate Lord Muruga temple. Priests in Perumal , Siva temple also were not aware of location of Lord muruga temple in Karunkulam. Kindly assist me with the location , contact details to visit Lord Muruga temple in KarunKulam. Respect to all.

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete