​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 7 February 2017

சித்தன் அருள் - 588 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனம் ஒரு நிலைப்பட்டு செய்யக்கூடிய விஷயமே பூஜைதான். புற சடங்குகள் எதற்காக என்றால் உடலும், உள்ளமும் ஒரு புத்துணர்வு பெற்று அதை நோக்கி எண்ணங்கள் செல்ல வேண்டும் என்பதற்காக. ஆனால் புற சடங்குகள் நன்றாக செய்யப்பட்டு மனம் மட்டும், அங்கே கவனம் குவிக்கப்படாமல் மனசிதைவோடு இருந்தால் அது உண்மையான பூஜை ஆகாது. அதற்காக மனம் சிதைகிறதே என்று பூஜை செய்யாமலும் இருக்கக்கூடாது. செய்ய, செய்ய நாளடைவில் மனம் பக்குவம் பெற்று, பண்பட்டு ஒரு நேர் கோட்டில் செல்லத் துவங்கும். 

4 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ குருவே சரணம் ....

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ குருவே சரணம் ....

    ReplyDelete