​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 9 February 2017

சித்தன் அருள் - 590 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தீய வழியில் செல்லும் குழந்தைகளை நல்வழிப்படுத்த என்ன செய்ய வேண்டும் ?

பாவ வினையின் காரணமாகத்தான் இதுபோன்ற பிள்ளைகள் பிறக்கின்றன. இளைய வயதிலே ஒரு பிள்ளை தவறான செயலை செய்தால் முதலில் அந்தத் தந்தை, தன் பால்ய வயதை நினைவூட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டும். "இல்லையில்லை, நான் சரியாகத்தான் வாழ்ந்தேன். நான் நேர்மையாகத்தான் வாழ்ந்தேன். என் பால்ய வயதில் நான் ஒரு தவறு கூட செய்யவில்லை. ஆனால் எனக்கு இப்படியொரு பிள்ளை பிறந்து விட்டது" என்று சிலர் கூறலாம்.  அப்படி பார்க்கும் பட்சத்தில், முன்னோர்களின் சாபங்கள், பாவங்கள் கடுமையாக இருக்கும். இது போன்ற வாரிசுகளைப் பெற்றவர்கள் குறிப்பாக பசுக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், பசு தானங்களை செய்வதும், தில யாகங்களை முறையாக செய்வதும் அஃதோடு மட்டுமல்லாமல் பைரவ வழிபாட்டை தொடர்ந்து செய்வதுமாக இருந்தால் மெல்ல, மெல்ல அந்தப் பிள்ளையின் செயல்களில் மாற்றங்கள் ஏற்படும். கடுமையான சாபத்தின் விளைவுதான் மோசமான பிள்ளைகள் என்பதை தாய், தந்தையர் புரிந்து கொள்ள வேண்டும்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete